புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10பாமரர் தேவாரம் - Page 10 Poll_m10பாமரர் தேவாரம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 25, 2014 8:22 am

பாமரர் தேவாரம் - Page 10 103459460
-
பாமரர் தேவாரம் - Page 10 CGFsf86BTUyzRHlzclrz+siva
-
பாமரர் தேவாரம் - Page 10 0DplebBYSfmeauhsIhRB+ammal
-

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 26, 2014 9:55 am

காமனைக் கரந்தனன் கண்ணழலான்
பாமரன் பரவிடும் பாம்பரையன்
சோமனை உச்சியிற் சூடிநின்றான்
வீமரு தண்பொழில் விரிஞ்சையிலே. ... 7

[வீமரு = மலர் மணம்]

விலங்கலை யிலங்கையின் வேந்தனுமை
கலங்கிடப் பெயர்க்கவே கால்விரலால்
உலங்கென நசுக்கிய உமைகூறன்
விலங்கினை நீக்குவன் விரிஞ்சையிலே. ... 8

[விலங்கல் = மலை; உலங்கு = கொசு, புழு]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Oct 27, 2014 8:12 am

(இறுதிப் பகுதி)
தன்றலை அயனரி தாள்காணா
வன்னியாய் நின்றனன் வான்தொட்டே
கொன்றைய ணிந்திடும் குழற்சடையன்
வென்றிய ருள்வனே விரிஞ்சையிலே. ... 9

[தன்றலை = தன்+தலை; வன்னி = நெருப்பு; வென்றி = வெற்றி]

பிறையணிப் பிஞ்ஞகன் பேரொளியாய்ப்
புறச்சம யங்களிற் புக்குழலா
தறநெறி மறைவழி தாங்குவரின்
வெறுமையை நீக்குவன் விரிஞ்சையிலே. ... 10

இம்மையும் மறுமையும் ஈர்த்திடவே
மும்மலம் முக்குணம் மூழ்குமுயிர்
அம்மையப் பன்கழல் அண்ணிநின்றால்
வெம்மையும் விரிஞ்சையில் விலகிடுமே. ... 11

[வெம்மை = கோபம், ஆசை]

--ரமணி, 17-22/10/2014

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 30, 2014 9:21 am

திருக்குறும்பலா (குற்றாலம்)
(வஞ்சித்துறை: திருவிருக்குறள் அமைப்பில்: மா காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.93.1 நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10930)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=601
http://ta.wikipedia.org/wiki/குற்றாலம்_குற்றாலநாதர்_கோயில்
http://enthamizh.blogspot.in/2013/04/blog-post_22.html

பதிகம்
சம்பந்தர்: 2.71 திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20710

காப்பு
வல்லப கணபதியே
நல்விதம் பாடவருள்
வல்வினை தீர்ப்பவனின்
கல்லுறும் குறும்பலவை. ... [கல் = மலை]

பதிகம்
திரிகூ டமலைமேல்
குறுமா முனியாலே
பெருமாள் சிவனானார்
அருள்வார் குறும்பலவே. ... 1

குழல்வாய் மொழியாளே
குழகன் மனையாளாம்
அழகே பராசக்தி
பொழில்சூழ் குறும்பலவே. ... 2

லிங்கப் பலாச்சுளையாய்த்
தொங்கும் தருவடியில்
கங்கைச் சடையோனே
தங்கும் குறும்பலவே. ... 3

அருவித் தீர்த்தத்தில்
சரும நோய்போமே
சிரநோ வும்தைலம்
சரியாம் குறும்பலவே. ... 4

வல்லன் கணபதியாம்
வில்லன் வேலவனாம் ... [வல்லன் = வல்லவன்; வில்லன் = வில்லேந்தியவன்]
நல்லோர் நலம்சேர
எல்லைக் குறும்பலவே. ... 5

சங்கு வடிவத்தில்
அங்க ணன்கோவில்
பொங்கும் நீர்வீழ்ச்சி
தங்கும் குறும்பலவே. ... 6

சித்ர சபைதன்னில்
தத்ரூ பம்காணில்
சத்ரு பயமில்லை
அத்தன் குறும்பலவே. ... 7

தசமு கன்சாய
அசுரர் புரமெரியப்
புசகம் அணிதேவன் ... [புசகம் = பாம்பு]
இசையும் குறும்பலவே. ... 8

அயன்மால் அறியாதே
வியன்கொள் அழலானான்
இயமன் காலுதைத்தான்
பயம்போம் குறும்பலவே. ... 9

மற்றை நெறியாவும்
சற்றும் கொள்ளாதே
சுற்றம் எனநாட
வெற்றிக் குறும்பலவே. ... 10

பெம்மான் புகழ்பாடும்
சம்பந் தர்பதிகம்
தம்முள் கொள்வார்க்கே
இம்மை வினைதீர்வே. ... 11

--ரமணி, 28/10/2014, கலி.11/07/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 15, 2014 10:27 am

களக்காடு (திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ள தலம்)
(அறுசீர் விருத்தம்: காய் காய் காய் காய் மா தேமா)

கோவில்
http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_thenkalakkudi.htm
http://silvercascades.blogspot.in/2012/06/forgotten-ancient-beauty.html
http://www.kalakad.org/index.html
http://welcometoourkalakkad.blogspot.in/2012/11/blog-post_22.html
https://www.youtube.com/watch?v=H5KO3uXKBLo

காப்பு
களக்கா டுறையும் அனிக்கைவிக் னேச!
வளம்பல கொண்ட வயல்சூழ் தலத்தின்
நலம்பல பாட்டில் நவிலற் கருள்வாய்
வலம்வந்தே வேண்டு வனே.

பதிகம்
உருதோன்றி லிங்கமென சத்தியவா கேசுவரர்
. ஊரின் தந்தை
மருதோன்றி யிலைச்செம்மை மேனியள்கோ மதியம்மன்
. மாந்தர் தாயாம்
கரிதோன்றி உதவிடவே குறமகளை மணம்செய்த
. கந்தன் சேயாம்
கரிமுகனும் அனிக்கைவிநா யகனென்றே அருள்செய்யும்
. களக்கா டாமே. ... 1

நம்மனதைக் கவர்பவனாய் நவநீதக் கண்ணனென
. நாமம் இங்கே
தம்மனதே சிவமான அறுபத்து மூவரையும்
. தாங்கும் கோவில்
எம்மனதும் எட்டாதே எருதேறி எம்பெருமான்
. மேவும் ஊராம்
கம்மெனவே மணம்சூழும் பொழிலாரும் மலைசூழும்
. களக்கா டாமே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 16, 2014 11:08 am

வான்சூழும் கோபுரமாம் வயல்சூழும் மலைசூழும்
. வளமே சூழும்
தேன்சூழும் வண்ணமலர் தினம்சூடி யருள்செய்யும்
. தெய்வப் பெற்றோர்
நானென்றே வாழுயிர்க்கு நமன்சூழா நலம்தந்தே
. நம்மைக் காக்கக்
கான்சூழும் மாவினமும் புள்ளினமும் ஆர்ப்பரிக்கும்
. களக்கா டாமே. ... 3

சிற்பமெலாம் கலையழகில் சொக்கவைக்கும் தலமெனவே
. சிந்தை யாரும்!
அற்பலெமாலாம் அகந்தனிலே அணுகாதே அனுதினமும்
. அரனை யண்ண
தற்பமெலாம் தீயெரித்தே அற்புதமாய் அகம்நிறையும்
. தையல் பாகன்
கற்பகமாம் அன்னையுடன் அருள்செய்யும் ஊற்றென்றே
. களக்கா டாமே. ... 4

[தற்பம் = கருவம், பாவம்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 17, 2014 8:55 am

சோரார ணியமொருபேர் சோழகுல வல்லிபுரம்
. ஓர்தொல் பேராம்
போராரும் களமெனவே புகழ்மலியக் கல்வெட்டில்
. புகலும் செய்தி
நீராருங் கடலெழுந்து நிலைகொண்ட நஞ்சுண்ட
. நிமலன் மேவும்
காராரும் மலைசூழக் கழனியெலாம் நெல்விளையும்
. களக்கா டாமே. ... 5

பச்சையாறு தீர்த்தமாகப் பசிதீர்க்கும் நெல்வயலில்
. பசுமை தங்கும்
பிச்சையாறு கொண்டவராய்ப் பிச்சாண்டிக் கோலத்தில்
. பிணியைத் தீர்க்க
இச்சையாற இமயவதி இடம்கொண்டே இகபரத்தில்
. இனிதே ஈயும்
கச்சையகிக் கருமிடற்றான் கண்ணுதலில் கருணைமேவும்
. களக்கா டாமே. ... 6

[கச்சையகி = அரைப்பட்டிகையாகப் பாம்பை அணிந்தவர்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 19, 2014 10:06 am

தூணெல்லாம் இசையேழு சுரம்வரவே கலையழகில்
. துய்மை வாழும்
ஊணெல்லாம் துய்க்குமுயிர்க் குய்வுதரும் பரம்பொருளே
. உருவம் தாங்கிப்
பூணெல்லாம் மாவுரியும் புலியதளும் அரவுமென்றே
. புனித னாகக்
காணெல்லாம் திரண்டுவந்து கலிதீர்க்கும் தலமெனவே
. களக்கா டாமே. ... 7

[ஊண் = ஆன்மாவின் இன்பதுன்ப நுகர்வு; காண் = காட்சி, அழகு]

சயிலமதைக் கொளமுயன்ற தானவனைத் தாள்சடையன்
. தரைய ழுத்த
மயலறவே யாழிசைத்தே மாவரக்கன் போற்றிடவே
. வாள்-நாள் தந்தான்
மயிலியவள் இடமிருக்க மலமறுத்தே மைதிகழும்
. மாமி டற்றன்
கயிலையினில் வீற்றருளும் கண்ணுதலான் கண்ணுறவே
. களக்கா டாமே. ... 8

[சயிலம் = மலை; வாள்நாள் = வாளும், வாழ்நாளும்; மயிலி = மயில் போன்ற பெண்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 20, 2014 7:57 am

(இறுதிப் பகுதி)

மாலவனும் தாள்தேட மலரவனும் முடிதேட
. அழலாய் நின்றான்
மூலவனின் நகையோட முப்புரமமும் எரியோட
. மூளி யாமே
பாலவனாய்ப் பசுபதியாய்ப் பாசமறச் செய்வோனின்
. பாதம் பற்ற
காலனவன் தாளுதைத்தே காத்தருள மேவுதலம்
. களக்கா டாமே. ... 9

[பாலவன் = பால்வண்ணமான சிவன்]

ஆரணத்தை யொப்பாத அறநெறியாய்ப் பலவுள்ள
. இற்றை நாளில்
காரணத்தே வாழுநெறிக் கவர்ச்சியிலே கண்மூடிக்
. கலியில் வீழ்வோர்
மாரணத்தை வென்றிடவே மறைபோற்றும் மருந்தீசன்
. மனதில் கொள்ளக்
காரணத்தைக் காரியத்தைக் காட்டியருள் கடவுளுறைக்
. களக்கா டாமே. ... 10

[ஆரணம் = வேதம்; காரணத்தே = கார் + அணத்தே = இருள் மேலோங்கவே;
மாரணம் = மரணம்]

அஞ்செழுத்தன் அருட்கூத்தன் அவிர்சடையன் அயிற்சூலன்
. ஆழி யார்ந்த
நஞ்சழுத்தும் நீலகண்டன் நாரியிடம் கொண்டவனாய்
. நன்மை செய்தே
நெஞ்சழுத்தும் நீள்வினைகள் நீங்கிடவே பிறவியறும்
. நெறிதந் தானை
கஞ்சனத்தின் ஒலியழுத்தக் காதாரும் பண்வழுத்தும்
. களக்கா டாமே. ... 11

[கஞ்சனம் = கைத்தாளம்]

--ரமணி, 08-15/11/2014, கலி.29/07/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 16, 2014 8:59 am

கச்சித் திருவேகம்பம் (காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்)
(கலிவிருத்தம், திருக்குறுந்தொகை அமைப்பில்)

[முதற்சீர் மாச்சீர்; இரண்டின் முதலில் நேரசை;
அதன்பின் வரிக்குள் வெண்டளை; பொழிப்பு மோனை;
முதற்சீர் நேரெனில் அடிக்கு 11 எழுத்துகள்; நிரையெனில் அடிக்கு 12 எழுத்துகள்.]

கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=578
http://www.kamakoti.org/tamil/tirumurai4.htm

பதிகம்
சம்பந்தர்: 3.41: கருவார் கச்சித் திருவே கம்ப
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=1073

ஒற்றை மாமரம் ஓங்கத் தலைமிசை
கற்றைக் கூந்தல் கனலாய் விரிவனின்
புற்றுப் பாம்பணிப் பொற்கழல் ஏத்துவர்
கற்றார் பாமரர் கச்சியே கம்பனே. ... 1

ஒருமா வின்கீழ் உறையும் அரையனின்
உருமா லென்பதோ ஒண்மதி யோர்நதி
கருமாக் கல்லாய்க் கழுத்தினுற் காளமாம்
கரிமாத் தோலணி கச்சியே கம்பனே. ... 2

[அரையன் = அரசன்; உருமால் = தலைப்பாகை; கருமாக்கல் = கரிய, அழகிய இரத்தினம்
கரிமா = யானையின் பெரிய தோல்]



Sponsored content

PostSponsored content



Page 10 of 20 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக