புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பொதுப் பலன்கள்
புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12.00-க்கு 1.1.2014-ம் ஆண்டு பிறக்கிறது.
எண் ஜோதிடப்படி ஆன்மிகம், பகுத்தறிவுக்குரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் (2+0+1+4=7) இந்த ஆண்டு பிறப்பதால் மக்கள் எதிலும் மாற்றத்தை விரும்புவார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கத் துணிவார்கள். ஆன்மிகத்தின் ஆழத்தையும் எளிதாக உணர்வார்கள். மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும்.
கெஜகேசரி யோகத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் கல்வித்துறை மேம்படும். போலி கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்படும். புதிய பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மதிப்பெண் முறைகள் நடைமுறைக்கு வரும். ஆசிரியர்களுக்குச் சம்பளம் உயரும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்த புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும். மருத்துவம், ஆடிட்டிங், சட்டம், மெக்கானிக் ரோபோ இன்ஜினீயரிங் படிப்புகள் பிரபலமடையும். அறிவியலறிஞர்கள் உருவாவார்கள். இந்தியா அதிநவீன ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் ஏவும். குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைந்திருப்பதால் நாகரிகமற்ற வகையில் அரசியல்வாதிகளின் அணுகுமுறை இருக்கும். மக்களிடம் சேமிப்பு குறையும். தங்கம் விலை அதிகமாகும். இந்தியாவின் தங்கப் பயன்பாட்டு சதவிகிதம் வருடத்தின் முற்பகுதியில் குறைந்து, பிற்பகுதியில் கூடுதலாகும். வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தமுடியாமல் பலரும் சிரமத்துக்குள்ளாவார்கள். வங்கிகளின் வட்டி விகிதம் உயரும்.
பாலியல் குற்றங்கள், பலாத்காரங்கள் குறையும். ஆனால், பெண் ஆதிக்க கிரகமான சுக்ரன் வக்கரித்து நிற்பதால், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகமாகும். இரண்டாவது திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை கூடும். சாலை விபத்துகளாலும், மனஉளைச்சலாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும். உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களும், ஆட்சிக் கவிழ்ப்புகளும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளும் பெருகும். பல தொழிற்கூடங்கள் மூடப்படும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வாகனங்களின் விலை விழும். ஆனால், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிலையற்றதாகி, உயரும். முறையற்ற உறவு முறை அதிகரிக்கும். சுமங்கலிப் பெண்கள் பாதிப்படைவார்கள்.
21.6.2014 வரை, கலைகளுக்குரிய கிரகமான சுக்ரனின் வீட்டில் சனியும் ராகுவும் தொடர்வதாலும், 18.10.14 முதல் 15.12.14 வரை சுக்ரன் பலவீனமாவதாலும், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்கள் பாதிப்படைவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சிரமப்படுவார்கள். வீடுகளின் விற்பனை குறையும். கட்டட விபத்துகள் அதிகரிக்கும். பசுக்கள் புதுவித நோயால் பாதிப்படையும். ஆடு மற்றும் நாய்களும் வைரஸால் பாதிப்படையும். அறுவடைக் காலத்தில் மழை அதிகரிக்கும். வருட தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செவ்வாய் பலவீனமடைவதால், ரியல் எஸ்டேட் விழும். ஆனால், செவ்வாய் 2.9.2014 முதல் வலுவடைவதால், அதுமுதல் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஐசான் வால் நட்சத்திர இயக்கத்தால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசியலில் திடீர் திருப்பங்களும், மாறுபட்ட கூட்டணியும் அமையும். இந்தியா அண்டை நாடுகளுடன் மறைமுக யுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். ஆட்சியாளர்கள் நிம்மதியிழப்பார்கள்.
பரிகாரம்:
நியாயத்துக்கும், நேர்மைக்கும், பக்தி மார்க்கத்துக்கும் உரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், அழியும் நிலையிலுள்ள ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைப் புதுப்பிக்க உதவுங்கள். தவறான வழியில் வரும் சொத்து, சுகங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.
புதன் கிழமை, தேய்பிறையில் அமாவாசை திதியில் கீழ்நோக்கு கொண்ட மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்யா லக்னத்தில், விருத்தி நாமயோகம், சதுஷ்பாதம் நாமகரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக நன்னாளில் நள்ளிரவு மணி 12.00-க்கு 1.1.2014-ம் ஆண்டு பிறக்கிறது.
எண் ஜோதிடப்படி ஆன்மிகம், பகுத்தறிவுக்குரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் (2+0+1+4=7) இந்த ஆண்டு பிறப்பதால் மக்கள் எதிலும் மாற்றத்தை விரும்புவார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கத் துணிவார்கள். ஆன்மிகத்தின் ஆழத்தையும் எளிதாக உணர்வார்கள். மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும்.
கெஜகேசரி யோகத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் கல்வித்துறை மேம்படும். போலி கல்வி நிறுவனங்கள் ஒதுக்கப்படும். புதிய பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மதிப்பெண் முறைகள் நடைமுறைக்கு வரும். ஆசிரியர்களுக்குச் சம்பளம் உயரும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்த புதுச் சட்டங்கள் அமலுக்கு வரும். மருத்துவம், ஆடிட்டிங், சட்டம், மெக்கானிக் ரோபோ இன்ஜினீயரிங் படிப்புகள் பிரபலமடையும். அறிவியலறிஞர்கள் உருவாவார்கள். இந்தியா அதிநவீன ஏவுகணைகளையும், செயற்கைக் கோள்களையும் ஏவும். குரு கேந்திராதிபத்திய தோஷம் அடைந்திருப்பதால் நாகரிகமற்ற வகையில் அரசியல்வாதிகளின் அணுகுமுறை இருக்கும். மக்களிடம் சேமிப்பு குறையும். தங்கம் விலை அதிகமாகும். இந்தியாவின் தங்கப் பயன்பாட்டு சதவிகிதம் வருடத்தின் முற்பகுதியில் குறைந்து, பிற்பகுதியில் கூடுதலாகும். வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தமுடியாமல் பலரும் சிரமத்துக்குள்ளாவார்கள். வங்கிகளின் வட்டி விகிதம் உயரும்.
பாலியல் குற்றங்கள், பலாத்காரங்கள் குறையும். ஆனால், பெண் ஆதிக்க கிரகமான சுக்ரன் வக்கரித்து நிற்பதால், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை அதிகமாகும். இரண்டாவது திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை கூடும். சாலை விபத்துகளாலும், மனஉளைச்சலாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும். உலகெங்கும் இயற்கைச் சீற்றங்களும், ஆட்சிக் கவிழ்ப்புகளும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளும் பெருகும். பல தொழிற்கூடங்கள் மூடப்படும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வாகனங்களின் விலை விழும். ஆனால், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிலையற்றதாகி, உயரும். முறையற்ற உறவு முறை அதிகரிக்கும். சுமங்கலிப் பெண்கள் பாதிப்படைவார்கள்.
21.6.2014 வரை, கலைகளுக்குரிய கிரகமான சுக்ரனின் வீட்டில் சனியும் ராகுவும் தொடர்வதாலும், 18.10.14 முதல் 15.12.14 வரை சுக்ரன் பலவீனமாவதாலும், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்கள் பாதிப்படைவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சிரமப்படுவார்கள். வீடுகளின் விற்பனை குறையும். கட்டட விபத்துகள் அதிகரிக்கும். பசுக்கள் புதுவித நோயால் பாதிப்படையும். ஆடு மற்றும் நாய்களும் வைரஸால் பாதிப்படையும். அறுவடைக் காலத்தில் மழை அதிகரிக்கும். வருட தொடக்கம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செவ்வாய் பலவீனமடைவதால், ரியல் எஸ்டேட் விழும். ஆனால், செவ்வாய் 2.9.2014 முதல் வலுவடைவதால், அதுமுதல் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஐசான் வால் நட்சத்திர இயக்கத்தால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசியலில் திடீர் திருப்பங்களும், மாறுபட்ட கூட்டணியும் அமையும். இந்தியா அண்டை நாடுகளுடன் மறைமுக யுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். ஆட்சியாளர்கள் நிம்மதியிழப்பார்கள்.
பரிகாரம்:
நியாயத்துக்கும், நேர்மைக்கும், பக்தி மார்க்கத்துக்கும் உரிய கிரகமான கேதுவின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், அழியும் நிலையிலுள்ள ஆன்மிகப் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைப் புதுப்பிக்க உதவுங்கள். தவறான வழியில் வரும் சொத்து, சுகங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.
கொள்கைப் பிடிப்பு கொண்ட மேஷராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பண வரவு அதிகரிக்கும்; செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பிதுர் வழி சொத்து கைக்கு வரும்.
வருடப் பிறப்பின்போது ராசிநாதன் செவ்வாய் 6-ல் பலம் பெற்று அமர்ந்திருப்பதால், மனப்போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவர். பாக்கி பணத்தைக் கொடுத்து புதிய சொத்தை பத்திரப்பதிவு செய்வீர்கள். உடன் பிறந்த வர்களால் உதவிகள் உண்டு. அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும்.
புத்தாண்டு பிறப்பின்போது புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பர். வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடக்கும்.மகனுக்கு நல்ல வேலையும், வாழ்க்கைத் துணையும் அமையும்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்ப தால், புதிய முயற்சிகள் தள்ளிப்போகும். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை குரு 4-ல் வீட்டிலேயே அமர்வதால், இழுபறியான காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு
சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சொத்து வாங்கும்போது, சட்ட நிபுணர்களை ஆலோசித்து முடிவெடுக்கவும்.
4.2.14 முதல் 24.3.14 வரை; 16.7.14 முதல் 14.10.14 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் சிறு விபத்து, உடன்பிறந்தோருடன் மனக்கசப்பு வந்து நீங்கும். 20.6.14 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் ஏற்பட லாம். மனைவிக்கு தைராய்டு போன்ற பிரச்னைகள் வந்து செல்லும். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை, உங்கள் ராசியைவிட்டு கேது விலகி, 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைகள் வந்து சேரும். மனைவியுடனான மோதல்கள் நீங்கும். அவருடைய ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடை விலகும். சுப நிகழ்ச்சிகள் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்த ஆண்டில் சனி 7-ல் நின்று கண்டகச் சனியாகவும், 18.12.14 முதல் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் தம்பதிக்கு இடையே சச்சரவுகள் எழும். கவனக் குறைவால் ஆபரணங்களை இழக்க நேரிடும். எவருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். அரசுக்கு வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். புதியவர்களிடம் கவனமாகப் பழகவும்.
வியாபாரிகளே! அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். தொழில் ரகசியத்தைக் காப்பாற்றுங்கள். பாக்கிகளை கஷ்டப்பட்டு வசூலிப்பீர்கள். துணி, சிமென்ட், செங்கல் சூளை வகைகளால் லாபம் அடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்கு தாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.
உத்தியோகஸ்தர்கள், கூடுதல் நேரம் உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிப்பு உண்டு. சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்கள் ஜூனியர்களிடம் வேலை வாங்குவது கஷ்டமாக இருக்கும். இடமாற்றங்கள் உண்டு. சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.
கன்னிப்பெண்கள், போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்களுக்கு மந்தம், மறதி வந்து நீங்கும். விரும்பிய பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மாநில அளவில் பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர், கிடைக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அனுபவ அறிவாலும், சாமர்த்தியத்தாலும் உங்களை வெற்றி பெற வைக்கும்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு 6-ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக இருக்கும்போது 2014 பிறக்கிறது. தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை- ஆபரணச் சேர்க்கை உண்டு. 8-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், திடீர் பயணங்கள் ஏற்படும். சிறு சிறு விபத்து களும் உண்டாகலாம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அரசாங்க விஷயம் சாதகமாகும்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால் 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 3-ம் வீட்டில் அமர்வதால் வேலைகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். முக்கிய கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ராகுவும் ஜூன்- 20 வரை 6-ல் நிற்பதால் மறைமுக எதிரிகளாலும் ஆதாயம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்கு கூடும். கௌரவ பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிருங்கள்.
இந்த ஆண்டு முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே நீடிப்ப தால் எதிரிகளும் நண்பர்களாவர். தடைப்பட்டிருந்த வீட்டுப் பணியை மீண்டும் துவங்க, வங்கிக் கடன் கிடைக்கும். சொத்து சேரும். தந்தையுடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருடைய பிணிகள் எல்லாம் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வருடத்தின் இறுதியில் 18.12.14 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறார். தம்பதிக்கு இடையே விட்டுக் கொடுத்துப் போகவும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி வந்துபோகும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுச் செயல்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகள், உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். சம்பளம் உயரும்.
கன்னிப்பெண்களுக்கு சமயோசித புத்தி அதிகரிக்கும். கல்வி மேம்படும். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
மாணவர்களே! பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். நீங்கள் எதிர்பா
ர்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்கள் சிலருடைய சுயரூபத்தை இப்போது உணருவீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள கீரை- காய் வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு, அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வாய்க்கும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவார்கள். கலைத் துறையினருக்கு, உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, உங்களின் செயல் வேகத்தை அதிகப்படுத்துவதுடன், புதிய முயற்சி களில் வெற்றி தருவதாக அமையும்.
நேர்மைவாதிகள் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் 2014-ம் ஆண்டு பிறக்கிறது. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். உங்கள் ராசிநாதன் புதன் 7-ல் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆபரணங்கள் சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
12.6.14 வரை ஜென்ம குருவாக இருப்பதால் வேலைச் சுமை இருக்கும். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை, குரு 2-ம் வீட்டில் தொடர்வதால், பண வரவு உண்டு. பிரிந்த தம்பதி ஒன்றுசேருவீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால், பிரச்னைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை, உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை- கால் வலி வந்துபோகும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு முழுக்க சனி 5-ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் விலகியிருங்கள்.
18.12.14 முதல் 6-ம் வீட்டில் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வர். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.
வியாபாரிகளுக்கு, பற்று- வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறார் வேண்டாம். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாகச் சேர்க்கப் பாருங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு, ஜூன் 21-ம் தேதி முதல் கேது 10-ல் அமர்வதால் சின்ன சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை- நிறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பளப் பாக்கி வந்து சேரும்.
கன்னிப்பெண்கள், தங்களின் பலம்- பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும்.
மாணவர்களே! உங்களின் தனித் திறமையை வெளிப் படுத்த முயற்சி செய்யுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள். அதிகாலையில் எழுந்து படிப்பது, உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகள், தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். சுற்றியிருக்கும் சகாக்கள் சிலர், உங்கள் மீது அதிருப்தி அடைவதற்கு வாய்ப்பு உண்டு. நேசத்துடன் நடந்துகொள்ளுங்கள். கலைத் துறையினருக்கு, சின்னச் சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள். உங்களின் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில், இந்த 2014-ம் ஆண்டின் முற்பகுதி, உங்களுக்கு நிம்மதியற்ற அனுபவங்களைத் தருவதுபோல் இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதி உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.
அரவணைத்துப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். உங்கள் யோகாதிபதி செவ்வாய், ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும்போது 2014 புத்தாண்டு பிறக்கிறது. திடீர் யோகம், பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புற நகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.
உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். ராசிக்கு 6-ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்ப தால் உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
ஜுன் 12-ம் தேதி வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் இருக்கும். சிக்கனம் தேவை. எவருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை, ஜென்ம குருவாக திகழ்வதால், ஆரோக்கியம் பாதிக்கும். வேலை அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்கவேண்டாம். தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சிறு சிறு அவமானங்கள், மறைமுக எதிர்ப்புகள் உருவாகும்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ல் ராகுவும் நீடிப்பதால் அதிக வேலைகளால் அவதிக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகுத் தண்டு வடத்தில் வலி, தலைசுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. ஜூன் 21 முதல் வருடம் முடியும் வரை, ராசிக்கு 9-ல் கேது தொடர்வதால், பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால், மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்த புத்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால். மனத்தாங்கல் காரணமாக தாயாரைப் பிரிய நேரிடும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்துமோதல்கள் வரும். வெளியூர் கிளம்பும்போது, வீட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு களில் கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு, இந்தப் புத்தாண்டில் ஏற்ற -இறக்கங் கள் இருக்கும். ஜூன் மாதம் முதல் ஜென்ம குரு தொடங்கு வதால், புதியவரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். எவருக்கும் முன்பணம் தர வேண்டாம். பங்குதாரர்களுடன் பிரிவு வரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலை யற்ற சூழல் உருவாகும். மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். சிலர், உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வார்கள்.
கன்னிப்பெண்கள், பெற்றோருக்குத் தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள், கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். அரசியல்வாதிகள், தனி ஆவர்த்தனம் செய்யவேண்டாம். கட்சி மேலிடத்து விஷயங்களில் ரகசியம் காக்கவும். கலைத் துறையினரே! உங்கள் படைப்புகள் குறித்து வெளியே விவாதிக்கவேண்டாம்.
மொத்தத்தில், இந்த 2014-ம் ஆண்டும் சுற்றியிருப்பவர் களின் சுயநலத்தை உணரவைப்பதாக இருப்பதுடன், இடம் மற்றும் சூழல் அறிந்து செயல்படும் அவசியத்தை உணர்த்துவதாகவும் அமையும்.
தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர் நீங்கள். இந்தப் புத்தாண்டு, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறக்கிறது. அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுரியமான பேச்சால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கடன்கள் ஓரளவு அடைபடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
உங்கள் ராசிக்கு 5-ல் புதன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். வருடப் பிறப்பு முதல் ஜூன் 12-ம் தேதி வரை, குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், செல்வம், செல்வாக்கு கூடும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லவிதத்தில் முடியும். 13.6.14 முதல் வருடம் முடியும்வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எவருக்காகவும் சாட்சிக் கையப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர் களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்துபோகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். ஆனால், 3-ல் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். திட்டவட்டமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் ஒத்துழைப்பார். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும்.
ஜூன் 21 முதல் வருடம் முடியும்வரை, ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வாகனத்தில் புறப்படுமுன் எரிபொருள், பிரேக் போன்றவற்றை சோதித்துக் கொள்ளுங்கள். மற்றவர் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
இந்தப் புத்தாண்டில் சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். பழைய மனையை எதிர்பார்த்த விலைக்கு விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு.
வருட இறுதியில் 18.12.14 முதல் 4-ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாகவும் வருவதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பணப்பற்றாக்குறையும் உண்டு.
வியாபாரம் செழிக்கும். சிலர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியால், மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப் பார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, காய்கறி, ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்களின் தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும். கன்னிப் பெண்களுக்குக் கல்யாணம் கூடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு, படிப்பில் முன்னேற்றம் உண்டு. கலைப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகள், மக்களின் நல்லபிமானத்தைப் பெறுவர். கலைத் துறை யினரின் படைப்புகளுக்கு பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு, நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.
நுணுக்கமான செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பண வரவு உண்டு. வழக்கு சாதகமாகும். வீடுகட்டும் பணி மீண்டும் துவங்கும். தாய் வழிச் சொத்துக்களைப் பெறுவதில், தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.
வருட பிறப்பின்போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதங்கள் எழலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துகொள்வர். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களைச் சரிபார்க்கவும். வாகன விபத்துகள் ஏற்படலாம். புத்தாண்டு பிறக்கும்போது, சுக்கிரன் உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தான மான 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால், வேலைகள் அதிகமாகும். மறைமுக அவமானம், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.
13.6.14 முதல் வருடம் முடியும்வரை, குரு லாப வீட்டில் அமர்வதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர் கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். பழைய கடன் பிரச்னை மனத்தை வாட்டும். 21.6.14 முதல் வருடம் முடியும்வரை, உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு வந்துசெல்லும். மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.
வருட இறுதியில் 17.12.14 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச்சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல், காது வலி வந்து நீங்கும். கண் பரிசோதனை அவசியம். பிள்ளைகளை விட்டுப்பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும்.
எவருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். 18.12.14 முதல் சனி 3-ல் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தைரியம் கூடும்.
வியாபாரிகளுக்கு, இந்தாண்டு பற்று- வரவு உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப் பேசுவர். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவர். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமென்ட், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, ஜூன் 12-ம் தேதி வரை வேலைச் சுமை வாட்டும். 13-ம் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். சம்பளம், பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னிப்பெண்களே! நிஜம் எது, நிழல் எது என்பதைத் தெளிவாக உணர்வீர்கள். கல்யாணம் கூடி வரும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர் கள் மத்தியில் பாராட்டப்படுவார்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகள், எதிர்க் கட்சி யினரும் மதிக்கும்படி செயல்படுவர். கலைத் துறையினர், புதுமையான படைப்புகளால் கவனம் ஈர்ப்பார்கள்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டின் முற்பகுதி அலைச்சல், ஆரோக்கிய குறைவைத் தந்தாலும், பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தருவதாக அமையும்.
சமாதானத்தை விரும்புபவர் நீங்கள். உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும்.
12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ல் இருப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.
ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும்வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். சட்டத்துக்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். ஜூன் 20-ந் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள்.
21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள்.
இந்த ஆண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 2-ல் அமர்ந்து பாதச் சனியாகவும் வருவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என யோசிக்க வைக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமித்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். முக்கிய காரியங்களுக்காக இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல், நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். அரிசி, பூ, எலெக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! ஜூன் 12-ந் தேதி வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால் ஜூன் 13-ந் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக் கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது.
கன்னிப்பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள்.
மாணவர்களே! பொறுப்பாகப் படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். கவனம் தேவை!
அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் விரக்தியடையாதீர்கள். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.
இந்த 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னேற்றத்தையும் வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.
தன்மானம் மிகுந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், பணவரவுக்குக் குறைவிருக்காது. தடைப்பட்ட கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி ஏற்பாடாகும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 4.2.14 முதல் 24.3.14 வரை மற்றும் 16.7.14 முதல் 1.9.14 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால் ஆரோக்கிய குறைவு, சிறுசிறு விபத்துகள், சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.
2.9.14 முதல் செவ்வாய் வலுவடைவதால் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவார்கள்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால், செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால், நண்பர்கள், உறவினர்களின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். 21.6.14 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு.
இந்த ஆண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகவும் வருடத்தின் இறுதியில் 18.12.14 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச் சுமை இருக்கும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அவற்றைச் சரியாக பின்பற்றாமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னை அச்சம் தரும். இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உட்கொள்வது நல்லது.
வியாபாரிகளே! ஜூன் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கன்ஸ்டரக்ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! ஜூன் 12-ம் தேதி வரை கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையெனப் புலம்புவீர்கள். ஜூன் 13 முதல், மதிப்பு கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பதவி உயர்வுக்காக சில தேர்வுகளை எழுதத் திட்டமிடுவீர்கள்.
கன்னிப் பெண்களுக்கு உயர்கல்வி அவர்கள் எதிர்பார்த்த படி அமையும். நல்ல வரனும் அமையும். மாணவர்கள் கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவர். அரசியல்வாதிகள் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவர். கலைத் துறையினர், வதந்திகளிலிருந்து விடுபடுவர்.
மொத்தத்தில் இந்த 2014-ம் ஆண்டு மனநிம்மதியையும், வசதி- வாய்ப்புகளையும், சமூகத்தில் அந்தஸ்தையும் தருவதாக அமையும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|