புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
33 Posts - 42%
heezulia
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
32 Posts - 41%
Balaurushya
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
399 Posts - 49%
heezulia
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_m10எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராத முத்தம் - பாவேந்தர் பாரதிதாசன்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:57 pm

First topic message reminder :

முதற்பகுதி

1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு

உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில்
மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!

வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்!

நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
அப்படி இப்படி வலதுகை யசைத்தும்

புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.
நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்!

பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!

பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு

வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்.
புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்

குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:04 pm

11. அறையிலிருந்து அம்பலத்தில்

"ஒருநாள் இரவில் உம்எச மானின்
அருமைப் பிள்ளை ஐயோ பாவம்
பட்ட பாடு பருத்திப் பஞ்சுதான்
பட்டி ருக்குமா? பட்டிருக் காதே!"
என்று கூறினான் இரிசன் என்பவன்.
"என்ன" என்றான் பொன்னன் என்பவன்.
இரிசன் என்பவன் சொல்லு கின்றான்:
"பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த
மாப்பிளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை1
சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல்
புன்னை அடியில் பூரிப்பு முத்தம்
தின்றுகொண் டிருந்தார்! திடீரென் றெசமான்
பிடித்துக் கட்டினார் பிள்ளையாண் டானை!
அடித்தார் மிலாரால்; அழைத்தார் என்னை
அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!"
என்றது கேட்ட பொன்னன் உடனே
சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து
மான நாய்கன் தன்னிடம்
போனான் விரைவில் புகல்வ தற்கே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:04 pm

12. பெற்றோர் பெருந்துயர்

விளக்குவைத்து நாழிகைஒன் றாயிற்று மீசை
வளைத்துமே லேற்றிஅந்த மானநாய்கன் வந்தான்.

"அன்னம்"என்று கூவினான் அன்னோன் மனைவிதனை
"என்ன"என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள்.

"பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான்!
செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை

உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத்
தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி

வாரம் இரண்டா யினவாம் இதுஎன்ன
கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்!

அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே
அச்ச மயமாக "ஐயா" எனக்கூவிப்

பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும்,
புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும்,

சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள்.
"நல்லதுநீ போபொன்னா" என்று நவின்றுபின்

மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல்
"தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை

ஏன்என் றதட்டாமல் இதுவரைக் கும்சிறந்த
வானமுதம் போல வளர்த்த அருமைமகன்

வெள்ளை உடுத்தி வௌியிலொரு வன்சென்றால்
கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்

வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா
நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு

செல்லப்பா என்று சிறக்க வளர்த்தபிள்ளை
கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா!"

என்று பலவாறு சொல்லி இருக்கையிலே,
நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல்

பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக்
கண்டஅந் நாய்கன் கடிந்த மொழியாக

"நில்லாதே போ!"என்றான். "என்னால் நிகழ்ந்ததில்லை.
சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி போய்ச்சொன்னேன்.

பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றாள்; அதனை
வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன். வேறென்ன?"

என்றுரைத்தான் பண்டாரம். கேட்டான் இதைநாய்கன்.
"சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துனக்"கென்றான்.

"பத்து வராகன் பணம்கொடுத்த தாகவும்
முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்எனவும்

எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்?
அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்!

தாடிஒன்று கேட்டான். எனக்கென்ன? தந்ததுண்டு.
மூடிமுக் காடிட்டு மூஞ்சியிலே தாடிஒட்டி

நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில்.
மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப்

போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல்
ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!"

என்று பண்டாரம் இயம்பவே நாய்கனவன்
"நன்று தெரிந்துகொண்டேன். நான்சொல்வ தைக்கேட்பாய்

என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே;
அன்னவனை நானோ அயலூருக் குப்போகச்

சொல்ல நினைக்கின்றேன்; அன்னவன்பால் சொல்லாதே
செல்லுவாய்" என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான்.

பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப்
பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன்

"அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம்
சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன்.

நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர்
தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும்

முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும்
ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்;

கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி
நெஞ்சில் அவள்மயக்கம் நீங்கும்!" எனச்சொன்னான்.

அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச்
சொன்னது நன்றென்றாள் துணிந்து.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:05 pm


13. இல்லையென்பான் தொல்லை


பொன்முடி கடையி னின்று
வீட்டுக்குப் போகும் போது
தன்னெதிர்ப் பண்டா ரத்தைப்
பார்த்தனன்; "தனியாய் எங்கே
சென்றனிர்" என்று கேட்டான்.
பண்டாரம் செப்பு கின்றான்:
"உன்தந்தை யாரும் நானும்
ஒன்றுமே பேச வில்லை.

அவளுக்கும் உனக்கு முள்ள
அந்தரங் கத்தை யேனும்,
அவன்உன்னை மரத்தில் கட்டி
அடித்ததை யேனும், காதற்
கவலையால் கடையை நீதான்
கவனியா மையை யேனும்
அவர்கேள்விப் படவே இல்லை,
அதற்கவர் அழவு மில்லை.

நாளைக்கே அயலூர்க் குன்னை
அனுப்பிடும் நாட்ட மில்லை;
கேளப்பா தாடிச் சேதி
கேட்கவும் இல்லை" என்றான்.
ஆளனாம் பொன்மு டிக்கோ
சந்தேகம் அதிக ரிக்கக்
கோளனாம் பண்டா ரத்தின்
கொடுமையை வெறுத்துச் சென்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:05 pm


14. எதிர்பாராப் பிரிவு

பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப்
போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர்.
அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால்
ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்க ளோடு
குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக் காதல்
கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றான்.
மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி
வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம்.

வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம்
மங்கையரும் ஆடவரும் வீதி தோறும்
"இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்"
என்றுரைத்து வாழ்த்த லுற்றார்! மாடிமீது
சுடரொன்று தோன்றிற்று. பொன்மு டிக்கோ
துயர்ஒன்று தோன்றிற்று. கண்ணீர் சிந்த
அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால்
"அன்பேநீ விடைகொடுப்பாய்" என்று கேட்டான்.

எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும்
எமலோகத் துக்கன்பன் செல்வா னென்றே!
அதிர்ந்ததவள் உள்ளந்தான் பயணஞ் செல்லும்
அணிமுத்து வணிகரொடு கண்ட போது
விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக
வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந் தன்னைப்
புதுமலர்க்கை யால்அழுத்தித் தலையில் மோதிப்
புண்ணுளத்தின் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள்.

விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட் டஞ்சும்
விழிதானா? விழியொழுகும் நீர்தா னா?பின்
இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெ ருப்பா?
எதுவிடை?பொன் முடிமீண்டும் மீண்டும் மீண்டும்
கடைவிழியால் மாடியிலே கனிந் திருக்கும்
கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை
உடைந்துவிழு வாள்அழுவாள், அழுவாள் கூவி!
"உயிரேநீர் பிரிந்தீரா" என்று சோர்வாள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:05 pm


15. அழுதிடுவாள் முழுமதியாள்

"இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே
இப்பூதே வந்திடுவார் என்று கூறி
வெங்காதல் பட்டழியும் என்உ யிர்க்கு
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன்.
இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை;
இருமூன்று மாதவழித் தூர முள்ள
செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி
சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்ப துண்டோ?

செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும்
சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி
எழுந்தோடும் கிள்ளைபோல் எனது டம்பில்
இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை!
வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக்
கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க
கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள்.

தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று
தள்ளாடும்; விழும்எழும்பின் னிற்கும்; சாயும்.
தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள்.
தோளசந்து தாளசந்து மாடி விட்டுப்
பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து
படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந் தன்னில்
நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம்
நாவறளக் கத்துதல்போல் பேச லுற்றார்.

வடநாடு செல்கின்றான் அந்தப் பையன்
உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்!
நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா?
நான்நினைக்க வில்லைஎன்று மகிழ்ச்சி கொண்டு
திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள்.
சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய்
வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்!
மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய் கன்தான்.

வெள்ளீயம் காய்ச்சிப்பூங் கோதை காதில்
வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை
கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக்
கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில்
துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார்
துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா?
தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத்
தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:06 pm

16. எந்நாளோ!

பாராது சென்ற பகல்இரவு நாழிகையின்
ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத்

தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன்.
தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்?

கண்டவுடன்வாரி அணைத்துக்கண் ணாட்டி யென்று
புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான்

அன்பு நிலையம் அடையும்நாள் எந்நாளோ?
என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ?

கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும்
விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு

தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி
ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ?

என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை
இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே?

ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன்
யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?"

என்று பலவா றழுதாள்.பின் அவ்விரவில்
சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள்.அப் புன்னைதனைக்

கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத
வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன்

கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக
ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப்

பொன்னுடம்பு நோகப் புடைக்கஅவ ரைப்பிணித்த
புன்னை இதுதான்! புடைத்துதுவும் இவ்விருள்தான்!

தொட்டபோ தெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை,
விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக்

கட்டிவைத்த காரணத்தால், புன்னைநீ காரிகைநான்
ஒட்டுறவு கொண்டுவிட்டோம். தந்தை ஒரு பகைவன்!

தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ?
நோயோ உணவு?நாம் நூற்றாண்டு வாழ்வோமோ?

சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ!
ஏதோ அறியேன் இனி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:06 pm


17. ஆசைக்கொரு பெண்

புன்னையில் அவளு டம்பு
புதைந்தது! நினைவு சென்று
கன்னலின் சாறு போலக்
கலந்தது செம்ம லோடு!
சின்னதோர் திருட்டு மாடு
சென்றதால் அதைப் பிடித்துப்
பொன்னன்தான் ஓட்டி வந்தான்
புன்னையில் கட்டப் போனான்.

கயிற்றொடு மரத்தைத் தாவும்
பொன்னனின் கையில் தொட்டுப்
பயிலாத புதிய மேனி
பட்டது. சட்டென் றங்கே
அயர்கின்ற நாய்கனைப் போய்
அழைத்தனன்; நாய்கன் வந்தான்
மயில்போன்ற மகளைப் புன்னை
மரத்தோடு மரமாய்க் கண்டான்.

"குழந்தாய்"என் றழைத்தான். வஞ்சி
வடிவினைக் கூவி "அந்தோ
இழந்தாய்நீ உனது பெண்ணை!"
என்றனன். வஞ்சி தானும்
முழந்தாளிட் டழுது பெண்ணின்
முடிமுதல் அடி வரைக்கும்
பழஞ்சீவன் உண்டா என்று
பதைப்புடன் தடவிப் பார்த்தாள்.

"அருமையாய்ப் பெற்றெ டுத்த
ஆசைக்கோர் பெண்ணே!" என்றும்
அருவிநீர் கண்ணீ ராக
அன்னையும் தந்தை யும்"பொற்
றிருவிளக் கனையாய்!" என்றும்
செப்பியே அந்தப் புன்னைப்
பெருமரப் பட்டை போலப்
பெண்ணினைப் பெயர்த் தெடுத்தார்.

கூடத்தில் கிடத்தி னார்கள்
கோதையை! அவள் முகத்தில்
மூடிய விழியை நோக்கி
மொய்த்திருந் தார்கள். அன்னாள்
வாடிய முகத்தில் கொஞ்சம்
வடிவேறி வருதல் கண்டார்;
ஆடிற்று வாயிதழ் தான்!
அசைந்தன கண்ணி மைகள்.

எழில்விழி திறந்தாள். "அத்தான்"
என்றுமூச் செறிந்தாள். கண்ணீர்
ஒழுகிடப் பெற்றோர் தம்மை
உற்றுப் பார்த்தாள்; கவிழ்ந்தாள்.
தழுவிய கைகள் நீக்கிப்
பெற்றவர் தனியே சென்றார்.
பழமைபோல் முணு முணுத்தார்;
படுத்தனர் உறங்கி னார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:07 pm


18. பறந்தது கிள்ளை


விடியுமுன் வணிகர் பல்லோர்
பொதிமாட்டை விரைந்தே ஓட்டி
நடந்தனர் தெருவில் காதில்
கேட்டனள் நங்கை. நெஞ்சு
திடங்கொண்டாள்; எழுந்தாள். வேண்டும்
சில ஆடை பணம் எடுத்துத்
தொடர்ந்தனள் அழகு மேனி
தோன்றாமல் முக்கா டிட்டே!

வடநாடு செல்லும் முத்து
வணிகரும் காணா வண்ணம்
கடுகவே நடந்தாள். ஐந்து
காதமும் கடந்த பின்னர்
நடைமுறை வரலா றெல்லாம்
நங்கையாள் வணிக ருக்குத்
தடையின்றிக் கூற லானாள்
தயைகொண்டார் வணிகர் யாரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:07 pm


19. வடநாடு செல்லும் வணிகர்


பளிச்சென்று நிலா எரிக்கும்
இரவினில் பயணம் போகும்
ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே
ஒருநெஞ்சம் மகர வீதி
கிளிச்சந்த மொழியாள் மீது
கிடந்தது. வணிக ரோடு
வௌிச்சென்ற அன்னோன் தேகம்
வெறுந்தேகம் ஆன தன்றோ!

வட்டநன் மதியி லெல்லாம்
அவள்முக வடிவங் காண்பான்!
கொட்டிடும் குளிரில் அப்பூங்
கோதைமெய் இன்பங் காண்பான்!
எட்டுமோர் வானம் பாடி
இன்னிசை தன்னி லெல்லாம்
கட்டிக்க ரும்பின் வாய்ச்சொற்
கவிதையே கண்டு செல்வான்.

அணிமுத்து மணிசு மக்கும்
மாடுகள் அலுத்துப் போகும்.
வணிகர்கள் அதிக தூர
வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில்
தணியாத அவள் நினைவே
பொன்முடி தனக்கு நீங்காப்
பிணியாயிற் றேனும் அந்தப்
பெருவழிக் கதுதான் வண்டி!

இப்படி வடநாட் டின்கண்
டில்லியின் இப்பு றத்தில்
முப்பது காத முள்ள
மகோதய முனிவ னத்தில்
அப்பெரு வணிகர் யாரும்
மாடுகள் அவிழ்த்து விட்டுச்
சிப்பங்கள் இறக்கிச் சோறு
சமைத்திடச் சித்த மானார்.

அடுப்புக்கும் விறகினுக்கும்
இலைக்கலம் அமைப்ப தற்கும்,
துடுப்புக்கும் அவர வர்கள்
துரிதப்பட் டிருந்தார். மாவின்
வடுப்போன்ற விழிப்பூங் கோதை
வடிவினை மனத்தில் தூக்கி
நடப்போன் பொன்முடிதான் அங்கோர்
நற்குளக் கரைக்குச் சென்றான்.

ஆரியப் பெரியோர், தாடி
அழகுசெய் முகத்தோர், யாக
காரியம் தொடங்கும் நல்ல
கருத்தினர் ஐவர் வந்து
"சீரிய தமிழரே, ஓ!
செந்தமிழ் நாட்டா ரேஎம்
கோரிக்கை ஒன்று கேட்பீர்"
என்றங்கே கூவி னார்கள்.

தென்னாட்டு வணிக ரான
செல்வர்கள் அதனைக் கேட்டே
என்னஎன் றுசாவ அங்கே
ஒருங்கேவந் தீண்டி னார்கள்.
"அன்புள்ள தென்னாட் டாரே,
யாகத்துக் காகக் கொஞ்சம்
பொன்தரக் கோரு கின்றோம்,
புரிகஇத் தருமம்" என்றே.

வந்தவர் கூறக் கேட்டே
மாத்தமிழ் வணிக ரெல்லாம்
சிந்தித்தார் பொன்மு டிக்குச்
சேதியைத் தெரிவித் தார்கள்.
வந்தனன் அன்னோன் என்ன
வழக்கென்று கேட்டு நின்றான்.
பந்தியாய் ஆரி யர்கள்
பரிவுடன் உரைக்க லானார்.

"மன்னவன் செங்கோல் வாழும்,
மனுமுறை வாழும்; யாண்டும்
மன்னிய தருமம் நான்கு
மறைப்பாதத் தால் நடக்கும்;
இன்னல்கள் தீரும்; வானம்
மழைபொழிந் திருக்கும்; எல்லா
நன்மையும் பெருகும்; நாங்கள்
நடத்திடும் யாகத் தாலே.

ஆதலின் உமைக்கேட் கின்றோம்
அணிமுத்து வணிகர் நீவீர்
ஈதலிற் சிறந்தீர் அன்றோ
இல்லையென் றுரைக்க மாட்டீர்!
போதமார் முனிவ ரேனும்
பொன்னின்றி இந்நி லத்தில்
யாதொன்றும் முடிவ தில்லை"
என்றனர். இதனைக் கேட்டே

பொன்முடி உரைக்க லுற்றான்:
"புலமையில் மிக்கீர்! நாங்கள்
தென்னாட்டார்; தமிழர்,சைவர்
சீவனை வதைப்ப தான
இன்னல்சேர் யாகந் தன்னை
யாம்ஒப்ப மாட்டோம் என்றால்
பொன்கொடுப் பதுவும் உண்டோ
போவீர்கள்" என்று சொன்னான்.

காளைஇவ் வாறு கூறக்
கனமுறு தமிழர் எல்லாம்
ஆளன்பொன் முடியின் பேச்சை
ஆதரித் தார்கள்; தங்கள்
தோளினைத் தூக்கி அங்கை
ஒருதனி விரலால் சுட்டிக்
"கூளங்காள்! ஒருபொன் கூடக்
கொடுத்திடோம் வேள்விக்" கென்றார்.

கையெலாம் துடிக்க அன்னார்
கண்சிவந் திடக்கோ பத்தீ
மெய்யெலாம் பரவ நெஞ்சு
வெந்திடத் "தென்னாட் டார்கள்
ஐயையோ அநேக ருள்ளார்
அங்கத்தால் சிங்கம் போன்றார்
ஐவர்நாம்" எனநி னைத்தே
அடக்கினார் எழுந்த கோபம்.

வஞ்சத்தை எதிர்கா லத்துச்
சூழ்ச்சியை வௌிக்காட் டாமல்
நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு
வாயினால் நேயங் காட்டிக்
"கொஞ்சமும் வருத்த மில்லை
கொடாததால்" என்ப தான
அஞ்சொற்கள் பேசி நல்ல
ஆசியும் கூறிப் போனார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 11:07 pm

20. வணிகர் வரும்போது

முத்து வணிகர் முழுதும் விற்றுச்
சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில்

மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே
சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார்.

போகும் போது பொன்கேட்ட அந்த
யாகஞ் செய்ய எண்ணு வோர்களின்

கொடுவிஷம் பூசிய கூரம்பு போன்ற
நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்!

ஆத்திர முகங்கள் அங்குள தமிழரைப்
பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின!

தமிழர் கண்டு சந்தே கித்தனர்.
"நமது சொத்தும் நல்லுயிர் யாவும்

பறிபோகும் என்று படுகின்ற" தென்றே
அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான்.

செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர்;
கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர்.

தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன!
வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர்.

தப்பிய சிற்சில தமிழர் வனத்தின்
அப்புறத் துள்ள அழகிய ஊரின்

பின்புற மாகப் பிரியும் வழியாய்ப்
பொன்முடி யோடு போய்ச்சேர்ந் தார்கள்.

சூறை யாடிய துறவிகள் அங்கே
மாறு பாட்டு மனத்தோடு நின்று

"வைதிகம் பழித்த மாபாவி தப்பினான்;
பைதலி வனத்தின் பக்க மாகச்

செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக்
கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனைக்

அனுப்பி வைப்போம் வருவீர்
இனிநில் லாதீர்" என்று போனாரே

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக