புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_m10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_m10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_m10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_m10ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைக் குழந்தைகளுக்காக இலவச மாலை நேர வகுப்புகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 03, 2014 9:58 pm

அடிப்படை வசதிகூட இல்லாத குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக அளிக்கிறது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்.

மாணவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லையென்றால், மாணவர்களைத் தேடி பள்ளிகள் செல்ல வேண்டும்’ என்கிற தாரக மந்திரத்தின்கீழ் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்புகளை நடத்துகிறது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம். 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிகளுக்கென சொந்தமாக இடம் இல்லை. தனிக் கட்டடம் இல்லை. கிராமங்களிலுள்ள சமுதாயக் கூடங்கள், கோயில்கள், மரத்தடிகளிலேயே பெரும்பாலான பள்ளிகள் நடக்கின்றன.

“காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்துடன் இந்த இலவசவகுப்புகளை நடத்தி வருகிறோம். ஒரு சில கிராமங்களில் அரசுப் பள்ளிகள் உள்ளன. ஒரு சில கிராமங்களில் பள்ளிகளே இல்லாத நிலையும் உள்ளது. இக்கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் காலையில் வேலைக்குச் சென்று விடுவார்கள் அல்லது பெற்றோருக்கு உதவியாக இருப்பார்கள். இவர்களால் வழக்கமான பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது சாத்தியமில்லாததாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் மூன்று அல்லது நான்காம் வகுப்புடன் படிப்பை இடையில் நிறுத்தியிருப்பார்கள்.

இக்குழந்தைகளுக்கு மாலை 5.30-லிருந்து இரவு 8.30 மணி வகுப்புகளை நடத்தி வருகிறோம். காலையில் பள்ளிக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் கூட மாலையில் இந்த வகுப்புகளுக்கு வந்து பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.இந்த வகுப்புகளுக்குத் தேவையான கரும்பலகை, மாணவர்கள் அமர்ந்து படிக்க பாய்கள், புத்தகங்கள் போன்றவற்றை நாங்கள் வழங்குகிறோம். அந்த கிராமத்திலிருக்கும் படித்த பெண்களையே இப்பள்ளியின் ஆசிரியர்களாக நியமித்திருக்கிறோம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்த்து மொத்தம் 580 இடங்களில் உள்ள எங்களது பள்ளிகளில் 22 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய் செலவாகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் செலவுகளைச் சமாளிக்கிறோம்” என்கிறார் சங்கத்தின் செயல் இயக்குநர் கிருஷ்ணமாச்சாரி.

“இந்த வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று ஐந்து வகையான பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். அத்துடன் பண்பாட்டுக் கல்வியையும் பயிற்றுவிக்கிறோம். மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் ஸ்லோகம் சொல்ல வேண்டும். நம் பண்டைய இதிகாசங்கள், பாரதப் பண்பாடு, கயலாசாரம் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கிறோம். இங்கு படிக்கும் மாணவர்கள் தவறின்றிப் படிக்கவும், எழுதவும் பயிற்சியளிக்கிறோம். ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றுடன், சமூகத்தில் கலந்து பழகுவதற்குத் தேவையான பழக்கவழக்கங்களையும் கற்பிக்கிறோம். இதனால், மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட இங்கு படிக்கும் மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடையவர்களாய், தைரியமானவர்களாய் இருக்கிறார்கள்” என்று பெருமிதப்படுகிறார் அவர்.

“கிராமப்புறங்களில் உள்ள படித்த பெண்களின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கிறோம். பயிற்சி பெற்ற அப்பெண்களை ஆசிரியர்களாக நியமித்த பிறகு, அவர்களின் செயல்பாடுகள் பற்றியும், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை பற்றியும் இந்த ஆலோசகர்கள் அவ்வவ்போது ஆராய்கிறார்கள். ஆசிரியர்களின் செயல்பாடு திருப்தியளிக்காத பட்சத்தில், வேறு ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். மாணவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து ஆசிரியர்கள் அறிக்கை அளிக்கிறார்கள்” என்று விளக்குகிறார் திட்ட மேலாளர் ஜனார்த்தனன்.

“மாணவர்களின் நலனில் தனிப்பட்ட முறையில் அக்கறையும், கற்பிப்பதில் அதீத ஈடுபாடும் கொண்ட ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், இங்கு படிக்கும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள். வேறு எந்தப் பள்ளியிலும் இதுபோல நீங்கள் பார்க்க முடியாது.

எங்களின் கல்விப் பணியை மேலும் சில மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அத்துடன் 8 முதல் 10 வகுப்பு வரை படித்துவிட்டு, படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மின் சாதனங்களைப் பழுது பார்த்தல், தச்சு வேலை, பிளம்பிங் போன்ற துறைகளில் அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்கிற கிருஷ்ணமாச்சாரி, தங்களது சங்கம் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான பரிசை, தமிழக ஆளுநரிமிருந்து பெற்றது குறித்து பெருமையுடன் குறிப்பிடுகிறார். (ஜி. மீனாட்சி/புதியதலைமுறை)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 11:04 pm

சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்திற்குப் பாராட்டுக்கள்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக