புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_m10ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது…. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சாதனையாளரைச் சந்தித்தபோது….


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:45 pm

வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் முன்னேற முடியும் என்பதில்லை. இருப்பதை வைத்துக் கொண்டும், ஏன்? இல்லாமையையே மூலதனமாக்கிக் கொண்டும் உயர்ந்தவர்கள்தான் நாட்டில் அதிகம். அவர்கள் தாம் சாதனையாளர்களாக விளங்கி உள்ளார்கள். அரிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்கள்.

சாதனை என்பது என்ன? அவரவர் அளவில் செய்ய முடியாத ஒன்றைச் செய்து காட்டுவதுதான் சாதனை. நடக்க முடியாதவன் நடந்து காட்டுவது சாதனை. வறுமையில் கிடந்தவன், வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டது சாதனை. இப்படி சாதனையின் அளவுகோல் ஆளைப் பொருத்து மாறுபடும் என்பது அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

அண்மையில் ஓய்வு பெற்ற ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஓய்வு பெற்றபின், தான் படித்து முடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஏ. தேர்வை எழுதும் முயற்சியில் ஈடுபட்டது எனக்கு வியப்பாக இருந்தது.

அவரது வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பாடம். அவர் பள்ளி இறுதித் தேர்வு வரைப் படித்து, தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சூழ்நிலையில், அடிப்படை ஊழியர் நிலையில் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அன்றைய நிலையில் குடும்பத்திற்கு அவர் ஒரு வேலை செய்து சம்பாதிப்பது மிகவும் தேவையாக இருந்தது. பின்னர் திருமணம், குழந்தைகள், வேலையில் இடமாற்றம், இப்படியே அவர் 36, 37 வயதை எட்டி விட்டார்.

இருப்பினும் படித்துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற தனியாத ஆர்வம் மட்டும் அவரைப் பிடித்து உந்திக்கொண்டே இருந்தது. ஆனால் படித்துப் பட்டம பெறுவதற்கு அஞ்சல் வழிக்கல்வியோ, மாலைக் கல்லூரிகளோ அன்று இல்லை. கல்லூரியில் சேர்ந்துதான் படித்தாக வேண்டும். அது அவரால் முடியாத நிலை.

எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் மாலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் பி.யு.சியில் மாணவராகச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் படித்தார். பி.யு சியை மாலைக் கல்லூரியல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். பின்னர் பி.ஏ. வில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் படித்தார். எல்லாவற்றிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்படிச் சுமார் பதினொரு ஆண்டுகள் தமது 45, 46 வயதுவரை உலகை மறந்து, சுக துக்கங்கள் மறந்து படித்தார். இதற்கு இடையில் தனது அலுவலகத்திற்கும், மாலைக் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஏழு மைல் தூரத்தை சைக்கிளில் சென்றே மீண்டுள்ளார். அதற்குப் பிறகு கல்லூரி மாணவர்களுக்கு அரசு அளித்த கட்டணக்குறைப்பில் பஸ்ஸில் சென்றார். படிப்பு – படிப்பு இதுதான் அவரது மூச்சாக இருந்தது.

பொருளாதார நெருக்கடி, குடும்பம், குழந்தைகள், வாடகை வீடு மாற்றங்கள், இப்படிப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அலுவலகத்திலும் செம்மையாக பணிசெய்து கொண்டு ஒருவர் முன்னேறி இருக்கிறார் என்றால் அதுதான் சாதனை. இன்றைய இளைஞர்கள், அவரது தாள் பணிந்து, இந்த அனுபவங்களைப் பெற்று, முன்னேற வேண்டும். சட்டம் பின்று இளநிலை நீதிபதி (மாஜிஸ்ட்ரேட்) பதவிக்கு விண்ணப்பித்தார். இவரது கடின உழப்பைக் கண்டு, இவருக்கு இயல்பாக அப்பதவி கிடைத்து. இவருக்கு இவரது மேலதிகாரிகள் அளித்த சான்றிதழ், “கடிகாரம் கூட நிற்கும். ஆனால் இவர் ஒருபோதும் ஓயாமல் பணியாற்றுவார்” என்பது.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 03, 2014 6:46 pm

சட்டடத்துறையில் பணியாற்றிய போதும், இவர் சும்மா இருக்கவில்லை. மாலைக் கல்லூரியில் சேர்ந்து தமிழ் இலக்கியமும் படித்துள்ளார். வேலைப் பளுவின் காரணமாகவும், இடமாற்றத்தின் காரணமாகவும் குடும்பப்பொறுப்பு காரணமாகவும் தேர்வு எழுத முடியவில்லை. இப்பொழுது ஓய்வு பெற்ற பிறகு இதை முடிக்க வேண்டும் என்று தொடங்கியுள்ளார்.

இப்போது தேர்வு எழுதி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வாழ்க்கையில் எடுத்த காரியத்தை அரைகுறையாக விடக்கூடாது. எடுத்தை முடித்தால் தான் நாம் முழு மனிதர் ஆவோம், என்றார். எதையும் எடுத்து எடுத்து அரைகுறையாக விட்டு விடுகிற நண்பர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

அவர்பட்ட துயரங்களை எல்லாம் அவர் தனக்கு வாய்த்த விழுப்புண்கள் என்று எண்ணுகிறார்.

துன்பம் தான் மனிதனைத் தூயவனாக்குகிறது. துன்பம்தான் மனிதனை வலிமை உள்ளவனாகவும் ஆக்குகிறது. துன்பம் கூட வாழ்க்கையில் தேவைதான். என்று தனக்கு நேர்ந்த துன்பங்களைக்கூட முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்ட அவரது உயர்ந்த தன்மையை உணர முடிந்தது.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்று கேட்ட போது, ஒன்று கடின உழைப்பு, மற்றொன்று சத்தியம் தவறாமை, இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றினால், எந்த மனிதனும் வாழ்க்கையில் நேர்மையான முறையிலேயே உயர்ந்துவிடலாம் இது எனது அறிவுரை அல்ல, எனக்கு வாய்த்த அனுபவம் என்றார்.

தனது அருகிலிருந்த அவரது துணைவியாரைச் சுட்டக் காட்டி எனது மனைவியின் தியாகத்தில்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்று நன்றி பாராட்டினார்.

எனக்கு உள்ளம் புல்லரித்தது. ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறே மறைந்து கிடக்கிறது என்பதை உணர முடிந்தது. இவர் வந்த வரலாறு, பிறருக்கு பயன் தரும் வரலாறு.

இது இல்லை, அது இல்லை என்று வருத்தப்படுகின்ற இன்றைய இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாகும். பிறருடைய துனபத்தைப் பார்க்கும்போதுதான், நமது துன்பம் மிகவும் அற்பமானது. இதற்காக நாம் சோர்ந்து விடக்கூடாது என்ற உணர்வு பிறக்கும். இவரது வாழ்க்கை, அத்தகைய உணர்வை என்னுள் ஊட்டியது.

இத்தகைய நல்லவர்களால்தான், இந்த உலகம் தழைக்கிறது. இத்தகைய நீதி தேவன்கள் வாழ்க என்று வாழ்த்தத் தோன்றுகின்றது.

இளைஞர்கள் சிந்திப்பார்களாக.

கந்தசாமி இல.செ
Jan 1990



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக