புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_m10பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:00 am

நீங்கள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது நாளைக்கு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தால், நள்ளிரவு முதல் விலையேற்றம் அமல்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு உங்களைச் சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும். இதற்குக் காரணம், பணவீக்கம்தான். சாதாரணமாகச் சொல்வது என்றால் விலைவாசி உயர்வு. இது தனிநபர், குடும்பம், வர்த்தகம் மற்றும் நாடு என்று ஒவ்வொரு நிலையிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயரும் பணவீக்கம் நம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் நாம் கேட்க, 10 பாதிப்புகளை எடுத்துச் சொன்னார்.

1.உண்மையான வருவாய் விகிதம்!

பணவீக்கமும், வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பணவீக்கம் அதிகமாகவும், நாம் சேமிக்கும் பணத்தின் மீதான வட்டி விகிதம் குறைவாகவும் இருக்கும்போது அது நிச்சயம் நம் அன்றாட வாழ்வை பாதிக்கும்.

உதாரணமாக, நாம் 100 ரூபாய் சேமிக்கிறோம் எனில், தற்போதைய சூழலில் சராசரியாக 9% வட்டி கிடைக்கிறது. ஆண்டுக் கடைசியில் ரூ.109 உங்கள் கையில் இருக்கும் வட்டியும் முதலும் சேர்த்து; ஆனால், பணவீக்கம் சுமார் 10% என்ற அளவில் உள்ளதால் சேமிப்பின் மூலம் உங்களுக்குக் கிடைத்த ரூ.109-யைக்கொண்டு பணவீக்கத்தினால் 110 ரூபாய் விலையேறிய பொருளை வாங்க முடியாத சூழல் உருவாகும்.

அதற்காக அத்தியாவசியப் பொருட்களை வாங்காமல் இருக்க முடியுமா? அந்த ஒரு ரூபாய் பற்றாக்குறையை சமாளிக்க நாம் என்ன செய்வோம்? கையிருப்பில் இருந்து செலவு செய்வோம் அல்லவா? இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம் சேமிப்பு கரைந்துவிடுவதால்தான் நடுத்தட்டு மக்கள் என்றுமே நடுத்தட்டு மக்களாகவே இருக்கின்றனர். எனவே, வட்டி விகிதம் 9 - 12% என்பதைவிட, பணவீக்கத்தைவிட உங்கள் சேமிப்புக்கான வருமானம் அதிகமா, குறைவா என்பதுதான் மிக முக்கியம். அதுதான் உண்மையான வருவாய்.

2.வாங்கும் திறன் குறையும்!

பணவீக்கம் அதிகரிப்பதால் அனைத்து தரப்பினரும் சந்திக்கும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, பொருள் வாங்கும் திறன் கணிசமான அளவில் குறைவதே. அவர்கள் வருவாயை வைத்து தற்போதைய விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாததையே இது காட்டுகிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு, முன்பெல்லாம் வாரம் ஒருமுறை பொருட்களை வாங்குபவர்கள், தற்போது மாதம் இருமுறை என்று மொத்தமாக வாங்கி வைத்துவிடுவதே. இது தனித்தனியாக வாங்கும் அளவைவிடக் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பொருட்களின் பதுக்கல் அதிகரிக்கும்!

பணவீக்கம் அதிகரிப்பதால் பொருட்களின் கையிருப்பை அதிகரித்துக்கொள்ளவே எல்லாரும் விரும்புவார்கள். ஒருவேளை, அதன் விலை கூடினால் பின்னர் அதிக விலைக்கு விற்றோ அல்லது நமது பயன்பாட்டை லாபகரமாக்கிக் கொள்ளவோ நினைப்பார்கள்.

ஆனால், குறுகிய காலப் பொருட்களான காய்கறிகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்குமேல் வாங்கி வைத்துக்கொள்ள முடியாது. இரும்பு போன்ற கெட்டுப் போகாத பொருட்களை நீண்ட கால தேவைக்கு வாங்கமுடியும். உண்மையான தேவைக்கு அதிகமாக, இதுபோன்று தேக்கி / பதுக்கி வைப்பது பொருளின் தேவையை மேலும் அதிகரிக்க செய்து, அதன் விலையை அதிவேகமாக ஏற்றும்.

4.கடன் தவணை அதிகரிக்கும்!

வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற ஏதேனும் ஒரு கடன் வாங்கி இருப்ப வராக இருந்தால், பணவீக்கத்தால் வட்டி விகிதம் உயரும். இதனால் தவணைக் காலமோ அல்லது மாதாந்திர தவணைக் கட்டணமோ அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, நீங்கள் 15 வருடத் தவணையில் மாதம் ரூ.15,000 கட்டும்படி கடன் வாங்கி இருந்தால், அது உங்கள் தவணைத் தொகையைவிட அதிகமாகவோ, அல்லது தவணைக் காலத்தைவிட அதிகமாகவோ வாய்ப்புள்ளது.

5. தரம் குறையும்!

பொருட்களின் விலை உயரும் போது பயன்பாட்டாளர்கள் தங்கள் வருமானத்துக்கு எதிராக விலை உயர்வதால், முதல்தரத்தில் உள்ள பொருட்களைத் தவிர்த்து, இரண்டாம்தர பொருட்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. பணவீக்கத்தைச் சமாளிக்க முடியாத நிறுவனங்களுமே உற்பத்தியில் தரத்தைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.

6. கம்பெனிகளின் செலவு கூடும்!

பணவீக்கம் அதிகரிப்பு, நுகர்வோரைத் தாண்டி தொழில் செய்பவர்களையும் பாதிக்கும். ஏனெனில், அவர்கள் வாங்கும் மூலப்பொருட்களின் செலவு தொடங்கி பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் வரை அனைத்துக்குமே செலவு அதிகமாவதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்கும் பொருளுக்கும் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும். நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரண்டுமே இதனால் பாதிப்படையும். விலையேற்றத்துக்கு முன் மூலப்பொருட்களை வாங்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது லாபகரமாக அமையலாம்.

7. தங்கம் விலை செயற்கையாக அதிகரிக்கும்!

பணவீக்கம் அதிகமாகும் போது விலையேறிவிடுமோ என்ற பயத்தில் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்போது தங்கம் தேவையைவிட அதிகமாக வாங்கப்படும். தங்கத்தின் விலை செயற்கையாக அதிகரிப்பதால், பலராலும் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

8. பொருட்களின் அளவு குறையும்!

நிறுவனங்கள் பணவீக்கத்தைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று, அளவை குறைப்பது. அதாவது, 100 மில்லி உள்ள ஷாம்பு பாட்டிலை ஒரு நிறுவனம் 50 ரூபாய்க்கு விற்கிறது எனில், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கு அந்தப் பொருளின் விலையை உயர்த்தாமல், அதே 50 ரூபாய்க்கு 80 மில்லி ஷாம்புவைத் தரும். நமக்கு ஒரே விலைதானே என்று தோன்றினாலும். மறைமுகமாக 100 மில்லியை நாம் 62.50 ரூபாய்க்கு வாங்குகிறோம்.

9. அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படும்!

விலைவாசி உயர்வால் மாதம் 60 கிலோ அரிசி வாங்கியவர் 50 கிலோ வாங்கும் சூழல் உருவாகும். இதேபோல் பெட்ரோல், போன் போன்ற அத்தியாவசிய தேவையிலும் பாதிப்பு ஏற்படும்.

10. லைஃப்ஸ்டைல் பாதிப்படையும்!

பணவீக்கம் என்பது பொருட்களின் வாங்கும் திறனை மட்டும் பாதிக்கவில்லை. அது நம் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக, பணவீக்க விகித அதிகரிப்பால் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்போது விலை குறைந்த பொருளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம். இதனால், நம் லைஃப்ஸ்டைல் பாதிப்படையும்.

உதாரணமாக, தனியார் பள்ளிக் கூடத்தில் பிள்ளையைப் படிக்க வைத்தவர்கள் இனி அரசு பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சூழல் உருவாகும். பணவீக்கம் அதிகரிக்கும்போது இது மேலும் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

[thanks] விகடன் [/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக