புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
426 Posts - 48%
heezulia
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
29 Posts - 3%
prajai
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10பாமரர் தேவாரம் - Page 14 Poll_m10பாமரர் தேவாரம் - Page 14 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Apr 05, 2015 6:43 pm

(இறுதிப் பகுதி)

அரவார்ந்த மேனி உடையாகு போர்வை அணியாகு பூதி யெனவே
இரவார்ந்து பெய்ய இருவேளை சுற்றி எலும்போடு கொள்ளும் இறைவன்
கருவார்ந்த பாவம் புரையாகு முன்னர் கனல்கொள்ள வைப்பர் எனவே
குரவார்ந்த கோவில் அடைவோர்க்க ருள்வர் குடவாயில் மேவு சிவனே. ... 11

[குரவார்ந்த = குராமரங்கள் நிறைந்த]

சம்பந்தர் பாடல் இருபத்தி ரண்டு தழலேந்தும் ஈசர் புகழும்
நம்பந்தம் என்றே ஒளிகாணு வோர்க்கு நலமென்றும் சூழ வருமே
அம்பாரியாக வினைகொள்ளும் உள்ளம் அமலன்க ழல்பற்று தினமே
கும்பம்வி டுத்து வெளிசேர்த்த ருள்வர் குடவாயில் மேவு சிவனே. ... 12

[பந்தம் = தீப்பந்தம்]

--ரமணி, 17-23/03/2015, கலி.08/12/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 28, 2015 7:28 am

திருவேதிகுடி
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)
திருப்புகழ்: திருச்செந்கோடு: காலனிடத் தணுகாதே

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=373
http://www.shivatemples.com/sofct/sct014.php

பதிகம்
சம்பந்தர்: 3.78: நீறுவரி ஆடவரொ டமைமன வென்புநிரை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30780
அப்பர்: 4.90: கையெது காலெரி நாகங் கனல்விடு சூலமது
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40900

காப்பு
சுருதியைக் கேட்டவாறே சோத்திரம் சாய்த்தே
அருள்செயும் அத்திமுக னாரே! - ஒருமை
இருமையாகும் வேதபுரி ஈசர் இணைத்தாள்
அருமையைப் பாட அருள்.

பதிகம்
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)

வேதமொழிக் கருவாகி
. வேணிதனிற் பிறைசூடி
பேதமழித் தருளாதி
. பேரிளமைத் திருவாளர்
போதமளித் தகமாள்வர்
. பூதகணத் தினர்சூழும்
மேதினியிற் புகழாரும்
. வேதிகுடிப் பெருமானே. ... 1

வானதியைத் தலைநாட
. மாதுவுருத் துடலேற
வானவருக் கமுதீவார்
. மாயையறுப் பவராக
ஈனவனத் தினிலாடி
. ஏறுதனிற் றிரிவீசன்
மேனியதிற் பொடிபூசும்
. வேதிகுடிப் பெருமானே. ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 28, 2015 7:31 am

திருவேதிகுடி
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)
திருப்புகழ்: திருச்செந்கோடு: காலனிடத் தணுகாதே

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=373
http://www.shivatemples.com/sofct/sct014.php

பதிகம்
சம்பந்தர்: 3.78: நீறுவரி ஆடவரொ டமைமன வென்புநிரை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30780
அப்பர்: 4.90: கையெது காலெரி நாகங் கனல்விடு சூலமது
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40900

காப்பு
சுருதியைக் கேட்டவாறே சோத்திரம் சாய்த்தே
அருள்செயும் அத்திமுக னாரே! - ஒருமை
இருமையாகும் வேதபுரி ஈசர் இணைத்தாள்
அருமையைப் பாட அருள்.

பதிகம்
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)

வேதமொழிக் கருவாகி
. வேணிதனிற் பிறைசூடி
பேதமழித் தருளாதி
. பேரிளமைத் திருவாளர்
போதமளித் தகமாள்வர்
. பூதகணத் தினர்சூழும்
மேதினியிற் புகழாரும்
. வேதிகுடிப் பெருமானே. ... 1

வானதியைத் தலைநாட
. மாதுவுருத் துடலேற
வானவருக் கமுதீவார்
. மாயையறுப் பவராக
ஈனவனத் தினிலாடி
. ஏறுதனிற் றிரிவீசன்
மேனியதிற் பொடிபூசும்
. வேதிகுடிப் பெருமானே. ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 28, 2015 7:33 am

திருவேதிகுடி
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)
திருப்புகழ்: திருச்செந்கோடு: காலனிடத் தணுகாதே

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=373
http://www.shivatemples.com/sofct/sct014.php

பதிகம்
சம்பந்தர்: 3.78: நீறுவரி ஆடவரொ டமைமன வென்புநிரை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30780
அப்பர்: 4.90: கையெது காலெரி நாகங் கனல்விடு சூலமது
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40900

காப்பு
சுருதியைக் கேட்டவாறே சோத்திரம் சாய்த்தே
அருள்செயும் அத்திமுக னாரே! - ஒருமை
இருமையாகும் வேதபுரி ஈசர் இணைத்தாள்
அருமையைப் பாட அருள்.

பதிகம்
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)

வேதமொழிக் கருவாகி
. வேணிதனிற் பிறைசூடி
பேதமழித் தருளாதி
. பேரிளமைத் திருவாளர்
போதமளித் தகமாள்வர்
. பூதகணத் தினர்சூழும்
மேதினியிற் புகழாரும்
. வேதிகுடிப் பெருமானே. ... 1

வானதியைத் தலைநாட
. மாதுவுருத் துடலேற
வானவருக் கமுதீவார்
. மாயையறுப் பவராக
ஈனவனத் தினிலாடி
. ஏறுதனிற் றிரிவீசன்
மேனியதிற் பொடிபூசும்
. வேதிகுடிப் பெருமானே. ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 30, 2015 8:17 am

தோசமறக் கலியாணம்
. தோதுவரத் திகழ்பாடல்
பூசனையிற் றகையாக
. பூதபதிக் கடியாரும் ... ... [சம்பந்தர்]
காசினியிற் தரவேதான்
. காதலருக் கருள்சேர
வீசுமணத் தலர்சூடும்
. வேதிகுடிப் பெருமானே. ... 3

ஆரணமித் தலமோத
. ஆரணருக் கருளீசர்
காரிகையைத் தலைமீதும்
. காளியெனப் புகல்மீதும் ... ... [புகல் = உடல்]
ஈருருவத் தருவாக
. ஈனமழித் தருள்வாராய்
வேரமறுத் தருள்வாராய் ... ... [வேரம் = வெகுளி, சினம்]
. வேதிகுடிப் பெருமானே. ... 4


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 04, 2015 7:51 am

கோவிலிடைச் சிலையாகக்
. கோலமிகப் பலதேவம்
பாவமிடர்க் களைநேர்வில்
. பாசமறச் செயவேநாம்
காவலிதிற் களியாரக்
. காதலுறக் கொளுமீசர்
மேவுதலத் தினைநாட
. வேதிகுடிப் பெருமானே. ... 5

காலனுதைத் தருள்வாரே
. காவியுடைக் கருள்வாரே
வேலவனைப் பணிவாரே
. வேதமொழிப் பொருளாவார்
கோலமிகக் கொளுவாரே
. கோவிலிடைத் திருவாவார்
வேலியுடைத் தருள்வாரே
. வேதிகுடிப் பெருமானே. ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 05, 2015 7:16 pm

பாசுபதத் தினையீவர்
. பாசமறச் செயுமீசர்
மாசுதனைக் கொளுமீசர்
. வானவருக் கிறையாவர்
நேசமுறச் செயுமீசர்
. நேதியெனச் சொலமேவும்
வீசுநடத் தினையாடும்
. வேதிகுடிப் பெருமானே. ... 7

மேருமலைச் சிலையாலே
. மேகமலைப் புரமோயும்
ஓர்விரலைத் தரையீடாய்
. ஊணவரக் கனுமோய்வன்
காரிருளைக் களையீசர்
. காவலெனக் கொளவேநம்
வேருருத்த வினைமாய
. வேதிகுடிப் பெருமானே. ... 8


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 06, 2015 8:32 am

(இறுதிப் பகுதி)

மாலயனைத் தழலாக
. மாறியலைத் தருளீசர்
காலமறுத் தருளீசர்
. காசினியர்க் கருள்சேர
ஆலமரத் தடிமேவி
. ஆசைகளைக் கொளுமீசர்
மேலவருக் கிறையாவர்
. வேதிகுடிப் பெருமானே. ... 9

வேதநெறிக் கிசையாத
. வேறுநெறிக் கிசையாதே
நாதனருட் கழல்நாட
. நாகரவைக் கொளுமீசர்
ஆதரவைத் தருவாராய்
. ஆருயிருக் கருள்சேர
வேதவொலிக் கருவாகும்
. வேதிகுடிப் பெருமானே. ... 10

ஊனமுறுத் துளைவாழ்வில்
. ஊறுமகிழ்ச் சியைநாடும்
மானிடருக் களியாகும்
. மாறிலியைத் துணைநாட
தானழியத் திருவாரும்
. தாகமுடைத் தவர்யாரும்
மேனியழித் துயிர்வாழ
. வேதிகுடிப் பெருமானே. ... 11

--ரமணி, 19-26/04/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed May 13, 2015 8:27 am

எதிர்கொள்பாடி (இன்று மேலைத் திருமணஞ்சேரி)
(அறுசீர் விருத்தம்: ’மா மா கூவிளம்’, அரையடி)

(சம்பந்தர் தேவாரம் 2.100.1: படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்")

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=505
http://www.shivatemples.com/nofct/nct24.php

பதிகம்
சுந்தரர்: 7.07: மத்த யானை யேறி மன்னர் சூழவரு வீர்காள்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70070

காப்பு:
கோட்டத்து பால கொடிமரவி நாயக!
பாட்டுள் எதிர்கொளப் பாடி-ஐ ராவதரைச்
சீட்டுக் குலுக்காதே சீர்வரும் சொற்களில்
வாட்டமின்றிப் பாட வருள்.

பதிகம்
ஈசன் இங்கே இந்திரன் ஈனம் மறையச் செய்துதுர்
வாசர் சாபம் நீக்கியே மாண்பை மீட்டுத் தந்தவன்
நேசக் கரியும் போற்றவே நேர்ந்த துயரம் நீக்கினார்
ஈசன் அன்னை இன்னருள் ஈட்ட எதிர்கொள் பாடியே. ... 1

பொருளோ நிலையோ போனவர் போற்றும் தலமென் றோர்புகழ்
திரும ணமாகச் சீர்ப்படத் திருந்த வேண்டிக் கொள்வரே
ஒருநோய் வயிற்றில் தோன்றியே உளைவோர் வணங்க நீங்குமே
உருதான் தோன்றி லிங்கமாய் உமையோ டெதிர்கொள் பாடியே. ... 2



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 15, 2015 8:35 am

பரத்வா ஜமுனி வேண்டவே பரம்சேர் உமையே புத்ரியின்
உருவாய்! அவளைச் சேர்மணம் உடையார் கொண்ட கோவிலாம்
திருவேள் விக்கு டித்தலம்! திருவார் மணம்பின் சீர்முனி
எருதூர் ஈசன் தம்பதி யெதிர்கொள் பாடி யாமிதே. ... 3

சுகந்த குந்த ளாம்பிகை சூலம் கொள்ளும் அன்னையாம்
அகந்தை நீக்கி இந்திரன் ஆனை ஆட்கொள் ஈசராம்
உகந்தோர் பதிகம் பாடிய உறவாய் அடியார் சுந்தரர்
சுகமாய்ச் சேர நீங்கிடும் துயரம் எதிர்கொள் பாடியே. ... 4


Sponsored content

PostSponsored content



Page 14 of 20 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக