புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜாஜி என்ற ராஜரிஷி
Page 1 of 1 •
பழைய சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் ஐந்து ரூபாய் மாத ஊதியத்தில் குடும்பம் நடத்திய சக்கரவர்த்தி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்த ராஜாஜி, சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தார். சேலத்தில் ஒரு வழக்குக்கு 1,000 ரூபாய் ஊதியம் பெறும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம்வந்த ராஜாஜி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடுபட்டார்: “ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் மன்னிக்கவும் முடியும். ஆனால், தன் அறிவை விலைபேசும் ஒரு வழக்கறிஞரை என்னால் மன்னிக்க முடியாது. இத்தொழிலை விட்டு விலகும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன்” என்றார்.
தொண்டூழியம்
சின்னஞ்சிறு வயதிலேயே ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அலர்மேலு மங்கம்மாள் ராஜாஜியின் மடியில் மரணித்த போது, ராஜாஜிக்கு 37 வயது. மனைவியிடம் அளவற்ற அன்பைப் பொழிந்தவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தேசத்தொண்டில் முற்றாக மூழ்கினார். சேலம் நகரசபைத் தலைவராக 1917-ல் பொறுப்பேற்ற ராஜாஜி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியரை அக்கிரகாரக் குழாய்களைக் கையாளும் பணியில் அமர்த்திச் சனாதனிகளின் எதிர்ப்பைப் பெற்றார். சகஜானந்தா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துறவிக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்றதால், அவரது குடும்பம் ‘சாதி பிரஷ்டம்’ செய்யப்பட்டது.
நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜி, ஊதியம் பெறாமல் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் நகரசபை அலுவலகத்தில் சமூகக் கடனாற்றினார். சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937-ல் பொறுப்பேற்றபோது அரசு நிர்ணயித்த ஆண்டு ஊதியம் 56 ஆயிரம் ரூபாயை ஏற்க மறுத்து… வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உட்பட ஒன்பதாயிரம் ரூபாயை மட்டுமே பெறுவதற்கு இசைந்த பெருமகன் ராஜாஜி.
சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் விடுதலை வேள்வியில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு நிலத்தை இலவசமாக வழங்கியபோது, அதைக் கடுமையாக எதிர்த்த ராஜாஜி தனக்கு இலவச நிலம் வழங்கப்படலாகாது என்று மறுதலித்தார்.
முன்னோடி ஆசிரமம்
சென்னைக்கு ‘இந்து’ கஸ்தூரிரங்க ஐயங்காரின் அழைப்பை ஏற்று வந்த காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கியிருந்தபோதுதான் ‘ரௌலட்’ சட்டத்தை எதிர்த்து ‘ஹர்த்தால்’ நடத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணயர்ந்த நிலையில் ஒரு கனவுபோல் உதித்தது. காந்தியின் ‘மனச்சான்றுக் காவலர்’ ராஜாஜி, காந்தியத்தைத் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்க சேலத்துக்கு அருகில் புதுப்பாளையம் என்ற எந்த வசதியுமற்ற கிராமத்தில் ஆசிரமம் அமைத்து, ஓலைக்கூரை வேய்ந்த குடிசையில் வாழ்ந்தபடி அரும்பணி ஆற்றினார். பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 17 பேர் கொண்ட அந்த ஆசிரமம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதர் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டது.
மதுவிலக்கே உயிர்க் கொள்கை
மதுவிலக்கு ஒன்றுதான் மூதறிஞர் ராஜாஜியின் உயிர்க் கொள்கையாக விளங்கியது. வெள்ளையர் ஆட்சியில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்பே, தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை நாட்டிலேயே முதன்முறையாக ராஜாஜி நடைமுறைப்படுத்தினார். நிலவரியும் கள்ளுக்கடை ஏலமும்தான் அன்று அரசின் முக்கிய வருவாய். மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட, ஆசியாவிலேயே முதன்முதலாக 1939-ல் ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். இன்று எல்லா மாநில அரசுகளுக்கும் கொழுத்த வருவாயை அவர் கண்டெடுத்த விற்பனை வரியே அள்ளிக் குவிக்கிறது. அதே நேரத்தில், மதுவின் விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
சூதாடிகளா நாடாளுநர்கள்?
அண்ணாவின் தி.மு.க. 1967-ல் ஆட்சி பீடத்தில் அமர்வதற்கு ராஜாஜியின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பை அண்ணா அரசியல் சாதுரியத்துடன் பயன்படுத்திக்கொண்டார். 1967-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதும் தன்னுடைய சுதந்திரா கட்சி ஒடிசாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தந்த மகிழ்ச்சியைவிட, தமிழகத்தில் காங்கிரஸ் மண்ணைக் கவ்விய காட்சியே ராஜாஜிக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், அண்ணாவின் அரசு லாட்டரி விற்பனையில் ஈடுபட்டபோது அவருடைய இதயம் வலித்தது.
“அரசு லாட்டரி விற்பனையை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது. ஒரு மாநில அரசு வருவாயைக் கருதி லாட்டரியை நடத்துமானால், சூதாட்ட நிலையங்களை நடத்துவோரைத் தண்டிக்கும் தார்மீக உரிமை அதற்கு எப்படி இருக்க முடியும்?” என்று வேதனையை வெளிப்படுத்தினார் ராஜாஜி. கலைஞர் கருணாநிதி 1972-ல் மதுக்கடைகளைத் திறந்தபோது, சொல்லில் அடங்காத சோகத்தில் ஆழ்ந்தார் அந்த மூதறிஞர்.
ஆந்திரமும் தமிழகமும் ஒன்றுபட்டிருந்த சென்னை மாகாணத்தின் பிரதமர், வங்கத்தின் ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய அரசின் உள்துறை அமைச்சர், மீண்டும் தமிழக முதல்வர், காந்தி-நேரு-படேல்-ஆசாத்-ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இணையாக நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். 93 வயதான முதுபெரும் கிழவர் ராஜாஜி, கொட்டும் மழையில் தன் பெருமை பாராது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டினார். அவருடைய கரங்களைப் பற்றியபடி “தமிழகத்தில் மதுவிலக்கு தொடர வேண்டும்” என்று கெஞ்சினார். “நம்பிக்கையுடன் அல்ல, மனசஞ்சலத்துடன் வீடு திரும்பினேன்” என்று மொழிந்த ராஜாஜி, அன்றுபோல் என்றும் தன் வாழ்வில் வருத்தமுற்று வேதனைப்பட்டதில்லை என்றார், அவருக்கு இறுதிவரை தொண்டூழியம் செய்த ‘கல்கி’ சதாசிவம்.
நினைத்ததைச் சொன்னவர்
“என் வாழ்க்கை சுத்தமானது. வாழ்நாள் முழுவதும் உண்மையாக நடந்துகொண்டி ருக்கிறேன். எனக்கு எது சத்தியம், நியாயம் என்று தோன்றியதோ, அதை மட்டுமே பேசியிருக்கிறேன்” என்று வாக்குமூலம் வழங்கிய ராஜாஜி, தான் நெஞ்சில் வைத்துப் போற்றிய மகாத்மா காந்தியிடம் மனம் வேறுபட்டபோது, எந்தத் தயக்கமுமின்றி அவரை எதிர்த்தார். காந்தியின் கண் முன்னரே காங்கிரஸிலிருந்து விலகினார். தன்னை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக்க முயன்றவர், கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்க வற்புறுத்தியவர், உள்துறை அமைச்சராக்கி மகிழ்ந்தவர், பதவி விலக விரும்பியபோதெல்லாம் ஏற்க மறுத்தவர் நேரு என்பதை நெஞ்சில் நிறுத்தி, நன்றி செலுத்திய ராஜாஜி, நேருவின் நிர்வாகத் தவறுகளை விமர்சிக்காமல் விட்டுவிடவில்லை.
ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப் பட்டோர் ஆலயப் பிரவேசச் சட்டம், ஊழலற்ற தூய்மையான நிர்வாகம், ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையில் கட்டிக் காத்த ‘இலக்குவன் கோடு’ போன்றவை ராஜாஜிக்குப் பெருமை சேர்ப்பவை. மேலவை உறுப்பினராகி முதல்வரானது, பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் 1952-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க மாணிக்க வேலருக்கு மந்திரி பதவியளித்து ஆறு எம்.எல்.ஏ-க்கள் கொண்ட அவரது ‘காமன்வீல்’ கட்சியை காங்கிரஸில் இணைத்தது, குலக் கல்வியை அறிமுகப்படுத்த முயன்றது இன்றளவும் விமர்சனத்துக்கு உரியவை.
அன்புக்குரிய எதிரிகள்
இன்றைய அரசியல் தலைவர்கள் ராஜாஜியிடம் கற்க வேண்டிய மிக முக்கியமான பண்பு நலன் ஒன்று உண்டு. ஒருவருடைய செயல்முறைகளை மிகக் கடுமையாக விமர்சித்தபோதும், அவரிடம் பகைமை பாராட்டும் தவறான போக்கு ராஜாஜியிடம் இறுதிவரை இருந்ததில்லை. தன்னை எல்லை மீறி விமர்சனம் செய்த பெரியாரை அவர் எப்போதும் ‘அன்பார்ந்த எதிரி’ யாகவே பாவித்தார்.
‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சி’யின் மூலம் காங்கிரஸ் ஊழலை வளர்த்ததை மிகத் தெளிவாக வெளிப்படுத்திய ராஜாஜி, இந்திரா காந்தியின் யதேச்சதிகாரப் போக்கை விமர்சித்தபோது, “இந்திரா சில மாயத் தோற்றங்களால் ஈர்க்கப்படுகிறார். அவற்றிலிருந்து அவர் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களைவிடத் தாம்தான் சாமர்த்தியசாலி என்று எண்ணு கிறார். தன்னம்பிக்கையை நான் தவறென்று சொல்லவில்லை. ஆனால், அடக்கம் என்ற உன்னதமான குணத்தைப் பெற்றிருப்பதே நல்லது.
தாம் ஒருத்தி மட்டுமே நவீன சிந்தனை உடையவள் என்று அவர் எண்ணக் கூடாது. இந்தியாவில் உள்ள ஏழைகளைத் தாம் நேசிப்பதாக இந்திரா அடிக்கடி கூறுகிறார். ஏதோ நாம் ஒருவர்தாம் இத்தகைய உணர்வுகளைக் கொண்டிருப்பது போலவும் வேறு யாருக்குமே ஏழைகளிடம் அக்கறை இல்லை என்பது போன்றும் அவர் பேசுவது ஒருவகை அகம்பாவமே” (‘சுயராஜ்யா’ 18.10.1969) என்று குறிப்பிட்டார். இன்றும் இந்த வாசகங்கள் யாருக்கோ பொருந்துவதுபோன்று தோன்றவில்லையா? அறிந்தவர் அறிவாராக!
தமிழருவி மணியன்
முதல்வர்களின் முதல்வர்
ஜனவரி 15-ம் தேதி ஸி.ஆர். முடிவெடுத்தார். “ஸி. ராஜகோபாலாச்சாரி தேர்தலில் போட்டியிடுவார் என அறிகிறோம்” என்று மறுநாள் ‘ஹிந்து’ பத்திரிகை கூறியது. “இந்த ராஜதானியிலும் சரி, அதற்கு வெளியேயும் சரி காங்கிரஸ் தலைவர்கள் அவர் ஓய்விலிருந்து திரும்பிவர வேண்டும் என்று நீண்ட காலமாக வற்புறுத்தி வந்திருக்கிறார்கள்.”
“சர்வகலாசாலைத் தொகுதியில் ஸி. ஆர். நிற்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி வற்புறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்; அந்த ஸ்தானத்தை ஸி. ஆருக்குத் தாமே விட்டுக் கொடுத்துமிருக்கிறார்” என்று பம்பாயிலிருந்து பட்டேல் அறிவித்தார். தம் நிகரற்ற தலைவர் வழிகாட்ட, காங்கிரஸ் சக்திகள் அனைத்தும் ஒன்று கூடும் என்று தாம் நம்புவதாகவும் பட்டேல் சேர்த்துக்கொண்டார்.
*******
சென்னையில் மட்டுமன்றி காங்கிரஸ், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் அது புதிய அரசியல் சட்டம் நிர்ணயித்த வரையறை களுக்கு உட்பட்டு பதவி ஏற்குமா? “ஏற்கவும் செய்யலாம்; ஏற்காமலும் இருக்கலாம்” என்று ஸி.ஆர். சட்டசபையாளருக்குச் சொன்னார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்துக்கு – அது என்னவாக இருந்தாலும் – அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று சேர்த்துக்கொண்டார்.
*******
இரண்டு நாட்கள் கழித்து, அதுவரை ஐந்து முறை அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஸி. ஆரை எர்ஸ்கைன் அழைத்தார். ராஜதானியின் பிரதம மந்திரியாக இருக்குமாறு கோரினார்;- அன்று அப்பதவிக்கு அதுதான் பெயர் – மந்திரிசபை அமைக்குமாறு வேண்டினார். ஸி. ஆர். ஒப்புக்கொண்டார். அவர் வாழ்க்கையில் அரசுப் பொறுப்பு என்னும் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகி இருந்தது.
*******
ஜனவரி 15-ம் தேதி ஸி.ஆர். முடிவெடுத்தார். “ஸி. ராஜகோபாலாச்சாரி தேர்தலில் போட்டியிடுவார் என அறிகிறோம்” என்று மறுநாள் ‘ஹிந்து’ பத்திரிகை கூறியது. “இந்த ராஜதானியிலும் சரி, அதற்கு வெளியேயும் சரி காங்கிரஸ் தலைவர்கள் அவர் ஓய்விலிருந்து திரும்பிவர வேண்டும் என்று நீண்ட காலமாக வற்புறுத்தி வந்திருக்கிறார்கள்.”
“சர்வகலாசாலைத் தொகுதியில் ஸி. ஆர். நிற்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி வற்புறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்; அந்த ஸ்தானத்தை ஸி. ஆருக்குத் தாமே விட்டுக் கொடுத்துமிருக்கிறார்” என்று பம்பாயிலிருந்து பட்டேல் அறிவித்தார். தம் நிகரற்ற தலைவர் வழிகாட்ட, காங்கிரஸ் சக்திகள் அனைத்தும் ஒன்று கூடும் என்று தாம் நம்புவதாகவும் பட்டேல் சேர்த்துக்கொண்டார்.
*******
சென்னையில் மட்டுமன்றி காங்கிரஸ், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் அது புதிய அரசியல் சட்டம் நிர்ணயித்த வரையறை களுக்கு உட்பட்டு பதவி ஏற்குமா? “ஏற்கவும் செய்யலாம்; ஏற்காமலும் இருக்கலாம்” என்று ஸி.ஆர். சட்டசபையாளருக்குச் சொன்னார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்துக்கு – அது என்னவாக இருந்தாலும் – அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று சேர்த்துக்கொண்டார்.
*******
இரண்டு நாட்கள் கழித்து, அதுவரை ஐந்து முறை அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஸி. ஆரை எர்ஸ்கைன் அழைத்தார். ராஜதானியின் பிரதம மந்திரியாக இருக்குமாறு கோரினார்;- அன்று அப்பதவிக்கு அதுதான் பெயர் – மந்திரிசபை அமைக்குமாறு வேண்டினார். ஸி. ஆர். ஒப்புக்கொண்டார். அவர் வாழ்க்கையில் அரசுப் பொறுப்பு என்னும் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகி இருந்தது.
*******
பதவியின் பெருமை ஸி. ஆரைச் சூழ்ந்துகொண்டிருந்தாலும் அவரும் அவர் சகாக்களும் ஆங்கில ஆட்சி நிர்ணயித்த சம்பளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வருடத்திற்கு ரூ.56,000 என்று முதல்வருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உள்பட ரூ.9,000 மட்டுமே என்று மாற்றி அமைக்கப்பட்டது. அரசு, மந்திரிகளுக்கு வீடு அளிக்கவில்லை. ஆனால் ரூ.3000-க்கு வாங்கப்பட்ட காரை உபயோகத்துக்கு அளித்தது. ஸி.ஆரும் அவர் சகாக்களும் பதவியேற்ற முதல் மாதத்தில் பழைய (அதிகப்படி) சம்பளம் மாற்றப்படவில்லை. ஸி.ஆர். ஒவ்வொரு மந்திரியிடமும் அதிகப்படி பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக வாக்குமூலம் பெற்றுவிட உத்தரவு பிறப்பித்தார். மந்திரிகளோ, அவர்களின் சந்ததிகளோ இப்பணத்தைப் பிற்காலத்தில் கேட்கக் கூடாது என்பதற்கே இந்த முன்னேற்பாடு!
*******
ஸி. ஆர். தம் முதல் ஆணையாக சிறைக் கைதிகளுக்கு மோர் வழங்க வேண்டும் என்று அறிவித்த போது, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாங்கள் சிறையில் பெற்ற அரைகுறை உணவை நினைவில் கொண்டு இந்த உத்தரவை வரவேற்றனர். என்றாலும் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இதை ஒரு பெரிய விஷயமாகவே எண்ணவில்லை. ஆனால் அடுத்தாற்போல் வன்முறையில் ஈடுபட்டதற்காக சிறையிடப்பட்டு இப்போது வன்முறையைத் துறப்பதாக உறுதி அளித்த பல விடுதலைப் போராட்டக் கைதிகளை ஸி. ஆர். விடுதலை செய்தபோது ஆங்கிலேயே அதிகார வர்க்கம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அதைத் தடுக்கவும் முயன்றது. வைஸ்ராய், கவர்னரிடம் தம் விருப்பமின்மையைத் தெரிவித்தார். ஆனால் ஸி. ஆர். விட்டுக்கொடுத்துப் பணியவில்லை. உறுதியாயிருந்து தம் முயற்சியில் வெற்றி கண்டார். 38 அரசியல் கைதிகள் விடுதலை பெற்றனர்.
*******
ஸி. ஆர். பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள், 1937 அக்டோபர் 1 முதல் அவரது சொந்த ஜில்லாவான சேலத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. படிப்படியாக பிற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அரசின் வருவாயில் கணிசமான தொகை குறைந்துபோயிற்று. நிலவரியும் கள்ளுக்கடை ஏலமுந்தாம் அரசின் வருமானத்தின் பெரும் பகுதி. இருப்பினும் ஸி. ஆர். 1937-இல் ஓர் உபரி பட்ஜெட்டையே வழங்கினார். அடுத்த இரண்டு வருடங்களிலும் அவ்வாறே வழங்க இருந்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.யான அப்பாதுரைப்பிள்ளை ‘விவரங்களைப் புரிந்துகொள்ளும் ஸி.ஆரின் திறனையும், பொருளாதார நுணுக்கங்களனைத்தையும் அறிந்திருந்த நேர்த்தியையும்’ வியந்து போற்றினார்.
*******
எர்ஸ்கைன், வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் உத்தேசிக்கப் பட்டிருந்த இந்தச் சட்டத்தை ‘அனாவசியமான கஞ்சத்தனம்’ என்றே குறிப்பிட்டிருந்தார். ‘அரசுச் செலவினங்களைப் பொறுத்த வரையில் பிரதம மந்திரி சுத்த கருமியே’ என்றும் எழுதினார். ஆட்சியின் முதல் எட்டு மாதங்களில் தமது சுற்றுப் பயணங்களுக்காக ஸி. ஆர். செலவிட்ட தொகை, அவர் பொதுப்பணத்தை எவ்வளவு ஜாக்கிரதையாகக் கையாண்டார் என்பதை உணர்த்தும். அத்தொகை: ரூ. 400. இரண்டாவது பட்ஜெட்டுக்கு ஸி. ஆர். மத்திய சர்க்காரிடமிருந்து மாகாணத்தின் வரிப் பங்காக ரூ.21 லட்சம் பெற்றார். இவ்வாறு மாகாணங்களுக்கு வருமான வரியில் பங்கு அளிக்கப்பட்டது அதுவே முதல் முறை. எதிர்க்கட்சியினர் இத் தொகை கிடைத்ததை “பெரிய எதிர்பாராத அதிர்ஷ்டம்” என்றனர். “இதென்ன பெரிய விஷயம்? நம்மிடம் திருடியதைத் திருப்பித் தருகிறார்கள். அவ்வளவுதானே!” என்றார் ஸி. ஆர்.
*******
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஓர் அலசல் --அறிய அரிய பல விஷயங்கள் .
ராஜாஜி -மூதறிஞர் -மிகவும் போற்றப்பட்ட அறிஞர் --பல வித சர்ச்சைகளுக்கு ஆளானவர் .
கொள்கையில் விடாப்பிடியாய் இருந்தவர்.
மாறுபட்ட கருத்துகள் பெரியார் -ராஜாஜி இடையே இருந்தாலும் ,இருவரும் நெருங்கிய நண்பர்கள் .ராஜாஜி மரணத்தின் போது ,தகன இடம் வரை ,தள்ளாத வயதிலும் ,தள்ளு வண்டியில் சென்று நட்பின் ஆழத்தை வெளிபடுத்தியவர்.
ரமணியன்
ராஜாஜி -மூதறிஞர் -மிகவும் போற்றப்பட்ட அறிஞர் --பல வித சர்ச்சைகளுக்கு ஆளானவர் .
கொள்கையில் விடாப்பிடியாய் இருந்தவர்.
மாறுபட்ட கருத்துகள் பெரியார் -ராஜாஜி இடையே இருந்தாலும் ,இருவரும் நெருங்கிய நண்பர்கள் .ராஜாஜி மரணத்தின் போது ,தகன இடம் வரை ,தள்ளாத வயதிலும் ,தள்ளு வண்டியில் சென்று நட்பின் ஆழத்தை வெளிபடுத்தியவர்.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|