புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
2 Posts - 3%
jairam
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_m10ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாக ஓடத் தயாராகிறது 'சரக்கு' : 2014 - 15ல் இலக்கை அதிகரிக்க அரசு 'முஸ்தீபு!'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 8:52 pm

அன்றைய குறள்

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ௌன்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

'மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால், 'நாணம்' என்று சொல்லப்படும், நற்பண்பு நிற்காமல் ஓடி விடும்' என்பது, இக்குறளின் கருத்து.

இன்றைய குரல்

''ஒரு நாளைக்கு என் கூலி, 150 ரூபா. ஒரு குவார்ட்டரு, 82 ரூபா. இரண்டு வாட்டர் பாக்கெட், 12 ரூபா. ஒரு சிப்ஸ் பாக்கெட், 5 ரூபா. ஒரு சிகரெட், 6 ரூபா. மீதி, 45 ரூபாயை வீட்டுக்கு குடுத்துடுவேன். அதுல இருந்து, ஒரு பைசா எடுக்க மாட்டேன். தம்பி... நான் நியாயமான குடும்பத் தலைவன்யா...!''

- இரவு 7:00 மணியளவில், தலைநகரத்து 'டாஸ்மாக்' வாசலில், குத்த வைத்து புலம்பும் 'குடி'மகனின் குறள் இது!

''காசு வாங்குறானுங்களே தவிர, நல்ல சரக்கு கொடுக்குறானுங்களா? கார்ப்பரேஷன் வாட்டர் குடிச்சா மாதிரி, 'சப்'புன்னு இருக்கு. தனியார் 'ஒயின் ஷாப்' இருக்கறப்போ, சரக்கு சும்மா, தேன் மாதிரி இருக்கும். த்த்துா... நல்லா சம்பாதிக்கிறானுங்ங்ங்....'' தள்ளாடி சரியும் தமிழனின் தலை, தரை தொட்டு விடாமல் தாங்குகிறது, தலைநகரத்து குப்பை தொட்டி. பார்த்து, பார்த்து பழக்கப்பட்ட காட்சி என்பதால், மூக்கைப் பிடித்தபடி, சுலபமாய் கடந்து செல்கிறது கூட்டம்.

குடிமகனை உரசி விடாமல், மிக கவனமாக க(ந)டந்து, 'பார்' உள்ளே நுழைந்தால், சரக்கு தொடாமலேயே, நம்மை கிறுகிறுக்க வைக்கின்றன, ஊழியர் சொல்லும் விஷயங்கள்...

பாருக்குள்ளே நல்ல 'பார்'

''சார்... சென்னையில ரேட் பரவாயில்லை. சரக்குக்கு, வெறும், 2 ரூபாய் தான் கூட வைச்சு விற்கிறோம். இதுவே தெற்கே போயிட்டீங்கன்னா, 90, 100ன்னு, தாறுமாறா இருக்கும்.

''அவங்களை சொல்லி தப்பில்லைங்க... ஏரியா சூப்பர்வைசர், மாவட்ட மேலாளர், உதவி ஆணையர், எக்சைஸ் சூப்பர்வைசர் ஆபிசர்ன்னு, எல்லாருக்கும் பணம் கொடுக்கணும். இவ்வளவு ஏன்... அதிகமா விற்குற சரக்குக்கு, 'தேவை பட்டியல்' கொடுக்கறப்போ கூட, பணம் அழணும்.

''இதோட, குடவுன்ல இருந்து வர்ற பெட்டியிலேயே பிரச்னை இருக்கும். வர்ற பெட்டி, அடிப்பெட்டியா இருந்ததுன்னு வைங்க.... அழுத்தத்துல பாட்டில் உடைஞ்சிரும். சில பாட்டில்ல கீறல் இருக்கறதே, வெளியில தெரியாது. அவ்வளவு மெலிசா இருக்கும். அதுல இருக்கற சரக்கு, கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சு போச்சுன்னா, அதுக்கு கடைக்காரங்க தான் பொறுப்பு.

''சில நேரத்துல, நம்ம குடிமகனுங்க, கண் இமைக்குற நேரத்துல பாட்டிலை எடுத்து, இடுப்புல மறைச்சிடுவானுங்க. சிக்குனா, அவனுங்க முதுகுல, 'டின்' கட்டிடுவோம். இல்லைன்னா, நாங்க தான், 'தண்டம்' கட்டணும்.

''இதெல்லாம் விட, எங்க 'டாஸ்மாக்' பார்ல மட்டும் தான், 'கட்டிங்' கிடைக்கும். 375 மி.லி., இருக்கிற 'ஆப்' மற்றும் 750 மி.லி., இருக்கிற 'புல்'லுல, அந்த, 'எக்ஸ்ட்ரா' மி.லி.,யை, 'கட்டிங்'கா மாத்தி, காசு பார்த்துடுவோம். அதோட, ஒரு 'ஆப்'ல, 90 மி.லி.,யை அப்படியே உறிஞ்சுட்டு, தண்ணி கலந்துட்டோம்னு வைங்க; ஒரு வித்தியாசமும் தெரியாது; போதையும் இறங்காது.

''சரக்குல இப்படின்னா, 'சைடு டிஷ்'ஷுக்கு, 'ரேட்' ஏத்திடுவோம்! வேற வழியில்லைங்க... எங்க 'பார்' முதலாளிகளும், நாலு பேருக்கு பணம், 'அழ' வேண்டியிருக்குல்ல! சரி... சரி... முதலாளி வர்றாரு. நீங்க பத்திரிகைகாரங்கன்னு தெரிஞ்சா, என்னை உறிச்சுடுவாரு. நீங்க கிளம்புங்க!''

எல்லா விஷயங்களையும் பக்காவாக 'பந்தி' வைத்துவிட்டு, பவுசாக பின்வாங்கினார், 'டாஸ்மாக்' பார்ட்டி! நம் அடுத்த இலக்கு... தனியார் பார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 8:53 pm

இது வேற உலகம்

எதிரில் இருப்பது யார் என்று தெரியாத அளவிற்கு இருட்டு, இளையராஜா இசை, சரக்கிற்கு இரண்டு மடங்கு விலை, சுவையான சைடு டிஷ்கள், சிகரெட் புகை இல்லாத கூடம் என, பந்தாவாக இருக்கிறது தனியார் பார்.'பார்' கேப்டன், தொழில் ரகசியத்தை அம்பலப்படுத்தினார்...

''காலையில, 11:00 மணியில இருந்து, சாயங்காலம் 5:00 மணி வரைக்கும், 'ஹாப்பி ஹவர்ஸ்'ன்னு சொல்வோம். இந்த நேரத்துல சரக்கடிக்க வந்தா, 10 சதவீதம் தள்ளுபடி.

''சரக்கு கூட, சுண்டல், ரசவடை, ரோஸ்டட் பப்பட், உப்பு வேர்க்கடலை, மிக்சர், காரசேவு, உப்பு/மிளகாய் தடவுன மாங்காய், வெண்ணெய், சாலட் எல்லாம் இலவசமா கொடுக்கிறோம். விஸ்கி, ரம் விரும்புற கஸ்டமர்ஸ், சிக்கன் வகையறாக்களை விரும்பி சாப்பிடுவாங்க. பீருக்கு சீஸ், செர்ரி, பைன் ஆப்பிள் ஸ்டிக்ஸ் கச்சிதமா இருக்கும்.

''இதுல, இந்த ரசவடைக்கும், உப்பு கடலைக்கும் ஒரு காரணம் இருக்கு. ரசவடையோட காரமும், புளிப்பும், நாக்குக்கு சும்மா, 'சுர்'ருன்னு இருக்கும். உப்பு கடலை, மாங்காய், வெண்ணெய் அயிட்டங்கள், நாக்குல பட்டவுடனே, தண்ணி குடிக்கிற ஆசையை கிளப்பும். இதனால, மானாவாரியா சரக்கு தொண்டைக்குள்ளே இறங்கும்.

கேப்டன்... நீங்க ஒரு விஞ்ஞானி!

''பொதுவா, ஒரு லார்ஜை, 15 நிமிஷம் வரைக்கும், நிதானமா, வைச்சு குடிக்கணும். சரக்குல, தண்ணி மட்டும் கலந்துக்கணும். சோடா, கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்கிட்டா, வாயு தொந்தரவு வரும். குளிர் நேரத்துல கொஞ்சம் இஞ்சி, மிளகு, ஏலக்காய் போட்டு, ஒரு லார்ஜ் பிராந்தி குடிச்சா, சளி தொந்தரவு போயிடும்.

''வெயில் நேரத்துல, உடம்பு குளிர்ச்சியா இருக்க, எலுமிச்சை சாறு சேர்த்த ஓட்கா, இளநீர் சேர்த்த விஸ்கி எடுத்துக்கணும். இஞ்சி, உப்பு, வறுத்த பூண்டு இதோட ஒரு லார்ஜ் பிராந்தி/ விஸ்கி எடுத்துக்கிட்டா, வாயு கோளாறு சரியாகும். வெயிலுக்கு பீர், ஓட்கா, ஜின்; குளிருக்கு பிராந்தி, விஸ்கி, ரம்ன்னு நல்லதை எடுத்து சொல்றோம். கேட்கறவங்க, நல்லா அனுபவிச்சு வாழ்றாங்க. கேட்காதவங்க, தாறுமாறா குடிச்சு வீணாப் போறாங்க!''

இப்படி, விசாலமான தன் விஞ்ஞான அறிவை, கேப்டன் நம்மிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது, ''கேப்டன்... என் பொண்டாட்டி இருக்காளே...'' என, கவுந்து கிடந்த, ஒரு லார்ஜ் 'பார்ட்டி' போதை தெளிந்து பிளிற, நம்மிடம் பேச்சை துண்டித்து, அடுத்த லார்ஜை, அவருக்காக நிரப்பத் தொடங்கினார், 'பார்' கேப்டன். அந்த சூழல், பாரிலிருந்து நம்மை வெளியேற்றியது.மனதிற்குள் ஒரு சிந்தனை. இனி, தமிழர்களின் மன மயக்கத்திற்கு, தாய்மையின் ஸ்பரிசம், மழலையின் புன்னகை, தென்றலாய் தழுவும் காதல், மெல்லிய துாறல், வர்ண வித்தை காட்டும் வானம் உள்ளிட்ட, மெல்லிய உணர்வுகள் காரணமாக இருக்கப் போவதில்லையா? போதை தான், முன் நிற்கப் போகிறதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 8:53 pm

அரசின் ஆல்கஹால் ஆசை

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட, 2014 -15ம் ஆண்டிற்கான, தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக, நிதித் துறை செயலர் அளித்த விளக்கத்தில், இந்த நிதியாண்டில், அரசின் வருமானம், 1,27,389 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், அதில், மதுபான விற்பனையின் மூலம், 26,295 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் சொல்லியிருந்தார். ஆக, அரசின் மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியை, டாஸ்மாக் தான் தரப்போகிறது. மேலும், இந்த நிதி ஆண்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை, 25,714 கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அதை ஈடுகட்ட, டாஸ்மாக் 'சரக்கு' விற்பனையை மேம்படுத்த, அரசு முயலலாம். அந்த சூழலில், டாஸ்மாக் வருமானம், மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்காக மாறவும்வாய்ப்புண்டு.கடந்த 2013-14ம் நிதியாண்டில், 22,000 கோடி ரூபாய் வருமானம் பெற்று, தமிழக காற்றில் ஆல்கஹால் நாற்றம் நிரப்பியிருக்கும் அரசு, அதைவிட, 4,000 கோடி அதிகமாக விற்பனை செய்ய வேண்டும் என, ஆபத்தான ஆசை கொண்டிருக்கிறது.

ஆஹா... அடடா!

பொதுவாக, 'குற்றங்களுக்கு அடிப்படை காரணம், மது தான்' என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்! ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், தமிழக முதல்வர் வெளியிட்ட புள்ளி விவர கணக்கோ, 'ஆஹா... அடடா...' என்று சொல்ல வைக்கிறது.அதன்படி, 2010 தி.மு.க., ஆட்சியில் பதிவான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை, 638; 2013ல் பதிவான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை, 313. அதே போல், 2012ல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக, தமிழகத்தில் பதிவான வழக்குகள், 7,192 மட்டுமே; ஆனால், மது விற்பனை நடைபெறாத குஜராத்தில், பதிவான வழக்குகளின் எண்ணிக்கையோ, 9,561.ஆக, 'மது விற்பனை அதிகரித்து வந்தாலும், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்பதையும், 'குற்றங்களுக்கு காரணம் மதுவல்ல' என்பதையும், தமிழ்'குடி'மக்கள் நன்றாக புரிந்து குடிக்க... இல்லை... இல்லை... புரிந்து கொள்ள வேண்டும்!

குடி என்பது நோய் :

''முன்னாடியெல்லாம், போதை மீட்டெடுப்பு மையத்துக்கு, கணவனை அழைச்சுட்டு மனைவி வருவாங்க! இப்போது, ஒரு அம்மா தன் பையனை கூட்டிட்டு வர்றாங்க. அந்த அளவுக்கு, இளவயது குடிகாரர்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு! பொதுவா, மூளையோட முன்பகுதி, 21 வயசு வரைக்கும் வளரும். அப்படி இருக்கறப்போ, 21 வயசுக்கு முன்னாடி, மதுவைத் தொட்டா, அதுக்கு அடிமையாக வாய்ப்பிருக்கு. நாள் ஒன்றுக்கு, 3 யூனிட் (90 மி.லி.,) தாண்டிட்டாலே, அது அபாயகரமான குடி தான்! ஏன்னா... ஒரு யூனிட் (30 மி.லி.,) ஆல்கஹாலை செரிக்கவே, கல்லீரலுக்கு ஒரு மணி நேரமாகும். அப்படி இருக்கறப்போ, ஒரு குவார்ட்டருக்கு (180 மி.லி.,) எவ்வளவு நேரமாகும்! அதனால, 'குடி'யை பழக்கமாக்கிடாதீங்க!''ஏன்னா, 'குடி'ங்கறது ஒரு நோய். அந்த நோய் நெருங்காம, நாமதான் பார்த்துக்கணும். அதுக்கு போதுமான விழிப்புணர்வை, அரசு ஏற்படுத்தணும். மொத்த மது விற்பனை வருவாய்ல, 10 சதவீதத்தை, குடி ஒழிப்பு திட்டத்துக்காக ஒதுக்கணும்!''- டி.டி.கே., மருத்துவமனை மருத்துவர், திருமகளின் வார்த்தைகளில், அப்படி ஒரு எதிர்பார்ப்பு!

களித்தானை காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனை திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக் கண்டுபிடிக்க, தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறது, வள்ளுவம்.'குடி என்பது நோய்' என்பதால், இது உண்மை தான் என்கிறது மருத்துவம்; என்றாலும், 'சிகிச்சை' எனும் தீப்பந்தம் கொளுத்தியபடி இருக்கிறார் திருமகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 29, 2014 8:55 pm

கடமையை தொலைத்த அரசு

அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 47ன் படி, மக்களின் வாழ்க்கை தரத்தையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கடமை, தனக்கு இருக்கிறது என்பதை, அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; அதே போல், 'விஷம், பருகியவனை மட்டுமே சாய்க்கும்; ஆனால் மது, அவனோடு, அவன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சாய்க்கும்' என்ற உண்மையை, தமிழன் புத்தியில் ஏற்றவில்லை. இந்த இரண்டும் தான், டாஸ்மாக்கின் அசுர பலம்.

45 ரூபாயில் 5 பேருக்கு உணவு!

அந்த 'டாஸ்மாக்' வாசலில் புலம்பிக் கொண்டிருந்த, குடிமகனின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை சொல்லவில்லையே! மொத்தம் ஐந்து பேர். அவன் தினமும் தரும் அந்த, 45 ரூபாயில் தான், அத்தனை பேரும் பசியாற வேண்டும். இது முடியுமா என்கிறீர்களா? ஏன் முடியாது! அதான் 'மலிவு விலை உணவகங்கள்'

இருக்கிறதே!சபாஷ்! வாழ்க தமிழ்நாடு!

'மதுபானக் கடை' கலைஞன்

''என்னைப் பொறுத்தவரைக்கும், 'குடி'ங்கறது பிரச்னையல்ல! பிரச்னையினால தான் குடியே! என்ன ஒண்ணு... 30 ரூபாய் செலவுல, ரேஷன் தந்து பசியாற வைக்கிற அரசு, 82 ரூபாய் வசூலித்து, ஆரோக்கியத்தை காலி பண்றதுல கொஞ்சம் வருத்தம்! ஏன்னா, காய்ச்சி வடிக்கப்படற (distilled) இந்த சரக்குகள் அத்தனையும், உயிரை கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற விஷம். இதுக்கு, 'கள்' எவ்வளவோ பரவாயில்லை!''

- அக்கறையோடு சொல்கிறார், 'மதுபானக் கடை' படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்.

ஒருபோராளியின் கோபம்:

''உலக சுகாதார நிறுவனம், 'மது என்பது வியாபார பொருளல்ல; அது, அரசுகள் கட்டுப்படுத்த வேண்டிய, ஓர் சிறப்புப் பொருள்'ன்னு சொல்லி, அழுத்தமான மூன்று காரணங்களை முன் வைக்குது. முதலாவதாக, மதுவின் நச்சுத்தன்மை (toxicity), இரண்டாவதாக, போதை உண்டாக்கும் தன்மை (intoxication), மூன்றாவதாக, போதைக்கு அடிமையாக்கும் தன்மை (addictive property). ஆனா, இதைப் பத்தி யோசிக்காம, ஆண்டுக்கு, 26,000 கோடின்னு இலக்கு நிர்ணயம் பண்ணி, மாபியா கும்பல் மாதிரி, அரசு செயல்பட்டுட்டு இருக்கு.''குற்றங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது தான் முக்கிய காரணம். குறிப்பா, எய்ட்ஸ் நோயாளிகள்ல, 90 சதவீத பேருக்கு குடிப் பழக்கம் இருக்கறதா, ஒரு ஆய்வறிக்கை சொல்லுது. ஆக, தவறு செய்ய துாண்டுறது போதை தான். 'போலியோவை ஒழிச்சுட்டோம்'னு பெருமைப்படற அரசு, போதை விபத்துகளால, தினசரி மக்களை ஊனமாக்கிக்கிட்டே தான் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம், மதுவுக்கு எதிரான கொள்கைகள்னு, அரசாங்கத்துக்கிட்டே எதுவும் இல்லாதது தான்!''முதல்ல, இந்த கொள்கைகளை அரசு வகுக்கணும். அதுல, வருடத்திற்கு 20 சதவீதம், மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமா இருக்கணும்!''

- எரிமலையாய் வெடிக்கிறார், அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராய், பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வரும், சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன்!

வில்லன் யார்?

* பீர் தவிர்த்த மற்ற தொழிற்சாலை மதுபானங்களில், 42.8 சதவீதம் எத்தனால் இருப்பதாக சொல்கின்றனர், மருத்துவர்கள். இந்த எத்தனாலே, போதைக்கும், 60 சதவீத உடல் நோய்களுக்கும் காரணம் என்கின்றன, உலக சுகாதார நிறுவன ஆய்வுகள்!

*''ஒரு மரத்து கள்ளை, ஒரு மண்டலம் குடித்து வர, பல நோய்கள் குணமாகும்'' என்கிறது 'கள்' ஆதரவு தரப்பு. ஆனால், அதிலும் எத்தனால் உண்டு என்று வாதிடுகிறது, 'டாஸ்மாக்' தரப்பு.

கள் வருமா?

''எந்நிலையிலும் கலப்படத்திற்கு வாய்ப்புண்டு என்பதால், 'கள்' இறக்குவது தடை செய்யப்பட்டு உள்ளது என்கிறது, தமிழகம். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில், ஏற்றுமதிக்கு கள் தயாராகி வருகிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக, சமத்துவ குடியரசில், எங்ஙனம் அய்யா, ஒரே காரியம் ஒரு ஊரில் சரியாகவும், மறு ஊரில் தப்பாகவும் இருக்க இயலும்?''- எழுத்தாளர் நாஞ்சில் நாடனின், 'உண்ணற்க கள்ளை' கட்டுரை எழுப்பிய இந்த கேள்விக்கு, இன்று வரை பதில் இல்லை எனும்போது, 'கள் வருமா?' என்ற கேள்விக்கும், தமிழகத்தில் இப்போது இடம் இல்லை.

மனதிற்குள் ஒரு சிந்தனை. இனி, தமிழர்களின் மன மயக்கத்திற்கு, மழலையின் புன்னகை, தென்றலாய் தழுவும் காதல், மெல்லிய துாறல், வர்ண வித்தை காட்டும் வானம், தாய்மையின் ஸ்பரிசம் உள்ளிட்ட, மெல்லிய உணர்வுகள் காரணமாக இருக்கப் போவதில்லையா? போதை தான், முன் நிற்கப் போகிறதா?

[thanks]தினமலர்  [/thanks]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக