புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
81 Posts - 63%
heezulia
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
1 Post - 1%
viyasan
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
19 Posts - 3%
prajai
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_m10வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:05 pm

வயிராத்தாவின் வாழ்க்கைக் குறிப்பு ! GjE4qXoYSb2dIFftjy6L+avl56a

வயிராத்தா வந்து விட்டாள் என்பதை சமையலறையிலிருந்து கசிந்த மீன் குழம்பின் வாசனையே உணர்த்தி விட்டது. உலகத்தில் உள்ள அத்தனை சமையல்காரர்களையும் நிறுத்தி மீன் குழம்பு வைக்கச் சொன்னாலும், வயிராத்தா குழம்புக்கு ஈடாக, ஒரு ஓரம்கூட வர மாட்டார்கள்.

மீன் குழம்பு என்றில்லை... அவள் ஒரு குப்பைக் கீரையை வதக்கி வைத்தாலும் வாசனையும் ருசியும் ஆளைத்தூக்கும் என்று எங்கள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் அத்தனை பேரும் சத்தியம் செய்வோம். வயிராத்தா கைப்பக்குவத்துக்காகவே லீவுக்கு வீடு செல்லாமல் விடுதியில் தங்கிவிடும் பெண்களும் உண்டு.

விடுதியில் யாருக்காவது ஜுரம் கண்டுவிட்டால், வயிராத்தாவின் மிளகு ரசமும் இஞ்சித் துவையலும் மணப்பதிலேயே...ஜுரம் பாதி சரியாகிவிடும் எங்களுக்கு. அவருடைய சமையல், வயிற்றுக்கு விருந்து மட்டுமல்ல... மனதுக்கு மருந்தும்கூட!

இந்தப் பெரிய நகரத்தில் எனக்கு வேலை கிடைத்த புதிதில் தங்குவதற்கு ஏதுவாக இடம் தேடியபோது, இந்த தனியார் விடுதியைச் சொன்னவர்கள், வயிராத்தாவையும் சேர்த்தேதான் சொன்னார்கள்...

"சாப்பாட்டுக் கவலை வேண்டாம். அங்க வயிராத்தானு ஒரு பொம்பள... அத்தினி ருசியா சமைக்கும். பத்துப் பதினைஞ்சு வருஷமா விடுதியிலேயேதான் தங்கிக்கிடக்கு."

இயல்பிலேயே ருசி தேடும் என் நாக்கு, வந்த சில நாட்களிலேயே வயிராத்தா சமையலில் மயங்கிப் போனது. சமையல் பிடித்துவிட்டால் சமைப்பவர்-களையும் பிடித்து விடும் என்பது மரபுதானே?! வயிராத்தா மேல் எனக்கு தனி ப்ரியம் விழுந்தது. மாநிறமாக வெடவெடவென்று இருப்-பார். வயது ஐம்பதுக்கு மேல் இருக்-கும். மெலிந்த அந்தக் கைகளில்தான் எத்தனை சுவை நரம்புகளோ... அப்படி ஒரு பக்குவம்!

ஒரு வாரமாக ஊருக்குப் போயிருந்த வயிராத்தா-வின் வரவைச் சொன்ன மீன் குழம்பு வாசனையை மோப்-பம் பிடித்தவாறே சமையலறைக்-குச் சென்றேன். "என்னம்மா மாதவி... ஏதாச்சும் காபி வேணுமா?" - பரிவோடு கேட்ட வயிராத்தா ஒரு வாரத்-தில் இளைத்திருந்தார்.

"இல்லை... உங்கள ஒரு வாரமா காணோமேனு-தான் பார்க்க வந்தேன். ஏன் டல்லாயிருக்கீங்க..? உடம்பு முடியலனா சொல்லுங்க டாக்டர்-கிட்ட கூட்டிப் போறேன்!" என்றேன். வயிராத்தா நெகிழ்ந்ததை அவரின் ஈரக் கண்கள் உணர்த்தின. சூழலை இளக்கும் விதமாக, "சரி வயிராத்தா... அடுத்த வாரம் என் பர்த்டே வருது. எனக்காக என்ன ஸ்பெஷல் சமையல் செய்யப் போறீங்க?!" என்றேன். உண்மையான சந்தோஷம் அவர் கண்களில் மின்ன, "பச்சை மசால் குழம்பு வைக்கட்டுமா..?" என்றார்.

"ஹய்யோ... இப்பவே எச்சில் ஊறுது. எங்களுக்கே இப்பிடி விதவிதமா சமைக்கறீங்களே... அப்போ உங்க புருஷன், பிள்ளைங்கயெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க..." - நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். சட்டென்று வயிராத்தா முகம் வாடியது. இத்தனை நாளாக அவருடைய குடும்பம் பற்றி நாங்கள் எதுவும் அறியாததால், சற்று அதிகம் பேசி விட்டோமோ என்றுகூட வருந்தினேன்.

"எனக்கு குடும்பம்னு ஒண்ணு இருந்தாத்தானே..?! நாந்தான் தனிமரமாப் போயிட்டேனே..." - கண்கள் கலங்கின அவருக்கு.

"புருஷன் இருக்கு. என் வயித்துல புழு, பூச்சி இல்லைனாலும் எம்மேல பிரியமாத்தான் இருந்திச்சு. அப்புறம் எங்கூட சண்ட போட்டுட்டு, விரட்டிடுச்சு. இந்த பத்து வருஷமா இந்த ஆஸ்டலயேதான் கிடக்கறேன்..."

"ஏன் சண்டை வயிராத்தா...?"

விரக்தியோடு சிரித்தவர், "என் சமையல் பிடிக்கல, கொழம்பு, பொரியல் சகிக்கலனுதான் நிதம் சண்டை!"

அதிர்ந்து, "உங்க சமையலையா..?" என்றேன் நம்ப-முடியாமல்.

"ஆமாம்மா! நல்ல நாக்குக்கு ருசி தெரியும். குடிச்சுக் குடிச்சு வெந்து போன நாக்குக்கு உப்பு, புளி உறைக்குமா? பெருங்குடிகாரனாப் போயிடுச்சு. குடிச்சுட்டு வந்து எனக்கு அடி உதைதான் நிதமும். கூடவே கெட்ட பொம்பளக சகவாசமும் அதுக்கு சேர்ந்துக்க, என்னை துரத்திடுச்சு..."

நான் வயிராத்தாவை பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்க, தொடர்ந்தார்.

"போன வாரம் ஊருலேருந்து தந்தி வந்துச்சு. போயிப் பார்த்தேன். அது எலும்பும் தோலுமா உருக்குலைஞ்சு கிடந்துச்சு. கஞ்சி ஊத்த நாதியில்ல. காசு உள்ளவரைக்-கும்- கூட இருந்தவளுக, வெத்து ஆளுனு தெரிஞ்சு ஓடிட்டாளுக. குடிச்சுக் குடிச்சு குடல் அழுகிப் போயி-ருக்கு. படுக்கையிலயே ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போயிகிட்டு... பார்க்கவே கண்றாவியா இருந்துச்சு. நான் சேர்த்து வெச்சுருந்த காசையெல்லாம் கொடுத்துட்டு வந்துட்டேன். கூட ஒரு பெரியம்மாக் கிழவி தண்ணி சுட வெச்சுக்குடுக்குது. என்னமோ பண்ணுனு வந்துட்டேன்..."

வயிராத்தாவின் வலி புரிந்தது.

"என்னைய, அது பண்ணுன கொடுமைக்கு, அது செத்துடுச்சுனு சேதி வந்தாக்கூட இனி போகக் கூடாதும்மா. என் கடமைக்கு காசு கொடுத்துட்டேன். அது போதும்!" என்றவரை நான் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க, "ஏஞ்சோகத்த சொல்லி உன்னையும் சங்கடப்படுத்திட்டேன் இல்லியாம்மா..?!" என்றவாறே எழுந்து மோர் கலக்கச் சென்றார். நான் அவருக்காக வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்..?!

மறுநாள் ஊருக்குச் சென்றிருந்த நான், இரண்டு நாள் கழித்து வந்து, டைனிங் ஹாலில் சட்னியை தொட்டு வாயில் வைத்தபோதே தெரிந்து விட்டது.

"ஏன் இன்னிக்கு வயிராத்தா சட்னி செய்யலியா?" - என்றேன் பரிமாற வந்த சமையல்காரம்மாவிடம்.

"அது வேலையை விட்டு நின்னுருச்சும்மா..."

"எப்போ... ஏன்?" - படபடத்தேன்.

"நேத்துதான். வயிராத்தா புருஷனுக்கு கொஞ்சம் உடம்பு தேவலையாம். இனிமே நல்ல சாப்பாடு இருந்தா சரியாகிடுமாம். அதான் வயிராத்தா வேலையை விட்டுட்டு புருஷன் கூடவே இருந்து சமைச்சுப் போட கிளம்பிடுச்சு. எதோ பச்சை மசால் குழம்பாம்... அதோட செய்முறையை இதுல எழுதியிருக்காம்... உங்ககிட்டே கொடுக்க சொன்னிச்சு..." - சமையல்காரம்மா ஒரு பேப்பரைக் கொடுத்தார்.

மஞ்சளும் எண்ணெயும் பூசிய பேப்பரில் குழந்தைக் கையெழுத்தில் 'பச்சை மசால் குழம்பு' எழுத்துக்களாகப் பரவியிருந்தன.

'இல்லை. இந்த செய்முறை எனக்கு வேண்டாம். அது வயிராத்தாவோடு போகட்டும்.'

பேப்பரைக் கிழித்துப் போட்டேன்!

ஸ்.ஜூலியட் மரியலில்லி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 8:37 pm

ம்............நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக