புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_c10என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_m10என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_c10என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_m10என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_c10என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_m10என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:39 am

தினமலர் விமர்சனம்

என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம் BRjdUwyGTbCmnZNVfomG+Endrendrum-Punnagai

நண்பன் படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள். இந்தப்படத்தில் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் நண்பர்கள் கிட்டத்தட்ட இதுவும் நட்பை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான்!

கதைப்படி, ஹீரோ ஜீவாவிற்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. காதல் என்றாலே கடுப்பு! காரணம், அவரது அப்பாவை விட்டு எஸ் ஆன அவரது அம்மா! அதனால் காதல், கன்னியர் என்றாலே கடுப்பாகும் ஜீவாவுடன், சிறுவயது முதலே நட்பில் இருக்கும் சந்தானமும், வினய்யும், ஜீவாவுக்காக காதலிப்பது இல்லை, திருமணம் செய்து கொள்வதில்லை... எனும் உறுதியுடன் ஒரே படிப்பு, ஒரே குடிப்பு, ஒரே மாதிரி வேலை, ஒரே அலுவலகம், ஒரே படுக்கை... என நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை சலித்துப்போய் நண்பர்கள் சந்தானம், வினய் இருவரும் தங்கள் பெற்றோர் சொல்படி கல்யாணம் கட்டிக்கொண்டு இல்வாழ்க்கையில் இறங்க, விளம்பர பட இயக்குநரான ஜீவா தனிமையில் தவிக்கிறார்.

அதேநேரம் அவரது அலுவலகத்திற்கு இவரது அஸிஸ்டண்டாக வரும் த்ரிஷா, இவரை ஒரு தலையாக காதலிக்கிறார். ஏற்கனவே விளம்பர மாடல் ஆண்ட்ரியா, ஜீவாவிடம் அவரது காதலை முத்தமாக வெளிப்படுத்தி மொத்தமாக வாங்கிகட்டிக் கொண்டது தெரியும் என்பதால் த்ரிஷா, தன் காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வளைய வருகிறார். ஜீவாவிற்கு, த்ரிஷாவின் காதல் தெரிந்ததா? ஜீவாவின் பெண்கள் மீதான கோபம் குறைந்ததா? த்ரிஷா மீது காதல் மலர்ந்ததா.? இல்லையா? என்பது மீதிக்கதை!

இந்தகதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் படமாக்க முடியுமோ? அத்தனைக்கு அத்தனை காமெடியாகவும், கலர்புல்லாவும், அதேநேரம் கமர்ஷியலாகவும் படமாக்கி என்றென்றும் புன்னகை படத்தை எக்குத்தப்பாக எகிற வைத்து இருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்!

கையில் மதுக்கோப்பை, கண்ணில் மதுபோதை, நக்கல் பேச்சு, நச் என்ற கோபம்... என வழக்கம் போலவே தன் பாணி நடிப்பில் இந்தப்படத்தையும் தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார் கெளதம் பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகர் ஜீவா. இவரது அம்மா, அப்பா நாசரை விட்டு ஓடிப்போனவர்... என்று நண்பர்கள் கலாய்க்கும் போது அவர் படும் வேதனை, கோபம், ஏற்கும் சபதம் எல்லாம் அவரது முகத்தில் கலவையாக சேர்ந்து திரையில் எதிரொளிக்கும் சீன்கள் போதும், ஜீவாவின் நடிப்பிற்கு கட்டியம் கூற!

பேபி சந்தானத்தின் காமெடி சரவெடிகள் தான் என்றென்றும் புன்னகை படத்தின் ஹைலைட்! குடித்துவிட்டு வந்து குடிக்கவில்லை... என கோணலாக சாய்ந்தபடி பொண்டாட்டி முன் அவர் அடிக்கும் லூட்டியிலாகட்டும், எங்க வீட்டு நாய் செத்து போனதை எங்கம்மாவால ஜீரணிக்கவே முடியலை... என்று மனைவி சொல்லி முடிப்பதற்குள் உங்கம்மாவை யாரு? செத்துபோன நாயை சாப்பிட சொன்னது? எனக்கேட்டு கலாய்ப்பதிலாகட்டும், கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி, வெளியில இருக்கிறவனுக்கு எப்படா உள்ளே போகலாங்கற மாதிரி இருக்கும், உள்ளே இருக்கிறவனுக்கு எப்போ வெளியில வருவோம் என்பது மாதிரி இருக்கும்! அதுதான் கல்யாணம் என்று போகிற போக்கில் ஜோக்கடிபதில் ஆகட்டும், சந்தானத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம்!

ஜீவா, சந்தானம் மாதிரி வினய்யும் மற்ற படங்களைக்காட்டிலும் இதில தன் பங்கை சரியாகவே செய்திருக்கிறார். த்ரிஷா, ஆண்ட்ரியா என இரண்டு நாயகிகள் எனினும் த்ரிஷாவின் நடிப்பும், ஜொளிப்பும் ஒரு சுத்து தூக்கல்!

ஜெகன், நாசர் உள்ளிட்டவர்களும் பலே சொல்லுமளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் எல்லோரையும் கலாய்க்கும் சந்தானத்திற்கே ஜெகன் கடுக்கன் கொடுப்பதும், நியூசிலாந்து பார்ட்டியில் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் அண்ட் சன்னி என தங்கள் பாஸை கலாய்ப்பதிலும் ஜெகன் நிற்கிறார்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசை, ஆர்.மதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ஐ.அஹமத்தின் எழுத்து, இயக்கத்தில் ஆரம்பகாட்சிகளில் இது ஏதோ ஆணுக்கு ஆண் எனும் கொச்சையான உறவை வலியுறுத்தும் ஹே படமோ! எனும் மாயை உடைத்தெறிந்து எல்லாம் காமெடிக்குத்தான் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவது பலம்!

ஆகமொத்தத்தில் என்றென்றும் புன்னகை - வெடிச்சிரிப்பு - காதல் கவிதை!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:45 am

என்றென்றும் புன்னகை – திரை விமர்சனம்

ஜீவா சிறுவயதாக இருக்கும்போதே அவருடைய தாய், வேறு ஒருவருடன் ஓடிச் சென்றுவிடுகிறார். இதனால் தந்தை நாசரின் அரவணைப்பில் வாழும் ஜீவா, பெண்களைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறார். இவர் சென்னையிலுள்ள பள்ளியில் சேரும் போது வினய்யும், சந்தானமும் நண்பர்களாகின்றனர். மூவரும் ஒன்றாக சுற்றித் திரிந்து வருகின்றனர்.

மூவரும் பெரியவர்களானதும் விளம்பர கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்று மூவரும் சபதம் போட்டுக்கொண்டு ஜாலியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விளம்பரக் கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கும் கம்பெனியில் இருந்து இவர்களது விளம்பரத்தை கண்காணிக்கும் பொருட்டு இவர்களுடன் சேர்கிறார் திரிஷா.

இப்படி ஜாலியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஒருநாள் திடீரென்று சந்தானமும், வினய்யும் காணாமல் போய்விடுகிறார்கள். பின்னர் சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து தாங்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக ஜீவாவிடம் கூறுகின்றனர். ஆனால், இதை ஜீவா ஏற்க மறுத்து அவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்.

தன்னை கவனிப்பதாக கூறி மறுமணம் செய்துகொண்ட தனது தந்தையிடம் நெடுநாளாக பேசாத ஜீவா, தற்போது நண்பர்களும் பிரிந்த சோகத்தில் தனிமையில் தவிக்கிறார். இந்த நேரத்தில் திரிஷாவுடனான தொடர்ந்த இவரது நட்பு, மெல்ல மெல்ல காதலாக உருவெடுக்கிறது.

இறுதியில், தனது காதலை திரிஷாவிடம் சொல்லி அவரை கைபிடித்தாரா? பிரிந்த நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இந்த படத்தில் இளமை ததும்பலுடன் நடித்துள்ளார். பெண்களுடன் பேசும்போது கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பதில் பளிச்சிடுகிறார். கிளைமாக்சில் தனது காதலை சொல்லும்போது இவர் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் கைதட்டல் பெறுகிறது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதில் கலக்கியிருக்கிறார். வினய் நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவருடைய நடிப்பும், பாடி லாங்குவேஜும் கடுப்பைத்தான் வரவழைக்கிறது.

சந்தானம் வழக்கம்போல் பேசிக்கொண்டே இருந்தாலும் ஒருசில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். இதுவரை இரட்டை அர்த்த வசனங்களை பேசி கடுப்படித்த சந்தானம் இப்படத்தில் தன் நாவை சிறிது அடக்கி பேசி கவர்ந்திருக்கிறார். திரிஷா நட்பாக பழகுவதாகட்டும், ஜீவாவுடன் காதல் செய்வதாகட்டும் இன்னமும் அதே இளமையுடன், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆண்ட்ரியா தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். ஜீவாவிடம் அடிவாங்கி விட்டு, அவரை தன்னிடம் மன்னிப்பு கேட்க இவர் செய்யும் வித்தைகள் அருமை. கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிகவும் இயல்பாக காட்டியுள்ளார் இயக்குனர். முதல்பாதி இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் சென்றிருக்கிறது. இரண்டாம் பாதிதான் சற்றே சொதப்பியிருக்கிறது. என்றாலும், மோசமான படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார். மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் அவனது ஈகோதான் காரணம் என்று சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

படத்திற்கு இன்னொரு பிளஸ் பாய்ண்ட் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. இவருடைய பாடல்கள் அனைத்தும் கேட்கும்போதும், பார்க்கும் போதும் பரவசமூட்டுகின்றன. பின்னணி இசையிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. மதியின் ஒளிப்பதிவு நிறைவை தருகிறது. பாடல் காட்சிகளிலும், வெளிநாட்டு படப்பிடிப்புகளிலும் தெளிவாக படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘என்றென்றும் புன்னகை’ வாய்விட்டு சிரிக்கலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:47 am

'என்றென்றும் புன்னகை' - தி இந்து

ஜிவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம், வினய், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'என்றென்றும் புன்னகை'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்ய, அஹ்மத் இயக்கியிருக்கிறார். வி.ராமதாஸ், தமிழ் குமரன் தயாரிக்க, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருக்கிறார்கள் ஜிவா, வினய், சந்தானம். விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்கள். திருமணமே செய்துக் கொள்ள மாட்டோம் என்ற முடிவில் இருக்கும் இவர்களது வாழ்க்கையில், விளம்பர பட சம்பந்தமாக த்ரிஷா நுழைய, சபதம் என்னவாகிறது என்பதே கதை.

படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிகவும் கலர் ஃபுல்லாக இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவு செய்திருக்கும் மதி. குறிப்பாக, மாடியின் விளிம்பில் ஜிவா அமர்ந்திருக்கும் போது த்ரிஷா பேசும் காட்சி. மதிக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.

ஜிவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆண்ட்ரியா அனைவருமே தங்களது பணியை அருமையாக செய்திருக்கிறார்கள். ஜிவா - த்ரிஷா இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளை இயக்குநர் அஹ்மத் கையாண்டு இருக்கும் விதம் அழகு.

நீண்ட நாட்கள் கழித்து சந்தானத்தின் காமெடிக்கு சிரிக்க முடிகிறது. இடைவேளைக்கு முன் நண்பர்களோடு சேர்ந்து கலாய்ப்பதும், இடைவேளைக்குப் பின் மனைவியிடம் இவர் மாட்டிக் கொள்வதும் என சந்தானம் இஸ் பேக்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. ஓஹோ ப்ரியா.. ப்ரியா பாடலும், அதனை காட்சிப்படுத்திருப்பதும் அழகு.

படத்தின் பலவீனம் என்றால், அம்மா இன்னொருவருடன் ஓடிவிட்டதால் ஜிவா பெண்கள் என்றாலே அலர்ஜி என்பதும், ஜிவா - நாசர் இருவரும் ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என்பதற்கான காரணமும் சரியாக கையாளப்படவில்லை. 2:31 மணி நேரம் படம் என்பதால் இடைவேளைக்குப் பின் படம் எப்போது முடியும் என்று நினைக்க வைக்கிறது.

மொத்தத்தில், படம் முடிவடையும் போது சிறு புன்னகையோடு கடந்து போக வைக்கிறது இந்த ’என்றென்றும் புன்னகை'


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக