புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_m10ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலியன் வாலாபாக்கும் வாகா பார்டரும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:52 am


இந்திய வரலாற்றில் மறக்க முடியாத, கொடிய நிகழ்வு நடந்த ஓர் இடத்தில் நிற்கிறேன் என்ற எண்ணம் மனதை வலிக்கச் செய்தது.

2000க்கும் அதிகமான மக்கள் ரௌலட் சட்டத்தை அமைதியான முறையில் எதிர்ப்பதற்காக 13 ஏப்ரல் 1919 அன்று கூடியிருந்தனர். சர் மைக்கேல் டயர், கேட்டை இழுத்து மூடி விட்டு நாலாபுறமும் சூழ்ந்திருந்த சிப்பாய்களுக்கு ஷூட்டிங் ஆர்டர் கொடுக்க, அதன் பின் அடர் மழை போல நடந்த துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்தார்கள், பலர் காயம் அடைந்தார்கள். ரத்தக் கறை படிந்த இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது.

துப்பாக்கி சூட்டுக்குப் பயந்து அங்குள்ள சிறிய கிணற்றில் பலர் குதித்து இறந்தனர். இன்றும் அது மேட்ரீஸ் வால் இந்தச் சம்பவத்தின் குறிப்புடன் அங்கு உள்ளது. அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நிமிடமும் நம் சகோத, சகோதரிகள் கடைந்த கொடுந்துயரை நினைத்து என் கண்களில் கண்ணீர் தளும்பி விட்டது. இந்தப் படுகொலையில் இறந்தவர்களுக்கு நினைவுத் தூணும், அமர ஜோதியும் உள்ளது. அங்கு கண்மூடி ஒரு நொடி நின்றபோது, இத்தனை உயிர் இழப்புக்களுக்குப் பின் கிடைத்த சுதந்திரத்தின் பயனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

மாலை 4.30 மணிக்க ஸவர்ண ஜெயந்தி துவாரா கேட்டை திறந்ததும், சரசரவென மக்கள் வேகமாக நடந்து பரேக் நடக்கும் பாதையைச் சுற்றிஉள்ளே கேலரிகளில் அமர்கிறார்கள். பெண்களுக்கு ஒரு பகுதி, ஆண்களுக்கு இரண்டு பகுதிகள், வெளிநாட்டவர்; ஆர்மியில் வேலை செய்பவரின் உற்றார் என ஒரு பகுதி என்று கேலரியைப் பிரித்திருக்கிறார்கள். உடல் ஊனமுற்றோருக்குத் தனியாக அமர வசதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களை நிகழ்ச்சி தொகுப்பாளர் பாதையின் நடுவில் வரச் சொல்லி அழைத்தார். அதன்பின் அவர்களை இரு வரிசையாக நிற்க வைத்து, முதலில் நின்ற இருவரின் கரங்களில் நம் தேசியக் கொடியை தந்தார். எதற்கு இப்படி செய்தார் என்று யோசிக்கும்போதே, சற்று தூரத்தில் தெரிந்த நம்முடைய எல்லையில் இருக்கும் கேட் வரை அவர்களை ஓடி வரச் சொன்னார். பதினைந்து நிமிடத்தில் எத்தனை பேர் ஓட முடியுமோ அத்தனை பேர் ஓடினார்கள். அப்போது நிகழ்ச்சி நடத்துபவர் பாரத் மாதாகீ என்று உரத்த குரலில் சொல்ல, ஜிந்தாபாத் என்று அனைவரும் திருப்பிச் சொன்னார்கள். அதன்பின் அவர் "வந்தே' என்றதும் உடனே மாதரம் என்று உணர்ச்சிப் பொங்க குரல் எழுப்பினார்கள். என் நாடி நரம்பில் எல்லாம் இனம் தெரியாத சிலிர்ப்பு ஏற்பட்டது.

அதன் பின் வயது வித்யாசமின்றி வண்ண வண்ண உடைகளில் பெண்கள், குழந்தைகள் அவரவர் ஸ்டைலில் நடனம் ஆடினார்கள். அதற்குப்பின் ஆரம்பிமானது அதிரடியான பரேட். இரண்டு பெண்கள் முதலில் பரேட் செய்தபடி கேட் அருகில் போய் நின்றனர். பின் ஆறு பேர் கொண்ட பரேட். முதலில் இருவர் பின் ஒற்றை வரிசையில் நால்வர் என்று ஆரம்பித்தது அந்த பரேட். வீரர்கள் கண் இமைப்பதற்குள் தம்முடைய இடது காலை தலைவரைத் தூக்கி, பின் கீழே வைத்து மறுபடியும் வேகமாக நடந்து வலது காலை தலைவரை தூக்கி பின் கீழே வைக்கிறார்கள். இப்படி ஜெட் வேகத்தில் கேட் அருகில் போய் விடுகிறார்கள். அங்கே இரு ஓரங்களிலும் இருவர் நிற்க, நடுவில் ஒருவர் கேட்டைத் திறக்கிறார். இதே மாதிரி கேலரியும், அதில் மக்களும், பாகிஸ்தான் சைடிலும் அமர்ந்திருக்கிறார்கள். இதே மாதிரி பரேடும் பாகிஸ்தான் பக்கம் நடக்கிறது. அங்கிருந்தும் ஒருவர் கேட்டைத் திறந்தார். இரு பக்கங்களில் இருந்து ஒருவர் பரேட் செய்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டனர். இரு பக்கத்திலும் ஒரு வீர் நின்றிருக்க, மற்றொரு வீரர் இரு பக்கமும் ஒரே நேரத்தில் பரேட் செய்துவிட்டு பக்கத்தில் நின்றனர். பின் இந்தியா பக்கம் இருவர், பாகிஸ்தான் பக்கம் இருவர் பரேட் செய்துவிட்டு அவரவர் கேட் அருகே வந்து விடுகின்றனர்.

பின் டிரம்பட் முழுங்கியது. வந்தே மாதரம் என்ற கோஷம் ஒலிக்க, கேட்டின் இரு பக்கமும் இருக்கும் தேசிய கொடிகளை அவர்கள் கொடியின் எதிர்பக்கத்தில் இருந்து மெதுவாக இழுத்தார்கள். நுழைவாயிலில் இருக்கும் நம்முடைய தேசிய கொடியை மெதுவாக இறக்கியது. அதே நேரத்தில் பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸ் ஆஃபீஸ் எதிரில் இருக்கு கொடியும் இறங்கியது. பாகிஸ்தான் பகுதியில் உள்ள நுழைவாயில் கொடியும் மெதுவாக இறங்கியது. இக்காட்சியை காண அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்றார்கள். கீழே இறங்கிய கொடியை உரிய முறையில் மடித்ததும், ஒருவர் இரு கைகளையும் நீட்ட, மற்றொருவர் அவர் கைகளில் மடித்த கொடியை வைத்தார். கொடியை வைத்த உடன் நீடிடய கைகளை கொடியுடன் அதே நிலையில் நீட்டியபடியே பரேடில் கலந்து கொண்டு பிஎஸ்எஃப் ஆபீஸ் முன் நின்றார். அங்கே பிஎஸ்எஃப் கொடியை மடித்து அதை நம் தேசிய கொடியின் மேல் வைத்தார்கள். நுழைவாயிலில் இறக்கிய நாம் தேசியக் கொடியையும் பரேட் செய்து எடுத்து வந்து பிஎஸ்எஃப் கொடியின் மேல் வைத்தார்கள். பரேட் முடிந்ததும் இரண்டு நாட்டு பக்கமும் உள்ள வீரர்கள் கைகளை குலுக்கிக் கொண்டு இரண்டு பக்கமும் உள்ள கேட்டை பூட்டினார்கள். அங்கு கூடியிருந்த சுமார் பத்தாயிரம் பேரும் "பாரத்மாதா கீ ஜே' என்று குரல் எழுப்பியபடி அந்த இடத்திலிருந்து கிளம்பினார்கள். கலைந்து போகும் ஒவ்வொரு முகமும் ஜொலித்தது, சந்தோஷத்தில் மின்னியது. இந்த நிகழ்ச்சியும், இங்குள்ளவர்களையும் பார்த்தவுடன் "நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்' பாரதியின் பாடல் மனதுக்குள் ஒலித்தது. மறக்க முடியாத அப்பயணம் தேசபக்தி என்ற சுடரை அணையாது எனக்குள் ஏற்றிவைத்தது. இன்னும் தீவிரமான சிந்தனைகளை அது தூண்டிய படி இருக்க, இன்னொரு முறை அமிர்தசரஸ் செல்ல முடிவெடுத்துள்ளேன்.

- ஆர். உமா, சித்தூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக