புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளும் ஒரு அழகின் அலை
Page 7 of 14 •
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
First topic message reminder :
ஈகரை நண்பர்களுக்கு,
வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..
கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..
நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
ஈகரை நண்பர்களுக்கு,
வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..
கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..
நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 51
“பாவம்னா என்ன தெரியுமாடா உனக்கு”
“நான் தான்.. உன்ன மாதிரி நொய் நொய்னு பேசற மனசாட்சி வச்சுண்டுருக்கேனே..”
“அதில்லைடா நான் சொல்றது bhaவம் இந்த நவரசம்னு சொல்வாங்களே அதில ஒண்ணு குறைச்சல் தான் பாவம்..எண் வகை பாவங்கள்னு சொல்வாங்க.. அது தேவியோட கண்ணில தெரிகிறதாம்..”
“அது என்ன ஒண்ணு குறைச்சலான பாவம்..”
“கொஞ்சம் இப்ப் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தாலும் இந்த சாந்தம் கற பாவம்.. அது க்ண்ணுல கொண்டு வர்றது கஷ்டம் தான்
வா..சுலோக்த்துக்குள்ள போய் ப் பார்க்கலாம்..
*
சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா*
அம்மா.. நீ ஈச்னை நோக்கும் கண்களில் காதல் கசிகிறது.
.அவைகளே உன் ஈசனின் அன்பைப் பெற்ற் இன்னொருத்தியான கங்கையை நோக்கும் போது கோபமாகவும், உன்னிடம் தாயென்ற பாவனையில் அல்லாமல் வருபவர்களிடம் அருவ்ருப்பாகவும்
பரமனின் திருவிளையாடல்களை நினைத்து ஆச்சர்யமும், அவரது உடலை அலங்கரிக்கும் பாம்புகளிட்ம் பயத்தினையும்,தாம்ரை மலரினைப் போன்ற சிவந்த நெற்றிக் கண்ணோ வீரத்தையும் வெளிப்படுத்துகின்றன..
மேலும் தோழிகளைக் காணும் போது மகிழ்ச்சியையும் உன்னைப் போற்றும் என்னைப் போன்ற அடியவர்களிடம் கருணையையும் அவை வெளிப்ப்டுத்துகின்றன..
சாந்தம் என்பது மன விகாரமற்ற நிலையாகும்..இதற்கு எடுத்துக்காட்டு ஈசனின் தஷிணா மூர்த்தி நிலையாகும்.. ,
இந்த சுலோக பாராயணம் மற்றவர்க்ளை வசீகரிக்கும் தன்மையை அதிகப்படுத்துமாம்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 51
“பாவம்னா என்ன தெரியுமாடா உனக்கு”
“நான் தான்.. உன்ன மாதிரி நொய் நொய்னு பேசற மனசாட்சி வச்சுண்டுருக்கேனே..”
“அதில்லைடா நான் சொல்றது bhaவம் இந்த நவரசம்னு சொல்வாங்களே அதில ஒண்ணு குறைச்சல் தான் பாவம்..எண் வகை பாவங்கள்னு சொல்வாங்க.. அது தேவியோட கண்ணில தெரிகிறதாம்..”
“அது என்ன ஒண்ணு குறைச்சலான பாவம்..”
“கொஞ்சம் இப்ப் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தாலும் இந்த சாந்தம் கற பாவம்.. அது க்ண்ணுல கொண்டு வர்றது கஷ்டம் தான்
வா..சுலோக்த்துக்குள்ள போய் ப் பார்க்கலாம்..
*
சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா*
அம்மா.. நீ ஈச்னை நோக்கும் கண்களில் காதல் கசிகிறது.
.அவைகளே உன் ஈசனின் அன்பைப் பெற்ற் இன்னொருத்தியான கங்கையை நோக்கும் போது கோபமாகவும், உன்னிடம் தாயென்ற பாவனையில் அல்லாமல் வருபவர்களிடம் அருவ்ருப்பாகவும்
பரமனின் திருவிளையாடல்களை நினைத்து ஆச்சர்யமும், அவரது உடலை அலங்கரிக்கும் பாம்புகளிட்ம் பயத்தினையும்,தாம்ரை மலரினைப் போன்ற சிவந்த நெற்றிக் கண்ணோ வீரத்தையும் வெளிப்படுத்துகின்றன..
மேலும் தோழிகளைக் காணும் போது மகிழ்ச்சியையும் உன்னைப் போற்றும் என்னைப் போன்ற அடியவர்களிடம் கருணையையும் அவை வெளிப்ப்டுத்துகின்றன..
சாந்தம் என்பது மன விகாரமற்ற நிலையாகும்..இதற்கு எடுத்துக்காட்டு ஈசனின் தஷிணா மூர்த்தி நிலையாகும்.. ,
இந்த சுலோக பாராயணம் மற்றவர்க்ளை வசீகரிக்கும் தன்மையை அதிகப்படுத்துமாம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 52
”அதுல பாருங்கோ..பெண்களோட முகத்தில பாசமான பார்ட்டும் மோசமான பார்ட்டும் எது தெரியுமா…
அவங்களோட கண்கள் தான்..ஆசையைச் சொல்றதும் அதுதான்.. வருத்தத்தை வெளிப்படுத்தறதும் அது தான்..
யோவ்.. வாய்யா.. அப்படின்னு இமையை படபடக்க ஹஸ்கி வாய்ஸ்ல மனைவி கூப்பிட்டா ஹஸ்பண்ட் அவ்வளவு தான்..
அதே மனைவி கொஞ்சம் கண்கள் ஓரத்துல அழுகையைக் காண்பிச்சான்னா போச்சு..ஆஃபீஸ் போய் கம்ப்யூட்ட்ர் ஆன்பண்ணாலும் அவமுகம் தான் தெரியும்..
இந்தக் கண்களோட அழைப்பு இருக்கே.. ஒரு திரைக்கவிஞர் என்ன சொல்றார்
…
சிறு குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை மலரும்..
தூங்கறதுக்காக கண்களை மூடப் படறதுக்காகப் படைக்கப்பட்ட்து மட்டுமல்ல மனதளவில் ஆசையைத் தூண்டும் வ்ண்ணம் உள்ளவை பெண்களின் கண்ணிமைகள்..அப்படின்னு என்னோட சித்தப்பா அடிக்கடி சொல்வார்..!
இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் கண்கள் மன்மத பாணங்களாகவும் இமைகளும் அதிலிருக்கும் முடிகளும் அந்த பாணங்களோட் வேகத்தை க் கூட்ட்றதுக்காகக் கட்டப்பட்ட சிறகுகள் மாதிரி இருக்கறதா பகவத் பாத்ர் சொல்றார்.
அதுவும் அந்த பாணங்களை இமைகளாகிற சிறகுகளால சொய்ங்க்க்னு ஈசன் மேல எய்தா என்னாகும்.. அவரும் குளிர்ந்து போகிறாராம்
…
**
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ
புராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:
அம்பிகே.. இமவானின் வம்சத்திற்குப் பெருமை கொடுப்பவள் அல்லவா நீ.. உனது காதுவரையில் நீண்டு இருக்கும் கண்களானது சிவபெருமானின் மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறகுகளுடன் கூடிய பாணங்களாக இருக்கின்றன
இச்சுலோக பாராயணம் காமனை வெல்லும் பலம் தருமாம்..அத்துடன் கண்கள் காதுகள் போன்றவற்றின் கோளாறுகளையும் நீக்குமாம்....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 52
”அதுல பாருங்கோ..பெண்களோட முகத்தில பாசமான பார்ட்டும் மோசமான பார்ட்டும் எது தெரியுமா…
அவங்களோட கண்கள் தான்..ஆசையைச் சொல்றதும் அதுதான்.. வருத்தத்தை வெளிப்படுத்தறதும் அது தான்..
யோவ்.. வாய்யா.. அப்படின்னு இமையை படபடக்க ஹஸ்கி வாய்ஸ்ல மனைவி கூப்பிட்டா ஹஸ்பண்ட் அவ்வளவு தான்..
அதே மனைவி கொஞ்சம் கண்கள் ஓரத்துல அழுகையைக் காண்பிச்சான்னா போச்சு..ஆஃபீஸ் போய் கம்ப்யூட்ட்ர் ஆன்பண்ணாலும் அவமுகம் தான் தெரியும்..
இந்தக் கண்களோட அழைப்பு இருக்கே.. ஒரு திரைக்கவிஞர் என்ன சொல்றார்
…
சிறு குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை மலரும்..
தூங்கறதுக்காக கண்களை மூடப் படறதுக்காகப் படைக்கப்பட்ட்து மட்டுமல்ல மனதளவில் ஆசையைத் தூண்டும் வ்ண்ணம் உள்ளவை பெண்களின் கண்ணிமைகள்..அப்படின்னு என்னோட சித்தப்பா அடிக்கடி சொல்வார்..!
இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் கண்கள் மன்மத பாணங்களாகவும் இமைகளும் அதிலிருக்கும் முடிகளும் அந்த பாணங்களோட் வேகத்தை க் கூட்ட்றதுக்காகக் கட்டப்பட்ட சிறகுகள் மாதிரி இருக்கறதா பகவத் பாத்ர் சொல்றார்.
அதுவும் அந்த பாணங்களை இமைகளாகிற சிறகுகளால சொய்ங்க்க்னு ஈசன் மேல எய்தா என்னாகும்.. அவரும் குளிர்ந்து போகிறாராம்
…
**
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ
புராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:
அம்பிகே.. இமவானின் வம்சத்திற்குப் பெருமை கொடுப்பவள் அல்லவா நீ.. உனது காதுவரையில் நீண்டு இருக்கும் கண்களானது சிவபெருமானின் மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறகுகளுடன் கூடிய பாணங்களாக இருக்கின்றன
இச்சுலோக பாராயணம் காமனை வெல்லும் பலம் தருமாம்..அத்துடன் கண்கள் காதுகள் போன்றவற்றின் கோளாறுகளையும் நீக்குமாம்....
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 53
“ஒரு செப்புப் பாத்திரத்தை எடுத்து அதை சுத்தமாகக் கழுவி த் துடைத்து புதிதாக உரைக்கப் பட்ட சந்தனத்தைத் தடவ வேண்டும்.பின் அதை விளக்கெண்ணெயால் ஏற்றப் ப்ட்ட குத்துவிள்க்கின் மெல்லிய் சூட்டில் சுடப் பண்ண, பாத்திரத்தின் அடியில் மை பெருகும்.. அந்தக் கரித்தூளை எடுத்து வெண்ணெயில் பிசைந்து, வாசனைப் பண்டங்களைச் சேர்த்தால் மை தயார்..”
“புதுசா ஐ டெக்ஸ் கம்பெனில் சேர்ந்திருக்கியா என்ன..”
“போ மனசாட்சி.. இந்தக் கருவிழி நடனம் தருகின்ற நளினம்னு பாட்றாங்களே.. அதுக்கெல்லாம் காரணம் என்ன.. கண்ணுக்கு பார்டர் போட்ட மாதிரி இருக்கற கண் மை தான்..
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட
நான் ஆடுவேன் னு
சொல்லிச் சொல்லியே அந்தக் காலத்துலருந்து இந்தக் காலம் வரைக்கும் பெண்கள் ஆடவரை ஆட்டிப் படைப்பதும் இந்தக் கண் மையால் தான். அதன் மூலம் பளீரிடுகிற கண்களால் தான்...
இப்பத் தான் காஜர் நு பென்சிலாட்டம்லாம் வந்துடுச்சு..
“அப்புறம்”
“சிகப்பு கறுப்பு வெளுப்பு”
“நின்னு போன சுஜாதா நாவலோட பேர்.. அப்புறம் தான் ரத்தம் ஒரே நிறம்னு எழுதியிருந்தாரே..அதையா சொல்லப் போறே..”
“ஸீ.. கண்ணுன்னு எடுத்துக்கிட்டா விழிகள் கருமை அதைச்சுற்றி வெண்மை கண்ணோரம் சிவப்பு அதைச் சொன்னேன்..உதாரணத்துக்கு…
”
“வேண்டாம்..ஏதாவது நடிகை பேரைச் சொல்லுவே..சரி..இவை எதைக் குறிக்கறதாம்…”
“ப்ரம்மா சிருஷ்டி செய்யும் தொழில் செய்பவர்.. அது ரஜோ குணம், விஷ்ணு காக்கும் தொழில் அது ஸத்வ் குணம்.. ருத்ரன் தமோ குண்ம்..அழிப்பவர் இந்த மூன்று பேரோட குணங்களையும் தன்னோட கண்கள்ள வச்சுருக்காளாம் அம்பாள்..வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்க்கலாம்”
***
Vibhaktha-traivarnyam vyatikaritha-lila'njanathaya
Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite;
Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan
Rajah sattvam vibhrat thama ithi gunanam trayam iva
விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ
அம்பிகையே… அஞ்சனத்தைத் தரித்து பிரகாசமாய் இருக்கும் உன் கண்களில் இருக்கும் வெண்மை, சிகப்பு, கருப்பு போன்ற நிறங்களானது ப்ரளய காலத்தில் உன்னிட்ம் மறைந்து போன பிரம்மா விஷ்ணு ருத்ரன் போன்றோரை மீட்கும் வண்ணம் ரஜோ சத்வ தமோ குணங்களுடன் கூடியதாக இருக்கின்றன..
இவ்வாறு தேவியை தியானிப்பவர்கள் அஞ்சனப் ப்ரயோகம் கைவரப் பெற்று யாவரையும் வசீகரிக்கும் திறன்பெறுவர்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 53
“ஒரு செப்புப் பாத்திரத்தை எடுத்து அதை சுத்தமாகக் கழுவி த் துடைத்து புதிதாக உரைக்கப் பட்ட சந்தனத்தைத் தடவ வேண்டும்.பின் அதை விளக்கெண்ணெயால் ஏற்றப் ப்ட்ட குத்துவிள்க்கின் மெல்லிய் சூட்டில் சுடப் பண்ண, பாத்திரத்தின் அடியில் மை பெருகும்.. அந்தக் கரித்தூளை எடுத்து வெண்ணெயில் பிசைந்து, வாசனைப் பண்டங்களைச் சேர்த்தால் மை தயார்..”
“புதுசா ஐ டெக்ஸ் கம்பெனில் சேர்ந்திருக்கியா என்ன..”
“போ மனசாட்சி.. இந்தக் கருவிழி நடனம் தருகின்ற நளினம்னு பாட்றாங்களே.. அதுக்கெல்லாம் காரணம் என்ன.. கண்ணுக்கு பார்டர் போட்ட மாதிரி இருக்கற கண் மை தான்..
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட
நான் ஆடுவேன் னு
சொல்லிச் சொல்லியே அந்தக் காலத்துலருந்து இந்தக் காலம் வரைக்கும் பெண்கள் ஆடவரை ஆட்டிப் படைப்பதும் இந்தக் கண் மையால் தான். அதன் மூலம் பளீரிடுகிற கண்களால் தான்...
இப்பத் தான் காஜர் நு பென்சிலாட்டம்லாம் வந்துடுச்சு..
“அப்புறம்”
“சிகப்பு கறுப்பு வெளுப்பு”
“நின்னு போன சுஜாதா நாவலோட பேர்.. அப்புறம் தான் ரத்தம் ஒரே நிறம்னு எழுதியிருந்தாரே..அதையா சொல்லப் போறே..”
“ஸீ.. கண்ணுன்னு எடுத்துக்கிட்டா விழிகள் கருமை அதைச்சுற்றி வெண்மை கண்ணோரம் சிவப்பு அதைச் சொன்னேன்..உதாரணத்துக்கு…
”
“வேண்டாம்..ஏதாவது நடிகை பேரைச் சொல்லுவே..சரி..இவை எதைக் குறிக்கறதாம்…”
“ப்ரம்மா சிருஷ்டி செய்யும் தொழில் செய்பவர்.. அது ரஜோ குணம், விஷ்ணு காக்கும் தொழில் அது ஸத்வ் குணம்.. ருத்ரன் தமோ குண்ம்..அழிப்பவர் இந்த மூன்று பேரோட குணங்களையும் தன்னோட கண்கள்ள வச்சுருக்காளாம் அம்பாள்..வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்க்கலாம்”
***
Vibhaktha-traivarnyam vyatikaritha-lila'njanathaya
Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite;
Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan
Rajah sattvam vibhrat thama ithi gunanam trayam iva
விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ
அம்பிகையே… அஞ்சனத்தைத் தரித்து பிரகாசமாய் இருக்கும் உன் கண்களில் இருக்கும் வெண்மை, சிகப்பு, கருப்பு போன்ற நிறங்களானது ப்ரளய காலத்தில் உன்னிட்ம் மறைந்து போன பிரம்மா விஷ்ணு ருத்ரன் போன்றோரை மீட்கும் வண்ணம் ரஜோ சத்வ தமோ குணங்களுடன் கூடியதாக இருக்கின்றன..
இவ்வாறு தேவியை தியானிப்பவர்கள் அஞ்சனப் ப்ரயோகம் கைவரப் பெற்று யாவரையும் வசீகரிக்கும் திறன்பெறுவர்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 54
“கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்…
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடு நான் ஆட..
சோனா ஓ சோனா ”
“மொத ரெண்டு பாட்டு நதி பேரு ஓகே..அது என்ன மூணாவதா..”
“அதுவும் நதி தான் சோணாபத்ரான்னு நதி..அதுக்கு கூகிள்ல சோணா நதின்னு போட்டா இந்தப் பாட்டும் அப்புறம் சில படங்களும் வருது..”
“ம்ம் அதப்பார்த்திருப்பியே நீ.. அப்புறம் கண்டு பிடிச்சியா இல்லையா..”
“கண்டுபிடிக்காம..அந்த நதி ஸோன் நதியாம் வடக்கே பாயும் நதி கங்கையில கலக்கறதாம்..காஞ்சிப் பெரியவா சொல்லியிருக்கார்.. அந்த ஸோன் நதியில் உள்ள ஸோன பத்ரக் கல்லை பூஜையறையில் வைத்து விநாயகரை வழிபடணுமாம்..
அப்புறம் இந்த ஸோணபத்ராவப் பத்தி வால்மீகி ராமாயணத்திலயும் வந்திருக்கு.. ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்ரருக்கு ஹெல்ப் பண்ண தாடகையைத் தேடிப் போறச்சே இந்த நதிக்கரையில் தங்குவார்களாம்..”
“அது சரி..என்ன திடீர்னு நதிகளைப் பத்தி எல்லாம்..”
“நேற்று அம்பாளின் கண்கள் மூவகை குணங்களைக் குறிக்கிறதுன்னு சொன்னாரில்லையா பகவத் பாதர்..
இந்த சுலோகத்துல அந்தக் கண்கள்ல இருக்கற் மூன்று நிறங்களும் இந்த மூன்று நதிகளைக் குறிக்கறதுங்கறார்..
கங்கை வெண்மை யமுனையின் இன்னொரு பெயர் காளிந்தி – சூரியனின் மகள் – கருமை ஸோண பத்ரா- சிவப்பு..
கங்கையும் யமுனையும் கிழக்கு நோக்கிப் பாய்கின்ற நதிகளாகும்..
ஸோனபத்ரா நதியின் மணலில் தங்கத் தாதுக்கள் இருப்பதால் சிவந்த நிறத்துடன் ஒளிருமாம்..மற்றும் அந்த நதி மேற்கு நோக்கிப் பாயும் நதியாம்..”
“அப்புறம்.. சாண்டில்யனோட மஞ்சள் ஆறுல கூட டைட்டில் ல வர்ற ரிவர் தான் சோணாபத்ராவா இருக்குமோ”
“இருக்கலாம்.. ஐயாம் நாட் ஷ்யூர்.. சரி வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்ப்போம்..”
**[color=#ff0066]
பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்
Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye
Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay'eti dhruvamamum
Trayanam tirthanam upanayasi sambhedam anagham.
[/color]
“தேவி.. பசுபதியான பரமனின் இருப்பிடமான உள்ளத்தை உடையவளே..
மிக அன்புடன் கருணை மிக்கதும் தனித்தனியாக இருக்கும் சிகப்பு,கருமை வெண்மை பொன்ற நிறங்களால் மூன்று மெல்லிய வரிகளை உடைய விழிகள் கொண்டவளே..
சிவந்த நிறத்தோடு மேற்கு நோக்கிச் செல்லும் சோண பத்ரா நதி, சூரியனின் மகளும் கிழக்கு நோக்கிப் பாய்பவளுமான கருமை மிக்க யமுனை நதி, வெண்மை பொங்கும் கங்கை நதி ஆகிய எல்லா விதமான பாவங்களைப் போக்கும் மூன்று புண்ணிய தீர்த்தங்களின் சங்கமமாக உனது விழிகள் இருக்கின்றன
..அப்படிப்பட்ட உனது விழிக்ளின் பார்வை எங்களைப் புனிதப் படுத்தும்..
தேவியின் விழிகளில் பொங்கும் இந்த முக்கூடலை தியானிப்பவர்களுக்கு அவர் அறியாமையினால் செய்த பாவங்கள் விலகுமாம்.. ஞானமும் கிட்டிடுமாம்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 54
“கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்…
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடு நான் ஆட..
சோனா ஓ சோனா ”
“மொத ரெண்டு பாட்டு நதி பேரு ஓகே..அது என்ன மூணாவதா..”
“அதுவும் நதி தான் சோணாபத்ரான்னு நதி..அதுக்கு கூகிள்ல சோணா நதின்னு போட்டா இந்தப் பாட்டும் அப்புறம் சில படங்களும் வருது..”
“ம்ம் அதப்பார்த்திருப்பியே நீ.. அப்புறம் கண்டு பிடிச்சியா இல்லையா..”
“கண்டுபிடிக்காம..அந்த நதி ஸோன் நதியாம் வடக்கே பாயும் நதி கங்கையில கலக்கறதாம்..காஞ்சிப் பெரியவா சொல்லியிருக்கார்.. அந்த ஸோன் நதியில் உள்ள ஸோன பத்ரக் கல்லை பூஜையறையில் வைத்து விநாயகரை வழிபடணுமாம்..
அப்புறம் இந்த ஸோணபத்ராவப் பத்தி வால்மீகி ராமாயணத்திலயும் வந்திருக்கு.. ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்ரருக்கு ஹெல்ப் பண்ண தாடகையைத் தேடிப் போறச்சே இந்த நதிக்கரையில் தங்குவார்களாம்..”
“அது சரி..என்ன திடீர்னு நதிகளைப் பத்தி எல்லாம்..”
“நேற்று அம்பாளின் கண்கள் மூவகை குணங்களைக் குறிக்கிறதுன்னு சொன்னாரில்லையா பகவத் பாதர்..
இந்த சுலோகத்துல அந்தக் கண்கள்ல இருக்கற் மூன்று நிறங்களும் இந்த மூன்று நதிகளைக் குறிக்கறதுங்கறார்..
கங்கை வெண்மை யமுனையின் இன்னொரு பெயர் காளிந்தி – சூரியனின் மகள் – கருமை ஸோண பத்ரா- சிவப்பு..
கங்கையும் யமுனையும் கிழக்கு நோக்கிப் பாய்கின்ற நதிகளாகும்..
ஸோனபத்ரா நதியின் மணலில் தங்கத் தாதுக்கள் இருப்பதால் சிவந்த நிறத்துடன் ஒளிருமாம்..மற்றும் அந்த நதி மேற்கு நோக்கிப் பாயும் நதியாம்..”
“அப்புறம்.. சாண்டில்யனோட மஞ்சள் ஆறுல கூட டைட்டில் ல வர்ற ரிவர் தான் சோணாபத்ராவா இருக்குமோ”
“இருக்கலாம்.. ஐயாம் நாட் ஷ்யூர்.. சரி வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்ப்போம்..”
**[color=#ff0066]
பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்
Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye
Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay'eti dhruvamamum
Trayanam tirthanam upanayasi sambhedam anagham.
[/color]
“தேவி.. பசுபதியான பரமனின் இருப்பிடமான உள்ளத்தை உடையவளே..
மிக அன்புடன் கருணை மிக்கதும் தனித்தனியாக இருக்கும் சிகப்பு,கருமை வெண்மை பொன்ற நிறங்களால் மூன்று மெல்லிய வரிகளை உடைய விழிகள் கொண்டவளே..
சிவந்த நிறத்தோடு மேற்கு நோக்கிச் செல்லும் சோண பத்ரா நதி, சூரியனின் மகளும் கிழக்கு நோக்கிப் பாய்பவளுமான கருமை மிக்க யமுனை நதி, வெண்மை பொங்கும் கங்கை நதி ஆகிய எல்லா விதமான பாவங்களைப் போக்கும் மூன்று புண்ணிய தீர்த்தங்களின் சங்கமமாக உனது விழிகள் இருக்கின்றன
..அப்படிப்பட்ட உனது விழிக்ளின் பார்வை எங்களைப் புனிதப் படுத்தும்..
தேவியின் விழிகளில் பொங்கும் இந்த முக்கூடலை தியானிப்பவர்களுக்கு அவர் அறியாமையினால் செய்த பாவங்கள் விலகுமாம்.. ஞானமும் கிட்டிடுமாம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 55
நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரளயமுதயம் யாதி ஜகதீ
த்வேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜந்ய தநயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதம் அசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச:
Nimesh'onmeshabhyam pralayam udayam yaati jagati
Tave'ty ahuh santho Dharani-dhara-raajanya-thanaye;
Tvad-unmeshaj jatham jagad idham asesham pralyatah
Pari-trathum sankhe parihruta-nimeshas tava drusah.
”அம்பிகையே..மலையரசனின் மகளே..நீ கண் மூடித் திறந்தால் உலகம் அழிந்து மறுபடியும் தோன்றுகின்றது என பெரியோர்கள் கூறுவார்கள்..
எனில் கண்ணிமைகளைக்கூட மூடாமல் கருணையுடன் கண்களைத் திறந்தவாறு வைத்திருந்து உலகம் யாவற்றையும் அழிவில் இருந்து காப்பதாக நான் எண்ணுகிறேன்"
தேவியின் இமையாத விழிகளை தியானிப்பவர் பிறவிப்பெருங்கடலில் இருந்து விடுபடுவர்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 55
நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரளயமுதயம் யாதி ஜகதீ
த்வேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜந்ய தநயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதம் அசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச:
Nimesh'onmeshabhyam pralayam udayam yaati jagati
Tave'ty ahuh santho Dharani-dhara-raajanya-thanaye;
Tvad-unmeshaj jatham jagad idham asesham pralyatah
Pari-trathum sankhe parihruta-nimeshas tava drusah.
”அம்பிகையே..மலையரசனின் மகளே..நீ கண் மூடித் திறந்தால் உலகம் அழிந்து மறுபடியும் தோன்றுகின்றது என பெரியோர்கள் கூறுவார்கள்..
எனில் கண்ணிமைகளைக்கூட மூடாமல் கருணையுடன் கண்களைத் திறந்தவாறு வைத்திருந்து உலகம் யாவற்றையும் அழிவில் இருந்து காப்பதாக நான் எண்ணுகிறேன்"
தேவியின் இமையாத விழிகளை தியானிப்பவர் பிறவிப்பெருங்கடலில் இருந்து விடுபடுவர்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 56
“மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே”
“நாம பேசப் போறதோ உலகையும் உலகியலைத் தோற்றுவித்தவளுமான அம்பிகையைப் பத்தி.. ஏன் இவ்வுலக அரசியல்லாம் பேசற..
“அடப்பாவி..மதுரையைப் பத்திப் பேசினா அரசியல் தானா. நானே ஒரு மதுரைக் காரன்..அந்தக்கால.. சரி..மனசாட்சி..இது ஓகேயா..
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல ”
“ஆஹா வாலித் தாத்தா வாலிபத்துல எழுதினது.. இந்த சுலோகத்துலயும் கண்கள் பத்தித் தான் எழுதியிருக்காரா பகவத் பாதர்..
“ஆமாம்.. அவருக்கு எவ்வளவு சொன்னாலும் அம்பாளோட கண் அழகை வர்ணிக்கறதுல்ல ஆர்வம் அடங்கலை போல.. திரைப்பாட்டுல நீரோடையில மீன்கள் அடிக்கடி தாவும்.. அதுபோல மானுட பத்மினியோட கண்கள் தாவுதுன்னு வாலி சொன்னாரில்லயா”
“சரி”
“இதில் பகவத் பாதர் சொல்றார்.. நீரில் இருக்கற மீன்கள்லாம் அம்பாளோட கண்களைப் பார்த்து பயந்து கப்சிப்னு சைலண்டா குளத்துக்கடியிலேயே பயத்தோட கண் திறந்த படி அம்பாளோட் கண்களைப் பார்த்துக்கிட்டே இருக்காம்..”
“ஏனாம்”
“அம்பாளோட் அருள் மழை பொழியும் கண்கள் காதுகளை நோக்கி அடிக்கடிப் போவது அந்த மீன்களைப் பத்திக் கோள் சொல்லத்தான் இருக்கும்னு அவை நினைக்கின்றனவாம்..அதுமட்டுமில்ல..
“சொல்லு..”
பேசும் விழிகள் பேச வரலாம் பிஞ்சு முகத்தைக் கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம் அல்லிப் பூவில் மணம் பெறலாம்
”மறுபடி பாட்டா..இதுல அல்லிப் பூவா.”
“யா.. மஹா லஷ்மி பகற்பொழுதுகளில் அம்பிகையின் கண்களில் வாசம் செய்வதற்காக தான் இருக்கும் அல்லி மலர்களைப் பூட்டிக் கொண்டு அம்பிகையின் கண்களுக்கு வருகிறாள்..இரவில் அம்பாளாகப் பட்டவள் யோக நித்திரை செய்யும் சமயம் அவளை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு அங்கிருந்து கிளம்பி அல்லி மலர்களை ஓபன் பண்ணி அங்கே வந்து துயில் கொள்ளுகிறாள்..அப்படிங்க்றார் பகவத்பாதர்..”
“நடு நடுல்ல இங்க்லீஷ் ரொம்ப அவசியமோ..அப்புறம்..”
“எல்லா குளங்கள்லயும் மீன் இருக்கும்.. மதுரை பொற்றாமரைக் குளத்தில மீன் இருக்காது தெரியுமோ.. அங்கே மீன லோசனி இருக்காளே..”
“சரி வா.. சுலோகத்துக்குள்ள போவோம்..”
**
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம்
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி
Tav'aparne karne-japa-nayana-paisunya-chakita
Niliyante thoye niyatham animeshah sapharikah;
Iyam cha srir baddhasc-chada-puta-kavaiam kuvalayam
Jahati pratyupe nisi cha vighatayya pravisathi.
“தேவி, நீ அடியவர் விரும்புவதை உடனே தருகிறாய்.. எனில் எவருக்கும் கடன்படாதவள் ஆகிறாய்.. தவிர இமவானின் மகளாகப் பிறந்த காலத்தில் இலைகளைக் கூட உண்ணாமல் ஈசனுக்காக தவமிருந்தவள் நீ..பர்ணம் என்றால் இலை.. எனில் நீ அபர்ணா என்று அழைக்கப் பெற்றாய்..
அபர்ணா…உனது நீள் விழிகள் காதுகளுக்கு அருகில் செல்வதால் அவை தம்மைத் தாம் கோள் சொல்வதாக எண்ணிப் பயந்து மீன்கள் - நீ அவர்களுக்கு ஏதாகிலும் தண்டனை தந்துவிடுவாய் என எண்ணியபடியே மூடாத விழிகளுடன் நீருக்கடியில் உன்னையே பார்த்த வண்ணம் இருக்கின்றன..
உனது கண்களில் வாசம் செய்திடும் மஹாலஷ்மியும் பகலில் நீலோத்பலம் எனச் சொல்ல்ப் படும் அல்லி மலர்களை விட்டு வந்து உன் கண்களில் இருந்து அருள் புரிந்து விட்டு இரவில் நீலோத்பலங்க்ள் மலர்ந்ததும் அவற்றில் எழுந்தருளுகிறாள்….”
தேவியின் மேன்மை அறிந்து இதை தியானிப்பவர்க்ளுக்கு கண்களில் எல்லாவித குறைபாடுகளும் நீங்குமாம்..மேலும் மஹாலஷ்மியின் பூரண அருளும் கிட்டுமாம்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 56
“மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே”
“நாம பேசப் போறதோ உலகையும் உலகியலைத் தோற்றுவித்தவளுமான அம்பிகையைப் பத்தி.. ஏன் இவ்வுலக அரசியல்லாம் பேசற..
“அடப்பாவி..மதுரையைப் பத்திப் பேசினா அரசியல் தானா. நானே ஒரு மதுரைக் காரன்..அந்தக்கால.. சரி..மனசாட்சி..இது ஓகேயா..
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல ”
“ஆஹா வாலித் தாத்தா வாலிபத்துல எழுதினது.. இந்த சுலோகத்துலயும் கண்கள் பத்தித் தான் எழுதியிருக்காரா பகவத் பாதர்..
“ஆமாம்.. அவருக்கு எவ்வளவு சொன்னாலும் அம்பாளோட கண் அழகை வர்ணிக்கறதுல்ல ஆர்வம் அடங்கலை போல.. திரைப்பாட்டுல நீரோடையில மீன்கள் அடிக்கடி தாவும்.. அதுபோல மானுட பத்மினியோட கண்கள் தாவுதுன்னு வாலி சொன்னாரில்லயா”
“சரி”
“இதில் பகவத் பாதர் சொல்றார்.. நீரில் இருக்கற மீன்கள்லாம் அம்பாளோட கண்களைப் பார்த்து பயந்து கப்சிப்னு சைலண்டா குளத்துக்கடியிலேயே பயத்தோட கண் திறந்த படி அம்பாளோட் கண்களைப் பார்த்துக்கிட்டே இருக்காம்..”
“ஏனாம்”
“அம்பாளோட் அருள் மழை பொழியும் கண்கள் காதுகளை நோக்கி அடிக்கடிப் போவது அந்த மீன்களைப் பத்திக் கோள் சொல்லத்தான் இருக்கும்னு அவை நினைக்கின்றனவாம்..அதுமட்டுமில்ல..
“சொல்லு..”
பேசும் விழிகள் பேச வரலாம் பிஞ்சு முகத்தைக் கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம் அல்லிப் பூவில் மணம் பெறலாம்
”மறுபடி பாட்டா..இதுல அல்லிப் பூவா.”
“யா.. மஹா லஷ்மி பகற்பொழுதுகளில் அம்பிகையின் கண்களில் வாசம் செய்வதற்காக தான் இருக்கும் அல்லி மலர்களைப் பூட்டிக் கொண்டு அம்பிகையின் கண்களுக்கு வருகிறாள்..இரவில் அம்பாளாகப் பட்டவள் யோக நித்திரை செய்யும் சமயம் அவளை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு அங்கிருந்து கிளம்பி அல்லி மலர்களை ஓபன் பண்ணி அங்கே வந்து துயில் கொள்ளுகிறாள்..அப்படிங்க்றார் பகவத்பாதர்..”
“நடு நடுல்ல இங்க்லீஷ் ரொம்ப அவசியமோ..அப்புறம்..”
“எல்லா குளங்கள்லயும் மீன் இருக்கும்.. மதுரை பொற்றாமரைக் குளத்தில மீன் இருக்காது தெரியுமோ.. அங்கே மீன லோசனி இருக்காளே..”
“சரி வா.. சுலோகத்துக்குள்ள போவோம்..”
**
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம்
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி
Tav'aparne karne-japa-nayana-paisunya-chakita
Niliyante thoye niyatham animeshah sapharikah;
Iyam cha srir baddhasc-chada-puta-kavaiam kuvalayam
Jahati pratyupe nisi cha vighatayya pravisathi.
“தேவி, நீ அடியவர் விரும்புவதை உடனே தருகிறாய்.. எனில் எவருக்கும் கடன்படாதவள் ஆகிறாய்.. தவிர இமவானின் மகளாகப் பிறந்த காலத்தில் இலைகளைக் கூட உண்ணாமல் ஈசனுக்காக தவமிருந்தவள் நீ..பர்ணம் என்றால் இலை.. எனில் நீ அபர்ணா என்று அழைக்கப் பெற்றாய்..
அபர்ணா…உனது நீள் விழிகள் காதுகளுக்கு அருகில் செல்வதால் அவை தம்மைத் தாம் கோள் சொல்வதாக எண்ணிப் பயந்து மீன்கள் - நீ அவர்களுக்கு ஏதாகிலும் தண்டனை தந்துவிடுவாய் என எண்ணியபடியே மூடாத விழிகளுடன் நீருக்கடியில் உன்னையே பார்த்த வண்ணம் இருக்கின்றன..
உனது கண்களில் வாசம் செய்திடும் மஹாலஷ்மியும் பகலில் நீலோத்பலம் எனச் சொல்ல்ப் படும் அல்லி மலர்களை விட்டு வந்து உன் கண்களில் இருந்து அருள் புரிந்து விட்டு இரவில் நீலோத்பலங்க்ள் மலர்ந்ததும் அவற்றில் எழுந்தருளுகிறாள்….”
தேவியின் மேன்மை அறிந்து இதை தியானிப்பவர்க்ளுக்கு கண்களில் எல்லாவித குறைபாடுகளும் நீங்குமாம்..மேலும் மஹாலஷ்மியின் பூரண அருளும் கிட்டுமாம்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 57
“வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
நிறைத்தே அருளும் நிலவு
*
ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
ஒளியும் நிலவின் ஒளி
*
மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
*
பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
மதியை மயக்கும் மதி
*
வானில் இருந்தவள்தான் வந்துவிட்டாள் என்றெண்ணி
தேனில் பழத்தினைத் தோய்த்தே சுவைத்தாற்போல்
மேயும் நிலவின் பிரதிபிம்பம் தான்வாங்கிக்
காயும் நிலவால் கடல் “
“ஒமகசீயா நா ந நா நா..”
“என்னாச்சு மனசாட்சி..”
“பின்ன என்ன..இப்படில்லாம் திடீர்னு பயமுறுத்தினா.. அழகா உன்னோட பாணில்ல நிலவு ஒரு பெண்ணாகி பாடியிருக்கலாமில்லை..”
“கொஞ்சம் எழுதிப் பார்த்தேன் இந்த கொண்டிருக்கப் பெற்ற குணம் ஈற்றடி மட்டும் முத்தொள்ளாயிரத்தில இருந்து வாங்கிக்கிட்டேன்....”
“சரி பட் உன் நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு.. சொல்லு நிலவைப்பத்தி..இந்த ஸ்லோகத்துல வருதாக்கும்..”
”அதுக்கும் முன்னால அல்லிங்கறது நார்மல் அல்லி..வெண்ணிறமா இருக்கும்..நீலோத்பலம்ங்கறது பிங்க்கலர்ல இருக்கும்..அதையே குவளை மலர்னு சொல்வாங்க நீல அல்லின்னும் சொல்வாங்க.. இதை ஒரு நண்பர் எனக்குச் சொன்னார்…
கொஞ்சம் கருநீலத்திலும் தென்படும் போல இருக்கு. அவற்றைக் கருங்குவளை என்றும் சொல்வார்களாம்... nymphaea pubescens நிம்பையா ப்யுபிசென்ங்கறது பொடானிகல் நேம்.”
“எங்கேயோ போய்ட்ட
“எங்கேயும் போகலை..போவதற்கு வெகு தூரம் இருக்கு..உனக்குத் தெரியுமா திருப்புகழ்ல குவளை மலர் பற்றி வருது..
.// சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் ... வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், //
அப்புறம்..”
“ம்ம் எனக்குத் தெரியும்.. திருவெம்பாவைலயும் வருது.. //பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால்
நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன//
தவிர ஒரு குறளும் இருக்கு தெரியுமோ.
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. –
”குட் மனசாட்சி.. இன்றைய சுலோகத்தில என்ன சொல்றார் பகவத் பாதர்னு பார்ப்போமா..
**
த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:
Drisa draghiyasya dhara-dhalita-nilotpala-rucha
Dhaviyamsam dhinam snapaya kripaya mam api Sive;
Anenayam dhanyo bhavathi na cha the hanir iyata
Vane va harmye va sama-kara-nipaatho himakarah
“”மங்களங்கள் யாவும் அருள்பவளே..தேவி..சற்றே மலர்ந்த கருங்குவளை மலரின் காந்தியைப் போன்ற, காதுவரை நீண்ட உன்னுடைய கண்ணின் பார்வை உன்னைத் தொழாமல் எங்கோ இருக்கும் தகுதியற்றவனான என் மீதும் விழட்டும். ,
அதனால் உனக்கு ஒரு குறைவும் ஏற்படாது.. நிலவானது ஏழையோ அரசமாளிகையோ என்றெல்லாம் எண்ணுவதில்லை.. காட்டிலும் அரசமாளிகையிலும் தன் குளிர்ந்த ஒளியினை வழங்குகின்றது..அதுபோல உன் கண்களின் கருணை ஒளி என் மீதும் படவேண்டும்..”
“அன்னையவள் கருணை எந்த வித்யாசமும் இல்லாமல் அருள் வழங்கக் கூடியது என்கிறார் ஆதிசங்கரர்..
இவ்வாறு ஜகன்மாதாவை தியானித்தால் அன்னையின் அருள் மட்டுமில்லாது பொருளும் பெற்று இன்புறலாம்.
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 57
“வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
நிறைத்தே அருளும் நிலவு
*
ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
ஒளியும் நிலவின் ஒளி
*
மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
*
பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
மதியை மயக்கும் மதி
*
வானில் இருந்தவள்தான் வந்துவிட்டாள் என்றெண்ணி
தேனில் பழத்தினைத் தோய்த்தே சுவைத்தாற்போல்
மேயும் நிலவின் பிரதிபிம்பம் தான்வாங்கிக்
காயும் நிலவால் கடல் “
“ஒமகசீயா நா ந நா நா..”
“என்னாச்சு மனசாட்சி..”
“பின்ன என்ன..இப்படில்லாம் திடீர்னு பயமுறுத்தினா.. அழகா உன்னோட பாணில்ல நிலவு ஒரு பெண்ணாகி பாடியிருக்கலாமில்லை..”
“கொஞ்சம் எழுதிப் பார்த்தேன் இந்த கொண்டிருக்கப் பெற்ற குணம் ஈற்றடி மட்டும் முத்தொள்ளாயிரத்தில இருந்து வாங்கிக்கிட்டேன்....”
“சரி பட் உன் நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு.. சொல்லு நிலவைப்பத்தி..இந்த ஸ்லோகத்துல வருதாக்கும்..”
”அதுக்கும் முன்னால அல்லிங்கறது நார்மல் அல்லி..வெண்ணிறமா இருக்கும்..நீலோத்பலம்ங்கறது பிங்க்கலர்ல இருக்கும்..அதையே குவளை மலர்னு சொல்வாங்க நீல அல்லின்னும் சொல்வாங்க.. இதை ஒரு நண்பர் எனக்குச் சொன்னார்…
கொஞ்சம் கருநீலத்திலும் தென்படும் போல இருக்கு. அவற்றைக் கருங்குவளை என்றும் சொல்வார்களாம்... nymphaea pubescens நிம்பையா ப்யுபிசென்ங்கறது பொடானிகல் நேம்.”
“எங்கேயோ போய்ட்ட
“எங்கேயும் போகலை..போவதற்கு வெகு தூரம் இருக்கு..உனக்குத் தெரியுமா திருப்புகழ்ல குவளை மலர் பற்றி வருது..
.// சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் ... வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், //
அப்புறம்..”
“ம்ம் எனக்குத் தெரியும்.. திருவெம்பாவைலயும் வருது.. //பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால்
நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன//
தவிர ஒரு குறளும் இருக்கு தெரியுமோ.
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. –
”குட் மனசாட்சி.. இன்றைய சுலோகத்தில என்ன சொல்றார் பகவத் பாதர்னு பார்ப்போமா..
**
த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:
Drisa draghiyasya dhara-dhalita-nilotpala-rucha
Dhaviyamsam dhinam snapaya kripaya mam api Sive;
Anenayam dhanyo bhavathi na cha the hanir iyata
Vane va harmye va sama-kara-nipaatho himakarah
“”மங்களங்கள் யாவும் அருள்பவளே..தேவி..சற்றே மலர்ந்த கருங்குவளை மலரின் காந்தியைப் போன்ற, காதுவரை நீண்ட உன்னுடைய கண்ணின் பார்வை உன்னைத் தொழாமல் எங்கோ இருக்கும் தகுதியற்றவனான என் மீதும் விழட்டும். ,
அதனால் உனக்கு ஒரு குறைவும் ஏற்படாது.. நிலவானது ஏழையோ அரசமாளிகையோ என்றெல்லாம் எண்ணுவதில்லை.. காட்டிலும் அரசமாளிகையிலும் தன் குளிர்ந்த ஒளியினை வழங்குகின்றது..அதுபோல உன் கண்களின் கருணை ஒளி என் மீதும் படவேண்டும்..”
“அன்னையவள் கருணை எந்த வித்யாசமும் இல்லாமல் அருள் வழங்கக் கூடியது என்கிறார் ஆதிசங்கரர்..
இவ்வாறு ஜகன்மாதாவை தியானித்தால் அன்னையின் அருள் மட்டுமில்லாது பொருளும் பெற்று இன்புறலாம்.
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 58
“என் துணை என் நண்பன்னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு விளம்பரம் நினைவிருக்கா..””
“இல்லாம.. அமிர்தாஞ்சன்.. யூ நோ.. சில பெண்கள் எல்லாம் தலை வலிக்குதோ இல்லியோ பெட்ல தலகாணிக்குப் பக்கத்துலயோ அடிலயோ வச்சுக்குவாங்க..அப்பப்ப புருஷனைக் கூட அவ்வளவு காதலா பார்க்காம அந்த அமிர்தாஞ்சன் பாட்டில பார்த்துக்குவாக்க.. தலை வலிக்குதோ இல்லியோ ஸ்லைட்டா தடவிக்கிட்டா தான் தூக்கமே வரும் சில் பெண்களுக்கு..ஸ்மெல்லால தூக்கம் போகும் சில கணவர்க்ளுக்கு..அது வேற விஷயம்..””
“சரியாச் சொன்ன போ..தலை வலிக்கறச்சே இந்த அமிர்தாஞ்சனத்தை எங்கு தடவுவாங்க..
“இது என்ன கேள்வி இது.. நெற்றிப் பொட்டில் தான்..”
“அதாவது பொட்டு வைத்த முகமோ ந்னு பாட்டுல வர்ற பொட்டு இருக்கற இடத்துலயா..
“ஏண்டா படுத்தற..அங்க இல்லை.. கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே இருக்கற பிரதேசம்..ரொமாண்டிக் சமயத்துல அந்தக் காது லோலாக்க வருடி சைட்லயும் கொஞ்சம் வருடினேன்னு வச்சுக்க ஆப்பொஸிட் சைட் அப்படியே ஃபணால்..”
“ஏய்.உன்கிட்ட யாரு இவ்வளவு டீடெய்ல் கேட்டா..அந்த நெற்றிப் பொட்டும் பட்டுக் கன்னமும் வளைஞ்சு இருக்காம் அம்பாளுக்கு.. அம்பாளோட கண்களோ காதுவரை நீண்ட கண்கள்..அவை அப்பப்ப காதுகிட்ட பார்வையை வீச்றச்சே இந்த வளைஞ்சுருக்கற நெற்றிப் பொட்டு வில்லாகவும், அந்த ஓரவிழிப் பார்வைகள் கணைகளாகவும் தென்படறதாம்..அதுவும் யாரோட பாணங்கள்.. மன்மதனோட பாணங்கள்..”
“இந்த ஸ்லோகத்துல அப்படிச் சொல்றாரா..அதாவது மன்மதனோட கணையானது சைட்ல போகுதாக்கும்..”
“ஆமாம்ப்பா..இதப் புரிஞ்சுக்க எனக்கு சித்த நாழி ஆகிடுச்சு..வா…ஸ்லோகத்துக்குள்ள போகலாம்”
**
அராளம் தே பாலீயுகளம் அக்ராஜந்யதநயே
ந கேஷாம் ஆதத்தே குஸுமசர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவணபதம் உல்லங்க்ய விலஸத்
அபாங்கவ்யாஸங்கோ திசதி சரஸந்தாந திஷணாம்
Araalam the paali-yugalam aga-rajanya-thanaye
Na kesham adhatte kusuma-shara-kodhanda kuthukam;
Tiraschino yathra sravana-patham ullanghya vilasann-
Apaanga-vyasango disati sara-sandhana-dhisanam
மலையரசன் மகளே.. உன் வளைந்த காது மற்றும் கண்களுக்கு இடையேயான நெற்றிப்பொட்டு எனச் சொல்லப் படும் பிரதேசமானது சற்றே வளைந்திருப்பதால் மன்மதனின் கரங்களில் உள்ள வில் போலவும் அப்பிரதேசத்தில் அவ்வப்போது ஒளிரும் கடைக்கண் பார்வையானது காதுகளை ஊடுருவி பிரகாசிப்பதால் அவன் பூட்டியிருக்கும் மலர்க்கணைகளைப் போலவும் தோன்றுகிறது..
இவ்வண்ணம் தேவியை தியானிப்பவர்கள் காமனையும் வெல்லும் தன்மை பெறுவர்…
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 58
“என் துணை என் நண்பன்னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு விளம்பரம் நினைவிருக்கா..””
“இல்லாம.. அமிர்தாஞ்சன்.. யூ நோ.. சில பெண்கள் எல்லாம் தலை வலிக்குதோ இல்லியோ பெட்ல தலகாணிக்குப் பக்கத்துலயோ அடிலயோ வச்சுக்குவாங்க..அப்பப்ப புருஷனைக் கூட அவ்வளவு காதலா பார்க்காம அந்த அமிர்தாஞ்சன் பாட்டில பார்த்துக்குவாக்க.. தலை வலிக்குதோ இல்லியோ ஸ்லைட்டா தடவிக்கிட்டா தான் தூக்கமே வரும் சில் பெண்களுக்கு..ஸ்மெல்லால தூக்கம் போகும் சில கணவர்க்ளுக்கு..அது வேற விஷயம்..””
“சரியாச் சொன்ன போ..தலை வலிக்கறச்சே இந்த அமிர்தாஞ்சனத்தை எங்கு தடவுவாங்க..
“இது என்ன கேள்வி இது.. நெற்றிப் பொட்டில் தான்..”
“அதாவது பொட்டு வைத்த முகமோ ந்னு பாட்டுல வர்ற பொட்டு இருக்கற இடத்துலயா..
“ஏண்டா படுத்தற..அங்க இல்லை.. கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே இருக்கற பிரதேசம்..ரொமாண்டிக் சமயத்துல அந்தக் காது லோலாக்க வருடி சைட்லயும் கொஞ்சம் வருடினேன்னு வச்சுக்க ஆப்பொஸிட் சைட் அப்படியே ஃபணால்..”
“ஏய்.உன்கிட்ட யாரு இவ்வளவு டீடெய்ல் கேட்டா..அந்த நெற்றிப் பொட்டும் பட்டுக் கன்னமும் வளைஞ்சு இருக்காம் அம்பாளுக்கு.. அம்பாளோட கண்களோ காதுவரை நீண்ட கண்கள்..அவை அப்பப்ப காதுகிட்ட பார்வையை வீச்றச்சே இந்த வளைஞ்சுருக்கற நெற்றிப் பொட்டு வில்லாகவும், அந்த ஓரவிழிப் பார்வைகள் கணைகளாகவும் தென்படறதாம்..அதுவும் யாரோட பாணங்கள்.. மன்மதனோட பாணங்கள்..”
“இந்த ஸ்லோகத்துல அப்படிச் சொல்றாரா..அதாவது மன்மதனோட கணையானது சைட்ல போகுதாக்கும்..”
“ஆமாம்ப்பா..இதப் புரிஞ்சுக்க எனக்கு சித்த நாழி ஆகிடுச்சு..வா…ஸ்லோகத்துக்குள்ள போகலாம்”
**
அராளம் தே பாலீயுகளம் அக்ராஜந்யதநயே
ந கேஷாம் ஆதத்தே குஸுமசர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவணபதம் உல்லங்க்ய விலஸத்
அபாங்கவ்யாஸங்கோ திசதி சரஸந்தாந திஷணாம்
Araalam the paali-yugalam aga-rajanya-thanaye
Na kesham adhatte kusuma-shara-kodhanda kuthukam;
Tiraschino yathra sravana-patham ullanghya vilasann-
Apaanga-vyasango disati sara-sandhana-dhisanam
மலையரசன் மகளே.. உன் வளைந்த காது மற்றும் கண்களுக்கு இடையேயான நெற்றிப்பொட்டு எனச் சொல்லப் படும் பிரதேசமானது சற்றே வளைந்திருப்பதால் மன்மதனின் கரங்களில் உள்ள வில் போலவும் அப்பிரதேசத்தில் அவ்வப்போது ஒளிரும் கடைக்கண் பார்வையானது காதுகளை ஊடுருவி பிரகாசிப்பதால் அவன் பூட்டியிருக்கும் மலர்க்கணைகளைப் போலவும் தோன்றுகிறது..
இவ்வண்ணம் தேவியை தியானிப்பவர்கள் காமனையும் வெல்லும் தன்மை பெறுவர்…
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 59
ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்கயுகளம்
சது:சக்ரம் மந்யே தவ முகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்வநிரதம் அர்கேந்துசரணம்
மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே
Sphurad-ganddabhoga-prathiphalitha-thatanka yugalam
Chatus-chakram manye thava mukham idam manmatha-ratham;
Yam-aruhya druhyaty avani-ratham arkendhu-charanam
Mahaviro marah pramatha-pathaye sajjitavate.
தேவி.. உன்னுடைய பரிசுத்தமான கண்ணாடி போன்று ஒளிரும் கன்னங்களில்- தாடங்கம் என்று சொல்லப் படும் ஸ்ரீசக்ர வாடிவிலான இரண்டு வைரத் தோடுகளும் உன் காதுகளில் இருந்து அதன் ஒளியால் பிரதிபலிக்கப் படுகின்றன…
. இப்படி நான்கு சக்கரங்கள் தெரியும் உனது முகமானது பொன் வண்ண மன்மதனின் தேர் போன்று காட்சி அளிக்கின்றது..
இத் தேரில் ஏறிக்கொண்டு மன்மதன் சூரியன் சந்திரன் என்ற இரு சக்கரங்களுடன் பூமியாகிய தேரில் ஏறிச் சென்று முப்புரம் எரித்த பரமசிவனுடன் போருக்குச் செல்வது போன்றிருக்கிறது..”
இச்சுலோக பாராயணம் எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றலைப் பெற்றுத் தரும்..
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் 59
ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்கயுகளம்
சது:சக்ரம் மந்யே தவ முகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்வநிரதம் அர்கேந்துசரணம்
மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே
Sphurad-ganddabhoga-prathiphalitha-thatanka yugalam
Chatus-chakram manye thava mukham idam manmatha-ratham;
Yam-aruhya druhyaty avani-ratham arkendhu-charanam
Mahaviro marah pramatha-pathaye sajjitavate.
தேவி.. உன்னுடைய பரிசுத்தமான கண்ணாடி போன்று ஒளிரும் கன்னங்களில்- தாடங்கம் என்று சொல்லப் படும் ஸ்ரீசக்ர வாடிவிலான இரண்டு வைரத் தோடுகளும் உன் காதுகளில் இருந்து அதன் ஒளியால் பிரதிபலிக்கப் படுகின்றன…
. இப்படி நான்கு சக்கரங்கள் தெரியும் உனது முகமானது பொன் வண்ண மன்மதனின் தேர் போன்று காட்சி அளிக்கின்றது..
இத் தேரில் ஏறிக்கொண்டு மன்மதன் சூரியன் சந்திரன் என்ற இரு சக்கரங்களுடன் பூமியாகிய தேரில் ஏறிச் சென்று முப்புரம் எரித்த பரமசிவனுடன் போருக்குச் செல்வது போன்றிருக்கிறது..”
இச்சுலோக பாராயணம் எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றலைப் பெற்றுத் தரும்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
நாளும் ஒரு அழகின் அலை....
செளந்தர்ய லஹரி
ஸ்லோகம் .60
ஸரஸ்வத்யா: ஸுக்தீரம்ருதலஹரீ கெளசல ஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண சுளுகாப்யாம் அவிரளம்
சமத்காரச்லாகா சலிதசிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசநமசஷ்ட இவ தே
Sarasvatyah sukthir amrutha-lahari-kaushala-harih
Pibanthyah Sarvani Sravana-chuluk abhyam aviralam;
Chamathkara-slagha-chalita-sirasah kundala-gano
Jhanatkarais taraih prati-vachanam achashta iva te.
”அம்பிகையே. உனது பொருள் பொதிந்த அமுதமான பேச்சை இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும் கலைமகள் அதன் இனிமையில் மயங்கி,, தன் வீணையின் ஒலியைவிட இனிமை அதில் இருப்பதைக் கண்டு வியந்து அழகாகத் தலையசைக்கிறாள்..
அப்போது அந்த சரஸ்வதியின் காதணிகள் மெல்ல அசைகின்றன..
அதிலுள்ள மணிகள் ஜனஜன என அழகிய ஒலி எழுப்புகின்றன..
அந்த ஒலி ,மலையரசன் பத்தினியே, உன் பேச்சை ஆமோதிப்பதுபோல,, உன் பேச்சை வியந்து ஆஹாகாரம் செய்வது போல இருக்கின்றது….
இந்த ஸ்லோகத்தை சிரத்தையோடு பாராயணம் செய்தால் அந்த இடங்களில் மணிகளின் ஜனத்காரங்கள் கேட்கும்.. தேவியின் அருளும் கிட்டும்..
- Sponsored content
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 14
|
|