புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
44 Posts - 41%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
3 Posts - 3%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
3 Posts - 3%
Saravananj
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
21 Posts - 5%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 12 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 3:01 am

மோடி ஏன் நாட்டின் பிரதமராக வர வேண்டும்?: கெஜ்ரிவால் கேள்வி

மோடி மீது கண் மூடித்தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்துள்ளார். வாரணாசியில் உள்ள திரிபோலிக்கு அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியபோது,

நான் இங்குள்ள கிராமத்திற்கு சென்றபோது என்னை பார்த்ததும் சில இளைஞர்கள் 'மோடி' 'மோடி' என கோஷமிட்டனர். மோடி ஏன் நாட்டின் பிரதமராக வர வேண்டும்? என நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவர்களால் எந்த பதிலும் தர முடியவில்லை. ஊடகங்களில் மோடி பற்றி சித்தரிக்கப்படுவது போதை அளிப்பது போன்றது. அதில் உங்கள் உணர்வுகளை இழந்து விடாதீர்கள் என்று பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 3:02 am

எஸ்.எம்.எஸ். மூலம் ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் (22–ந்தேதி) நிறைவடைகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், செல்போன்கள் மூலமாகவும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டு வாக்காளர்களிடம் செல்போன் மூலமாக பேசும் வகையில் ‘‘வாய்ஸ் ரெக்கார்டர்’’ ஒன்றும் வெளியானது. திடீரென உங்களுக்கு வரும் போனில், ஜெயலலிதா பேசுவார். ‘‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறியதும் போன் இணைப்பு துண்டிக்கப்படும். இது அ.தி.மு.க.வினர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா தனது செல்போனில் இருந்து அனுப்புவது போன்ற ஒரு எஸ்.எம்.எஸ்சும் செல்போனில் வலம் வர தொடங்கியுள்ளது. வணக்கம், இந்தியாவை வல்லரசாக்க 40/40 என்ற இலக்கை அ.தி.மு.க. அடைய ‘‘இரட்டை இலை’’ சின்னத்துக்கு வாக்களியுங்கள். அன்புடன் ஜெ.ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்’’என்று கூறப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 21, 2014 3:05 am

தேர்தல் விதி மீறல்: யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பத்திரிகையாளர்களை சந்தித்ததாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பதேபூர் மண்டல துணை கோட்டாட்சியர் விவேக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ’’இங்குள்ள யோகா மையத்தில் நடைபெற்ற யோகா திக்ஷா நிகழ்ச்சியில் சனிக்கிழமை கலந்துகொண்ட ராம்தேவ், அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.


இந்த சந்திப்புக்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை. எனவே இது தொடர்பாக அந்த யோகா மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 2:33 am

ஒரே ஒரு நபருக்காக காட்டுக்குள் வாக்குச்சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையம்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் மாவட்டத்தில் பனெஜ் பகுதியில் வசிக்கும் ஒரு நபர் வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கிர் வனப் பகுதியில் அதிக அளவில் சிங்கங்கள் காணப்படுகின்றன. கிர் வனப் பகுதிக்குள் இருக்கும் பனெஜ் பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க மஹந்த் பரத்தாஸ் தர்ஷன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக இவருக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஜுனகத் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே, நாங்கள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை தான் பின்பற்றுகிறோம். எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்க 2 கி.மி தூரதிற்கு அதிகமான தூரம் பயணம் செய்யும் நிலை இருக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி, ஒரேஒரு நபருக்காக 5 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, இரண்டு வனப்பகுதி காவல்துறையினரின் பாதுகாப்போடு 35 கீ.மி காட்டுக்குள் சென்று வாக்குச்சாவடி அமைக்கவுள்ளனர் எனத் தெரிவித்தார்.

கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும், 2007 மற்றும் 2012 ஆண்டுகள் நடைபெற்ற மாநில தேர்தல்களிலும் தர்ஷன்தாஸ் வாக்கை பெற அதிகாரிகள் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, வாக்குச்சாவடி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:18 pm

'என் தாய், வீடுகளில் பாத்திரம் கழுவினார்' நான் டீ விற்றேன்: நரேந்திர மோடி உருக்கமான பேச்சு

மராட்டிய மாநிலம், துலேயில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார். அப்போது அவர், ' நான் டீ விற்று வாழ்க்கை நடத்தினேன். என் தாய், மற்றவர்களின் வீடுகளில் பாத்திரம் கழுவினார். எனவே ஏழை மக்களின் துயரங்களை நான் அறிந்திருக்கிறேன். நாம் அம்பேத்கரைப் பின்பற்றி வந்திருக்கிறேன். என்னை விட உங்கள் பிரச்சினைகளைப் புரிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது' என குறிப்பிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:19 pm

அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது; தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணிநேர 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் 16 வது பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் என்று கடந்த மாதம் 5ந்தேதி முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 6 வது கட்டமாக வியாழக்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்காக போலீசாருடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் மாலையுடன் முடிவடைந்தது.

தேர்தலையொட்டி மாலை 6 மணி முதல், 24ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 36 மணிநேர 144 தடை உத்தரவு மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது. தொடர்ந்து நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:20 pm

தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.

சூறாவளி பிரசாரம்

புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சென்னையில் 3 நாட்கள்

அதன் பின்னர், கடந்த 19–ந் தேதி முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் (வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை) வேன் மூலம் வீதி, வீதியாக சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் 19–ந் தேதி வாக்கு சேகரித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆலந்தூர் தாலுகா அலுவலகம், ஆலந்தூர் நீதிமன்றம், ரசாக் கார்டன், சூளை தபால் நிலையம், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.

40 வேட்பாளர்கள்

தொடர்ந்து, தென்சென்னை தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கந்தன்சாவடி பஸ் நிறுத்தம், ஐந்துவிளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் ஆகிய இடங்களில் பேசினார்.

இறுதியாக, தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 பேரும் பங்கேற்றனர்.

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமனும் இதில் பங்கேற்றார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேனில் இருந்தபடி அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசினார். வேனின் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் 40 வேட்பாளர்களும் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தை நிறைவு செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பா.வளர்மதி, கோகுல இந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் பூசனிக்காய் கொண்டு ஆரத்தி எடுத்து உடைத்தனர். பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பினார். அங்கேயும், திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தி பூசனிக்காய் உடைத்தனர்.

1½ மாத பயணம்

மார்ச் மாதம் 3–ந் தேதி பிரசாரத்தை தொடங்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1½ மாத கால தொடர் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகு நேற்று தனது பிரசாரத்தை முடித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:26 pm

பாகிஸ்தானுக்கும் போனால் கூட நரேந்திர மோடியை எதிர்ப்பதை நிறுத்த மாட்டேன்: உமர் அப்துல்லா

பாகிஸ்தானுக்கும் சென்றால் கூட பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, எதிர்ப்பதை நிறுத்த போவது இல்லை என்று ஜம்மு காஷ்மிர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர் கிரிராஜ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மோடியை எதிர்ப்பவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் இடம் கிடையாது அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டியதுதான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, முசாப்பரபாத்தில் பேருந்தை பிடித்து எல்லை கட்டுபாட்டு கோட்டை தாண்டி சென்றால் கூட மோடியை எதிர்ப்பதை நிறுத்த மாட்டேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உமர் அப்துல்லா, எங்களுக்கு இன்றையை தினம் மிரட்டம் மேல் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு ஸ்ரீ நகர் - முசாபராபாத் பேருந்து போக்குவரத்து உள்ளது. எனவே வாகா எல்லையை தாண்டி (பாகிஸ்தானுக்கு செல்ல)டெல்லிக்கோ அமிர்தசரஸ்க்கோ போகவேண்டியது இல்லை. முசபர்பாத்திலே நான் டிக்கெட் வாங்கி விடுவேன். ஏனெனில் நான் மோடியை எதிர்ப்பதை நிறுத்த போவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 3:37 am

சோனியாவின் ரேபரேலி தொகுதியின் நிலை கண்டு காங்.,அதிர்ச்சி: தொகுதி முழுவதும் பா.ஜ.,வின் புயல் பிரசாரம்

ரேபரேலி :காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடும், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியை, அவர் நான்காவது முறையாக தக்க வைக்க, கடும் சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. 'ரேபரேலி நகரம் வாழ்கிறது; கிராமப்புறங்கள் தேய்கிறது' என, பா.ஜ., தீவிர பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ, தொகுதி மக்கள் சோனியாவை 'கை'விடமாட்டார்கள் என, நம்பிக்கையுடன் உள்ளது.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் ரேபரேலி தொகுதி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தொகுதி. இங்கு, நான்காவது முறையாக,காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடுகிறார்.

நான்காவது முறை:

இம்மாதம் 30ல், இந்த தொகுதி யில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. சோனியாவை எதிர்த்து, பா.ஜ., சார்பில், அஜய் அகர்வால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பர்வேஸ் சிங் போட்டியிடுகின்றனர். முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. சோனியாவுக்கு ஆதரவாக இந்த செயல் கருதப்படுகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி சார்பில், முன்னாள் நீதிபதி பக்ருதீன் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டது; கடைசி நேரத்தில் அவர், போட்டியிடப் போவதில்லை எனக் கூறி விலகி விட்டார். இதையடுத்து, சமூக ஆர்வலரான, அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில், 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, சோனியா முதலில், 2004ல் போட்டியிட்டார். 'ஆதாயம் தரும் இரட்டை பதவியில் உள்ளார்' என, சர்ச்சை எழுந்ததை அடுத்து, பதவியை அவர் ராஜினாமா செய்தார்.பின், 2006 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2009ல் போட்டியிட்டு, 3.72 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இப்போது நான்காவது முறை வெற்றிக்காக தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளார்.

காங்கிரசின் குடும்ப தொகுதியான இங்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதால், பா.ஜ., சார்பில், ம.பி., முன்னாள் முதல்வர், உமா பாரதியை நிறுத்த முயற்சி நடந்தது. ஆனால், அவர், உ.பி.,யின் ஜான்சி தொகுதியை விட்டு நகர மாட்டேன் என, திட்டவட்டமாக கூறிவிட்டதால், கையில் கிடைத்த வேட்பாளராக, பா.ஜ., வழக்கறிஞர் அஜய் அகர்வால் நிறுத்தப்பட்டுள்ளார். ரேபரேலியில், சோனியாவுக்காக, அவர் மகள் பிரியங்கா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இப்போது, மத்தியில் காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, மோடி அலை ஆகியவற்றை பயன்படுத்தி, எப்படியும் வெற்றி பெற, பா.ஜ.,முயற்சிக்கிறது.

400 தொழிற்சாலை:

வாக்காளர்களை கவர, பா.ஜ., கூறும் புகார்கள்:

*சோனியா பல முறை வெற்றி பெற்றுள்ள போதும், ரேபரேலி நகர் பகுதியில் தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; கிராமப்புறங்கள் மோசமாகத் தான் உள்ளன.

*தொகுதி முழுவதும் பொத்தல் விழுந்த, வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகள், கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் இல்லை.

*ரேபரேலி நகரில் முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், தொகுதி முழுவதும், ஆரம்ப பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை.

*நகரை சுற்றிலும், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'சூப்பராக' உள்ளன. இது, சோனியா குடும்பத்தார் வந்து போவதற்காக, மத்திய அரசு கண்ணும் கருத்துமாக அமைத்துள்ளது.

*கிராமங்களில் சாலை வசதி மோசமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் போக முடியாத அளவிற்கு, குழிவிழுந்த சாலைகளாக உள்ளன.

*கிராமங்களில், உள்ள வீடுகள் அனைத்தும் களிமண்ணால் கட்டப்பட்டவையாக உள்ளன. இது, விருந்தினர் மாளிகையில் தங்கும், சோனியாவும், பிரியங்காவும் கண்டு கொள்வதில்லை.

*மூன்றாவது ரயில் பெட்டி தொழிற்சாலை, 2,700 கோடி ரூபாய் செலவில் ரேபரேலியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்கள் போதுமான வேலைவாய்ப்பு இன்றிஉள்ளனர்.

*கிராமங்களில் குடி தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை.

*கடந்த முறை சோனியா வெற்றி பெற்ற போது, மக்கள் படிப்பறிவு பெற வேண்டும் என, வலியுறுத்தி னார். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி இங்கு, 79.39 சதவீத ஆண்களும், 65.46 சதவீத பெண்களும் படிப்பறிவு பெற்று உள்ளனர். இது தேசிய அளவிலான சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.

*நகருக்கு வெளியே, மின் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக உள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில், 800 சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன; 400க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும் செயல்படவில்லை.

*கிராமங்களில் அடிப்படை வசதி கள் மோசமாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு வேலை திட்டத்தில் ஊழல், மதிய உணவு திட்டத்தில் முறைகேடு போன்றவை முக்கியமாக உள்ளன.இப்படி, பா.ஜ.,வினர், சோனியாவின் தொகுதியை, அக்குவேறு ஆணி வேறாக பிய்த்து காட்டி, மக்களிடம் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, பிரியங்கா மற்றும் அவர் தாய் சோனியா,மக்களிடம் கூறுவதாவது:மத்திய அரசு பல வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டாலும், அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு தான் உள்ளது. அதில், அகிலேஷ் அரசு தவறி விட்டது.

*கிராமங்களில் சாலைகள் அமைப்பது, மின் சப்ளைக்கு தேவையான போஸ்டுகள், வயரிங் அமைப்பதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்குகிறது; இதை, செயல்படுத்துவதும், மின்சப்ளையை வழங்குவதும், மாநில அரசின் வேலை.
*கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறிவருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 27, 2014 4:02 am

பா.ஜ., கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் இடங்கள் 317 : மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க காங்., தயார்

'ஒன்பது கட்டங்களாக நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும்; அந்த கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க உதவுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம்மாதம் 7 முதல், மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை, இம்மாதம் 7, 9, 10, 12, 17 மற்றும் 24ம் தேதிகளில், ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

அதிக இடங்களில்...

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், இன்னும் மூன்று கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின், மே 16ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெறும்; காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 120 இடங்கள் மட்டுமே கிடைக்கும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்:

*நாட்டிலேயே அதிகபட்சமாக, உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு உள்ளது. இங்கு, பா.ஜ., 50 இடங்களை கைப்பற்றும். இம்மாநிலத்தின் தேர்தல் முடிவுகள், மத்தியில் நடைபெரும் ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்.

* காங்கிரசை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள, 48 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, 35 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்.

*பீகாரில் மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு, 30 இடங்கள் கிடைக்கும். இங்கு, ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சி, பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகிறது.பா.ஜ.,வுடனான கூட்டணி முறிந்து, தேர்தலில் தனித்து போட்டியிடும், மாநில முதல்வர் நிதிஷ் குமாரின், ஐக்கிய ஜனதா தளம் இந்த தேர்தலில் படுதோல்வி அடையும்.

*பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி.,யில் மொத்தம், 29 தொகுதிகள் உள்ளன. இதில், 26 இடங்களை, பா.ஜ., கைப்பற்றும்.

*தெலுங்கானா பிரிவினையால் ஏராளமான அரசியல் குழப்பங்கள் நிலவும் ஆந்திராவில், மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், பா.ஜ., - தெலுங்கு தேசம் கூட்டணி, 26 இடங்களில் வெற்றி பெறும்

*பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கரில், மொத்தமுள்ள 11 இடங்களில், அனைத்திலும், பா.ஜ., வெற்றி பெறும்.

*பா.ஜ., ஆளும் மற்றொரு மாநிலமான கோவாவின், இரு தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றி பெறும்.

*காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகாவில், பா.ஜ., 18 இடங்களை கைப்பற்றும். இங்கு மொத்தம், 28 தொகுதிகள் உள்ளன.

*பா.ஜ., கோட்டையாக திகழும் ராஜஸ்தானில், 25 இடங்களில் 23ல், பா.ஜ., வெற்றி பெறும். இங்கு பா.ஜ.,வை சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார்.

*பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 26 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், 24 இடங்களில், பா.ஜ., வெற்றி பெறும்; காங்கிரஸ் மீண்டும் படுதோல்வி அடையும்.

*திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தின், 42 தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு, 12 இடங்களில் வெற்றி கிட்டும். தற்போது இந்த மாநிலத்தில் ஒரு தொகுதி கூட, பா.ஜ., வசமில்லை.

*தலைநகர் டில்லியின், 7 தொகுதிகளில், பா.ஜ., 6ல் வெற்றி பெறும்.

*தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே, பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழகத்தில், இம்முறை பலமான கூட்டணியை அமைத்துள்ள பா.ஜ., புதிய வரலாறு படைக்கும். இங்குள்ள 39 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு, 8 இடங்கள் வரை கிடைக்கும்.மொத்தமுள்ள, 543 லோக்சபா தொகுதிகளில், 317 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்; காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 120 இடங்களை கைப்பற்றும். மத்தியில் தே.ஜ., கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

குர்ஷித் சூசகம்:

இந்நிலையில், ''மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படுமானால், மூன்றாவது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உதவும்,'' என, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், தேவைப்பட்டால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஆதரவளிக்கும். காங்கிரஸ், மூன்றாவது அணி கட்சிகளிடமிருந்து ஆதரவை பெறும் கட்சி மட்டுமல்ல; அவர்கள் ஆட்சி அமைக்கவும் ஆதரவளிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூன்றாவது அணியில், முலாயமின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், கம்யூ., கட்சிகள் போன்ற பல கட்சிகள் உள்ளன.

Sponsored content

PostSponsored content



Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக