புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 தொகுதிகளின் நிலவரம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள் அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.
சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.
தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.
உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள் அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.
சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.
தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.
உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.
ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இருந்துதான் தி.மு.க-வின் முதல் எம்.பி-யான இரா.தர்மலிங்கம் நாடாளுமன்றம் சென்றார். அது இன்னமும் தி.மு.க-வின் கோட்டையாகவே இருக்கிறது.
தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரை, அ.தி.மு.க. சார்பில் ஆர்.வனரோஜா, பா.ம.க. சார்பில் கோ.எதிரொலி மணியன், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான்.
கடந்த ஆட்சிக் காலத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டுவந்தது, பல ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது என திருவண்ணாமலை பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கொண்டுவந்ததைச் சொல்லி அண்ணாதுரைக்காக வாக்கு சேகரிக்கிறார் எ.வ.வேலு. திருவண்ணாமலை மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கும் முஸ்லிம் வாக்குகள் தி.மு.க. வேட்பாளருக்கு பலம்.
பா.ம.க. வேட்பாளர் எதிரொலி மணியன், பெரணமல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பரிச்சயம் இருக்கிறது. கூட்டணி முடிவாவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
வன்னியர்களின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இந்தத் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே கிராமம் கிராமமாக சென்று, 'வன்னியர் ஓட்டு வன்னியருக்கே’ என்று ஓட்டு வேட்டை நடத்தினார். கூட்டணி அமைந்த பிறகு, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதோ என்னவோ... பிரசார வேகம் ரொம்பவே குறைந்துவிட்டது. அதோடு பசையைக் கண்ணில் காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து கேட்கிறது.
தொகுதியில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு அ.தி.மு.க. கையில் இருப்பதை அவர்கள் பலமாகக் கருதுகின்றனர். ஆனால், ஏரியாவுக்கு ஏரியா கோஷ்டி பிரிந்துகொண்டு கும்மியடிப்பது பெரிய மைனஸ். இருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி உற்சாகமாக வாக்கு சேகரித்துவருகிறார் வனரோஜா.
மக்களை 'கவனிப்பது’ மூலமாக அ.தி.மு.க. வெற்றிக்கொடியைப் பறக்கவிட முயற்சி செய்தாலும்... தி.மு.க-வின் எ.வ.வேலு மட்டும் சளைத்தவர் அல்லவே? அவரது 'டீம் ஒர்க்’கால் திருவண்ணாமலையில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரை, அ.தி.மு.க. சார்பில் ஆர்.வனரோஜா, பா.ம.க. சார்பில் கோ.எதிரொலி மணியன், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான்.
கடந்த ஆட்சிக் காலத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டுவந்தது, பல ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது என திருவண்ணாமலை பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கொண்டுவந்ததைச் சொல்லி அண்ணாதுரைக்காக வாக்கு சேகரிக்கிறார் எ.வ.வேலு. திருவண்ணாமலை மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கும் முஸ்லிம் வாக்குகள் தி.மு.க. வேட்பாளருக்கு பலம்.
பா.ம.க. வேட்பாளர் எதிரொலி மணியன், பெரணமல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பரிச்சயம் இருக்கிறது. கூட்டணி முடிவாவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
வன்னியர்களின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இந்தத் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே கிராமம் கிராமமாக சென்று, 'வன்னியர் ஓட்டு வன்னியருக்கே’ என்று ஓட்டு வேட்டை நடத்தினார். கூட்டணி அமைந்த பிறகு, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதோ என்னவோ... பிரசார வேகம் ரொம்பவே குறைந்துவிட்டது. அதோடு பசையைக் கண்ணில் காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து கேட்கிறது.
தொகுதியில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு அ.தி.மு.க. கையில் இருப்பதை அவர்கள் பலமாகக் கருதுகின்றனர். ஆனால், ஏரியாவுக்கு ஏரியா கோஷ்டி பிரிந்துகொண்டு கும்மியடிப்பது பெரிய மைனஸ். இருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி உற்சாகமாக வாக்கு சேகரித்துவருகிறார் வனரோஜா.
மக்களை 'கவனிப்பது’ மூலமாக அ.தி.மு.க. வெற்றிக்கொடியைப் பறக்கவிட முயற்சி செய்தாலும்... தி.மு.க-வின் எ.வ.வேலு மட்டும் சளைத்தவர் அல்லவே? அவரது 'டீம் ஒர்க்’கால் திருவண்ணாமலையில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
பட்டுக்குப் புகழ்பெற்ற ஆரணியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்.
தி.மு.க. வேட்பாளரான ஆர்.சிவானந்தம் (ஆரணி எக்ஸ். எம்.எல்.ஏ.), அ.தி.மு.க-வின் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை (செஞ்சி எக்ஸ். எம்.எல்.ஏ.), காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் (செய்யாறு எக்ஸ் எம்.எல்.ஏ.), பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி (பழைய செங்கல்பட்டு எக்ஸ் எம்.பி.) என போட்டியாளர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். நால்வருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் ஒருவர் ஏ.கே.மூர்த்தி. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதி முழுக்க வலம் வந்துவிட்டார். ''வேலைக்காரனாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். வேலை செய்யக் காத்திருக்கிறேன். வேலை வாங்குவது உங்கள் கடமை'' என்ற ஏ.கே.மூர்த்தியின் பிரசாரத்துக்கு தொகுதியில் நல்ல ரெஸ்பான்ஸ். சாதிப் பாசத்தைக் காட்டி திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவதால், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்குகள், இவர் பக்கமே சாயும். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வினர் உற்சாகமாக வேலை செய்வது இவருக்கு கூடுதல் ப்ளஸ்.
தி.மு.க-வின் ஆர்.சிவானந்தம், 'சென்னையில் இருந்து ஆரணிக்கு மின்சார ரயில் கொண்டுவர ஏற்பாடு செய்வேன். வரியில்லா பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன். நெல் கொள்முதல் மையம் அமைப்பேன்’ என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். ஆனால், கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சப்போர்ட் இவருக்குப் போதுமானதாக இல்லை. சிவானந்தம் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள் சிலர் மீது வழக்குகள் பாய்ச்சப்பட்டதற்கு, இவர்தான் காரணம் என்று அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வின் ஏழுமலை, தமிழக அரசின் சாதனைகளை உரக்கச் சொல்லி பிரசாரம் செய்துவருகிறார். செஞ்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் தொகுதிக்கு செய்த பல நல்ல விஷயங்கள், இவருக்கு நல்ல இமேஜைத் தருகிறது. கட்சிக்காரர்களையும் அரவணைத்து, பிரசாரத்தில் சத்தம் இல்லாமல் முன்னேறி வருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான கிருஷ்ணசாமியின் மகன். தொகுதிக்கு அப்பா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு மகன் மீது திரும்புகிறது. பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் மட்டும் இவருக்குக் கிடைக்கும்.
கூட்டணி பலம், சாதி பலம் ஆகியவை காரணமாக இலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாம்பழமே மணக்கும்!
தி.மு.க. வேட்பாளரான ஆர்.சிவானந்தம் (ஆரணி எக்ஸ். எம்.எல்.ஏ.), அ.தி.மு.க-வின் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை (செஞ்சி எக்ஸ். எம்.எல்.ஏ.), காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் (செய்யாறு எக்ஸ் எம்.எல்.ஏ.), பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி (பழைய செங்கல்பட்டு எக்ஸ் எம்.பி.) என போட்டியாளர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். நால்வருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் ஒருவர் ஏ.கே.மூர்த்தி. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதி முழுக்க வலம் வந்துவிட்டார். ''வேலைக்காரனாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். வேலை செய்யக் காத்திருக்கிறேன். வேலை வாங்குவது உங்கள் கடமை'' என்ற ஏ.கே.மூர்த்தியின் பிரசாரத்துக்கு தொகுதியில் நல்ல ரெஸ்பான்ஸ். சாதிப் பாசத்தைக் காட்டி திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவதால், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்குகள், இவர் பக்கமே சாயும். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வினர் உற்சாகமாக வேலை செய்வது இவருக்கு கூடுதல் ப்ளஸ்.
தி.மு.க-வின் ஆர்.சிவானந்தம், 'சென்னையில் இருந்து ஆரணிக்கு மின்சார ரயில் கொண்டுவர ஏற்பாடு செய்வேன். வரியில்லா பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன். நெல் கொள்முதல் மையம் அமைப்பேன்’ என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். ஆனால், கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சப்போர்ட் இவருக்குப் போதுமானதாக இல்லை. சிவானந்தம் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள் சிலர் மீது வழக்குகள் பாய்ச்சப்பட்டதற்கு, இவர்தான் காரணம் என்று அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வின் ஏழுமலை, தமிழக அரசின் சாதனைகளை உரக்கச் சொல்லி பிரசாரம் செய்துவருகிறார். செஞ்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் தொகுதிக்கு செய்த பல நல்ல விஷயங்கள், இவருக்கு நல்ல இமேஜைத் தருகிறது. கட்சிக்காரர்களையும் அரவணைத்து, பிரசாரத்தில் சத்தம் இல்லாமல் முன்னேறி வருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான கிருஷ்ணசாமியின் மகன். தொகுதிக்கு அப்பா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு மகன் மீது திரும்புகிறது. பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் மட்டும் இவருக்குக் கிடைக்கும்.
கூட்டணி பலம், சாதி பலம் ஆகியவை காரணமாக இலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாம்பழமே மணக்கும்!
தென் மாவட்டத்தில் இருந்து வரும் எவரும் விழுப்புரம் நெடுஞ்சாலையைத் தொடாமல் சென்னைக்கு வர முடியாது.
அந்த நெடுஞ்சாலை தொகுதியின் களத்தில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜேந்திரனும் தி.மு.க. சார்பில் முத்தையனும் தே.மு.தி.க-வில் உமாசங்கரும் காங்கிரஸில் ராணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆனந்தனும் மல்லுக்கட்டுகிறார்கள்.
விழுப்புரம், திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் ஆளுங்கட்சி வசம் இருப்பது அ.தி.மு.க. வேட்பாளருக்கு ப்ளஸ். தொகுதிக்குப் பெரிய அளவில் திட்டங்கள் கொண்டுவராததால் சிட்டிங் எம்.பி-யான ஆனந்தன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் மீது இருக்கும் கோபம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். நகரங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைவுதான் என்றாலும் கிராமங்களில் கிராஃப் உயர்கிறது.
17 வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. பொன்முடி ஆசியால் திடீர் வேட்பாளராகிவிட்டார் டாக்டர் முத்தையன். அவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று வேட்டியை மடித்துக்கொண்டுக் களத்தில் குதித்த பொன்முடி, வேட்பாளரின் செலவு கணக்கு முதல், பிரசார பிளான் வரை எல்லாவற்றையும் தன் மேற்பார்வையிலே செய்து வருகிறார். கோஷ்டிப்பூசலில் ஒன்றியச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருப்பதால், முத்தையன் பிரசாரத்துக்கு ஆள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் தி.மு.க. பலமாகவும், திண்டிவனம், வானூர், கண்டமங்கலம், மரக்காணம் போன்ற பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருந்தாலும், பொன்முடி மீது இருக்கும் அதிருப்தியால் அவர்களின் பங்களிப்பில் தொய்வு. விழுப்புரம் தொகுதியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம்களின் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு விழும்.
''விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இருக்கும் ஓட்டு சதவிகிதத்தையும் சேர்த்தால் எங்கள் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி'' என்று தே.மு.தி.க-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், பா.ம.க-வின் மொத்த ஓட்டும் உமாசங்கருக்கு விழுமா என்பது சந்தேகமே.
விழுப்புரத்தின் அடிப்படை பிரச்னைகளுக்காகப் போராடிவரும் கம்யூனிஸ்ட்கள் கணிசமான ஓட்டைப் பிரிப்பார்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி காங்கிரஸ் வேட்பாளராக நிற்பதால், உள்ளூர் காங்கிரஸார் ஏக கடுப்பில் உள்ளனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டமே அடிதடியுடன்தான் ஆரம்பித்தது.
மொத்தத்தில் வெற்றிவாய்ப்பு அ.தி.மு.க-வுக்குத்தான்.
அந்த நெடுஞ்சாலை தொகுதியின் களத்தில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜேந்திரனும் தி.மு.க. சார்பில் முத்தையனும் தே.மு.தி.க-வில் உமாசங்கரும் காங்கிரஸில் ராணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆனந்தனும் மல்லுக்கட்டுகிறார்கள்.
விழுப்புரம், திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் ஆளுங்கட்சி வசம் இருப்பது அ.தி.மு.க. வேட்பாளருக்கு ப்ளஸ். தொகுதிக்குப் பெரிய அளவில் திட்டங்கள் கொண்டுவராததால் சிட்டிங் எம்.பி-யான ஆனந்தன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் மீது இருக்கும் கோபம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். நகரங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைவுதான் என்றாலும் கிராமங்களில் கிராஃப் உயர்கிறது.
17 வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. பொன்முடி ஆசியால் திடீர் வேட்பாளராகிவிட்டார் டாக்டர் முத்தையன். அவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று வேட்டியை மடித்துக்கொண்டுக் களத்தில் குதித்த பொன்முடி, வேட்பாளரின் செலவு கணக்கு முதல், பிரசார பிளான் வரை எல்லாவற்றையும் தன் மேற்பார்வையிலே செய்து வருகிறார். கோஷ்டிப்பூசலில் ஒன்றியச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருப்பதால், முத்தையன் பிரசாரத்துக்கு ஆள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் தி.மு.க. பலமாகவும், திண்டிவனம், வானூர், கண்டமங்கலம், மரக்காணம் போன்ற பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருந்தாலும், பொன்முடி மீது இருக்கும் அதிருப்தியால் அவர்களின் பங்களிப்பில் தொய்வு. விழுப்புரம் தொகுதியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம்களின் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு விழும்.
''விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இருக்கும் ஓட்டு சதவிகிதத்தையும் சேர்த்தால் எங்கள் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி'' என்று தே.மு.தி.க-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், பா.ம.க-வின் மொத்த ஓட்டும் உமாசங்கருக்கு விழுமா என்பது சந்தேகமே.
விழுப்புரத்தின் அடிப்படை பிரச்னைகளுக்காகப் போராடிவரும் கம்யூனிஸ்ட்கள் கணிசமான ஓட்டைப் பிரிப்பார்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி காங்கிரஸ் வேட்பாளராக நிற்பதால், உள்ளூர் காங்கிரஸார் ஏக கடுப்பில் உள்ளனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டமே அடிதடியுடன்தான் ஆரம்பித்தது.
மொத்தத்தில் வெற்றிவாய்ப்பு அ.தி.மு.க-வுக்குத்தான்.
தொகுதியைத் தக்கவைக்க தி.மு.க-வும் இலையைத் துளிர்க்கவைக்க அ.தி.மு.க-வும் படாதபாடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளரான மணிமாறனுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜுக்கும்தான் கள்ளக்குறிச்சியில் நேரடி போட்டி. இவர்களுக்கு டஃப் கொடுப்பவர் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் ஈஸ்வரன்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்திலும் என பரந்துவிரிந்துள்ளது கள்ளக்குறிச்சி தொகுதி.
தி.மு.க. வேட்பாளர் மணிமாறனின் அப்பா ராமகிருஷ்ணன் 1945 முதல் தியாகதுருவம் கிளைக் கழக செயலாளராக இருந்து வருகிறார். உடல்நிலை சீராக இல்லை என்றாலும், ஊர் ஊராகச் சென்று தன் வயது சீனியர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மணிமாறன், தான் நடத்தும் மவுன்ட் பார்க் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். எல்லா தரப்பு வாக்காளர்களையும் கவர்வதற்கான தீவிரம் தெரிகிறது.
'20 வருடங்கள் அரசுப் பணியில் இருந்துள்ளேன். என் மீது ஒரு ஊழல் புகார்கூட இல்லை’ என்று தன்னைப் பற்றி மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு கேட்கும் மணிமாறன், விவசாயத் துறையில் பணியாற்றியவர் என்பதால் தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்னையான தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவார் என்று விவசாயிகள் நம்புகின்றனர். இதுபோன்ற பாசிட்டிவான விஷயங்கள் மணிமாறனின் செல்வாக்கை வேகமாக உயர்த்துகிறது. தன் ஆதரவாளருக்கு சீட் தராததால் பொன்முடி ஆதரவாளர்கள் உள்ளடி வேலையில் இறங்கியிருப்பது தி.மு.க-வுக்கு மைனஸ்.
அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ், அமைச்சர் மோகனின் உறவினர். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவரை ஜீப்பில் ஏற்றிகொண்டு கிராமம் கிராமமாகச் சென்று வந்தார் மோகன். ஆனால், எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. தண்ணீர் பிரச்னை, பசுமை வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு, கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்காதது போன்றவை ஆளுங்கட்சிக்குப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அமைச்சர் மோகன், தனது சாதியை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் மற்ற சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஓட்டுக்கள் தி.மு.க-வுக்கு விழும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தே.மு.தி.க வேட்பாளர் ஈஸ்வரன் சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவதால் தொகுதியில் நல்ல பரிச்சயம். பா.ம.க., ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஓட்டு கைகொடுக்கும் என்பது தே.மு.தி.க-வின் எதிர்பார்ப்பு. ஆனால், பா.ம.க-வினர் முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்காதது தே.மு.தி.க-வை திகிலடைய வைத்துள்ளது.
மணிமாறனுக்கு மகுடம் ரெடி என்பதுதான் மக்களின் குரலாக இருக்கிறது.
இரும்பு நகரமான சேலத்தில் தகதகக்கும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால்!
தி.மு.க. வேட்பாளராக உமாராணியும், அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வமும், தே.மு.தி.க-வில் சுதீஷும் களத்தில் சுழன்று வருகிறார்கள். இவர்கள் தவிர, காங்கிரஸில் மோகன் குமாரமங்கலம், ஆம் ஆத்மி சதீஷ்குமார் என களம் சூடுபறக்கிறது.
சேலம் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர் வாக்குகள் இருக்கிறது. பா.ம.க-வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள், தொகுதி முழுக்க பிரசாரத்தை முடித்துவிட்ட நிலையில், கூட்டணிக்கு தொகுதி கைமாறியது. ஆனாலும், பா.ம.க. தலைமையால் அருளை சமாதானப்படுத்த முடியவில்லை. அருளின் ஆதரவாளர்களும் சமாதானம் ஆகவில்லை. இந்தச் சூழ்நிலையால் தே.மு.தி.க. வேட்பாளரான சுதீஷ், பா.ம.க-வின் ஆதரவு முழுமையாகக் கிடைக்காமல் திண்டாடி வருகிறார். விஜயகாந்த்தின் மைத்துனர் என்பதால், தே.மு.தி.க-வினர் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் படுகொலைக்குப் பிறகுதான் பி.ஜே.பி. வேகம் பெற்றது. அந்தவகையில் அனுதாப ஓட்டுகள் விழும் என தே.மு.தி.க. நினைக்கிறது. சேலத்துக்கு மோடி வந்து சென்றதும் சுதீஷ§க்கு உற்சாகம் அளித்துள்ளது. வெளியூர்காரர் என்பது பெரிய மைனஸாகப் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர் உமாராணிக்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தது. பிரசாரம் தொடங்கிய பிறகு அது மெள்ளக் குறைந்தது. 'நான் உங்க வீட்டுப் பொண்ணு. இதே சேலத்துலதான் நான் இருக்கேன். எப்போ வேண்டுமானாலும் நீங்க வந்து என்னைப் பார்க்கலாம்’ என்ற உமாராணியின் பிரசாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. அதே நேரத்தில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரட்டை மனதுடன் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவாளர்கள் வாக்குகள் உமாவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பா.ம.க. அருளின் ஆதரவாளர்கள் மறைமுகமாக உமாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவருக்கு இன்னொரு ப்ளஸ்.
கவுன்சிலர் தேர்தலில் நின்று தோற்றுப்போன பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் ப்ளஸ். இவர், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜின் தீவிர ஆதரவாளர். சேலம் அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டிப்பூசல்களும், ஆளுங்கட்சிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் குடிநீர், மின்தடைப் பிரச்னைகளும் இவருக்கு மைனஸ்.
காங்கிரஸ் வேட்பாளரோ எப்படியாவது கணிசமான வாக்குகளை வாங்கிவிடத் துடிக்கிறார்.
இங்கு தி.மு.க. வேட்பாளர் உமாராணிக்கும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ§க்கும் தான் போட்டி. சுதீஷ§க்கு பா.ம.க. முழு ஒத்துழைப்பு தராததால் உதயசூரியனின் செல்வாக்கில் உமாராணி முன்னுக்கு வருகிறார்.
கோழியும் லாரியும் நிறைந்திருக்கும் நாமக்கல்லில் சிட்டிங் எம்.பி-யான காந்திசெல்வனுக்கே தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.சுந்தரமும், தே.மு.தி.க-வில் வழக்கறிஞர் எஸ்.கே.வேலுவும் களமிறங்கியுள்ளனர். சுப்ரமணியன் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர்.
நாமக்கல் மாவட்டம் முழுக்கவே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பி.ஆர்.சுந்தரம் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் ஆளுங்கட்சி மீது உள்ள கோபம் எதிரொலிக்கிறது. செலவுக் கணக்கு காரணமாக மேடையில் வேட்பாளர் இல்லாமல் ஜெயலலிதாவின் முதல் பிரசாரக் கூட்டம் நடந்தது நாமக்கல்லில்தான்! இதனால், வேட்பாளரின் முகம் பெரும்பாலோனோருக்குத் தெரியவே இல்லை. கட்சிக்குள் இருக்கும் சில கோஷ்டிப் பிரச்னைகளால் பிரசாரத்திலும் நிறையவே சுணக்கம் தெரிகிறது.
எல்லாவற்றையும் தாண்டி இரட்டை இலை என்ற செல்வாக்கு சுந்தரத்தை கரை சேர்க்கும் என்பது அ.தி.மு.க-வினரின் நம்பிக்கை.
தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காந்திசெல்வனை யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்க முடியும். கட்சியில் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், தொகுதி முழுக்கவே நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆனால், தொகுதிக்காக கடந்த ஐந்து வருடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் பெரிதாகக் கொண்டுவரவில்லை என்பது அவருக்கு மைனஸ். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் கோபம், காந்திசெல்வனுக்குப் ப்ளஸ் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது. ஸ்டாலின் பிரசாரத்துக்கு வந்துபோன பிறகு, இன்னும் கூடுதல் தெம்புடன் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் காந்தி. நாமக்கல் மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது காந்தியின் கூடுதல் பலம்.
தே.மு.தி.க. வேட்பாளரான எஸ்.கே.வேலு, நாமக்கல்லில் நன்கு அறிமுகமானவர் என்றாலும், தொகுதி முழுக்க அறியப்படாதவராகவே இருக்கிறார். மோடி அலையால், இளைஞர்களின் வாக்குகளும், கூட்டணி கட்சி வாக்குகளும் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் வேலு.
காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடும்படியான வாக்கு வங்கி நாமக்கல்லில் இருக்கிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கிறது. இருந்தாலும் கை சின்ன வாக்குகளை வைத்து எப்படியும் டெபாசிட் வாங்கிவிட முடியும் என்பது காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியத்தின் கணக்கு.
க்ளைமாக்ஸில் காந்திசெல்வனை முந்தி டாப் கியர் போடுகிறார் சுந்தரம்!
நாமக்கல் மாவட்டம் முழுக்கவே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பி.ஆர்.சுந்தரம் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் ஆளுங்கட்சி மீது உள்ள கோபம் எதிரொலிக்கிறது. செலவுக் கணக்கு காரணமாக மேடையில் வேட்பாளர் இல்லாமல் ஜெயலலிதாவின் முதல் பிரசாரக் கூட்டம் நடந்தது நாமக்கல்லில்தான்! இதனால், வேட்பாளரின் முகம் பெரும்பாலோனோருக்குத் தெரியவே இல்லை. கட்சிக்குள் இருக்கும் சில கோஷ்டிப் பிரச்னைகளால் பிரசாரத்திலும் நிறையவே சுணக்கம் தெரிகிறது.
எல்லாவற்றையும் தாண்டி இரட்டை இலை என்ற செல்வாக்கு சுந்தரத்தை கரை சேர்க்கும் என்பது அ.தி.மு.க-வினரின் நம்பிக்கை.
தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காந்திசெல்வனை யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்க முடியும். கட்சியில் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், தொகுதி முழுக்கவே நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆனால், தொகுதிக்காக கடந்த ஐந்து வருடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் பெரிதாகக் கொண்டுவரவில்லை என்பது அவருக்கு மைனஸ். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் கோபம், காந்திசெல்வனுக்குப் ப்ளஸ் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது. ஸ்டாலின் பிரசாரத்துக்கு வந்துபோன பிறகு, இன்னும் கூடுதல் தெம்புடன் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் காந்தி. நாமக்கல் மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது காந்தியின் கூடுதல் பலம்.
தே.மு.தி.க. வேட்பாளரான எஸ்.கே.வேலு, நாமக்கல்லில் நன்கு அறிமுகமானவர் என்றாலும், தொகுதி முழுக்க அறியப்படாதவராகவே இருக்கிறார். மோடி அலையால், இளைஞர்களின் வாக்குகளும், கூட்டணி கட்சி வாக்குகளும் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் வேலு.
காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடும்படியான வாக்கு வங்கி நாமக்கல்லில் இருக்கிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கிறது. இருந்தாலும் கை சின்ன வாக்குகளை வைத்து எப்படியும் டெபாசிட் வாங்கிவிட முடியும் என்பது காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியத்தின் கணக்கு.
க்ளைமாக்ஸில் காந்திசெல்வனை முந்தி டாப் கியர் போடுகிறார் சுந்தரம்!
டாலர் சிட்டியான திருப்பூர் ஐந்து முனைப் போட்டிகளால் திணறிக்கொண்டு இருக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளரான சத்தியபாமா, கோபி யூனியன் சேர்மனாக இருந்தவர். இவரை வேட்பாளராக அறிவித்ததும் கட்சியில் நிறைய அதிருப்திகள் கிளம்பியது. தலைமைக்குப் புகார்களும் பறந்தது. கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை பகுதிகள் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கான ஏரியா என்பது சத்தியபாமாவின் ப்ளஸ். அதே நேரத்தில் உட்கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல் அவரது வெற்றிக்கு ஆப்பு வைத்துவிடுமோ என்ற பயமும் சத்தியபாமாவுக்கு நிறையவே இருக்கிறது. சோர்ந்து போயிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமாவுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குரலும் கோபி பகுதியில் உரக்கக் கேட்கிறது. திருப்பூரில் மின்வெட்டுப் பிரச்னையால் தொழில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது.
தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதன் வயதில் மூத்தவர். ஆனால், முதல் முறையாகத் தேர்தல் களத்தில் நிற்கிறார். உட்கட்சிப் பூசலால் டாக்டர் செய்வதறியாமல் குழப்பத்தில் இருக்கிறார். தி.மு.க-வின் வாக்கு வங்கியும், சிறுபான்மையினர், தலித் வாக்குகளும் தனக்கு சாதகமாக இருக்கும் என்பது டாக்டரின் எண்ணம்.
மோடி துதி பாடி முரசை பலமாகக் கொட்டுகிறது தே.மு.தி.க. மின்வெட்டு, தொழில் பிரச்னை, விவசாயப் பிரச்னைகளை முன்வைத்து, 'மோடி வந்தால் எல்லாம் சரியாகும்’ என வாக்கு கொடுத்து வாக்கு கேட்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ்குமார். திருப்பூர் மாவட்டத்தில் நன்கு அறிமுகமானவர். மோடி அலையில் எப்படியும் கரையேறிவிடுவோம் என நம்புகிறார். பி.ஜே.பி.யின் வாக்குவங்கி இவருக்கு பலம் கொடுக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கௌரவமான வாக்குகளைப் பெற்று டெபாசிட் வாங்கிவிட வேண்டும் என்பதுதான் இளங்கோவனின் தாகமாக இருக்கிறது. கோஷ்டிகளை மறந்து இளங்கோவனுக்காக காங்கிரஸ் கட்சியினர் ஒன்று சேர்ந்து வேலை பார்க்கின்றனர். தொழில் பிரச்னையில் மத்திய அரசு மீதான அதிருப்திதான் இளங்கோவனின் மைனஸ்.
இடதுசாரிகள் தரப்பில் கதிர் அரிவாள் கொடி பிடிக்கிறார் சுப்பராயன். மிக உற்சாகமாய் தேர்தல் வேலைகளை பார்க்கின்றனர் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும்.
காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கௌரவமான வாக்குகளுக்காகப் போராட, ஏகப்பட்ட சிக்கலில் தி.மு.க-வும் திணறுகிறது. வெற்றிக்கு முட்டி மோதுவது இரட்டை இலையும், முரசும்தான்! அதில் சக்ஸஸ் சத்தியபாமா என்ற குரல்தான் திருப்பூரில் ஓங்கி ஒலிக்கிறது.
மஞ்சள் மணக்கும் ஈரோட்டில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, அ.தி.மு.க. சார்பில் செல்வக்குமார சின்னையன், தி.மு.க. வேட்பாளராக பவித்திரவள்ளி, காங்கிரஸ் சார்பில் கோபி ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அ.தி.மு.க-வில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தைத் தொடங்கியவர் செல்வகுமார சின்னையன். கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பு வகிப்பவர் என்பதைத் தவிர, கட்சி விவகாரங்களில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர். வழக்கறிஞர் தயவிலேயே வென்றுவிடலாம் என்று அவரும் ஆரம்பத்தில் பிரசாரப் பணிகளை செய்தார். அதிருப்தி இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் முதல்வருக்குப் பயந்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தில் சுரத்து ஆரம்பத்தில் இருந்தே குறைவாக இருக்கிறது.
தொகுதியின் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஏற்கெனவே பெரும்பான்மையான கிராமங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. எளிதாக சந்திக்கக்கூடிய பிரமுகர் என்பது பலம்.
சில நாட்களுக்கு முன் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் கிட்டுச்சாமி வங்கி அதிகாரிகளை மிரட்டினார். இதையடுத்து, இந்த விவகாரத்தை ம.தி.மு.க-வினர் கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்தனர். நமக்கு கிடைக்கும் வங்கிக் கடனை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்தான் தடுக்கிறார் என்றும் விவசாயிகள் நம்புவதால், அ.தி.மு.க-வின் செல்வாக்கில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. 'கடந்த முறை அ.தி.மு.க. தயவு இருந்ததால்தான் கணேசமூர்த்தியால் ஜெயிக்க முடிந்தது’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இந்த முறை ஈஸ்வரனின் கொங்கு கட்சி ஆதரவு உள்ளதால் ம.தி.மு.க-வினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மோடி வந்து சென்றதும் அவருக்கு கைகொடுக்கிறது.
அ.தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கடும் போட்டியில் இருக்கும் சூழ்நிலையில், தி.மு.க-வின் வேட்பாளர் பவித்திரவள்ளி பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறார். இவர் அரசியலுக்கும் புதுசு, தி.மு.க-வுக்கும் புதுசு, தொகுதிக்கும் புதுசு என்பதால் வெறுமனே உதயசூரியன் சின்னத்தை மட்டுமே நம்பி நிற்கிறார்.
டெபாசிட் தொகையைத் தக்கவைக்க முடியுமா என்பதே காங்கிரஸின் நிலை. இங்கு பிரபலமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் வேட்பாளராகப் போய்விட்டதால் தனிமையில் போராடிக்கொண்டு இருக்கிறார் கோபி.
பி.ஜே.பி. கூட்டணி பலமும் சிட்டிங் எம்.பி-யாக நற்பெயரும் இருப்பதால், ம.தி.மு.க. வேட்பாளருக்கே ஏறுமுகம்.
தமிழகத்தின் ஜில்ஜில் பிரதேசமான நீலகிரி இப்போது அரசியல் சூட்டில் அனல் பறக்கிறது.
தி.மு.க-வில் ஆ.ராசா. அ.தி.மு.க-வில் கோபாலகிருஷ்ணன், காங்கிரஸில் காந்தி ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். இதில் பி.ஜே.பி. வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு தள்ளுபடியாகிவிட்டது. அதனால் நீலகிரி மும்முனைப் போட்டியில் மூச்சு முட்டுகிறது.
ஜெயலலிதாவின் எஸ்டேட் கொடநாடு அமைந்திருக்கும் தொகுதி என்பதால் அ.தி.மு.க-வினர் கூடுதல் கவனத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் கோஷ்டிகளுக்கும் இங்கே பஞ்சம் இல்லை. 'குன்னூர் நகராட்சியில் சர்ச்சைகளில் சிக்கிய கோபாலகிருஷ்ணனுக்கு குன்னூரிலேயே செல்வாக்கு இல்லை. இவரை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிப்பது?’ என வெளிப்படையாகவே அ.தி.மு.க-வினர் புலம்பினர். பி.ஜே.பி. வேட்பாளர் வேட்புமனு வாபஸ் ஆகிவிட்ட பின்னர்தான், அ.தி.மு.க-வினருக்கு நிம்மதி பிறந்துள்ளது. பி.ஜே.பி-க்கு ஆதரவான வாக்குகள் எப்படியும் தங்கள் பக்கம் சாய்ந்துவிடும் என்று உற்சாகத்தில் வலம்வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் முன்னிலை வகிக்கும் என்பதை உணர்ந்த தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, போகும் இடங்களில் எல்லாம் அதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார். ஆனாலும், படித்தவர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறையாது என்பது அ.தி.மு.க-வின் நம்பிக்கை. தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டிகானங்களை மறந்து அனைவரும் ராசாவுக்காக களமிறங்கியுள்ளனர். மலை மீது ராசாவுக்கு செல்வாக்கு இருந்தாலும், சமதளப் பகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அமோகமாக இருக்கிறது.
நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கென தனி வாக்கு வங்கி உண்டு என சொல்லும் காங்கிரஸ் கட்சி, அதை நிரூபிக்க களமிறங்குகிறது. நீலகிரி தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர் பிரபு. அவர் இப்போது கோவையில் போட்டியிடுகிறார். அந்த செல்வாக்கை வைத்து காங்கிரஸ் வேட்பாளராக காந்தி நிற்கிறார். 'எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல... கௌரவமான வாக்குகளை வாங்கிக்காட்ட வேண்டும்’ என்று கைகளை உயர்த்திச் சொல்கிறார்கள் காங்கிரஸார்.
இறுதி நிலவரப்படி கோபாலகிருஷ்ணன் சிகரம் தொடுவார்.
தி.மு.க-வில் ஆ.ராசா. அ.தி.மு.க-வில் கோபாலகிருஷ்ணன், காங்கிரஸில் காந்தி ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். இதில் பி.ஜே.பி. வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு தள்ளுபடியாகிவிட்டது. அதனால் நீலகிரி மும்முனைப் போட்டியில் மூச்சு முட்டுகிறது.
ஜெயலலிதாவின் எஸ்டேட் கொடநாடு அமைந்திருக்கும் தொகுதி என்பதால் அ.தி.மு.க-வினர் கூடுதல் கவனத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் கோஷ்டிகளுக்கும் இங்கே பஞ்சம் இல்லை. 'குன்னூர் நகராட்சியில் சர்ச்சைகளில் சிக்கிய கோபாலகிருஷ்ணனுக்கு குன்னூரிலேயே செல்வாக்கு இல்லை. இவரை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிப்பது?’ என வெளிப்படையாகவே அ.தி.மு.க-வினர் புலம்பினர். பி.ஜே.பி. வேட்பாளர் வேட்புமனு வாபஸ் ஆகிவிட்ட பின்னர்தான், அ.தி.மு.க-வினருக்கு நிம்மதி பிறந்துள்ளது. பி.ஜே.பி-க்கு ஆதரவான வாக்குகள் எப்படியும் தங்கள் பக்கம் சாய்ந்துவிடும் என்று உற்சாகத்தில் வலம்வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் முன்னிலை வகிக்கும் என்பதை உணர்ந்த தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, போகும் இடங்களில் எல்லாம் அதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார். ஆனாலும், படித்தவர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறையாது என்பது அ.தி.மு.க-வின் நம்பிக்கை. தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டிகானங்களை மறந்து அனைவரும் ராசாவுக்காக களமிறங்கியுள்ளனர். மலை மீது ராசாவுக்கு செல்வாக்கு இருந்தாலும், சமதளப் பகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அமோகமாக இருக்கிறது.
நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கென தனி வாக்கு வங்கி உண்டு என சொல்லும் காங்கிரஸ் கட்சி, அதை நிரூபிக்க களமிறங்குகிறது. நீலகிரி தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர் பிரபு. அவர் இப்போது கோவையில் போட்டியிடுகிறார். அந்த செல்வாக்கை வைத்து காங்கிரஸ் வேட்பாளராக காந்தி நிற்கிறார். 'எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல... கௌரவமான வாக்குகளை வாங்கிக்காட்ட வேண்டும்’ என்று கைகளை உயர்த்திச் சொல்கிறார்கள் காங்கிரஸார்.
இறுதி நிலவரப்படி கோபாலகிருஷ்ணன் சிகரம் தொடுவார்.
வழக்கமான தேசியக் கட்சிகள் மோதும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்த முறை தேசியக் கட்சிகளோடு மாநிலக் கட்சிகளும் சேர்ந்து களமிறங்க... பரபரக்கிறது கோவை.
அ.தி.மு.க. சார்பில் நாகராஜன், தி.மு.க. சார்பில் கணேஷ்குமார் என இருவர் புதுமுகங்கள். பி.ஜே.பி. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸில் ஆர்.பிரபு ஆகிய இருவரும் முன்னாள் எம்.பி-க்கள். மார்க்சிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்.பி. நடராஜனும் களத்தில்.
கட்சியில் அதிருப்தி காரணமாக வெளியேறியவர்களை ஒருங்கிணைப்பது, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் வாக்குகளைப் பெற கூடுதல் கவனம் செலுத்துவது, பிரசாரத் திட்டமிடல்கள் ஆகியவை நாகராஜனுக்கு கைகொடுக்கும் அம்சங்கள். ஆனால் அதிகரிக்கும் மின் தடை, தொழில்கள் நசிவு, சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேயர், கவுன்சிலர்கள் மீது குவிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் ஆகியவை அ.தி.மு.க-வுக்கு மைனஸ்.
மின் தடையை அ.தி.மு.க-வுக்கு எதிரானப் பிரதானமான ஆயுதமாக்கி தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க., கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது. புறநகர் மாவட்டச் செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும், மாநகர மாவட்டச் செயலாளர் வீரகோபாலுக்கும் உள்ள கோஷ்டிப் பூசல், தேர்தல் வேலைகளில் வெளிப்படையாகத் தெரிகிறது. 'கோவை தொகுதியில் சிறுபான்மையினர்கள், தலித் வாக்குகள் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம். அதில் எப்படியும் கணிசமான வாக்குகள் நமக்குத்தான். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-விடம் இருந்த வாக்குகளை கம்யூனிஸ்ட்., ம.தி.மு.க. வாக்குகள் கணிசமாகப் பிரிக்கிறது. எனவே எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம்' என்பது தி.மு.க-வின் கணக்கு.
மோடியின் பிரசாரத்தையும், இளைஞர்களின் வாக்குகளையும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துள்ளது பி.ஜே.பி. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கொங்கு கட்சியும், தே.மு.தி.க-வும் பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டு, மோடிக்கான வாக்குகளையும் சேர்த்துப் பார்த்தால் வெற்றி நிச்சயம் என மற்றொரு கணக்கும் சொல்கிறார்கள். தொழில் நகரம் என்பதால் தொழில் அதிபர்களது ஆதரவும் பி.ஜே.பி-க்கு இருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளரான பிரபு எப்படியும் கௌரவமான வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்கிறார். சிட்டிங் தொகுதி என்பதால், கட்சியின் பலத்தைக் காட்ட வாய்ப்பாக நினைத்து இதுவரை இல்லாத அளவு உற்சாகத்தோடு பணியாற்றுகின்றனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
இறுதிகட்ட சூழ்நிலையில் போட்டி என்னவோ அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்கும்தான்! அந்தப் போட்டியில் இலையை மறைக்கிறது தாமரை!
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|