புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10பாமரர் தேவாரம் - Page 9 Poll_m10பாமரர் தேவாரம் - Page 9 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 04, 2014 8:36 am

(இறுதிப் பகுதி)
அயனரி காண்கிலா அழலெழு வானவன்
புயகம ணிந்திடும் புண்ணியன் புகழொளி
இயமனைக் காலினால் எற்றிய இறைவனாய்
வியனுல கிற்கருள் வெஞ்சமாக் கூடலே. ... 9

ஆரணம் தூற்றிடும் அறநெறி ஈர்ப்பினை
வேருடன் நீக்கியே வினையற ஈசனை
ஆர்மனம் நாடினும் அவர்க்கருள் செய்வனாய்
வீரணன் உறைவது வெஞ்சமாக் கூடலே. ... 10

[வீரணன் = முடிவில்லா ஆற்றல் பொருந்திய வீரன்]

மரம்செடி விலங்கதில் மானிடர் மனமதில்
கரந்துரை மாமணி கண்ணுதற் கடவுளின்
சுரந்தருள் தாளிணை சுந்தரர் நாடியே
விருத்தனைப் பாடுவர் வெஞ்சமாக் கூடலே. ... 11

--ரமணி, 26/09/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 09, 2014 9:32 am

திருவெண்ணியூர் (இன்று கோயில் வெண்ணி)
(கட்டளைக் கலித்துறை: விளம் கூவிளம் கூவிளம் கூவிளம் விளங்காய்)
(சம்பந்தர் தேவாரம்: 3.009.01 கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா(த))

கோயில்:
http://temple.dinamalar.com/New.php?id=310
http://www.shivatemples.com/sofct/sct102.php

பதிகம்
சம்பந்தர்: 2.014 சடையானைச் சந்திர
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20140
அப்பர்: 5.017 முத்தி னைப்பவ ளத்தை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50170
6.059 தொண்டிலங்கும் அடியவர்க்கோர்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60590

காப்பு
வெண்ணியூர் ஐங்கரன் வெள்விடை ஈசனின் வேள்மகனே
அண்ணினேன் நானுனை அத்தனைப் பாடுமோர் ஆசையிலே
பண்ணுமோர் பாவினில் பான்மைய ருள்செயப் பாசமுடன்
கண்களை மூடினேன் காதுகள் பற்றினேன் காப்பருளே!

பதிகம்
வெண்ணியிற் போரினை வென்றிடச் செம்பியன் வேட்பருளக்
கண்ணுத லீசனுக் காலயம் செய்தனன் கார்கழலான்
அண்ணமும் தேன்சுவை ஆரவே கன்னலின் ஆக்குவயம்
வெண்ணியில் மேவிய வேந்தனின் பேரென வெஃகினனே. ... 1

[செம்பியன் = சோழன்; கார்கழலான் = கரிகாலன்; அண்ணம் = மேல்வாய்;
ஆக்குவயம் = பெயர்; வெஃகுதல் = மிக விரும்புதல்]

அன்னையின் பேரென சௌந்தர நாயகி ஆவதுவாம்
இன்னலைத் தீர்ப்பதில் மின்னலின் வேகமே ஏந்திழையாள்
அன்னைபி டாரியால் ஆனதே கார்கழ லான்விறலே
மென்னியைக் கொள்வினை வெண்ணியில் நிச்சயம் வீழ்வுறுமே. ... 2

[மனை = மனைவி; விறல் = வெற்றி]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 11, 2014 8:51 am

இக்குவ னந்தனில் ஈர்முனி கண்டனர் ஈசனையே
இக்குவி ருட்சமா வெண்ணியா என்றவர் ஏங்கிடவே
இக்குவே என்பெயர் வெண்ணிவி ருட்சமாம் ஈசனுரைப்
பக்கலில் கேட்கவே பண்பனும் இத்தலம் பாவினனே. ... 3

[இக்கு = கரும்பு; ஈர்முனி = இரண்டு முனிவர்கள்]

செஞ்சுடர் சந்திரன் தீர்த்தமும் தீர்த்திடும் தீவினையே
அஞ்சன வண்ணனாய் அண்ணலும் லிங்கமாய் ஆவியுற
எஞ்சிடும் தீவினை ஏதிலை யென்றவன் இன்னருள
மெஞ்ஞலன் கண்ணுற வெண்ணியில் மேவினன் வேதியனே. ... 4

[மெஞ்ஞலன் = மெய்ந்நலன் = அழகிய, வலிய மேனியை உடையவன்]



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82773
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 9:03 am

இக்குவ னந்தனில் - இக்குவலயந்தனில்
என இருக்க வேண்டுமோ..?
-
பாமரர் தேவாரம் - Page 9 103459460

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 11, 2014 9:27 am

இக்கு என்றால் கரும்பு, வனம் என்றால் காடு. எனவே இக்குவனம் என்பது கரும்புக் காட்டைக் குறிக்கும்.
கரும்புக் காட்டில் சுயம்புவாக எழுந்ததால் 'கரும்பேஸ்வரர்' என்று பெயர் பெற்றார் இக்கோவில் உறையும் சிவன்.

ரமணி

ayyasamy ram wrote:இக்குவ னந்தனில் - இக்குவலயந்தனில்
என இருக்க வேண்டுமோ..?
-
பாமரர் தேவாரம் - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1094988


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 12, 2014 7:18 am

கருவறைச் சுற்றினில் கால்நட னைங்கரன் கங்கைமகன்
குருவுரு மூர்த்தியும் கூத்தனண் ணாமலை கொற்றவையும்
திருவருள் தந்திடும் தெய்வமாய்க் கொள்வரே தீமையெலாம்
வெருளிய ழிப்பவன் வெல்லமாய் மேவினன் வெண்ணியிலே. ... 5

[கால்நடன் ஐங்கரன் = கால் நடமாடும் நர்த்தன விநாயகர்;
குருவுரு மூர்த்தி = தட்சிணாமூர்த்தி; கொற்றவை = துர்க்கை;
வெருளி = வெருட்சி, மருட்சி, கலக்கம்]

வெளிவரும் சுற்றிலே வேலவன் ஐங்கரன் வீற்றிருக்க
நளினியின் நோக்குடன் நாள்செயும் கோள்களும் நன்மைதரும்
அளிமலர் சென்னியில் ஆரவே ஈசனும் அன்புடனே
வெளியென நின்றவன் வெண்ணியில் மேவினன் விண்ணவனே. ... 6

[நளினி = இலக்குமி; அளிமலர் = தேன்மலர்; ஆர்தல் = நிறைதல்;]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Oct 14, 2014 8:58 am

(இறுதிப் பகுதி)
வெண்டலை யேந்தியே வேல்விழி யாரிடம் வேண்டினனே
பண்டொரு நாள்தனில் பார்த்தனுக் கீந்தனன் பாசுபதம்
தண்டலை யார்மலர் தாங்குத லைதனில் ஆறிழிய
வெண்பொடி கொண்டருள் மேனியன் வெண்ணியில் மேவினனே. ... 9

[வெண்டலையேந்தியே = பிச்சாடனார் கோலத்தில் பிரமனின் தலையோட்டை ஏந்தியே; தண்டலை = சோலை]

சுருதியைத் தள்ளியே சூனியம் பேசிடும் சூதுநெறி
தருவது வாழ்வினில் தக்கதி லையெனத் தள்ளுவராய்
வருவினை வீட்டிடும் வள்ளலின் பூங்கழல் வாழ்த்திடுவோர்
வெருவினை நீக்கவே வெண்ணியில் மேவினன் வித்தகனே. ... 10

[வீட்டுதல் = அழித்தல்; நீக்குதல்]

நினைவுறின் வல்வினை நீங்கிடும் இல்லையேல் நீளுமென
வினவுசம் பந்தரின் விண்டுரை யுள்வரின் வீழலிலை
அனலுறும் கண்ணனை அப்பரும் பாடிய தார்ந்துளத்தில்
வினயமாய் வாழ்த்திட வெண்ணியின் வேந்தனாய் மேவினனே. ... 11

--ரமணி, 09/10/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Oct 23, 2014 8:54 am

விரிஞ்சிபுரம் (கரபுரம், வேலூர் அருகே)
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.112.1 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=828
http://www.kamakoti.org/tamil/Vrinji.htm
http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_karapuram.htm
http://balajothidar.blogspot.in/2013/03/virinjeepuram.html
http://shanthiraju.wordpress.com/2008/06/09/virinchipuram/

பதிகம்
அப்பர்: 6.007.07 தெண்ணீர்ப் புனற்கெடில
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60070

காப்பு
விரிமுடி காண்கிலா விரிஞ்சனுக்கே
திருமுடி காட்டிய திருத்தனமர்
விரிஞ்சையை வரிகளில் விரித்திடவுன்
கருணையை வேண்டினேன் கணபதியே.

[விரிஞ்சன் = பிரம்மா; திருத்தன் = தூய்மையானவன், கடவுள்;
விரிஞ்சை = விரிஞ்சிபுரம்]

பதிகம்
திருமுடி காண்கிலாத் திசைமுகனே
அரியதோர் சிறுவனாய் அவதரித்தே
விரிஞ்சையில் பூசைனை மேவிடவே
திருமுடி சாய்த்தருள் செய்பரமே. ... 1

வணிகருக் கருளினன் வழித்துணையாய்
அணங்கவள் மரகத அம்பிகையாம்
இணையிலி ஆயிரத் தெண்லிங்கம்
வணங்கியே விரிஞ்சையில் வாழ்த்துவமே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Oct 24, 2014 9:52 am

ஆளிமு கத்தொரு நடபாவி
கோளறு தீர்த்தமாய்க் குழவிதரும்
தாளியே கோவிலின் தலவிருட்சம்
மேளனப் பண்ணொலி விரிஞ்சையிலே. ... 3

[ஆளி = சிங்கம்; நடபாவி = படியுள்ள கிணறு;
தாளி = பனைமரம்; மேளனம் = இசைக்கருவிகளின் சுருதியியைபு]

கல்லணைச் சிற்பமும் கலையழகே
மெல்லணை மாவுரி மேனியனாய்ச்
சொல்லணைத் துதிசெயும் சோதியனே
வில்லணைக் காப்பென விரிஞ்சையிலே. ... 4

[மெல்லணை = சட்டை; மாவுரி = யானையின் தோல்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Oct 25, 2014 8:11 am

நப்புணர் பாவலர் நால்வருடன்
அப்பைய தீட்சிதர் அருணகிரி
மப்பற வழிசொலும் வாரியரும்
மெய்ப்புரும் தரிசனம் விரிஞ்சையிலே. ... 5

[நப்புணர் = நைப்பு + புணர் = நம்மைப் புணரும்;
மப்பு = மயக்கம், செருக்கு; மெய்ப்பு = நிரூபணம்]

விரிசடை விடையவன் விழிநுதலான்
திரிபுரம் தீய்த்தவன் திருமிடற்றன்
அரிவையி டம்கொளும் அஞ்செழுத்தன்
விரிஞ்சையில் வீற்றருள் வீரணனே. ... 6



Sponsored content

PostSponsored content



Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக