புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை வளர்ப்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தந்தை-சிறந்த ஆசிரியர்
கல்விக் கூடங்களோ புத்தகங்களோ உங்களது மகனுக்குத் தேவையான அனைத்து வாழ்க்கைக் கல்வியைத் தரமுடியாது என்பதற்காகத்தான் இறைவன் தந்தையாகிய உங்களைப் படைத்துள்ளான். உங்களது மகனுக்கு நீங்கள் தந்தையாக இருப்பதற்காக பெருமிதம் கொள்ளுங்கள். பேரானந்தமடையுங்கள். அவனது வளர்ச்சிக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள். உரிய நாளில் உலகம் போற்றும் வகையில் உயர்ந்துவிடுவான்.
அவன் எப்படிப்பட்ட குணங்களில் சிறப்படைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அப்படியே நீங்கள் இருக்க முயலுங்கள். அதற்கான வழிவகைகளை கண்டறிந்து சொல்லுங்கள். உங்களைவிட சிறந்த வழிகாட்டி அவனுக்கு வேறு யாரும் இருக்க முடியாது. அவனுக்குச் சரியான வழி காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
உங்கள் குழந்தைக்கு வேண்டிய அனைத்துப் பயிற்சிகள் தரத்தான் உங்களை ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கின்றான். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டியது உங்களின் மாபெரும் பொறுப்பு.
தந்தை-சிறந்த ஆசிரியர்
கல்விக் கூடங்களோ புத்தகங்களோ உங்களது மகனுக்குத் தேவையான அனைத்து வாழ்க்கைக் கல்வியைத் தரமுடியாது என்பதற்காகத்தான் இறைவன் தந்தையாகிய உங்களைப் படைத்துள்ளான். உங்களது மகனுக்கு நீங்கள் தந்தையாக இருப்பதற்காக பெருமிதம் கொள்ளுங்கள். பேரானந்தமடையுங்கள். அவனது வளர்ச்சிக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள். உரிய நாளில் உலகம் போற்றும் வகையில் உயர்ந்துவிடுவான்.
அவன் எப்படிப்பட்ட குணங்களில் சிறப்படைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அப்படியே நீங்கள் இருக்க முயலுங்கள். அதற்கான வழிவகைகளை கண்டறிந்து சொல்லுங்கள். உங்களைவிட சிறந்த வழிகாட்டி அவனுக்கு வேறு யாரும் இருக்க முடியாது. அவனுக்குச் சரியான வழி காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
உங்கள் குழந்தைக்கு வேண்டிய அனைத்துப் பயிற்சிகள் தரத்தான் உங்களை ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கின்றான். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டியது உங்களின் மாபெரும் பொறுப்பு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உங்களது கனவு ...
உங்கள் குழந்தையைப் பற்றி எப்படி கனவு காண்கின்றீர்களோ அப்படியே அவன் ஆகிவிட்டான் என்ற உணர்வோடு செயல்படுங்கள். தன் பிள்ளைக்குக் கிடைக்கும் ஒவ்வொரு உயர்வையும் தாய் கேட்கின்ற போது தன்னையும் அறியாமல் தன் அடி வயிற்றைத் தொட்டு "தன் வயிறு மணி வயிறு" என்று உள்ளம் பூரித்துப் போகின்றாள்.
நீங்கள் உங்களின் உறவுக்கும் நட்புக்கும் குறிப்பாக உங்கள் அன்னை தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றீர்களோ அவற்றை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றான் உங்கள் பிள்ளை. அதே செயல்கள் உங்களுக்கு அவன் மூலமாகத் திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். வயதான உங்களது அன்னை தந்தையை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் அதே நிலை உங்கள் மகனால் உங்களுக்குப் பின்னாளில் வந்து சேரலாம்.
உங்கள் மகன் ஹீரோவாக உருவாக வேண்டுமானால் நீங்கள் நல்லது செய்யுங்கள். நல்லன பேசுங்கள் - நல்லவர்களோடு உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஹீரோவாக இருந்து காட்டுங்கள்.
உங்கள் குழந்தையைப் பற்றி எப்படி கனவு காண்கின்றீர்களோ அப்படியே அவன் ஆகிவிட்டான் என்ற உணர்வோடு செயல்படுங்கள். தன் பிள்ளைக்குக் கிடைக்கும் ஒவ்வொரு உயர்வையும் தாய் கேட்கின்ற போது தன்னையும் அறியாமல் தன் அடி வயிற்றைத் தொட்டு "தன் வயிறு மணி வயிறு" என்று உள்ளம் பூரித்துப் போகின்றாள்.
நீங்கள் உங்களின் உறவுக்கும் நட்புக்கும் குறிப்பாக உங்கள் அன்னை தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றீர்களோ அவற்றை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றான் உங்கள் பிள்ளை. அதே செயல்கள் உங்களுக்கு அவன் மூலமாகத் திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். வயதான உங்களது அன்னை தந்தையை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் அதே நிலை உங்கள் மகனால் உங்களுக்குப் பின்னாளில் வந்து சேரலாம்.
உங்கள் மகன் ஹீரோவாக உருவாக வேண்டுமானால் நீங்கள் நல்லது செய்யுங்கள். நல்லன பேசுங்கள் - நல்லவர்களோடு உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஹீரோவாக இருந்து காட்டுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிள்ளையின் மனதில்...
அன்னையிடம் அன்பை வாங்கவும் தந்தையிடம் அறிவை வாங்கவும் நம்முடைய சமுதாய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இறைவன் ஒவ்வொரு குடும்பத்திலும் உலவுவதற்குப் பதிலாகத்தான் அம்மாவை அனுப்பியுள்ளான் என்று ஆன்றோர்கள் சொல்லிச் சென்றனர். நாம் தெய்வம் எங்கே எங்கே என்று வெளியில் தேட வேண்டியதில்லை நம் வீட்டிலேயே சேலை கட்டிய தெய்வமாக அன்னை இருக்கின்றார். அவர்களை வணங்கினால் போதும் அகிலத்தை ஆளலாம்.
"நல்லராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே"
என்பார்கள். தந்தை ஆகிய உங்களுக்குத்தான் அதிகமான பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் செயல்கள் குழந்தையின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிகின்றது. நீங்கள் கோபப்படுபவர்களாகவோ, கருணை நிறைந்தவர்களாகவோ, பாசம் காட்டக் கூடியவர்களோ, உதவி செய்யக் கூடியவர்களாகவோ, இருந்தால் அப்படியே படம் பிடித்தாற்போல் பிள்ளைகள் வளர வாய்ப்பு இருக்கின்றது. குடிப்பது கெட்டது என்று கவனமாக உணர்த்தி வந்திருந்தால், நல்லது பற்றி எண்ண வாய்ப்பளித்திருந்தால் குழந்தை நல்லவனாக வாழ வாய்ப்புண்டு.
அவனைச் சுற்றியுள்ள அவனது நண்பர்கள், உறவு, நட்பு இப்படிப் பலர் சூழ்ந்திருந்தாலும் தந்தையின் போக்கு அதிகமாக பிள்ளையின் மனதில் பதிவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களது பிள்ளை வாழ்வியலில் ஹூரோவாக வரவேண்டும் என்றால் நீங்கள் ஹீரோவாக இருங்கள்!
அன்னையிடம் அன்பை வாங்கவும் தந்தையிடம் அறிவை வாங்கவும் நம்முடைய சமுதாய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இறைவன் ஒவ்வொரு குடும்பத்திலும் உலவுவதற்குப் பதிலாகத்தான் அம்மாவை அனுப்பியுள்ளான் என்று ஆன்றோர்கள் சொல்லிச் சென்றனர். நாம் தெய்வம் எங்கே எங்கே என்று வெளியில் தேட வேண்டியதில்லை நம் வீட்டிலேயே சேலை கட்டிய தெய்வமாக அன்னை இருக்கின்றார். அவர்களை வணங்கினால் போதும் அகிலத்தை ஆளலாம்.
"நல்லராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே"
என்பார்கள். தந்தை ஆகிய உங்களுக்குத்தான் அதிகமான பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் செயல்கள் குழந்தையின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிகின்றது. நீங்கள் கோபப்படுபவர்களாகவோ, கருணை நிறைந்தவர்களாகவோ, பாசம் காட்டக் கூடியவர்களோ, உதவி செய்யக் கூடியவர்களாகவோ, இருந்தால் அப்படியே படம் பிடித்தாற்போல் பிள்ளைகள் வளர வாய்ப்பு இருக்கின்றது. குடிப்பது கெட்டது என்று கவனமாக உணர்த்தி வந்திருந்தால், நல்லது பற்றி எண்ண வாய்ப்பளித்திருந்தால் குழந்தை நல்லவனாக வாழ வாய்ப்புண்டு.
அவனைச் சுற்றியுள்ள அவனது நண்பர்கள், உறவு, நட்பு இப்படிப் பலர் சூழ்ந்திருந்தாலும் தந்தையின் போக்கு அதிகமாக பிள்ளையின் மனதில் பதிவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களது பிள்ளை வாழ்வியலில் ஹூரோவாக வரவேண்டும் என்றால் நீங்கள் ஹீரோவாக இருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தை ஏன் திருடுகிறது?
மற்றவர்களால் நிராகரிக்கப்படுகிற, அன்பு கிடைக்காத குழந்தைகளுக்கே பெரும்பாலும் இப்பழக்கம் வருகிறது. குழந்தை ஆசைப்படுகிற நியாயமான விஷயங்கள் கூட கிடைக்காத பட்சத்தில் திருடுகிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
எப்படி சமாளிப்பது...?
குழந்தையைத் திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை தான். அதற்காகக் குழந்தையிடம் அளவுக்கு மீறி நடந்து கொள்ளக் கூடாது. அதிகபட்ச தண்டனையெல்லாம் கூடாது. பொறுமையாக அதற்கு விளக்க வேண்டும். தெரியாமல் செய்கிற விஷயம் தான் இது. எனவே குழந்தையைப் பலர் முன்னிலையில் திருடன் என்றெல்லாம் அழைக்கக் கூடாது. மற்றவர் பொருட்களை எடுப்பது எத்தனை பெரிய குற்றம் என எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அப்படியே எடுத்து விட்ட போதிலும், மன்னிப்பு கேட்டு, அதை சம்பந்தப்பட்டவரிடமே திருப்பிக் கொடுக்கப் பழக்க வேண்டும்.
குழந்தை திருடுவதைத் தவிர்க்க, அது கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கவும் கூடாது. நினைத்ததை சாதித்துக் கொள்ள அது இதை ஒரு டெக்னிக்காக நினைக்கும். குழந்தையை நிறைய நேசியுங்கள். முழுமையான அன்பைக் கொடுங்கள். எதுவுமே பலனளிக்காத பட்சத்தில் குழந்தை மன நல நிபுணரிடம் கலந்தாலோசியுங்கள்.
மற்றவர்களால் நிராகரிக்கப்படுகிற, அன்பு கிடைக்காத குழந்தைகளுக்கே பெரும்பாலும் இப்பழக்கம் வருகிறது. குழந்தை ஆசைப்படுகிற நியாயமான விஷயங்கள் கூட கிடைக்காத பட்சத்தில் திருடுகிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
எப்படி சமாளிப்பது...?
குழந்தையைத் திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை தான். அதற்காகக் குழந்தையிடம் அளவுக்கு மீறி நடந்து கொள்ளக் கூடாது. அதிகபட்ச தண்டனையெல்லாம் கூடாது. பொறுமையாக அதற்கு விளக்க வேண்டும். தெரியாமல் செய்கிற விஷயம் தான் இது. எனவே குழந்தையைப் பலர் முன்னிலையில் திருடன் என்றெல்லாம் அழைக்கக் கூடாது. மற்றவர் பொருட்களை எடுப்பது எத்தனை பெரிய குற்றம் என எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அப்படியே எடுத்து விட்ட போதிலும், மன்னிப்பு கேட்டு, அதை சம்பந்தப்பட்டவரிடமே திருப்பிக் கொடுக்கப் பழக்க வேண்டும்.
குழந்தை திருடுவதைத் தவிர்க்க, அது கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கவும் கூடாது. நினைத்ததை சாதித்துக் கொள்ள அது இதை ஒரு டெக்னிக்காக நினைக்கும். குழந்தையை நிறைய நேசியுங்கள். முழுமையான அன்பைக் கொடுங்கள். எதுவுமே பலனளிக்காத பட்சத்தில் குழந்தை மன நல நிபுணரிடம் கலந்தாலோசியுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
படுக்கையை நனைப்பதற்கு...
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான குழந்தைகள் படுக்கையை நனைக்கின்றன. வேறு சில குழந்தைகள் காது கோளாறுகளால் பாதிக்கப் படுகிறார்கள். இப்படி குழந்தைகள் படுக்கையை நனைப்பது, மற்றும் காது கோளாறுகளுக்கு பல் தாடை மற்றும் அதன் அமைப்பு தான் காரணம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
என்னடா! மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்களே! என்று கருத வேண்டாம். அவர்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. நம்முடைய உடம்பில் ஆன்டிடையூரடிக் என்றொரு ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடம்பில் நீரை தக்க வைத்துக் கொள்கிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிற போதுதான் குழந்தைகள் படுக்கையை நனைக்கின்றன. எப்படி என்றால் இயல்பாகவே குறுகலான தாடை உள்ள குழந்தைகள் வாய் மூலமாகவே சுவாசிக்கின்றன. மூக்கு வழியாக சுவாசிப்பது அவர்களுக்கு கடினமாக இருப்பதால் இப்படி சுவாசிக்கிறார்கள். வாய் வழியாக சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட ஹார்மோன் அளவு குறைவாக இருக்கிறது. ஏனெனில் இந்த ஹார்மோன் ஆழ்ந்த தூக்கத்தின் போதுதான் உற்பத்தி ஆகிறது. மூக்கு வழியாக சுவாசிக்க முடியாதவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடையாது. அதனால் ஹார்மோன் சுரப்பது தடைபடுகிறது.
ஆகையால் படுக்கையை நனைப்பது, காது குறைபாடுகளுக்கு வழக்கமான சிகிச்சை முறைகள் இல்லாமல் தாடையை சரி செய்தால் போதும். அதாவது எந்தெந்த வழிகளில் எல்லாம் சுவாசம் தடைபடுகிறதோ, அவற்றை சரி செய்துவிட்டால் போதும், படுக்கையை நனைப்பதும், காது குறைபாடுகளும் தானாகவே சரியாகி விடும்.
டீரக் மகோனி என்ற மருத்துவ வல்லுநர் கூறுகையில், படுக்கையை நனைக்கும் 100 குழந்தைகளில் 5 பேருக்கு மேல்தாடை குறுகலாக இருக்கிறது. இந்த தாடையை இயல்பான அளவுக்கு விரிக்கும் போது சுவாசம் மேம்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் படுக்கையை நனைப்பது நின்றுவிடும். இம்முறையில் சுமார் 80 சதவீத குழந்தைகளை குணப்படுத்திட முடியும். பிளேட்களை பொறுத்தி சுவாசத்தை அதிகரிப்பது, டான்சில் மற்றும் அடினாய்டை நீக்குவதன் மூலமாக குழந்தைகள் படுக்கையை நனைக்கும் செயலை 99 சதவீதம் குறைத்து விட இயலும் என்று அடித்து சொல்கிறார்.
இதுபோல மேற்புற தாடையில் பற்கள் ஒழுங்கற்று இருப்பதால் குழந்தைகளில் 90 முதல் 95 சதவீதம் வரை காது தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு காது மெஷின்களை பொருத்துவதற்கு பதிலாக தாடையை சரி செய்து விட்டால் போதும். பிரச்சினை சரியாகி விடும் என்று மகோனி கூறி உள்ளார். இவர் தனது கண்டுபிடிப்பை தன் மகனிடமே செயல்படுத்தி சோதனை செய்துள்ளார்.
15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மகன் 3 வயதாக இருக்கும்போது 20 விதமான காது கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தான். டாக்டர்களிடம் அழைத்துச் சென்ற போது காதுகளில் குழாய்களை சொருகுமாறு தெரிவித்தனர். ஆனால் மகோனி அதன்படி நடக்கவில்லை. தன்னுடைய உத்திப்படி பிளாஸ்டிக் சாதனங்களை பயன்படுத்தி மகனுடைய தாடையில் இருந்த பல் வரிசையை மாற்றினார். இந்த சிகிச்சைக்கு 1 மணி நேரம் பிடித்தது. அதன்பிறகு அவரது மகனுக்கு எந்தவொரு காதுகோளாறும் வரவே இல்லை. அதன் பிறகு இதேபோன்ற முறையை 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் பயன்படுத்தி வெற்றியும் கண்டு இருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான குழந்தைகள் படுக்கையை நனைக்கின்றன. வேறு சில குழந்தைகள் காது கோளாறுகளால் பாதிக்கப் படுகிறார்கள். இப்படி குழந்தைகள் படுக்கையை நனைப்பது, மற்றும் காது கோளாறுகளுக்கு பல் தாடை மற்றும் அதன் அமைப்பு தான் காரணம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
என்னடா! மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்களே! என்று கருத வேண்டாம். அவர்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. நம்முடைய உடம்பில் ஆன்டிடையூரடிக் என்றொரு ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடம்பில் நீரை தக்க வைத்துக் கொள்கிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிற போதுதான் குழந்தைகள் படுக்கையை நனைக்கின்றன. எப்படி என்றால் இயல்பாகவே குறுகலான தாடை உள்ள குழந்தைகள் வாய் மூலமாகவே சுவாசிக்கின்றன. மூக்கு வழியாக சுவாசிப்பது அவர்களுக்கு கடினமாக இருப்பதால் இப்படி சுவாசிக்கிறார்கள். வாய் வழியாக சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட ஹார்மோன் அளவு குறைவாக இருக்கிறது. ஏனெனில் இந்த ஹார்மோன் ஆழ்ந்த தூக்கத்தின் போதுதான் உற்பத்தி ஆகிறது. மூக்கு வழியாக சுவாசிக்க முடியாதவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடையாது. அதனால் ஹார்மோன் சுரப்பது தடைபடுகிறது.
ஆகையால் படுக்கையை நனைப்பது, காது குறைபாடுகளுக்கு வழக்கமான சிகிச்சை முறைகள் இல்லாமல் தாடையை சரி செய்தால் போதும். அதாவது எந்தெந்த வழிகளில் எல்லாம் சுவாசம் தடைபடுகிறதோ, அவற்றை சரி செய்துவிட்டால் போதும், படுக்கையை நனைப்பதும், காது குறைபாடுகளும் தானாகவே சரியாகி விடும்.
டீரக் மகோனி என்ற மருத்துவ வல்லுநர் கூறுகையில், படுக்கையை நனைக்கும் 100 குழந்தைகளில் 5 பேருக்கு மேல்தாடை குறுகலாக இருக்கிறது. இந்த தாடையை இயல்பான அளவுக்கு விரிக்கும் போது சுவாசம் மேம்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் படுக்கையை நனைப்பது நின்றுவிடும். இம்முறையில் சுமார் 80 சதவீத குழந்தைகளை குணப்படுத்திட முடியும். பிளேட்களை பொறுத்தி சுவாசத்தை அதிகரிப்பது, டான்சில் மற்றும் அடினாய்டை நீக்குவதன் மூலமாக குழந்தைகள் படுக்கையை நனைக்கும் செயலை 99 சதவீதம் குறைத்து விட இயலும் என்று அடித்து சொல்கிறார்.
இதுபோல மேற்புற தாடையில் பற்கள் ஒழுங்கற்று இருப்பதால் குழந்தைகளில் 90 முதல் 95 சதவீதம் வரை காது தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு காது மெஷின்களை பொருத்துவதற்கு பதிலாக தாடையை சரி செய்து விட்டால் போதும். பிரச்சினை சரியாகி விடும் என்று மகோனி கூறி உள்ளார். இவர் தனது கண்டுபிடிப்பை தன் மகனிடமே செயல்படுத்தி சோதனை செய்துள்ளார்.
15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மகன் 3 வயதாக இருக்கும்போது 20 விதமான காது கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தான். டாக்டர்களிடம் அழைத்துச் சென்ற போது காதுகளில் குழாய்களை சொருகுமாறு தெரிவித்தனர். ஆனால் மகோனி அதன்படி நடக்கவில்லை. தன்னுடைய உத்திப்படி பிளாஸ்டிக் சாதனங்களை பயன்படுத்தி மகனுடைய தாடையில் இருந்த பல் வரிசையை மாற்றினார். இந்த சிகிச்சைக்கு 1 மணி நேரம் பிடித்தது. அதன்பிறகு அவரது மகனுக்கு எந்தவொரு காதுகோளாறும் வரவே இல்லை. அதன் பிறகு இதேபோன்ற முறையை 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் பயன்படுத்தி வெற்றியும் கண்டு இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதுல இவ்ளோ விஷயமா?
குழந்தைகளுக்கு பொதுவாக 6 வயது முதல் 13 வயதுக்குள் தான் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள் முளைக்கின்றன.
6 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு பால் பல்லை பிடுங்கினால் மட்டும் மீண்டும் முளைக்கும். நிலையான பற்களை பிடுங்கி விட்டால் முளைக்காது...
சிலருக்கு 40-50 வயதில் கூட அபூர்வமாய் பல் முளைக்கலாம். இதனை ஞானப்பல் என செல்லமாய் அழைக்கின்றனர்.
பல்லின் மேற்பகுதியை சிகரம் என்றும் கீழ் பகுதியை வேர் என்றும் அழைக்கிறார்கள்.
சில பால் பற்கள் கீழே விழாமல் அப்படியே நிலைத்து விடும். ஆனால் இந்த பற்களின் மூலம் நிலையான பற்களைப் போல் கடிக்க இயலாது.
இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைராய்டு வியாதிகளுக்கும் பற்களுக்கும் சம்பந்தம் உண்டு. இந்த வியாதிகளின் தாக்கம் ஜாஸ்தி இருக்கும் போது பற்களை பிடுங்க மாட்டார்கள்.
பற்கள் நன்றாக வளர கால்சியம் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் எனக் கூறுவர். ஆனால் கால்சியத்தால் குழந்தைகளுக்கு மட்டுமே பலன்...
வாயில் பற்களில் விழும் ஓட்டையை அடைக்க 6-7 விதமான சிமெண்டுகளை பயன்படுத்துகின்றனர். தேவைக்கு ஏற்ப இந்த சிமெண்ட் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தங்கம், வெள்ளி, குரோமியம், கோபால்ட், மற்றும் எவர்சில்வரில் கூட இன்று பற்கள் கட்டிக் கொள்கின்றனர். தங்கத்தால் பல் கட்டிக் கொண்டாலும் ஜாக்கிரதையாக கடிப்பதே நல்லது.
பற்களிடம் ஏற்படும் கரைகளை அவ்வப்போது பல் டாக்டரிடம் காட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிகமாய் படிந்தால் அதன் மூலமே துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உதட்டுப் பிளவு... ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு எற்பட வாய்ப்பு உண்டு.
ரத்தம் உறையாத நோய் உள்ளவர்களுக்கு பல் பிடுங்க யோசிப்பர். மீறி பிடுங்கினால் இரத்தம் ஒழுகிக் கொண்டேயிருக்கும்.
உடம்பில் கட்டுப்படுத்த இயலாத நிலையில் எந்த வியாதி இருந்தாலும் அந்த சமயத்தில் பல்லை எடுக்க மாட்டார்கள்...
பொய் பற்களை பீங்கான் மற்றும் அக்ரெலிக் ரெஸின் என்ற பிளாஸ்டிக் ரெஸினால் தயாரிக்கிறார்கள்.
பொய்ப்பல் வைத்திருப்பவர்கள் இரவு கழட்டி வைத்து விடுவது நல்லது. இரவு அவற்றை தண்ணீரில் போட்டு வைத்திருக்க வேண்டும். 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.
குழந்தைகளுக்கு பொதுவாக 6 வயது முதல் 13 வயதுக்குள் தான் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள் முளைக்கின்றன.
6 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு பால் பல்லை பிடுங்கினால் மட்டும் மீண்டும் முளைக்கும். நிலையான பற்களை பிடுங்கி விட்டால் முளைக்காது...
சிலருக்கு 40-50 வயதில் கூட அபூர்வமாய் பல் முளைக்கலாம். இதனை ஞானப்பல் என செல்லமாய் அழைக்கின்றனர்.
பல்லின் மேற்பகுதியை சிகரம் என்றும் கீழ் பகுதியை வேர் என்றும் அழைக்கிறார்கள்.
சில பால் பற்கள் கீழே விழாமல் அப்படியே நிலைத்து விடும். ஆனால் இந்த பற்களின் மூலம் நிலையான பற்களைப் போல் கடிக்க இயலாது.
இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைராய்டு வியாதிகளுக்கும் பற்களுக்கும் சம்பந்தம் உண்டு. இந்த வியாதிகளின் தாக்கம் ஜாஸ்தி இருக்கும் போது பற்களை பிடுங்க மாட்டார்கள்.
பற்கள் நன்றாக வளர கால்சியம் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் எனக் கூறுவர். ஆனால் கால்சியத்தால் குழந்தைகளுக்கு மட்டுமே பலன்...
வாயில் பற்களில் விழும் ஓட்டையை அடைக்க 6-7 விதமான சிமெண்டுகளை பயன்படுத்துகின்றனர். தேவைக்கு ஏற்ப இந்த சிமெண்ட் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தங்கம், வெள்ளி, குரோமியம், கோபால்ட், மற்றும் எவர்சில்வரில் கூட இன்று பற்கள் கட்டிக் கொள்கின்றனர். தங்கத்தால் பல் கட்டிக் கொண்டாலும் ஜாக்கிரதையாக கடிப்பதே நல்லது.
பற்களிடம் ஏற்படும் கரைகளை அவ்வப்போது பல் டாக்டரிடம் காட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிகமாய் படிந்தால் அதன் மூலமே துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உதட்டுப் பிளவு... ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு எற்பட வாய்ப்பு உண்டு.
ரத்தம் உறையாத நோய் உள்ளவர்களுக்கு பல் பிடுங்க யோசிப்பர். மீறி பிடுங்கினால் இரத்தம் ஒழுகிக் கொண்டேயிருக்கும்.
உடம்பில் கட்டுப்படுத்த இயலாத நிலையில் எந்த வியாதி இருந்தாலும் அந்த சமயத்தில் பல்லை எடுக்க மாட்டார்கள்...
பொய் பற்களை பீங்கான் மற்றும் அக்ரெலிக் ரெஸின் என்ற பிளாஸ்டிக் ரெஸினால் தயாரிக்கிறார்கள்.
பொய்ப்பல் வைத்திருப்பவர்கள் இரவு கழட்டி வைத்து விடுவது நல்லது. இரவு அவற்றை தண்ணீரில் போட்டு வைத்திருக்க வேண்டும். 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல பழக்க வழக்கங்கள்...
குழந்தைகள் நல்ல பழக்க வழங்கங்களோடு நடந்து கொண்டால் பெற்றோருக்கு பெருமைதானே! கழிவறையைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்ட குழந்தைகள், முக்கியமான நேரங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழித்து பெற்றோருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிவறை பயிற்சியை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை.
கறைபடிந்த கழிவறை, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமில்லாத சூழ்நிலை, கழிவறையை பயன்படுத்திய பிறகு சரியாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யாதது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு கழிவறைக்கு செல்வது என்றாலே பயம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினையை தீர்க்க கொஞ்சம் சிந்தனை செய்தால் போதும். குழந்தை எதையாவது பிடித்துக் கொண்டு உட்கார ஆரம்பித்த உடனேயே (வழக்கமாக பிறந்து 10-வது மாதத்தில்) கழிவறையை பயன்படுத்த பழக்கலாம்.
குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சுகாதாரமான பாத்ரூம், பாதுகாப்பான நுண்ணுயிரி தாக்காத டாய்லெட்டுகள், கறை படியாத கழிவறைச் சாதனங்கள் கிடைக்கின்றன. இதனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா பாதிப்பு ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சியை, நகைச்சுவை உணவோடும், சூழ்நிலைக்கு ஏற்பவும் கற்றுத்தர வேண்டும். மற்ற குழந்தைகள் கழிவறையை பயன்படுத்துவதையும், குழந்தைகளுக்கான கழிவறை டப்பில் குழந்தைகள் உட்கார்ந்திருப்பதையும் படத்தில் காட்டி விளக்கலாம்.
கழிவறைக்கு சென்று வந்த பிறகு சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்திய பிறகு, கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டியதன் அவசியத்தை விளக்க வேண்டும். அதேபோல், சாப்பிடுவதற்கும் முன்பு, கைகளைக் கழுவ வேண்டியதன் அவசியத்தையும், கழிவறை, அழுக்கு துவாலை, தூசி படிந்த கதவின் கைப்பிடி போன்ற சுத்தமில்லாத பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில், குழந்தையுடன் கூடவே சென்று கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதன்பின் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சுகாதார முறையை சரியாக பழகிக் கொள்ளாத குழந்தைகளுக்குத்தான் அடிக்கடி கேஸ்ட்ரோ என்ட்ரட்டீஸ், டைஃபாய்டு, தோல் நோய் போன்றவை ஏற்படுகிறது. பொது இடங்களில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எனவே கழிவறையை பயன்படுத்த பயிற்சி அளிப்பது அத்தியாவசியமான தேவையாகிறது. இது பொது இடங்களில் தர்மசங்கடத்தில் இருந்து பெற்றோரை காப்பாற்றி அவர்களுடைய டென்ஷனையும் குறைக்கவும் பயன்படும்.
குழந்தைகள் நல்ல பழக்க வழங்கங்களோடு நடந்து கொண்டால் பெற்றோருக்கு பெருமைதானே! கழிவறையைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்ட குழந்தைகள், முக்கியமான நேரங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழித்து பெற்றோருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிவறை பயிற்சியை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை.
கறைபடிந்த கழிவறை, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமில்லாத சூழ்நிலை, கழிவறையை பயன்படுத்திய பிறகு சரியாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யாதது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு கழிவறைக்கு செல்வது என்றாலே பயம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினையை தீர்க்க கொஞ்சம் சிந்தனை செய்தால் போதும். குழந்தை எதையாவது பிடித்துக் கொண்டு உட்கார ஆரம்பித்த உடனேயே (வழக்கமாக பிறந்து 10-வது மாதத்தில்) கழிவறையை பயன்படுத்த பழக்கலாம்.
குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சுகாதாரமான பாத்ரூம், பாதுகாப்பான நுண்ணுயிரி தாக்காத டாய்லெட்டுகள், கறை படியாத கழிவறைச் சாதனங்கள் கிடைக்கின்றன. இதனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா பாதிப்பு ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சியை, நகைச்சுவை உணவோடும், சூழ்நிலைக்கு ஏற்பவும் கற்றுத்தர வேண்டும். மற்ற குழந்தைகள் கழிவறையை பயன்படுத்துவதையும், குழந்தைகளுக்கான கழிவறை டப்பில் குழந்தைகள் உட்கார்ந்திருப்பதையும் படத்தில் காட்டி விளக்கலாம்.
கழிவறைக்கு சென்று வந்த பிறகு சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்திய பிறகு, கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டியதன் அவசியத்தை விளக்க வேண்டும். அதேபோல், சாப்பிடுவதற்கும் முன்பு, கைகளைக் கழுவ வேண்டியதன் அவசியத்தையும், கழிவறை, அழுக்கு துவாலை, தூசி படிந்த கதவின் கைப்பிடி போன்ற சுத்தமில்லாத பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில், குழந்தையுடன் கூடவே சென்று கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதன்பின் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சுகாதார முறையை சரியாக பழகிக் கொள்ளாத குழந்தைகளுக்குத்தான் அடிக்கடி கேஸ்ட்ரோ என்ட்ரட்டீஸ், டைஃபாய்டு, தோல் நோய் போன்றவை ஏற்படுகிறது. பொது இடங்களில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எனவே கழிவறையை பயன்படுத்த பயிற்சி அளிப்பது அத்தியாவசியமான தேவையாகிறது. இது பொது இடங்களில் தர்மசங்கடத்தில் இருந்து பெற்றோரை காப்பாற்றி அவர்களுடைய டென்ஷனையும் குறைக்கவும் பயன்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கர்ப்பிணியின் சத்துணவு
மனித சமுதாயம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த காலம் வரை நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றிருந்தது. ஆனால் இயற்கையோடு எதிரான செயல்களை இன்பமாய் எண்ணி வாழும் இன்றைய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். அதோடு நம்மில் சிலர் எதையெல்லாம் சரியென்று பிடித்துக் கொள்கிறார்களோ அவற்றில் உள்ள தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பெண்கள் கருவுற்றிருக்கும் காலம் தாய்ப்பால் கொடுக்கும் மாதங்களும் சத்துணவில் அக்கறை செலுத்தும் முக்கியமான பருவங்களாகும். இந்தக் காலத்தில் எதை உண்ணவேண்டும். எதை உண்ணக் கூடாது என்பதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கருவுற்றிருக்கும் காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று ஓரு அச்சம் நிலவுகிறது. ஆனால் இந்தக் காலத்தில் பெண்களுக்கு வைட்டமின் ஏ சத்து நிறையத் தேவை என்பதாலேயே உண்ணச் சொல்லியிருக்கிறார்கள். பப்பாளியின் விதைகளுக்கு கருச்சிதைவு செய்யும் தன்மை உள்ளது என்பதற்காக முழுப்பழத்தையும் ஒதுக்கி விடுதல் கூடாது.
முட்டையும் ஆட்டிறைச்சியும் கூடாது. மீன் உண்பது தவறு என்றும் பல பகுதிகளில் வாழும் மக்கள் கருதுகிறார்கள். இதற்கான ஆதாரம் இல்லை. பிரசவத்தின் போதும், பிரசவம் ஆன பிறகும் நீர் அருந்துவது ஆபத்து என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், கொதிக்க வைத்த நீரை தாராளமாகக் கொடுக்கலாம்.
பொதுவாக குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை இன்னென்ன உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் என்று உள்ளது. அதனை மருத்துவரின் ஆலோசனையின்படி குழந்தைகளுக்கு வழங்குதல் வேண்டும். நன்றாக வெந்தப்பருப்பை குழந்தைகள் நிறைய சாப்பிடலாம். குறிப்பாக பயிற்றம் பருப்பு இளம் குழந்தைகளுக்கு நன்கு செரிமானமாகும். முளைவிட்ட பருப்பு விதைகளை முழுதாகச் சமைத்தாலும் அல்லது வெயிலில் காயவைத்துப் பொடியாக்கி உணவாக்கினாலும் குழந்தைகளின் ஆரோக்கிய உணவுக்கு அவை நல்லது.
வாழைப்பழமா... அது மந்தம் குழந்தைக்கு ஆகாது. இழுப்பு வந்து விடும் என்பார்கள். பழுத்தப்பழம் எதைத்தின்றாலும் ஒத்துக்கொள்ளாது. அதற்காகவும் பழமே சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யக்கூடாது.
எருமைப் பாலை குழந்தைகளுக்குக் கொடுத்தால் மூளை மந்தமாகிவிடும் என்கிறார்கள். எருமையின் இயல்பை வைத்தே அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தவிர வேறில்லை. குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்காமல், நீர் போல சுரக்கும் இதற்கு கொலோஸ்ட்ரம் என்று பெயர். சிலர் இத்திரவத்தை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது என்று தடுப்பார்கள். சர்க்கரைத் தண்ணீரை கொடுக்கச் சொல்வார்கள். ஆனால், கொலோஸ்ட்ரம் என்னும் திரவம் அரிய சத்துகளைக் கொண்டது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வேண்டிய நோய்தடுப்பு மருந்துப் பொருள்கள் அதில் அடங்கியுள்ளன. மேலும். குழந்தை இத்திரவத்தை உறிஞ்சும் போதிலும் தாய்க்கு இயல்பான சுரப்பு உண்டாகும்.
குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், சிலர் அதனை பட்டினி போட்டு விடுகிறார்கள். இது தவறாகும். அப்போது சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.
மழையில் நனையாதே, பனியில் நடக்காதே அதைத் தின்னாதே.. இதைத்தின்னாதே என்று தடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் குழந்தைப் பருவத்தில் நீங்கள் தின்னக்கூடாது என்று தடுத்த பொருளை தின்னுகின்ற போது நிச்சயமாக அவர்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே இது போன்ற தவறான கருத்துக்களை சற்று தள்ளி வைத்துவிட்டு இயல்பாய் அணுகுவது நல்லது.
மனித சமுதாயம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த காலம் வரை நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றிருந்தது. ஆனால் இயற்கையோடு எதிரான செயல்களை இன்பமாய் எண்ணி வாழும் இன்றைய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். அதோடு நம்மில் சிலர் எதையெல்லாம் சரியென்று பிடித்துக் கொள்கிறார்களோ அவற்றில் உள்ள தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பெண்கள் கருவுற்றிருக்கும் காலம் தாய்ப்பால் கொடுக்கும் மாதங்களும் சத்துணவில் அக்கறை செலுத்தும் முக்கியமான பருவங்களாகும். இந்தக் காலத்தில் எதை உண்ணவேண்டும். எதை உண்ணக் கூடாது என்பதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கருவுற்றிருக்கும் காலத்தில் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று ஓரு அச்சம் நிலவுகிறது. ஆனால் இந்தக் காலத்தில் பெண்களுக்கு வைட்டமின் ஏ சத்து நிறையத் தேவை என்பதாலேயே உண்ணச் சொல்லியிருக்கிறார்கள். பப்பாளியின் விதைகளுக்கு கருச்சிதைவு செய்யும் தன்மை உள்ளது என்பதற்காக முழுப்பழத்தையும் ஒதுக்கி விடுதல் கூடாது.
முட்டையும் ஆட்டிறைச்சியும் கூடாது. மீன் உண்பது தவறு என்றும் பல பகுதிகளில் வாழும் மக்கள் கருதுகிறார்கள். இதற்கான ஆதாரம் இல்லை. பிரசவத்தின் போதும், பிரசவம் ஆன பிறகும் நீர் அருந்துவது ஆபத்து என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால், கொதிக்க வைத்த நீரை தாராளமாகக் கொடுக்கலாம்.
பொதுவாக குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை இன்னென்ன உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் என்று உள்ளது. அதனை மருத்துவரின் ஆலோசனையின்படி குழந்தைகளுக்கு வழங்குதல் வேண்டும். நன்றாக வெந்தப்பருப்பை குழந்தைகள் நிறைய சாப்பிடலாம். குறிப்பாக பயிற்றம் பருப்பு இளம் குழந்தைகளுக்கு நன்கு செரிமானமாகும். முளைவிட்ட பருப்பு விதைகளை முழுதாகச் சமைத்தாலும் அல்லது வெயிலில் காயவைத்துப் பொடியாக்கி உணவாக்கினாலும் குழந்தைகளின் ஆரோக்கிய உணவுக்கு அவை நல்லது.
வாழைப்பழமா... அது மந்தம் குழந்தைக்கு ஆகாது. இழுப்பு வந்து விடும் என்பார்கள். பழுத்தப்பழம் எதைத்தின்றாலும் ஒத்துக்கொள்ளாது. அதற்காகவும் பழமே சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யக்கூடாது.
எருமைப் பாலை குழந்தைகளுக்குக் கொடுத்தால் மூளை மந்தமாகிவிடும் என்கிறார்கள். எருமையின் இயல்பை வைத்தே அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தவிர வேறில்லை. குழந்தை பிறந்த இரண்டு மூன்று நாட்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்காமல், நீர் போல சுரக்கும் இதற்கு கொலோஸ்ட்ரம் என்று பெயர். சிலர் இத்திரவத்தை குழந்தைகளுக்கு ஊட்டக்கூடாது என்று தடுப்பார்கள். சர்க்கரைத் தண்ணீரை கொடுக்கச் சொல்வார்கள். ஆனால், கொலோஸ்ட்ரம் என்னும் திரவம் அரிய சத்துகளைக் கொண்டது. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வேண்டிய நோய்தடுப்பு மருந்துப் பொருள்கள் அதில் அடங்கியுள்ளன. மேலும். குழந்தை இத்திரவத்தை உறிஞ்சும் போதிலும் தாய்க்கு இயல்பான சுரப்பு உண்டாகும்.
குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், சிலர் அதனை பட்டினி போட்டு விடுகிறார்கள். இது தவறாகும். அப்போது சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.
மழையில் நனையாதே, பனியில் நடக்காதே அதைத் தின்னாதே.. இதைத்தின்னாதே என்று தடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் குழந்தைப் பருவத்தில் நீங்கள் தின்னக்கூடாது என்று தடுத்த பொருளை தின்னுகின்ற போது நிச்சயமாக அவர்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே இது போன்ற தவறான கருத்துக்களை சற்று தள்ளி வைத்துவிட்டு இயல்பாய் அணுகுவது நல்லது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எந்த வயதில் எந்த உணவு?
சின்னக் குழந்தைகளுக்கு சாப்பிட எண்னென்ன கொடுக்கலாம், என்னென்ன கொடுக்கக் கூடாது என்பது பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் அடைத்து விற்கப்படுவதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். எளிய விலையில் சத்து மிகுந்துள்ள பயறு வகைகளையும் கீரைகளையும் குழந்தைக்குக் கொடுப்பதை கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறார்கள். இரண்டு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்பது பற்றி இங்கே சில...
ஒரு வயதில்:
குழந்தை பிறந்து ஒரு வயது ஆகிற வரை திடமான உணவுகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடலாம். திரவ உணவுகள், நன்கு கரைத்த நிலையில் உள்ள உணவுகள் தான் குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்கும்.
இரண்டு வயதில்:
இரண்டு வயது துவங்கிவிட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு அளிக்கப்படும் உணவு எல்லாமே கொடுக்கலாம். ஒரே நிபந்தனை, காரம் குறைவாக இருக்க வேண்டும். எண்ணெய் அதிகம் கலக்கப்பட்ட உணவாக இருக்கக்கூடாது... அவ்வளவுதான். இரண்டு வயதான குழந்தைகள், காலையில் ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் எழுந்துகொள்ளும். குழந்தை எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிக்கச் செய்யலாம். சிறிது நேரத்துக்குள் காலைக்கடன்களை முடிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் ஏற்படுத்துவது நல்லது.
ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவு ஊட்டலாம். குழந்தை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று ஒரு தாய் ஆசைப்படுவது இயல்பான விஷயம் தான். ஆனால், குழந்தையால் இவ்வளவுதான் சாப்பிட முடியும் என்று ஒரு அளவு இருக்கிறதல்லவா? அளவுக்கு அதிகமாக சாப்பிட வைத்து, அந்தக் குழந்தை வாந்தி எடுப்பதைவிட, கொஞ்சமாகச் சாப்பிட்டு, முழுவதுமாக ஜீரணமாவது சிறப்பான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்துவிட்டு, குழந்தையை சோறு சாப்பிட வைக்கலாம். இல்லாவிட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி என்று டிபன் உணவு ஏதாவதொன்று தாராளமாகக் கொடுக்கலாம். பிரட் கொடுக்கலாம். எது கொடுத்தாலும் அதில் அதிகம் எண்ணெய் சேராது இருக்க வேண்டும். சிறிது நேரம் விளையாடிவிட்டு குழந்தைகள் மீண்டும் தூங்கிவிடுவார்கள். சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியபிறகு மீண்டும் எழுவார்கள்.
மதியம் எழுந்தவுடன் ஏதாவது ஒரு பழச்சாறு கொடுக்கலாம். பழச்சாறு என்று வரும்போது இந்தப் பழம், அந்தப் பழம் என்று எதுவும் நீக்கத் தேவையில்லை. ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், சப்போட்டா, அன்னாச்சி, மாதுளை, தர்ப்பூசணி, சீதாப்பழம் என்று எந்தப் பழத்தை வேண்டுமானாலும் தாராளமாக சாறு பிழிந்து தரலாம்.
ஜூஸ் குடித்து முடித்த பிறகு, மதியம் சாப்பாடு கொடுக்கலாம். பெரியவர்கள் என்னென்ன சாப்பிடுகிறார்களோ அவற்றையெல்லாம் குழந்தைகளும் சாப்பிடலாம். வேகவைத்த பருப்பு, காய்கறி, சாம்பார், குழம்பு, ரசம், தயிர் என்று குழந்தை எதையெல்லாம் விரும்புகிறதோ அதை உணவில் கலந்து நன்கு பிசைந்து கொடுத்தால் போதும்.
காய்கறிகள் என்று வரும்போது இந்தக் காய்கறியை குழந்தைக்கு கொடுக்கலாமா, அந்தக் காய்கறியை குழந்தைக்கு கொடுக்கலாமா என்கிற சந்தேகமே தேவையில்லை. பச்சையாக இருக்கிற எல்லா காய்கறிகளுமே குழந்தைகளுக்கு நல்லதுதான். காய்கறி சாலட், குழந்தைகளுக்கு பிடித்தமான சைட் டிஷ்ஷாக இருக்கும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், இரண்டு வயதிலேயே குழந்தைக்கு அசைவம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மதியத்துக்குப் பிறகும் குழந்தை மீண்டும் ஒருமுறை நன்றாகத் தூங்கி எழும். அப்போது பாலோ அல்லது ராகி கஞ்சியோ கொடுக்கலாம். இதன்பிறகு விளையாட ஆரம்பிக்கும் குழந்தை, இரவு எட்டு மணி வரை வேறு எதையும் தேடாது. இரவு எட்டு மணிக்கு மீண்டும் இட்லி, சப்பாத்தி, தோசை ஒன்று ஏதாவது ஒரு டிபன் வகை உணவுகளைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
இரவு உணவில் அசைவ உணவுகளைச் சேர்க்கக்கூடாது. அடிக்கடி குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம், ஆம்லெட் செய்து குழந்தைக்குக் கொடுப்பதைவிட ஆஃப்பாயில் செய்து கொடுப்பதுதான் நல்லது. முட்டையை நன்கு வேகவிடாமல் பாதியளவு வேகவைத்தால் போதும். பாதியளவு வெந்த முட்டையை விரைவில் ஜீரணமாகும். இட்லியை வேக வைக்கிற மாதிரி ஒரு சின்ன பாத்திரத்தில் முட்டையை ஊற்றி வேகவைத்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மூன்று வயதில்:
மூன்று வயது முதல் குழந்தையின் உணவுப் பழக்கம் மாற ஆரம்பிக்கும். காரணம், குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும். பள்ளிக்குச் செல்லும்போது ஒரு சின்ன டிபன் பாக்ஸில் ஸ்நாக்ஸ் கொடுத்தனுப்புவது பழக்கமாகிவிட்டது. ஸ்நாக்ஸாக பிஸ்கட்டுகளைக் கொடுத்தனுப்புவதைவிட ஏதாவது ஒரு பழத்தை துண்டு துண்டாக்கி கொடுத்தனுப்பலாம். கிண்டர்கார்டன் பள்ளி மதியமே முடிந்துவிடுவதால், மதியம் குழந்தை வீட்டுக்கு வந்தபிறகு வழக்கம் போல சாப்பாட்டைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை கொடுப்பதாக இருந்தால் புரோட்டீன் அதிகமாக உள்ள பிஸ்கட்டை மட்டுமே கொடுக்க வேண்டும். மூன்று வயது ஆரம்பித்தவுடன் குழந்தைகளுக்கு இரவு உணவை அதிகபட்சமாக எட்டரை மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது. அப்போது தான் குழந்தை சீக்கிரமாகவே தூங்கி, மறுநாள் காலை சிக்கிரமாக எழுந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்.
நான்கு வயதில்:
நான்கு வயது ஆரம்பித்த குழந்தைகளுக்கு மிக்ஸ்டு ரைஸ் கொடுக்கலாம். நிறைய காய்கறிகளோடு கொஞ்சம் புளிசாதம், கொஞ்சம் தயிர் சாதம் என்று கலவையாகக் கொடுக்கலாம் குழந்தைகள் ரசித்து சாப்பிடுவார்கள்.
அதிகம் எண்ணெய் சேர்த்து உணவை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது நல்லது. காரணம், நகரத்துக் குழந்தைகளின் இப்போதைய பெரிய பிரச்னையே ஓவர்வெயிட் என்று சொல்லப்படுகிற கூடுதல் எடை பிரச்னைதான்.
குழந்தைகளுக்கு எளிதில் சமைத்துக் கொடுக்க முடிகிறது என்பதற்காக நூடுல்ஸை அடிக்கடி செய்து கொடுக்கும் தாய்மார்கள் நகர்ப்புறங்களில் அதிகமாக இருக்கிறார்கள். இது தேவையில்லாத பழக்கம். நூடுல்ஸ் எளிதில் ஜீரணமாகும் என்றாலும், அதில் சத்து ஒன்றும் இல்லை. நூடுல்ஸ்ஸீக்குப் பதிலாக நம்மூரில் கிடைக்கும் சேமியாவைக் கிண்டி, காய்கறிகளைப் போட்டு கொடுத்தால் செலவு மிச்சம்.
ஐந்து வயது முதல்:
குழந்தைகளுக்கு காய்கறி மிகமிக அவசியம். கேரட், முள்ளங்கி, பீன்ஸ், பீட் ரூட், முருங்கை, பட்டாணி என்று ஏதாவது ஒன்றிரண்டு காய்கறிகளைத் தினமும் சாப்பிட வேண்டும். பயறு வகைகள், குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் அற்புதமான உணவுகள். அவற்றையும் தினமும் கொடுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரசித்து சாப்பிடுகிற மாதிரி, எலும்புக்கு பலம் சேர்க்கிற மாதிரி, எளிதில் ஜீரணமாகிற எந்த உணவை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
சின்னக் குழந்தைகளுக்கு சாப்பிட எண்னென்ன கொடுக்கலாம், என்னென்ன கொடுக்கக் கூடாது என்பது பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் அடைத்து விற்கப்படுவதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். எளிய விலையில் சத்து மிகுந்துள்ள பயறு வகைகளையும் கீரைகளையும் குழந்தைக்குக் கொடுப்பதை கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறார்கள். இரண்டு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்பது பற்றி இங்கே சில...
ஒரு வயதில்:
குழந்தை பிறந்து ஒரு வயது ஆகிற வரை திடமான உணவுகள் கொடுப்பதைத் தவிர்த்துவிடலாம். திரவ உணவுகள், நன்கு கரைத்த நிலையில் உள்ள உணவுகள் தான் குழந்தைக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்கும்.
இரண்டு வயதில்:
இரண்டு வயது துவங்கிவிட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு அளிக்கப்படும் உணவு எல்லாமே கொடுக்கலாம். ஒரே நிபந்தனை, காரம் குறைவாக இருக்க வேண்டும். எண்ணெய் அதிகம் கலக்கப்பட்ட உணவாக இருக்கக்கூடாது... அவ்வளவுதான். இரண்டு வயதான குழந்தைகள், காலையில் ஏழு மணி முதல் எட்டு மணிக்குள் எழுந்துகொள்ளும். குழந்தை எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிக்கச் செய்யலாம். சிறிது நேரத்துக்குள் காலைக்கடன்களை முடிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் ஏற்படுத்துவது நல்லது.
ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை கொஞ்சம் கொஞ்சமாக உணவு ஊட்டலாம். குழந்தை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று ஒரு தாய் ஆசைப்படுவது இயல்பான விஷயம் தான். ஆனால், குழந்தையால் இவ்வளவுதான் சாப்பிட முடியும் என்று ஒரு அளவு இருக்கிறதல்லவா? அளவுக்கு அதிகமாக சாப்பிட வைத்து, அந்தக் குழந்தை வாந்தி எடுப்பதைவிட, கொஞ்சமாகச் சாப்பிட்டு, முழுவதுமாக ஜீரணமாவது சிறப்பான விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இதன்பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்துவிட்டு, குழந்தையை சோறு சாப்பிட வைக்கலாம். இல்லாவிட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி என்று டிபன் உணவு ஏதாவதொன்று தாராளமாகக் கொடுக்கலாம். பிரட் கொடுக்கலாம். எது கொடுத்தாலும் அதில் அதிகம் எண்ணெய் சேராது இருக்க வேண்டும். சிறிது நேரம் விளையாடிவிட்டு குழந்தைகள் மீண்டும் தூங்கிவிடுவார்கள். சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியபிறகு மீண்டும் எழுவார்கள்.
மதியம் எழுந்தவுடன் ஏதாவது ஒரு பழச்சாறு கொடுக்கலாம். பழச்சாறு என்று வரும்போது இந்தப் பழம், அந்தப் பழம் என்று எதுவும் நீக்கத் தேவையில்லை. ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், சப்போட்டா, அன்னாச்சி, மாதுளை, தர்ப்பூசணி, சீதாப்பழம் என்று எந்தப் பழத்தை வேண்டுமானாலும் தாராளமாக சாறு பிழிந்து தரலாம்.
ஜூஸ் குடித்து முடித்த பிறகு, மதியம் சாப்பாடு கொடுக்கலாம். பெரியவர்கள் என்னென்ன சாப்பிடுகிறார்களோ அவற்றையெல்லாம் குழந்தைகளும் சாப்பிடலாம். வேகவைத்த பருப்பு, காய்கறி, சாம்பார், குழம்பு, ரசம், தயிர் என்று குழந்தை எதையெல்லாம் விரும்புகிறதோ அதை உணவில் கலந்து நன்கு பிசைந்து கொடுத்தால் போதும்.
காய்கறிகள் என்று வரும்போது இந்தக் காய்கறியை குழந்தைக்கு கொடுக்கலாமா, அந்தக் காய்கறியை குழந்தைக்கு கொடுக்கலாமா என்கிற சந்தேகமே தேவையில்லை. பச்சையாக இருக்கிற எல்லா காய்கறிகளுமே குழந்தைகளுக்கு நல்லதுதான். காய்கறி சாலட், குழந்தைகளுக்கு பிடித்தமான சைட் டிஷ்ஷாக இருக்கும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், இரண்டு வயதிலேயே குழந்தைக்கு அசைவம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மதியத்துக்குப் பிறகும் குழந்தை மீண்டும் ஒருமுறை நன்றாகத் தூங்கி எழும். அப்போது பாலோ அல்லது ராகி கஞ்சியோ கொடுக்கலாம். இதன்பிறகு விளையாட ஆரம்பிக்கும் குழந்தை, இரவு எட்டு மணி வரை வேறு எதையும் தேடாது. இரவு எட்டு மணிக்கு மீண்டும் இட்லி, சப்பாத்தி, தோசை ஒன்று ஏதாவது ஒரு டிபன் வகை உணவுகளைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
இரவு உணவில் அசைவ உணவுகளைச் சேர்க்கக்கூடாது. அடிக்கடி குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம், ஆம்லெட் செய்து குழந்தைக்குக் கொடுப்பதைவிட ஆஃப்பாயில் செய்து கொடுப்பதுதான் நல்லது. முட்டையை நன்கு வேகவிடாமல் பாதியளவு வேகவைத்தால் போதும். பாதியளவு வெந்த முட்டையை விரைவில் ஜீரணமாகும். இட்லியை வேக வைக்கிற மாதிரி ஒரு சின்ன பாத்திரத்தில் முட்டையை ஊற்றி வேகவைத்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
மூன்று வயதில்:
மூன்று வயது முதல் குழந்தையின் உணவுப் பழக்கம் மாற ஆரம்பிக்கும். காரணம், குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும். பள்ளிக்குச் செல்லும்போது ஒரு சின்ன டிபன் பாக்ஸில் ஸ்நாக்ஸ் கொடுத்தனுப்புவது பழக்கமாகிவிட்டது. ஸ்நாக்ஸாக பிஸ்கட்டுகளைக் கொடுத்தனுப்புவதைவிட ஏதாவது ஒரு பழத்தை துண்டு துண்டாக்கி கொடுத்தனுப்பலாம். கிண்டர்கார்டன் பள்ளி மதியமே முடிந்துவிடுவதால், மதியம் குழந்தை வீட்டுக்கு வந்தபிறகு வழக்கம் போல சாப்பாட்டைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை கொடுப்பதாக இருந்தால் புரோட்டீன் அதிகமாக உள்ள பிஸ்கட்டை மட்டுமே கொடுக்க வேண்டும். மூன்று வயது ஆரம்பித்தவுடன் குழந்தைகளுக்கு இரவு உணவை அதிகபட்சமாக எட்டரை மணிக்குள் கொடுத்து விடுவது நல்லது. அப்போது தான் குழந்தை சீக்கிரமாகவே தூங்கி, மறுநாள் காலை சிக்கிரமாக எழுந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்.
நான்கு வயதில்:
நான்கு வயது ஆரம்பித்த குழந்தைகளுக்கு மிக்ஸ்டு ரைஸ் கொடுக்கலாம். நிறைய காய்கறிகளோடு கொஞ்சம் புளிசாதம், கொஞ்சம் தயிர் சாதம் என்று கலவையாகக் கொடுக்கலாம் குழந்தைகள் ரசித்து சாப்பிடுவார்கள்.
அதிகம் எண்ணெய் சேர்த்து உணவை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பது நல்லது. காரணம், நகரத்துக் குழந்தைகளின் இப்போதைய பெரிய பிரச்னையே ஓவர்வெயிட் என்று சொல்லப்படுகிற கூடுதல் எடை பிரச்னைதான்.
குழந்தைகளுக்கு எளிதில் சமைத்துக் கொடுக்க முடிகிறது என்பதற்காக நூடுல்ஸை அடிக்கடி செய்து கொடுக்கும் தாய்மார்கள் நகர்ப்புறங்களில் அதிகமாக இருக்கிறார்கள். இது தேவையில்லாத பழக்கம். நூடுல்ஸ் எளிதில் ஜீரணமாகும் என்றாலும், அதில் சத்து ஒன்றும் இல்லை. நூடுல்ஸ்ஸீக்குப் பதிலாக நம்மூரில் கிடைக்கும் சேமியாவைக் கிண்டி, காய்கறிகளைப் போட்டு கொடுத்தால் செலவு மிச்சம்.
ஐந்து வயது முதல்:
குழந்தைகளுக்கு காய்கறி மிகமிக அவசியம். கேரட், முள்ளங்கி, பீன்ஸ், பீட் ரூட், முருங்கை, பட்டாணி என்று ஏதாவது ஒன்றிரண்டு காய்கறிகளைத் தினமும் சாப்பிட வேண்டும். பயறு வகைகள், குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் அற்புதமான உணவுகள். அவற்றையும் தினமும் கொடுக்க வேண்டும்.
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ரசித்து சாப்பிடுகிற மாதிரி, எலும்புக்கு பலம் சேர்க்கிற மாதிரி, எளிதில் ஜீரணமாகிற எந்த உணவை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விடலைப் பருவத்து பிரசினைகள்
பதினாறு வயதில் பெண்களுக்கு ஏற்படும் கவலைகள் அதிகம். குட்டையான பெண்கள், தான் உயரமாக இல்லை மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவர்களின் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும் விஷயம். அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப்பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளாகிறாள். இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. விளைவு, படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்குகிறார்கள். இதுவே பெண்களின் பெரிய பிரச்சினையாகும்.
விடலைப் பருவத்திலிருப்பவர்களின் பிரச்னைகள் என்று வந்தால் ...
வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும்.
குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை. தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை. அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும்.
அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை அவர்களே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தள்ளிப்போகும் வளர்ச்சி என்று சிலருக்கு ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனச் சோர்வும் ஏற்படுகிறது.
பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள். இது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.
பதினாறு வயதில் பெண்களுக்கு ஏற்படும் கவலைகள் அதிகம். குட்டையான பெண்கள், தான் உயரமாக இல்லை மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவர்களின் மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கும் விஷயம். அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப்பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளாகிறாள். இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. விளைவு, படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்குகிறார்கள். இதுவே பெண்களின் பெரிய பிரச்சினையாகும்.
விடலைப் பருவத்திலிருப்பவர்களின் பிரச்னைகள் என்று வந்தால் ...
வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல் பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும் போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும்.
குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை. தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை. அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும்.
அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
உயரமாக இல்லை, குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை அவர்களே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவு பற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தள்ளிப்போகும் வளர்ச்சி என்று சிலருக்கு ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனச் சோர்வும் ஏற்படுகிறது.
பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள். இது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்கு முன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக் கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவா !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|