புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் ( மருந்து ) Poll_c10திருக்குறள் ( மருந்து ) Poll_m10திருக்குறள் ( மருந்து ) Poll_c10 
6 Posts - 67%
heezulia
திருக்குறள் ( மருந்து ) Poll_c10திருக்குறள் ( மருந்து ) Poll_m10திருக்குறள் ( மருந்து ) Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
திருக்குறள் ( மருந்து ) Poll_c10திருக்குறள் ( மருந்து ) Poll_m10திருக்குறள் ( மருந்து ) Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் ( மருந்து ) Poll_c10திருக்குறள் ( மருந்து ) Poll_m10திருக்குறள் ( மருந்து ) Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் ( மருந்து )


   
   
Sivasenthil
Sivasenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 13/09/2013

PostSivasenthil Tue May 27, 2014 11:11 am

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் கூறியிருக்கும் பத்துக் குறளும் மருந்தைப் பற்றியே இருக்காது.மருந்தைப் பற்றியே சொல்லாமல் எதற்கு மருந்து என்ற தலைப்பை திருவள்ளுவர் வைத்தார்.அவர் மருந்து அதிகாரத்தில் கூறியுள்ளபடி நடந்தால் மருந்து என்பதே தேவையில்லை என்பதால் அப்படி வைத்துள்ளார்.

மருந்து
குறள் 1)

மிகினுங் குறையினும் நோய் செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.

மருத்துவ நூலோர் எண்ணி ஏற்படுத்திய (1)வளியாகிய காற்று(வாதம்)(2) வன்னி என்ற நெருப்பு(பித்தம்)(3)நீர்(சிலேற்பனம்) ஆகிய மூன்றும் கூடினாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.இது உணவின் மூலமோ அல்லது பழக்க வழக்கத்தினாலோ,அல்லது சுற்றுப்புற சூழலினாலோ பாதிக்கப்பட்டால் நோய் உண்டாகும்.

குறள் 2)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.

உடலுக்கு பொருந்தும் உணவு எது என்றும்,பொருந்தாத உணவு எது என்றும் போற்றி உண்ணக் கூடியவருக்கு மருந்து என ஏதும் தேவையில்லை.

குறள் 3)

அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு

நமக்கு எவ்வளவு உணவு தேவை.அதை நம்மால் சீரணிக்க முடியுமா?நமக்கு அது தேவையா?என்று உணர்ந்து ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்குச் சாப்பிடுங்கள் .அதுவே இந்த உடம்பு நெடு நாள் உயிர் வாழும் வழி.அதாவது தற்போதுள்ள நம் நாட்டு சூழ்நிலையில் சாப்பிட ஏதும் கிடைக்காமல் சாப்பிடாமல் உயிர் விடுபவர்களைவிட,அதிக உணவு சாப்பிட்டு அதனால் உயிர் விடுபவர்களே அதிகம்.(கொலஸ்ட்ரால்,சர்க்கரை இவை எல்லாம் அதிகம் சாப்பிடுவதால் வருபவை)

குறள் 4)

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

முன் சாப்பிட்டது வயிற்றில் இல்லாமல் காலியாகி விட்டதை அறிந்து, பின் மிக்க பசியெடுத்த பின் உண்ணும் போது உடலுக்கு வாத,பித்த,சிலேற்பனம் முதலான முக்குற்றங்களை உண்டாக்காத மாறு பாடில்லாத உணவுகளை உண்டால் நோய் வராது.மருந்து தேவையில்லை.புரியவில்லை என்றால் கீழே உள்ள அவள் விகடனில் வெளியான கட்டுரையை படியுங்கள்.


குறள் 5)

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை யுயிர்க்கு

மேலே சொன்ன(வளி) வாதமாகிய காற்று முதலாகியவற்றை மாறுபாடு செய்யாத உணவுகளை மட்டும் உண்டு,மாறுபாடு செய்பவைகளை மறுத்துண்டால் ஊறு பாடு என்பது உயிருக்கு வரவே வராது.இப்படி  உண்ணக் கூடியவருக்கு மருந்து என ஏதும் தேவையில்லை.

குறள் 6)

இழிவறிந் துண்பான்க னின்பம்போ நிற்கும்
கழிபே ரிரையான்க ணோய்

மிகக் குறைவாக உண்பானிடத்தில் இன்பமும் அதிகமாக உண்பவனிடத்தில் துன்பத்தை உண்டாக்கும் நோயும் நிலை பெறும்.அதாவது ஒரு பொழுதுண்பவன் யோகி.இரு பொழுதுண்பவன் போகி.மூன்று பொழுதுண்பவன் ரோகி(பெரும் வியாதியஸ்தன்).நான்கு பொழுதுண்பவன் துரோகி(தன்னுடலுக்கு துரோகம் செய்பவன்).

குறள் 7)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்

வயிற்றில் இருக்கும் ஜடராக்கினியாக இருக்கும் உணவைச் செரிக்கும் தீக்குப் (நெருப்பு ) பங்கமில்லாமல்,  அதாவது அணைந்து போகுமளவிற்கு தெரியாமல் பெரிதும் உண்பவனுக்கு நோய் அளவின்றி உண்டாகும்.

குறள் 8 )

நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

வைத்தியர் தான் அறிந்த எல்லா வைத்திய சாத்திரங்களையும்,கால பேதவியல்புகளையும் அதனால் உடலில் ஏற்படும் மாறு பாடுகளையும்  வைத்து நோயின் அறிகுறிகளை அணுகி,அதன் முதலான ஆரம்பம் எதில் துவங்கியது என்று அதன் வேரோடு கெல்லி எறியும் வழியைத் தேடி அதன் வழியே சென்று நோயைப் போக்க வேண்டும்.

குறள் 9)

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்

வைத்தியர் தான் அறிந்த எல்லா வைத்திய சாத்திரங்களையும்,கால பேதவியல்புகளையும் அதனால் உடலில் ஏற்படும் மாறு பாடுகளையும் கருத்தில் கொண்டு பிணியுற்றவனுடைய பிணியளவும்,பிணியுற்ற காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

குறள் 10)

உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.

உற்றவனான(வைத்தியனை இங்கே நெருங்கியவன் என்ற பொருள்பட அழைக்கிறார் வள்ளுவர்) மருத்துவனிடம் வரும் நோயாளன் நான்கு விடயங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.அவையாவன பொருளுடைமை,மருத்துவன் கூறும் வழி நிற்றல்,நோய் நிலையை உணர்ந்து உணர்த்தும் தன்மை,மருந்துத் துன்பம் பொறுத்தல் ஆகிய நான்கு குணங்கள் ஆகும்.

சிவம்செந்தில்
குருவே சரணம்




தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
அன்புள்ள
சிவம்செந்தில்குமர் பரசுரமன்
ஒம் நமசிவயம் வாழ்க ! ஒம் சச்சிதாநந்தம் வாழ்க !! ஒம் சத்குருநாதரே வாழ்க வாழ்க !!!
திருஅண்ணாமலை.
+91 99627 48076

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக