புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_m10கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி கணினியில் படிக்கலாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 10:14 pm

தமிழ் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவுகிற எழுத்துருவை வடிவமைத்துள்ளார் மதுரை இளைஞர்

உலக அளவில் அதிக கல்வெட்டுக்கள் காணப்படும் ஒரே மொழி தமிழ். இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புராதன தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தமிழ் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை தொல்லியல் நிபுணர்களால் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல்தான் இப்போதும் உள்ளது. இதனால் கல்வெட்டுக்களை காட்சிப்பொருட்களாக மட்டுமே காண்கின்ற நிலை. இந்த நிலையை மாற்றும் வகையில் சாதாரண மனிதர்களும் கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க உதவும் எழுத்துரு (FONT) ஒன்றை வடிவமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் சிவக்குமார்.

கல்வெட்டில் காணப்படும் எழுத்து வடிவங்களை சங்ககாலத்தமிழி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எழுத்துருவில் உள்ளீடு செய்தால் அவற்றை தற்போதைய தமிழ் எழுத்துக்களாக மாற்றித் தருகிறது. இதன் மூலம் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து அறிந்திடாத யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும். தகவல் தொழில் நுட்பவியலில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ள சிவக்குமார், தற்போது மதுரை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நாவல் ஒன்றை எழுதத் தொடங்கினேன். அதற்காக தமிழ் மொழி குறித்த தகவல்கள் திரட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது அந்த இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் எளிதாக கல்வெட்டுக்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவன் என்பதால் அனைவருக்கும் உதவும் வகையில் கணினியில் கல்வெட்டு எழுத்துக்களைக் கொண்டு வரலாமே என்ற எண்ணம் தோன்றியது. எனவே கல்வெட்டுக்கென மென்பொருள் ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தேன். மென்பொருள் உருவாக்கத் தொடங்கும் முன் கல்வெட்டு எழுத்துக்களுக்கென ஓர் எழுத்துருவை உருவாக்கினால் மென்பொருளை வடிவமைப்பது எளிதாக இருக்கும் என்பதால் முதலில் எழுத்துரு உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்.

ஆனால் அதை சாத்தியமாக்குவது எளிதான காரியமாக இல்லை. ஏனெனில் தமிழ் மொழியானது தமிழ் பிராமி, வட்டெழுத்துக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று தற்போதைய எழுத்து வடிவத்தை அடைந்துள்ளது.ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. எனவே எல்லா காலத்திற்குமான துல்லியமான எழுத்துருவை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தமிழ் எழுத்துக்கள் மாற்றம் அடைந்த காலகட்டங்களைப் பிரித்து அட்டவணைப்படுத்தி, ஒவ்வொரு காலகட்டத்திற்கான எழுத்துருவை உருவாக்க முடிவு செய்தேன். தற்போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கான எழுத்துருவை உருவாக்கியுள்ளேன்" என்கிறார் சிவக்குமார்.

தமிழில் தட்டச்சு செய்ய நாம் பயன்படுத்தும் வானவில், செந்தமிழ் போன்ற எழுத்துருக்களைப் போல கல்வெட்டு எழுத்துக்களைத் தரும் ஓர் எழுத்துருதான் இந்த சங்ககாலத்தமிழி. தமிழைத் தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது எப்படி தமிழ் தட்டச்சு நமக்கு சுலபமாகிவிடுகிறதோ அது போல சங்ககாலத்தமிழியை தொடர்ந்து தட்டச்சு செய்து பழகும்போது கல்வெட்டு எழுத்துக்களும் நமக்கு அத்துப்படியாகும். தட்டச்சு மட்டுமின்றி கல்வெட்டு எழுத்துக்களை தமிழில் மாற்றித் தரும் converter ஆகவும் இந்த எழுத்துரு செயல்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சங்ககாலத் தமிழி எழுத்துருவை கணினியில் தேர்ந்தெடுத்த பின்பு கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களுக்கான பொத்தான்களை கணினியில் அழுத்தினால் அதற்கான தற்போதைய தமிழ் வடிவம் திரையில் தெரிகிறது. மேலும் தற்போதைய தமிழை தட்டச்சு செய்தால் அதற்கேற்ற மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு எழுத்துக்கள் கிடைக்கின்றன.

கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து எனக்கு வழிகாட்ட யாரும் இல்லாததால் இந்த எழுத்துருவை உருவாக்க எனக்கு இரண்டு வருடங்கள் ஆயின. இதை உருவாக்க எனக்கு ஊக்கமளித்து வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த எழுத்துருவை உருவாக்கியதன் முக்கிய நோக்கமே கணினி தெரிந்த யாரும் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும் என்ற சூழல் உருவாக வேண்டும் என்பதுதான்.இந்த எழுத்துரு பிரபலமடைந்தால் தற்போதைய தலைமுறையினர் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் கல்வெட்டுக்களின் முக்கியத்துவம் குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வெட்டுக்கள் குறித்த ஆராய்ச்சிகளும் வளரும். மேலும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் கல்வெட்டுக்களை எளிதாக ஆவணப்படுத்த முடியும்.

தற்போதைக்கு சங்ககாலத் தமிழி எழுத்துரு, 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்களை மட்டுமே மாற்றும்.விரைவில் ஒவ்வொரு நூற்றாண்டிற்கான எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.எழுத்துருக்கள் உருவாக்கி முடித்ததும், அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தமிழ் கல்வெட்டு எழுத்துகளுக்கான முழுமையான மென்பொருளை உருவாக்க உள்ளேன்.கல்வெட்டுக்களை நிழற்படம் எடுத்து கணினியில் உள்ளீடு செய்தால், கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தி மற்றும் கல்வெட்டு உருவாக்கப்பட்ட காலகட்டம் ஆகியவற்றைக் கூறும் வகையில் இந்த மென்பொருள் அமையும்.
சங்ககாலத் தமிழி என்னுடைய முதல் முயற்சி. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி தொல்லியல் அறிஞர்கள் என்னை வழிநடத்த வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்"என்கிறார் சிவக்குமார்.

தொடர்புக்கு: 95668 68500

வல்லுநர் கருத்து : கணினியில் ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்! : நாராயணமூர்த்தி, தொல்லியல் அறிஞர்

5-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு பத்தாம் நூற்றாண்டின்போது சிதைந்து போனால், அந்தக் கல்வெட்டில் உள்ள செய்தியைப் படித்து பத்தாம் நூற்றாண்டில் வழக்கத்திலிருந்த தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அதே செய்தியை மீண்டும் கல்வெட்டாக உருவாக்கும் வழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது. யார் காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் கல்வெட்டில் உள்ள செய்திகள் எக்காரணம் கொண்டும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கம் இது. இப்படி உருவாக்கப்படும் கல்வெட்டுக்கள் அதன் தொடக்கத்தில் இது ஒரு பழங்கல்படி என்ற சொல்லோடு தொடங்கும். இந்த வார்த்தையிலிருந்தே அது பிரதி எடுக்கப்பட்ட கல்வெட்டு எனப் புரிந்து கொள்ளலாம்.இந்தப் பழங்கல்படி முறை போன்ற ஒரு நல்ல முயற்சிதான் சங்ககாலத் தமிழி எழுத்துரு.

தமிழ் மொழியில் இது போன்று ஒரு முயற்சி இதற்கு முன்னர் நடந்ததில்லை எனக் கூறலாம். தற்காலத்தில் அனைத்துத் துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தற்போது வரை தமிழ்க் கல்வெட்டுக்கள் நிழற்படம் எடுக்கப்பட்டுதான் ஆவணப்படுத்தப்படுகின்றன. இனி வரும் காலங்களில் தமிழ்க் கல்வெட்டுக்களை கணினியில் ஆவணப்படுத்த இந்த எழுத்துரு மிகவும் உதவியாக இருக்கும். இந்த எழுத்துரு மூலம் தமிழ் பிராமி குறித்த அறிமுகம் இல்லாதவர்களும், கல்வெட்டு வாசிக்க முடியாதவர்களும் பயன்பெற முடியும். சிவக்குமாரின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது". (எம். செந்தில்குமார்-
புதியதலைமுறை)

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:58 am

கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 16, 2015 11:04 am

அருமையான முயற்சி ,  நன்றி

ஈகரைச்செல்வி wrote:கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1145572இப்படி ஒரு பதிவை மீண்டும் மேலே கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 11:29 am

ராஜா wrote:அருமையான முயற்சி ,  நன்றி

ஈகரைச்செல்வி wrote:கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460 கல்வெட்டு எழுத்தெல்லாம் இனி  கணினியில் படிக்கலாம்! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1145572இப்படி ஒரு பதிவை மீண்டும் மேலே கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1145618

வாசித்துப்பார்த்தேன் சிறந்தபதிவு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2015 3:19 pm

இந்த செய்தி வந்து ஓராண்டுக்கும் மேலாகி
விட்டதே...!
-
இப்ப ஏதும் முன்னேற்றம் உள்ளதா..?

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 6:48 pm

ayyasamy ram wrote:இந்த செய்தி வந்து ஓராண்டுக்கும் மேலாகி
விட்டதே...!
-
இப்ப ஏதும் முன்னேற்றம் உள்ளதா..?
மேற்கோள் செய்த பதிவு: 1145654
பதிவிட்டவரே பதிலளிக்கவேண்டும்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 7:00 pm

ஈகரைச்செல்வி wrote:
ayyasamy ram wrote:இந்த செய்தி வந்து ஓராண்டுக்கும் மேலாகி
விட்டதே...!
-
இப்ப ஏதும் முன்னேற்றம் உள்ளதா..?
மேற்கோள் செய்த பதிவு: 1145654
பதிவிட்டவரே பதிலளிக்கவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1145724

நிச்சயம் முன்னேற்றம் இருக்கும் .
மகத்தான முயற்சி . அதிக உழைப்பு தேவைப்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:08 pm

T.N.Balasubramanian wrote:
ஈகரைச்செல்வி wrote:
ayyasamy ram wrote:இந்த செய்தி வந்து ஓராண்டுக்கும் மேலாகி
விட்டதே...!
-
இப்ப ஏதும் முன்னேற்றம் உள்ளதா..?
மேற்கோள் செய்த பதிவு: 1145654
பதிவிட்டவரே பதிலளிக்கவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1145724

நிச்சயம் முன்னேற்றம் இருக்கும் .
மகத்தான முயற்சி . அதிக உழைப்பு தேவைப்படும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145734

உண்மைதான் முயற்சி வெற்றிகாண வணங்குகிறேன்



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 16, 2015 9:20 pm

மேலதிக தகவல்களை தாருங்கள்....அய்யா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 9:26 pm

சரவணன் wrote:மேலதிக தகவல்களை தாருங்கள்....அய்யா!
மேற்கோள் செய்த பதிவு: 1145786

சாமிதான் சொல்லணும் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக