புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
68 Posts - 50%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
1 Post - 1%
bala_t
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
1 Post - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
286 Posts - 41%
heezulia
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
285 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
6 Posts - 1%
prajai
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10பாமரர் தேவாரம் - Page 11 Poll_m10பாமரர் தேவாரம் - Page 11 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 16, 2014 5:40 pm

நல்ல பதிவு

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 17, 2014 8:10 am

கைலா யத்தினில் கண்ணுத லான்தவம்
காலா தீதனின் கண்மறை நாயகி
ஏலா தென்றவன் ஈசன் விதிக்கவே
பாலாற் றுத்தலம் பற்றினாள் கம்பமே. ... 3

மாந்தி யின்கீழ் மணலுரு செய்தவள்
ஏந்தும் நோன்பினை ஏற்றருள் ஈசனும்
காந்தல் தீரவே கங்கைய னுப்பவே
காந்த ளாள்-அணை கச்சியே கம்பனே. ... 4

[மாந்தி = மாமரம்; காந்தல் = வெம்மை; காந்தளாள் = காந்தள் மலர் போலிருப்பவள்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 18, 2014 8:33 am

வளைத்த ழும்புறும் மண்ணுரு லிங்கமாய்
வளைதிங் கள்முடி வாய்த்திடும் ஈசனார்
முளைக்கும் தீவினை முற்றுமுன் தீய்த்தருள்
களைகண் கண்ணுதல் கச்சியே கம்பனே. ... 5

[களைகண் = பற்றுக்கோடு]

முலைத்த ழும்புறும் முக்கணன் லிங்கமே
குலையா தாயின் குழைந்தருள் செய்திடும்
சிலையைத் தன்னுடல் சேர்த்தவன் செங்கணன்
கலவும் ஊரெனக் கச்சியே கம்பமே. ... 6



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 20, 2014 6:53 am

அலையார் கேசம் அழலார் விழியனாய்
நிலையார் உள்ளம் நிறைந்தருள் செயவே
தொலையாக் கேடும் தொலைந்திடும் வாழ்வருள்
கலையார் சேகரன் கச்சியே கம்பனே. ... 7

[நிலையார் உள்ளம் = உறுதி நிறைந்த மனம்]

அரக்கன் மாமலை யாட்டத் திருவிரல்
நெருக்கிச் சாய்த்த நிமலன் கழலிணை
உரத்துப் பற்றுவோர்க் குற்றான் எனவரும்
கருத்தன் மேவிடும் கச்சியே கம்பமே. ... 8

[உரத்து = இறுக; கருத்தன் = தலைவன், கடவுள்]



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 23, 2014 7:38 am

(இறுதிப் பகுதி)

அன்ன மாகியே அந்தணன் சேகரம்
பன்றி யாகிப் பரந்தா மனும்கழல்
என்றும் காணா எரியென் றெழுந்தவன்
கன்மம் தீர்த்தருள் கச்சியே கம்பனே. ... 9

வேதம் ஒப்பிலா வேறுவ கைநெறி
யாதும் ஒப்பிலா யாரும் அரன்புகழ்
ஓதும் மந்திரம் உள்வரின் காணுவர்
காதல் மேவிடக் கச்சியே கம்பனை. ... 10

நால்வர் பாடிய நான்மறை யாளனே
பால்வெண் ணீறன் பகவன் பரமனாம்
சூல்கொள் ஆவிச் சுடராம் வியோமமாம்
கால்மண் தீயெனும் கச்சியே கம்பனே. ... 11

[வியோமம் = ஆகாயப் பெருவெளி; கால் = காற்று]

--ரமணி, 07-13/12/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 23, 2015 8:28 am

திருவீங்கோய்மலை
(அறுசீர் விருத்தம்: தேமா கூவிளங்காய் கூவிளம் கூவிளம் தேமா புளிமாங்காய்
நட்டபாடைப் பண் கட்டளை: தான தானதன தானன தானன தானா தனதானா
தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடி -- சம்பந்தர்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=841
http://www.shivatemples.com/nofct/nct63.php

பதிகம்
சம்பந்தர்: 1.70 வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10700

காப்பு:
வல்லபவி நாயகநின் வண்ணமுளம் வந்தேயென்
சொல்லுடன் ஓசையும் தொய்வின்றி - வல்லாள்
இடம்வைத் தருளிய ஈங்கோய் மலையான்
நடம்பாடச் செய்வாய் நலம்.

பதிகம்
ஈசன் மேவியருள் சன்னிதி மூடிட .. ஈயாய் உருமாறி
ஏச றும்முனிய கத்தியர் ஏத்திட .. ஈங்கோய் மலையாகும் ... ... [ஏசறும் = வருத்தமுறும்; ஆசைப்படும்]
வாச மாமலரி னையணி அன்னையை .. வாமத் திருமேனி
வாசம் வைத்தருளும் ஏழுல காள்பவன் .. வாழும் தலமாமே. ... 1

ஆதி சேடனொடு வாயுவும் போட்டியில் .. ஆடும் விளைவாக ... ... [வாயுவரன் = வாயுதேவன்; ஞாட்பு = போர்]
ஈது தேவனது பைம்மணி லிங்கமென் .. றீங்கோய் மலையாகும்
ஆதி தேவியுரு பைம்மணி வல்லியென் .. றாமோர் பெயராகும் ... ... [பைம்மணிவல்லி = மரகதவல்லி]
பாதி மேனியுருப் பெண்ணென வானவன் .. பாதம் பணிநெஞ்சே. ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jan 24, 2015 10:06 am

சத்தி பீடமிது முப்பதி னேழினில் .. சாயா தலமாகும் ... ... [முப்பதினேழு = 3x17 = 51]
இத்த லத்துமரம் சுந்தரர் ஏசிய .. இந்தத் தருவாகும் ... ... [இந்தத்தரு = புளியமரம்]
எத்த னத்திலுயர் சாதனை யோங்கிட .. ஈங்கோய் மலைவாழும் ... ... [எத்தனம் = யத்தனம் = முயற்சி]
செத்த மேனியெரி வெண்பொடி பூசிய .. சீலன் கொளுநெஞ்சே. ... 3

கொற்ற வையிருவர் சாந்தமும் கோபமும் .. கொள்ளும் உருவென்றே
சுற்றில் ஆறுமுகன் ஐங்கரன் மாலவன் .. சூழ்ந்தே அருள்செய்ய
இற்றென் றாருமனம் எண்ணிட வொண்ணலன் .. ஈங்கோய் மலைவாழும் ... ... [இற்றென்று = இன்ன தன்மையது என்று]
சிற்ப ரன்கழலி ணைதினம் நாடியே .. சேர்வாய் உளைநெஞ்சே. ... 4



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jan 25, 2015 8:44 am

வெற்பு மீதிலுறை வெண்மதி யன்தலம் .. வேண்டில் சிலவென்றே
இற்று வீழவினை இல்லறம் ஓங்கிட .. ஈங்கோய் மலைவாழும்
சிற்ப மாவுருவில் அம்மையும் அப்பனும் .. சிந்தை தனில்வாழ
அற்ப வாழ்விதனை விண்ணுல கென்றிடும் .. ஆசை விடுநெஞ்சே. ... 5

தானு வந்தகணம் ஆடக நாணயம் .. தாதன் தரவேதான்
ஈனல் வேண்டியதை சுந்தரர் இத்தலம் .. ஈங்கோய் மலைநாட
ஈனல் இன்றியரன் இந்தம ரந்தனில் .. இங்கே மறைந்தாட
ஆன நேர்வதனில் சுந்தரர் வெய்துற .. யாதும் மரமில்லை. ... 6


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 27, 2015 7:49 am

சீறும் பாம்பணியன் செஞ்சடை யாறுளன் .. செம்பொற் கழலேதான்
ஊறு நாடிசெலும் மேனியும் உள்ளமும் .. உய்யும் வழியென்றே
ஏறு மீதுசெலும் ஏழுல கேத்திடும் .. ஈங்கோய் மலைமேவும்
நீறு பூசியருள் நெற்றியிற் கண்ணுறும் .. நித்தன் நினைநெஞ்சே. ... 7

வெள்ளி மாமலையை வேட்டவ ரக்கனின் .. வீங்கு தலைபத்தும்
தள்ளி பூமிதனில் தாள்விர லாலவன் .. தாடை கொளும்தாளை
எள்ளி டையெனினும் எண்ணும னந்தனில் .. ஈங்கோய் மலைமேவும்
கள்ள னென்றுகொளும் காவலில் உள்ளுறும் .. கள்ளம் பறிபோமே! ... 8


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 27, 2015 8:07 am

பாமரர் தேவாரம் - Page 11 103459460
-
பாத தரிசனம் பாப விமோசனம்.......
ஆடிய பாதம் பணிந்தால் வல்வினைகள்
ஓடியே போகும்.....
-
பாமரர் தேவாரம் - Page 11 JcxG4JGbS16CrZJL6tCO+left-side1

Sponsored content

PostSponsored content



Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக