புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2. டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) - தென் சென்னை
டி.கே.எஸ்.இளங்கோவன் பிறந்த தேதி 30.8.1954.
தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோவன் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசிக்கிறார்.
தந்தை டி.கே. சீனிவாசன். தாய் .கே.எஸ். சரஸ்வதி. மனைவி நளினி. மகள்கள் மாதவி, தரணி. எம்.ஏ. பட்டதாரியான டி.கே.எஸ்.இளங்கோவன் 1973-ம் ஆண்டு தி.மு.க.வில் ஐக்கியமானவர். ‘மிசா’ காலத்தில் தி.மு.க. மாணவரணியில் இருந்த போது ஜெயிலுக்கு சென்ற அனுபவம் உண்டு.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர் பிறகு தீவிர அரசியலில் காலடி வைத்தார். தி.மு.க. தீர்மானக்குழு துணை செயலாளர், தலைமை நிலைய செயலாளர் போன்ற பதவிகள் வகித்த இளங்கோவன் இப்போது அமைப்பு செயலாளராக இருக்கிறார். 2009 தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்ட இளங்கோவன் 2014 தேர்தலில் தென் சென்னை தொகுதிக்கு மாறினார்.
டி.கே.எஸ்.இளங்கோவன் பிறந்த தேதி 30.8.1954.
தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோவன் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசிக்கிறார்.
தந்தை டி.கே. சீனிவாசன். தாய் .கே.எஸ். சரஸ்வதி. மனைவி நளினி. மகள்கள் மாதவி, தரணி. எம்.ஏ. பட்டதாரியான டி.கே.எஸ்.இளங்கோவன் 1973-ம் ஆண்டு தி.மு.க.வில் ஐக்கியமானவர். ‘மிசா’ காலத்தில் தி.மு.க. மாணவரணியில் இருந்த போது ஜெயிலுக்கு சென்ற அனுபவம் உண்டு.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர் பிறகு தீவிர அரசியலில் காலடி வைத்தார். தி.மு.க. தீர்மானக்குழு துணை செயலாளர், தலைமை நிலைய செயலாளர் போன்ற பதவிகள் வகித்த இளங்கோவன் இப்போது அமைப்பு செயலாளராக இருக்கிறார். 2009 தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்ட இளங்கோவன் 2014 தேர்தலில் தென் சென்னை தொகுதிக்கு மாறினார்.
3.. தயாநிதி மாறன் (தி.மு.க.) - மத்திய சென்னை
தி.மு.க.வின் நட்சத்திர வேட்பாளரான தயாநிதி மாறன் முரசொலி மாறனின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் பேரன். மூன்றாவது முறையாக 2014 தேர்தலில் மத்திய சென்னையில் களமிறங்குகிறார். 05.12.1966 பிறந்த தயாநிதி மாறனின் சொந்த ஊர் சென்னை. தாய் மல்லிகா மாறன். சென்னை டான்பாஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்து, லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றவர் தயாநிதி மாறன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மைக்கான உயர் கல்வியை முடித்தார். முன்னணித் தொழிலதிபரான தயாநிதி மாறன், சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாகியாக இருந்திருக்கிறார். 1994 முதல் குங்குமம் பப்ளிகேஷன்ஸின் தலைமை நிர்வாகி. கோபாலபுரம் பகுதியில் இளைஞர் அணியை ஸ்டாலின் தொடங்கியபோது, அதில் இணைந்தவர் தயாநிதி மாறன். 1996 முதல் தி.மு.க.வுக்கான தேர்தல் பிரசாரப் படங்கள், விளம்பரங்களைத் தயாரித்து கொடுத்திருக்கிறார். மின்னணு ஊடகத்துறையில் உள்ள அவர், அத்துறை சார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்களுக்காக உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்.
முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு அவர் போட்டியிட்ட மத்திய சென்னை தொகுதியில் 2004 தேர்தலில் முதன்முறையாக களமிறங்கினார் தயாநிதி மாறன். தேர்தலில் வெற்றி பெற்று மன்மோகன் சிங் அமைச்சரவையில் காபினெட் அமைச்சராகவும் ஆனார். டெல்லி அரசியலில் தி.மு.க&வின் முகமாகவும் முகவரியாகவும் விளங்கிய முரசொலி மாறன் அதே வழியில் கருணாநிதியின் துணையோடு டில்லி அரசியலில் காலடி எடுத்து வைத்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த போது அவருடைய அமைச்சர் பதவி சில ஆண்டுகளிலேயே பறிபோனது. மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து தி.மு.க&வுக்குள் கொந்தளுப்புகள் வெடிக்க... தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி காவு வாங்கப்பட்டது. 2009 தேர்தலில் இரண்டாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இரண்டவது முறை மத்திய அமைச்சரான தயாநிதி மாறனுக்கு ஜவுளிதுறை ஒதுக்கப்பட்டது. 2ஜி விவகாரத்தில் அவர் தனது பதவி சில காலங்களிலேயே ராஜினாமா செய்தார். தயாநிதியின் மனைவி ப்ரியா. 13 வயதில் திவ்யா என்ற மகளும், கரண் என்ற 11 வயது மகனும் இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் நட்சத்திர வேட்பாளரான தயாநிதி மாறன் முரசொலி மாறனின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் பேரன். மூன்றாவது முறையாக 2014 தேர்தலில் மத்திய சென்னையில் களமிறங்குகிறார். 05.12.1966 பிறந்த தயாநிதி மாறனின் சொந்த ஊர் சென்னை. தாய் மல்லிகா மாறன். சென்னை டான்பாஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்து, லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றவர் தயாநிதி மாறன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மைக்கான உயர் கல்வியை முடித்தார். முன்னணித் தொழிலதிபரான தயாநிதி மாறன், சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாகியாக இருந்திருக்கிறார். 1994 முதல் குங்குமம் பப்ளிகேஷன்ஸின் தலைமை நிர்வாகி. கோபாலபுரம் பகுதியில் இளைஞர் அணியை ஸ்டாலின் தொடங்கியபோது, அதில் இணைந்தவர் தயாநிதி மாறன். 1996 முதல் தி.மு.க.வுக்கான தேர்தல் பிரசாரப் படங்கள், விளம்பரங்களைத் தயாரித்து கொடுத்திருக்கிறார். மின்னணு ஊடகத்துறையில் உள்ள அவர், அத்துறை சார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்களுக்காக உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்.
முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு அவர் போட்டியிட்ட மத்திய சென்னை தொகுதியில் 2004 தேர்தலில் முதன்முறையாக களமிறங்கினார் தயாநிதி மாறன். தேர்தலில் வெற்றி பெற்று மன்மோகன் சிங் அமைச்சரவையில் காபினெட் அமைச்சராகவும் ஆனார். டெல்லி அரசியலில் தி.மு.க&வின் முகமாகவும் முகவரியாகவும் விளங்கிய முரசொலி மாறன் அதே வழியில் கருணாநிதியின் துணையோடு டில்லி அரசியலில் காலடி எடுத்து வைத்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த போது அவருடைய அமைச்சர் பதவி சில ஆண்டுகளிலேயே பறிபோனது. மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து தி.மு.க&வுக்குள் கொந்தளுப்புகள் வெடிக்க... தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி காவு வாங்கப்பட்டது. 2009 தேர்தலில் இரண்டாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இரண்டவது முறை மத்திய அமைச்சரான தயாநிதி மாறனுக்கு ஜவுளிதுறை ஒதுக்கப்பட்டது. 2ஜி விவகாரத்தில் அவர் தனது பதவி சில காலங்களிலேயே ராஜினாமா செய்தார். தயாநிதியின் மனைவி ப்ரியா. 13 வயதில் திவ்யா என்ற மகளும், கரண் என்ற 11 வயது மகனும் இருக்கிறார்கள்.
4. ஜெகத்ரட்சகன் (தி.மு.க.) - ஸ்ரீபெரும்புதூர்
எஸ். ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலை கிராமம். சென்னை அடையாறு ஏரியாவில்தான் தற்போது வாசம். 15.8.1948 அன்று பிறந்த ஜெகத்ரட்சகனின் தந்தை சாமிக்கண்ணு. தாய் லட்சுமி அம்மாள். 1969 முதல் 1972 வரை தி.மு.க. மாணவர் அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்த ஜெகத்ரட்சகன், 1972 முதல் 1977 வரை மாணவர் அணி மாநில செயலாளராக இருந்திருக்கிறார். 1980 சட்டசபைத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1984ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரிடம் மிகவும் நெருக்கம். 1995-ல் அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம். வீரப்பன் நீக்கப்பட்டபோது, அவரது ஆதரவாளரான ஜெகத்ரட்சகனும் வெளியேறினார். பிறகு ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்தில் இணைந்தார். 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.பி.யாக ஜெயித்தார். தி.மு.க. கூட்டணியில் அப்போது இருந்தால் உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார். தொடர்ந்து வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பை நடத்தினார். அதன்பிறகு ஜனநாயக முன்னேற்றக் கழகமாக அது மாறியது. 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வில் ஐக்கியம் ஆனார். அதோடு அரக்கோணம் எம்.பி. தொகுதியில் போட்டியிட ஸீட்டும் கிடைத்தது. வெற்றி பெற்று எம்.பி. ஆன கையோடு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர் ஜெகத்ரட்சகன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 42 புத்தகங்களை எழுதியிருக்கிறார். சென்னை கம்பன் கழகத்தின் கௌரவ துணைத் தலைவராக பதவி வகிக்கும் அவர் சிறந்த பேச்சாளர். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை சங்க தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறார். ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளர். எம்.ஏ டி.லிட்., பி.ஹெச்.டி. படித்திருக்கிறார். மனைவி அனுசுயா. மகன் என்ஜினீயர் சந்தீப் ஆனந்த். மகள் டாக்டர் சினிஷா.
எஸ். ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலை கிராமம். சென்னை அடையாறு ஏரியாவில்தான் தற்போது வாசம். 15.8.1948 அன்று பிறந்த ஜெகத்ரட்சகனின் தந்தை சாமிக்கண்ணு. தாய் லட்சுமி அம்மாள். 1969 முதல் 1972 வரை தி.மு.க. மாணவர் அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்த ஜெகத்ரட்சகன், 1972 முதல் 1977 வரை மாணவர் அணி மாநில செயலாளராக இருந்திருக்கிறார். 1980 சட்டசபைத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1984ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரிடம் மிகவும் நெருக்கம். 1995-ல் அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம். வீரப்பன் நீக்கப்பட்டபோது, அவரது ஆதரவாளரான ஜெகத்ரட்சகனும் வெளியேறினார். பிறகு ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்தில் இணைந்தார். 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.பி.யாக ஜெயித்தார். தி.மு.க. கூட்டணியில் அப்போது இருந்தால் உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார். தொடர்ந்து வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பை நடத்தினார். அதன்பிறகு ஜனநாயக முன்னேற்றக் கழகமாக அது மாறியது. 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வில் ஐக்கியம் ஆனார். அதோடு அரக்கோணம் எம்.பி. தொகுதியில் போட்டியிட ஸீட்டும் கிடைத்தது. வெற்றி பெற்று எம்.பி. ஆன கையோடு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர் ஜெகத்ரட்சகன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 42 புத்தகங்களை எழுதியிருக்கிறார். சென்னை கம்பன் கழகத்தின் கௌரவ துணைத் தலைவராக பதவி வகிக்கும் அவர் சிறந்த பேச்சாளர். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை சங்க தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறார். ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளர். எம்.ஏ டி.லிட்., பி.ஹெச்.டி. படித்திருக்கிறார். மனைவி அனுசுயா. மகன் என்ஜினீயர் சந்தீப் ஆனந்த். மகள் டாக்டர் சினிஷா.
5. செல்வம் (தி.மு.க.) - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவேடல் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செல்வத்தின் தந்தை கணேசன் 1961-ஆம் ஆண்டு கிளைக் கழக செயலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1981-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணைச் செயலராகவும், 1991-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய துணைச் செயலராகவும் பதவி வகித்தார். 1996-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது வரை தொடர்ந்து கட்சிப் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். தந்தை கணேசனைப் போல செல்வமும் இளமை பருவம் முதல் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
1996-ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதிநிதியாகவும், 2002-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணை அமைப்பாளராகவும், 2008-ஆம் ஆண்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்தார். 2012-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக கட்சிப் பணி ஆற்றி வருகிறார். 2008-ஆம் ஆண்டு திமுக பொருளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சகீலா என்பவரை திருமணம் செய்தார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவேடல் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செல்வத்தின் தந்தை கணேசன் 1961-ஆம் ஆண்டு கிளைக் கழக செயலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1981-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணைச் செயலராகவும், 1991-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய துணைச் செயலராகவும் பதவி வகித்தார். 1996-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது வரை தொடர்ந்து கட்சிப் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். தந்தை கணேசனைப் போல செல்வமும் இளமை பருவம் முதல் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
1996-ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதிநிதியாகவும், 2002-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணை அமைப்பாளராகவும், 2008-ஆம் ஆண்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்தார். 2012-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக கட்சிப் பணி ஆற்றி வருகிறார். 2008-ஆம் ஆண்டு திமுக பொருளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சகீலா என்பவரை திருமணம் செய்தார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
6. என்.ஆர். இளங்கோ (தி.மு.க.) - அரக்கோணம்
12ம் வகுப்புவரை சோழிங்கரில் படித்தவர். திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.
இவரது தந்தை அரங்கநாதன் 1967 முதல் 1971 வரை சோழிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அ.தி.மு.க. உதயமானபோது தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 1973ல் அ.தி.மு.க. பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் சென்றுவரும் போது விபத்தில் இறந்துவிட்டார்.
சென்னையில் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி அருணாவும் வழக்கறிஞராக உள்ளார். சென்னையில் வழக்கறிஞராக செட்டில் ஆனவருக்கு தொகுதியில் சொந்தவீடு கூட இல்லை. கட்சியில் எவ்வித பதவியும் கிடையாது என்பதால் கோஷ்டியும் கிடையாது. தி.மு.க.வின் சவாலான 2ஜி வழக்கிற்கு இவர்தான் வழக்கறிஞர். அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதால் வேட்பாளர் விருப்பமனு கூட தாக்கல் செய்யவில்லை. ஸ்டாலினின் வற்புறுத்தலால்தான் இவர் தேர்தலில் போட்டியிடுகிறாராம்.
12ம் வகுப்புவரை சோழிங்கரில் படித்தவர். திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.
இவரது தந்தை அரங்கநாதன் 1967 முதல் 1971 வரை சோழிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அ.தி.மு.க. உதயமானபோது தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 1973ல் அ.தி.மு.க. பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் சென்றுவரும் போது விபத்தில் இறந்துவிட்டார்.
சென்னையில் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி அருணாவும் வழக்கறிஞராக உள்ளார். சென்னையில் வழக்கறிஞராக செட்டில் ஆனவருக்கு தொகுதியில் சொந்தவீடு கூட இல்லை. கட்சியில் எவ்வித பதவியும் கிடையாது என்பதால் கோஷ்டியும் கிடையாது. தி.மு.க.வின் சவாலான 2ஜி வழக்கிற்கு இவர்தான் வழக்கறிஞர். அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதால் வேட்பாளர் விருப்பமனு கூட தாக்கல் செய்யவில்லை. ஸ்டாலினின் வற்புறுத்தலால்தான் இவர் தேர்தலில் போட்டியிடுகிறாராம்.
7. சின்ன பில்லப்பா (தி.மு.க.) - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள குருப்பட்டி கிராமம்தான் சின்ன பில்லப்பாவிற்கு சொந்த ஊர். எம்.ஏ.எல்.எல்.பி பட்டம் பெற்றவர்.
65 வயதான சின்ன பில்லப்பா 25 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினர். ஓசூர் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பதவிகளை வகித்திருக்கிறார்.
குரும்பர் சமூகத்தை சேர்ந்தவர். அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். இப்போது முழு நேர அரசியல்வாதி. தந்தை பில்லப்பா கவுடு. தாய் பில்லம்மா. மனைவி இணையவள்ளி. திலிப்குமார் என்ற மகனும்,பவித்ரா என்ற மகளும் உள்ளனர் இருவரும் மருத்துவப்படிப்பு பயில்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள குருப்பட்டி கிராமம்தான் சின்ன பில்லப்பாவிற்கு சொந்த ஊர். எம்.ஏ.எல்.எல்.பி பட்டம் பெற்றவர்.
65 வயதான சின்ன பில்லப்பா 25 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினர். ஓசூர் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பதவிகளை வகித்திருக்கிறார்.
குரும்பர் சமூகத்தை சேர்ந்தவர். அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். இப்போது முழு நேர அரசியல்வாதி. தந்தை பில்லப்பா கவுடு. தாய் பில்லம்மா. மனைவி இணையவள்ளி. திலிப்குமார் என்ற மகனும்,பவித்ரா என்ற மகளும் உள்ளனர் இருவரும் மருத்துவப்படிப்பு பயில்கின்றனர்.
8. தாமரை செல்வன் (தி.மு.க.) - தர்மபுரி
ஆர்.தாமரைசெல்வனின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி. 1.10.1963 அன்று பிறந்த தாமரை செல்வன் பி.எஸ்.சி., பி.எல். பட்டதாரி.
வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணனிடம் ஜுனியராக பணியாற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.
மனைவி கீதா தாமரை செல்வனும் ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார். தந்தை எல்.பி.ராமர் மொழிப்போர் தியாகி. தாய் பச்சியம்மாள். மனைவி தா.கீதா. மகன் ஆதித்யா. மகள் சுபிக்சா. 1989-ம் ஆண்டில் தருமபுரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், வழக்கறிஞர் அணியில் பல்வேறு பொறுப்புகள் வகித்திருக்கிறார்.
1996 சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார் கிடைக்கவில்லை. 2009 தேர்தலில் தர்மபுரியில் வென்று எம்.பி. ஆனார். இரண்டாவது முறையாக இப்போது தர்மபுரியில் போட்டியிடுகிறார்.
ஆர்.தாமரைசெல்வனின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி. 1.10.1963 அன்று பிறந்த தாமரை செல்வன் பி.எஸ்.சி., பி.எல். பட்டதாரி.
வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணனிடம் ஜுனியராக பணியாற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.
மனைவி கீதா தாமரை செல்வனும் ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார். தந்தை எல்.பி.ராமர் மொழிப்போர் தியாகி. தாய் பச்சியம்மாள். மனைவி தா.கீதா. மகன் ஆதித்யா. மகள் சுபிக்சா. 1989-ம் ஆண்டில் தருமபுரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், வழக்கறிஞர் அணியில் பல்வேறு பொறுப்புகள் வகித்திருக்கிறார்.
1996 சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார் கிடைக்கவில்லை. 2009 தேர்தலில் தர்மபுரியில் வென்று எம்.பி. ஆனார். இரண்டாவது முறையாக இப்போது தர்மபுரியில் போட்டியிடுகிறார்.
9. சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.) - திருவண்ணாமலை
சி.என்.அண்ணாதுரை பி.காம் பட்டதாரி. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகே இருக்கும் தேவனாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது, திருவண்ணாமலையில் உள்ள தென்றல் நகரில் வசித்து வருகிறார்.
தந்தை நடராஜன்,துரிஞ்சாபுரம் ஒன்றிய தி,மு.க முன்னாள் செயலாளராக இருந்தவர். தாயார் சரோஜா. மனைவி தீபா பல்மருத்துவராக இருக்கிறார். பிரஜித்,உதயா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்தக் கிராமத்தில் விவசாயம் பார்த்தாலும், இவரின் முக்கியமான தொழில் ரெடிமிக்ஸ் காண்ராக்ட். 1990-ம் ஆண்டு தி.மு.க உறுப்பினரானவர்,2002-ம் ஆண்டு கிளை செயலாளர், 2006-2011-ம் ஆண்டு வரை துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு துணைத்தலைவராக பதவி வகித்தார்.
2011 உள்ளாட்சி தேர்தலில் துரிஞ்சாபுரம் சேர்மன் பதவியை பிடிக்க... போராடி தோற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த ஸ்ரீதருக்கு எதிராக எ.வா. வேலுவால் வளர்க்கப்பட்டவர். வயது அடிப்படையில் இளைஞர் அணி அமைப்பாளர் பதவியை ஒதுக்கியபோது வேலுவின் ஆசியோடு அந்தப் பதவியை தன்வசப்படுத்திக்கொண்டார்.
சி.என்.அண்ணாதுரை பி.காம் பட்டதாரி. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகே இருக்கும் தேவனாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது, திருவண்ணாமலையில் உள்ள தென்றல் நகரில் வசித்து வருகிறார்.
தந்தை நடராஜன்,துரிஞ்சாபுரம் ஒன்றிய தி,மு.க முன்னாள் செயலாளராக இருந்தவர். தாயார் சரோஜா. மனைவி தீபா பல்மருத்துவராக இருக்கிறார். பிரஜித்,உதயா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்தக் கிராமத்தில் விவசாயம் பார்த்தாலும், இவரின் முக்கியமான தொழில் ரெடிமிக்ஸ் காண்ராக்ட். 1990-ம் ஆண்டு தி.மு.க உறுப்பினரானவர்,2002-ம் ஆண்டு கிளை செயலாளர், 2006-2011-ம் ஆண்டு வரை துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு துணைத்தலைவராக பதவி வகித்தார்.
2011 உள்ளாட்சி தேர்தலில் துரிஞ்சாபுரம் சேர்மன் பதவியை பிடிக்க... போராடி தோற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த ஸ்ரீதருக்கு எதிராக எ.வா. வேலுவால் வளர்க்கப்பட்டவர். வயது அடிப்படையில் இளைஞர் அணி அமைப்பாளர் பதவியை ஒதுக்கியபோது வேலுவின் ஆசியோடு அந்தப் பதவியை தன்வசப்படுத்திக்கொண்டார்.
10. ஆர்.சிவானந்தம் (தி.மு.க.) - ஆரணி
ஆர்.சிவானந்தம் 1948-ம் ஆண்டு பிறந்தவர். எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர். தந்தை ரேணுகவுண்டர், தாயார் சின்னக்கண்ணு அம்மாள். மனைவி எஸ்.செல்வராணி. லோகேஷ், .பாபு என்னும் 2 மகன்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், அரிசி ஆலை, பஸ் அதிபராகவும் உள்ளார். சொந்த ஊர் வேலூர் மாவட்டம் கத்தியவாடி. தற்போது ஆரணி வடக்கு மாடவீதியில் வசிக்கிறார். 1980-ல் தி.மு.க. ஆரணி நகர பொருளாளராகவும், 1984-ல் தி.மு.க. ஆரணி நகர செயலாளராகவும் பதவி வகித்தார்.
1984-ல் நடைபெற்ற சட்டசபை பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆரணி தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளராக தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
2006-ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்
ஆர்.சிவானந்தம் 1948-ம் ஆண்டு பிறந்தவர். எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர். தந்தை ரேணுகவுண்டர், தாயார் சின்னக்கண்ணு அம்மாள். மனைவி எஸ்.செல்வராணி. லோகேஷ், .பாபு என்னும் 2 மகன்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், அரிசி ஆலை, பஸ் அதிபராகவும் உள்ளார். சொந்த ஊர் வேலூர் மாவட்டம் கத்தியவாடி. தற்போது ஆரணி வடக்கு மாடவீதியில் வசிக்கிறார். 1980-ல் தி.மு.க. ஆரணி நகர பொருளாளராகவும், 1984-ல் தி.மு.க. ஆரணி நகர செயலாளராகவும் பதவி வகித்தார்.
1984-ல் நடைபெற்ற சட்டசபை பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆரணி தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளராக தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
2006-ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|