புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் நீங்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ல் நிற்பதால், இழுபறியான வேலைகள் முடியும். வருடப் பிறப்பின்போது செவ்வாய் 10-ல் நிற்பதால், புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வீடு- மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
12.6.14 வரை உங்கள் ராசிநாதன் குரு 7-ல் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். அழகு, அறிவு கூடும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். திடீர்ப் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாகக் கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 5-ல் கேது நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள சுமைகளைத் தூக்க வேண்டாம். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 21.6.14 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்காலம் பற்றிய கவலை அடிமனத்தில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு முழுக்க சனி லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். வீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரயச் சனி தொடங்குவதால், உங்களின் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.
வியாபாரிகள் போட்டிகளையும் தாண்டி லாபம் பெறுவர். அயல்நாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். ஸ்டேஷனரி, ஃபேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு, ஜூன் 12-ம் தேதி வரை அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். 13-ம் தேதி முதல் அதிகம் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்கக் கொஞ்சம் போராட வேண்டி வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தள்ளிப் போகும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும்.
கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித்தள்ளுவீர்கள்.
மாணவர்களே! சாதித்துக்காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது; அதற்கான உழைப்பு வேண்டும். பாடங்களை அன்றன்றே படியுங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமையின் ஆதரவால் கட்சியில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்ச மாட்டீர்கள். புகழடைவீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, கடந்த ஆண்டை விட அதிக பண வரவையும், செல்வாக்கையும், பதவிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பண்பாட்டை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். உங்கள் ராசிக்குள்ளேயே உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்ல வீடு அமையும்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நிறைவேறும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால், வேலைச்சுமை இருந்துகொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ல் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். உற்சாகம் அடைவீர்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.
21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.
இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும், உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துசெல்லும். ஆனால் வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பண வரவு உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
வியாபாரிகளுக்கு, ஜூன் மாதம் முதல் வியாபாரம் சூடு பிடிக்கும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை
வாங்குவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது பங்கு தாரரால் பயனடைவீர்கள். கணினி உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும், 10-ல் சனி தொடர்வதால் மறைமுகப் பிரச்னைகள் இருக்கும். ஜூன் மாதம் முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
கன்னிப் பெண்கள் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும்.
அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி செயல்படுவார்கள். கலைத்துறையினர், யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.
நேர்மறை எண்ணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக்காட்டுவீர்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் போராட்டங் களைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.
வருடம் பிறக்கும்போது ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், சின்னச் சின்ன விபத்துகள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். எவருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்ப தால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர் பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும்.
13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால், சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். 20.6.14 வரை உங்கள் ராசிக்கு 3-ல் கேது நிற்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராசிக்கு 9-ல் ராகு நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்து செல்லும்.
21.6.14 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-லும், ராகு 8-லும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனி 9-ல் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 10-ல் அமர்வதால், வீரியத்தை விட காரியம்தான் பெரிது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். புதுப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரிகளுக்கு லாபம் சுமாராக இருக்கும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்கள் ஜூன் 12-ம் தேதி வரை பணிகளை தொய்வின்றி முடிப்பீர்கள். 13-ம் தேதி முதல் உங்களையும் அறியாமல் ஒருவித பயம் இருந்துகொண்டேயிருக்கும். அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
கன்னிப்பெண்களின் ஆசைகள் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை. எதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய்ச் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாணப் பேச்சு வார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும்.
மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெறுவதற்குப் போராட வேண்டும். அதிக செலவு செய்யவும் நேரிடும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும். கலைத்துறையினர்களே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
மனத்தில் பட்டதை மறைக்காமல் பேசுபவர் நீங்கள்.உங்கள் ராசிக்கு 10-ல் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிப்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். வீடு- வாகனம் அமையும்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும்போது பிறப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதுப்பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு.வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
12.6.14 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் பதற்றம் கூடும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 13.6.14 முதல் வருடம் முடியும் வரை குரு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் மன இறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு.
வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.
20.6.14 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரயம், இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்து செல்லும்.
21.6.14 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ல் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.
இந்த ஆண்டு முழுக்க சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால், அவ்வப்போது கோபப்படுவீர்கள். இழந்த தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. முன்பின் தெரியவாதவர்களிடம், குடும்ப அந்தரங்க விஷயங் களைச் சொல்லி ஆதாயம் தேடாதீர்கள். பெரிய நோய்க்கான அறிகுறிகள் எல்லாம் இருப்பதைப்போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும்போது பெரிய பாதிப்புகள் இருக்காது. என்றாலும், கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும். வருட இறுதியில் 18.12.14 முதல் சனி 9-ல் அமர்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
வியாபாரிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். ஜூன் மாதத்திலிருந்து போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி, என்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி வரை அலுவலகத்தில் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஜூன் - 13 முதல் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னிப்பெண்கள், தடைப்பட்ட கல்வியை தொடர்வார்கள். மே மாதம் வரை அலைச்சல், டென்ஷன் இருக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். திருமணம் கூடி வரும். மாணவர்கள் கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவார்கள். போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். கலைத்துறையினர், வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, அனுபவ அறிவால் உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.
புத்தாண்டில் சகல நலன்களும் பெருகட்டும்!
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எல்லா நன்மைகளையும் பெற்று வளமுடன் வாழ வேண்டியே, அருணகிரிநாதர் திருப்புகழ் அருளிச் சென்றுள்ளார். கந்தக் கடவுளின் புகழ்பாடும் திருப்புகழில் அனுதினமும் சில பாடல்களையாவது படித்து, வேலவனை வழிபட, வினைகள் யாவும் நீங்கும். வேண்டும் வரம் கிடைக்கும். புத்தாண்டு முதல் சகல வளங்களும் பெற்று, நாம் வாழ்வில் ஏற்றம்பெற கீழ்க்காணும் பாடல்களைப் பாடி, கந்தனை வழிபடுவோம்.
திருமணம் நடக்க...
விறல்மாறன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தம்தம் வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீரக்
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
கல்வியில் சிறக்க...
ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
அந்திபகல் அற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை
அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
செல்வம் பெற... அனுபவிக்க...
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்கம் உறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறைஇ வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி மணிஅணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்பம் அணிவோனே
தருணம் இதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியும் நீகொ டுத்து
தவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்மம் அதுநிதமு கேது திக்க
அறியதமிழ் தான் அளித்த மயில்வீரா
அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது தித்த
அழக! திரு வேர கத்தின் முருகோனே!
செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை தினங்களில் முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் பெருகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி சிவா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|