புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அழிவது, நலிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தமில்லை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:33 pm

சேவகனாக, அடிமையாக, எழுத்துக்கூலிகளாக, அகதியாக தமிழன் எங்கெல்லாம் சென்றா லும், அவன் கங்காரு தன் குட்டியை வயிற்றில் சுமப்பது போல், தாய்ப்பூனை தன் குட்டியை வாயில் தூக்கிச் செல்வது போல் தமிழை சுமந்து சென்றுள்ளான். அங்கிருந்து படைப்பிலக்கியங்களை படைத்துக் கொண்டிருக்கிறான்.

எனவே, தமிழ்நாட்டில் தமிழ் இப்படிச் சென்று கொண்டி ருக்கிறதே, தமிழ் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழ் அயலகத் தமிழர்களால் கடல் கடந்து கொண்டாடப்பட்டு, வளமையுடன் வாழ்ந்து வருகிறது’ என்றார் எழுத்தாளரும், பத்திரிகை யாளருமான மாலன்.

3 நாள் மாநாடு:

தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பிலான உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு குறித்த 3 நாள் மாநாடு கோவை காளப்பட்டி என்.ஜி.எம் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

டாக்டர் நல்லா பழனிச்சாமி தலைமை வகித்தார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் பேசினார். ரே.கார்த்திகேசு, இந்திரன், சேரன், அழகிய பாண்டியன், எஸ்.பொ, பெருந்தேவி என அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜெர்மனி உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்களும், படைப்பாளர்களும், புவியரசு, நாஞ்சில்நாடன், சிலம்பொலி செல்லப்பன், திருப்பூர் கிருஷ்ணன், சி.ஆர்.ரவீந்திரன், சுப்பரபாரதிமணியன் என நூற்றுக்கணக்கான உள்ளூர் எழுத்தாளர்களும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.

அர்த்தமற்ற பிதற்றல்:

மாநாட்டில் மாலன் பேசியது: ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி நிற்கிற, பரவி நிற்கிற தமிழ் எழுத்தின் எழுச்சிப் பிரதிநிதிகள் இங்கே கூடியிருக்கின்றனர்.

குமரி முதல் வேங்கடம் வரை விரவி நின்ற தமிழ்கூறும் நல்லுலகு உடைந்து சுக்கு நூறாகி விட்டது. ஆனால் இலங்கை, கனடா, ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர் சென்ற தமிழர்கள் தமிழுக்கு கொடை தந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் என்பது உலகம் தழுவிய மொழி. தமிழ் நலிவது, தமிழே அழிவது என்ற பிதற்றலுக்கு அர்த்தம் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது தாயகம் கடந்த தமிழ்.

விரவிக்கிடக்கும் தமிழ்:

ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியம் எப்படி லண்டன் ஆங்கில இலக்கியம், அமெரிக்க ஆங்கில இலக்கியம், மூன்றாம் நாடுகளின் ஆங்கில இலக்கியம், இந்திய ஆங்கில இலக்கியம் என்று வெவ்வேறு கூறுகளுடன் நிற்கிறதோ, அதேபோல் தமிழ் இலக்கியமும் நாடு கடந்து நிற்கிறது. இலங்கை தமிழ் இலக் கியம், மலேசியா தமிழ் இலக்கியம், சீனா தமிழ் இலக்கியம், ஜெர்மன் தமிழ் இலக்கியம், அமெரிக்க, லண்டன் தமிழ் இலக்கியம் என்று விரவிக் கிடக்கிறது.

தமிழை தாங்கும் 4 தூண்கள்:

ராஜராஜன் சோழன் காலத்தில் தமிழன் கடல் கடந்து வாணிபம் செய்யப்போனான்; சேவகனாகப் போனான். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைகளாக கடல்கடந்து போனான். சுதந்திரத்திற்குப் பிறகு கடல்கடந்து எழுத்துக்கூலிகளாகப் போனான். இடைப்பட்ட காலத்தில் அகதிகளாகக்கூட போனான். அப்போதெல்லாம் அவன் கங்காரு தன் குட்டியை சுமப்பது போல், தாய்ப் பூனை தன் வாயில் குட்டியை கவ்விச் செல்வதுபோல் தமிழை மட்டும் அன்னையின் லாவகத்தோடு கொண்டு சென்றான்.

தமிழன் எங்கு சென்றாலும் தன் மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கிறான். தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறான்.

கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை ஊடகம், தொழில்நுட்பம், இலக்கியம், கல்வி ஆகிய 4 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதுவே இக் கருத்தரங்கின் மூன்று நாட்களிலும் விவாதப் பொருளாக இருக்கும் என்றார் மாலன். thehindutamil

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 22, 2014 6:48 am

முற்றிலும் உண்மை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 22, 2014 10:59 am

பயனுள்ள பகிர்வு...
-
எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !
இல்லையேல் தமிழ் வீழும் !
‘கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று ‘  திருவள்ளுவர்
கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் !
கனியாக நல்ல தமிழ் எழுத்துககள் இருக்கையில் !
-
காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ?
பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் !
பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு !
நம் மொழி தமிழ் எழுத்துக்கள் இருக்க !
வடமொழி எழுத்துக்கள் நமக்கு எதற்கு ?
அழகு தமிழ்ச் சொற்களில் திட்டமிட்டு !
அவர்கள் வடமொழிச்  சொற்கள் கலக்கின்றனர் !
வடமொழி  எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவதை !
வேண்டுமென்றே வழக்கமாகக்  கொள்கின்றனர் சிலர் !
-
என்ன வளம் இல்லை நம் தமிழ்ச் சொற்களில் !
ஏன் கையை ஏந்த  வேண்டும் பிற சொற்களிடம் !
உணவில் கலப்படம் உடல் நலத்திற்குக்  கேடு !
மொழியில் கலப்படம் மொழி வளத்திற்குக்  கேடு !
அமுதமொழி உலகின் முதல்மொழி தமிழ் இருக்க !
அந்நிய மொழிச் சொற்கள் தமிழில் எதற்கு ?
தமிழ் எழுத்தால் மட்டுமே எழுதுவோம் !
தமிழ் அல்லாத எழுத்துகளை மறப்போம் !
====
கவிஞர் இரா இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக