புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தாளே.... வசந்தா!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் தன் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய வசந்தா டிசம்பர் மாதம் ஏழாம் தேதியன்று தானும் கணவன் மோகனும் மகள் சிந்துவும் பதினைந்து நாள்கள் விடுமுறையில் வெஸ்ட் வர்ஜீனியாவிலிருந்து சென்னைக்கு வரப்போவதாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.
"பதினைந்து நாட்களுக்கு மட்டும்தானா?' என்று சரஸ்வதிக்கும் ஷங்கருக்கும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் வசந்தா கலியாணமாகி அமெரிக்கா போய் ஐந்து வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் முதல்முறையாகச் சென்னை வருகிறாள். மூன்று வருடங்களுக்கு முன்பு சிந்து பிறந்தபோது வசந்தாவுக்கு உதவியாக இருக்க சரஸ்வதி மட்டும் அமெரிக்கா போயிருந்தாள். ஷங்கருக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்காததால் போக முடியவில்லை. ஷங்கர் இப்போதுதான் பேத்தியை நேரில் பார்க்கப் போகிறார்.
அவ்வப்போது ஸ்க்கைப்பில் மகளையும் மருமகனையும், பேத்தியையும் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா? அவர்கள் சென்னைக்கு வரப்போவதை நினைத்துப் பெற்றவர்கள் இருவருமே மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஷங்கர் உடனே தீர்மானித்து விட்டார்.
டிசம்பரில் வசந்தா வந்துவிட்டுத் திரும்பி அமெரிக்கா போகும் வரை அவன் அலுவலகம் போக மாட்டான். அவன் வேலை பார்த்த நிறுவனத்தின் எம்.டி.யைச் சந்தித்துச் சூசகமாகத்தான் அப்போது விடுப்பு எடுக்கப் போவதைச் சொல்லிவிட வேண்டியதுதான்.
எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கையில் உற்சாகத்தையும் சுவாரஸ்யத்தையும் நிலைக்க வைக்கின்றன. அன்று முதல் ஷங்கருக்கும், சரஸ்வதியும் தினமும் உட்கார்ந்து வசந்தா வரும்போது என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பட்டியலிடத் துவங்கினார்கள்.முதலில் தி.நகரிலுள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.
பிறகு ஒருநாள் மாலை பீச் போக வேண்டும். சென்னையில் முளைத்துள்ள மால்கள், முடிந்தால் மகாபலிபுரம். பிரபல உணவகம் எதற்காவது அழைத்துச் சென்று இரவு உணவு சாப்பிட வேண்டும் என்று பட்டியல் நீண்டது. இதற்கு மத்தியில் நவம்பரில் பெங்களூரிலிருந்து ஷங்கரின் நெருங்கிய உறவினர் தாசரதியின் மகள் திருமணத்திற்கான அழைப்பும் கடிதமும் வந்தது.
கலியாணத்துக்குப் போய் வந்து பெங்களூர் குளிரோ சாப்பாடோ தனக்கு ஒத்துக் கொள்ளாமல் உடம்புக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று சரஸ்வதி பயந்தாள். "நான் டிசம்பரில் லீவு எடுக்கணும். அதற்கு முன்னாலும் லீவு எடுத்து பெங்களூர் போவது எனக்கு நடக்காத காரியம்' என்று ஷங்கர் மணமகளுக்கு வாழ்த்துக் கடிதத்தையும் அன்பளிப்பாகக் காசோலையையும் அனுப்பிவைத்தான்.
சில தினங்களில்... அவனுக்கு இடது கண்ணில் லேசாகப் பார்வை மங்குவது போல் தோன்றியது. கண் மருத்துவரிடம் போனால் காட்ராக்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவர் அபிப்பிராயம் சொன்னார்."ஆபரேஷனா! நத்திங் டூயிங். தற்காலிகமாக ஏதாவது சொட்டு மருந்து கொடுங்க. எங்க பெண் அமெரிக்காவிலிருந்து வரப்போகிறாள். அவர் கிளம்பிப் போனபிறகு பார்க்கலாம்.'
"உங்கள் விருப்பப்படி செய்யுங்க' என்று டாக்டர் விட்டுவிட்டார்."சீஸன் கச்சேரி எதுக்காவது போக ஆசையா வசந்தா? டிக்கட் வாங்கி வைக்கட்டுமா?' என்று பேசும்போது தன் மகளிடம் சரஸ்வதி கேட்டபோது... அவள் அதற்கெல்லாம் தனக்கு நேரமிருக்காது என்று மறுத்துவிட்டாள்.
வசந்தா திருமணத்திற்கு முன்பு நான்கைந்து ஆண்டுகள் முறைப்படி இசையைக் கற்றுக் கொண்டவள். சீஸன் கச்சேரிகளில் பாடகர்கள் வசந்தா ராகம் பாடுகிறார்களோ இல்லையோ... ஆனால்... அவள் மகள் வசந்தா நிச்சயம் கச்சேரியில் இருப்பாள். ஆனால் இப்போது ரசனைகளும், ஈடுபாடுகளும் மாறிவிட்டனவோ!வசந்தா வரும்போது அவளை உட்காரவைத்து இரண்டு பாட்டாவது பாடச்சொல்லக் கேட்டு விடவேண்டும் என்று நினைத்துக் கொண்ட சரஸ்வதி பெரிய ஷாப்பிங் லிஸ்ட் போட்டாள்.
வீட்டு ஜன்னல்களில் திரைச்சீலையிலிருந்து, மேஜை விரிப்புகள் என்று எல்லாமே புதிதாக வாங்கப்பட்டன.
சமையலறையில் புதிய குக்கர். சாப்பிடும் தட்டுகள், டபரா டம்ளர் என்று எல்லாமே புதுமுகங்களுடன் அலமாரியில் உட்கார்ந்து கொண்டன. இது தவிர வசந்தாவுக்கும், சிந்துவுக்கும், மோகனுக்கும் அன்பளிப்புகளை வாங்கி அவர்கள் இருக்கும்போகிற அறையில் சூட்கேஸில் வைத்தாகிவிட்டது வீடே அமர்க்களப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் வசந்தாவும் மோகனும் சிந்துவுடன் வந்து இறங்கினார்கள். வீடு வந்து சேரவே இரவு இரண்டரை மணியாகிவிட்டது. மறுநாள் முழுவதும் ஜெடலாக்கில் அவர்கள் படுக்கையை விட்டே எழுந்திருக்க முடியாமல் இருந்தது. அடுத்த நாளே சதாப்தியில் கிளம்பி மைசூரில் வசித்த மோகனுடைய பெற்றோர்களுடன் ஒரு வாரம் இருந்துவிட்டு வரக் கிளம்பினார்கள். திரும்பி வந்ததும் மோகனுக்குப் பாண்டிச்சேரி போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றவே மூவருமாய் போய் வந்தார்கள்.
அங்கிருந்து வரும்போதே சிந்துகுட்டிக்கு வயிற்றுப்போக்கு ஜூரத்துடன் வந்தது.உடனே அவளை டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டியதாயிற்று. கை கால்களை அசைக்கக்கூட் சக்தி இல்லாமல் பலஹீனமாகிவிட்ட அவளை உடனே மருத்துவமனையில் அடமிட் செய்ய வேண்டியதாயிற்று.
ட்ரிப்ஸ் ஏற்றி சிந்து கொஞ்சம் சரியானதும் வீட்டுக்க அழைத்துவர இரண்டு நாள்களாகின.
பதினைந்து நாள்கள் விடுமுறையானது கிடுகிடுவென்று இப்படிக் கரைந்து வசந்தா திரும்ப அமெரிக்காவுக்கு கிளம்ப மூன்று தினங்களே மீதமிருந்தன. அவர்கள் சென்னை வந்திருப்பது அறிந்து, தெரிந்தவர்கள், உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருந்தது.
என்னதான் சிந்து பழையபடி துள்ளலுடன் வளைய வந்தாலும் சரஸ்வதிக்கு உள்ளூரப் பயம்பிடித்துக் கொண்டது. வந்தவர்கள் நல்லபடி ஆரோக்கியமான உடல்நிலையுடன் அமெரிக்கா திரும்பிப் போக வேண்டுமே என்று அவள் இஷ்ட தெய்வமான வைத்தீஸ்வரனுக்கு வேண்டிக்கொண்டாள்.தங்கள் சிநேகிதர்களுக்கான கிஃப்ட் அயிட்டங்களை வாங்க வசந்தாவும் மோகனும், சிந்துவை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு கிளம்பிவிட்டார்கள்.
கொஞ்ச நேரம் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த சிந்து திடீரென்று "அம்மா வேணும்' என்று அழத்துவங்கினாள். கைப்பேசியில் வசந்தாவுடன் ஷங்கர் தொடர்பு கொண்ட போது அவள் "உங்கள் செல்லப்பேத்தி கொஞ்சம் அழுதால் பரவாயில்லை. நாங்க வந்த வேலையை முடிச்சுண்டுதான் வருவோம்' என்று சொல்லிவிட்டாள்.சிந்துவின் அழுகை இன்னும் தூக்கலாகிப் போகவே மறுபடி மோகனிடம் பேசி அவர்கள் மாடவீதியில் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு சரஸ்வதியையும், சிந்துவையும் அழைத்துக் கொண்டு ஷங்கர் கிளம்பினான்.
நல்ல நாளிலேயே மாடவீதியில் மனிதப்பிரவாகம் நிறைந்திருக்கும். புத்தாண்டு அருகில் நெருங்கிக் கொண்டிருந்ததால் அதைக் காரணம் காட்டிச் சிறப்புத் தள்ளுபடி விலையில் கடைகளில் தள்ளிவிடப்பட்ட பொருட்களை அள்ளிக் கொண்டு போகவந்தவர்களின் கூட்டம் அலைபாய்ந்தது.
"ஏன் தாத்தா சென்னையிலிருக்கிறவர்களுக்குப் போதுமான அளவுக்கு வீடுகள் இல்லையா? எல்லாரும் ஏன் தெருவிலேயே இருக்காங்க?' என்று மழலை நீங்காத ஆங்கிலத்தில் கேட்டுச் சூழ்நிலையில் நிலவிய இறுக்கத்தைக் குறைத்தாள் சிந்து. எப்படியோ ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு அனைவரும் வீடு திரும்ப இரவு மணி பத்தாகிவிட்டது.
வசந்தாவும், மோகனும் தாங்கள் வாங்கி வந்திருந்த சாமான்களைப் பெட்டிக்குள் திணிக்கவே கஷ்டப்பட்டார்கள். எடை மிஷினை வைத்துக் கொண்டு பெட்டியை நிறுத்தி, அதிகமான பொருட்களை எடுத்து இன்னொன்றில் வைத்து என்று... திண்டாடிக் கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது.வசந்தாவுக்கு தன் பெற்றோர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லையே என்கிற குறை மனசில் அடிக்கடித் தலைதூக்கிக் கொண்டிருந்தது.
"உங்களோடு இருந்த மாதிரியே இல்லை... நீங்க அமெரிக்கா வாங்களேன்..' என்று தாபத்துடன் சொன்னாள்.
"நான் ரிடையர் ஆகிறவரை அதற்கு வாய்ப்பில்லை.. அப்படி வந்தால்கூட உங்களமாதிரி இரண்டு வாரங்களுக்குத் தான் வரமுடியும். அத்துடன் ஏகப்பட்ட ஏற்பாடுகள் பண்ணணும். அதைப் பிறகு பார்க்கலாம். அடுத்தமுறை ஒரு மாதமாவது இருக்கிறபடி வாங்க' என்றான் ஷங்கர்."எனக்கு" அதே ப்ராப்ளம்தான் அங்கிள். லீவு கிடைக்காது. வசந்தாவையும் சிந்துவையும் அனுப்ப முயற்சி பண்றேன' என்றான் மோகன்.
ஆயிற்று அவர்கள் கிளம்ப வேண்டிய நாளும் வந்துவிட்டது. விமான நிலையம் வரை அவர்களுடன் சென்று பெற்றவர்கள் வழி அனுப்பிவிட்டு வந்தார்கள்.வீடு திரும்பியபோது அது வெறிச்சிட்டுக் கிடந்தது. சரஸ்வதியின் மனதில் சொல்ல முடியாத சோகத்தைக் கிளப்பி கண்களில் நீர்த்திரை படர்ந்தது.
வசந்தா வரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், அதற்காக அவர்கள் செய்த ஆயத்தங்களும், அவர்களது காத்திருப்பு நேரமும்தான் மிக அதிகமாக இருந்தன. அவள் குடும்பம் வந்ததும் கிளம்பிப் போனதும் நொடியில் நிகழ்ந்து விட்ட மாதிரி தோன்றியது. அந்தப் பிரிவின் வலி அவளுக்கு மட்டுமானதல்ல. தங்கள் பெண் பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து வெளிநாடுகளில் தங்கள் பொருளாதாரத் தேடங்களுக்காக அனுப்பிவிட்டு, பிரிவை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும் பொதுவானது.
ஆனால்... அடுத்தமுறை தங்கள் சந்ததிகளைச் சந்திக்கும் வரை அவர்கள் வந்துவிட்டு போன நினைவுகளை அசைபோட்டு நாக்கில் சொட்டிய தேன் துளிகளின் சுவையை ரசிப்பதுபோல் தங்களுக்குக் கிடைத்த சந்தோஷங்களை அவ்வப்போது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் வாழ்க்கை ஓடிவிடும்.
- லட்சுமி ரமணன்
"பதினைந்து நாட்களுக்கு மட்டும்தானா?' என்று சரஸ்வதிக்கும் ஷங்கருக்கும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் வசந்தா கலியாணமாகி அமெரிக்கா போய் ஐந்து வருடங்களாகிவிட்டன. இப்போதுதான் முதல்முறையாகச் சென்னை வருகிறாள். மூன்று வருடங்களுக்கு முன்பு சிந்து பிறந்தபோது வசந்தாவுக்கு உதவியாக இருக்க சரஸ்வதி மட்டும் அமெரிக்கா போயிருந்தாள். ஷங்கருக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்காததால் போக முடியவில்லை. ஷங்கர் இப்போதுதான் பேத்தியை நேரில் பார்க்கப் போகிறார்.
அவ்வப்போது ஸ்க்கைப்பில் மகளையும் மருமகனையும், பேத்தியையும் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா? அவர்கள் சென்னைக்கு வரப்போவதை நினைத்துப் பெற்றவர்கள் இருவருமே மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஷங்கர் உடனே தீர்மானித்து விட்டார்.
டிசம்பரில் வசந்தா வந்துவிட்டுத் திரும்பி அமெரிக்கா போகும் வரை அவன் அலுவலகம் போக மாட்டான். அவன் வேலை பார்த்த நிறுவனத்தின் எம்.டி.யைச் சந்தித்துச் சூசகமாகத்தான் அப்போது விடுப்பு எடுக்கப் போவதைச் சொல்லிவிட வேண்டியதுதான்.
எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கையில் உற்சாகத்தையும் சுவாரஸ்யத்தையும் நிலைக்க வைக்கின்றன. அன்று முதல் ஷங்கருக்கும், சரஸ்வதியும் தினமும் உட்கார்ந்து வசந்தா வரும்போது என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்துப் பட்டியலிடத் துவங்கினார்கள்.முதலில் தி.நகரிலுள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.
பிறகு ஒருநாள் மாலை பீச் போக வேண்டும். சென்னையில் முளைத்துள்ள மால்கள், முடிந்தால் மகாபலிபுரம். பிரபல உணவகம் எதற்காவது அழைத்துச் சென்று இரவு உணவு சாப்பிட வேண்டும் என்று பட்டியல் நீண்டது. இதற்கு மத்தியில் நவம்பரில் பெங்களூரிலிருந்து ஷங்கரின் நெருங்கிய உறவினர் தாசரதியின் மகள் திருமணத்திற்கான அழைப்பும் கடிதமும் வந்தது.
கலியாணத்துக்குப் போய் வந்து பெங்களூர் குளிரோ சாப்பாடோ தனக்கு ஒத்துக் கொள்ளாமல் உடம்புக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று சரஸ்வதி பயந்தாள். "நான் டிசம்பரில் லீவு எடுக்கணும். அதற்கு முன்னாலும் லீவு எடுத்து பெங்களூர் போவது எனக்கு நடக்காத காரியம்' என்று ஷங்கர் மணமகளுக்கு வாழ்த்துக் கடிதத்தையும் அன்பளிப்பாகக் காசோலையையும் அனுப்பிவைத்தான்.
சில தினங்களில்... அவனுக்கு இடது கண்ணில் லேசாகப் பார்வை மங்குவது போல் தோன்றியது. கண் மருத்துவரிடம் போனால் காட்ராக்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவர் அபிப்பிராயம் சொன்னார்."ஆபரேஷனா! நத்திங் டூயிங். தற்காலிகமாக ஏதாவது சொட்டு மருந்து கொடுங்க. எங்க பெண் அமெரிக்காவிலிருந்து வரப்போகிறாள். அவர் கிளம்பிப் போனபிறகு பார்க்கலாம்.'
"உங்கள் விருப்பப்படி செய்யுங்க' என்று டாக்டர் விட்டுவிட்டார்."சீஸன் கச்சேரி எதுக்காவது போக ஆசையா வசந்தா? டிக்கட் வாங்கி வைக்கட்டுமா?' என்று பேசும்போது தன் மகளிடம் சரஸ்வதி கேட்டபோது... அவள் அதற்கெல்லாம் தனக்கு நேரமிருக்காது என்று மறுத்துவிட்டாள்.
வசந்தா திருமணத்திற்கு முன்பு நான்கைந்து ஆண்டுகள் முறைப்படி இசையைக் கற்றுக் கொண்டவள். சீஸன் கச்சேரிகளில் பாடகர்கள் வசந்தா ராகம் பாடுகிறார்களோ இல்லையோ... ஆனால்... அவள் மகள் வசந்தா நிச்சயம் கச்சேரியில் இருப்பாள். ஆனால் இப்போது ரசனைகளும், ஈடுபாடுகளும் மாறிவிட்டனவோ!வசந்தா வரும்போது அவளை உட்காரவைத்து இரண்டு பாட்டாவது பாடச்சொல்லக் கேட்டு விடவேண்டும் என்று நினைத்துக் கொண்ட சரஸ்வதி பெரிய ஷாப்பிங் லிஸ்ட் போட்டாள்.
வீட்டு ஜன்னல்களில் திரைச்சீலையிலிருந்து, மேஜை விரிப்புகள் என்று எல்லாமே புதிதாக வாங்கப்பட்டன.
சமையலறையில் புதிய குக்கர். சாப்பிடும் தட்டுகள், டபரா டம்ளர் என்று எல்லாமே புதுமுகங்களுடன் அலமாரியில் உட்கார்ந்து கொண்டன. இது தவிர வசந்தாவுக்கும், சிந்துவுக்கும், மோகனுக்கும் அன்பளிப்புகளை வாங்கி அவர்கள் இருக்கும்போகிற அறையில் சூட்கேஸில் வைத்தாகிவிட்டது வீடே அமர்க்களப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் வசந்தாவும் மோகனும் சிந்துவுடன் வந்து இறங்கினார்கள். வீடு வந்து சேரவே இரவு இரண்டரை மணியாகிவிட்டது. மறுநாள் முழுவதும் ஜெடலாக்கில் அவர்கள் படுக்கையை விட்டே எழுந்திருக்க முடியாமல் இருந்தது. அடுத்த நாளே சதாப்தியில் கிளம்பி மைசூரில் வசித்த மோகனுடைய பெற்றோர்களுடன் ஒரு வாரம் இருந்துவிட்டு வரக் கிளம்பினார்கள். திரும்பி வந்ததும் மோகனுக்குப் பாண்டிச்சேரி போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரவேண்டும் என்று தோன்றவே மூவருமாய் போய் வந்தார்கள்.
அங்கிருந்து வரும்போதே சிந்துகுட்டிக்கு வயிற்றுப்போக்கு ஜூரத்துடன் வந்தது.உடனே அவளை டாக்டரிடம் அழைத்துப்போக வேண்டியதாயிற்று. கை கால்களை அசைக்கக்கூட் சக்தி இல்லாமல் பலஹீனமாகிவிட்ட அவளை உடனே மருத்துவமனையில் அடமிட் செய்ய வேண்டியதாயிற்று.
ட்ரிப்ஸ் ஏற்றி சிந்து கொஞ்சம் சரியானதும் வீட்டுக்க அழைத்துவர இரண்டு நாள்களாகின.
பதினைந்து நாள்கள் விடுமுறையானது கிடுகிடுவென்று இப்படிக் கரைந்து வசந்தா திரும்ப அமெரிக்காவுக்கு கிளம்ப மூன்று தினங்களே மீதமிருந்தன. அவர்கள் சென்னை வந்திருப்பது அறிந்து, தெரிந்தவர்கள், உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருந்தது.
என்னதான் சிந்து பழையபடி துள்ளலுடன் வளைய வந்தாலும் சரஸ்வதிக்கு உள்ளூரப் பயம்பிடித்துக் கொண்டது. வந்தவர்கள் நல்லபடி ஆரோக்கியமான உடல்நிலையுடன் அமெரிக்கா திரும்பிப் போக வேண்டுமே என்று அவள் இஷ்ட தெய்வமான வைத்தீஸ்வரனுக்கு வேண்டிக்கொண்டாள்.தங்கள் சிநேகிதர்களுக்கான கிஃப்ட் அயிட்டங்களை வாங்க வசந்தாவும் மோகனும், சிந்துவை தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டு கிளம்பிவிட்டார்கள்.
கொஞ்ச நேரம் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த சிந்து திடீரென்று "அம்மா வேணும்' என்று அழத்துவங்கினாள். கைப்பேசியில் வசந்தாவுடன் ஷங்கர் தொடர்பு கொண்ட போது அவள் "உங்கள் செல்லப்பேத்தி கொஞ்சம் அழுதால் பரவாயில்லை. நாங்க வந்த வேலையை முடிச்சுண்டுதான் வருவோம்' என்று சொல்லிவிட்டாள்.சிந்துவின் அழுகை இன்னும் தூக்கலாகிப் போகவே மறுபடி மோகனிடம் பேசி அவர்கள் மாடவீதியில் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு சரஸ்வதியையும், சிந்துவையும் அழைத்துக் கொண்டு ஷங்கர் கிளம்பினான்.
நல்ல நாளிலேயே மாடவீதியில் மனிதப்பிரவாகம் நிறைந்திருக்கும். புத்தாண்டு அருகில் நெருங்கிக் கொண்டிருந்ததால் அதைக் காரணம் காட்டிச் சிறப்புத் தள்ளுபடி விலையில் கடைகளில் தள்ளிவிடப்பட்ட பொருட்களை அள்ளிக் கொண்டு போகவந்தவர்களின் கூட்டம் அலைபாய்ந்தது.
"ஏன் தாத்தா சென்னையிலிருக்கிறவர்களுக்குப் போதுமான அளவுக்கு வீடுகள் இல்லையா? எல்லாரும் ஏன் தெருவிலேயே இருக்காங்க?' என்று மழலை நீங்காத ஆங்கிலத்தில் கேட்டுச் சூழ்நிலையில் நிலவிய இறுக்கத்தைக் குறைத்தாள் சிந்து. எப்படியோ ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு அனைவரும் வீடு திரும்ப இரவு மணி பத்தாகிவிட்டது.
வசந்தாவும், மோகனும் தாங்கள் வாங்கி வந்திருந்த சாமான்களைப் பெட்டிக்குள் திணிக்கவே கஷ்டப்பட்டார்கள். எடை மிஷினை வைத்துக் கொண்டு பெட்டியை நிறுத்தி, அதிகமான பொருட்களை எடுத்து இன்னொன்றில் வைத்து என்று... திண்டாடிக் கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது.வசந்தாவுக்கு தன் பெற்றோர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லையே என்கிற குறை மனசில் அடிக்கடித் தலைதூக்கிக் கொண்டிருந்தது.
"உங்களோடு இருந்த மாதிரியே இல்லை... நீங்க அமெரிக்கா வாங்களேன்..' என்று தாபத்துடன் சொன்னாள்.
"நான் ரிடையர் ஆகிறவரை அதற்கு வாய்ப்பில்லை.. அப்படி வந்தால்கூட உங்களமாதிரி இரண்டு வாரங்களுக்குத் தான் வரமுடியும். அத்துடன் ஏகப்பட்ட ஏற்பாடுகள் பண்ணணும். அதைப் பிறகு பார்க்கலாம். அடுத்தமுறை ஒரு மாதமாவது இருக்கிறபடி வாங்க' என்றான் ஷங்கர்."எனக்கு" அதே ப்ராப்ளம்தான் அங்கிள். லீவு கிடைக்காது. வசந்தாவையும் சிந்துவையும் அனுப்ப முயற்சி பண்றேன' என்றான் மோகன்.
ஆயிற்று அவர்கள் கிளம்ப வேண்டிய நாளும் வந்துவிட்டது. விமான நிலையம் வரை அவர்களுடன் சென்று பெற்றவர்கள் வழி அனுப்பிவிட்டு வந்தார்கள்.வீடு திரும்பியபோது அது வெறிச்சிட்டுக் கிடந்தது. சரஸ்வதியின் மனதில் சொல்ல முடியாத சோகத்தைக் கிளப்பி கண்களில் நீர்த்திரை படர்ந்தது.
வசந்தா வரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், அதற்காக அவர்கள் செய்த ஆயத்தங்களும், அவர்களது காத்திருப்பு நேரமும்தான் மிக அதிகமாக இருந்தன. அவள் குடும்பம் வந்ததும் கிளம்பிப் போனதும் நொடியில் நிகழ்ந்து விட்ட மாதிரி தோன்றியது. அந்தப் பிரிவின் வலி அவளுக்கு மட்டுமானதல்ல. தங்கள் பெண் பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து வெளிநாடுகளில் தங்கள் பொருளாதாரத் தேடங்களுக்காக அனுப்பிவிட்டு, பிரிவை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும் பொதுவானது.
ஆனால்... அடுத்தமுறை தங்கள் சந்ததிகளைச் சந்திக்கும் வரை அவர்கள் வந்துவிட்டு போன நினைவுகளை அசைபோட்டு நாக்கில் சொட்டிய தேன் துளிகளின் சுவையை ரசிப்பதுபோல் தங்களுக்குக் கிடைத்த சந்தோஷங்களை அவ்வப்போது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் வாழ்க்கை ஓடிவிடும்.
- லட்சுமி ரமணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அருமையான கதை
அப்பாவை அவன் என்று சொல்லி இருப்பது நல்லால்ல
ஆமாம் பானு எனக்கும் படிக்கும்போது அது நெருடலாக இருந்தது !
//வசந்தா வரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், அதற்காக அவர்கள் செய்த ஆயத்தங்களும், அவர்களது காத்திருப்பு நேரமும்தான் மிக அதிகமாக இருந்தன. அவள் குடும்பம் வந்ததும் கிளம்பிப் போனதும் நொடியில் நிகழ்ந்து விட்ட மாதிரி தோன்றியது. அந்தப் பிரிவின் வலி அவளுக்கு மட்டுமானதல்ல. தங்கள் பெண் பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து வெளிநாடுகளில் தங்கள் பொருளாதாரத் தேடங்களுக்காக அனுப்பிவிட்டு, பிரிவை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும் பொதுவானது.//
ஆனால் இது தான் நிஜம் பானு பணம் பணம் என்று பலபேர் ஆலாய் பறந்து பறந்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் சம்பாதிப்பது எதற்கு என்றே தெரியாமல் இருக்கா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|