புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
3 Posts - 4%
prajai
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
3 Posts - 4%
Jenila
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
7 Posts - 6%
prajai
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
5 Posts - 4%
Jenila
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
4 Posts - 3%
Rutu
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
1 Post - 1%
manikavi
தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_m10தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 11, 2014 4:47 pm

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..? P16a

'பதினாறு வயதுக்குட்பட்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம்’ என்கிற அறிவிப்பு இல்லை. இருட்டோ இருட்டில், ஓபனிங் ஷாட் வைக்கவில்லை. சின்ன வெளிச்சத்தில் மோப்ப நாய் ஓடுவதைக் காட்டவில்லை. கேமராவில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லை. ரெயின் கோட், தலையில் தொப்பி சகிதம் ஓர் உருவம் மழையில் நனைந்தபடி நடந்துவரவில்லை. 'வீல்ல்ல்’ என அலறல் சத்தத்துக்கு 'டி.டி.எஸ். எஃபெக்ட்' கொடுக்கவில்லை. முத்தக் காட்சியோ... மொத்தமாக இல்லை. இத்தனை 'இல்லை’களுடன், ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காகவே, புதுமுக இயக்குநர் ரமேஷ§க்கு சல்யூட் வைக்கலாம்!

கதாநாயகன் துப்பறிவாளன். அவனைச் சுற்றி நடக்கும் கொலைகளை மையமாகக்கொண்டு கதை நகர்கிறது. கொலைகளை செய்தது யார், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மோசடி செய்கிறார்களா, அவர்களுக்கு உடந்தையாக இருப்பது யார், அதை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறான்..? இது மாதிரியான பல மர்ம முடிச்சுகளை அடுக்கிக்கொண்டு த்ரில்லாக நகரும் திரைப்படம் 'தெகிடி’. சத்தமில்லாமல் வந்து, பலரையும் பேசவைத்திருக்கிறது படம்!

படத்தின் பெயருக்கான அர்த்தம் தொடங்கி, படம் எழுப்பியிருக்கும் அதிர்ச்சி வரை பேச, 'தெகிடி’ இயக்குநர் ரமேஷை சந்தித்தபோது, தன் மனைவிக்கு முதலில் மரியாதை செய்தார்!

''நான், பக்கா சென்னைக்காரன். சின்ன வயசுல இருந்தே சினிமா மேல காதல். ஐ.டி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தப்போ, கலைஞர் டி.வி 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். டைட்டில் வின்னர் ஆனேன். என்னோட ஏழு குறும்படங்களுமே சமூகத்துக்கு ஏதாவது கருத்து சொல்ற மாதிரிதான் இருக்கும். அதனால, முதல் திரைப்படத்திலும், கருத்து சொல்ல நினைச்சேன்.

பெரும்பாலானவங்க, 'கல்யாணத்துக்கு முன்னயே கேரியரை ஸ்ட்ராங் பண்ணிக்கணும்'னு நினைப்பாங்க. என்னோட கனவு வாழ்க்கையே, கல்யாணத்துக்குப் பிறகுதான். மனைவி ஹரிப்ரியா, அந்தளவுக்கு ஆதரவு. 'தெகிடி’ படத்துக்கு தயார் செய்த மூணு மாதிரியான கதைகளையும் மனைவிகிட்டதான் முதல்ல பேசினேன். அவங்கதான் மெருகேத்திக் கொடுத்தாங்க. என்னோட குறும்படங்களைப் பார்த்துட்டு, 'இது சரியில்ல, அது சரியில்ல’னு நிறைய திருத்தங்களை சொல்லியிருக்காங்க. ஆனா, 'தெகிடி’ பார்த்துட்டு சின்ன திருத்தத்தைக்கூட சொல்லல. அப்பவே பாதி ஜெயிச்ச மாதிரி ஆயிடுச்சு. ஒவ்வொரு கலைஞனுக்கும் பக்கபலமே மனைவிதான். அதேமாதிரி என் வெற்றிக்கும் ஹரிப்ரியாதான் காரணம்'' என்ற ரமேஷ்,

''விட்டா அவங்கள பத்தியே இந்த பேட்டி முழுக்க சொல்லிட்டே போவேன்... கொஞ்சம் படம் பத்தியும் பேசலாம்!'' என்று பூரிப்பு மாறாமல் தொடர்ந்தார்.

''படம் பார்த்த எல்லோரும் கேட்கிற கேள்வி, 'இதுமாதிரி இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கா?’ என்பதுதான். மனைவிக்குத் தெரியாமல் கணவனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அதன் காரணமாக ஏமாந்தது, பாதிக்கப்பட்டது நிறையவே செய்தித்தாள்களிலும், இணையத்திலும் படிச்சுருக்கேன். குறிப்பா, வடஇந்தியாவுல இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கு. இதிலிருந்தே என்னோட படத்துக்கான கருவை உருவாக்க ஆரம்பிச்சேன்.

அதேமாதிரி தினம் தினம் தெரியாத நம்பர்களில் இருந்துவரும் போன்கால்கள், எனக்கு இன்னொரு முடிச்சை கொண்டு வந்து கொடுத்துச்சு. 'சார், நான் இன்ஷூரன்ஸ் கம்பெனியில இருந்து பேசறேன்’னு ஒரு கால் வரும். இன்னொரு கால், 'நாங்க அனாதை ஆசிரமத்துல இருந்து பேசறோம்... ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா’னு கேட்பாங்க. 'ஈ.சி.ஆர் பக்கத்துல பிளாட்ஸ் இருக்கு வேணுமா?’னு போன் பண்ணிக் கேட்பாங்க.

இப்படி தினம் தினம் வரும் தேவையில்லாத போன்கால்கள், எனக்குள்ள நிறைய கேள்விகளை கேட்க வெச்சுது. யார் இவங்க, எப்படி இவங்களுக்கு நம்ம நம்பர் தெரியும்னு நமக்கு புரியாது. ஆனா, நமக்குத் தெரியாமலே நம்ம நம்பரை யாரோ ஒருத்தர்கிட்ட வாங்கறது நிச்சயம். அந்த ஒருத்தர் யார்... அது நம்ம கம்பெனியா, இல்ல வேற யாராவதானு குழம்பிப் போவேன். அதையே கருவா எடுத்துகிட்டு கற்பனை கதையை ரெடி பண்ணினேன். அதுதான் 'தெகிடி’.

இன்ஷூரன்ஸ் பிடிக்கிறதுக்கு முன்ன ஆயிரம் போன் கால்ஸ் வரும். ஆனா, பாலிஸி போட்ட பிறகு, ஒரு கால் கூட பண்ணிச் சொல்ல மாட்டாங்க. இது என் வாழ்க்கையிலும் நடந்துச்சு. இந்த மாதிரி நான் சந்திச்ச, கேள்விப்பட்ட விஷயங்களோட கற்பனைதான் 'தெகிடி’. படம் பார்த்த பிறகு, பாலிசி போடுறது பத்தின பயம் வந்திருக்கறதா நிறைய பேர் சொன்னாங்க. சொல்லப் போனா பாலிசி போட்டவங்களைவிட, போடாதவங்களுக்கான விஷயம்தான் என் படம். ஒவ்வொருத்தருக்குமே பாலிசி போடுற உரிமை இருக்கு. அது நல்லதும், அவசியமானதும்கூட. ஆனா, படத்துல நான் சொல்ல வர்ற கருத்து பாலிசியைப் பத்தினது மட்டும் இல்ல. நம்மோட பர்சனல் தகவல்கள் நமக்கே தெரியாமல் அடுத்தவங்களால திருடப்படுதுங்கிறதுதான்.

போன் நம்பரில் ஆரம்பித்து, நம்மைப் பத்தின எந்தத் தகவலும் அடுத்தவங்களுக்கு போகாமல் இருந்தாலே போதும்... நமக்கு வரும் ஆபத்தை தடுத்துடலாம். முகம் தெரியாத நம்பர்ல இருந்து யாராவது கால் பண்ணினா, எரிச்சலோட அவாய்ட் பண்றதைத்தான் அதிகபட்சமா நாம செய்றோம். ஆனா, எத்தனை பேர், நம்ம நம்பர் அவங்களுக்கு எப்படிப் போகுதுனு யோசிச்சு விசாரிக்கிறோம்? இந்த மாதிரி தற்காப்பு விழிப்பு உணர்வு வேணும்னுதான் 'தெகிடி' மூலமா சொல்றேன்.

'த்ரில்லர்' படம்னு முடிவு பண்ணின பிறகு, ரெகுலரா இல்லாம, வித்தியாசமா, குடும்பத்தோட பார்க்கிற படமா இருக்கணும்னு தெளிவா இருந்தேன். படத்துல காதலை சொல்றதைக்கூட லேட்டாதான் காட்டியிருப்பேன். ஆடியன்ஸுக்கு அவங்களோட காதல் புரியும்... ஆனா, சொல்லிப்பாங்களானு எதிர்பார்த்துட்டே இருப்பாங்க. எதிர்பார்க்காத நேரத்துலதான் ஹீரோ லவ் சொல்வான். பொதுவா நிறைய பொண்ணுங்க, கண்மூடித்தனமா ஆண்களை நம்புவாங்க. ஒரு கட்டத்துல ஏமாத்தினது தெரிஞ்சாலும் உடனே மன்னிச்சு ஏத்துப்பாங்க. என் படத்தில் அதையும் உணர்த்தியிருக்கேன்'' என்ற ரமேஷ்...

''சுத்தமான தமிழ் வார்த்தைதான் 'தெகிடி'. பகடை, சூது, விளையாட்டு, தாயம்... இப்படி நிறைய அர்த்தங்களை சொல்லிட்டே போகலாம். பொதுவா ஒரு படத்தோட தலைப்புக்கு ஓர் அர்த்தம்தான் இருக்கும். என் படத்துக்கு இதில் நீங்க எந்த அர்த்தத்தை எடுத்துக்கிட்டாலும், பொருத்தமா இருக்கும். பிளான் பண்ணின மாதிரி 45 நாள்ல முடிச்சோம்னா, அதில் படத்துக்காக கஷ்டப்பட்ட எல்லோருக்குமே முக்கியப் பங்கு இருக்கு. படத்தை பாருங்க... கண்டிப்பா ஏதோ ஒரு விதத்துல அலர்ட்டா இருக்கணும்னுங்கிற ஃபீலோட வெளிய வருவீங்க!''

- ஒரு ஃபீலிங்குடன் சொன்னார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 11, 2014 4:47 pm

''அலர்ட்னஸ் அவசியம்!''

''படத்தில் வருவதைப் போல் உண்மையாகவே நமக்குத் தெரியாமல் நம் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, வேறு யாராவது அதை அனுபவிக்க வழியிருக்கிறதா?'' என்ற கேள்வி... படத்தைப் பார்த்த, கேள்விப்பட்ட அத்தனை பேரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது... திகிலுடன்!

இந்தக் கேள்வியை, சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் முன் வைத்தபோது... ''படத்தில் வருவதைப் போல் ஏமாற்றுவதற்கு நிச்சயமாக வழி இல்லை. முதலில், நமக்கே தெரியாமல் நம் பெயரில் பாலிசி போட முடியாது. நம்முடைய அடையாளங்கள், கையெழுத்து இல்லாமல் சாத்தியமில்லை. அப்படியே போட்டாலும் உறவினர்கள் அல்லாதவர்கள் ஆக்ஸிடென்ட் பாலிசி போடவே முடியாது. தனிநபர் பாலிசி போடும்போது, வாரிசுதாரர் (Nominee) ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். ரத்த சொந்தம் அல்லாதவர் வாரிசுதாரராக இருக்க முடியாது. அப்படியிருக்க, பாலிசி போட்ட ஒருவர் இறந்த பிறகு, ரத்த சொந்தம் அல்லாதவர் நிச்சயமாக அவருக்கான பணத்தை அனுபவிக்கவே முடியாது. ஒருவேளை மைனராக இருப்பவருக்கு பாலிஸி எடுக்கும்போது, வாரிசுதாரராக இருப்பவர் மைனராக இருக்க முடியாது. பாதுகாவலர்தான் வாரிசுதாரராக இருக்க முடியும். அவரும் ரத்த சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். மைனராக இருந்து, உறவுகள் யாருமில்லாத சமயத்தில், குடும்ப வழக்கறிஞர் வாரிசுதாரராக இருக்க முடியும். மற்றவருக்கு வாய்ப்பே இல்லை'' என்ற ஸ்ரீதரன்,

''அதேசமயம், இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கான விதிமுறைகள் அத்தனை அழுத்தமாக பின்பற்றப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துவிட முடியும் என்கிற நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அடையாள அட்டைகளை போலியாக தயாரிப்பது, போலியாக கையெழுத்து போடுவது இதெல்லாமே சாத்தியம்தான். எனவே, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு நேரில் செல்வது போல, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வரவேண்டும் என்றிருக்கும் விதியை, கட்டாயம் கடைபிடிக்கச் செய்ய வேண்டும். ஆகமொத்தத்தில் படத்தில் சொல்ல வருவதுபோல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை'' என்றார்.

விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 11, 2014 5:02 pm

போகலாமா ,வேண்டாமா என தெகிடி உருட்டவேணாம் .
படித்தால் , பார்க்கவேண்டிய படம் போல் தெரிகிறதே.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 11, 2014 5:23 pm

தெகிடி: திரை விமர்சனம் - இந்து

முற்றிலும் புதுமையான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்துத் திரில்லர் வகைப் படத்தைத் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ். குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான திரில்லரைத் தந்திருக்கிறார். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருக்கிறார்.

கிரிமினாலஜி படித்த வெற்றிக்கு (அசோக் செல்வன்) தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஒரு நபரைப் பற்றிய தகவல்களைத் திரட்டும்படி இவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது உள்படப் பல நிபந்தனைகளுடன் வெற்றி களத்தில் இறக்கப் படுகிறான்.

குறிப்பிட்ட நபர் யார், அவர் என்ன வேலை செய்கிறார், அவர் பொழுதுபோக்கு, குடும்பப் பின்னணி, நடமாட்டங்கள் எனப் பல தகவல்களை யும் திரட்டிக் கொடுக்கிறான். நிறுவனம் பாராட்டுகிறது. மேலும் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு அசைன்மென்டின் போது அவன் சந்தேகத்துக்குரிய முறையில் மது (ஜனனி) என்னும் பெண்ணின் கண்ணில் பட்டுவிடு கிறான். அவளைப் பார்த்ததும் பிடித்துப் போவதால் அவளிடம் தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறான்.

எதிர்பாராத திருப்பமாக அவளையே வேவு பார்க்கச் சொல்லி நிறுவனம் உத்தரவிடுகிற்து. வெற்றி வேலையை ஆரம்பிக்கிறான். ஆனால் பணியின் நிபந்தனையை மீறி அவளோடு பழகி நெருக்கமாகிறான். இதை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்படும் நேரத்தில் அதைவிடவும் பெரிய பிரச்சினையை அவன் எதிர்கொள்ள நேர்கிறது.

அடுத்தடுத்து விழும் கொலைகளும் அவற்றின் பின்னணியும் வெற்றியைச் சிக்கலில் மாட்டிவிடுகின்றன. தன் காதலியின் உயிருக்கு ஆபத்து என்பதும் தெரியவருகிறது. தன்னையும் காப்பாற்றிக்கொண்டு காதலியையும் காப்பாற்றிக் கொலைகளின் மர்மத்தையும் கண்டுபிடிக்க அவன் போராடு கிறான்.

இதுபோன்ற சஸ்பென்ஸ் திரில்லர்களில் கொலை செய்யப்படும் நபர்கள் பெரிய மனிதர்களாக இருப் பார்கள். அவர்களுக்கு எதாவது பின்புலம் இருக்கும். ஆனால் இங்கு கொல்லப்படுவது எந்த பின்புலமும் இல்லாத சாதாரண மக்கள். இந்த முடிச்சினை நேர்த்தியாகக் கோர்த்துச் சிக்கல் இல்லாமல் அவிழ்த் திருக்கிறார் இயக்குநர். ஒரு கட்டம் வரையிலும் அடுத்தடுத்த சம்பவங்கள் யூகிக்க முடியாதபடி நிகழ்கின்றன. கொலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம் விலகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஆனால், மர்மம் வெளிப்பட்ட பிறகு கதையின் போக்கை எளிதாக யூகிக்க முடிகிறது. காவல் துறையின் கையில் விஷயம் போன பிறகும் நாயகன் தனி ஆவர்த்தனம் வாசிப்பது நம்பும்படி இல்லை. குற்ற வலையின் கண்ணிகள் விரிந்துகொண்டே போவது ஒரு கட்டத்தில் அலுப்பூட்டுகிறது. தவறு செய்தவர் தன் தவறை நியாயப் படுத்திக் கடைசிக் காட்சியில் வசனம் பேசுகிறார். பார்வையாளர்கள் கொட்டாவி விடுகிறார்கள்.

அப்சர்வேஷன் என்பதற்கான விளக்கம், துப்பறிவதன் உத்திகள் ஆகியவை நன்றாக இருக்கின்றன. சில இடங்களில் வசனங்கள் நன்றாக உள்ளன.

அசோக் செல்வனின் நடிப்பு கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. காமெடி கலந்த குணசித்திர வேடத்துக்குக் காளி நன்றாகப் பொருந்துகிறார் அவரது பாடி லாங்க்வேஜ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் மட்டுமே ஜனனிக்குத் தன் நடிப்புத் திறனைக் காட்ட வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை முழுமையாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

பாடல்கள் வேகத் தடைகளாக அல்லாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கும் காட்சிகளின் தொகுப்பாக இருப்பது நல்ல விஷயம். ஆனால் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மெட்டுகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். பின்னணி இசையில் சில இடங்களில் தேவையில்லாமல் அல்லது தேவைக்கதிகமாக ஓசை எழுப்புகிறார்.

தினேஷ்கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி. குறிப்பாக இருட்டுக் காட்சிகள். வலுவான கதை முடிச்சு, விறுவிறுப்பான திரைக்கதை, தேவையான அளவு சஸ்பென்ஸ் என இத்தனை விஷயங்கள் இருந்தாலும் படத்தோடு ஒன்றச் செய்யும் அம்சம் முழுமை யாகவில்லை. மர்ம முடிச்சு அவிழ்ந்த பிறகு கதையை வளர்த்தாமல் இருந்திருக்கலாம்.

தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 11, 2014 7:18 pm

நல்ல படம் ...  சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 12, 2014 11:44 am

Sidney sheldon ன் Doomsday conspiracy யின் இன்ஸ்பிரேஷன் - அல்லது கான்செப்ட் மட்டும் எடுத்துக்கொண்டு(the hunter, the hunted) மிக மென்மையாக, கொஞ்சம் மெல்ல மெல்ல சுவாரஸ்யப்படுத்தி திகில்கொடுக்க்ப் பார்த்திருக்கிறார்கள் தெகிடி படத்தில்..

வைத்த கண் வாங்காமல் பார்க்க முடிகிறது..பாடல்களும் ஹிட் இல்லாவிட்டாலும் நாட் பேட் ரகம்.. சாமர்த்தியமான் ஸ்க்ரீன் ப்ளே..முக நூலில் ஒரு நண்பர் சொன்னது போலக் கொஞ்சம் தெரிந்த முகங்களைப் போட்டிருக்கலாம். ஜெயப்ப்ரகாஷ் மீது மதிப்பு படத்துக்குப் படம் கூடிக் கொண்டே போகிறது..அவருக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம்..பாலச்சந்தரின் பட்டறை கிருஷ்ணன் (சிந்து பைரவியில் ஜட்ஜ் வீட்டு டிரைவர்) ஒரு காட்சியில் வரும்போது அசாத்திய குண்டாக இருக்கிறார்..உடல் நிலை சரியில்லையா..

ஜனனியின் கண்களில் ஏனோ குறும்பு மிஸ்ஸிங்க்.(பாகன் ஸ்ரீகாந்தோடு நடிக்கையில் ஷீ வாஸ் ஓகே) ஹீரோயினின் தோழிகளை மட்டும் குட் லுக்கிங்க் ஆகப் போடும் த.சி.வழக்கம் இதிலும் உண்டு..ஹீரோவின் நண்பர் கொஞ்சம் மெகானிக்கல்.. ஷைலேஸ் என்ற ரோலில் நடித்திருதவர் பரவாயில்லை..

ரிவ்யூஸ் பார்க்காமல் படம் பார்க்கக் கூடாது என்ற விரதம் கொண்டு பல நாட்க்ள் ஆகிவிட்ட்து.. நல்ல வேளை கதையை - சஸ்பென்ஸை எந்த விமர்சகரும் சொல்லவில்லை என்றாலும் கொஞ்சம் எளிதில் ஊகிக்க முடிகிறது..(அட்லீஸ்ட் நான்)

அசோக் செல்வன் - வில்லாவை விட இதில் இம்ப்ரூவ்மெண்ட் நிறைய.. அவ்வப்போது மாதவனின் சாயல் தெரிகிறது..

ஆனால் நல்ல த்ரில்லர் முயற்சி.. இன்னும் நிறைய படங்கள் இந்த டீம் தரவேண்டும்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:08 pm

விரிவான, தெளிவான விமர்சனம், பார்க்க முயற்சிக்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக