புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
69 Posts - 58%
heezulia
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
111 Posts - 60%
heezulia
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மலம்புழா அணை! Poll_c10மலம்புழா அணை! Poll_m10மலம்புழா அணை! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலம்புழா அணை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:58 am



சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, 'குளு குளு' பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.

கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.

மலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.

கீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, 'த்ரில்' தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.

படகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.

அணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, 'ரவுண்ட்' போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.

— தேசாந்தரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:00 am

கொல்லிமலை ஆகாச கங்கை அருவி!

பச்சை மாமலைபோல் மேனி என்று, கொல்லி மலையைப் பார்த்துத்தான், ஆழ்வார்கள் பாடி இருப்பார்களோ என்னவோ! அப்படி ஒரு பசுமை. எங்கு பார்த்தாலும், பச்சைப் படுதாவை போட்டு மூடியது போல் காணப்படும் கொல்லிமலைத் தொடர், நாமக்கல்லிலிருந்து, 40 கி.மீ., தூரத்தில் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து, 1,190 மீ. உயரத்தில் உயர்ந்து நிற்கும், கொல்லிமலையின் பரப்பளவு ஏறத்தாழ, 400 சதுர மைல்கள். 28 கி.மீ., வடமேற்காக நீண்டும், 19 கி.மீ., கிழக்கு மேற்காக அகன்று கிடக்கும், இந்த மலைவெளியில், அரிய மூலிகைகள். அரப்பள்ளீஸ்வரர் கோவில், அரசு மூலிகைப் பண்ணை, தாவரத் தோட்டம் என, பார்ப்பதற்கு ரம்மியமான பல இடங்கள் உண்டு. அரப்பள்ளீஸ்வரர் கோவில் அருகில் விழும், ஆகாச கங்கை அருவி, மூலிகை மகத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட, கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு, ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தில், திருவிழா நடத்தப்படுகிறது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் இங்கு உள்ளன. நாமக்கல்லில் தங்கி, கார்,பஸ்களில் போய் வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:01 am

மாத்தூர் தொங்குபாலம்!

ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது, ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம்.

115 அடி உயரமும், 1 கி.மீ. நீளமும் உடையது. திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில், அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருப்பதனால், இதற்கு மாத்தூர் தொங்கு பாலம் என்று பெயர்.

பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே, பட்டணம்கல் மலையிலிருந்து, இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக, முன்னாள் முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம், சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும், நீராடும் துறையும் இருக்கின்றன. நாகர்கோவிலில் தங்கி, அவரவர் வசதிப்படி பஸ், கார்களில் சென்று வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:02 am

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்!

பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே, 35 கி.மீ. , தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம்.

இதன் மொத்தப் பரப்பளவு, 454 ஹெக்டேர். ஒவ்வொரு நவம்பர் மாதமும், பெரும்பாலான நீர்ப்பறவைகள், சீதோஷ்ணம் மற்றும் குஞ்சு பொரிப்பதற்காக இங்கு வருகின்றன. பின், ஏப்ரல் மாதம், தன் குஞ்சுகளோடு கிளம்பிச் செல்லும் இப்பறவைகளை பார்ப்பதே கொள்ளை அழகு! தஞ்சாவூரில் தங்கி, இச்சரணாலயத்தை பார்த்து வரலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 3:03 am

ஆனைமலை விலங்குகள் சரணாலயம்!

காட்டில் சுதந்திரமாக சுற்றித் திரியும் விலங்குகளைப் பார்ப்பது எத்தகைய ஆனந்தம் என்பதை, ஆனைமலைக்குச் சென்றால், உணர்வீர்...

யானை, காட்டெருது, தேவாங்கு, கரடி, பொன்னிறப் பறவைகள், எறும்புத் தின்னி போன்றவற்றை இங்கே காணலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில், 1,400 மீட்டர் உயரத்தில், 958 ச.கி.மீ., பரப்பளவில், பொள்ளாச்சி அருகே இச்சரணாலயம் அமைந்துள்ளது.

இங்குள்ள அமராவதி நீர்த் தேக்கத்தில், முதலைகள் ஏராளம். குன்றுகள், அருவிகள், தேக்கு மரக்காடுகள், தோப்புகள், பண்ணைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் என, இயற்கை எழில் கைகுலுக்கிக் கொள்ளும் அழகின் தாய்வீடு. டாப்ஸ்லிப் பகுதிக்கு, சுற்றுலாப் பயணிகள், வேன் அல்லது யானை மீது உல்லாச சவாரி சென்று வரலாம்.

பொள்ளாச்சியில் தங்கி, பார்த்து வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக