புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல் புதிது தேடுவோம் வாருங்கள்...
Page 1 of 1 •
நமக்கு எப்போதும் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. எல்லோரிடமும் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடிவதில்லை. தாய் மொழியில் சொல்லுவதில் தனிச் சுகம் உண்டு. ""காணி நிலம் வேண்டும்'' என்று கேட்ட பாரதியார், ""தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்'' என்றும் சொல்லி இருக்கிறார். சொல் வேண்டும்... வேறொரு சொல்லால் வீழ்த்தமுடியாத சொல் வேண்டும். சொல் சண்டை போடும், வெற்றி பெறும்.
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''
என்ற வள்ளுவருக்குக் கிடைத்ததுபோல் வெல்லும் சொல் வேண்டும். வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. மொழியையும் மாற்றிக்கொண்டு போகிறது. மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மொழிகள் கால ஓட்டத்தில் தங்கிப்போய்விடுகின்றன. தங்கிப்போன தம் மொழிகளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே உடன் வருகிற மொழியை எடுத்துக்கொண்டு வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், உடன் இருக்கும் தாய் மொழியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தேவையற்ற போலி காரணங்களைக் கற்பித்துக்கொண்டு, பயணிக்கும் சமுதாயம் உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிப் போகும். ஏனெனில், உலக வல்லரசு நாடுகள் எதுவும் தாய்மொழியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தாம் மட்டும் வளர்ந்துவிடவில்லை.
வாழ்க்கை முறைக்கேற்ப வளர்ந்து வந்திருக்கும் மொழிகளுள் தமிழும் ஒன்று. இன்றைய அதிரடி வாழ்க்கை மாற்றங்களுக்கும் ஈடுகொடுக்கும் சொல்வளமும் சொல்லாக்க வளமும் இப்போதும் தமிழில் வற்றிப்போய்விடவில்லை. பிற மொழிகளுக்குச் சொற்களைக் கொடுத்ததைப் போலவே இயலாதபோது தமிழும் கடன் வாங்கி இருக்கிறது. பின்னால் வந்தவர்கள் கடனில் வாழ விரும்பாமல் தம் காலில் நிற்க முயன்றார்கள்.
இப்போதும் வாழ்க்கையில் அவ்வப்போது பிறமொழிச் சொற்கள் வந்து விழுகின்றன. தன் மொழியில் சொல் இருந்தும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்தும் மனநிலை உடையவர்களை விட்டுவிடலாம். தன் மொழிச் சொல்லைப் பயன்படுத்த விரும்புகிறவர்களுக்குத் தமிழில் சொல் இல்லை என்ற குறை இருக்கக்கூடாது. எனவே, வந்துவிழும் பிறமொழிச் சொற்களை வாசலிலேயே தடுத்து நிறுத்த அவற்றுக்கு உரிய சொற்களைக் கண்டறியவும் உருவாக்கவும் உதவியாகத் தினமணியின் தேடல் தமிழ்மணியில் தொடர்கிறது. தேடுவோம் வாருங்கள்... (dinamani) முனைவர் ம. இராசேந்திரன்
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''
என்ற வள்ளுவருக்குக் கிடைத்ததுபோல் வெல்லும் சொல் வேண்டும். வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. மொழியையும் மாற்றிக்கொண்டு போகிறது. மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மொழிகள் கால ஓட்டத்தில் தங்கிப்போய்விடுகின்றன. தங்கிப்போன தம் மொழிகளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே உடன் வருகிற மொழியை எடுத்துக்கொண்டு வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், உடன் இருக்கும் தாய் மொழியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தேவையற்ற போலி காரணங்களைக் கற்பித்துக்கொண்டு, பயணிக்கும் சமுதாயம் உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிப் போகும். ஏனெனில், உலக வல்லரசு நாடுகள் எதுவும் தாய்மொழியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தாம் மட்டும் வளர்ந்துவிடவில்லை.
வாழ்க்கை முறைக்கேற்ப வளர்ந்து வந்திருக்கும் மொழிகளுள் தமிழும் ஒன்று. இன்றைய அதிரடி வாழ்க்கை மாற்றங்களுக்கும் ஈடுகொடுக்கும் சொல்வளமும் சொல்லாக்க வளமும் இப்போதும் தமிழில் வற்றிப்போய்விடவில்லை. பிற மொழிகளுக்குச் சொற்களைக் கொடுத்ததைப் போலவே இயலாதபோது தமிழும் கடன் வாங்கி இருக்கிறது. பின்னால் வந்தவர்கள் கடனில் வாழ விரும்பாமல் தம் காலில் நிற்க முயன்றார்கள்.
இப்போதும் வாழ்க்கையில் அவ்வப்போது பிறமொழிச் சொற்கள் வந்து விழுகின்றன. தன் மொழியில் சொல் இருந்தும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்தும் மனநிலை உடையவர்களை விட்டுவிடலாம். தன் மொழிச் சொல்லைப் பயன்படுத்த விரும்புகிறவர்களுக்குத் தமிழில் சொல் இல்லை என்ற குறை இருக்கக்கூடாது. எனவே, வந்துவிழும் பிறமொழிச் சொற்களை வாசலிலேயே தடுத்து நிறுத்த அவற்றுக்கு உரிய சொற்களைக் கண்டறியவும் உருவாக்கவும் உதவியாகத் தினமணியின் தேடல் தமிழ்மணியில் தொடர்கிறது. தேடுவோம் வாருங்கள்... (dinamani) முனைவர் ம. இராசேந்திரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
முனைவர் ம. இராசேந்திரன்
தினமணி' ஆசிரியர் ஒரு நாள் இரவு 10 மணிக்குத் தொலைபேசியில் கேட்டார். Whistle Blower என்பது குறித்துத் தேடத் தொடங்கினேன்.
அரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் "விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்று சொல்ல முடியாதென்று தெரியவந்தது. சமூகப் பொறுப்புணர்வோடு அநீதிகளை வெளிப்படுத்துகிறவர்களை விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று சொல்ல முடியாது.
பணியாற்றும் நிறுவனங்களின் உள்ளே நடக்கும் தவறுகளை வெளிப்படுத்துகிறவர்கள் - பார்வையில் படும் அநீதிகளை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறவர்கள். ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் ஊழல், கள்ளச்சாராயம், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகள், ஏமாற்றும் சீட்டுக் கம்பெனிகள், அரசின் ஊழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களுக்கும் உரிய அமைப்புகளுக்கும் அம்பலப்படுத்துகிறவர்கள்தாம் Whistle Blowers.
World net daily இதற்கென்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்துகிறது. அமெரிக்காவில் உள்நாட்டு வருவாய்த் துறையில் இதற்கென்று ஒரு கிளை இருக்கிறது. அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள் பற்றிய தகவல்களைத் தருகிறவர்களுக்கு ஊக்கத் தொகையை அமெரிக்கா வழங்குகிறது. இப்படி Whistle Blowers மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வசூலித்த வரி ஏய்ப்புத் தொகை மட்டும் 2008-இல் 65 பில்லியன் டாலராம். அதாவது 6500 கோடி லாடர்கள். மூன்று லட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய்கள்!
உலகம் முழுதும் ஏமாற்றுகிறவர்களும் மக்கள் நலத்திற்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இருப்பதைப் போலவே வெளிப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றுகிறவர்களும் அமைப்புகளும் இப்படி வெளிப்படுத்துகிறவர்களை விட்டு வைப்பதில்லை. பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் தொடங்கி வேலைக்கு வேட்டு வைப்பது வரை நடக்கின்றன. தனிநபர் எனில் அடி தடி தொடங்கி ஆளைக் காலி செய்யும் அளவுக்குப் போகிறார்கள்.
இவற்றிலிருந்து பாதுகாப்பளிக்க, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் இருக்கிறது. இந்தியாவிலும் நாடாளுமன்றத்தால் விசில் ப்ளோயர்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் விளையாட்டு வீரர்களைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும் நடுவர்கள் விசில் ஊதுவார்கள். சட்ட விதிமுறைகளை மீறி, சமூக அநீதிகளைச் செய்கிறவர்களை அம்பலப்படுத்துகிறவர்களைக் காவல் துறைக்கு உளவு சொல்லும் தகவலாளிகள் என்று சொல்ல முடிவதில்லை. எனவே, சமூகப் பொறுப்புணர்வோடு எடுத்துரைக்கும் இவர்களை "இன்பார்மர்ஸ்' (informers) என்று சொல்லக்கூடாதென்று ரால்ப் நாடர் 1970களில் குறிப்பிட்டார்.
இன்று விசில் ப்ளோயர்ஸ் பாதுகாப்பு அமைப்புகளும் உதவும் அமைப்புகளும் உலகம் முழுதும் உருவாகத் தொடங்கியுள்ளன.
அநீதிகளில் நாம் பங்கேற்காமல் இருக்கலாம். அதற்காக அநீதிகளைக் கண்டும் அமைதி காக்க முடிவதில்லை. அநீதியை எதிர்த்துப் போராட முடியாமல் இருக்கலாம். ஆனால், தடுத்து நிறுத்த உரியவர்களிடமும் அமைப்புகளிடமும் எடுத்துரைக்க வேண்டியது சமூகக் கடமையாக இருக்கிறது. தடுக்காதபோது அரசுகளையும் அமைப்புகளையும் இடித்துரைக்க வேண்டிய தேவை எழுகிறது.
இதைத்தான் செய்கிறார்கள் விசில் ப்ளோயர்ஸ். இவர்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம்? "தினமணி' வாசகர்கள் தெரிவித்துள்ள சொல்லாக்கங்கள் சில.
கா.மு. சிதம்பரம் - கம்பலை மாக்கள் (கண்ணகிக்குக் கொலைப்பட்ட கோவலனைக் காட்டியவர்கள்)
வெ. ஆனந்தகிருஷ்ணன், முனைவர் பெ. துரை - கீழ்க்கை ஒலி எழுப்புகிறவர்கள்.
செல்வம், ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - உண்மை விளம்பி
முனைவர் க. அன்பழகன் - கலகமூட்டி
செ. நாராயணசாமி - கிண்ணாரக்காரன்
இரா.பொ. வீரையன் - குற்றம் சாட்டியவர்
கோ. மன்றவாணன் - வேவுரைஞர்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - தம்பட்டக்காரன்
என்.ஆர். ஸத்யமூர்த்தி - பறைஞர்
"விசில் ப்ளோயர்ஸ்' - அநீதியை வெளிப்படுத்த எடுத்துரைப்பவர்கள் மட்டுமில்லை; தடுக்காதபோது இடித்துரைப்பவர்களும்கூட. தமிழ் மரபில் அரசர்கள் தவறு செய்கிறபோது புலவர்கள் எடுத்துரைப்பதோடும் இடித்தும் உரைத்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரும் "இடிப்பாரை இல்லாத' மன்னன் கெடுப்பவர்கள் இல்லாமலும் கெடுவான் என்று சொல்கிறார். எனவே,விசில் ப்ளோயர்ஸ் என்பதற்கு வள்ளுவத்திலிருந்தே சொல் எடுக்கலாம். "இடிப்பார்' என்பதை "இடித்துரையாளர்' என்று ஆக்கிக் கொள்ளலாம். சமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுத்துரைப்பவர்களையும் இடித்துரைப்பவர்களையும் "இடித்துரையாளர்' என்று பெருமை சேர்த்துக் கூறலாமே!
விசில் ப்ளோயர்ஸ் (whistle Blower) - இடித்துரைப்பாளர்.
தினமணி' ஆசிரியர் ஒரு நாள் இரவு 10 மணிக்குத் தொலைபேசியில் கேட்டார். Whistle Blower என்பது குறித்துத் தேடத் தொடங்கினேன்.
அரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் "விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்று சொல்ல முடியாதென்று தெரியவந்தது. சமூகப் பொறுப்புணர்வோடு அநீதிகளை வெளிப்படுத்துகிறவர்களை விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று சொல்ல முடியாது.
பணியாற்றும் நிறுவனங்களின் உள்ளே நடக்கும் தவறுகளை வெளிப்படுத்துகிறவர்கள் - பார்வையில் படும் அநீதிகளை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறவர்கள். ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் ஊழல், கள்ளச்சாராயம், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகள், ஏமாற்றும் சீட்டுக் கம்பெனிகள், அரசின் ஊழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களுக்கும் உரிய அமைப்புகளுக்கும் அம்பலப்படுத்துகிறவர்கள்தாம் Whistle Blowers.
World net daily இதற்கென்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்துகிறது. அமெரிக்காவில் உள்நாட்டு வருவாய்த் துறையில் இதற்கென்று ஒரு கிளை இருக்கிறது. அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள் பற்றிய தகவல்களைத் தருகிறவர்களுக்கு ஊக்கத் தொகையை அமெரிக்கா வழங்குகிறது. இப்படி Whistle Blowers மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வசூலித்த வரி ஏய்ப்புத் தொகை மட்டும் 2008-இல் 65 பில்லியன் டாலராம். அதாவது 6500 கோடி லாடர்கள். மூன்று லட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய்கள்!
உலகம் முழுதும் ஏமாற்றுகிறவர்களும் மக்கள் நலத்திற்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இருப்பதைப் போலவே வெளிப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றுகிறவர்களும் அமைப்புகளும் இப்படி வெளிப்படுத்துகிறவர்களை விட்டு வைப்பதில்லை. பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் தொடங்கி வேலைக்கு வேட்டு வைப்பது வரை நடக்கின்றன. தனிநபர் எனில் அடி தடி தொடங்கி ஆளைக் காலி செய்யும் அளவுக்குப் போகிறார்கள்.
இவற்றிலிருந்து பாதுகாப்பளிக்க, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் இருக்கிறது. இந்தியாவிலும் நாடாளுமன்றத்தால் விசில் ப்ளோயர்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் விளையாட்டு வீரர்களைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும் நடுவர்கள் விசில் ஊதுவார்கள். சட்ட விதிமுறைகளை மீறி, சமூக அநீதிகளைச் செய்கிறவர்களை அம்பலப்படுத்துகிறவர்களைக் காவல் துறைக்கு உளவு சொல்லும் தகவலாளிகள் என்று சொல்ல முடிவதில்லை. எனவே, சமூகப் பொறுப்புணர்வோடு எடுத்துரைக்கும் இவர்களை "இன்பார்மர்ஸ்' (informers) என்று சொல்லக்கூடாதென்று ரால்ப் நாடர் 1970களில் குறிப்பிட்டார்.
இன்று விசில் ப்ளோயர்ஸ் பாதுகாப்பு அமைப்புகளும் உதவும் அமைப்புகளும் உலகம் முழுதும் உருவாகத் தொடங்கியுள்ளன.
அநீதிகளில் நாம் பங்கேற்காமல் இருக்கலாம். அதற்காக அநீதிகளைக் கண்டும் அமைதி காக்க முடிவதில்லை. அநீதியை எதிர்த்துப் போராட முடியாமல் இருக்கலாம். ஆனால், தடுத்து நிறுத்த உரியவர்களிடமும் அமைப்புகளிடமும் எடுத்துரைக்க வேண்டியது சமூகக் கடமையாக இருக்கிறது. தடுக்காதபோது அரசுகளையும் அமைப்புகளையும் இடித்துரைக்க வேண்டிய தேவை எழுகிறது.
இதைத்தான் செய்கிறார்கள் விசில் ப்ளோயர்ஸ். இவர்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம்? "தினமணி' வாசகர்கள் தெரிவித்துள்ள சொல்லாக்கங்கள் சில.
கா.மு. சிதம்பரம் - கம்பலை மாக்கள் (கண்ணகிக்குக் கொலைப்பட்ட கோவலனைக் காட்டியவர்கள்)
வெ. ஆனந்தகிருஷ்ணன், முனைவர் பெ. துரை - கீழ்க்கை ஒலி எழுப்புகிறவர்கள்.
செல்வம், ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - உண்மை விளம்பி
முனைவர் க. அன்பழகன் - கலகமூட்டி
செ. நாராயணசாமி - கிண்ணாரக்காரன்
இரா.பொ. வீரையன் - குற்றம் சாட்டியவர்
கோ. மன்றவாணன் - வேவுரைஞர்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - தம்பட்டக்காரன்
என்.ஆர். ஸத்யமூர்த்தி - பறைஞர்
"விசில் ப்ளோயர்ஸ்' - அநீதியை வெளிப்படுத்த எடுத்துரைப்பவர்கள் மட்டுமில்லை; தடுக்காதபோது இடித்துரைப்பவர்களும்கூட. தமிழ் மரபில் அரசர்கள் தவறு செய்கிறபோது புலவர்கள் எடுத்துரைப்பதோடும் இடித்தும் உரைத்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரும் "இடிப்பாரை இல்லாத' மன்னன் கெடுப்பவர்கள் இல்லாமலும் கெடுவான் என்று சொல்கிறார். எனவே,விசில் ப்ளோயர்ஸ் என்பதற்கு வள்ளுவத்திலிருந்தே சொல் எடுக்கலாம். "இடிப்பார்' என்பதை "இடித்துரையாளர்' என்று ஆக்கிக் கொள்ளலாம். சமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுத்துரைப்பவர்களையும் இடித்துரைப்பவர்களையும் "இடித்துரையாளர்' என்று பெருமை சேர்த்துக் கூறலாமே!
விசில் ப்ளோயர்ஸ் (whistle Blower) - இடித்துரைப்பாளர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சொல் புதிது - 2
இந்தியா விடுதலை அடையும் முன், 1933-இல் உருவாக்கப்பட்டது ஐ.பி. எனும் உளவு அமைப்பு. விடுதலைக்குப் பின் 1962-இல் நடந்த சீனப் படையெடுப்பிலும் 1965-இல் நடந்த பாகிஸ்தான் போரிலும் முறையான உளவுப் பிரிவு இல்லாமல் போனதால் அதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது. வெளிநாட்டு விவரங்களைத் தெரிந்துகொண்டு செயற்படத் தனி உளவு அமைப்பு ஒன்றை (Research and Analysis Wing) 1968-இல் உருவாக்கிக் கொண்டது.
உலக நாடுகளின் அரசியல் நிலைக்கேற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் உள்நாட்டுத் தீவிர வாதத்தைத் தடுக்கவும் இராணுவ நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் "ரா' செயற்படத் தொடங்கியது. இந்தியப் பிரதமரிடம் மட்டுமே நேரில் தொடர்புகொண்டு விவாதிக்கும் அதிகாரம் பெற்றது. இந்திய நாடாளுமன்றத்திற்குக் கூடப் பதிலளிக்கும் அவசியம் அற்றது. தகவல் அறியும் உரிமையில் விதி விலக்கு என்று "ரா' அமைப்புக்கு ஏகப்பட்ட தனிச் சலுகைகள்.
"ரா' கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள அமைப்பு. இப் பணியில் அமர்த்தப்படுபவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணி அமைப்பு, உள்ளூர் காவல் நிலையம், உள்ளூர் புலனாய்வுப்பிரிவு ஆகிய மூன்று நிலைகளில் விசாரிக்கப்பட்ட பிறகே பணியமர்த்தம் செய்யப்படுவார்கள்.
வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவர், திவான் சந்த் மாலிக் எனும் பெயரில் இந்தியக் குடிமகன் என்று பொய் சொல்லி, "ரா' அமைப்பில் 1999-இல் சேர்ந்திருக்கிறார். 2005 வரை ஆறாண்டுக் காலம் இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் இருந்திருக்கிறார். சந்தேகப்பட்டு நடவடிக்கை தொடங்கும் முன் முக்கியமான தகவல்களோடு தலைமறைவாகியிருக்கிறார். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.
கே.வி.உண்ணிகிருஷ்ணன் கதை வேறு. தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கே.வி. உண்ணிகிருஷ்ணன் விமானப் பணிப்பெண்ணின் காதலில் விழுந்தார். விமானப் பணிப்பெண்ணோ அமெரிக்க உளவாளி. அவர் வழியாக இந்தியாவுக்குத் துரோகம் செய்தார். உளவுப் பிரிவில் பணிபுரிகிறவர்களை உளவு பார்ப்பதற்கென்றே உள்ள இன்னொரு உளவுப் பிரிவு இதைக் கண்டு பிடித்தது. கே.வி. உண்ணிகிருஷ்ணன் திகார் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார். இந்தியக் காவல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இப்படி உலகம் முழுதும் தாய் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் பணியாற்ற, சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் சிலர், இன்னொரு நாட்டுக்குத் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஈர்ன்க்ஷப்ங் அஞ்ங்ய்ற் என்று சொல்கிறார்கள். இவர்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம்?
Double Agent என்ற சொல்லுக்கு வாசகர்கள் பின் வருமாறு தெரிவித்துள்ளனர் :
செ.நாராயணசாமி - இருதலை ஒற்றர்
முனைவர் க.அன்பழகன் - இருமுக ஒற்றர்
செல்வம் ரத்தினசாமி - இரட்டை உளவாளி
வெ.ஆனந்தகிருஷ்ணன் - போலி தூதன்
டி.வி.கிருஷ்ணசாமி - இருபக்க வித்தகர்
கோ. மன்றவாணன் - இருபுற முகவர்
என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, இரா.பொ.வீரையன் - இரட்டை ஒற்றர்
கா.மு சிதம்பரம் - முடத்தெங்கு ஒற்றன்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - இருமை உளவாளி
மேற்கூறப்பட்டுள்ள சொற்களில் "டபுள் ஏஜெண்ட்' என்பவரின் வஞ்சனை கலந்த துரோகம் வெளிப்படவில்லை. தமிழ் வழக்கில் துரோகம் வேறு, இரண்டகம் வேறு. உண்ட வீட்டிற்குச் செய்யும் துரோகம், இரண்டகம் என்று கருதப்படும். அதனால்தான் "உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே' என்று சொல்கிறார்கள். டபுள் ஏஜெண்ட், தாய் நாட்டிற்குச் செய்யும் துரோகம், இரண்டகமாகும். எனவே, அவர்களை இரண்டக உளவாளி என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
Double Agent - இரண்டக உளவாளி
இந்தியா விடுதலை அடையும் முன், 1933-இல் உருவாக்கப்பட்டது ஐ.பி. எனும் உளவு அமைப்பு. விடுதலைக்குப் பின் 1962-இல் நடந்த சீனப் படையெடுப்பிலும் 1965-இல் நடந்த பாகிஸ்தான் போரிலும் முறையான உளவுப் பிரிவு இல்லாமல் போனதால் அதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது. வெளிநாட்டு விவரங்களைத் தெரிந்துகொண்டு செயற்படத் தனி உளவு அமைப்பு ஒன்றை (Research and Analysis Wing) 1968-இல் உருவாக்கிக் கொண்டது.
உலக நாடுகளின் அரசியல் நிலைக்கேற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கவும் உள்நாட்டுத் தீவிர வாதத்தைத் தடுக்கவும் இராணுவ நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் "ரா' செயற்படத் தொடங்கியது. இந்தியப் பிரதமரிடம் மட்டுமே நேரில் தொடர்புகொண்டு விவாதிக்கும் அதிகாரம் பெற்றது. இந்திய நாடாளுமன்றத்திற்குக் கூடப் பதிலளிக்கும் அவசியம் அற்றது. தகவல் அறியும் உரிமையில் விதி விலக்கு என்று "ரா' அமைப்புக்கு ஏகப்பட்ட தனிச் சலுகைகள்.
"ரா' கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள அமைப்பு. இப் பணியில் அமர்த்தப்படுபவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் பணி அமைப்பு, உள்ளூர் காவல் நிலையம், உள்ளூர் புலனாய்வுப்பிரிவு ஆகிய மூன்று நிலைகளில் விசாரிக்கப்பட்ட பிறகே பணியமர்த்தம் செய்யப்படுவார்கள்.
வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவர், திவான் சந்த் மாலிக் எனும் பெயரில் இந்தியக் குடிமகன் என்று பொய் சொல்லி, "ரா' அமைப்பில் 1999-இல் சேர்ந்திருக்கிறார். 2005 வரை ஆறாண்டுக் காலம் இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் இருந்திருக்கிறார். சந்தேகப்பட்டு நடவடிக்கை தொடங்கும் முன் முக்கியமான தகவல்களோடு தலைமறைவாகியிருக்கிறார். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.
கே.வி.உண்ணிகிருஷ்ணன் கதை வேறு. தமிழ் ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கே.வி. உண்ணிகிருஷ்ணன் விமானப் பணிப்பெண்ணின் காதலில் விழுந்தார். விமானப் பணிப்பெண்ணோ அமெரிக்க உளவாளி. அவர் வழியாக இந்தியாவுக்குத் துரோகம் செய்தார். உளவுப் பிரிவில் பணிபுரிகிறவர்களை உளவு பார்ப்பதற்கென்றே உள்ள இன்னொரு உளவுப் பிரிவு இதைக் கண்டு பிடித்தது. கே.வி. உண்ணிகிருஷ்ணன் திகார் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார். இந்தியக் காவல் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இப்படி உலகம் முழுதும் தாய் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் பணியாற்ற, சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் சிலர், இன்னொரு நாட்டுக்குத் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஈர்ன்க்ஷப்ங் அஞ்ங்ய்ற் என்று சொல்கிறார்கள். இவர்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம்?
Double Agent என்ற சொல்லுக்கு வாசகர்கள் பின் வருமாறு தெரிவித்துள்ளனர் :
செ.நாராயணசாமி - இருதலை ஒற்றர்
முனைவர் க.அன்பழகன் - இருமுக ஒற்றர்
செல்வம் ரத்தினசாமி - இரட்டை உளவாளி
வெ.ஆனந்தகிருஷ்ணன் - போலி தூதன்
டி.வி.கிருஷ்ணசாமி - இருபக்க வித்தகர்
கோ. மன்றவாணன் - இருபுற முகவர்
என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, இரா.பொ.வீரையன் - இரட்டை ஒற்றர்
கா.மு சிதம்பரம் - முடத்தெங்கு ஒற்றன்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - இருமை உளவாளி
மேற்கூறப்பட்டுள்ள சொற்களில் "டபுள் ஏஜெண்ட்' என்பவரின் வஞ்சனை கலந்த துரோகம் வெளிப்படவில்லை. தமிழ் வழக்கில் துரோகம் வேறு, இரண்டகம் வேறு. உண்ட வீட்டிற்குச் செய்யும் துரோகம், இரண்டகம் என்று கருதப்படும். அதனால்தான் "உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே' என்று சொல்கிறார்கள். டபுள் ஏஜெண்ட், தாய் நாட்டிற்குச் செய்யும் துரோகம், இரண்டகமாகும். எனவே, அவர்களை இரண்டக உளவாளி என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
Double Agent - இரண்டக உளவாளி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சொல் புதிது - 3
திருக்குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களையும் ஒப்பிட்டு முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் முனைவர் பிருந்தா கோவையிலிருந்து கேட்டார். ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
அமெரிக்காவில் படிக்கும் நண்பரின் மகனுக்கு மொசில்லா இணையதள நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் கிடைத்துள்ளதாம். அந்த நிறுவனம், அதில் சேருகிறவர்கள் அவர்கள் தாய் மொழியில் எழுதப்பட்டப் பதிவைச் சட்டையில் பொருத்திக்கொண்டு பணிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
படிப்புக்கும் வேலைக்குமான இடைவெளியைக் குறைக்கவும் படிப்பதைச் செயற்படுத்திப் பார்க்கவும் படிக்கிற காலத்திலேயே மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் உலகம் முழுதும் பெரும்பாலான நாடுகளில் இந்த ஏற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது.
சில நாடுகள் பள்ளி மாணவர்களுக்கே இந்த வாய்ப்பினை வழங்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாம் ஆண்டு முடித்ததும்
வருகிற விடுமுறைக் காலத்தில் இந்த வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
ஊதியத்துடனும் ஊதியம் இல்லாமலும் நிறுவனங்கள் வாய்ப்புகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் தங்கள் நிறுவன மேம்பாட்டிற்கான ஆய்வுகளை இவர்கள் மூலம் நடத்திக் கொள்கின்றன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் திட்டத்திலும் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை அளிக்கின்றனர். வணிக நோக்கு இல்லாத அறக்கட்டளை நிறுவனங்களுக்கு மாணவர்களே ஊதியம் இல்லாமல் பணியாற்றி உதவுகின்றனர்.
மாணவர்கள் படிக்கிற காலத்தே பணிச்சூழலுக்கு அறிமுகமாகிற வாய்ப்பு கிடைக்கிறது. இப் பணிக்காலம் இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரையாகும். வாய்ப்பு தரும்
நிறுவனங்களிலேயே பின்னர் அவர்கள் பணிபெறவும் வாய்ப்பு கிட்டலாம்.
ஒரு நாட்டில் படிக்கும் மாணவர் இன்னொரு நாட்டில் இந்த வாய்ப்பினைப் பெறலாம். இன்றைய நிலையில் சீனாவில் இந்த வாய்ப்பினைப் பெறுவதற்குப் போட்டிகள் அதிகமாம். வசதி உள்ளவர்கள் தங்கள் செலவில் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விமானச் செலவு, தங்கும் விடுதி, மடிகணினி உட்பட அனைத்துச் செலவுகளையும் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. வசதியற்றவர்களுக்கு உதவ சில சேவை நிறுவனங்கள் முன் வருகின்றன.
வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வெளிநாட்டு நிறுவனத்திலும் இந்த வாய்ப்பினைப் பெற ஸ்ண்ழ்ற்ன்ஹப் ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் உண்டு. தொலைபேசி, மின்-அஞ்சல், இணையதளம் வழியாகப் பணி செய்யலாம்.
இண்டர்ன்ஷிப் என்பதற்கு வாசகர்களின் தமிழாக்கம்:
இரா.பொ.வீரையன் - பணிமுன் பயிற்சி/பட்டறிவுப் பயிற்சி
என்.ஆர். ஸத்தியமூர்த்தி - இருக்கைப் பயிற்சி
கோ.மன்றவாணன் - பணிப்பழகல்
செல்வம் ரத்தினசாமி, சி. இராமச்சந்திரன் - உள்ளுறைப் பயிற்சி
செ.சத்தியசீலன் - உள்ளிருப்புப் பயிற்சி
வெ.ஆனந்தகிருஷ்ணன் - வேலைவாய்ப்பு
செ.நாராயணசாமி - பணியிடப் பயிற்சி
முனைவர் க.அன்பழகன் - ஈரொப்பு வேலை
டி.வி.கிருஷ்ணசாமி - கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துதல்
பழனி கோ.முத்துமாணிக்கம் - பயிற்சி ஒப்பந்தம்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - தொழிலினப் பணியாளர்
மேற்கூறிய சொற்கள் "இண்டர்ன்ஷிப்' என்பதை முழுதும் உள்வாங்கி வெளிப்படுத்தும் நிலையில் இல்லை. அது பணியில் சேர்ந்து பெறும் பயிற்சி இல்லை; படிக்கும் காலத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் பணி; மாணவராக இருந்துகொண்டே பணிசெய்கிற வாய்ப்பு.
எனவே. இண்டர்ன்ஷிப் என்பதைப் "பணி மாணவர்' என்று சொல்லலாம்.
திருக்குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களையும் ஒப்பிட்டு முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் முனைவர் பிருந்தா கோவையிலிருந்து கேட்டார். ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
அமெரிக்காவில் படிக்கும் நண்பரின் மகனுக்கு மொசில்லா இணையதள நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் கிடைத்துள்ளதாம். அந்த நிறுவனம், அதில் சேருகிறவர்கள் அவர்கள் தாய் மொழியில் எழுதப்பட்டப் பதிவைச் சட்டையில் பொருத்திக்கொண்டு பணிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
படிப்புக்கும் வேலைக்குமான இடைவெளியைக் குறைக்கவும் படிப்பதைச் செயற்படுத்திப் பார்க்கவும் படிக்கிற காலத்திலேயே மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் உலகம் முழுதும் பெரும்பாலான நாடுகளில் இந்த ஏற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது.
சில நாடுகள் பள்ளி மாணவர்களுக்கே இந்த வாய்ப்பினை வழங்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாம் ஆண்டு முடித்ததும்
வருகிற விடுமுறைக் காலத்தில் இந்த வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
ஊதியத்துடனும் ஊதியம் இல்லாமலும் நிறுவனங்கள் வாய்ப்புகளை வழங்குகின்றன. சில நிறுவனங்கள் தங்கள் நிறுவன மேம்பாட்டிற்கான ஆய்வுகளை இவர்கள் மூலம் நடத்திக் கொள்கின்றன. மாணவர்கள் தாங்கள் விரும்பும் திட்டத்திலும் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை அளிக்கின்றனர். வணிக நோக்கு இல்லாத அறக்கட்டளை நிறுவனங்களுக்கு மாணவர்களே ஊதியம் இல்லாமல் பணியாற்றி உதவுகின்றனர்.
மாணவர்கள் படிக்கிற காலத்தே பணிச்சூழலுக்கு அறிமுகமாகிற வாய்ப்பு கிடைக்கிறது. இப் பணிக்காலம் இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரையாகும். வாய்ப்பு தரும்
நிறுவனங்களிலேயே பின்னர் அவர்கள் பணிபெறவும் வாய்ப்பு கிட்டலாம்.
ஒரு நாட்டில் படிக்கும் மாணவர் இன்னொரு நாட்டில் இந்த வாய்ப்பினைப் பெறலாம். இன்றைய நிலையில் சீனாவில் இந்த வாய்ப்பினைப் பெறுவதற்குப் போட்டிகள் அதிகமாம். வசதி உள்ளவர்கள் தங்கள் செலவில் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விமானச் செலவு, தங்கும் விடுதி, மடிகணினி உட்பட அனைத்துச் செலவுகளையும் சில நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. வசதியற்றவர்களுக்கு உதவ சில சேவை நிறுவனங்கள் முன் வருகின்றன.
வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வெளிநாட்டு நிறுவனத்திலும் இந்த வாய்ப்பினைப் பெற ஸ்ண்ழ்ற்ன்ஹப் ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் உண்டு. தொலைபேசி, மின்-அஞ்சல், இணையதளம் வழியாகப் பணி செய்யலாம்.
இண்டர்ன்ஷிப் என்பதற்கு வாசகர்களின் தமிழாக்கம்:
இரா.பொ.வீரையன் - பணிமுன் பயிற்சி/பட்டறிவுப் பயிற்சி
என்.ஆர். ஸத்தியமூர்த்தி - இருக்கைப் பயிற்சி
கோ.மன்றவாணன் - பணிப்பழகல்
செல்வம் ரத்தினசாமி, சி. இராமச்சந்திரன் - உள்ளுறைப் பயிற்சி
செ.சத்தியசீலன் - உள்ளிருப்புப் பயிற்சி
வெ.ஆனந்தகிருஷ்ணன் - வேலைவாய்ப்பு
செ.நாராயணசாமி - பணியிடப் பயிற்சி
முனைவர் க.அன்பழகன் - ஈரொப்பு வேலை
டி.வி.கிருஷ்ணசாமி - கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துதல்
பழனி கோ.முத்துமாணிக்கம் - பயிற்சி ஒப்பந்தம்
முனைவர் பா.ஜம்புலிங்கம் - தொழிலினப் பணியாளர்
மேற்கூறிய சொற்கள் "இண்டர்ன்ஷிப்' என்பதை முழுதும் உள்வாங்கி வெளிப்படுத்தும் நிலையில் இல்லை. அது பணியில் சேர்ந்து பெறும் பயிற்சி இல்லை; படிக்கும் காலத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் பணி; மாணவராக இருந்துகொண்டே பணிசெய்கிற வாய்ப்பு.
எனவே. இண்டர்ன்ஷிப் என்பதைப் "பணி மாணவர்' என்று சொல்லலாம்.
- R.Thiyagarajanபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 22/02/2014
internship என்பது ஒரு மாணவன் தனது கல்வி பயிலும் இறுதி ஆண்டில் பெரும் பணிபயிற்சியாகும் , இது ஆராய்சிக்காகவும் நடக்கும் எனவே இதை "பனி மாணவர் "என்று பெயர் இடுவதை விட "மானவப்பணி " என சொல்லும்போதே மாணவன் தனது படிப்பின் இறுதியாண்டில் உள்ளான் என்பது தன் விளக்க சொல்லாகிவிடும் என்பது தாழ்வான கருத்தாகும் :நன்றி
சொல் புதிது - 4
தேர்தல் நேரம் மேடைகளில் மதச் சார்பற்ற அரசு எனும் முழக்கங்கள். உண்மையிலேயே இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கிறதா?
தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத், மகாவீர் ஜெயந்தி,புத்த பெளர்ணிமா பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடுகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் வாழ்த்துகிறார்கள்! ஹஜ் யாத்திரை, ஜெருசலம் மற்றும் இந்துப் புனிதத் தலங்களுக்குப் பக்தர்கள் சென்று வர அரசு நிதி உதவி செய்கிறது! இவ்வளவுக்குப் பிறகும் இந்தியாவை எப்படி மதச் சார்பற்ற நாடு என்று சொல்கிறார்கள்?
மதச் சார்பற்ற நாடு என்றால், எந்த மதத்தையும் ஆதரிக்காத நாடு என்று பொருளா? எல்லா மதத்தையும் ஆதரிக்கும் நாடு என்று பொருளா? இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் நங்ஸ்ரீன்ப்ஹழ்ண்ள்ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா, நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் நர்ஸ்ரீண்ஹப்ண்ள்ற் நங்ஸ்ரீன்ப்ஹழ் ஈங்ம்ர்ஸ்ரீழ்ஹற்ண்ஸ்ரீ தங்ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ஆக மாறியுள்ளது.
உலகமயமாதல் சூழலில் எந்த ஒரு நாடும் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வாழும் நாடாக இருக்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. அரசியல், பொருளாதார, வணிக ஈடுபாடுகள் பல மதத்தவர்களும் ஒரே நாட்டில் வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்தியா, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்துள்ள நாடு இல்லை என்பதுதான் அரசமைப்புச் சட்டம் அறிவிக்கும் செய்தி. ஆனால், மதச்சார்பற்ற நாடு என்றால் அந்தப் பொருள் வரவில்லை.
மதம் என்பது மக்களின் தனிப்பட்ட ஆன்மிகத் தேடலுக்கான இறைக் கோட்பாடு. அரசு என்பது மக்கள் அனைவருக்குமான இறையாண்மை.
செக்குலரிசம் உயர்ந்த கோட்பாடாகும். அது எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் அடுத்தவர் தலையீடு இல்லாத சுதந்திரம். அது மக்கள் தமக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றி வாழ முழு உரிமை அளிப்பது. ஆட்சியாளரின் மதச் சார்பு, மற்ற மதத்தவர்களிடம் வேற்றுமையைக் காட்ட அனுமதிக்காதது; ஒரு மதத்தின் கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்குமான பொதுச் சட்டம் உருவாக வாய்ப்பளிக்காதது. ஒரு மதத்தின் நெறிகளை மற்றவர்களிடம் திணிக்காதது. பெரும்பான்மை, சிறுபான்மை அடிப்படையில் தலையீடு செய்யாதது. வாய்ப்புகளிலும் உரிமைகளிலும் எல்லா மதத்தினருக்கும் ஒத்த உரிமை வழங்குவது. அவரவர் மதத்தின் வழிபாட்டு முறைகளிலும் சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் குறுக்கீடு செய்யாதது. அரசின் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குமுறையில் அமைய இடம் தராதது. அரசியல் கோட்பாடுகள், பொருளாதாரக் கொள்கைகள், சமுதாய வளர்ச்சியில் பங்கு, அறிவியல், கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் பொதுத் தன்மையைக் காப்பாற்றுவது. பிற மதங்களின் மீது காழ்ப்புணர்வு கொள்ளாதது.
இவ்வாறு பரந்து விரிந்த பொருள் தரும் செக்குலரிசம் என்பதை மதச் சார்பற்ற என்று தமிழில் சொல்லும்போது எந்த மதத்தையும் சாராத என்றும், மதமற்ற என்றும், மதத்தொடர்பற்ற என்றும்தான் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, செக்குலரிசம் என்பதற்கு வேறு சொல் தேவைப்படுகிறது.
"செக்குலரிசம்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் அனுப்பிய தமிழ்ச் சொற்கள் வருமாறு:
கோ. மன்றவாணன், வெ.ஆனந்த கிருஷ்ணன், டி.வி.கிருஷ்ண சாமி, சோலை.கருப்பையா, சி.இராமச்சந்திரன், இரா.பொ. வீரையன், செ.சத்தியசீலன் - சமயச் சார்பின்மை / மதச் சார்பின்மை.
முனைவர் பா. ஜம்புலிங்கம் - இறை மறுப்பு சமூகக் கொள்கை.
முனைவர் க.அன்பழகன் - சமயமில் கோட்பாடு.
கா.மு. சிதம்பரம் - சமய வரைகோள்.
என்.ஆர். ஸத்திய மூர்த்தி - சமயப் பொறை.
எம்.சிவரஞ்சனி, சோ.முத்து மாணிக்கம் - சமயச் சார்பின்மைக் கோட்பாடு.
ஐரோப்பாவில் கிறித்துவ நிறுவனங்கள் அரசின் செயற்பாடுகளில் தலையிட்டமையை எதிர்த்து உருவாகிய கோட்பாடு செக்குலரிசம். 1851-இல் இச்சொல் பிறந்திருக்கிறது. ""யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்பதுதான் செக்குலரிசம்.
தமிழகத்தில் சங்க காலத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது. ஒவ்வொரு திணைக்கும் வெவ்வேறு கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. பிற கடவுள் வழிபாட்டைப் பழித்ததற்கான சான்றுகள் இல்லை. இராசராசன் பெரிய கோயிலைக் கட்டியதோடு புத்த விஹாரைகளுக்கும் நிவந்தங்கள் வழங்கியுள்ளான்.
இந்தியாவில் அக்பர் அரண்மனையில் இந்துக்கள் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். "அனைவருடனும் நேயம்' எனும் கோட்பாட்டைப் பின்பற்ற முனைந்திருக்கிறார்.
அலாவுதின் கில்ஜியின் ஆட்சியில் உலமாப் பெருமக்களின் அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது அனைவருக்கும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதம், அரசின் செயற்பாடுகளில் தலையீடு செய்யக்கூடாது என்பதைப் போலவே அரசும் மத நடவடிக்கைகளில் / நம்பிக்கைகளில் தலையீடு செய்யக்கூடாது என்பதுதான் செக்குலரிசத்தின் உண்மையான கோட்பாடாக இருக்கிறது. இந்தக் கோட்பாட்டைக் கொண்ட அரசு, மதச் சார்பற்ற அரசு என்று அழைக்கப்படுவதை விட மதத் தலையீடற்ற அரசு என்றே அழைக்கப்பட வேண்டும்.
மதம், அரசு இரண்டும் ஒன்றின் நடவடிக்கையில் மற்றொன்று தலையிடாதிருப்பதே செக்குலரிசம். எனவே, செக்குலரிசம் என்பதற்கான தமிழ்ச் சொல் மதத்தலையீடின்மை என்பதாக இருப்பதே சரியானதாக இருக்கும்.
தேர்தல் நேரம் மேடைகளில் மதச் சார்பற்ற அரசு எனும் முழக்கங்கள். உண்மையிலேயே இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கிறதா?
தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத், மகாவீர் ஜெயந்தி,புத்த பெளர்ணிமா பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடுகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் வாழ்த்துகிறார்கள்! ஹஜ் யாத்திரை, ஜெருசலம் மற்றும் இந்துப் புனிதத் தலங்களுக்குப் பக்தர்கள் சென்று வர அரசு நிதி உதவி செய்கிறது! இவ்வளவுக்குப் பிறகும் இந்தியாவை எப்படி மதச் சார்பற்ற நாடு என்று சொல்கிறார்கள்?
மதச் சார்பற்ற நாடு என்றால், எந்த மதத்தையும் ஆதரிக்காத நாடு என்று பொருளா? எல்லா மதத்தையும் ஆதரிக்கும் நாடு என்று பொருளா? இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் நங்ஸ்ரீன்ப்ஹழ்ண்ள்ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா, நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் நர்ஸ்ரீண்ஹப்ண்ள்ற் நங்ஸ்ரீன்ப்ஹழ் ஈங்ம்ர்ஸ்ரீழ்ஹற்ண்ஸ்ரீ தங்ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ஆக மாறியுள்ளது.
உலகமயமாதல் சூழலில் எந்த ஒரு நாடும் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வாழும் நாடாக இருக்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. அரசியல், பொருளாதார, வணிக ஈடுபாடுகள் பல மதத்தவர்களும் ஒரே நாட்டில் வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்தியா, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்துள்ள நாடு இல்லை என்பதுதான் அரசமைப்புச் சட்டம் அறிவிக்கும் செய்தி. ஆனால், மதச்சார்பற்ற நாடு என்றால் அந்தப் பொருள் வரவில்லை.
மதம் என்பது மக்களின் தனிப்பட்ட ஆன்மிகத் தேடலுக்கான இறைக் கோட்பாடு. அரசு என்பது மக்கள் அனைவருக்குமான இறையாண்மை.
செக்குலரிசம் உயர்ந்த கோட்பாடாகும். அது எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் அடுத்தவர் தலையீடு இல்லாத சுதந்திரம். அது மக்கள் தமக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றி வாழ முழு உரிமை அளிப்பது. ஆட்சியாளரின் மதச் சார்பு, மற்ற மதத்தவர்களிடம் வேற்றுமையைக் காட்ட அனுமதிக்காதது; ஒரு மதத்தின் கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்குமான பொதுச் சட்டம் உருவாக வாய்ப்பளிக்காதது. ஒரு மதத்தின் நெறிகளை மற்றவர்களிடம் திணிக்காதது. பெரும்பான்மை, சிறுபான்மை அடிப்படையில் தலையீடு செய்யாதது. வாய்ப்புகளிலும் உரிமைகளிலும் எல்லா மதத்தினருக்கும் ஒத்த உரிமை வழங்குவது. அவரவர் மதத்தின் வழிபாட்டு முறைகளிலும் சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் குறுக்கீடு செய்யாதது. அரசின் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குமுறையில் அமைய இடம் தராதது. அரசியல் கோட்பாடுகள், பொருளாதாரக் கொள்கைகள், சமுதாய வளர்ச்சியில் பங்கு, அறிவியல், கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் பொதுத் தன்மையைக் காப்பாற்றுவது. பிற மதங்களின் மீது காழ்ப்புணர்வு கொள்ளாதது.
இவ்வாறு பரந்து விரிந்த பொருள் தரும் செக்குலரிசம் என்பதை மதச் சார்பற்ற என்று தமிழில் சொல்லும்போது எந்த மதத்தையும் சாராத என்றும், மதமற்ற என்றும், மதத்தொடர்பற்ற என்றும்தான் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, செக்குலரிசம் என்பதற்கு வேறு சொல் தேவைப்படுகிறது.
"செக்குலரிசம்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் அனுப்பிய தமிழ்ச் சொற்கள் வருமாறு:
கோ. மன்றவாணன், வெ.ஆனந்த கிருஷ்ணன், டி.வி.கிருஷ்ண சாமி, சோலை.கருப்பையா, சி.இராமச்சந்திரன், இரா.பொ. வீரையன், செ.சத்தியசீலன் - சமயச் சார்பின்மை / மதச் சார்பின்மை.
முனைவர் பா. ஜம்புலிங்கம் - இறை மறுப்பு சமூகக் கொள்கை.
முனைவர் க.அன்பழகன் - சமயமில் கோட்பாடு.
கா.மு. சிதம்பரம் - சமய வரைகோள்.
என்.ஆர். ஸத்திய மூர்த்தி - சமயப் பொறை.
எம்.சிவரஞ்சனி, சோ.முத்து மாணிக்கம் - சமயச் சார்பின்மைக் கோட்பாடு.
ஐரோப்பாவில் கிறித்துவ நிறுவனங்கள் அரசின் செயற்பாடுகளில் தலையிட்டமையை எதிர்த்து உருவாகிய கோட்பாடு செக்குலரிசம். 1851-இல் இச்சொல் பிறந்திருக்கிறது. ""யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்பதுதான் செக்குலரிசம்.
தமிழகத்தில் சங்க காலத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது. ஒவ்வொரு திணைக்கும் வெவ்வேறு கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. பிற கடவுள் வழிபாட்டைப் பழித்ததற்கான சான்றுகள் இல்லை. இராசராசன் பெரிய கோயிலைக் கட்டியதோடு புத்த விஹாரைகளுக்கும் நிவந்தங்கள் வழங்கியுள்ளான்.
இந்தியாவில் அக்பர் அரண்மனையில் இந்துக்கள் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். "அனைவருடனும் நேயம்' எனும் கோட்பாட்டைப் பின்பற்ற முனைந்திருக்கிறார்.
அலாவுதின் கில்ஜியின் ஆட்சியில் உலமாப் பெருமக்களின் அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது அனைவருக்கும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதம், அரசின் செயற்பாடுகளில் தலையீடு செய்யக்கூடாது என்பதைப் போலவே அரசும் மத நடவடிக்கைகளில் / நம்பிக்கைகளில் தலையீடு செய்யக்கூடாது என்பதுதான் செக்குலரிசத்தின் உண்மையான கோட்பாடாக இருக்கிறது. இந்தக் கோட்பாட்டைக் கொண்ட அரசு, மதச் சார்பற்ற அரசு என்று அழைக்கப்படுவதை விட மதத் தலையீடற்ற அரசு என்றே அழைக்கப்பட வேண்டும்.
மதம், அரசு இரண்டும் ஒன்றின் நடவடிக்கையில் மற்றொன்று தலையிடாதிருப்பதே செக்குலரிசம். எனவே, செக்குலரிசம் என்பதற்கான தமிழ்ச் சொல் மதத்தலையீடின்மை என்பதாக இருப்பதே சரியானதாக இருக்கும்.
சாமி அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள் ! தொடருங்கள் !
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிக நல்ல பதிவு!
அறியா சொற்களின் விளக்கம் அறிய தந்தமைக்கு நன்றி!
சாமி அவர்களே.!
அறியா சொற்களின் விளக்கம் அறிய தந்தமைக்கு நன்றி!
சாமி அவர்களே.!
சொல் புதிது - 5
தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கிறது அரசியல் கட்சிகள், நடத்திய பரப்புரைக் கூட்டங்கள், செய்த செலவுகள், பின்பற்றிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், காப்பாற்றிய மனித உரிமைகள், வளர்த்த சமூக நல்லிணக்கச் சூழல், பணம் பெறாமல் வாக்களிக்க மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்; பார்த்துக் கொண்டிருந்தோம். பார்வையாளர்களாக இருந்தோம்.
நாம் செய்தித்தாளைப் படிப்பதில்லை (Reading); பார்க்கிறோம். தொலைக்காட்சியை-திரைப்படத்தைக் கவனிப்பதில்லை(Watching); பார்க்கிறோம்: தலைவர்களைக்கூட மேடைகளில் பார்க்கிறோம்: நாட்டு நடப்புகளையும் பார்க்கிறோமே தவிர, கவனிக்கிறோமா? எல்லாவற்றிற்கும் பார்வையாளராக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமோ!
தமிழில் பார்த்தல், கவனித்தல், நோக்குதல் என்று பல சொற்கள் இருக்கின்றன. எந்தக் கருத்தும் இன்றி போகிற போக்கில் பார்த்துக்கொண்டு போவது வேறு; கருத்துடன் கவனித்தல் வேறு; ஒரு நோக்கத்துடன் பார்த்து கவனிக்கும் நோக்கு வேறு.
"அப்சர்வர்' எனும் சொல், கணினியில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தகவல் பெறுகிறது; தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கதைமாந்தராக இருக்கிறது; இசையில் ஒரு பாடலாக இருக்கிறது; இங்கிலாந்திலும் இலங்கையிலும் செய்தித்தாளாக இருக்கிறது; அரசியலில் விதிமுறைகள் மீறாமல் தேர்தல் நடைபெற உதவுகிறவராக இருக்கிறது.
ஆனால், தேர்தல் ஆணையம் நியமித்து அனுப்பிய அப்சர்வர்கள் பார்வையாளர்கள் இல்லை. இவர்களை ஊடகங்கள் பார்வையாளர்கள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் தவறுகள் நடக்கிறதா என்பதை உற்று நோக்கி, ஆய்ந்து தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பவர்கள்.
வாசகர்கள் "அப்சர்வர்' என்பதற்குத் தந்துள்ள தமிழ்ச் சொற்கள்:
கா.மு.சிதம்பரம் - புரிநோக்கம்
எஸ் சுரேஷ் - கண்காணிக்கும் அதிகாரி
அ.கருப்பையா - சட்ட நடைமுறைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பவர்
ப.கோபி பச்சமுத்து - நுண்காட்சியர்
டி.வி.கிருஷ்ணமூர்த்தி - கவனிப்பவர் / கவனிக்கப்படுபவர்
சோலை.கருப்பையா - கருத்துரைப்பாளர்
செ. சத்தியசீலன், செ.நாராயணசாமி, என்.ஆர். சத்தியமூர்த்தி - நோக்கர்
அ.கற்பூரபூபதி - ஆழ்ந்து கவனிப்பவர் / விமர்சகர்
முனைவர் க.அன்பழகன் - கருத்தாளர் உற்றறிவாளர்
முனைவர் பா. ஜம்புலிங்கம் - நுண்ணோக்காளர்
கோ.மன்றவாணன் - கூர்நோக்கர்
"இரு நோக்கு இவள் உண்கண் உள'' என்று காதலியின் பார்வையில் உள்ள நோக்கங்களை வள்ளுவர் கூறுகிறார்.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'' என்று இராமனும் சீதையும் பார்த்துக்கொண்ட நோக்கத்தைக் கம்பர் குறிப்பிடுகிறார்.
எனவே, அப்சர்வர் என்பதற்கு நோக்கர் என்று சொல்ல நினைத்தால், தமிழ் அகராதியில், நோக்கருக்குக் கழைக்கூத்தர் என்றும் பொருள் இருக்கிறது. எனவே, பார்ப்பவர்களைப் பார்வையாளர் என்று அழைப்பதைப் போல ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பார்த்து, கவனித்து நோக்கும் அப்சர்வரைத் தமிழில் நோக்காளர் என்று சொல்லலாம்.
Observer - நோக்காளர்
தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கிறது அரசியல் கட்சிகள், நடத்திய பரப்புரைக் கூட்டங்கள், செய்த செலவுகள், பின்பற்றிய தேர்தல் நடத்தை விதிமுறைகள், காப்பாற்றிய மனித உரிமைகள், வளர்த்த சமூக நல்லிணக்கச் சூழல், பணம் பெறாமல் வாக்களிக்க மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்; பார்த்துக் கொண்டிருந்தோம். பார்வையாளர்களாக இருந்தோம்.
நாம் செய்தித்தாளைப் படிப்பதில்லை (Reading); பார்க்கிறோம். தொலைக்காட்சியை-திரைப்படத்தைக் கவனிப்பதில்லை(Watching); பார்க்கிறோம்: தலைவர்களைக்கூட மேடைகளில் பார்க்கிறோம்: நாட்டு நடப்புகளையும் பார்க்கிறோமே தவிர, கவனிக்கிறோமா? எல்லாவற்றிற்கும் பார்வையாளராக நாம் மாறிக்கொண்டிருக்கிறோமோ!
தமிழில் பார்த்தல், கவனித்தல், நோக்குதல் என்று பல சொற்கள் இருக்கின்றன. எந்தக் கருத்தும் இன்றி போகிற போக்கில் பார்த்துக்கொண்டு போவது வேறு; கருத்துடன் கவனித்தல் வேறு; ஒரு நோக்கத்துடன் பார்த்து கவனிக்கும் நோக்கு வேறு.
"அப்சர்வர்' எனும் சொல், கணினியில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தகவல் பெறுகிறது; தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கதைமாந்தராக இருக்கிறது; இசையில் ஒரு பாடலாக இருக்கிறது; இங்கிலாந்திலும் இலங்கையிலும் செய்தித்தாளாக இருக்கிறது; அரசியலில் விதிமுறைகள் மீறாமல் தேர்தல் நடைபெற உதவுகிறவராக இருக்கிறது.
ஆனால், தேர்தல் ஆணையம் நியமித்து அனுப்பிய அப்சர்வர்கள் பார்வையாளர்கள் இல்லை. இவர்களை ஊடகங்கள் பார்வையாளர்கள் என்றே குறிப்பிடுகின்றன. இவர்கள் தவறுகள் நடக்கிறதா என்பதை உற்று நோக்கி, ஆய்ந்து தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பவர்கள்.
வாசகர்கள் "அப்சர்வர்' என்பதற்குத் தந்துள்ள தமிழ்ச் சொற்கள்:
கா.மு.சிதம்பரம் - புரிநோக்கம்
எஸ் சுரேஷ் - கண்காணிக்கும் அதிகாரி
அ.கருப்பையா - சட்ட நடைமுறைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பவர்
ப.கோபி பச்சமுத்து - நுண்காட்சியர்
டி.வி.கிருஷ்ணமூர்த்தி - கவனிப்பவர் / கவனிக்கப்படுபவர்
சோலை.கருப்பையா - கருத்துரைப்பாளர்
செ. சத்தியசீலன், செ.நாராயணசாமி, என்.ஆர். சத்தியமூர்த்தி - நோக்கர்
அ.கற்பூரபூபதி - ஆழ்ந்து கவனிப்பவர் / விமர்சகர்
முனைவர் க.அன்பழகன் - கருத்தாளர் உற்றறிவாளர்
முனைவர் பா. ஜம்புலிங்கம் - நுண்ணோக்காளர்
கோ.மன்றவாணன் - கூர்நோக்கர்
"இரு நோக்கு இவள் உண்கண் உள'' என்று காதலியின் பார்வையில் உள்ள நோக்கங்களை வள்ளுவர் கூறுகிறார்.
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'' என்று இராமனும் சீதையும் பார்த்துக்கொண்ட நோக்கத்தைக் கம்பர் குறிப்பிடுகிறார்.
எனவே, அப்சர்வர் என்பதற்கு நோக்கர் என்று சொல்ல நினைத்தால், தமிழ் அகராதியில், நோக்கருக்குக் கழைக்கூத்தர் என்றும் பொருள் இருக்கிறது. எனவே, பார்ப்பவர்களைப் பார்வையாளர் என்று அழைப்பதைப் போல ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பார்த்து, கவனித்து நோக்கும் அப்சர்வரைத் தமிழில் நோக்காளர் என்று சொல்லலாம்.
Observer - நோக்காளர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|