புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
61 Posts - 45%
heezulia
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
4 Posts - 3%
prajai
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
21 Posts - 5%
prajai
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_m10கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 6:14 pm

கல்லிலே மீண்டெழும் 'அன்னம்புத்தூர் சிவன் கோவில்'! BFj9G86RQ9CZt3sbHCek+x1siva1_1812465h.jpg.pagespeed.ic.THPRbtneLG

மலை கிராமங்களில் இருந்து பெரிது பெரிதாக உடைத்து எடுத்து வரப்பட்ட கருங்கல் பாறைகள் ஒரு புறம். ஓலைக் கொட்டகையால் அமைக்கப்பட்ட கல் தச்சர்களுக்கான பட்டறை மறு புறம். பாளம்பாளமாக அறுக்கப்பட்ட கல் தூண்களில் சிற்பம் வடிக்கும் சிற்பிகள். அருகே சாரக்கட்டைகளின் ஊடாக சிற்ப வேலைப்பாடுகளுடன் வளர்ந்து வரும் கற்றளி.. விடாது கேட்டுக் கொண்டிருக்கும் சிற்பிகளின் உளிஓசை.. இந்த காட்சி, ஊர்தோறும் ஆலயங்கள் கட்டிய பண்டைய மன்னர்கள் காலத்திற்கே நம்மை இட்டுச்செல்கிறது. ‘முழுவதும் கருங்கற்களாலேயே கட்டப்படும் கற்றளியா..? அதுவும் இந்த காலத்திலா.?’ ஆச்சரியப்பட வைக்கிறதா...? வாருங்கள்! திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்திற்கு...

அன்னம்புத்தூர்! பெயரே ஊரின் பழைமையைச் சொல்கிறது. அந்த அழகிய கிராமத்தின் பசுமையான வயல்வெளிகளுக்கு மேற்கில் ஓர் ஏரிக்கரை. அதனையொட்டி மிகப்பெரிய மண்மேடில் மண்டிக் கிடக்கும் செடிகொடிகளுக்கு மத்தியில் வெட்டவெளியில் தன்னந்தனியே ஒரு பிரம்மாண்ட சிவலிங்கம். (சுமார் 5 அடி உயரம்) கவனிப்பாரின்றி வெய்யிலிலும் மழையிலும் காய்ந்து கொண்டிருந்தது. உள்ளம் கசிந்த ஊர்ப் பெரியவர்கள் சிலர், அடர்ந்து வளர்ந்த செடி கொடிகளை அப்புறபடுத்தி தினமும் பூசித்துவந்தனர்.. வழிபாடுகள் தொடர மெள்ள மெள்ள பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. வழிபாட்டுக்கு வசதியாக மண்மேட்டை இன்னும் துப்புரவாக்கி விரிவுபடுத்தலாம் என்று அங்கிருந்த கற்களையும் முட்களையும் உடைந்த கல் தூண்களையும் அகற்றினர். அப்படி அப்புறப்படுத்திய சிதிலமடைந்த சில கல் துண்டுகளில் பழங்கால வரிவடிவில் கல்வெட்டுக்கள் இருப்பதைக் கண்ட விவரமறிந்த பக்தர் ஒருவர் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமூட்டிய தகவல்கள்

அங்கு வந்த இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டாய்வாளர்கள் (டாக்டர் ராஜவேலு, ரகு, அழகேசன்) சிவலிங்கம் இருக்கும் மண்மேட்டையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்தனர். மிகவும் சிதிலமடைந்து உடைந்து போன கல்வெட்டுக்களைப் படியெடுத்துச் சென்றனர். முடிவில் அவர்கள் சொன்ன தகவல் அன்னம்புத்தூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதிட்டானத்தின் குமுதவரியில் இருந்த இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் சுமார் கி.பி1008ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் இந்த கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் (பல்லவர்களை வென்று கைப்பற்றிய தொண்டை நாடு) கிடங்கில் நாட்டைச் (தற்போதைய திண்டிவனம்) சேர்ந்த அன்னம்புத்தூரில் உள்ள நிதீசுவரர் ஆலய வழிபாட்டிற்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக ஊருக்கு வடக்கே நிலம் கொடையாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் நிதீசுவரர் என்பது தெளிவாகிறது.

மேலும் மண்மேட்டின் கீழ்ப்பகுதியில் காணப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு பல்லவர் காலக் கட்டிடக் கலையைக் காட்டுகிறது. கிடைக்கப்பட்ட விநாயகரின் சிற்பமும் பல்லவர்கள் காலத்தைச் சார்ந்ததே. ஆக சோழர்கள் காலத்திற்கு முன்பே பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் பல்லவர்களை வென்று பின்னர் வந்த சோழர் ஆட்சியில் முதலாம் ராஜராஜ சோழன் இந்த சிவாலயத்தின் மீது பக்தி கொண்டு ஆலயத்தை புணரமைத்து திருப்பணிகள் செய்திருக்கலாம் என்பதும் தெரியவருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில். முதலாம் ராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்த கோயில். நிதிகளுக்கு அதிபதியான குபேரன் இங்கு வந்து ஈசனை வழிபட்டு அட்டநிதிகளையும் பெற்ற கோயில். எனவே இங்குள்ள மூலவர் நிதீசுவரர் என்ற திருநாமம் பெறுகிறார். பொய் சொன்ன பிரம்மனின் பாவத்தைப் போக்கி, அவரது தலையெழுத்தையே மாற்றி எழுதிய மகேசுவரன் அருளும் கோயில். (பிரம்மனும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடியை தேடிச் சென்றனர். அப்போது முடி தேடிச் சென்று தோற்றுப்போன பிரம்மன், முடியைக் கண்டேன் என்று பொய் சொன்னதால் பெற்ற பாவத்தை தீர்க்க இங்கு வந்து ஈசனை வழிபட்டதாகவும் அன்னமூர்த்தி, அன்ன வாகனன் என்றெல்லாம் பெயர்கொண்ட பிரம்மனின் பாவத்தை போக்கிய தலம் அமைந்த இடமாதலால் இந்த ஊருக்கு அன்னம்புத்தூர் என்று பெயர் அமைந்ததாக சொல்கிறது சோழ மன்னனின் கல்வெட்டு.)

தொல்லியல் துறை ஆய்வுகளின் இந்தச் செய்தி, அன்னம்புத்தூர் மக்களிடம் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இத்தனைச் சிறப்புகளை பெற்ற இந்த ஈசனை இப்படி வெட்டவெளியிலா இருக்கவைப்பது? மளமளவென செயலில் இறங்கினர் ஊர்மக்கள். மண்மேட்டில் இருந்த நிதீசுவரரை முதலில் அருகில் குடிசையில் அமர்த்தினர். உடனடியாக ஒரு திருப்பணிக் குழுவை அமைத்து ஆலயத்தை மீளக்கட்டுமானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

‘அந்த ஈசனே நமக்கு துணை நிற்பான்’ என்று அந்த மகேசுவரன் மேல் பாரத்தை போட்டுவிட்டு கருங்கல் கற்றளியாகவே ஆலயம் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஊர் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், விவரமறிந்து நிதீஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் என ஓவ்வொருவரும் மனமுவந்து அளிக்கும் பொருளுதவியால் ஆலயம் இன்று கனகம்பீரமான கற்றளியாக எழுந்து வருவதாக மனம் உருகிச் சொல்கிறார்கள் திருப்பணிக்குழு அன்பர்கள்.

இத்தனைத் தொன்மையும் புராதனச் சிறப்பும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட இந்தத் தலத்தின் மகிமையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறார்கள் அன்னம்புத்தூர் கிராம மக்கள். புதிதாக ஆலயங்கள் கட்டுவதைவிட நமது நாட்டில் வழிபாடில்லாமல் எண்ணற்ற ஆலயங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அவற்றை மறுகட்டுமானம் செய்து வழிபாட்டிற்கு திறந்து வைப்பதே மிகப் பெரிய புண்ணியம். (திஹிண்டுதமிழ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக