புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹரித்வார் !! Poll_c10 ஹரித்வார் !! Poll_m10 ஹரித்வார் !! Poll_c10 
30 Posts - 88%
heezulia
 ஹரித்வார் !! Poll_c10 ஹரித்வார் !! Poll_m10 ஹரித்வார் !! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 ஹரித்வார் !! Poll_c10 ஹரித்வார் !! Poll_m10 ஹரித்வார் !! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரித்வார் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Feb 17, 2014 10:55 pm

உலகம் உண்மையை பிரதிபலித்துக்கொண்டே உள்ளது . அதைப்பார்க்கிரவர்கள் அதிலிருந்து ஒரு பகுதி உண்மையை கிரகித்துக்கொள்கிறார்கள் . அவர்கள் புரிந்து கொண்டதற்கும் மேலாக இன்னும் எவ்வளவோ கிரகிக்கவேண்டிய உண்மை – முழுமை இன்னும் எஞ்சித்தான் இருக்கிறது .

காலம் காலமாக படிப்படியாக உண்மைகள் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன . ஆனால் கொஞ்சம் புரிந்து கொண்டவர்கள் தாங்கள் அறிந்து கொண்டதுமட்டுமே முழுமை என்பதுபோல சுய பெருமை அவர்களை மேலும் அறிய விடாமல் தடை செய்து விடுகிறது .
ஒருவேளை அடுத்த பிறவியில் இறைவன் அருளினால் மட்டுமே ஞானம் விருத்தியாகும்

ஆகவே எவைகளும் முழுமையல்ல ; எவைகளும் பொய்யுமல்ல என்ற நியதி ஞானம் பயில்வோர் கவனத்தில் வைக்கவேண்டிய ஒன்று .

ஏனென்றால் ஹரித்வார் பற்றி கங்கையைப்பற்றி எவ்வளவோ வெளிப்பாடுகள் வந்து விட்டன .
கங்கை இமய மலையிலிருந்து தரைக்கு வந்து நுழைகிற இடம் - ஹரித்வார் !
ஆகவே அங்கு கங்கையில் முழுகினால் பாவங்கள் தீரும் ! கங்கையின் முக்கியத்வம் கருதி கங்கைக்கு ஆரத்தி எடுத்து போற்றுதல் வேண்டும் ! முன்னோர்களுக்காக வழிபாடு செய்யவேண்டும் !

இவைகளை நான் மறுக்கவில்லை . கங்கையை காண்பதே ஒரு சுகமான அனுபவம் . ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் கங்கைக்கான ஒரு ஏக்கம் இருக்கும் . அதன் புனிதம் ; அதன் வற்றாத ; கரை புரண்டு ஓடுகிற பெருக்கால் உண்டாகிற மகிழ்சி ; வாழ்வுக்கு நம்பிக்கை கொடுக்கும் உத்தரவாதம் இவைகள் அனைத்திற்கும் மேலாக கங்கை பல பிறவிகளாக எனக்கு பரிச்சயமான பிரதேசமாகவே எனக்கு பட்டது

 ஹரித்வார் !! 2014-02-10+22.13.05

கங்கையும் அந்த பிரதேசமும் மொழி – இந்தி தெரியாத குறையையும் மீறி என்னுடன் கலந்து விட்ட ஒன்றாகவே உணர்ந்தேன் !

ஒரு சராசரி இந்தியன் காட்டுகிற அனைத்து அன்புடனும் மதிப்புடனும் அதில் மூழ்கி கடவுளை நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டேன் ! எனது சரீரத்திலும் ஆத்மாவிலும் புனிதம் உண்டாக்கும் படியாக நாராயணன் நாமத்தினாலும் ; சிவனின் நாமத்தினாலும் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் . இப்பிறவியிலும் முற்பிறவிகளிலும் முன்னோர்களுக்காக அவர்களின் ஆத்மா புனிதமாகும் படியாக வேண்டிக்கொண்டேன் !

நாராயணன் நாமத்தினால் கடவுளே ; சிவனின் நாமத்தினால்
எனது சரீரத்திலும் ஆத்மாவிலும் உமது சக்தியால் நிரப்புவீராக ! பாவ சாபங்களில் சாந்தி உண்டாக்குவீராக ! உலகம் முழுமையும் உம்மை  நோக்கி திரும்புவதாக ! சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவீராக !! சகல மதங்களுக்குள்ளும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் சமரச வேதத்தை வெளிப்படுத்துவீராக !!


 ஹரித்வார் !! 2014-02-10+22.00.41

இவைகளுக்கும் மேலாக ஹரித்வார் சமரச வேதத்தை விளம்பிக்கொண்டு உள்ளது என்பதுதான் உணர்வுள்ளோருக்கு வெளிப்பாடு !

கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் அல்லது குறையும் என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல ; யூத ; கிறிஸ்த்தவ ; முஸ்லீம் சம்பிரதாயங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைமுறையில் உள்ள ஒன்று !

யூத மதத்திலும் இயேசுவுக்கு முன்பே குடமுழுக்கு யோவான் (Jhon the Baptist)  என்பவர் தோன்றி அவர் மூலமாக பலர் ஜோர்டான் நதியில் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்டு முழுகி வேண்டும் வழக்கம் வந்துவிட்டது

அதன் தொடர்பாகவே கிறிஸ்தவர்களும் ஞானஸ்நானம் என்ற வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்

குரானிலும் பள்ளியில் சென்று வழிபடும் முன்னர் தண்ணீரில் ஒளுவு செய்தல் என்ற வழக்கம் நியதி ஆக்கப்பட்டுள்ளது

இந்து கோவில்கள் அனைத்திலும் தீர்த்தம் என்ற பெயரில் குளம் ஒன்றும் அதில் கைகால் முகம் சுத்தம் செய்து ஜலத்தை தலையில் தெளித்த பின்பே கோவிலுக்குள் நுழையும் நியதி உள்ளது


இவையெல்லாம் உடல் சுத்தம் என்பதற்கு மேலாக கடவுளிடம் பிரார்த்திக்கும் முன்னர் தண்ணீரில் ஆத்மாவை தூய்மை செய்து கொள்வது பாவ நிவர்த்தி என்பதன் அடையாளமாகவே சகல மதத்தினராலும் கடைபிடிக்கப்படுகிறது

ஆக ஜலம் அல்லது கங்கை என்பது ஆத்மாவை சுத்தம் செய்யும் தகுதியுள்ள பரமாத்மா – ஹரிக்கு - நாராயணனுக்கு அடையாளமாக உள்ள ஒன்று

இந்தப்பிரப்ஞ்சம் நாளும் விரிந்து வளர்ந்து கொண்டே உள்ளது என்பதை விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது . அது எதில் வளர்ந்து கொண்டுள்ளது என்றால் வெட்ட வெளியில் வளர்ந்து கொண்டே உள்ளது . அந்த வெட்ட வெளியில் ஈதர் என்ற கண்ணால் காண இயலாத ஆவி உள்ளது

சற்குரு இயேசுவும் ``தேவன் ஆவியாயிருக்கிறார் என்றார்

கடவுள் படைப்பை தொடங்கும் போது முதலாவது பூமியையும் வானத்தையும் உண்டாக்கினார் என்றே சகல வேதங்களும் குறிப்பிடுகின்றன

யூத வேதம் ஆதியில் பூமி தண்ணீரால் நிரம்பியிருந்தது தேவ ஆவி ஜலத்தின் மீது அசைவாடிக்கொண்டிருந்தது என்கிறது

ஆவியான கடவுள் படைப்பை தொடங்கும்போது ஆவி ஓரிடத்தில் குவிந்து அது அழுத்தத்தால் குளிர்ந்து தண்ணீர் கோளமாக மாறியது அதிலிருந்தே பூமி மற்ற கோளங்கள் நட்சத்திரங்கள் தோன்றின

படைப்பில் கண்ணால் காண இயலாத ஆவியிலிருந்து முதலாவது தோன்றிய பருப்பொருள் தண்ணீர் ! அதனால்தான் அதிலிருந்து தோன்றிய உலகம் மற்றும் அதில் தோன்றிய மனித குலம் செய்த பாவங்கள் அனைத்தையும் கழுவும் சக்தி – புனிதம் அந்த ஆதி ஜலத்திற்கு உள்ளது !

உயரமான இமய மலையில் ஆவி குளிர்வதால் உண்டான பணி படிவுகள் உருகி உண்டாகும் தூய தண்ணீர் கங்கையாக உண்டாவதால் அது அந்த ஆதி கங்கைக்கு அடையாளம் !

அருவமான கடவுள் ரூபமாக வெளிப்படுவது – பரமாத்மா – ஹரி – நாராயணன் . எனவே கங்கை ஹரிக்கு அடையாளம் !


அந்த ஹரி பூமியில் நுழைகிற இடம் ஹரித்வார் !

கங்கை தரைக்கு வந்த உடன் அங்கு கங்கையை எதிர்நோக்கி பிரமாண்டாமான சிவன் மூர்த்தம் உள்ளது . அந்த மூர்த்தம் உள்ள தீவில் மோதி கங்கை இரண்டாக பிரிந்து மீண்டும் கூடுகிறது அங்கு பொதுமக்கள் கங்கையில் மூழ்கி வழிபாடு செய்கிறார்கள்

சிவனுக்கு இடப்புறம் மனசாதேவி மலையும் வலப்புறம் சாந்திதேவி மலையும் உள்ளது அதில் மனசாதேவியுடன் சிவனும் ; சாந்திதேவியுடன் சிவனும் உள்ளனர் ! பக்தர்கள் கங்கையில் மூழ்கி பின்பு மனசாதேவி மலைக்கும் சாந்திதேவி மலைக்கும் சென்று வழிபடுகிறார்கள் !

பவ்தீகப்படைப்பில் அசையாப்பொருட்கள் அடுத்து அசையும் உயிரினங்கள் அதில் மனித படைப்பு சிவன் ! அவரே முதலாவது ஒளி சரீரம் பெற்று ருத்திரன் ஆக மரணமில்லா பெரு வாழ்வு பெற்று தேவலோகத்தில் முதலாவது நுழைந்தவர் !

அவ்வாறு தகுதி பெற மனிதர்கள் சரீரத்தில் சரியை கிரியை யோகம் செய்து தகுதி பெற வேண்டும் அதற்கு சரீரத்திற்கு அதிபதியான சற்குரு சிவனின் கிருபையுடன் ஆத்மாவிற்கு அதிபதியான ஹரியின் அருள் உன்னதத்திலிருந்து வந்து கலக்க வேண்டும் !

இந்த இரண்டு சற்குரு நாதர்களின் அருளுடன் மட்டுமே மனம் போன போக்கில் வாழும் மனிதன் மனதை சீர்திருத்தி செம்மையான வாழ்வு வாழும்போது மானசாதேவியுடன் மகிழ்ந்திருப்பதும் ; அதில் ஹரியின் அருள் கலக்கும் அளவு அதிகரிக்க அதிகரிக்க பாவசாபங்களில் சாந்தம் உண்டாகி ; ஆத்மா சுத்தியடையும் போது சாந்திதேவியுடன் மகிழ்ந்த பேரின்ப நிலை கிடைக்கும்

சத்து (ஹரி) சித்தாகிய சிவனுடன் கலப்பதால் மானசதேவியுடன் மகிழ்துவாழும் மனிதன் சாந்திதேவியுடன் பேரின்பத்தில் திளைக்கும் நிலைக்கு உயர்வான் என்பதே ஹரித்வாரின் வெளிப்பாடு !
சத் + சித் + ஆனந்தம் = சச்சிதானதம் என்பதன் வெளிப்பாடு இதுவே !!


 ஹரித்வார் !! %E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+2

சைவமும் வைணவமும் ஆதியிலே வெவ்வேறு மார்க்கங்களாக அறியப்பட்டு பலத்த மதச்சண்டை நடந்துகொண்டிருந்தது . அதை சமரசப்படுத்தும் – சமரச வேதம் ஆதியிலிருந்தே இந்தியாவில் வந்து கொண்டேதான் இருந்தது அதுவே ஹரித்வாரின் அடையாளம் !

இன்றைக்கும் யோகசாதகர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் தேங்கிப்போய் உள்ளனர் !

சரீரத்தில் யோக சாதனைகளை குருமார்களை அடுத்து குண்டலினியை சகஸ்ராரத்தில் கொண்டு வந்து விட்டால் அது அமுதமாக மனிதனுக்குள் பொழிந்து அவனை சகல மேன்மைக்குள் – ஞானத்திற்குள் நடத்தி விடும் என்பது உண்மையே ! அது டோக்கன் மட்டுமே !

குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தில் நுழையும்போதும் வாழ்வில் ஆத்மாவில் ஏற்படும் அனுபவங்கள் – பாவப்பதிவுகளுடன் போராடி ஆத்மா சுத்தம் பெறுவது நடக்காமல் சஹாஸ்ராரத்திற்கு வந்து சேர்வது என்பது எளிதானது அன்று !

ஆத்மா சுத்தம் அடைவது அனுபவம் உள்ளொளியாக ஞானமாக பரிணமிப்பது என்பது ஆத்மாவிற்கும் பரமாத்மாவான நாராயணனுக்கும் தொடர்பில்லாமல் சாத்தியமாகாது !

உயரமான மலையை ஏதாவது ஒரு பாதையில் கடினமாக ஏறி விட்டவர்கள் வெற்றியாளர்கள்தாம் ! ஆனால் அந்த வெற்றியே மலையையை முழுமையாக உணர்ந்து விட்டதாக ஆகி விடாது ! மற்ற பாதைகளில் இன்னும் எவ்வளவோ அறியவேண்டிய பொக்கிசங்கள் இருக்கும் !

உச்சியிலிருந்து முழு மலையையும் ஆய்வு செய்வது உணர்வது
எளிதானது என்பதால் உச்சியை அடைந்து விட்டால் எல்லாம் அறிந்துகொள்ளலாம் என்று அந்தந்த மார்க்கத்தினர் சொல்வது பொத்தாம் பொதுவானது - ஒரு டோக்கன் – முழுமையல்ல ! உச்சியை அடைந்தபிறகு முழு மலையை உணர்ந்துகொள்ளும் வேலையை செய்தாக வேண்டும் அதாவது நமது மார்க்கமல்லாத மற்ற மார்க்கங்களின் மேன்மைகளை – ரகசியங்களை உள்வாங்கியே ஆகவேண்டும் !


சிவ குருவின் அருளால் சரீரத்தில் மேற்கொள்ளப்படும் எந்த யோகசாதனைகளும் ; குண்டலினியை சகஸ்ரத்திற்கு கொண்டு வருமானால் அது ஆத்மாவை முழுமையாக புரிந்துகொண்டு பல்லாயிரம் பிறவிகளில் அதன் வாசனைகளை ; பதிவுகளை ; பாவசாபங்களை சுத்திகரிக்கும் பணியையும் ; அத்தோடு பிரபஞ்ச ரகசியங்களையும் கடவுள் வைகுண்டம் (பரலோகம் ) ஆவி மண்டல ரகசியங்கள் அனைத்தையும் பற்றிய நுண்ணிய அறிவுக்குள் திரும்பி விடும் !

யோகம் ஆத்மா கடவுளைப்பற்றி சிந்தனைக்குள் திரும்பி விடும் !

ஆனால் யோகத்தில் உச்சியை நெருங்காதவர்கள் ; அதை நெருங்கியவர்கள் சொல்லியதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு உச்சியை தொட்டால்போதும் உச்சியை தொட்டால்போதும் அப்படி ஆகி விடுவோம் இப்படி ஆகி விடுவோம் என்று சொல்லிக்கொண்டே உள்ளனர் ! ஏன் கடவுளாகவே ஆகி விடுவோம் என்றும் கூட தைரியமாக சொல்வது வேடிக்கையாக உள்ளது !

அல்லது ஜீவசமாதியை பற்றி பேசிக்கொண்டே உள்ளனர் ! அப்படி பேசிய பல முன்னேறிய தகுதியான குருமார்களும் ஜீவசமாதி அடையமுடியாமல் இறந்து போனார்கள் என்பதை தெரிந்துகொண்டும் அவர்கள் ஜீவசமாதியை பெரிதாக சொன்னதை நம்பிக்கொண்டு பேசிக்கொண்டுள்ளனர்

ஜீவசமாதி என்பதே இரண்டாம் படித்தரத்தில் உள்ளது . ஜீவசமாதி அடைந்த பலரும் சில நாளில் அடுத்த பிறவி எடுத்து விட்டனர்  !

பிறவாப்பெருநிலை என்பது சாத்தியமே அற்ற ஒன்று ! அது இலக்கும்  
அல்ல ;  மரணமில்லா பெரு வாழ்வு – ஒளி சரீரம் பெற்றால் மட்டுமே தேவதூதனாக பரலோக வாழ்வு பெற முடியும் என்பதை வள்ளலார் விளம்பி அருளினார் !

ஆண்டாள் ; பக்த மீரா ; மாணிக்கவாசகர் என்று ஜோதியில் கலந்து ஒளி சரீரம் பெற்றவர்கள் நிறைய உள்ளனர் !

ஆப்ரகாம் வாரிசுகளில் மோசே ; எலியா போன்றோர் ஒளி சரீரம் பெற்றவர்கள் !

ஏற்கனவே ஒளி சரீரத்தோடு உலகில் அவதரித்தவர்கள் ராமன் ; கிரிஸ்ணர் ; இயேசு – நாராயணனின் அவதாரங்கள் ! உலகிற்காக அவர்கள் மாமிச சரீரத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் தாங்கள் பரமாத்மா ; படைப்புகள் சகலமும் தங்களுக்குள்ளே தான் படைக்கப்பட்டிருக்கிறது என்ற விச்வரூபத்தை அவ்வப்போது வெளிக்காட்டவும் செய்தார்க்கள்

பரசுராமருக்கு தனது விஸ்வரூபம் ராமரால் வெளிக்காட்டப்பட்டது

அர்ச்சுனருக்கு தனது விஸ்வரூபம் கிரிஸ்ணரால் வெளிக்காட்டப்பட்டது

பேதுருவுகும் யோவானுக்கும் தனது விஸ்வரூபம் இயேசுவால் வெளிக்காட்டப்பட்டது

இவர்கள் மூவருமே கடவுளை தங்கள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்றும் சொனார்கள் ! இவர்கள் மூவரும் பாவமண்ணிப்பை பற்றி பேசினார்கள் ! மூவரும் மரணமில்லா பெரு வாழ்வு – நித்திய ஜீவனைப்பற்றி பேசினார்கள் !

யோவான் 4 அதிகாரம்
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் கிணற்று தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.

14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.


இந்தியர்களுக்கு கங்கையாய் பிரவகிக்கும் ஹரியே ; ராமராகவும் கிரிஸ்ணராகவும் அவதரித்து பக்திக்குள்ளும் ஆத்ம துய்மைக்கும் சற்குருவாக இருந்து வழி நடத்தும் நாராயணனே ; இந்தியர் அல்லாதோருக்கு இயேசுவாக வெளிப்பட்டு ஜீவத்தண்ணீரையும் ஞானஸ்நானத்தையும் வழங்கி வருகிறார் ! ஆனால் கங்கையையும் ராமரையும் கிரிஸ்ணரையும் அறிந்த இந்தியர்களுக்கு கங்கையே போதுமானது என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் !!

தங்கள் இனத்திற்கு வந்த இறைதூதரை – அவரின் உபதேசத்தால் தங்களின் இனத்தை மேம்படுத்த முடியாமல் கலாச்சார சீரழிவுகளும் வக்கிரங்களும் தலைவிரித்தாடும்போது அடுத்த இனத்தை அழித்து இன மாற்றம் செய்யும் மத மாற்ற வேலையை அவர்கள் நிறுத்த வேண்டும் !!

இயேசுதான் இந்தியாவில் ராமராகவும் கிரிஸ்ணராகவும் அவதரித்தார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் !!

ஆப்ரகாமிய வேதங்கள் (யூதம் ; கிறிஸ்த்தவம் ; இசுலாம் ) அனைத்தும் ஆரியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் !

அவரவர்கள் அவரவர் வேதங்களில் உள்ள மேன்மையை அவரவர் இனத்திற்கு கற்றுக்கொடுத்து மேம்படுத்த வேண்டிய அளவு சீர்கேடுகளின் அளவுகள் எல்லா சமூகத்திலும் வந்து விட்ட பிறகு மதச்சண்டை போடுவதும் ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனமாக மாற்ற முயற்சிப்பதும் மனிதனை மனிதன் கடவுளின் பேரால் கொல்லுவதும் அசுரர்களின் மாயை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !

சரியை என்கிற அளவில் சமுகம் சீராக வாழ சமுதாய சட்டங்கள் எல்லா மதங்களிலும் உள்ளன . அவற்றில் இறை தூதர்கள் சொல்லாத – வெற்று சடங்காச்சாரங்கள் – தவறான வியாக்கியானங்கள் எல்லா மதத்திலும் வந்து விட்டன இவற்றை சீர்திருத்த கடவுளின் பாதத்தில் காத்திருந்து முயற்சிக்கவேண்டிய தருணம் வந்து விட்டது .மற்ற மதங்களிலிருந்து நல்ல கொள்கையை மட்டும் அவரவர் மதத்திற்கு சுவீகரித்தால் போதுமானது

உலகில் கடவுளிடமிருந்து வராத – மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாம் அழிந்து விட்டன

இப்போது எவை தாக்கு பிடித்து நிற்கின்றனவோ அவையெல்லாம் இறைவனிடமிருந்து அவரது தூதர்களால் வந்தவை என்பதை ஒவ்வொருவரும் முக்கியமாக கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் !

உலகில் அவசியமானது மதச்சார்பின்மை இல்லை ! காந்தி ஒருபோதும் மதச்சார்பின்மையை வலியுறுத்தவில்லை ! மத சமத்துவத்தையே வலியுறுத்தினார் – சமரச வேதத்தை வெளிக்கொணர்வதற்கான முயற்சியில் இருந்தார் ! ஆனால் அவர் கொல்லப்பட்ட பிறகு அவரின் பெயரை சொல்லிக்கொண்டு ஓட்டுக்காக மதச்சார்பின்மை என்பதான தவறான நெறியையோ அல்லது அதற்கு எதிர்ப்பாக மத வெறியையோ தூண்டி மக்களை வேட்டை ஆடுகிற அரசியல்வாதிகளே பெருத்து விட்டார்கள் !

உலகின் இன்றைய தேவை சகல மதங்களையும் சமத்துவப்படுத்தும் சமரச வேதமே !

அதற்கான வழிகாட்டியாக இறைவனது சகல வல்லமையோடும் ; அருளோடும் கிரிஸ்ணரின் நண்பனான குசேலர் என்ற காந்தியின் ஆத்மா விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என உணர்வுள்ளோர் வேண்டிக்கொள்வோம்



நாரயணன் நாமத்தினாலே கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக