புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
51 Posts - 44%
heezulia
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
417 Posts - 49%
heezulia
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_m10தமிழ்ச் செல்வங்கள் - சொல்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் செல்வங்கள் - சொல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 1:02 pm

தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் - தினமணி

சொல் - 1

'சொல்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "நெல்' என்பது ஒரு பொருள். சொல் "நெல்' என்னும் பொருள் தருதலைப் புலமையாளரும் கண்டனர்; பொதுமக்களும் கண்டனர்.

நெற்பயிர் கதிர் வாங்குவதற்குக் கருக்கொள்கிறது. அக் கருக்கொண்ட நிலை "சூல்' என்பதாம். நெற்பயிர் சூல் கொண்ட நிலையில், பசும்பாம்பு போல் தோன்றுகிறதாம். உற்றுப் பாருங்கள் உண்மையில் வியப்பு தோன்றும்! என்ன அருமையான உவமை எனப் பாராட்டத் தோன்றும். சூல் முதிர்ந்து கதிர் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து நிற்கிறது! அப்படி நிற்பது பண்பில்லாச் செல்வர் செருக்குப் போல் உள்ளதாம். பின்னர் பால் பிடிக்கிறது நெல்லில்; பால் முதிர்ந்து மணி பிடிக்கிறது. படிப்படியே தலை சாய்கிறது; மணி நன்றாக முற்றிய நிலையில் முழுவதாக வளைகிறது. அது, கல்வியும் பண்பும் நிறைந்த மாந்தரைப் போல் திகழ்கிறது! இவ்வாறு கூறும் நூல் சிந்தாமணி!

மணி முற்றிய கதிருக்கு எதிரேயும், மணி முற்றிய ஒரு கதிர்! காற்று அடித்தலால் இரண்டு கதிர்களும் இணைந்து எழுகின்றன. அக்காட்சி மெய்யடியார் ஒருவரை ஒருவர் கண்டு தலைதாழ்ந்து வணங்குவது போல் உள்ளதாகக் காட்டும் பெரியபுராணமாம் திருத்தொண்டர் புராணம்!

நெல் என்று எதனைச் சொல்வோம்?

பால், மணியாகாமல் கருத்துப் போதல், கருக்காய்! அரை மணியாகி நின்று விட்டது, அரைக்காய்! மணியே இல்லாதது - பொய்யாக நெல்போல் தோன்றுவது, பொய்க்கு (பொக்கு), பதர். பதடி என்பதும் அது.

"பயனில்லாச் சொல்லைச் சொல்பவனைப் பாராட்டுபவனை பயனுள்ள மகன் என்று சொல்லாதே! மக்கள் வகையிலே பிறந்த

பதர் என்று சொல்வாயாக' என்பதைத் திருவள்ளுவர்,

""பயனில் சொல் பாராட்டு வானை மகளெனல்
மக்கட் பதடி எனல்'' என்றார்.

மணி உள்ளதே நெல் என்பது போல், பயனுள்ள சொல்லைச் சொல்பவனே மகன் என்றும், பயனற்ற சொல்லைச் சொல்பவனும் அதைப் பாராட்டுபவனையும் மகனாகத் தோற்றம் தந்தாலும் அவன் மகனாகான்! மக்களில் பதராவன் என்றார். "மகன்' என்றது மகளுக்கும்தான் என்பது இலக்கணம்.

ஒரு நாள் ஒருவருக்குப் பயன் இல்லாமல் வீணாகக் கழிந்தது. அதனை அவர் "பதடி வைகல்' என்றார். அவர்க்குரிய பெயர் காணப்படாமையால், அவர் பாடிய பாடலில் கண்ட "பதடி வைகல்' என்பது "பதடி வைகலார்' என்று பெயரிட்டு வழங்கினர். சங்கச் சான்றோர் அவர்.

மணியுள்ளதே நெல் எனப்படுவது போல், பொருள் உள்ளதே "சொல்' எனத் தமிழர் இலக்கணம் கண்டனர். பொருளில்லாத - காரணம் இல்லாத எந்தச் சொல்லையும் அவர்கள் சொல்லவில்லை. ஆதலால், ""எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' என்றார் தொல்காப்பியர்.

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 1:05 pm

சொல் - 2

' சொல்' என்பது "நெல்' எனப் பொருளுடையது என்று கண்டோம். சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டது "சொன்றி' என்றனர். பொதுமக்கள் "சோறு' என வழங்கினர். புலமையாளர்களும் சோறு என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.

யானைக்குத் தந்தம் இருப்பதை நாம் அறிவோம். தந்தம் என்பது அதன் கடைவாயில் அமைந்த கோரைப் பல்லே. யானை போலவே தொல் பழமையான நாளில் பன்றிக்கும் கோரைப் பல் இருந்தது என்று தொல்லியல் ஆய்வாளர் சொல்வர். அதனைப் "பன்றி' என்னும் பெயரே வெளிப்படுத்துகிறது. பல் - பன் - பன்றி. இதனோடு, சொல் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பார்த்தால்,

சொல் - சொன் - சொன்றி என்பது விளங்கும்.

நல் - நன் - நன்றி என்பதையும் காணலாம்.

பாண்டியன் நெடுஞ்செழியன், ""கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று'' என்றான்; வழக்காடிய கண்ணகியாரிடம்! கோறல் - கொல்லுதல். கொல்லுதல் "கோறல்' எனப்பட்டது. "கோறுதல்' என்பதும் அது. கொல் என்பதன் வழியே "கோறு' என்பது போல், சொல் என்பதன் வழியே "சோறு' அமைந்தது.

வரகரிசிச் சோறு. தினையரிசிச் சோறு, குதிரை வாலியரிசிச் சோறு, கம்பரிசிச் சோறு என்பவை வழக்கில் வந்தன. சோறு போல் தோற்றம் தரும் கள்ளி, கற்றாழை ஆகியவற்றின் உள்ளீடாகிய செதும்பு, சோறு எனவும் வழங்கப்பட்டது. கள்ளிச் சோறு, கற்றாழஞ் சோறு என்பவை சோறு போன்ற தோற்றத்தால் ஏற்பட்டவை.

சொல் வழியாக வந்த சொன்றி, சோறு என்பவை இன்று நேற்று வந்தவை அல்ல. நம் பழந்தமிழ் நூல்களில் பல்கால் இடம்பெற்ற சொற்களாகும்.



""நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி''

(பெரும்பாண்-131)

"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி''

(மேலது-193)

""பல சொன்றி உண்டு'' (மதுரைக்-212-213)

""புன்புல வரகின் சொன்றி'' (புறம்-197)

""சோறுவாக்கிய கொழுங்கஞ்சி'' (பட்டினப்-44)

""சோறகு குமிசி'' (பெரும்பாண்-366)

""சோறிடு சாலை'' (மதுரைக் -395 நச்.)

""சோறுபடுக்கும் தீ'' (புறம்-20)

""ஏற்றுக உலையே ஆக்குக சோறே'' (புறம்-172)

சொன்றியும் சோறும் பாடு புகழ் பெற்ற பழநாள் சொற்கள் என்பது காண்க!

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 1:07 pm

சொல் - 3

சொல்லின் ஆட்சி வழக்கில் எப்படியெல்லாமோ விளங்குகின்றது. ""அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. அவ்வளவு செருக்கு'' - என்று பழி சொல்வதில்லையா? இதனால் பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும்.

""நீங்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும்; கட்டாயம் நடந்துவிடும்'' - என்பதில் சொல்வாக்கின் செல்வாக்குப் புலப்படும்.

""ஒரு சொல் சொல்லி வைக்கவும்; இல்லையானால் நடப்பதே வேறு'' - என்பதில் கண்டிப்பும் எச்சரிப்பும் புலப்படும்.

""ஒரு சொல்லுக்குச் சொன்னேன்'' - என்பதில் சும்மா, ஒரு பேச்சுக்கு என்பது சொல்லின் பொருளாதல் விளங்கும்.

""பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல் உடைபடுவதும் சொல்லாலே'' என்பதில் புகழும் இகழும் தருவது சொல் என்பது விளக்கமாகின்றது.

"சொற்றுணை' என்பது மிக உயர்ந்த துணையாம். பேசாக்குழந்தை எனினும் பேச்சுத் துணையாக விளங்குதல் கண்கூடு. பேச்சுத் துணையும், துயர்த்துணையுமாக இருந்த தோழமையர் பழ நாளில் "உசாத்துணை' என்றும், "அசாத்துணை' என்றும் வழங்கப்பட்டனர். உசாவுதல் - கலந்து பேசுதல்; அசாவுதல் - அயர்வு, சோர்வு.

இறைவனையே சொல் வடிவாகக் கண்டது தமிழ் நெறி. இறைவனைச் சொற்றுணையாகக் கண்டார் நாவுக்கரசர். அவரையே தமிழுலகம் "சொற்கோ', "சொல்லின் வேந்தர்', "நாவரசர்' எனப் பலவாறு கண்டது.

அருணகிரியார் சந்தத்தில் மகிழ்ந்த புலமை உலகம் "வாக்கிற்கு அருணகிரி' என்றது. புதுப் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத் துணை வேண்டும். கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய வயதினளாகவும் இருக்க வேண்டும். அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வழிமுறைக் காப்பாகவும் இருத்தல் வேண்டும். அவளே இருபாலும் நலம் சேர்ப்பவளாம். அவள் தன் கணவனின் தங்கையாம். நங்கை என்பாளும் அவள். அதனால், அவளை மக்கள் நாத்துணையாள் (நாத்தினாள்) என்றனர். அது பழந்தமிழ்ச் சொல்லின் சிதைந்த வடிவு. ""நாத்தூண் நங்கை'' என்பார் இளங்கோவடிகள்.

"இறைவன் சொல்லாக இருந்தான்; அவனோடு சொல் இருந்தது' என்பது விவிலியம்.

""இறைவன் சொல்; இறைவி சொல்லின் பொருள்'' என்பது தமிழ் நெறி. சொல் என்பதற்கு வியப்பான ஒரு பொருள் "கள்' என்பது. அதனைச் "சொல் விளம்பி' என்பது, கட்குடியர் சொல்வது. சொல்லக் கூடாதவற்றை யெல்லாம் மதுவைக் குடித்தால் கூறிவிடுவான்! அப்பொருள், காவல் துறைக்கு வாய்த்த அரும் பெரும் பொருள், துப்புத் துலக்க!
--------------*****************----------------



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக