புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
30 Posts - 88%
heezulia
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 புராணங்களும், அறிவியலும்! Poll_m10 புராணங்களும், அறிவியலும்! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புராணங்களும், அறிவியலும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:47 pm

புதியவை கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றால் கனவு காணுங்கள் என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். கனவு காண்பதன் அடிப்படையே கற்பனையில் பிறப்பதுதானே? நமது புராணங்களும் இதிகாசங்களும் வெறும் கற்பனையில் தோன்றியவையே என்று ஒரு சிலர் வாதிடுவது உண்டு. ஆனால் புராணங்களிலும் நமது தமிழ் இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளைக் காண்கிறபோது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு

எங்கேயோ நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், கோவில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தொலைக்காட்சிகள் இன்று உடனுக்குடன் நேரடியாக ஒளிபரப்புச் செய்கின்றன. இந்த விஞ்ஞான வினோதத்தை வீட்டுக்குள் இருந்தபடியே நாமும் அனுபவித்து வருகிறோம். நேரடி ஒளிபரப்பு நிகழ்வதைப் போன்ற காட்சியை நமது புராணங்களும் அன்றே சொல்லியிருக்கின்றன. சிவபெருமானுக்கும், இமவான் மன்னனின் மகள் பார்வதிக்கும்  இமயமலையில் உள்ள கைலாயத்தில் திருமணம் நடக்கிறது. சீரும் சிறப்புமாக நடந்த அந்தத் திருமணத்தை அகத்திய முனிவர் பொதிகை மலையில் இருந்தபடியே பார்த்துப் பரவசப்பட்டாராம். வடகோடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, தென்கோடியில் இருந்து ஒருவர் உடனுக்குடன் கண்டதும், உள்ளம் களிப்படைந்ததும் நேரடி ஒளிபரப்பு போன்றது அல்லாமல் வேறென்ன?

ஆதிரை என்பவளின் கணவன் சாதுவன் வியாபாரம் நிமித்தமாக நண்பர்களுடன் சேர்ந்து கடல் பயணம் மேற்கொள்கிறான். திடீரென்று கப்பல் மூழ்கிவிடுகிறது. ஆபத்திலிருந்து தப்பித்த சாதுவன், நாகர்கள் எனப்படும் ஆதிவாசிகள் வாழும் ஒரு தீவில் கரையேறு  கிறான். சாதுவனைப் போலவே ஆபத்திலிருந்து தப்பித்த அவனது நண்பர்களில் சிலர் ஊர் திரும்புகின்றனர். சாதுவன் கடலில் மூழ்கிவிட்டதாக ஆதிரையிடம் தெரிவிக்கின்றனர். கணவர் இறந்த பின்பு தான் மட்டும் வாழ்ந்து பயனில்லை என்று மனம் வெதும்பி தீக்குளிக்க முயற்சிக்கிறாள் ஆதிரை.

அப்போது வானத்திலிருந்து ஓர் அசரீரி கேட்கிறது. உன் கணவன் சாகவில்லை, பத்திரமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறான் என்கிறது அக்குரல். அசரீரியின் வார்த்தையை நம்பிய ஆதிரை, தீக்குளிப்பதை நிறுத்துகிறாள். சாதுவனும் உயிருடன் திரும்புகிறான். இந்த அசரீரியின் வாக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒருவர் மற்றவருடன் உரையாட முடியும் என்கிற அறிவியல் உண்மையை உள்ளடக்கியதாகவே தென்படுகிறது. வயர்லெஸ், செல்போன் கருவிகள் வழியாக இன்று நாம் பேச்சுக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், எந்தவிதக் கம்பித் தொடர்பும் இல்லாமல் அன்று அசரீரியின் குரலை ஆதிரை கேட்டு ஆறுதல் அடைந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:47 pm

அணு

அணுவைப் பிளக்க முடியும், அதன்மூலம் ஆற்றலைப் பெறமுடியும் என்கிற கருத்தெல்லாம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் காலத்துக்குப் பின்னரே உலகில் வலுப்பெற்றது. ஆனால் தமிழ் மூதாட்டி அவ்வையார், அணுவைத் துளைத்து, எழுகடலைப் புகட்டி என்று பாடி அணுவைத் துளைக்க முடியும், அதைப் பிளக்கவும் முடியும் என்கிற உண்மைகளையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே புட்டுப் புட்டு வைத்து விட்டாரே? ராமாயணத்தில் வரும் ஒரு கிளைக்கதையும் அணுவின் தன்மை பற்றிய செய்திக்கு பெரும் ஆதாரம் சேர்ப்பதாக அமைகிறது. புராண காலத்திலேயே அணுக் கொள்கை புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு இவற்றை விட வேறென்ன சான்று வேண்டும்?

அணு குறித்த மேலும் ஒரு வியப்பூட்டும் தகவலும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மகாபாரதச் சண்டை நடந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதிசயம் என்னவென்றால், அந்த இடத்தில் இப்போதும் கூட கதிரியக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். கதிரியக்கம் வெளிப்படுவதால், அணு ஆயுதங்கள் போன்ற சண்டைக் கருவிகள் மகாபாரத யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:48 pm

வான்வெளிப் பயணம்

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விடுகிறான். சீதையைக் கவர்ந்த இடத்துக்கு ராமனும், லெட்சுமணனும் வருகிறார்கள். அங்கே தேர்ச்சக்கரங்களின் தடம் மட்டுமே தென்படுகிறது. தடம் போகும் திசையில் இருவரும் நடக்கிறார்கள். சிறிது தூரத்தில் தடம் மறைந்து விடுகிறது. அப்படியானால் தேர் என்னவாயிற்று? ஒன்று பூமிக்குள் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானத்தில் பறந்திருக்க வேண்டும். ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் சென்றது ஊர்ஜிதமாகிவிட்டதால், தேர் பூமிக்குள் புதைய வாய்ப்பேயில்லை. வான்வெளிப் பயணம் மட்டும்தான் ஒரே வழி. அப்படியானால் சிறிது தூரம் ஓடி, பின் மேலெழும்புகிற மாதிரியான வடிவமைப்புடன் ராவணின் தேர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ‘ரன்வே’யில் ஓடி பின் ‘டேக் ஆப்’ ஆகிற தற்கால கனரக விமானங்களுக்கெல்லாம் முன்னோடியாக ராவணின் தேர் இருந்திருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா?

ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவரும் கூட அந்தச்  சிந்தனை தனக்கு மட்டுமே சொந்தம் என பெருமையடித்துக் கொள்ள முடியாது. சீவக சிந்தாமணியில் உலவும் கதாபாத்திரமான சச்சந்தனுக்கும் அதில் பங்குண்டு. ஆபத்துக்காலத்தில் தப்பிப்பதற்காக தனது மனைவிக்கு சச்சந்தன் ‘மயில் பொறி’ என்னும் வாகனத்தைப் பரிசளிக்கிறான். ஹெலிகாப்டரைப் போலவே அந்த மயில் பொறியும் நின்ற இடத்திலிருந்து ‘ஜிவ்’வென்று வானத்தில் எழும்பும் இயக்கத்தைப் பெற்றதுதானாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:49 pm

கண் மருத்துவம்

மருத்துவம் இன்று மலையளவு வளர்ந்திருக்கிறது. மனிதனை அப்படியே நகல் எடுத்துத் தரும் குளோனிங் வரை முன்னேறியிருக்கிறது. மண்ணை விட்டுப் போனாலும் கண்ணை விட்டுச் செல்வோம் என்கிற கோஷம் தற்காலத்தில் உலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஒருவரது கண்ணை மற்றவருக்குப் பொருத்த முடியும் என்கிற மருத்துவ வளர்ச்சியே அதற்குக் காரணம்.

உலகின் முதல் கண் மருத்துவர் யார் தெரியுமா? சாட்சாத் கண்ணப்ப நாயனார்தான். அவர்தான் முதன்முதலில் கண் மாற்றும் அறுவைச் சிகிச்சையை உலகில் அறிமுகப்படுத்தியவர். கண்ணப்ப நாயனார் சிவபெருமானின் தீவிரத் தொண்டர். சிவனுக்கு தொண்டு செய்வதையே பெரும் பாக்கியமாகக் கருதுபவர். ஒருநாள் சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்துவிடுகிறார். நெஞ்சம் பதறிவிடுகிறார். செய்வதறியாது நின்ற கண்ணப்பரின் மனதில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. தனது கண்களைப் பிடுங்கி எடுத்து சிவபெருமானின் முகத்தில் ஒட்டுகிறார். உடனே விக்கிரகத்தில் ரத்தம் வழிவது நின்று விடுகிறது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சை பற்றிய இந்த செய்தி கண்ணப்ப நாயனார் புராணத்தில் வருகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 12:49 pm

அண்டங்கள்

மேலும் பல்வேறு புராணங்களும் வெளிப்படுத்தும் ஒரு தகவல், வான்வெளியில் 1008 கோடி அண்டங்கள் உள்ளன என்பதுதான். விஞ்ஞானி கலிலியோ காலத்தின் பின்பே வான்வெளி ஆய்வுகள் உலகில் தீவிரப்படுத்தப்பட்டன. டெலஸ்கோப் அல்லது செயற்கைக்கோள் இன்றி அன்றே எப்படி அண்டங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள் என்பது புதிராகத்தான் உள்ளது. பூலோக மனிதர்கள் வானலோகம் சென்றதாகவும், வானலோகத் தேவர்கள் பூலோகம் வந்ததாகவும் புராணங்கள் கூறுவது நம்பும்படியாகவா உள்ளது என்று கேட்கலாம். இன்று நிலவில் காலடி வைத்து விட்டானே மனிதன்? செவ்வாய்க் கிரகம் செல்வதற்கும் முயற்சி எடுத்து விட்டானே?

புராணங்களில் வரும் செய்திகளெல்லாம் உண்மையாகி வருவதைப் பார்த்தால், பூலோக மனிதரும், வானலோகப் பிறவிகளும் சந்தித்துக்கொள்ளும் நிலை வரலாம். அப்போது இரு தரப்பினரும் சேர்ந்து விருந்துண்ணும் வைபவங்கள் வானத்தையும் வையத்தையும் தூள் பரத்தலாம்!

தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக