புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
21 Posts - 4%
prajai
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_m10குவர்னிகா: போரில் எழும் ஓலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவர்னிகா: போரில் எழும் ஓலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 9:26 pm


1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது.

சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண்டுகளை வீசத் தொடங்கின. 2 மணி நேரமாகத் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். இதுதான் உலகப் போர் வரலாற்றில் முக்கியமான சம்பவமான குவர்னிகா குண்டுவெடிப்புச் சம்பவம்.

ஸ்பெயினில் இருந்த இடதுசாரி ஆட்சிக்கு எதிராக வலதுசாரிக் கூட்டணி கிளர்ச்சி நடத்திக்கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியே இந்தப் படுகொலைச் சம்பவம். இந்த வலதுசாரிக் கூட்டணிக்கு ஹிட்லரின் ஜெர்மனியும் இத்தாலியின் முசோலினியும் ஆதரவு அளித்தன.

இந்தத் துர்சம்பவத்திற்கு ஒரு கலைஞனின் எதிர்வினையே பாப்லோ பிக்காஸோவின் ‘குவர்னிகா’ ஓவியம். உலகப்போரின் உச்சகட்டத்திலும் பாரீசிலிருந்து வெளியேறாமல் பாரீசிலேயே வாழ்ந்து மறைந்த பிக்காஸோவின் தாய்நாடு ஸ்பெயின். கிட்டதட்ட கால் நூற்றாண்டுக் காலம் அவர் ஸ்பெயினில் வாழ்ந்தார். 1934க்குப் பிறகு பிக்காஸோ ஸ்பெயினுக்குத் திரும்பவில்லை என்றாலும் 1937இல் நடந்த இந்தச் சம்பவத்தின் துயரத்தை அனுபவித்துணர்ந்ததைப் போலச் சித்திரித்துள்ளார்.

குவர்னிகா, குறியீட்டு வகையைச் சேர்ந்தது. பிக்காஸோவும் தொடக்ககாலத்தில் எதார்த்தவகை ஓவியங்களை வரைந்துள்ளார். அவரது தொடக்கால ஓவியமான The First Communion இதன் சாட்சியாகும். 1890 இறுதியில் பிக்காஸோ அப்போது வலுவடைந்திருந்த குறியீட்டுப் பாணியைத் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார். அவரது குறியீட்டு ஓவியங்களில் குவர்னிகா பிரசித்திபெற்றது. குவர்னிகா குண்டுவீச்சு நடந்த இரு மாதங்களுக்குள் இந்த ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டுள்ளது. 1937ஆம் ஆண்டு ஜூனில் இந்த ஓவியத்தை பிக்காஸோ வரைந்து முடித்துள்ளார். வெளிச்சம் மேலிருந்து ஒரு குண்டு பல்பின் வழியே வழிகிறது. அந்தக் குண்டு பல்பின் வெளிச்சம் விமானத் தாக்குதலைச் சித்திரிக்கிறது. ஓவியத்தில் உள்ள குதிரையும் காளையும் ஸ்பெயின் மக்களின் பாரம்பரியத்துடன் இணைந்த மிருகங்கள். இவற்றுக்கான நாட்டுப்புறவியல் கதைகளும் இருக்கக்கூடும். ஓவியத்தின் நடுவில் உள்ள அந்தக் குதிரை குரல்வளை நெறிக்கப்பட்டு நாக்கு வெளித்தள்ள கனைத்து நிற்கிறது. அதன் கால்கள் தாக்கப்படுள்ளன.

இடது ஓரத்தில் நிற்கும் எருதின் வால் தீப்பற்றி எரிகிறது. அதன் பக்கவாட்டுக் கண்களுக்கு அருகில் இன்னொரு கண் முளைத்து மனித முகங்கொண்டு அலறுகிறது. அதற்குக் கீழே அப்பாவித் தாயொருத்தி இறந்த தன் குழந்தையைத் தூக்கி மாரில் முட்டிக் கதறிக்கொண்டிருக்கிறாள். வலது ஓரத்தில் அருகே இந்த ஆபத்திலிருந்து மீட்க ஏதாவது ஒரு கரம் உயராதா என மேலே தெரியும் ஜன்னலை நோக்கிக் கைகளை உயர்த்தும் ஒரு பெண். சிப்பாய் ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான், அவன் கையில் உள்ள வாள் உடைந்திருக்கிறது. இது போரின் விளைவைச் சொல்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலே சிறு ஜன்னலுக்கு அப்பால் இருந்து தேவதையைப் போல் விளக்கைக் கையில் ஏந்திப் பெண்ணொருத்திப் பறந்து வருகிறாள். ஆனால் இந்த உருவங்களுக்கு எல்லாம் கிழே வீழ்ந்து கிடக்கும் சிப்பாயின் கைக்கு அருகே ஒரு வெள்ளைப் பூ கிடப்பதையும் நாம் காண முடிகிறது.

நீலமும் பச்சையும் பிக்காஸோவின் பிரத்யேக வண்ணங்களாகக் கருதப்பட்ட காலத்தில் இந்த ஓவியத்தை அவர் வண்ணமற்றதாக உருவாக்கியுள்ளார். இந்த வண்ணமின்மை வன்முறையின் குறியீடு. மிருகங்களும் மனித உருக்களும் துண்டு துண்டாகக் கிடந்து ஓலமிடும் இந்த ஓவியக் காட்சி குண்டுத் தாக்குதலின் குரூரமான வன்முறையை அப்பட்டமாக வெளிக் கொணர்கிறது.

[thanks] தி இந்து [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக