புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
77 Posts - 36%
i6appar
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 03, 2014 7:14 am

சின்னக்கண்ணன் , அன்பு மலர்  அன்பு மலர் 
பெரிய விஷயங்களை அழகாக தருகிறீர்கள். நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 10:27 am

நன்றி, ரமணீயன் ஐயா..

T.N.Balasubramanian wrote:சின்னக்கண்ணன் , அன்பு மலர்  அன்பு மலர் 
பெரிய விஷயங்களை அழகாக தருகிறீர்கள். நன்றி

ரமணியன்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 10:34 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .61


”மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே”

“வாய்யா வா வா ஏன் ரெண்டு நாள் ஒன்னோட குரலே ஒலிக்கலை மனசாட்சி.. எவ்ளோ சந்தோஷமா இருந்தோம் தெரியுமா நானும், மத்தவங்களும்!!”

“சும்மா இதானே வேணாங்கறது..காரணம் இல்லாம நாம பேசிப்போமா என்ன..உனக்கு மூங்கில் முத்துன்னா என்னன்னு தெரியுமோ”

”எனக்கு முரடன் முத்து தான் தெரியும் தேவிகா படம்..“

“உதைக்கணும் உன்னை.. இந்த மூங்கில் இருக்கோல்லியோ புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாம். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது.

திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்துபவர்கள்

“ஆல் போல் தத்து அருகது போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல்"

என வாழ்த்துவாங்களாம் அந்தக் காலத்தில்... அந்தளவிற்கு தன் இனத்தோடு பலஆண்டுகள் இணைந்து கணுக்கணுவாய் தோன்றி வளரக் கூடியது மூங்கிலாக்கும் மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து வளர்ந்து பல தலைமுறை தாவரங்களும் புதராக ஒன்றாக இருக்கும். இது நூறு அடி உயரம் வளரக்கூடிய பல பருவப் புதர் மரம் என்று சொல்வார்கள்..”

“ஏன் ஏதாவது மூங்கில் பிஸினஸ் பண்ணப் போறியா..ஏண்டா திடீர்னு போர் அடிக்கற..”

“இல்லைப்பா ஒரு விஷயம் கொஞ்சம் தெரிஞ்சுண்டதைச் சொல்லலாமேன்னு தான்.

. இன்றைய ஸ்லோகத்துல மூங்கில் முத்துன்னு வருது.. அது என்னன்னு பார்த்தா திருஞான சம்பந்தர் தேவாரத்துலயும் சுந்தரரோட திருச்சோற்றுப் படையிலையும் வருது...

கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே

. //மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே//

இது சுந்தரர் தேவாரம்..

பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல்

//பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும்,
மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற
விரிந்த சாரலும் உடைய திருவண்ணாமலையில்//னு

இது ஞான சம்பந்தர் தேவாரம்..

ஸோ மூங்கில் தண்டைக் கீறினா முத்துக்கள் போல இருக்கும் போல இருக்கு –அந்தக் காலத்துல..அந்த முத்துக்கள்ல ஒண்ணு அம்பாள் சுவாசிக்கறச்சே வெளிவந்து அம்பாளோட் மூக்கின் அணியாக ஆகியிருக்குமோங்கறார் பகவத் பாதர்…

அப்புறம் கழைங்கறது மூங்கிலைக் குறிக்கும் கழைக்கூத்தாடி தெரியுமோ..”

“தெரியாம என்ன..வாணி ராணில வாணிஸ்ரீ மேல கயிற்று மேல ஒரு கம்போட நடப்பாங்களே..வாணிஸ்ரீ ஒரு விதமான அழகுதான் இல்லியோ.... “

“ஏண்டா பழைய படத்துல இருந்து தான் உவமை கொடுக்கணுமா.. சரி..இன்றைய ஸ்லோகத்துல அம்பாளோட நாசி மூங்கிலுக்கு ஒப்பாக இருக்காம்.. வா டீடெய்லா ஸ்லோகத்தில் போய்ப் பார்க்கலாம்..

**




அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்
ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

Asau naasa-vamsas tuhina-girivamsa-dhvajapati
Thvadhiyo nedhiyah phalatu phalam asmakam uchitam;
Vahathy anthar muktah sisira-kara-nisvasa galitham
Samruddhya yat tasam bahir api cha mukta-mani-dharah


பனிமலை மன்னனின் குலம் செழிக்க அதில் பறக்கும் துவஜஸ்தம்பக் கொடி போன்றவளே.. அம்பிகே.

.உனது மூங்கில் தண்டு போன்ற மூக்கில் நல் முத்துக்களால் ஆன மூக்குத்தியினை அணிந்திருக்கிறாய்..அதில் உள்ள முத்துக்கள், உனது மூங்கில் தண்டு போல் இருந்த மூக்கினுள் இருந்து இடப்பக்கம் சந்திர நாடியில் சுவாசித்த பொழுது வெளிப்பட்ட முத்துக்கள் போல பிரகாசிக்கின்றன..

அப்படி சிறந்த முத்துக்களை அணிந்திருக்கும் மூக்கானது நாங்கள் கேட்கும் யாவற்றையும் எங்களுக்கு அளிக்கட்டும்..”



மனித உடலில் மூன்று நாடிகள் உள்ளன.

.இடை- இடது பக்கம் உள்ளது, பிங்கலை – வலது பக்கம் உள்ளது; , மூன்றாவதான சுஷுமான நாடி இயங்க இடை பிங்கலை சரிவர இயக்கப்பட வேண்டும்.

இந்த மூன்று நாடிகளும் இணையும் இடமே மூலாதாரம். ஜனன உறுப்பிற்கும் ஆசன வாயிற்கும் இடையில் நான்கு விரல் பரப்பில் உள்ள இடமே மூலாதாரம் .

இடை என்பது இடது நாசி வழியாக சுவாசிக்கப்படும் உயிர்க்காற்று.

பிங்கலை என்பது வல நாசி வழியாக சுவாசிக்கப்படும் உயிர்க்காற்று.

இந்த இரண்டு காற்றுகளும் இணைந்து இயக்கப்படும் அல்லது திறக்கப்படும் முதுகெலும்பின் தண்டின் அடிப்பாகத்தில் சுஷுமான நாடி மூலம் மேல் நாடிகளும் ஆதாரங்களும் இயக்கப் பட வேண்டும்.

அம்பாள் இந்த மூன்று நாடிகளுக்கும் நடுவில் ஹ்ருதயாகாசத்தில் முத்துக்களால் ஆன ஆபரணங்கள் அணிந்து வீற்றிருக்கிறாள்..

இந்த ஸ்லோக தியானத்தினால் மரண பயம் நீங்கி லஷ்மி கடாக்ஷத்துடன் முக்தியும் கிட்டுமாம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Mar 03, 2014 10:41 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .62

“பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்”

“ஹை.. நீ பாடறியா.. நானும் சினிமாப் பாட்டு பாடறேன்..

பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே”

“அடப்பாவி..இது தொண்டரடிப் பொடியாழ்வார் எழுதின பாசுரம்..”

“சினிமாப்பாட்டு தானே சிவாஜிபாடியிருக்காரே..”

“உன்னைத் திருத்தவே முடியாது…சரி பவளத்துக்கு பொட்டானிகல் பேர் என்னன்னா கொரலியும் ரப்ரம்..”

“மம்மீ ஈஈ.. நான் இப்ப அழுவேன்.. அழகா செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம்னு பாடறதவிட்டுட்டு”

“இல்லைடா.. முதல்ல பவளத்தில கொடியே வராது..அப்புறம் தானே பூக்கள் பூக்க முடியும்..பவளம்கறது ஒரு பாறை..பவளப் பூச்சின்னுஒரு பூச்சி கட்டற கூடாக்கும் அது..அதுவும் ஆழ்கடல்ல தான் கட்டுமாம்..அதுவும் சிவந்தபவளம் எனப்படுகிற ரெட் கோரல் தான்காஸ்ட்லியாம்..”

“ஓகே..அப்புறம்..கோவைப்பழத்துக்குப் பாடப் போறியா..

“கள்ளனாக்கும் நீ..கரெக்டா சொன்னியே..

வண்ணச் சிவப்பினை வாயினில் கொண்டாலும்
உன்னுதடு கொண்ட ஒளிர்நிறத்தில் முகமும்
கடுகாய்ச் சிறுத்தபடி கண்களுக்குள் வெட்கப்
படுமாமே கோவைப் பழம்

”அது சரி..என்னை மாதிரில்லாம் உனக்கு எழுத வராது மனசாட்சி..இன்றைய ஸ்லோகத்துல பவழமும் கோவைப் பழமும் வருதாக்கும்..”

“பவளம்னு சொல்லு.. அது coral..பவழம்னு சொன்னா அது மல்லிப் பூவாய்டும்..:

:நெசமாவா”

“ஒரு உத்தேசமா சொன்னேன்..வா.. அம்பாளோட உதடுகளைப் பற்றி பகவத் பாதர் என்ன சொல்றார் பார்க்கலாம்..

**

ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா

Prakrithya'rakthayas thava sudhati dantha-cchada-ruchaih
Pravakshye saadrisyam janayathu phalam vidhruma-latha;
Na bimbam tad-bimba-prathiphalana-raagad arunitham
Thulam adhya'rodhum katham iva bhilajjetha kalaya.

“தேவி.. அழகிய பல்வரிசையைக் கொண்ட இயற்கையாகவே சிவந்த வண்ணத்தில் இருக்கும் உனது உதடுகளுக்கு உவமை சொல்ல விரும்புகிறேன்..

பவளக் கொடியில் பழம் பழுத்தால் அதை உன் உதடுகளின் நிறம் எனச் சொல்லலாம்..அதிலோ பழம்,பூ காய் எதுவும் வராது..

தவிர அடுத்ததாக கோவைப் பழத்தைச் சொல்லலாம் என்றால் அதை நீ உன் உதடுகளின் அருகே கொண்டு சென்ற போது தான் உன் உதடுகளின் நிறம் பிரதிபலித்து அது சிவந்த வண்ணத்தை அடைந்தது..

அப்படியே அடைந்தாலும் உன் உதட்டுச் சிவப்பில் பதினாறில் ஒரு பாகம் கூட அடைய முடியவில்லையே என வெட்கப்படுகிறது..”

இந்த சுலோகத்தை தியானிப்பவர் பதினாறுவகைப் பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 04, 2014 12:20 pm

நாளும் ஒரு அழகின் அலை...

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .63

ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா
அதஸ்தே சீதாம்சோ: அம்ருதலஹரீம் ஆம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்ஜிகதியா

Smitha-jyothsna-jalam thava vadana-chandrasya pibatham
Chakoranam asid athi-rasataya chanchu-jadima;
Athas the sithamsor amrtha-laharim amla-ruchayah
Pibanthi svacchhandam nisi nisi bhrusam kaanjika-dhiya.

“அம்பிகையே உன் முகமென்னும் முழுமதியில் புன்சிரிப்பென்னும் ஒளிக்கிரணங்களைப் பருகும் சகோரபட்சிகளுக்கு அவற்றை அதிகமாகப் பருகியதால் திகட்டி விடுகின்றன..

எனவே அவை இரவில் வரும் நிலவின் கிரணங்களை தங்கள் வாய்ச்சுவையை மாற்ற எண்ணி, புளித்த கஞ்சி என நினைத்து முகஞ்சுளித்தபடி உண்கின்றன..””

முழு நிலவு என வர்ணிக்கப் பட்டாலும் தேவியின் முகம் பலமடங்கு ஒளிபொருந்தியது..

அதிலிருந்து வரும் ரச்மி எனச் சொல்லப்படும் கதிர்களோ சாதரண சந்திரனின் அமுத கிரணங்களை புளித்த கஞ்சி நீர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக இந்த ஸ்லோகத்தில் சொல்லப் படுகிறது.

இந்த சுலோக பாராயணம் எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றல் தருமாம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Mar 04, 2014 12:22 pm

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .64

“செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்”

“ஆரம்பிச்சுட்டியா. நைசு சிலுக்குத்துணியைப் போலன்னு இந்த ப் பாட்டில வருதாக்கும்”

“ஏய் இதானே வேணாங்கறது..ஓ.கே..சில விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ..
செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

மாணிக்கம் அதாவது ஆங்கிலத்தில் ரூபி என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள ரத்தினமாகும்..வைரத்துக்கு அடுத்த படியான உறுதியான கல் மாணிக்கக் கல்..

இது உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும்.. தெரியுமா உனக்கு”

“ஏன் மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்னன்னு பாட்டுபாட வேண்டியது தானே..இதையெல்லாம் நாங்களே கூகுள்ள பாத்துக்க மாட்டோமாஎன்ன”

“கொஞ்சம் ஆர்வத்துல சொன்னேன்.. இந்த ரெண்டுக்கும் என்ன லிங்க் இருக்குன்னு இன்றைய ஸ்லோகத்துல பார்க்கலாமா..”


**
அவிச்ராந்தம் பத்யு: குணகண கதாம்ரேடநஜபாஜபா
புஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷதச்சச்சவிமயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா

Avishrantam pathyur guna-gana-katha'mridana-japa
Japa-pushpasc-chaya thava janani jihva jayathi saa;
Yad-agrasinayah sphatika-drishad-acchac-chavi mayi
Sarasvathya murthih parinamati manikya-vapusha.


“தாயே..உனது சிவந்த நாவானது எப்போதும் உனது பரமேஸ்வரனையே தியானித்து அவனது புகழையே திரும்பத் திரும்பச் சொல்வதால் கொஞ்சம் வெட்கப் பட்டுச் சிவந்து செம்பருத்திப் பூவின் நிறத்தை அடைந்து விட்டது..

உனது நாவில் வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கும் சரஸ்வதியானவள் ஸ்படிக வெண்மையாய் பட்டுடை அணிந்திருந்தாலும் உன் நாவின் சிவந்த நிறம் பிரதிபலிப்பதால் உயர்ந்த மாணிக்கக் கல்லைப் போன்று சிவந்து விளங்குகிறாள்..

இவ்வண்ணம் தேவியை தியானிப்பவர்கள் செவிக்கினிய சொற்களைக் கூறி மற்றவரை மகிழ்விப்பவராவர்.. கலைமகளின் அருளும் அவருக்குக் கிடைக்கும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 10:21 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .65

நிர்மால்யம் என்றால் என்ன?

நிர்மால்யம் என்பது இறைவன் இறைவிக்கு சமர்ப்பிக்கப் படும் மலர்கள், பழங்கள் போன்ற பிரசாதங்கள் அவர்கள் ஏற்றுக் கொண்டது போக மிகுதியானவை என்பார்கள்.
.
அதுவும் சிவன் கோவிலில் சிவனுடைய நிர்மால்யங்கள் முதலில் அவரது பூத் கணங்களில் முதலாவதான சண்டன் என்பவர்க்குக் கொடுக்கப் படுகிறது..அவரது அனுமதி பெற்ற பிறகே சிவப் பிரசாதங்கள் மற்றவருக்கு வினியோகப் படுமாம்..

கிருஷ்ணன் கோவிலில் நிர்மால்ய தரிசனம் என்பார்கள்..அதாவது இரவில் கண்ணனுக்குச் செய்த அலங்காரங்களை காலை கண்ணனை நீராடச் செய்விக்கக் களைந்து விட, அந்தத் தோற்றம் தான் நிர்மால்ய தரிசனம்..அதுவும் குருவாயூரப்பன் கோவிலில் இன்னும் விசேஷம்..

துளசிதளத்திற்கு மட்டும் நிர்மால்யம் கிடையாது..அப்படி என்றால் ஒரு முறை சமர்ப்பித்த பிரசாதத்தை மறுமுறை இறைவனுக்கு சமர்ப்பிக்கப் படக் கூடாது என்பார்கள்..

துளசி விதிவிலக்கு..துளசி இலையை மஹாவிஷ்ணுவின் அம்சமான சாளக்கிராமத்தில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்..மறு நாள் புதிய துளசிகளை வைத்து விட்டுத்தான் பழைய துளசி இலைகளை மாற்றவேண்டும்..அவ்வண்ணம் புதிய துளசி இலைகள் கிடைக்கவில்லை எனில் முதல் நாள் வைத்த துளசி இலைகளை சாளக் கிராமத்துடன் வைத்து விடலாமாம்.
.
அடுத்து தாம்பூலம்.. வெற்றிலை பாக்கு. மூன்றாவதாய்ச் சுண்ணாம்பு..மார்னிங்க் ப்ரேக்ஃபாஸ்டிற்கு அப்புறம் தாம்பூலத்தில் பாக்கு அதிகம் இருக்க வேண்டும் ஏனெனில் மதிய நேரம் வெப்பத்தால் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்..

மதிய நேரம் உணவிற்கு அப்புறம் கொஞ்சம் கூடுதல் தாங்கக் கூடிய அளவிலான சுண்ணாம்பு சேர்த்து தாம்பூலம் தரித்தால் அது உணவில் உள்ள வாயுவினைக் கட்டுப் படுத்துமாம்..

இரவில் வெற்றிலைய அதிகமாக எடுத்துக் கொண்டால் நெஞ்சில் கபம் தங்காதாம்.

.மஸ்கட்டில் வெற்றிலை அவ்வளவாகக் கிடைப்பதில்லை.. எனவே தாம்பூலம் பற்றிக் கவலை இல்லை!

இன்றைய ஸ்லோகம் நிர்மால்யம், தாம்பூலம் பற்றி என்ன சொல்கிறது

**

ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விசாகேந்த்ரோ-பேந்த்ரை: சசிவிசத-கர்ப்பூரசகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா

Rane jithva'daithyan apahrutha-sirastraih kavachibhir
Nivrittais Chandamsa-Tripurahara-nirmalva-vimukhaih;
Visakh'endr'opendraih sasi-visadha-karpura-sakala
Viliyanthe maatas tava vadana-tambula-kabalah.

””தாயே..சூரபத்மன் தாரகன், சிம்ஹ முகன் ஆகிய அசுரர்களை தேவ சேனாதிபதியான சுப்ரமண்ய ஸ்வாமியானவர் தங்களை வழி பட்டு உங்களிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தால் அவர்களை அழிக்கவும் செய்தார்..

அப்படி அழித்து வெற்றி பெற்ற செய்தியினை போர்க்களத்திலிருந்து கவசங்களோடு தலைப்பாகையைக் கையிலெடுத்தபடி தேவேந்திரன், உபேந்திரன் எனச் சொல்லப் படும் மஹா விஷ்ணு ஆகியோருடன் உங்களிடம் தான் பிரசாதம் வாங்க வந்தார்..

அவருக்கும் மற்ற தேவர்களுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டிகேஸ்வரருகுச் சமர்ப்பிக்கப் பட்ட பரமசிவனின் நிர்மால்யம் கண்ணில் படவில்ல..

அவர்கள் உன்னிடம் வந்த போது நீ செவ்விதழில் சந்திரனைப் போன்ற வெண்மையான பச்சைக்கற்பூரத்துகள்களுடன் கூடிய தாம்பூலத்தை மென்மையாக மென்று கொண்டிருந்தாய்.

அவற்றையே அவர்கள் உன்னிடமிருந்து நிர்மால்யமாக வாங்கி பயபக்தியுடன் உண்டு உன்னுடைய அருளினைப் பெற்றனர்..”

அம்பிகையின் பிரசாதத்தை உண்டதாலேயே குமாரஸ்வாமி ஞான பண்டிதராக இருக்கிறார் எனவும் சொல்வார்கள்..

இந்த ஸ்லோகப்பாராயணம் வாக்கு வன்மையை அதிகரிக்கும்..வெற்றிகளும் தேடி வருமாம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Mar 05, 2014 10:26 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .66


பாராட்டு வெட்கமாக அவமானமாக மாறுவது எப்போது..?

சாதாரணமாக ஒருவர் பாராட்டப் படும்போது அவர் இப்படியெல்லாம் புகழாதீர்கள், நான் இன்னும் வெகுதூரம் போகவேண்டும் என்று சொன்னால் அது தன்னடக்கம்..

அதுவே இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் தான் தகுதியில்லை.. என ஒருவர் கருதினால் அதையே அவமானமாகக் கருதுவார்..

சபாஷ் சரியான போட்டி என்ற பிரபல வசனம் ண்டு..சொன்னவர்..பி.எஸ் வீரப்பா.. சொன்னது வைஜயந்தி மாலா பத்மினியைப் பார்த்து..

(ஏண்டா மறுபடி பத்மினியா.. இந்த பாட்டி காலத்தை விட்டுட்டு வரமாட்டியா..
ஷ்..மனசாட்சி..கம்னு இரு நானே கொஞ்ச்ம் வேற விதமா எழுத முயற்சி பண்றேன்)

அதுவே ஒருவர் சின்னதாய் இரண்டே இரண்டு வார்த்தைகள் கூறினாராம்.. அந்தப் பாராட்டில் இன்னொருவர் மனம் நொந்து போய் இன்னொரு காரியம் செய்தாராம்..

அது என்ன என்று சொல்வதற்கு முன்:

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? – அழகான பாரதி தாசனின் பாடல ஓர் இரவு படத்தில் எம்.எஸ். ராஜேஸ்வரி விஜே வர்மா என்பவர் பாடியிருப்பார்..

(பத்மினி விட்டாச்சு..இப்ப லலிதாவா…ஆனா லலிதாவும் நன்னா அழகா இருப்பாளோன்னோ..
ஷ் ஷ்..)

யாழ் என்ற இசைக்கருவியில் இருந்து தான் காலப் போக்கில் வீணை பிறந்தது என்பார்கள்.. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.

வீணையை மையமாக வைத்து பல பாடல்கள் உள்ளன அவற்றில் சில..

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

(சரி கொஞசம் அடுத்த் தலைமுறைக்கு வந்திருக்க..அடுத்து)

விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே

(குட் இப்பத் தான் பேத்தி பாடறபாட்டுக்கு வந்துருக்கே..ஜோ.ஜோ தானே.. பாட்டு எழுதினது இன்னொரு வீணையாக்கும்.. தாமரை..)

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடிவைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்

(மறுபடியும் அந்தக் காலத்துக்குப் போய்ட்டியே.. பரவால்லை..கண்ணதாசன் பாட்டைப் போட்டதால உன்னை மன்னிச்சுடறேன்
ஷ்..காரணம் இருக்குப்பா)

கடைசியாய்ச் சொன்னபாடலில் வெகு அழகாய் காதலி வெட்கத்தில் மெளனமாய் இருக்கும் அழகு மூடி வைத்த வீணை என்கிறார் கண்ணதாசன்.

இன்றைய ஸ்லோகத்திலும் மூடி வைத்த வீணை வருகிறது..
அதற்கு முன்..ஆரம்பத்தில் சொன்னேனே..ஒருவர் பாராட்ட இன்னொருவர் வெட்கப் பட்டார் என்று.. அந்த ஒருவர் அம்பாள்..இன்னொருவர் கலைவாணி..வாருங்கள்.. ஸ்லோகத்துக்குள் போய்ப் பார்ப்போம்

(பெரீய்ய கல்கின்னு நினைப்பு..)


**

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதாநம் பசுபதேஸ்
வயாரப்தே வக்தும் சலிதசிரஸ ஸாது-வசனே
ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதாம்

Vipanchya gayanthi vividham apadhanam Pasupathea
Thvay'arabdhe vakthum chalita-sirasa sadhuvachane;
Tadhiyair madhuryair apalapitha-tantri-kala-ravam
Nijaam vinam vani nichulayati cholena nibhrutham.

“அம்பிகையே… பசுபதி எனப் படும் பரமசிவனின் விதவிதமான விளையாடல்களை வீணை மீட்டிய படியே கானமாகவும் இசைக்கிறாள் கலைமகளான சரஸ்வதி.உன் சன்னிதானத்தின் முன்னால்..

அதைக் கேட்டு மகிழும் நீ, உள்ளம் மகிழ்ந்ததன் அடையாளமாக “பேஷ் பேஷ்” என்று பாராட்டுகிறாய்…

ஆனால் என்ன ஆகிறது..

கலைவாணிக்கோ உனது குரலினிமையைக் கேட்டதும் தனது கானமும்,, வீணை இசையும் அதைவிட தரத்தில் வெகு குறைவு என நினைத்து வெட்கமும் நாணமும் வந்து விடுகிறது..

தனது வீணையை எடுத்து அழகாக உறையில் விரக்தியுடன் போட்டு மூடி வைத்து விடுகிறாள்”

**

கலைவாணி யார்.. சகலகலாவல்லி அல்லவா..அவளது குரலுக்கும் வீணைஇசைக்கும் மேலாக அம்பிகையின் குரலினிமை இருக்கிறது என இந்தப் பாடலில் பகவத் பாதர் சொல்கிறார்..


இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் இனிமையான வாக்குச் சாதுர்யமும், வசீகரிக்கும் தன்மையும் கிட்டுமாம்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 06, 2014 10:49 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .67

காதலன் காதலியை எப்போது, எப்படி முத்தமிடுவான்?

(என்னடா முதல் கேள்வியிலேயே டாப் கியர்ல் போற..
ஷ்ஷ்)

சற்றே யோசித்துப் பார்த்தால் அது கொஞசம் கஷ்டமான காரியம் தான்..

முதலில் கல்லூரி பாஷையில் சொல்வது போல காதலியிடம் நிறைய கடலை போட வேண்டும்.. சும்மாவா ஒரு கவிஞர் சொன்னார் கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் மலர்வதில்லை என்று..

அந்தக் காலத்தில் பீச், இந்தக் காலத்திலும் பீச் ப்ளஸ் நிறைய இடங்கள் எக்ஸ்ப்ரஸ் அவென்யூ, க்விக்கீஸ் கஃபே என..

முதலில் அழகாகத் தேன், ஐஸ்க்ரீம், சாக்லேட் தடவிய வார்த்தைகளால் பேசிப்பேசி கொஞ்சம் ரொமாண்டிக் மூடுக்குக் காதலியைக் கொண்டு வரவேண்டும்..அப்புறம் என்ன பிரச்னை. தனிமை+ லொகேஷன் –

சரி அதுவும் அமைந்து விடுகிறது..உதாரணத்திற்கு மொட்டை மாடி முன்னிருட்டு நேரம் என வைத்துக் கொள்ளலாம்..

சற்றே மனம் நெகிழ்ந்திருப்பவளிடம் போய் மு பச்சக் என்று கொடுத்தால் நன்றாகவே கோபித்துக் கொண்டுபோய்விடுவாள் – யோவ் நீ என்ன போஸ்ட் ஆஃபீஸிலா வேலை பார்க்கிற..இப்படி ஸ்டாம்ப் அடிக்கறா மாதிரி செய்துட்டியேடா படவா..

பின் என்ன செய்வது.. கொஞ்சம் மென்மையாக அருகில் இழுத்து அவள்து முகவாய்க்கட்டையைப் பிடித்து தன்னருகில் இழுத்து…..

(”அடப்பாவி முகவாய்னு சொல்றதுக்கா இவ்ளோ நீட்டி முழக்கினே”
”கொஞ்சம் பேசாம இரேன்”)

மென்மையாகக் கொடுக்க வேண்டும்..

கொஞ்சம் கிடைக்கும் நேரத்தை ப் பொறுத்து இதழில் சிறுகதையோ ஹைக்கூவோ, எண்சீர் விருத்தமோ எழுதிக் கொள்ளலாம்..

இதுவே கல்யாணம் ஆனவர்கள் என்றால் வேறுபடும்..முதல் வருடம் மனைவியாகப் பட்டவள் பொறுத்துக் கொள்வாள்..

அதுவும் குழந்தைகள் என்று வந்த பிறகு கஷ்டம்..ஏய் ஒண்ணே ஒண்ணுடி என்றால், யோவ் வேற வேலை இல்லை மொதல்ல போய் வாயை லிஸ்ட்ரின் போட்டுக்கிட்டு கொப்பளிச்சுட்டு வா என்பாள்..!

அந்தக் காலத் திரைப் பாடல்களில் முத்தமிடும் நேரமெப்போ எனக் கேட்டு சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி என பெர்மிஷனும் கேட்டிருந்தார்கள்..இந்தக் காலத்தில் காதலர்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் போல...அவளே தீப்பிடிக்க முத்தம் கொடு என்று கேட்பதாக திரைப்பாடல்கள் வருகின்றன..

பெண்ணைப் பெற்ற தகப்பன் எப்படிக் கொஞ்சுவான்.. சிறு குழந்தை என்றால் தூக்கி முத்தாடலாம்..

கொஞ்சம் வளர்ந்த சிறுமி எனில் முகவாய்க் கட்டையை கைவிரல்களைக் குவித்துப் பிடித்து சமர்த்துடா நீ.. இந்த ஜீன்ஸ் டாப்ஸ்ல அழகா இருக்கேடா நீ என்பான்..இந்தக் காலத்தில். .

ஒரு தகப்பனின் தீண்டலை வாத்ஸல்யம் என்று சொல்வார்கள்...

முகவாயைப் பற்றி இன்றைய ஸ்லோகத்தில் என்னவென்று வருகிறது..கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்போமா..

(ஆஹா..வா போலாம்)

**

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுல தயா
கரக்ராஹ்யம் சம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மெளபம்ய ரஹிதம்

Karagrena sprustam thuhina-girina vatsalathaya
Girisen'odasthama muhur adhara-pan'akulataya;
Kara-grahyam sambhor mukha-mukura-vrintham Giri-sute
Kadham-karam bramas thava chubukam aupamya-rahitham.

”மலைமன்னன் மகளே..அம்பிகையே..

உன்னுடைய தந்தை இமவான் உன்னைக் கொஞ்சும் போது விரல் குவித்து உன் முகவாய் பிடித்துத் தான் கொஞ்சுவார்.

. உனது கணவரான பரமசிவனோ உன்னுடைய நிர்மலமான கண்ணாடி போன்ற தெளிவான அழகிய முகத்தைப் பார்த்து ஆவல் மிகக் கொண்டு, பெருகும் ஆசையினால் அதரபானம் பருகுவதற்காக உன் முகத்தைத் தன்பக்கம், உன் முகவாயைப் பிடித்தபடி சிறிது உயர்த்தி இழுக்கிறார்..பருகியும் முடிக்கிறார்..

அப்படி உனது முகமாகிய கண்ணாடிக்கு உனது முகவாய் கைப் பிடி போலவே தென்படுகிறது..இதைத் தவிர வேறு என்ன உவமை கூற இயலும்..”

இவ்வாறு தேவியை தியானிப்பவர்க்கு கலைகள் யாவும் கண்ணாடியில் பிம்பம் பிரதிபலிப்பது போல தாமாகவே வசமாகும்.


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Mar 06, 2014 11:43 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .68

அணைத்தல், தழுவல்கள் எத்தனை வகை?

”ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
பஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..

பள்ளியிலே படிக்கின்ற காலம் தொட்டு
...பக்குவமாய்க் கல்லூரி முடித்த பின்னே
கல்லுக்குள் நாரெடுக்கும் கடின மான
..களமான வாழ்க்கையிலே வெற்றி தேடி
நல்லபடி மனம்நினைத்த வேலை பெற்றே
...நல்வார்த்தை தந்தையிடம் சொல்லும் நேரம்
உள்ளத்தில் பெருமிதத்தால் கைகள் நீண்டு
...உடலுடனே அணைத்திடுவார் அதற்கீ டேது...


சிறப்பான காலமெது வாழ்க்கை தன்னில்..
...சில்லென்றே கனவுகளும் மலரும் காலம்
உரமான உடலினுள்ளே ஊடிச் சென்று
..உணர்வுகளால் ஆட்கொள்ளும் இளமைக் காலம
கரந்தொட்டு கண்ணுக்குள் நுழைந்து விட்ட
..காதல்மலர்ப் பெண்மகளை எண்ணுங் காலம்
தரமான ஆசையுடன் அழகாய்க் கொஞ்சம்
....தழுவிடவே சிவந்திடுமே தாமரை மேலும்..

(ஆரம்பிச்சுட்டியாடா.. என்ன தான் சொல்ல வர்றே..
மனசாட்சி..கொஞ்சம் பொறு)

இருள் மழை இளமை தனிமை ப்ளஸ் அழகிய காதலி.. காதலனுக்கு என்ன தோன்றும்.?.

மெல்ல அணைக்க நினைப்பான்..செயல் படுத்தினால் காதலிக்கு என்ன ஆகும்..?

மேனி சிலிர்க்கும்..மயிர்க் கூச்செறியும்..

(அப்பாடி விஷயாத்துக்கு வந்துட்ட போல இருக்கு)

அப்படியே துவண்ட கொடி போல் சாய்வாள்.. அப்புறம் தொடரும் இன்பக் கதை,கவிதை எல்லாம்..

ஆக ஏன் ஆண்களுக்கெல்லாம் புல்லரிக்காதா.. என்றால் ஆண்கள் தேடல் மிகுந்தவர்கள்..பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற இயற்கைக் குணங்கள் மிகுந்தவர்கள் எனில் வாரி வழங்குபவர்கள் எனப் பெரியவர்கள் சொல்வார்க்ள்

(யார்ப்பா அது
ஷ்ஷ்)

தழுவும் செய்கை குறித்து திரைப்பாடல்கள் பார்த்தால்:. அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் எனை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் என்கிறான் ஆண்மகன்..ஒரு பாடலில்.. ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே என இன்னொரு பாடலில் வருகிறது..

பின்னர் தாமரை.. தாமரை தேசிய மலர்.தாவரவியல் பெயர் நெலும்போ ருசிஃபெரா

தாமரையின்வேர்கள் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள்,இலைகள் நீரின் மட்டத்தில் இருக்கும்

இதை திருவள்ளுவர். எப்படி நீரின் மட்டத்திற்கு தகுந்த படி தாமரை தண்டின் உயரம் மாறுமோ அப்படியே மாந்தர்களின் உள்ளத்தின் அளவே அவர்களின் உயர்வு என்கிறார்.

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ள்த்தனைய துயர்வு

(பரவால்லடா..ஸ்கூல்ல படிச்ச்து நல்லா நினைவில் வச்சுருக்க..)

பகவத்கீதையிலும் தாமரை சேற்றில் இருந்து கிளம்பினாலும் எவ்வாறு அதன் மலர் மாசுபடாமல் இருக்கிறதோ அவ்வாறே .பற்றின்றி காரியங்கள் செய்பவனை பாபங்கள் ஏறுவதில்லை என பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்

(என்ன திடீர்னு தாமரை பத்தி..ஓ..தாமரைத் தண்டா.. சரி சரி..சொல்லு)

தழுவுதல் என்ற செய்கைக்கும், தாமரைத் தண்டிற்கும் என்ன லிங்க்.. இன்றைய ஸ்லோகத்தில்.. உள்ளே சென்று பார்ப்போமா..

(வா..போலாம்.. ஆனாலும் மூணு விருத்தம்லாம் ஓவர்னு நினைக்கறேன்.. ஆமா அது விருத்தமா?

ஷ்ஷ்)

**

புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்
ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா
ம்ருணலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா

Bhujasleshan nithyam Pura-damayituh kantaka-vathi
Tava griva dhatte mukha-kamalanaala-sriyam iyam;
Svatah swetha kaalaagaru-bahula-jambala-malina
Mrinali-lalithyam vahati yadadho hara-lathika.

அம்பிகையே.. தினம் தோறும் உன்னை முப்புரம் எரித்த பரமன் தனது புஜங்களினால் தழுவுகிறார்.

. அவ்வாறு தழுவும் போது உனது கழுத்தின் பின்பகுதியில் மயிர்க்கூச்செறிந்து முட்கள் வந்தாற்போன்று ஆகி விடுகிறது.

. உனது முகம் ஒரு தாமரை..உனது கழுத்தோ தாமரைத் தண்டு என்பதால் அதில் முட்கள் வருவதில் ஒன்றும் தவறில்லையே..

பின் உன் அழகுக்கு அழகு செய்யும் முத்து மாலை வெண்மை நிறம் வாய்ந்தது..

அதுவோ உனது பின்கழுத்தில் தடவப்பட்ட கருத்த அகில் மற்றும் சந்தனக் குழம்பினால் சற்றே நிறம் மங்கி கருப்பு வண்ணத்துடன் காணப்படுகிறது.

.இவ்வண்ணம் உனது முகம் குளத்தில் கொடியுடன் கூடிய தாமரை மலர் போன்றே தோற்றமளிக்கிறது..உன் அழகை என்சொல்வேன்..”

இச்சுலோக பாராயணம் அனைவரையும் வசீகரிக்கும் தன்மையைத் தருமாம்..


Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக