புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
2 Posts - 2%
prajai
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
417 Posts - 48%
heezulia
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
28 Posts - 3%
prajai
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_m10திருநீறு இட்டு யார் கெட்டார்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு இட்டு யார் கெட்டார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 16, 2014 3:08 pm

திருநீறு இட்டு யார் கெட்டார்? PdBhMknZRzKYuwwZlpvE+hindu_child

திருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது 'தெய்வத்தன்மை வாய்ந்தது' என்று பொருள். "பாவங்களை நீற்றுவதால்" நீறு என்று பெயர்.  ஆக திருநீறு என்பது 'பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்' என்று அறியலாம். இந்த திரியில் திருநீற்றின் பெருமைகளைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். முதலில் ஒரு வரலாறைப் பார்ப்போம்.

எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாவரேயாயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டுவிட்டால் போதும், உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும்படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார்.

இப்பெரியார் சோழ மன்னர் படையில் ஒரு காலத்தில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். இப்பெரியார் வாட் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும், வாட் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாட் பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்த வண்ணமாகவே இருந்தனர். வாட் பயிற்சி மூலம் கிடைத்த வருவாயை யெல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார்.

இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். பாரெல்லாம் பால் பொழியும் தண் நிலவையும் கிரகணம் வந்து விழுங்குவதுபோல், ஏனாதிநாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லத்தான் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாட் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 17, 2014 11:19 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? Fp8UFMwiTVWf5h1dNtTD+thiruneeru

2) தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிக மிகக் குறைந்தவன். அதனால், அதிசூரனிடம் ஆரம்பகாலத்தில் அறியாமல் வந்து சேர்ந்த ஒருசில மாணாக்கர்கள் கூட விவரம் தெரிந்ததும் விலகத் தொடங்கினர். இதனால் ஏனாதிநாதரிடம், ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று விளங்க, அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. முத்துச்சிற்பி முன்னால், வெத்துச்சிப்பி மதிப்பிழந்து தூக்கி எறியப்படுவது போல், ஏனாதிநாதர் முன்னால் எல்லாவகையிலும் மதிப்பிழந்து போனான் அதிசூரன் ! அதிசூரன், ஏனாதிநாதரிடம் அழுக்காறு கொண்டு பகைமை பாராட்டினான். அழுக்காறு, அவா, சினம், இன் சொல் ஆகிய தீய குணங்களை கொண்டிருந்த அதிசூரன், அன்பு, அடக்கம், பக்தி, பொறுமை, இன்சொல் ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ஏனாதிநாதரை எதிர்த்துப் போர் புரிந்து அவருடைய தொழில் உரிமையைக் கைப்பற்ற சங்கல்பம் பூண்டான்.

ஒருநாள், தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு, நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். சிங்கத்தின் குகை முன்னால் சிறு நரி ஊளையிடுவது போல், வீரம் படைத்த ஏனாதிநாதர் முன்னால் கோழை மனம் கொண்ட அதிசூரன் போர்பரணி எழுப்பினான். ஏனாதிநாதரே ! ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் எதற்கு ? அதிலும் இரண்டு ஆசிரியர்கள்தான் எதற்கு ? இவ்வூரில் வாட் பயிற்சி ஆசானாக இருப்பதற்குரிய தகுதியும், திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய, நாம் உரிமைப் போர் புரிவோம். துணிவிருந்தால் போர் செய்ய வருக என்று ஊளையிட்டான். அதிசூரனின் சவாலைக் கேட்டு ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார்.

உனக்கு இம்முறையே தக்கது என்று தோன்றினால் அவ்வாறே போர் புரிவோம். நானும் அதற்கு இசைகிறேன் என்றார். இருவர் பக்கமும் படைவீரர்கள் சேர்ந்தனர். நகரின் வெளியிடத்தில் இருவர் படைகளும் போர் செய்வதற்கு வந்து குவிந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது ! போரும் ஆரம்பமானது ! அணிவகுத்து நின்ற இருதிறத்து வில்வீரர்களும், வாள் வீரர்களும், பயங்கரமாக் தத்தம் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போர் புரிந்தனர்.

வாள் பிடித்த கைகளும், வேல் பிடித்த கைகளும், வில் பிடித்த கைகளும் அறுபட்டு விழுந்தன. சிரசுகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. வீரர்கள் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன. வீரிகழல்கள் அறுபட்டு ரத்தத்தில் தோய்ந்தன. தாள்களும், தோள்களும் புண்பட்டன. இரத்தம் சிந்தின. வெளி வந்த குடல்களில் உடல்கள் பின்னிப்பிணைந்தன. அதிசூரன் படை வன்மையாக முறியடிக்கப்பட்டது. போரில் தலைப்பட்ட பகைவர் யாவரும் கொலை செய்யப்பட்டனர்.

போர்க்களத்தில் போர் புரிந்து மடியாதோர், ஞான உணர்வு வந்தபோது, இதயத்திலுள்ள பற்று, பாசங்கள் மறைவது போல் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏனாதிநாதர் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான் அதிசூரன். வெற்றிவாகை சூடித் திரும்பினார் ஏனாதிநாதர். நாட்கள் பல கடந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 19, 2014 7:49 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? XvyKLs5eTlqywCqOODWi+thiruneeru

அதிசூரன் நேர் பாதையில் நாயனாரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் கொல்லக் கருதினான். அதற்காக வேண்டி மற்றொரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அதிசூரன், ஏவலாளன் ஒருவனை ஏனாதிநாதரிடம் அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நான் குறித்து நேரம் கணித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் சேதியும் சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார்.

குறித்த நாளும் வந்தது ! அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும், உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும், கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் , தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். புலியைப் போல் பாய்ந்து சண்டை செய்தார் ஏனாதிநாதர். பூனைபோல் பதுங்கி, பதுங்கி, அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கி, ஒதுங்கிச் சண்டை செய்தான்.

அதிசூரன். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். அதிசூரனின் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள், அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில், அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும்,கேடயத்தையும் விலக்கினான். வெண்ணீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திடுக்கிட்டார் நாயனார்.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 20, 2014 8:12 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? NEjRBBzBRY5um1bNXlog+thiruneeru

4) அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. அவரது வாளின் கூர்மை திருவெண்ணீற்றுக்கு முன்னால் மழுங்கிப் போனது. ஆ! கெட்டேன் ! பகைவன் என்று போரிட வந்தேனே ! சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். இத்தனை நாளாக ஒருபொழுதும் இவருடைய நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவினை இன்று காண்கிறேனே ! இவர் சிவத்தொண்டரே தான். இவரோடு, இனியும் போரிடுவது தகாத செயல் ஆகும். உண்மையை உணராமல் எவ்வளவு பெரும் பாவம் செய்ய இருந்தேன் ! என் பிழையை எம்பெருமான் தான் பொறுத்தருள வேண்டும். இனிமேல் நான் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று திருவுள்ளங்கொண்ட ஏனாதிநாத நாயனார், தம் கையிலிருந்த வாளையும், கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

அத்தருணத்தில் , நாயனாருக்கு வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவது இவ்வடியாரை அவமதிப்பது போலாகும். நிராயுத பாணியயைக் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும் ! அத்தகைய அபகீர்த்தி இவருக்கு ஏற்படாவண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பதுபோல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும், கேடயத்தையும் தாங்கி, எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். பின்னர் சொல்லவும், வேண்டுமோ ? அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும், தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். அதிசூரனும் ஓடி ஒளிந்தான்.

ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது ! எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாத நாயனாரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து, இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப்பற்று பாசம், பந்தம் ஆகிய எல்லாத் தெடர்புகளையும் அறுத்துக்கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான், நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.

திருவெண்ணீறு அருள்மயமானது. எம்பெருமானின் திருமேனியால் எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் திருநீறு அணிவதால் மனிதர்க்கு அமர வாழ்வு கிட்டும். உய்யும் வழிக்கு உயர்ந்த மார்க்கம் பிறக்கும். இத்தகைய திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்திருந்த நாயனார், திருவெண்ணீற்றுக்கும், வெண்ணீறு அணிந்த அன்பர்க்கும் காட்டிவந்த பேரன்பைத்தான் என்னென்பது ?
(தொடரும்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2014 8:57 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? 103459460 
-
“கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை,
மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்,
தங்கா வினைகளும் சாரும் சிவகதி,
சிங்காரமான திருவடி சேர்வரே”
---
என்பார் திருமூலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 20, 2014 11:09 am

திருநீறு இட்டு யார் கெட்டார்? 3838410834 திருநீறின் மகிமையை சொல்லும் அருமையான பக்தி கதை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 11:31 am

அருமையான பக்தி கதை எங்க தாத்தா சிறுவயதில் என்னை திருநீறு பூச வைக்க இப்படி கூறினார் திருநீறு நெற்றி நிறையா பூசுவதால் நம் தலை எழுத்து எமனுக்கு தெரியாதாம் அதனால் அவன் நம்மை பீடிக்க பயப்பிடுவானாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் திருநீறு இட்டு யார் கெட்டார்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 21, 2014 8:06 am

5)திருநீறு இட்டு யார் கெட்டார்? GeBTqHMzT4SHDMU4RpSB+thiruneeru

திருநீறைப்பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

> சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயிலில் (மதுரை) எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, தமிழ் மந்திரம் போல நினைத்ததைக் கொடுப்பது; நினைப்பவரைக் காப்பது.
> சிவலோகத்தில் உள்ள வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது.
> அழகு தருவது.
> எல்லா நூல்களாலும் புகழப்படுவது.
> ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது.
> சிவமயத்தில் நிலைத்துள்ளது.

> குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, அறம், பொருள், இன்பம் வீடு எனும் நான்கு வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது.
> கொடிய துயர்களைப் போக்குவது.
> சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது.
> புகழ்ந்து போற்றத் தக்கது.
> உண்மையாக நிலைபெற்றிருப்பது.

> திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது.
> முனிவர்களால் அணியப் பெறுவது.
> நிலையாக எப்போதும் உள்ளது.
> சிவனடியார்களால் புகழப்படுவது.
> இறைவனிடம் பக்தியை விளைப்பது.
> வாழ்த்த இனியது.
> எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 22, 2014 6:19 am

6) திருநீறு இட்டு யார் கெட்டார்? Wdc6axOdTIKRMlQPx4i7+thiruneeru

> திருஆலவாயான் திருநீறு தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது.
> அழகைக் கொடுப்பது.
> விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது.
> இறப்பைத் தடுப்பது.
> அறிவைத் தருவது.
> உயர்வு அளிப்பது.

> திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது.
> புண்ணியத்தை வளர்ப்பது.
> பேசுதற்கு இனியது.
> பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது.
> முடிவான பேரின்பநிலையை அளிப்பது.
> உலகோரால் புகழப்படுவது.

> அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது.
> துன்பம் போக்குவது.
> மனவருத்தத்தைத் தணிப்பது.
> துறக்க இன்பத்தை அளிப்பது.
> சிறப்பாகச் சைவ சமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச் சமயத்தார்க்கும் பொருத்தமாயிருப்பது
> புண்ணியரால் பூசப்பெறுவது.

> கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது.
> இம்மை மறுமை இன்பம் தர இருப்பது.
> பிறரோடு பழகும் பயன் அளிப்பது.
> செல்வமாக விளங்குவது.
> உறக்கநிலையைத் தடுப்பது.
> தூய்மையை அளிப்பது.
(தொடரும்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2014 6:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி 
-

ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு
திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள்
இனிமைக் கொள்வார்கள்.

அத்தகைய திருநீற்றை விரும்பி அணிபவர்களுக்கு
பெருமை கொடுக்கும். வல்லமை தரும்.
இறப்பினைத் தடுக்கும். நல்லறிவைத் தரவல்லது

திருநீறு. மன்னுயிர்களுக்கு உயர்வைத் தரும் ஆற்றல்
உடையது இத்திருநீறு.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக