புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
2 Posts - 1%
prajai
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
432 Posts - 48%
heezulia
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
29 Posts - 3%
prajai
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
முன்னேற்றப்பாதை Poll_c10முன்னேற்றப்பாதை Poll_m10முன்னேற்றப்பாதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னேற்றப்பாதை


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 1:16 pm

முன்னேற்ற லட்சியம் கொண்டவர்கள் உடனே செய்ய வேண்டியவை இரண்டு,

1.) பாக்கெட்டில் ஒரு பேனா ஒருபாக்கெட் நோட்டு இவை இரண்டையும் எல்லா நேரத்திலும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாக்கெட் நொட்டில் நாம் செய்ய வேண்டிய செயல், நேரம், சந்திக்க வேண்டிய மனிதர்கள், அறிய வேண்டிய நூல்கள் போன்று எல்லாவற்றையும் எழுதும் பழக்கத்தை செய்ய வேண்டும். இந்த பழக்கத்தைச் செய்பவர்கள், பெரும்பாலும் எந்த செயல்களையும் மறந்து விடுவதில்லை. இந்த பாக்கெட் நோட்டை யோசனை வங்கி ( IDEA BANK ) எனலாம். நாம் என்னென்ன செய்தால் முன்னேறலாம், மேலும் தகுதியை எப்படி உயர்த்தலாம்? என்ற சிந்தனைகளுடனே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எந்த நிமிடமும் நமக்கு ‘ இப்படிச் செய்தால் என்ன? ‘இப்படியும் செய்யலாமே’ என்ற யோசனைகள் மனதிற்கள் தோன்றலாம். அதை உடனே – அந்த நொடியிலேயே எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு உறக்கத்தின் நடுவே திடீரென சில வழிகள் தோன்றலாம் அதையும் உடனே எழுத வேண்டும் ஏனெனில் உறங்கி எழுந்ததும் மறந்துவிடும். மனிதனின் ஞாபக சக்தி (Memory) என்பது, எளிதில் மறைந்துவிடும் ஆவியாகிவிடும் ( Volatile ) பொருள் போன்றது என்றால் மிகையாகாது.

2.) இரண்டாவது, நம் வாழ்க்கையில் எதிர்படும் வாய்ப்புகளை எந்த நிமிடமும் எதிர்கொள்ள தாயாராக இருக்கவேண்டும். வாய்ப்புகள் எப்போதும் தேடி வருவதில்லை. அதன் வழியில் போய்க் கொண்டே இருக்கும். நாம் நமது கைக்கு எட்டும் நிலைக்கு வரும்போது ” டக்கென்று ” பிடித்துக் கொள்ளவேண்டும். சில சமயங்களில் நாமே சில வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு தீவு, பெருவெள்ளத்தால் மூழ்கி கொண்டிருந்தது. பலர் முழ்கி மடிந்தனர். சிலர் தம்மால் இயன்ற முயற்சிகளை செய்து தப்பித்துக் கொண்டிருந்தனர். ஒருவன் மட்டும் அந்த தீவிலேயே உயரமாக இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ” கடவுள் என்னை எப்படியும் காப்பாற்றுவார் ” என்று நம்பிக் கொண்டு கடவுளையே வேண்டிக் கொண்டிருந்தான்.

வெள்ளப் பெருக்கின்போது பல்வேறு மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு படகு அந்த மரத்தின் பக்கம் வந்தது. அவனை அதில் தப்பிக்குமாறு கேட்டார்கள்.

” நான் வரவில்லை. என்னை கடவுள் காப்பாற்றுவார் ” என்று அதை விட்டுவிட்டான்.

சில நிமிடங்கள் கழித்து. ஹெலிகாப்டரில் உயரே இருந்து ஒரு கயிறு தொங்கியது. மேலிருந்து ஒலிபெருக்கயில் சொன்னார்கள், ‘ இந்த கயிற்றை பிடித்து, இடுப்பில் கட்டிக் கொள். உன்னை பாதுகாப்பாக வேறு இடத்தில் சேர்த்துவிடுகிறோம் ‘ என்றார். ” இல்லை, நான் வரமாட்டேன், என்னைக் கடவுள் காப்பாற்றுவார் ” என்றான். மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டே மரத்தில் அமர்ந்திருந்தான்.

வெள்ளம் பெருகிக் கொண்டே வந்தது. நீந்தும் ஆற்றல் கொண்ட ஒருவன், ஒரு நீச்சல் பாதுகாப்பு கவசத்துடன் அருகில் வந்து, ” இதை எடுத்துக் கொண்டு என்னுடன் வா எந்த சிரமமும் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் ” என்றான்.

” இல்லை, நான் வரமாட்டேன், கடவுள் என்னை எப்படியும் காப்பாற்றுவார் ” என்று மறுத்தவிட்டான். மென் மேலும் வெள்ளம் பெருகிக் கொண்டே இருந்தது. உயரமான மரமும் மூழ்கிவிட்டது. அதிலிருந்த மனிதனும் மூழ்கி இறந்தான்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 1:17 pm

மேல் உலகத்திற்கு சென்றான். அங்கு அவன் வேண்டிக் கொண்டிருந்த கடவுள் அங்கே நேரில் வந்தார், ” கடவுளே, நான் உங்களையே கடைசிவரையும் வேண்டிக் கொண்டு இருந்தேன். என்னை நீரில் மூழ்க விட்டுவிட்டீர்களே 1 இதுதான் உங்களை நம்பியவர்களின் கதியா ? ” என்றான்.

கடவுள் சொன்னார். ” மகனே ! படகில் வந்ததும், ஹெலிகாப்டரில் அழைத்ததும், நீச்சல் பாதுகாப்பு கவசத்தை அனுப்பியதும் என்னால் செய்யப்பட்ட செயல்களே. ஆனால் நீ அதை புரிந்து கொள்ளவில்லை. நானே நேரில் வந்து உன்னை அழைத்திருந்தாலும், அப்போதும் இவர் உண்மையில் கடவுள் தானா என்ற சந்தேகமே வந்திருக்கும் அப்போதும் நீ தப்பித்திருக்க மாட்டாய் !

வாழ்க்கை என்பது புதிர்கள் அடங்கிய விநோதமான ஒன்று. அது எப்படி ? யாருக்கு ? எப்போது விடை தெரியும், அடுத்த புதிர் எப்போது வரும் ? என்று யாரும் நிர்ணயிக்க முடியாது. நமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள், சவால்கள், போட்டிகள், சோதனைகள் அனைத்துமே புதிர்கள் தான்.

இவைகளை சந்திக்க வேண்டுமென்றால் குறுகிய கண்ணோட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, பரந்த மனப்பான்மையுடன் வாய்ப்புகளை எதிர் கொள்ளவேண்டும். அப்போது பல புதுமைகளைப் படைக்கலாம். முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

இதுவரை முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு நாம் பெற வேண்டிய சில திறமைகளை – பழக்கங்களைப் பற்றி பார்த்தோம். மேலும் மற்றவைகளை ஆராயுமுன் நாம் விலக்க வேண்டிய பல பழக்கங்களை – எண்ணங்களை சிறிது பார்ப்போம். அவைகள் தான் ஒவ்வொரு மனிதனின் உண்மையான எதிரிகள் ஆகும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல எதிரிகள் இருப்பார்கள். அவைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1.) நேரிடை எதிரிகள்
2.) உடனிருந்து செயல்படும் எதிரிகள்
3.) நமக்குள் நாமே வைத்துள்ள எதிரிகள் ( குணங்கள் )

இவற்றில் முதலாவது வகையைச் சேர்ந்த எதிரிகளை நமக்கு தெரியும். அவரிடம் சண்டை போட்டிருப்போம். அவரை விலக்கி வைத்திருப்போம். அவரின் செயல்பாட்டிற்கு நாம் தகுந்த முறையில் திறமையுடன் கூடிய எதிராற்றல்கள் மூலம் வென்றுவிடலாம்.

இரண்டாவது எதிரிகள், நமக்கு நண்பர்களாக உறவினர்களாக, வேண்டப்பட்ட சக தொழிலாளர்களாக நம்முடனே இருப்பவர்கள். இவர்கள் நம் அன்றாடச் சக தொழிலாளர்களாக நம்முடனே இருப்பவர்கள். இவர்கள் நம் அன்றாடச் செயல்களுக்கு தேவைப்பட்டவர்கள். சில நேரங்களில், எதிரிகளாக மாறிக் கொண்டிருப்பார்கள் இதைத் கண்டறிவது கடினம். ஆனாலும் இவர்களையும், அவரவர் எல்லையில் நிறுத்தி வென்றுவிடமுடியும்.

ஆனால், மூன்றாவது எதிரிகளான, நமது குறைபாடுகள். நமக்கு தெரியவே தெரியாது. பிறர் சொன்னால் கோபம் தான் வெடிக்கும். நாமே அறிந்து தெரியாது. பிறர் சொன்னால் கோபம் தான் வெடிக்கும். நாமே அறிந்து கொள்ள முனைந்தாலும், நமக்குள் உள்ள பொலிவான கவுரவம் நம்மைத் தடுத்து அவைகளை அறிய இயலாமல் செய்து விடும். இவைகளை அறிவதுதான் மிகக் கடினம். அறிந்து கொண்டாலும். அதை ஏற்றுக் கொள்வது அதைவிடக் கடினம். ஏற்றாலும் அதை மாற்றுவது. எல்லாவற்றையும் விட கடினமான செயலாகும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 1:18 pm

முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் இந்த குணங்கள் ( நமக்குள்ள எதிரிகளில் முக்கியமானவர்கள் ) இவை எப்படி நமக்குள் வந்தன ?

1.) பாரம்பரியம் மூலம்

2.) பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம்

3.) நாமாக பழகிக் கொண்டதன் மூலம்

இவற்றில் முதலாவதான பாரம்பரியத்தின் மூலம் ( Hereditary ) உண்டாகும் குணங்கள், நமக்குள்ள சில பல உணர்வுகளாகும். பிறப்பின் வழி உண்டாகின்றன.

இரண்டாவதான, பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உண்டாகும் குணங்கள் நமது குழந்தைப் பருவத்திலிருந்து, பிறரால் நமக்குள் திணிக்கப்பட்டவைகளாகும்.

மூன்றாவது வகை, நாம் பார்த்து, படித்து, பழகி, அனுபவித்து கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களே ஆகும்.

இவைகள் என்னென்ன என்பதை உணர சில கேள்விகளை கொடுத்துள்ளேன். இதை தனியிடத்தில், ரகசியமாக அமர்ந்து உங்களுடைய மனசாட்சியிடம் கேளுங்கள். யாருக்கும் காட்டாமல் அதற்கு வரும் பதிலை எழுதுங்கள். உங்களுடைய மனசாட்சியிடம் கேளுங்கள். யாருக்கும் காட்டாமல் அதற்கு வரும் பதிலை எழுதுங்கள். உங்களுக்கு உள்ள பலவீனம் ( அந்த எதிரிகள் ) யாரென்று தெரிந்து கொண்டு, அந்த பதில்களை எழுதிய காகிதத்தை யாரும் காட்டாமல் கிழித்து விடுங்கள்.

இதைக் குறிப்பிடக் காரணம், எந்த மனிதனும் தன்னுடைய பலவீனங்களை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு ஞானியல்ல. வெளியே சொன்னால் விபரீதங்களும் ஏற்படும். இதை அறியாமல் விட்டுவிட்டால், நம்மை ஆட்டிக் கொண்டே இருந்து. முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாகி விடும். சிலருக்கு முன்னேறியது போன்றிருந்தாலும், திடீரென்று ஒரு கட்டத்தில் சறுக்கிவிடும்.

வாழ்க்கையில் முன்னேற முடியாமல் அவதிப்படுகிற எல்லாருக்கும் இந்த எதிரிகளை உடனிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

டாக்டர் G. இராமநாதன் M.D., அவர்கள் எழுதிய
எதிரிகளை விலக்குங்கள் என்ற பதிப்பிலிருந்து



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக