புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
2 Posts - 1%
சிவா
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
440 Posts - 47%
heezulia
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_m10தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 08, 2014 7:25 am

தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து ZMBm58beQ1GqEkDlnnQd+xkanaka_1828762h.jpg.pagespeed.ic.yZp2Ma4lnU

அஞ்சல் துறையில் என்னுடன் பணியாற்றி, உத்தரப் பிரதேச போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக ஓய்வு பெற்ற ஷம்சுர் ரஹ்மான் ஃபரூக்கி அவர்களின் உருது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Mirror of Beauty (Hamish Hamilton) என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. பல இதழ்களில் வெளி வந்துள்ள மதிப்புரைகள் எல்லாமே அதைப் போற்றியுள்ளன. ஃபரூக்கி சில ஆண்டுகளுக்கு முன் உருது இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம அளித்து கெளரவிக்கப்பட்டார்.

இந்த நாவலைப் பற்றிப் படித்து விட்டு அஞ்சல் துறையில் இலக்கியப் பணி ஆற்றிய மற்றவர்களைப் பற்றி எண்ணியபோது என் நினைவில் முதலில் வந்த பெயர் வி.கனகசபை பிள்ளை (1855-1906) . இவர் எழுதிய Tamils 1800 Hundreds Years Ago நூல் தமிழ் மறுமலர்ச்சிக்கு முக்கிய வித்துக்களில் ஒன்றாக அமைந்தது. இந்நூல் ஒரு ஆழமான ஆய்வு முயற்சி.

தமிழில் பதிப்பு முயற்சிகள்

இந்தியா ஒரு காலனி நாடாக, தன்மானமிழந்து அவதிப்பட்டுத் தன்னிரக்கத்தில் உழன்றுகொண்டிருந்த ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ்க் காப்பியங்களும் பிற நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில், உ.வே. சாமிநாத அய்யரும் தாமோதரம் பிள்ளையும் பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பித்துக்கொண்டிருந்த சமயத்தில் கனகசபை பிள்ளையும் ஓலைச்சுவடி களைச் சேகரித்து வைத்திருந்தார்.

சிலவற்றை அய்யரிடம் கொடுத்தார். தாமோதரம் பிள்ளைக்கும் அய்யருக்கும் இருந்த போட்டி காரணமாக அரிய தமிழ் நூல்கள் அச்சேறுவது பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய கனகசபை அய்யருக்குக் கடிதம் எழுதி பதிப்புப் பணியை நிறுத்தி விட வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்திய அளவில் வரலாற்றாய்வளர்களிடையே 9-ம் நூற்றாண்டுக்கு முந்தி தமிழ் இலக்கியமே கிடையாது என்றும், அதற்குப் பின் வந்த தமிழ்ப் படைப்புக்களும் சமஸ்கிருத இலக்கியத்தைச் சார்ந்தே இருந்தன என்ற கருத்து அந்த காலகட்டத்தில் பரவலாக இருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய கனகசபை இந்த அணுகுமுறையை மாற்றும் நோக்கத்தினூடேதான் தமிழ்க் காப்பியங்கள் பற்றியும் அவை காட்டுகின்ற தமிழர் வாழ்வுமுறை கலாச்சாரம் பற்றியும் ஆங்கிலத்தில் எழுத முற்பட்டதாகப் பதிவு செய்திருக்கின்றார்.

தமிழ்-ஆங்கில அகராதிப் பணி

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட கனகசபை பிள்ளை முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை ஆராய்ந்து பண்டைய தமிழ்ச் சமூகம், வரலாறு பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் 1895 முதல் 1901 வரை எழுதினார். The Madras Review மாத இதழில் இந்தக் கட்டுரைகள் வெளியாயின. மகாவம்சம் போன்ற புத்த இலக்கியக்கியங்களை ஆராய்ந்து, அதன் மூலம் இந்த இரு தமிழ் காப்பியங்களில் வரும் சில வரலாற்று ஆளுமைகளை அடையாளம் கண்டார்.

சிலப்பதிகாரக் கதையில் சேரன் செங்குட்டுவனின் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த கயவாகு, இலங்கை அரசன் கஜபாகு என்று கூறினார். பின்னர் இவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, பொய்கையார் படைத்த, போர்க்களங்களைப் பின்புலமாக கொண்ட கலிங்கத்துப் பரணி, நூலை பொழிப்புரையாக ஆங்கிலத்தில் எழுதி அன்று பம்பாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த பிரபல வரலாற்று இதழான Indian Aniquary-ல்

1890-ல் வெளியிட்டார். களவழி நாற்பது, விக்கிரம சோழனுலா போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். கனகசபையின் கட்டுரைகள் மூலம் தமிழ்நாட்டு பண்டைய வரலாறு, பாரம்பரியம், மொழி சார்ந்த கலாச்சாரம் உலகிற்குக் காட்டப்பட்டது.

அப்பாவு பிள்ளை என்ற ஆய்வாளர் இருபது ஆண்டுகளாக இவருடன் சேர்ந்து உதவியாளராகப் பணியாற்றினார். தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருந்த வின்சுலோவிற்கு இவரது தந்தையார் கெல்லாக் (Kellog) விசுவநாதன் பிள்ளை செய்து வந்த ஆய்வு உதவியைக் கனகசபை தொடர்ந்து செய்தார். 1890-ல் வெளியான இந்த அகராதி இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

தபால் துறை வேலை

இரு நூற்றாண்டுகளுக்கு முன் அஞ்சல் துறையில் பணியாற்றிய இந்த முக்கியமான ஆய்வாளரைப் பற்றிப் பலருக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்திற்கருகே உள்ள மல்லாகம் கிராமத்தில் பிறந்த கனகசபை தன் பெற்றோரின் ஒரே பிள்ளை. படிப்பு முடித்து 1872-ல் பி.ஏ. பட்டம் பெற்று பி.எல். படிப்பு முடித்து மதுரையில் வழக்கறிஞராக வேலை செய்ய ஆரம்பித்தார். முதல் வழக்கிலேயே திறம்பட வாதாடி கட்சிக்காரருக்கு வெற்றி ஈட்டித் தந்தார்.

ஆனால் நீதிமன்றத்திற்கு விட்டு வெளியே வந்த பின், எதிர்க்கட்சிக்காரர் இவரை அவதூறாக ஏசியதால் வெறுப்புற்று, அந்த வேலையை துறந்து அஞ்சல் துறையில் எழுத்தராக சேர்ந்தார். ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று, கள்ளிக்கோட்டையில் போஸ்டல் சூப்பிரண் டெண்டாகப் பணியாற்றிய மைசூரில் சில ஆண்டுகள் இருந்த பின், கடைசியாக சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது வேலை நிமித்தம் காஞ்சிபுரம் சென்றிருந்த இடத்தில் நலம் குன்றி 21.6.1906-ல் காலமானார்.

1904 ஆண்டில் இக்கட்டுரைகளை தொகுத்து Tamils 1800 Years Ago என்ற தலைப்பில் புத்தகமாக ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. வரலாற்று ஆய்வில் பிள்ளையவர்களின் ஆர்வத்தைக் கவனித்து அவரை எழுதத் தூண்டிய, சென்னை பிரதம நீதிபதி எஸ். சுப்ரமணிய அய்யர் அவர்களுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது. பின்னர் இந்த நூலை கா. அப்பாதுரை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற தலைப்பில், சைவ சித்தாந்த கழகம் மூலம் வெளியிட்டார். இதன் புதிய பதிப்பு 1956-ல், அன்று கல்வி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்களின் முன்னுரையுடன், கெட்டி கேலிகோ அட்டையுடன் வெளிவந்தது.

சிலப்பதிகாரம், மணிமேகலை பற்றிய இரு பகுதிகள் இந்நூலின் சிறப்பு அம்சம். பண்டைய தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வுமுறை இவற்றை வரலாற்றுப் பின்புலத்தில் விளக்கியிருந்தார் கனகசபை. இந்த இரு இயல்களை ஒரு தனி நூலாக வெளியிட சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் தீர்மானித்து 1956-ல் கெட்டி அட்டையுடன் The Great Twin Epics of Tamil என்ற தலைப்பில் வெளியிட்டது. தெ.பொ. மீனாட்சிசுந்தரம் அவர்களின் முன்னுரையுடன் இது வெளிவந்தது. .

கனகசபை பிள்ளையின் ஆய்வுப் பணியைப் பற்றி அதிகம் எழுதப்படவில்லை. அண்மையில் வெளிவந்துள்ள Manuscripts, Memory and History: Classcial Literature in Colonial India என்ற நூலில்

வி. ராஜேஷ் கனகசபையின் நூல் பற்றியும் தமிழ் மறுமலர்ச்சியில் அதன் பங்கு பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

- சு. தியடோர் பாஸ்கரன், இயற்கையியலாளர், மற்றும் கட்டுரையாளர் (thehindu)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 18, 2014 1:32 pm

சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கும் சாமி அவர்களுக்கும் நன்றி !


தமிழ்த் தொண்டர்களில் மறக்கமுடியாதவர் தி. கனகசபைப்  பிள்ளை !


நம் நெஞ்சில் நிற்பவர் அவர் !


 தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து 103459460  தமிழ் மறுமலர்ச்சிக்கு ஒரு வித்து 103459460 




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக