புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:29 pm


1. தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:29 pm

2. விடுதலைப் பொழுது

எழுந்திரு பிள்ளாய்
இது விடுதலைப் பொழுது

இருளின் துயில் கலைகிறது
நீயோ
இழுத்துப் போர்த்தபடி
இன்னம் உறங்குதியோ?
எழுந்திரு.

இதோ
விடியலில் கீழ் வானம்
ஒளிமுடி தரிக்கும் உன்னதம்
உனக்குத் தரிசனமாகவில்லை.

குருகினங்களின்
உதயத்து இசை
உனக்குத் தேனிப்பதில்லை.

மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல்
உன்
மேனி வருடச் சிலிர்ப்பதில்லை.

சீ! நீ என்ன மனிதன்
இன்னந் துயில் புணர்வாய்

புலர் பொழுதை ஸ்பரிசிக்காத
நின் புலன்கள் பழுதுடைய.

இனியும், காலம் கடத்தாதே
புலன்கள் நறையுண்ணும்
பொழுதை மழிக்காதே.

ஒலியேந்தவிரியும் விழிகொள்
விடியலின் குரலுக்குச் செவிகொடு.
நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு
புலரவிடு காலைப் பொழுதை.

எழுந்திரு

சோம்பலை உதறிச்
சுருட்டிய பாயடு தூரவீசு.

வைகறை நீராடு
பொய்கறை இருள் கழுவிப்
புலரும் பொழுதை வரவேற்று
மனதில் ஒரு கும்பம் வை.
நினைவுகளை ஒருங்குவி
திகழ் ஒளியைத் தியானி.

அதோ
உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை
தொற்றித் தவழ்கிறது
ஒற்றிக் கொள் கண்களில்.

கதவிடுக்கின் ஊடாக
உட் செல்லத் துடிக்கிறது
திறந்து விடு கதவை முற்றாய்
உனதகம் ஒளி பெறட்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:30 pm

3. கோடை

ஒரு கோடை நடுப்பகல்.
நடுப் பகலின்
வெக்கையின் தாக்கம்
விளைவிக்கும் வெறுமை.

எங்கோ இருந்தொரு காக்கை
வெறுமைக்குக் குரல் கொடுக்கும்.
கோடை உமிழும் குரல்.

எரிச்சல் பற்றி வர
எழுந்து போய்
காக்கையைக் கலைந்தால்
கலைகிறதா வெறுமை?

சுருதியறுந்த தந்தியின்
அதிர்வாய் அதே
வெறுமையின் மீட்டல்.

வலம்வந்தொருகால் மீண்டும்
கொல்லை அமர்ந்ததுகாக்கை.
மீட்டும் குரல் மாறிலது
அதே வெறுமை எடுத்தகுரல்.

வெளியில்
காற்றின் விழுக்காடு
சோர்ந்து வழிகின்ற தென்னைகள்,
வெறிச் சோடிப் போன தெரு.
கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி
காய்தலுறும் மாடுகள்.

இவற்றுக் கெல்லாம் ஒட்டுமொத்தமாக
குத்தகை எடுத்ததாய் ஓர் குரலில்
கோடை வறுக்கிறது காக்கை.

கானல் திரைவெளியில் வெறுமை
நிழல் விழுத்தி உலர
கண்கள் வெயில்கிறது.
மூடி விழித்தால் கானலின் ஒவியம்
கூடவே காக்கையின் குரலின்
பின்னணி ராகம்.

கல்லெறிந்து மீண்டும் அதைக்
கலைப் போமெனின் சாய்மனையோடு
மல்லுக்கட்டி மாழுகிறது மனம்.

சொல்லெறிந்து மீண்டும் காக்கை
சுற்றிச் சுற்றி எதையோ குத்திக் காட்டுவதாய்
முற்றும் இலையுதிர்ந்த வொரு
முள் முருக்கில் உலர் குரலில்....

சீ சனியன், நரகம்.

நிச்சயமாக நான் வெறுக்கிறேன்.
இந்தக் கோடையை
வெறுமை தின்னும் கோடை நடுப்பகலை.
குரல் கறுத்த காக்கையை.

நிச்சயமாக என்னையும்
நான் சாய்ந்து கிடக்கும் சாய்வு நாற்காலியையுங்கூடவே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:30 pm

4. மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்

வான் முலை சுரந்தது
வையம் அருந்திற்று
ஓ! வான் மழையே!
வையத் திருவே! வந்தனை நீ வாழி!

நீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகளை
மழை முழுக்காட்ட வந்தனை! மாரி நீ வாழி!

வரண்டு வெடித்த வாய் பிளந்து பூமி
வருந்தி அழைத்த குரல் உனக் கெட்டிற்றோ?
இரங்கினை! அதனால் எம்மிதயங் குளிக்கிறது.

நின் வரவால் நிகழும்
அற்புதங்கள்தான் எத்தனை! எத்தனை!

மலை எழில் போர்க்கும்
துயிலும் நதியில் துரித விழிப்புப் பெருகும்

செடிகொடிகள் குளிக்கும்
தென்றலின் அசைப்பில் மேனிகுலுங்கி
நீர்த் திவலைகள் சிலும்பும்.

மண்ணில் நின் சங்கமத்தால் எழும் மண்வாசனை
எங்கும் பரவும்! அது
உழைப்பைக் கோருவது. உறங்கும் மனிதரின்
நாசியின் உட்புகுந்து
'எழுங்கள் ஏர் எடுங்கள்'என
உழுதுழுது பூமித்தாயை தொழுகை செய
தூண்டி நடாத்தும் புனிதவாசனை!
உழைப்பின் வாசனை!
வான் மழையே மண்ணில் உயிர்
வாசனை கிளர்த்தினாய் வாழி.

மழைத்தேவா வர்ஷித்தாய்
இந்த மண்ணில் உயிர் பெய்தாய்

ஓங்கிய பெரும் ஓசையுடன்
தாள பேத பாவங்களுடன்
துமிதுமி துமி என நின்
பாத துளிகள் இம் மண்ணில் பாவின.

பேதமிலாத நின் பெய்கையால்
வான் மழையே நினக்கு மறுபெயர்
ஞான மழை என்போம்.

ஞான மழையே நனி பொழிக
இம்மண்ணின் பாவங்கள் கழுவுண்டோட
பொறாமை பொச்சரிப்பு வெப்பு நோய்கள் தணிய
வரம்புகள் கடந்த வாழ் வொன்று செய்ய.

விடியலில் மதியத்தில் அந்தியில் நள்ளிருளில்
நாளெலாம் பொழிக பொழுதுகள் நனைக.

விண்ணின் றிழியும் அமிர்த தாரைகள்
வீட்டுமுன்றலில் மீண்டும் சங்கீதம்
உள்வாங்கி உள்வாங்கி உயிர் வீங்கி....

"பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்ப சிலம்பு கலந்தர்ப்ப...."

நானே எனக்குள் மழையாய்ப் பொழிந்து
நனைந்து நனைந்துருகி -- ஏலோரெம்பாவாய்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:31 pm

5. அகங்களும் முகங்களும் -1

இடிந்து கிடந்த நினைவுத் தூண்களை*
எழுப்பி வைத்தீர்
இடித்தவரை நினைவூட்ட.

எழுபத்தியேழு ஓகஸ்டில் தெற்கில்
இழந்த உயிர்களுக்கு
நினைவுத் தூண்கள் நிறுவுவீரா?
உங்கள்
இழிமைகளை நினைவூட்ட?

மலர் வளையங்கள், மாலைகள் சாத்தல்:
இவை உதவப் போவதில்லை,
எங்கள் நினைவுகளில் உங்களைச்செதுக்க.
மலர்வளையங்களும் மாலைகளும்
உதிர்ந்து விழும் உங்கள்
சொல்லலங்காரங்கள் போல.

மாலைசாத்திய கைகள்
மறுநாளே வாளெடுக்கும்
நிகழ்ச்சிகள் பல
நடப்பிலே கண்டோம்.

மலர் தூவிய கைகளாலேயே
துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர்
வகுப்புவாத மேகங்கள் இருண்டு
குருதி மழை பொழிய.

இரத்தச் சுவடுகள் பதிய
ஒழிந்தோடி ஓர்மூலையில் பதுங்கி
உடைமாற்றிவந்து
ஒப்புக்கழுவீர்.

உடை மாற்றலேன்?
உங்களை மாற்றுங்கள்.

இனவாதமணம் அறாதவாயால்
இன்னமுத மொழிகள்;
"இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச்
செல்கிறேன்." இப்படிப் பலப்பல.

எடுத்துச் செல்லுங்கள்
உங்களிதயத்தை உங்களுடனேயே.
எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்கமுன்
உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.

காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து
துருப்பிடித்த இதயத்தை
துருவி ஆராயுங்கள்.
போலித் தார்மீகப் போர்வை களைந்து
உண்மை நிர்வாணம் பற்றுங்கள்.

மஞ்சள் அங்கிகளுக்கும்
மழித்த தலைகளுக்கும்
புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட
புத்தரின் அன்பு துலங்கும்வரை
செதுக்குங்கள்! உங்கள் இதயத்தைச்
செதுக்குங்கள்!

எடுத்துச் செல்லுங்கள்
எங்கள் உபதேசமிதே.

* 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டின் போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச்சின்னம். அவற்றை முந்திய ஆட்சியினர் காலத்தில் பொலிசார் உடைத்துவிட்டனர். யூ.என்.பி. பதவிக்கு வந்தபின் யாழ். விஜயம் மேற்கொண்ட சிறீலங்காப் பிரதமர் அத் தூண்களை எழுப்பி மலர்வளையம் சாத்தியது செய்தி.

+ யாழ். விஜயம்செய்து சிறீலங்கா திரும்புகையில் பிரதமர் சொன்னது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:31 pm

6. அகங்களும் முகங்களும் -2

வெடிகள் சிதறும் ஒலிகள்
வேடிக்கை தெருவெல்லாம்
என்ன வெளியே?
எட்டிப் பார்த்தேன்.

தேர்தல் வெற்றித் திருவிழா ஊர்வலம்

நம்மவர்,
மேளங்கொட்டுறார், குதிக்கிறார், விழுகிறார்.
கோஷம் போடுவார்
நடுவே
கோடியுடுத்த மாப்பிள்ளையாக
மா.அ. சபைத் தலைவர் வருகிறார்
மாலை மரியாதையுடன்.

வெட்கம் கெட்டவர்கள்!
வேற்றோர் இட்ட நெருப்பின்
வெக்கை தணிந்து இன்னும்
சாம்பல் அள்ளவில்லை.
தூர்ந்து போன தேசத்தை
தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்லை.
அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிறார்.

58இல் தொடங்கி அடுத்தடுத்து
அடிவிழுந்த பின்னாலும்
என்ன செய்தார் இவர்கள்?
அடித்தாரைச் சொல்லி
அழுதழுது வாக்குப் பெற்றார்;
கூட்டுச் சேர்ந்தும் கொள்கை முழக்கி
வெற்றிகள் குவித்தார்.

தேர்தல் எனும் வேசி
விடுதலைக் குழந்தை ஈவாள் எனச்சொல்லி
பாராளுமன்றத்தில் 'கூடல்' செய்தார்.
மாவட்டந் தோறும் தங்கு மடங்கட்ட
முண்டு கொடுப்போம் என்றார்.
தேர்தல் பந்தல் சோடனைகள்
ஒருபுறம் நடக்க மறுபுறம்
தீண்டிற்றே நெருப்பு.

77இன் எரிதழற் காயங்கள் ஆறமுன்னம்
மீண்டும் எரிநெருப்பில் தமிழ்-ஈழம்

காக்கி உடைகளும் காடையர் கூட்டமும்
கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார்
எரிமலைப் பிரதேசம் போல்
எல்லாமே நாசம்.

தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத்
தமிழரெல்லாம் ஒப்பாரி வைக்கிறார்;
விடுதலை பெற வியலாத
மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும்
பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய்
பதவிகளை உதறாமல்
பகிஷ்கரிப்பு 'ஊடல்' செய்வார்.

பதவிகளை உதறி எறிந்திருந்தால்
உலகின்
மனச்சாட்சியையே உலுப்பியிருக்காதா?
எமைச் சுற்றி நாமிட்ட
வேலிகள் தகர்ந்து
விடுதலைக்கு ஒரு வழி திறந்திருக்காதா?

ஆனால்,
எதை உதறினாலும் பதவிகளை உதறோமென
தோளிட்ட துண்டுகளை எடுத்து உதறியவாற
இதோ வருகிறார் தலைவர்கள் ஊர்வலமாய்,
சவக்காட்டில் வெற்றிச் சங்கூதி.

அதிலென்ன?
இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு
படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள்
பயணம் தொடரட்டும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:32 pm

7. வெறும் இறக்கை

ரோட்டில் பலர் போவார் வருவார்
ஆயினும் ஓரம் கிடக்கிறதே
அக் காகத்தை யார் பார்ப்பார்?

மணலுள் தலை புதைத்து
கழுத்தைச் சவட்டியக் காகம் கிடக்கிறது.
கருநீல வண்ணனுக்கு ஒப்பிட்ட
கரிய நிறக் காக்கை; யார் பார்ப்பார்?
போவோர் வருவோர் யாரேனும்?

விண்ணளந்த வீரருக்கு விழாக் கோலம்.
விண்ணளந்ததோடு இது
மண்ணின் அழுக்குகளையும் தன்னுள் விழுங்கிவந்த
ஆகாயத் தோட்டியன்றோ....
போவோர் வருவோர் யாரேனும்?

விமான இறக்கை விரிநிழலில்
அணுகுண்டுத் தலையணை
சுதந்தர இருப்பார்க்கு
ரோட்டில் கிடக்கும்
காக்கை நினைப்பெதற்கு?
வெட்டுண்டு வீழ்ந்த இயற்கையதை
யார் நினைவார்?

வெளியுலக மேடையிலே
காகத்தைப் போற்றுவோம்
பெருஞ்சுவர் ரகசியத்துள்
வெள்ளை அன்னங்களோடு விருந்துண்டு
உலா வருவோம்.

வெட்டுண்டு வீழ்ந்த இயற்கை
நினைவெதற்கு? அதைவிடுத்து
கட்டுப்பாடு, கண்ணியம், கடமை
எனக் கோஷிப்போம்
காகம் கிடந்து
நாறிப் புழுக்கட்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:32 pm

8. வீழ்ச்சி

என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை

மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.

மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.

வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?

வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.

குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.

தின வடங்கிற்றா?

தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?

மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.

அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.

படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்
கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
"யானோ அரசன்? யானே கள்வன்."

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:34 pm

9. ஊடாக

எனக்கும் உனக்கும் ஊடாக
கட்புலனாகாக் கயிறொன்றில்
பிணைப்புளது.

எங்கெங்கோ அலைந்தாலும்
சுண்டியிழுக்கும் அக் கயிற்றின்
அதிர்வு என்னுள்.

எனினும் அப் பிணைகயிறு
சில வேளைகளில்
இதோ அறுகிறேன் என
நுண் புரியில் பயமுறுத்தும்
கணங்களை நினைந்தால்.....

ஊடல் முற்றி
மன மூட்டம் கௌவிய
இருட்டறை மௌனத் துள்தான்
எத்துனை கனம்
உறைந்துபோய்நிற்கும் ஊமை இருளில்
புதைந்து போய்விட்ட கால ஊர்தி
வெறுமையின் கனம் தாளாமல்.

இருள் ஊர்ந்த மனமும்
முகடூர்ந்த விழிகளும்-
சோர்ந்து போய்
துயிலில் மூழ்கியதும் தெரியாது போன
பின்னிரவில்

நெஞ்சில் வீழ்ந்த மென் கரத்தால்
துயில் கலையும்: இருளில்
மினுங்குகிற பொன்வளைகள் செவியருகில்
மெல்லச் சிணுங்குகையில் சேர்த்தணைத்தேன்.

சிறுகச் சிறுக இறுகப் பிணைந்த
கணங்களின் உருளலில்

உறைந்து போயிருந்த ஊமைஇருள்
நெகிழ்ந்து மூச்சுவிடும்
மீண்டும்
உறவென்னும் ஒளிக்கயிற்றின்
அதிர்வு தொடங்கிற்றே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:34 pm

10. கலப்பு

அன்பே எனையுடையாய்
காதல் இன்பமும் கனிவும்
கலந்தொன்றாய் வந்தவளே
நிச்சயமாய் நம்முறவு
முந்தைத் தொடர்பின்
புது முகிழ்ப்பு என்னல் பிழையன்று.

வெண்ணெய் எனத் திரண்டிருந்த
பெண் மெய்யாய் நீ இருக்க
ஓட்டைப் பாத்திரம் ஏந்தி
ஊரெல்லாம் நெய்க் கலைந்தேன்.

நெய்க்கலைந்து நாயேன்
நீண்ட வழி நடந்து மீளுகையில்
நீண்ட வழி நெடுகிலும் அன்பு
நிழல் தழைய நின்றிருந்தாய்
நின்னிரு விழிகளிலும்
தேக்கியிருந்தாய் காதற் தேன் வதைகள்.

உட்குருவிந்திருந்த காதல்
இதழவிழ்ந்ததோர் விடியல்
ஓ! இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
பளிச் செனப் புலர்ந்த வெண்முறுவலில்
என் இரவினை விழுங்கினை அன்று.

இன்றோ
எனது சுமைகள், அயர்வுகள், சோர்வுகள்
எல்லாம் உன்னிடம் கைமாறின.

நான் காலாற ஓர்
நிழல் கனிந்த தருவாய்,
கை நிறைய அள்ளிப் பருக
காலடியில் தெறிந்தோடும்
அன்பு ஓடையாய் நீ.

என் துயர் நின்துயராய்
எனக்குற்ற அவமானம் நினக்குற்றதாய்
நெகிழ்ந்துருகி நீ விட்ட கண்ணீராலேயே
என் மாசுகள் கழுவுண்ண
நான் மனிதனாய் நிமிர்ந்தனன்.

என்னை மனிதனாய் நிமிர்த்த உன்னுள்
எல்லையற்ற துயர் சுமந்து நின்று
புன்னகைக்கும் பேடே
நினக்கு என்ன செய்தால் தகும்?

எதை வேண்டி நின்றாய் நீ ஏந்திழையாய்
எனினும் என்ன செய்தல் தரும் நினக்கே?
உன்னுட் பெருகும் உண்மை அன்புப் பெருக்குள்
என்னையே மூழ்கி இறும்பூது எய்தலன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக