புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 64%
heezulia
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
10 Posts - 30%
Manimegala
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
140 Posts - 50%
ayyasamy ram
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
11 Posts - 4%
prajai
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
jairam
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இனம்: திரை விமர்சனம் Poll_c10இனம்: திரை விமர்சனம் Poll_m10இனம்: திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனம்: திரை விமர்சனம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 7:56 pm

இலங்கை உள்நாட்டுப் போரைக் கதைக்களமாகக் கொண்டு, ஒரு பெண் போராளியின் உள்ளிருக்கும் தாய்மையின் தவிப்புகளை ‘தி டெரரிஸ்ட்’ என்ற படமாக இயக்கியவர் சந்தோஷ் சிவன். இந்த முறை, இறுதி யுத்தம் என்று சொல்லப்படும் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சண்டைக்குச் சற்று முன்னும், அதன் பிறகும் என்று கதைக்கான காலகட்டத்தைத் தேர்ந்துகொண்டிருக்கிறார்.

உணர்வுபூர்வமான இலங்கை இனப் பிரச்சினையை முடிந்தவரை நடுநிலையாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் சிவன். முள்ளிவாய்க்கால் சண்டையில் பலியானது போக எஞ்சியிருக்கும் மக்கள், முள் வேலி முகாம்களில் இருக்க, அங்கிருந்து தப்பித்து பலர் கனடா நாட்டுக்குக் கள்ளத் தோணிகளில் சென்றுவிட முயல்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையைக் கடக்க முயலும்போது ரஜினி என்ற இளம்பெண்ணுடன் அந்தக் குழுவினர் இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டு, ராமேசுவரம் அகதிகள் முகாமுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். ரஜினி வைத்திருக் கும் ஆவணங்களில் 53 பேர் என்று இருந்தாலும், படகில் இருந்தவர்கள் 50 பேர்தான். எஞ்சிய மூன்று பேர் என்ன ஆனார்கள் என்று கேட்கிறார் அதிகாரி. அவரிடம் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் ரஜினி.

உறவுகளை இழந்தும் பிரிந்தும் யுத்தத்தை எதிர் கொண்டு, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்று கூடிய பலர் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் வாழ்ந்த கதை விரிகிறது. ஒரு பக்கம் ராணுவத்தின் குண்டு வீச்சு, இன்னொரு பக்கம் இளைஞர்களையும் யுவதிகளையும் போராளிகள் இயக்கத்திற்குள் இழுக்கும் நெருக்கடி என்று வாழும் இவர்களது வாழ்க்கையை சுனாமி அக்காவும் (சரிதா), ஸ்டான்லி ஆசிரியரும் (கருணாஸ்) பொறுப்பேற்றுப் பார்த்துக் கொள்கிறார்கள். அந்தக் குழுவில் மனவளம் குன்றிய நந்தன் என்ற இளைஞன் வந்து சேர்கிறான். ஒரு நாள் ஸ்டான்லியின் வகுப்பறையில் நுழையும் போராளிகள், இயக்கத்தின் கொள்கை, போராட்டக் களம் ஆகியவற்றை பற்றிய காணொளியைக் காட்டி இயக்கத்தில் சேரத் தூண்டுகிறார்கள். ரஜினி (சுகந்தா), தன் வயதையொத்த ரவியை (ஷ்யாம் சுந்தர்) காதலிக்கிறாள். ரவி திடீரென்று ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிடுகிறான்.

இறுதி யுத்தத்தில் சிக்கும் இவர்கள், தங்கள் குழுவில் யாரையெல்லாம் இழந்தார்கள்? ரஜினி தன் காதலனைக் கண்டுபிடித்தாளா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் சந்தோஷ் சிவன்.

யுத்த நிகழ்வுகளின் சில பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். குண்டு மழையில் அதிரும் கேமராவின் வழியாகச் சில காட்சிகள் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. ராணுவம், போராளிகள், அப்பாவித் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தரப்பின் இழப்புகளையும் நடுநிலையோடு சித்தரிக்க முயன்றிருக்கும் சந்தோஷ் சிவன், இலங்கை அரசு புலிகள் மீது வைத்த பல குற்றச்சாட்டுகளைக் காட்சிகளாக வைத்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடக்கி வாசித்திருக்கிறார்.

எதிர்ப்பின் காரணமாகப் படத்திலிருந்து ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் லிங்குசாமி அறிவித்திருக்கிறார். அன்பே உருவான (!) ஒரு சிங்கள புத்த பிட்சு தமிழ்ச் சிறுவர்களுக்கு மாதுளம்பழத்தைப் பரிசளிப்பது அவற்றில் ஒன்று. இன்றைய இலங்கையின் பிட்சுக்களை அமைதியின் திருவுருக்களாகக் காட்டுவதில் உள்ள முரண் வெறும் சித்தரிப்புப் பிழை அல்ல. அதில் ஒரு அரசியல் இருக்கிறது.

இலங்கை இனப்போரைக் கொஞ்சம் விரிவாகவே சித்தரித்த வகையில் சந்தோஷ் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. நடுநிலைமையோடு படம் எடுக்க முனைந்ததும் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் எது நடுநிலை என்பதுதான் பிரச்சினை.

படத்தின் டைட்டிலில் ‘இனம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் The Mob என்று போடுகிறார்கள். Mob என்றால் கும்பல். இனத்தைக் கும்பலாகக் காட்டும் மொழிபெயர்ப்பை இயக்குநரது பார்வையின் அடையாளமாகக் கொள்ளலாமா?
- இந்து டாக்கீஸ் குழு

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 8:37 pm

'இனம்' படத்தை நிறுத்துவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய 'இனம்' படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.

உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.

தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.

அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.

ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.

எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்" என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82091
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 7:55 am

லிங்குசாமியின் விளக்கத்தை வரவேற்போம்..
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக