புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
5 Posts - 3%
prajai
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
440 Posts - 47%
heezulia
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
30 Posts - 3%
prajai
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_m10திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 11:46 am

திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்: மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணனின் மலரும் நினைவுகள்

திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! 5wlu71ydRCibJvlCqcFX+xmgr_1812561h.jpg.pagespeed.ic.oqqcz0tkaD

தமிழகத்தின் அடித்தட்டு மக்களால் தெய்வப் பிறவியாக பார்க்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும் கடைசிவரை ராஜபார்ட்டாகவே இருந்தார். அவரைப் பார்க்க மாட்டோமா, அருகில் போய் தொட்டுப் பார்க்க முடியுமா என ஏங்கியவர்கள் ஏராளம். இவ்வளவு ஏன்.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்பதையே நம்ப மறுக்கும் வெள்ளந்திகள்கூட இன்னும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும் சுமார் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். தற்போது 84 வயதாகும் அவர், சென்னை கோபாலபுரத்தில் சாதாரண வீட்டில் எளிமையாக வசித்து வருகிறார்.

எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்த நாளையொட்டி, மலேசியாவில் வரும் சனிக்கிழமை ‘மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.’ என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழாவில், கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ‘எம்.ஜி.ஆர். விருதை’ மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வழங்கி கவுரவிக்கிறார். இதையொட்டி ‘தி இந்து’ சார்பில் ராமகிருஷ்ணனைச் சந்தித்தோம். எம்.ஜி.ஆருடனான தனது அரசியல் பயணத்தை மலரும் நினைவுகளாய் பகிர்கிறார் ராமகிருஷ்ணன்..

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. திமுக வளர்ந்து வரும் கட்சி. அப்போது, திமுகவின் பிரச்சார பலமே எம்.ஜி.ஆர்.தான். அவருக்காகவே ஸ்பெஷலாக 18 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரானது பிரச்சார வேன். அவர் பகல் 3 மணிக்கு பிரச்சாரத்தைத் தொடங்கினால் மறுநாள் பகல் 3 மணிக்குத்தான் முடிப்பார். (அப்போதெல்லாம் இரவு 10 மணிக்குள் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது).

எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் தவம் கிடப்பார்கள் மக்கள். வழிநெடுகிலும் மக்கள் வெள்ள மாக இருக்கும். கொஞ்சம்கூட அசராமல், அத்தனை பேரையும் பார்த்து கையசைத்தபடியே செல்வார் எம்.ஜி.ஆர். அதிகாலை 4 மணியானாலும் சிரித்த முகமாய் பிரச்சாரம் செய்வார். அவரிடம் சோர்வை பார்க்க முடியாது. ஆங்காங்கே குழந்தைகளுக்கு பெயரும் சூட்டி மகிழ்வார்.

ஒரு இடத்தில் இரவு 7 மணிக்கு எம்.ஜி.ஆர். பேசுவார் என அறிவித்திருப்பார்கள். ஆனால், வழிநெடுகிலும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் அங்கு போவதற்குள் நள்ளிரவு கடந்துவிடும். இருந்தாலும் மக்கள் கூட்டம் கலையாமல் காத்திருக்கும். 1962-ல் தேனியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய சேலத்திலிருந்து போய்க்கொண்டிருந்தோம்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் (அப்போது ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்) அருகே நள்ளிரவில் சாலையின் குறுக்கே மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியைப் பார்த்துவிட்டு வேனை நிறுத்தி இறங்கினோம்.

அப்போது சுமார் 30 பேர், தீப்பந்தங்களுடன் வந்து எங்களை சூழ்ந்துகொண்டனர். அருகில் இருந்த மலையைக் காட்டி, அங்கே வந்து தலைவர் கொடியேற்ற வேண்டும் என்றனர்.

‘நாங்கள் பிரச்சாரத்துக்காக தேனிக்கு போய்க்கொண்டிருக் கிறோம். திரும்பி வரும் போது தலைவர் கொடியேற் றுவார்’என்றோம். அதை அவர் கள் ஏற்கவில்லை. கும்பலில் இருந்த ஒருவன், ‘இப்பவே வராவிட்டால், வேனைக் கொளுத்திவிடுவோம்’என்றான். வேனில் இருந்த எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுவிட்டார். வேகமாய் வெளியில் வந்த அவர், வேட்டியை மடித்துக் கட்டியபடி, ‘தைரியம் இருந்தா கொளுத்துங்கடா பார்க்கலாம்’என்றார். வாய்த் தகராறு முற்றி அடிதடியாக மாறியது. எங்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரும் கொலை வெறித் தாக்குதலை எதிர்க்கொண்டார்.

நிலைகுலைந்த அந்தக் கும்பல் தலைதெறிக்க ஓடிவிட்டது. இத்தனைக்கும் எம்.ஜி.ஆருடன் சேர்த்து நாங்கள் மொத்தமே இருந்தது 7 பேர்தான்.

இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்.

தேர்தல் பிரச்சாரங்களின்போது பொதுக்கூட்டங்களுக்கு வரும் மக்களிடம் தெரியும் எழுச்சியை வைத்தே வெற்றி, தோல்வியை துல்லியமாக கணிக்கும் சூத்திரம் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருந்தது.

-அதுபற்றி நாளை பார்க்கலாம். (thehindutamil)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 11:51 am

திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! 66Wwm22HQhSDetvJ7prM+xmgr2_1814530h.jpg.pagespeed.ic.k--FZhXho7

மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாகக் கணிப்பதில் எம்.ஜி.ஆரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை.

1977 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் அழகுதிருநாவுக்கரசை ஆதரித்துப் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இரவு 8 மணி பொதுக்கூட்டத்துக்கு போகவேண்டும். ஆனால், எம்.ஜி.ஆரால் அதிகாலை 2.30 மணிக்குத்தான் அங்கு போகமுடிந்தது.

வழிநெடுகிலும் மக்கள் கூட்டத்தால் நாங்கள் வந்த பிரச்சார வேன் நத்தை போலத்தான் ஊர்ந்து சென்றது. மன்னார்குடி போனதும் சவுரி அய்யங்கார் வீட்டில் சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் எம்.ஜி.ஆர். அவரைப் பார்த்ததும் எழுந்த ஆரவாரத்தை சொல்ல வார்த்தையே இல்லை. நாலாபக்கமும் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. மக்களைப் பார்த்து இரு கைகூப்பி வணக்கம் செலுத்திய எம்.ஜி.ஆர்., ஒன்றேகால் மணி நேரம் பேசினார். பேசிமுடிக்கும் வரை கரவொலிக்கும் பஞ்சமே இல்லை.

கூட்டம் முடிந்து பிரச்சார வேனுக்கு வந்த எம்.ஜி.ஆரிடம் ‘அண்ணே நமக்குத்தான் நிச்சயம் வெற்றி’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினோம். நாங்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட தலைவர், ’இந்தத் தொகுதியில் நம்ம கட்சி ஜெயிக்காது’என்று குண்டைத் தூக்கிப் போட்டார். இந்தப் பதிலை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘ஏன் அப்படி கூறுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘இந்தக் கூட்டம் சினிமா போல என்னைப் பார்க்க வந்த கூட்டம். இவர்கள் ஓட்டெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இத் தொகுதியில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அம்பிகாபதிதான் வெற்றிக்கனியைப் பறிப்பார்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது போலவே அம்பிகாபதிதான் வென்றார்.

திறந்த வேனில் பிரச்சாரம் செய்யும்போது கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் கொட்டும் மழையாய் இருந்தாலும் குடை பிடிக்க அனுமதிக்கவே மாட்டார் எம்.ஜி.ஆர். ’நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகுபார்த்த மக்களே மழையில் நனைந்து வெயிலில் காயும்போது எனக்கு மட்டும் குடை எதற்கு?’ என்பார். ஒருமுறை திருத்துறைப்பூண்டி பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு சந்துக்குள் இருந்து வேகமாக ஓடிவந்த 10 வயது சிறுவன் எம்.ஜி.ஆர். கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ’எங்கள் கிராமத்தில் கொடியேற்ற வாங்க தெய்வமே’ என்றான். அவனது அன்பில் நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்., 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று கொடியேற்றி னார்.

அந்த கிராமத்தினர் எம்.ஜி.ஆருக்கு வாழைப்பழம், சாக்லேட் எல்லாம் கொடுத்து மகிழ்ந்தனர். பரவாயில்லை என்று மறுத்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவர்கள் என்னிடம் கொடுத்தனர். பிரச்சார வேனுக்கு வந்ததும், ‘மாணிக்கம், (எம்.ஜி.ஆருக்கு உணவு பரிமாறுபவர்) ஏதாவது சாப்பிடக் கொடு’ என்றார். அப்போது அந்தக் கிராமத்தினர் கொடுத்த வாழைப்பழத்தைக் கொடுத்தேன். ’அந்த மக்கள் அன்பாகக் கொடுத்தது தேவாமிர்தம் மாதிரியப்பா’ என்றார் புன்முறுவலுடன்.

மக்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம் உண்மையானது. அவர் சாமானிய மக்களில் ஒருவராய் வாழ்ந்தார்.

அதுகுறித்து நாளை...

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 11:53 am

தங்கள் வீட்டுப் பிள்ளையாக எம்ஜிஆரை கொண்டாடிய மக்கள்:

மக்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம் ஆத்மார்த்தமானது. அதனால்தான் இன்றுவரை அவர் மக்கள் மனங்களில் அழியாப் புகழுடன் வாழ்கிறார். சாமானிய மக்களில் ஒருவராய் வாழ்ந்ததால்தான் அவரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’என்று எல்லோரும் சொந்தம் கொண்டாடினர். பிரச்சார களங்களில் பலரும் தங்க ளது குழந்தைகளுக்கு பெயர் வைக்கச் சொல்வது இயல்பு. எம்.ஜி.ஆர் வந்து பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே 6 வயது வரைக்கும்கூட தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்காமல் காத்திருந்த அவரது பக்தர்களும் அந்தக் காலத்தில் இருந்தார்கள்.

ஒருசமயம் போடி பிரச்சாரத் துக்கு போகும் வழியில், அதிமுக தொண்டரை எதிர்க்கட்சியினர் அரிவாளால் வெட்டியதில் அவரது கை தனியாக தொங் கியது. அதைப்பற்றிகூட கவலைப்

படாமல் எம்.ஜி.ஆரைப் பார்த்ததும், ’தலைவா நீங்கதான் ஜெயிப்பீங்க’என்று தனது வலியை மறந்து குரல் கொடுத்தார். அந்தத் தொண்டனின் கை வெட்டுப்பட்டு தொங்குவதைப் பார்த்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர்., உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

ஒருமுறை எம்.ஜி.ஆரின் காரை எடுத்துக் கொண்டு அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், மாயவரம் கிட்டப்பா ஆகியோர் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு போனார்கள். பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் கார் நின்றுவிட்டது. எம்.ஜி.ஆரின் காரைப் பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து அவரைத் தேடி இருக்கிறார்கள். ‘‘எம்.ஜி.ஆர். வரவில்லை. அவர்தான் எங்களை அனுப்பி வைத்தார்’’என்று அண்ணா சொன்னதுதான் தாமதம். மின்னல் வேகத்தில் சில கிலோ மீட்டர் தூரம் ஓடிப்போய் பெட்ரோல் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்கள். ‘‘நீங்கள் எங்கள் தலைவருக்குத் தலைவர். உங்களை எப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போக முடியும்’’ என்று கேட்டார்களாம் அந்த மக்கள்.

இந்தச் சம்பவத்தைச் சொல்லி அண்ணா பாராட்டியபோது, ’உங்க ளைவிட யாரும் பெரியவர் இல்லை’என்று எம்.ஜி.ஆர். தன்னடக்கத்துடன் சொன்னார். அதற்கு, ‘‘மக்கள் உன்னிடத்தில் வைத்துள்ள அன்புக்கு என்னை ஈடுகட்டாதே’’ என்றார் அண்ணா.

பிரச்சாரத்தின்போது, விவசாயி களின் வீடுகளுக்குச் செல்லும் எம்.ஜி.ஆர்., அவர்கள் கொடுக்கும் கேப்பங்கூழை குடித்து மகிழ்வார். அப்படியொரு தலைவரை தமிழகம் பார்த்ததில்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராக 2 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றிய கோவிந்தன், 1979-ல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். கோட்டையில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, பிரேதப் பரிசோதனை முடிந்ததும் கோவிந்தன் உடலில் அதிமுக கொடி போர்த்தி கட்சி அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கச் சொன்னார்.

அங்கிருந்து கிருஷ்ணாம் பேட்டை சுடுகாடு வரை நடந்து வந்த எம்.ஜி.ஆர்., அங்கே இறுதிச் சடங்கு முடியும் வரை எல்லோரையும் போல நின்று கொண்டே இருந்தார். தன்னிடம் கார் டிரைவராக இருந்தவருக்கு இப்படியொரு இறுதி மரியாதையை எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. ‘கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்று கோவிந்தன் மகன் பாலுவைத் தேற்றியதுடன், கோவிந்தன் மனைவிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உடனடியாக வேலையும் போட்டுக் கொடுத்தார்.

நான் பார்த்த வரையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்து ஒருவர்கூட வெறுங்கையோடு திரும்பியதில்லை. அவரிடம் ’நாளை வா’ என்ற பேச்சுக்கும் இடமிருக்காது. எம்.ஜி.ஆரின் மீது மக்களும், அவர்கள் மீது எம்.ஜி.ஆரும் வைத்திருந்த பாசத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு நாட்கள் போதாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக