புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kargan86
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_m10கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:49 am

First topic message reminder :


70 இடங்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 32, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப்சிங் அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்து விட்டது.

இதையடுத்து 2–வது அதிக இடங்களை பிடித்த கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப்சிங் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கவர்னரை சந்தித்த ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 23–ந் தேதி வரை அவகாசம் கேட்டார். கடந்த 6 நாட்களாக அவர் டெல்லியில் 280 கூட்டங்களை நடத்தி ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆம்ஆத்மி கட்சி கருத்து கேட்டது. சுமார் 6½ லட்சம் பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றனர். இதை ஏற்று ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. இன்று பகல் 11 மணியளவில் டெல்லி காசியாபாத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த ஆம்ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சி அமைக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா கூறுகையில், ‘‘280 மக்கள் சபை கூட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதில் 257 கூட்டங்களில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் சம்மதித்துள்ளனர்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து 11.20 மணிக்கு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி அமைக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை கேட்டதும் திரண்டிருந்த ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறகு ஆம்ஆத்மி கட்சி மூத்த தலைவர்களுடன் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் 12.30 மணியளவில் அவர் கவர்னர் நஜீப்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுத்தார்.

கெஜ்ரிவாலின் கடிதத்தை கவர்னர் நஜீப்சிங் ஏற்றுக் கொண்டார். ஆம்ஆத்மி ஆட்சி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவை ‘‘ஜந்தர் மந்திர்’’ பகுதியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்திர் பகுதியில் நடந்த போராட்டங்கள் தான் கெஜ்ரிவாலை நாடெங்கும் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பதவி ஏற்பு விழாவை ஜந்தர்மந்திரில் நடத்த கெஜ்ரிவால் விரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது. அவர் பதவி ஏற்றதும் சட்டசபை கூட்டப்படும். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பார்கள். அந்த கூட்டத்திலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக லோக்பால் மசோதாவை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபையில் கெஜ்ரிவால் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும். மற்றபடி காங்கிரசிடம் இருந்து ஆம்ஆத்மி நேரடி ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 24, 2013 9:06 am

அதிக இடங்கள் பெற்ற பிஜேபி கட்சிக்கு இருக்கும்
நிதானம் போற்ற தக்கது...

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Dec 24, 2013 10:32 am

புதிய ஆட்சி மலர்ந்து நாட்டிற்கு இது ஒரு வழிகாட்டியாக மாற மனமார்ந்த வாழ்த்துகள்



சதாசிவம்
கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 24, 2013 11:52 am

ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் காலைவாரிவிடுவதில் டாக்டர் பட்டம் பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எவ்வளவு காலம் இருக்குமென தெரியவில்லை.


நல்லாட்சி வழங்க வாழ்த்துகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 5:59 pm

கெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்: மணீஷ் சிசோடியா துணை முதல்வராகிறார்

டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது.

டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன் மிகவும் துணிச்சலாக ஆட்சியில் அமர்கிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோஷத்தை இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுமே சொல்லி வருகின்றன. ஆனால் அந்த கோஷத்தை முதன்மைப்படுத்தி முதன், முதலாக ஆம்ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, மிக குறுகிய காலத்தில் தலை நகரில் ஆட்சியைப் பிடித்து இருப்பது அரசியல் களத்தில் புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்த புரட்சியை இளைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றி இருப்பது இந்திய அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கு அவர்கள் வழி வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை டெல்லியில் ஆட்சி செய்த பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே வயதானவர்கள்தான். அரசியலில் பழுத்த பழமாக இருந்தவர்கள். அவர்களையெல்லாம் விளக்குமாறு சின்னத்தால் அடித்து துரத்தி விட்டு, இளைஞர் பட்டாளத்தை அரசியல் களத்துக்கு கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார்.

முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்க உள்ள அவரும் இன்னமும் இளமை துடிப்புடன்தான் உள்ளார். 45 வயதே ஆகும் அவர் டெல்லியின் மிக இளம் வயது முதல்–மந்திரி என்ற சாதனையை படைக்க உள்ளார்.

அவர் தலைமையில் மந்திரி பதவி ஏற்க போகும் அமைச்சர்கள் அனைவரும் சராசரியாக 40 வயது உடையவர்களாகவே உள்ளனர். இதனால் டெல்லி மாநில மந்திரிசபை ‘‘இளைஞர் பட்டாளம்’’ ஆக காட்சியளிக்க உள்ளது.

கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோ டியா, சவுரப் பரத்வாஜ், வினோத்குமார் பின்னி, சோம்நாத் பாரதி, ராக்கி பிர்லா ஆகிய 5 பேர் மந்திரிகளாவது உறுதியாகி விட்டது. இவர்களில் 41 வயதான மணீஷ் சிசோடியா துணை முதல்–மந்திரி ஆவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவர் பதவியேற்றால் டெல்லியின் முதல் துணை முதல்வர் என்ற சாதனையை படைப்பார்.

கெஜ்ரிவாலின் வலது கரம் போல செயல்பட்டு வரும் மணீஷ் சிசோடியா ஜீ நியூஸ், ஆல் இந்திய ரேடியோவில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஆவார். தகவல் அறியும் உரிமை போராட்டத்துக்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, கெஜ்ரிவாலுடன் போராட்டத்தில் இணைந்தார்.

கெஜ்ரிவால் நடத்திய எல்லா போராட்டங்களையும் ஒருங்கிணைத்த இவர் கெஜ்ரிவாலின் நிழல் மனிதராக கருதப்படுகிறார்.

மந்திரியாக வாய்ப்புள்ள சோம்நாத்துக்கு 39 வயதாகிறது. சுப்ரீம்கோர்ட்டு வக்கீலான அவர் ஆம்ஆத்மியின் சட்டப் பிரிவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அதுபோல 39 வயது வினோத்குமார், 2 தடவை கவுன்சிலராக இருந்தவர். தன் தொகுதியில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி புகழ் பெற்றவர்.

34 வயது சவுரப் பரத்வாஜ் கம்ப்யூட்டர் என்ஜினீயர். லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தால் கவரப்பட்ட இவர் கெஜ்ரிவாலிடம் இணைந்தார்.

டெல்லி மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்தவருமான சவுகானை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் ராக்கி பிர்லா. 26 வயதே ஆன இவர் தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்தார்.

அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு லோக்பாலுக்காக போராட களம் இறங்கினார். வங்கியில் ரூ.2½ லட்சம் கடனுடன் இருக்கும் இவர் டெல்லியின் மிக இளம் வயது மந்திரியாக இருப்பார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 6:05 pm

டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. நாளை மறுநாள் ராம் லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.

தேர்தலுக்கு முன்பு டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரசை ஆம்ஆத்மி கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக காங்கிரசின் ஊழல்கள் பற்றி ஆம்ஆத்மி கட்சியினர் பொதுக்கூட்டங்களில் பேசி இருந்தனர்.

இப்போது காங்கிரஸ் ஆதரவு கொடுப்பதால், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி நிச்சயமாக விசாரணை நடத்தப்படும். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மீது ஆம்ஆத்மி கட்சி ஏற்கனவே மிகப்பெரிய ஊழல் பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். ஷீலா தீட்சித் தலைமையிலான மந்திரிகள் தனியார் நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக அந்த ஊழல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் அமல் செய்யப்பட்ட திட்டங்களிலும் ஊழல்கள் நடந்துள்ளதை ஆம்ஆத்மி கட்சியினர் கண்டு பிடித்துள்ளனர். மின்சாரம், குடிநீர் துறைகளில் போலி பில்கள் தயாரித்து முறைகேடு நடந்துள்ளதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் ஆதாரங்கள் வைத்துள்ளனர்.

ரிதலா எனும் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆவணம் உள்ளது. ஆனால் ரிதலா மின் நிலையம் 2010–ம் ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கிறது. அப்படியானால் இந்த 300 கோடி ரூபாய் எங்கு போனது என்று ஆம்ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி டெல்லியில் கடந்த 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை ஆம்ஆத்மி கட்சியினர் வரிசைப்படுத்தியுள்ளனர். இந்த ஊழல்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து உரிய விசாரணை நடத்த ஆம்ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்துள்ள கெஜ்ரிவால் காங்கிரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். எனவே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரணை நடப்பது உறுதியாகிவிட்டது.

இது டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட நிலையில் டெல்லி காங்கிரசார் தவித்தப்படி உள்ளனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:41 pm

புதிய ஆட்சி மலர்ந்துள்ளது அதுவும் தலை நகரிலேயே ! நம் நாட்டிற்கு இது ஒரு வழிகாட்டியாக மாற மனமார்ந்த வாழ்த்துகள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:49 pm

டிச.28-ல் டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு

டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தயாராக இருப்பதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம், திங்கள் கிழமை தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இதனையடுத்து, ஆளுநர் நஜீப் ஜங், ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது தொடர்பாக பரிந்துரைக் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அதற்கு இன்று (புதன் கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.

டிசம்பர் 28-ல் பதவியேற்பு:

டிசம்பர் 28-ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்றைக்கு தான் கிடைத்தது என்பதால் பதவியேற்பு விழ 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 2011- ஆம் ஆண்டில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கிய ராம் லீலா மைதானத்தில், பதவியேற்பு விழா நடைபெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 25, 2013 10:50 pm

அரசியல் பழிவாங்கலுக்கு இடமில்லை: ஆம் ஆத்மிக்கு காங். எச்சரிக்கை

டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அக்கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, அரசியல் ரீதியாகப் பழிவாங்கல் நடவடிக்கையில் எந்தக் கட்சியாவது ஈடுபட்டால், தங்களது குரலை எழுப்புவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் நிலைப்பாடு குறித்து அவர் கூறும்போது, "முதல்வர் மற்றும் அனைவருமே ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது கடமை. அவர்கள் பதவியேற்கும்போது, ஊழலுக்கு எதிராக போராடுவது குறித்தும் உறுதிமொழி ஏற்கின்றனர். அப்படி இருக்க, ஊழல் பற்றி தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை" என்றார் அவர்.

அதேவேளையில், டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைக்க ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலைத் தொடர்ந்து, வரும் சனிக்கிழமை டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கிறார். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் பதவியேற்கின்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:00 pm

அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்த பாதை: கேள்வி கேட்ட பி.ஜே.பி.. கேள்வியே கேட்காத காங்கிரஸ்..

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், 28 தொகுதிகளைக் கைப்பற்றியது முதல் ஷாக் என்றால், யாரை எதிர்த்து அவர் இதுவரை கத்தியைத் தூக்கினாரோ அந்த காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது அடுத்த ஷாக். இந்தக் காட்சியை நமட்டுச் சிரிப்புடன் ரசித்துக்கொண்டு இருக்கிறது பி.ஜே.பி.

நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 தொகுதிகளைக் கைப்பற்றி பி.ஜே.பி. முதலிடத்திலும் 28 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்திலும் இருந்தன. ஆட்சி அமைக்கத் தேவையான 36 தொகுதிகள் இல்லாததால் ஆரம்பத்திலேயே, 'நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. யாருடைய ஆதரவையும் கேட்கப் போவதில்லை’ என்று பி.ஜே.பி. அறிவித்தது. எனவே, பந்து ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வந்தது. 'எங்களை ஆதரிக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை ஏற்கவேண்டும்’ என்று சொல்லி 18 கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அந்த நிபந்தனைகளைப் பற்றி காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சித் தலைமையும் பரிசீலிப்பதாகச் சொன்னது. இந்த நிலையில் மக்கள் கருத்தை அறிய அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். முனிசிபல் வார்டுகள் வாரியாகவும் இன்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் கருத்துக்களைக் கேட்டுவந்தார். இதுவரை நாலரை லட்சம் பேர் வரை கருத்தை தெரிவித்துள்ளாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இதில் பெரும்பான்மை கருத்து என்ன என்பதை ஆம் ஆத்மி கட்சி ரகசியமாக வைத்தது. ''தங்களுடைய நிலையை வருகிற திங்கள்கிழமை தெரிவிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

'உடனடியாக நாம் ஆட்சி அமைத்தால்தான் நம்முடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும்’ என்று கெஜ்ரிவாலுக்கு இரண்டாம் கட்டத் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார்கள். ''காங்கிரஸை நம்பி ஆட்சி அமைக்க முடியாது'' என்று கெஜ்ரிவால் முதலில் சொன்னார். தன்னை வந்து யார் சந்தித்தாலும், 'ஆட்சி அமைக்கவா? மற்றொரு தேர்தலை சந்திக்கவா?’ என்று கருத்து கேட்டுவந்தார்.

இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களுக்கு காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளும் பதில் கொடுத்தன. ''பதினெட்டு நிபந்தனைகளில் இரண்டு விவகாரத்துக்கு மட்டும் சட்டத்தின் மூலம் முடிவு எடுக்க வேண்டியதுள்ளது. மற்ற 16 விவகாரங்களும் நிர்வாக உத்தரவின் மூலம் நிறைவேற்றக்கூடியவை. ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்து இவற்றை முடிவு எடுத்து நிர்வாக உத்தரவுகளைப் போடலாம்'' என்று காங்கிரஸ் பதில் கூறியது. ஆனால் பி.ஜே.பி., ஆம் ஆத்மி கட்சியை அரசியல்ரீதியாகக் கிண்டல் செய்து கேள்விகளை எழுப்பியது.

''முதலில் நீங்கள் ஆட்சி அமைக்கப் போகிறீர்களா... இல்லையா? ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாத உங்கள் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு இருக்கிறதா இல்லையா? சோனியாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் நடந்துள்ளது? உங்கள் கட்சி கார்ப்ரேட் நிறுவனங்களிடமும், வியாபார அமைப்புகளிடமும் நன்கொடைகளை வசூலித்துக்கொண்டு இருக்கிறது. நன்கொடை வசூலித்து தேர்தலில் வென்று ஆட்சி சுகத்தை அனுபவிக்க திட்டமிடுவது மட்டும்தான் உங்கள் கட்சியின் லட்சியமா? ஆட்சி அமைக்க கருத்து கேட்கும் உங்கள் கட்சி அரசியல் கட்சி தொடங்கும்போதுமக்களிடம் கருத்துக் கேட்டீர்களா?'' என்பது உட்பட 14 கேள்விகளைக் கேட்டது. இதனை கெஜ்ரிவால் எதிர்பார்க்கவில்லை. ''தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட டெல்லி பாட்லா ஹவுஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவை விமர்சனம் செய்ததோடு, 'காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்கவேண்டும்’ என்று கூறியவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண். இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸோடு ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு மக்களை ஏமாற்றிவருகின்றனர்'' என்று குற்றம்சாட்டுகிறார் பி.ஜே.பி-யின் முதலமைச்சர் வேட்பாளர் ஹர்ஷ் வர்தன். ''ஊழல் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு ஊழல் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எந்தக் கொள்கையும் இல்லை என்பதையே காட்டுகிறது'' என்றும் ஹர்ஷ் வர்தன் சொல்கிறார். பி.ஜே.பி-யின் இந்தக் குற்றச்சாட்டுகளால் கோபம் அடைந்த கெஜ்ரிவால், கேள்விகள் கேட்காத காங்கிரஸ் பக்கமாக தனது பார்வையைத் திருப்பினார்.

''காங்கிரஸ் தன்னுடைய ரகசிய வலையில் கெஜ்ரிவாலைக் கொண்டுவந்து வீழ்த்திவிட்டது'' என்றே டெல்லியில் சொல்கிறார்கள். இதுவரை அடுத்தவர் மீது விமர்சனம் மட்டுமே செய்துவந்த கெஜ்ரிவால் முதல் முறையாக விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். இதுவரை கோரிக்கைகள் மட்டுமே வைத்துவந்த கெஜ்ரிவால், இப்போது அதனை நிறைவேற்றித் தர வேண்டிய இடத்துக்கு வந்துள்ளார்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 5:39 pm



கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Page 2 Aravind%20kejriwal%20200a%289%29புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அக்கட்சி தேர்தல் நேரத்தில் பெற்ற வெளிநாட்டு நிதி குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் நிதி கணக்கு மற்றும் அது தொடர்பான ரசீதுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீதான இளம்பெண்ணை உளவு பார்த்த புகார் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெளிநாட்டு
நிதி குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக