புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
33 Posts - 42%
heezulia
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
32 Posts - 41%
prajai
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
2 Posts - 3%
Saravananj
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
399 Posts - 49%
heezulia
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
27 Posts - 3%
prajai
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சூழல் Poll_c10சூழல் Poll_m10சூழல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூழல்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 7:23 pm

2004ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கிய ஆழிப் பேரலையை (சுனாமி) யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இது போன்ற பேரழிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதே வளர்ச்சிக்கு அடையாளம். இதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழிப் பேரலை அருங்காட்சியகம். ஆழிப் பேரலைக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் அருங்காட்சியகம் இது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாடு கிராமத்தில் ரூ. 10 லட்சம் செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆழிப் பேரலையில் அதிக மக்களை பலி கொடுத்தது ஆலப்பாடு கிராமம்தான்.

ஆழிப் பேரலையின் ஆபத்துகளை விளக்கும் இந்த அருங்காட்சியகம், ஆழிப்பேரலை மூன்றாவது நினைவு நாளை ஒட்டி (26 டிசம்பர் 2007) திறக்கப்பட்டது. ஆழிப் பேரலை எச்சரிக்கைகளுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும், சமிக்ஞைகள் மூலம் எதிர்வரும் ஆபத்தின் அளவை எப்படி உணர்ந்து கொள்வது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக ஒருங்கிணைப்பாளர் பிரீதா ஜார்ஜ் தெரிவிக்கிறார். கடலோர மண்டலங்கள் பற்றிய விவரம், கிராம வாழக்கை, ஆழிப் பேரலைக்கு முந்தைய ஆலப்பாடு ஊரின் தோற்றம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 26 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் தனிசுவர் பகுதி குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆழிப் பேரலையில் தப்பிய குழந்தைகளின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆழிப் பேரலைக்கு முன் கடலில் ஏற்படும் மாற்றங்களை காட்சிப்படுத்தும் தொடுஉணர் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமானது என்று உணர்த்துகிறது. இது போன்ற முயற்சிகள் சமூகத்துக்கு பெரும் பயனளிக்கும். அருங்காட்சியகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னேன் இல்லையா, எந்தச் செலவும் இல்லாம, சுற்றுச்சூழலில் கலந்துள்ள நச்சைக் கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன?

ஆபத்தான டி.டி.ற்றி. நச்சு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டி.டி.ற்றி. எனும் பூச்சி மருந்து உலகெங்கும் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த டி.டி.ற்றி. நச்சு தாய்ப்பாலிலும் கலந்துவிட்டது. இன்னமும்கூட உலகின் பல பகுதிகளில் இந்த பூச்சிக்கொல்லி நச்சு உலவி வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் டி.டி.ற்றி. நச்சு கலந்திருக்கிறதா என்பதை அறிய இனிமேல் பெரிய ஆய்வுகள் செய்யத் தேவையில்லை. பறவைகளின் முட்டைகளைக் கண்காணித்தாலே போதும். பறவை முட்டை ஓடுகளில் வெள்ளைக்குப் பதிலாக சிவப்பு-பழுப்பு புள்ளிகள் காணப்பட்டால் அப்பறவைகளின் உணவில் டி.டி.ற்றி. கலந்துள்ளது என்பதை அறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ராப்டர் எனப்படும் ஊனுண்ணி கழுகு இன பறவைகளிடம் ஆக்ஸ்போர்ட்-கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.

டி.டி.ற்றி. மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாகவே பறவை முட்டை ஓடுகளில் புள்ளிகள் தோன்றுகின்றன. முட்டை ஓடுகள் உருவாகக் காரணமாக இருக்கும் கால்சியத்தை இந்தப் பூச்சிக்கொல்லி தடைசெய்வதால், புள்ளிகள் தோன்றுகின்றன. சுற்றுச்சூழலில் டி.டி.ற்றி. மாசு எவ்வளவு கலந்துள்ளது என்பதை கண்காணிக்க பறவை முட்டை ஓடுகளை ஆராயும் இந்த முறை பாதுகாப்பானது, செலவு மிகக் குறைவு. ராப்டர் பறவைகள் இரையின் எலும்புகளையும் உண்பதால், அவற்றுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, அவற்றின் உடலில் டி.டி.ற்றி. நச்சு சேர்ந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

ஏற்கெனவே, கால்நடைகளின் உடலில் கலந்துள்ள பூச்சி மருந்துகள் காரணமாகவே இந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் இனம் அதிவேகமாக அழிந்து வருகிறது. இந்த மருந்துகள் கால்நடைகளின் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டன. இப்போது டி.டி.ற்றி. நச்சு ராப்டர் பறவைகளின் உடலில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.டி.ற்றி. உள்ளிட்ட நச்சு பூச்சிக்கொல்லிகள் நாம் சாப்பிடும் தானியங்களின் மீது கொட்டப்படுகின்றன. அவை எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் நச்சு என்றால், நாம் சுவாசிக்கும் காற்றை டீசல் மாசுபடுத்துகிறது. அதன் பயன்பாட்டை குறைக்க என்ன செய்யலாம்?

சுற்றுச்சூழல் வரி

டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தில்லி மாநில அரசு டீசல் எரிபொருளுக்கு சுற்றுச்சூழல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு 25 பைசா வரி விதிக்கப்படும். இந்த வரி மூலம் திரட்டப்படும் தொகை, தில்லியின் 'தூய்மை காற்று செயல்திட்ட'த்துக்கு நிதியாக பயன்படுத்தப்படும். இந்த வரி மூலம் ரூ. 48 கோடி திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி மாநிலத்தில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும், தில்லியின் காற்று தரத்தை டீசல் மாசுகள் பாதிக்கும் போக்கை குறைக்கும் வகையிலும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

தனி வரி விதிக்கப்பட்டாலும்கூட, டீசலின் விலை அதிகரிக்கவில்லை. பெட்ரோலைவிட டீசல் விலை 30 சதவிகிதம் குறைவாகத்தான் உள்ளது. வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குறிப்பிட்ட சாலைகள், பகுதிகளை பயன்படுத்த வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் காரில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாகச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் பெருகி வரும் வாகன நெரிசல், மாசுபடுத்துதலைக் குறைக்க இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம். இந்தியாவில் தில்லியில் முன்மொழியப்பட்டது போன்ற சிறு முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. இது போதாது, இன்னும் பெருக வேண்டும். அப்படிப்பட்ட பெரும் முயற்சிகளில் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.

ஒரு மணி நேர மின்நிறுத்தம்

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் ஒரு மணி நேரம் மின்பயன்பாட்டை நிறுத்தும் பிரசாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த பிரசார செயல்பாடு நடந்தது. பகல் நேரத்தில் நடந்தால் தெரியாது என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பிரசாரம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசாரத்துக்கு 'பட்டி பந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது. மும்பையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வுக்காக இப்பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சமாக வீட்டு மின்சார பயன்பாட்டை ஒரு மணி நேரம் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நவி மும்பை, கல்பாதேவி பகுதி மக்கள் இந்த பிரசாரத்துக்கு பெரும் ஆதரவு அளித்தனர். இதன்மூலம் சர்ச் சேட், போரிவிலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் 78 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது என்கிறார் பிரசாரத்தை ஒருங்கிணைத்த நீல் குரேஷி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் 'பூமி நேரம்' என்ற பெயரில் பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது சிட்னி நகரில் 20 லட்சம் மக்கள் மின் பயன்பாட்டை நிறுத்தியதன் மூலம், 10 சதவிகித எரிசக்தி பயன்பாடு குறைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற பிரசாரத்தை மும்பையில் நடத்த நீல் குரேஷி, கெய்த் மேனன், ருஸ்தம் வார்டன், ஷிலாதித்ய சக்கரவர்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் தீர்மானித்தனர்.

''ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்தை உருவாக்க முடியும்'' என்று வலியுறுத்தி மூன்று மாதங்களுக்குப் பிரசாரம் செய்தனர். மின் ரயில்கள், பேருந்துகள், சாலைகள் என மக்கள் கூடுமிடங்களில் பிரசாரம் நடத்தப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் தலா 10,000 பேரிடம் பேசியிருப்போம் என்கிறார் நீல் குரேஷி. மின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமின்றி மனிதச் சங்கிலி, மெழுகுவர்த்தி பேரணிகள் போன்றவற்றையும் அவர்கள் நடத்தினர். இந்த இளைஞர்களின் பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மும்பை மேயர் சுபா ரால், நகராட்சி ஆணையர், மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோரும் கோரிக்கை விடுத்து ஆதரித்தனர். அதிகார வர்க்கத்தினர் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறார்களே. அந்த வரை பாராட்ட வேண்டியதுதான்.



(செய்திகள் ஆதாரம்: டவுன் டு எர்த் இருவார இதழ்)


நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக