புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்' - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:12 am


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:18 am

10.சிந்திக்க வைத்த சந்திப்புகள்....

சில பேருக்கு அவர்களுடைய உருவ அமைப்பும் புகழும் கூடுதல் பலத்தைக் கொடுக்கும். எப்பவாவது தனக்குப் பிடிச்ச தங்க நகைகள் வாங்கித் தரச் சொல்வாள் என் மனைவி. அவ என்கிட்ட கேட்கிற சமயத்துல பணப்பற்றாக்குறையில் இருப்பேன். அதனால் நான் அவகிட்ட....

''இதோ பாரும்மா! உனக்கு என்னென்ன நகை வேண்டுமோ, எந்தெந்த டிசைன்ல ஆசையோ அத்தனை டிசைன்லயும் கவரிங் நகையில வாங்கிப் போட்டுக்கிட்டு என்கூட எங்கே வேணும்னாலும் வா! யாராவது இது கவரிங் நகைன்னு சொன்னா... நீ என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன். ஏன்னா நம்மளைப் பொறுத்தவரை பாண்டியராஜன்ங்கற பேர் இருக்குதுல்ல, அதனால அந்தக் கவரிங் நகை கூட தங்கமாத்தான் எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்'' என்று சொல்வேன்.

சில பேர் தன்னுடைய உருவ அமைப்புக்குப் பொருந்தாத நிஜ வைரக்கல் பதிச்ச தங்க நகையே போட்டிருப்பாங்க. ஆனா அது மத்தவங்களுக்குக் கவரிங் நகையாகத்தான் தெரியும். ஆனா கடவுள் நம்மளைப் பொறுத்த வரைக்கும் கவரிங்கை கூட தங்கமா நினைக்கிற அளவுக்குப் பேரையும், மரியாதையையும் கொடுத்திருக்கான். அதனால அதைப் பயன்படுத்திக்குவோம்.

இரண்டாவது, பணப் பற்றாக்குறை காரணம் மட்டுமல்ல, பாதுகாப்பும் கூட. நாளைக்கு ஒரு செயின் காணாமல் போயிட்டாக்கூட இரு நூறு ரூபாய்தானே போயிடுச்சுன்னு பெரிசா கவலைப் படாம விட்டுடுவோம், என்று என் மனைவிக்குப் பாடம் போதிப்பேன்.

சில பேருடைய சந்திப்பு எனக்குப் பாடமாக அமைந்திருக்கிறது. ஒருமுறை வைரமுத்து அவர்கள் அவருடைய சித்தப்பா திரு. இராஜாராம் பாண்டியன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்துக்குப் பிறகு திரு. இராஜாராம் பாண்டியன் அவர்களும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அவரும் நிறைய வெளிநாடுகள் சென்று உலக அனுபவம் மிக்கவர்.

கவிப்பேரரசு அவர்களுக்கு இவர் சித்தப்பா என்றாலும் உருவ அமைப்பில், நிறத்தில், பேச்சாறலில் மட்டுமல்லாமல் எதையும் பகிர்ந்து கொள்கிற பரந்த மனசு உட்பட, கவியரசைப் போலவே இவருக்கு பல ஒற்றுமை உண்டு. இவர்கிட்ட பேசினா நாம் பல புது விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். சமீபத்தில் வெளிநாட்டில் அவரைக் கவர்ந்த, என்னையும் கவர வைத்த ஒரு விஷயம்...

பல நாட்டுத் தொழிலதிபர்கள், மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்திருப்பார்கள். முறையான விழா நடப்பதற்கு முன்பாக, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசி விவாதித்துக் கொள்வார்களாம். அதாவது உங்க ஊர் எப்படி© சாப்பாடு எப்படி© பழக்க வழக்கங்கள் பண்பாடு எப்படி© காதல், பொருளாதார மேம்பாடு எப்படி© என்று இப்படிக் காரசாரமாகப் பல விஷயங்களை மனம் விட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு, இப்ப ''கம் டு தி பாயிண்ட்'' என்று எந்த நோக்கத்திற்காக மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்தார்களோ அதைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்களாம்.

இப்படியொரு பழக்கத்திற்குக் காரணம் மனம் விட்டு பரஸ்பர நட்புடன் பேசி, பகிர்ந்து கொண்டால், ஒரு மிகப் பெரிய ப்ராஜெக்டைப் பற்றி பேசும் பொழுது, எந்தக் கருத்தையும் திட்ட நலனுக்காகக் கூச்சப்படாமல் வெளிப்படையாக, பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு ,இல்லாமல் சொல்ல முடியும் என்கிற கருத்தை என்னிடம் சொன்னார்.

இதைக் கேட்ட பிறகு ஒரு விஷயம் எனக்கு பிடிப்பட்டது. மரியாதை நிமித்தமாகப் பல நல்ல விஷயங்களை நம்மால் தைரியமாகச் சொல்ல முடியாமல் போய்விடும். அதாவது அவர் இருக்கிற போஸ்ட்டுக்கு நாம் போய் இதைச் சொல்லலாமா© என்கிற பயம் வந்து சொல்லாமல் விட்டு விடுவோம்.

சினிமா பட டிஸ்கஷன்ல கூட இந்த மாதிரி சங்கடங்கள் ஏற்படுவது உண்டு. உதாரணத்துக்கு, 'காதலி காதலன் கிட்ட தன்னுடைய காதலை எப்படி வெளிப்படுத்துவாள்' என்பதைச் சொல்ல வேண்டும். நான் ஒரு சீன் நினைச்சுட்டு இருப்பேன். அதைச் சொல்ல நினைக்கும் பொழுது நம்ம லெவலுக்கு நாம சொல்றது டைரக்டருக்குப் பிடிச்சு இருக்குமா© என்கிற தயக்கம் வந்துவிடும். அப்பொழுது இன்னொருவர் பட்டென்று மனதில் பட்டதைச் சொல்லி விடுவார். அவருக்கு சபாஷ் கிடைத்து விடும். அப்பத்தான் நமக்கு அடடே நம்ம தொண்டைக்குழியிலேயே நின்ன சீனை, சொல்லாம விட்டுட்டோமே என்று வருத்தப்படுவேன். இதற்கு என்ன காரணம்© சகஜமா பயமின்றி சொல்லத் தைரியமில்லை என்பதுதான்.

எல்லாருடைய சிந்தனையும் மூளையும் அந்த நேரத்துல அந்த சீனுக்கு என்ன வேணும்னுதான் தேடிக்கிட்டு இருக்கும். ஆனா இவ்வளவு பெரிய டைரக்டர்கிட்ட சொல்லும் போது, ஏத்துக்குவாரா என்கிற பயம் வந்ததால்தான் மற்றவர்கள் சொல்ல முடியவில்லை. ஒருவர்மட்டும் சரியென்று மனசுக்குப்பட்டதைத் தைரியமாகச் சொல்லிவிட்டார். பாராட்டும் கிடைத்தது.

எனவே, நமக்கு ஆயிரம் விஷயங்கள் தெரிந்தாலும் அதை வெளிப்படுத்துகிற முறை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு திரு. இராஜாராம் பாண்டியன் அவர்கள் சொன்ன வெளிநாட்டு சம்பவம் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:19 am

11.'நடந்தா சந்தோஷம். நடக்கலைன்னா ரொம்ப சந்தோஷம்''

இந்தத் தத்துவத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் டைரக்டர் கேயார். அவர் டைரக்சன்ல 'கவலைப்படாதே சகோதரா' படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கேன். செட்ல அவரைப் பார்க்கும்போது, தினம் புதுசு புதுசா அவர்கிட்ட இருந்து கத்துக்குவேன். அவர்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்ன நடந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் டென்ஷனாக மாட்டார். அவர் சிரிக்க மாட்டார். ஆனா மத்தவங்களை சிரிக்க வைக்கிற மாதிரிதான் பேசுவார். அவர் முகத்துல எப்பவுமே அமைதியும் சாந்தமும் குடி கொண்டிருக்கும். எந்த விஷயத்தையும் ஈஸியா எடுத்துக்கணுங்கறதை எனக்குப் பிராக்டிக்கலா கத்துக் கொடுத்தவர் கேயார்தான்.

''டென்ஷனாகி ஒண்ணும் ஆகப் போறதில்லை' பாண்டியன். நாம டென்ஷனாகி ஏதோ வேலை முடியப்போகுதுன்னா டென்ஷனாகலாம். நாம டென்ஷனானாலும் இதேதான் நடக்கப் போகுது. அதனால் எப்பவும் ரிலாக்ஸா இருக்கக் கத்துக்கணும்.'' என்று அடிக்கடி சொல்வார்.

அதற்காக சோம்பேறியாகவோ, சோர்வாகவோ கேயார் இருப்பதில்லை. அதனாலதான் அவருடைய 'தியரி' எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. என்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பார்த்தவங்க சில பேர் பெரிய ரேஞ்சுல வளர்ந்துட்டதால, என்கிட்டத்தான் அசிஸ்டெண்ட்டா வேலை செஞ்சேன்ங்கறதை சொல்லமாட்டங்க. அதுக்காக மனசுல எனக்குச் சின்னதா நெருடல் உண்டாகும்.

ஆனா கேயாரை சந்திச்சதுக்கப்புறம் 'நடந்தா சந்தோஷம்... நடக்கலைன்னா ரொம்ப சந்தோஷம்'னு அவர் சொல்ற மாதிரி ©சொன்னா சந்தோஷம் சொல்லலைன்னா ரொம்ப சந்தோஷம்' அப்படீன்னு டேக் இட் ஈஸி பாலிசிக்கு வந்து விட்டேன்.

அதே மாதிரி சினிமா வட்டாரத்துல கிருபாசங்கர்னு ஒருவர் இருக்கிறார். நாங்களெல்லாம் 'நைனா' என்று அன்போடு அழைப்போம். அவர் சினிமாவுல எடிட்டரா இருந்தார். டைரக்டராக இருந்தார். தயாரிப்பாளராக இருந்தார். இப்ப ஓர் இருபது வருஷமா சினிமாவுலதான் இருக்கிறார். ஆனா, அவர் எந்த வேலையும் பார்க்கலை. தினம் ஷூட்டிங் வருவார். ஷூட்டிங்கிற்கு அவர் வரலைன்னா நாங்க டென்ஷனாகி விடுவோம்.

காரணம், அவருடைய சேவை என்னை மாதிரி நிறையப் பேருக்குத் தேவைப்பட்டது. அவராகவே பிரச்சினையை எடுத்துப் போட்டுக் கொண்டு, செயலாற்றுவார். உதாரணத்துக்கு செப்டம்பர், அக்டோபர்ல என்னுடைய கால்ஷீட் ப்ரீயா இருக்குதுன்னு அவர் தெரிஞ்சிக்கிட்டா, யாராவது ஒரு புரட்யூசர் கிட்ட போய் இந்த டேட்ல பாண்டியராஜன் ப்ரீயா இருக்கார். அந்த டேட்ல அவரை வச்சு ஒரு படம் பண்ணலாம்© என்று நமக்காக அவர் காவடி தூக்குவார். இப்படியே தன்னுடைய வயதான நிலையிலும், வாழ்க்கையை முறையாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவரிடம் இன்று வரை இருக்கும் ஒரே மூலதனம் அன்புதான்.

இவர் மூலம் நான் கத்துக்கிட்ட விஷயம் என்ன்னா, சினிமாவுல உழைச்சு நிறைய சொத்து வச்சிருந்தாத்தான் மரியாதை கிடைக்கும் என்பதல்ல; மரியாதையா இருந்தாலே இந்த உலகம் மதிக்கும் என்பதற்கு நைனாவே உதாரணம். எனவே சிறந்த நூல்கள் மட்டும் நமக்குப் பாடமாக அமைவதில்லை.நல்ல மனிதர்களும்தான்.

பெரிய அளவுல மூலதனம். பெரிய அளவுல பேக்ரவுண்ட். இதை வச்சு முன்னுக்கு வந்தவங்களை விட தன்னம்பிக்கையை மூலதனமா வச்சு ஜெயிச்சவங்கதான் நிறைய பேர். உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்குங்க.

எனக்கு ஏற்பட்ட சினிமா ஆசையினால் என் படிப்பைத் தொடர முடியலை. பார்த்துக்கிட்டு இருந்த எல்லா வேலைகளையும் உதறித் தள்ளிட்டேன்.

நான் சினிமாவுல அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்றதுக்கு முன்னாடி 'சின்ன சின்ன வீடு கட்டி' என்கிற படத்துலதான் அறிமுகமானேன். இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் என் நாடகக் குரு சைதாப்பேட்டை ஸ்ரீராம்.

இந்தப் படத்தை எடுத்த அம்மன் கிரியேஷன்ஸ் சாதாரணமான கம்பெனி அல்ல. டைரக்டர் பாரதிராஜா சாரை வைத்துப் 'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', என் குருநாதரை வச்சு 'கன்னிப் பருவத்திலே' போன்ற வெளிவிழாப் படங்களை தயாரித்த நிறுவனம். எனவே ஒரு பெரிய பேனர் வேல்யூ உள்ள கம்பெனி தயாரிக்கிற படத்துல முதன் முதலா நடிக்கப் போகிறேன் என்கிற சந்தோஷத்தில் ராத்திரியெல்லாம் தூக்கம் வரலை.

விடிஞ்சும் விடியாத அதிகாலைப் பொழுதில் எழுந்தேன். ஏழு மணிக்குள்ள மூணு முறை சேவிங் பண்ணினேன். குளிச்சேன். பாண்டி பஜார்லதான் ஷூட்டிங். எட்டு மணிக்கெல்லாம் லொக்கேஷனுக்குப் போயிட்டேன். பத்து மணிக்குத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க.

மேக்கப்பெல்லாம் போட்டு முடிஞ்சவுடனே டைரக்டர் விஜயராஜா என்னைக் கூப்பிட்டு ''நீ வந்து ரோட்ல வித்தை காட்டுகிற மோடி மஸ்தானுக்கு அசிஸ்டெண்ட். இவர் தான் மோடி மஸ்தான்'' என்று என்னை நடிக்க அழைத்து வந்த திரு. ஸ்ரீராம் அவர்களைக் காட்டினார். டைரக்டர் எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தார்.

''வா இந்தப் பக்கம்''

''வந்தேன்''

''கேட்டால்''

''சொல்வேன்''

''அய்யா என்ன பண்றார்©''

''பீடா திங்கிறார்.''

''இவர் பாக்கெட்ல என்ன இருக்கு©''

''மார்வாடிக் கடை ரசீது இருக்கு'' என்று, மோடி மஸ்தான் கேட்குற கேள்விகளுக்கெல்லாம் பட்பட்ன்னு டயலாக் பேசணும். வசனம் சொல்லிக் கொடுத்து முடிஞ்சவுடனே டைரக்டர் கேமிராமேன்கிட்ட ''மோடி மஸ்தான் 'வா இந்தப் பக்கம்' என்று சொல்வார். இந்தப் பையன் 'வந்தேன்' என்று சொல்லும் பொழுது டைட் குளோசப் வச்சுக்குங்க'' என்று சொன்னார். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. நமக்கு மட்டும் குளோசப் ஷாட் என்று சொல்கிறாரே டைரக்டர் என்று. ஆனால் 'வந்தேன்' 'சொல்வேன்' 'பீடா திங்கிறார்' என்று வசனம் பேசும் பொழுதெல்லாம் போர்வையால் முகத்தை மூடி இருக்க வேண்டும் என்றும், அப்படி மூடியிருப்பதைத் தான் குளோசப்பில் எடுத்தார்கள் என்றும் பிறகுதான் தெரிந்தது.

நான் நடிக்க, சூட்டிங்கெல்லாம் முடிஞ்சு டப்பிங் பேச என்னைக் கூப்பிட்டாங்க. நானும் முதல் முதலா நம்ம முகத்தை சினிமாத் திரையில பார்க்கப் போகிறோமே என்ற சந்தோஷத்தில் டப்பிங் தியேட்டருக்குப் போனேன். என் சீனைப் போட்டாங். பார்த்தா 'வா இந்தப் பக்கம்' 'வந்தேன்' என்ற வசனம் தான் வருகிறது. என் முகத்தையே காணோம். ஜூம் பேக்ன்னு சொன்னாங்க. டைட் குளோசப்ன்னு சொன்னாங்க. ஆனா போர்வையைப் போட்டுல்ல நம்ம முகத்தை மறைச்சுட்டங்க. நாம அந்த அளவுக்கா அசிங்கமா இருக்கோம் என்று டப்பிங் தியேட்டர்லேயே அழுதுட்டேன். ஆனால் அடுத்த நிமிடமே மனதைத் தேற்றிக் கொண்டு நடந்தே வீட்டிற்கு வந்தேன்.

மறுநாள், நேற்று இப்படி நடந்து விட்டதே என்று அப்பா அம்மா சொல்லும் வேலைக்குப் போக என் மனசுக்குத் தோன்றவில்லை. மீண்டும் சினிமா கம்பெனி வாசல்களை நோக்கித்தான் என் கால்கள் சென்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:19 am

12. என்னைத் தெரியலையா!

'கன்னிராசி' படம் முடிந்து 'ஆண்பாவம்' படத்துக்காக சில ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காததால் பேசாமல் நானே நடித்து விடலாமா© என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது 'கன்னிராசி' படத்தில் நான் கேமிரா ஆங்கிளுடன் இருக்கும் என்னுடைய ஸ்டில்ஸை ப்ரேம் செய்து எடுத்துக் கொண்டு வந்து ஸ்டில்ஸ் ரவியின் உதவியாளர் ஆறுமுகம் என்னிடம் கொடுத்தார்.

கொடுத்துவிட்டு '' சார் அடுத்து நீங்க எடுக்கப் போற படத்துல என்னை ஸ்டில் போட்டோ கிராபரா அறிமுகப்படுத்துங்க'' என்றார்.

நான் நடிக்க நினைக்கும் போது என்னிடம் கரெக்டாக ஸ்டில்ஸ் போட்டோகிரபராக சான்ஸ் கேட்டார். உடனே நான் அவரிடம்'' என்னை மட்டும் அழகா போட்டோ எடுத்துக் காண்பிச்சிரு.. நல்லா இருந்தா நீதான் ' ஆண்பாவம்' படத்துக்கு ஸ்டில் போட்டோகிராபர்னு© உறுதியளித்தேன். அவரும் நான் எதிர்பார்த்தபடியே ஸ்டில்ஸ் எடுத்துக் கொடுத்தார். நானும் சொல்லியபடி'ஆண்பாவம்' படத்தில் ஸ்டில் போட்டோகிராபராக அவரை அறிமுகப்படுத்தினேன். நான் மட்டும்'' சின்ன சின்ன விடு கட்டி'' படத்தில் நம் முகத்தை முடி படம் எடுத்தார்களே என்று மனம் தளர்ந்திருந்தால், ' ஆண் பாவம்' படத்தில் ஹீரோவாக நடிக்க தைரியம் வந்திருக்காது. இதற்கு ஒரே காரணம் தன்னம்பிக்கைத்தான்.

ஒருவருக்கு மரியாதை கொடுக்கிறதுங்கறது, நாம கத்துக்க வேண்டிய சமாச்சாரம் அல்ல. அது நம்மையறியாமலேயே நம்ம கலாச்சாரம் சொல்லிக் கொடுத்துடுது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எந்த மேடையிலும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கமாட்டார். அப்படி இருந்தும் யாரும் பார்த்திருக்க முடியாது.

அதே மாதிரி யாரையாவது பார்த்தா வணக்கம் சொல்றதிலேயும் யார் முதல்ல சொல்றதுங்கற ஈகோவுலேயே டைம் எடுத்துக்குவாங்க. அதனால எனக்கு அந்த மாதிரி பழக்கம் வந்துடக் கூடாதுங்கறதுக்காக சின்னவங்களோ, பெரியவங்களோ முதல்ல ஒரு கும்பிடு போடறதனாலே நன்மை தானே தவிர நிச்சயமா தீமை கிடையாது. போடாம இருக்கறதனால வம்பு வர்றதக்கு வாய்ப்பு உண்டு.அதனால முதல்ல கும்பிடு போடுறதல நான் எப்பவுமே தவறினது இல்லை. இதுக்கு எனக்கு வழிகாட்டியும் உதாரண புருஷரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். அவரை எப்பவாவது சந்திக்கப் போனா, நாம கும்பிடக் கை எடுக்கறதுக்கு முன்னாலேயே அவர் கும்பிட்டுடுவாரு. காரை விட்டு இறங்குற போது, நாம முதலில் கும்பிடலாம்னு நினைப்பேன். கதவு திறந்தால் கும்பிட்டுக்கிட்டே இறங்குவாரு

ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கறதுலேயும் இந்த ஈகோ பிராப்ளம் உண்டு. அவன் என்ன அவ்வளவு பெரிய மனுசனா© அவனை நான் போய்ப் பார்க்கணுமா© அவன் வந்து பார்க்கக்கூடாதா© அந்த அளவுக்குப் பெரிய மனுஷன் ஆகிட்டானா© இப்படி யார் வந்து பார்க்கிறது எந்த இடத்துல பார்க்கறதுங்கறதுல நிறைய குழப்பங்கள் இருக்கு.

யோசிச்சுப் பார்த்தா நிறைய வாய்ப்புகளை இழப்பதற்கு இந்த மாதிரி ஈகோ பிரச்சினை காரணமா அமைஞ்சுடும். அதாவது நம்மளை அவங்க ஒரு மரியாதைக்காகக் கூப்பிட்டு இருக்க மாட்டாங்க. நமக்கு நல்லது பண்ணணும், நமக்கு நன்மை செய்யணுங்றதுக்குத்தான் கூப்பிட்டு இருப்பாங்க. ஆனா அவரு கூப்பிட்டு நான் போகணுமாங்கற ஈகோவுல போகாம இருந்தா, தனக்கு வர இருந்த நல்ல வாய்ப்பை இழந்திடுவாங்க. நமக்கு நேரம் கிடைக்காத பட்சத்தில் போகலைன்னா பராவயில்லை.ஆனா நமக்கு நேரம் கிடைச்சு பெரியவங்க, சின்னவங்க, பாப்புலர் ஆனவங்க, சாதாரணமானவங்க அப்படீங்கற பாகுபாடு பார்க்காம, சந்திக்கிறது ரொம்ப நல்ல பழக்கம். இதை ஓரளவுக்கு நான் கடைப்பிடிச்சுட்டு வர்றேன்.

முன்னாடியெல்லாம் யார் எந்த பங்ஷனுக்குக் கூப்பிட்டாலும் போயிடுவேன். ஆனா இப்ப இவரெல்லாம் நம்ம கூப்பிட்டா வருவாரா என்று நினைச்சுக் கூப்பிடுகிற இடத்துக்குத்தான், நான் விரும்பி போய் அவங்களை சந்தோசப்படுத்துவேன். நாம என்ன அவுங்களுக்கு ப்ரெசண்ட் பண்ணோங்கற எதிர்பார்ப்பை விட நம்முடைய ப்ரசெண்ட்டைத்தான் அவுங்க எதிர்பார்ப்பாங்க.

ஏ.வி.எம் சரவணன் சார்கிட்ட பழக வேண்டியதில்லை. பேச வேண்டியதில்லை. அவரைப் பார்த்தாலே நாம நிறைய விஷயங்களைக் கத்துக்கலாம். உதராணத்துக்கு அவர்கிட்டே ஒரு கல்யாணத்துக்குப் பத்திரிக்கை கொடுத்தோம்னா, அந்த நிகழ்ச்சிக்கு வர்றார்னா அன்னிக்கு வந்தாத்தான் தெரியும். ஆனா அவர் வர மாட்டார்ங்கறது நமக்கு இரண்டு நாட்களிலே தெரிஞ்சுடும்.

நாம அழைக்கிற தேதியில அவர் வர முடியலைன்னா உடனடியாக, '' நான் இந்த தேதியில் ஊரில் இல்லை. எனவே தயவு செய்து நான் வரவில்லையென்று வருத்தப்பட வேண்டாம்.என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று கடிதம் எழுதித் தெரிவிப்பார்.

இதனால் அவர் வந்தால் எவ்வளவு சந்தோஷமோ, அவர் வராமலும் அதற்கு ஈடாக சந்தோஷப்படுவார்கள். இப்படிக் கடிதம் எழுதி சந்தோஷப்படுத்தற சம்பிரதாயத்தை சரவணன் சார்கிட்டேத்தான் பார்க்கமுடியும்.

சினிமாவிலேயோ அரசியலிலேயோ அல்லது வேறு எந்த துறையிலேயோ பாப்புலராகிய ஒருவரை எப்பொழுதோ அறிமுகமான ஒருவர் திடீரென்று சந்திக்க வருவார். சந்திக்க வந்தவர் தன்னை யாரென்று கூறாமலேயே '' என்னைத் தெரியவில்லையா©'' என்று கேட்பார். அவரும் யோசித்துப் பார்ப்பார். அந்த சந்திப்பு மறந்து போய் இருக்கும்.காரணம் தினம் நுறு பேரை சந்திப்பதால்.ஆனால் வந்தவர் அப்பொழுதுகூட தன்னை யாரென்று சொல்லாமலேயே மீண்டும்...

என்னைத் தெரியவில்லையா'' என்று டென்ஷன் படுத்தி எரிச்சலை உண்டாக்குவார். அதற்கு அவர் முதலிலேயே இந்த ஊர்ல இந்த நிகழ்ச்சியில இந்த சந்தர்ப்பத்துல சந்திச்சோம். ஞாபகம் இருக்கா© என்று சொல்லி இருந்தால் ஈஸியா புரியும்.

இது மாதிரி நான் நிறைய அனுபவப்பட்டிருக்கேன். அதனால நான் ஒரு பழக்கத்தை வச்சுக்கிட்டேன். எங்கே போனலும் யாரைச் சந்திச்சாலும் என்னை அவுங்க நான் யாருங்கறதை தெரிஞ்சு வச்சு இருந்தாலும், அவுங்ககிட்ட நான்தான் பாண்டியராஜன்னு என்னை அறிமுகப்படுத்திக்குவேன். என்னைத் தெரியுதான்னு நாம கேட்கறதை விட, நம்மை யார்னு அறிமுகப்படுத்திக்கிட்டா தப்பில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:20 am

13. நீதி கிடைப்பது நிச்சயம்

தேடும் போது கிடைக்காது. விரும்பிப் போனா விலகிப் போகும். ஆனா முயற்சி செய்தா முடியும், என்பதற்கு என் வாழ்க்கையில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

அன்றாடம் கூலி வேலை பார்ப்பவன் எப்படியாவது ஓர் அட்லஸ் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதை தன் வாழ்நாளின் இலட்சியமாகக் கொண்டு, வாங்கி சந்தோஷம் அடைவது மாதிரி, நானும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே என் வாழ்நாளில் எப்படியாவது இந்த்சுசுகி பைக் ஒன்று வாங்கி விட வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியம் நான் சினிமா டைரக்டர் ஆன பிறகுதான் நிறைவேறியது.

ஆனா அதை வாங்குறதுக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இருந்தே யாரைப் பார்த்தாலும், ஏங்க ஒரு இந்த்சுசுகி பைக் வாங்கணும்னா ரெடி கேஷ் எவ்வளவு© இன்சால்மெண்ட்னா எவ்வளவு தொகை முன் பணம் வேணும்© எவ்வளவு தொகை மாச மாசம் கட்டணும். எத்தனை பேர் செக்யூரிட்டி போடணும். லோன் போடறது எப்படி©' என்று அது சம்பந்தமாவே கேட்டுக் கிட்டே இருப்பேன். சில நேரம் அதைக் கேக்குற பழக்க தோஷத்துலேயே ஏற்கனவே விபரம் கேட்ட அதே ஆள்கிட்ட மூன்றாவது முறையாகவும் கேட்பேன். அதற்கு அவர்...

''ஏன் பாண்டியா! மாசம் ஒரு வாட்டி பைக் வாங்குறது எப்படின்னு பாடம் நடத்தறதுதான் என் வேலையா© என்று சிரித்துக் கொண்டும் சில நேரம் சிடுசிடுத்துக் கொண்டும் சொல்வார்கள். கொஞ்ச நாள் கழித்து....

திடீர்னு ஒரு நாள் சைதாப்பேட்டையில இருக்கிற என் வீட்டுக்கு ஆண்பாவம் பட பைனான்சியர் பி.என் வேலாயுதம் வந்தார். வந்தவர் என் கையில் ஒரு சாவியைக் கொடுத்து ''இனிமே யார்கிட்டேயும் பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி 'சந்தைக்கு போகணும். ஆத்தா வையும்' என்று வர்றவன் போறவன் கிட்டயெல்லாம் பைக் வாங்கறது எப்படின்னு கேட்டுத் தொல்லை பண்ணாதே'' என்று சொல்லி என்னை வாசலுக்கு அழைத்து வந்தார். பார்த்தா வாசல்ல சந்தனம் பூசி மாலையெல்லாம் போட்டு இந்த்சுசுகி பைக் கம்பீரமா நிக்குது. எனக்கு வேலாயுதம் சார்கிட்ட என்ன பேசணும்ங்கறதே தெரியாம சந்தோஷத்துல திக்குமுக்காடி நின்றேன்.

அப்ப தெரிஞ்சுக்கிட்டேன். வெறுங்கை முழம்போடாது. தேடினா கிடைக்காது. ஆனா உழைப்பும் விடா முயற்சியும் இருந்தா கண்டிப்பா எதையும் சாதிக்கலாங்கறதை. அடுத்து வசதி இருந்தாலும் இல்லாட்டியும் மனுசனா பொறந்தா ஏதாவது இலட்சியம் கொள்கைன்னு கண்டிப்பா இருக்கணும். எனக்குத் தெரிஞ்ச வடநாட்டு நண்பர் ஒருத்தர், அவர் நல்ல வசதியோட வாழ்ந்துட்டு, மிகவும் கஷ்ட நிலைக்கு ஆளாகிவிட்டார். அவர் எனக்குக் குடும்ப நண்பர் என்பதால் அவர் வீட்டு எல்லா விசேஷங்களுக்கும் போவேன்.
ஒருநாள் அவருடைய குழந்தையோட பிறந்தநாள் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போய், வாங்கிட்டுப் போன ப்ரசன்டேஷனை அவர் கையில் கொடுத்தேன். ஆனா அவர் வாங்க மறுத்திட்டார்.

அதுக்கு அவரும் அவருடைய மனைவியும் சொன்ன காரணம் ''எப்பவுமே நாம திருப்பி செய்ய முடியுங்கற சூழ்நிலை இருக்கும் பொழுதுதான் உறவுக்காரங்களா இருந்தாலும் சரி, அவங்ககிட்டே இருந்து எதையும் வாங்கிக்கலாம். நாம திருப்பிச் செய்ய முடியற நிலைல இல்லைங்கற பொழுது அவங்ககிட்ட இருந்து வாங்குறது சரியில்லை. நாளைக்கே உங்க வீட்ல ஒரு விசேஷம் வரலாம். அதுக்கு நாங்க ஏதாவது செய்யக் கூடிய நிலை இருந்தா இன்னிக்குக் கண்டிப்பா நீங்க கொடுக்கறதை வாங்கிக்குவேன்'' என்றார்கள்.
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து அந்தத் தம்பதிகள் என்னை மெய்சிலிர்க்க வச்சுட்டாங்க. அதனால யாரோ ஏதோ கொடுக்கிறாங்கங்கறதுக்காக வாங்குற பழக்கம் எவ்வளவு அநாகரிமானது என்பதை அன்றைக்கு அவர்கள் உணர்த்தினார்கள். அதாவது ஏழ்மையிலும் செம்மை என்பதை. சுருக்கமாச் சொல்லணும்னா, எந்த வேலை செய்தாலும் அதுல கண்டிப்பா புகழும் உண்டு, இலாபமும் உண்டு. வாழ்க்கையில் சில பிரச்சினைகள் உச்சமாயிடும் பொழுது நமக்கு சட்டத்தின் மீதும் நேர்மையின் மீதும் நீதியின் மீதும் உள்ள ஒரு நம்பிக்கை போய்விடும்.

என்ன இது இவ்வளவு நல்லவங்களா இருக்கோம். ரொம்ப கரெக்டா இருக்கோம். இவ்வளவு உழைக்கிறோம். அதுக்கேத்த கூலி கிடைக்கலை. இவ்வளவு நேர்மையா இருக்கோம். நம்ம மேல வீண்பழி வருது, தப்புப் பண்ணினவங்க நல்லா இருக்காங்களே; ஆனா நமக்கு டைமுக்கு நீதி கிடைக்கலையே என்ற உணர்வு வரும் பொழுதெல்லாம் கவியரசு கண்ணதாசன் எழுதிய கட்டுரையில் படித்தது ஒன்று என் நினைவுக்கு வரும்.

பாளையங்கோட்டை சிறையில் கவிஞர் இருந்த போது, அங்கே மறுநாள் காலையில் தூக்கு மேடைக்குப் போகும் ஒரு தூக்கு தண்டனைக் கைதியைப் பார்த்திருக்கிறார். இவரைப் பார்த்ததும் அந்தக் கைதி தேம்பித் தேம்பி அழுதானாம். உடனே கவிஞர்.....

''ஏனய்யா நீ கொலை பண்ணினதுக்குத்தானே உன்னைத் தூக்குல போடப் போறங்க. மத்தவங்களைக் கொலை பண்றதும் பாவம்தானே'' என்று சொன்னாராம்.

அதற்கு அந்தக் கைதி, '' சத்தியமா நான் இந்தக் கொலையை பண்ணலீங்க. பொய் சாட்சிகளை வச்சு சட்டத்தின் மூலமா எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டாங்க. '' என்று கைதி சொல்லி முடித்தவுடன்'' என்ன அநியாயம் இது கொலையே பண்ணாத ஒருத்தனைக் கொலை பண்ணிட்டான்னு சொல்லி...'' கவிஞர் ஷாக்காகிக் கன்னத்தில் கை வைத்தவாறு ஃபீல் பண்ணி இருக்கிறார். அந்தச் சமயத்தில் தொடர்ந்து அந்த கைதி..

'' இதுக்கு முன்னாடி உண்மையிலேயே இரண்டு கொலை பண்ணி இருக்கேன். அப்ப என்னை சட்டம் தண்டிக்கலை ஐயா'' என்றானாம்.

இதைப் படித்தவுடன் நான் தெரிஞ்சுக்கிட்டது என்னன்னா, உடனடியாக நேர்மைக்கு நீதி கிடைக்காமல் இருந்திருக்கலாம். குற்றவாளி தண்டனை பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், காலம் கடந்தாவது என்றாவது ஒரு நாள் சரியான தீர்ப்பு வழங்கப்படும் என்பது நிச்சயம்.

முற்றும்



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 01, 2014 12:10 pm

மிக, மிக தெளிவான நடையில் உள்ளத்தில் உள்ளதை அப்படியே எழுத்தில் பிரதிபலித்திருக்கிறார். படிக்க, படிக்க நமக்கும் சில பாடங்கள் உள்ளது என்பது தெளிவாகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 01, 2014 7:30 pm

இறக்குமதி செய்துக் கொண்டேன், பதிவுக்க நன்றி மாமா அங்கள்.


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu May 01, 2014 9:01 pm

எப்படி தறவிறக்கம் செய்வது தல

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 02, 2014 10:47 am

copy and paste தான் சார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 02, 2014 11:21 am

vishwajee wrote:[link="/t109888p15-topic#1061045"]எப்படி தறவிறக்கம் செய்வது தல

தரவிறக்கம் செய்ய முடியாது, இங்கு படிக்கலாம்!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 02, 2014 6:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t109888p15-topic#1061151"]copy and paste தான் சார்.

நல்ல ஐடியா


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக