புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
50 Posts - 59%
heezulia
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
1 Post - 1%
mini
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
1 Post - 1%
balki1949
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
407 Posts - 60%
heezulia
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
21 Posts - 3%
prajai
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
5 Posts - 1%
mini
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
4 Posts - 1%
Saravananj
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சாம்பாரின் வயசு என்ன? Poll_c10சாம்பாரின் வயசு என்ன? Poll_m10சாம்பாரின் வயசு என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பாரின் வயசு என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:45 am


இன்றைக்கு இட்லிக்கோ, சோற்றுக்கோ நாம் முதலில் தேடும் சாம்பாரின் வயசு, வெறும் 300தான்.

இவ்வளவு குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாம்பாரின் வரலாற்றைத் தேடிப் போனால், தஞ்சையை ஆண்ட சாம்போஜி என்ற அரசர் சிறந்த சமையல் கலை நிபுணராக இருந்ததாக அந்தக் கதை தொடங்கும். அவருக்கு ரொம்பப் பிடித்த ஆம்தி என்ற மராட்டியக் குழம்பை வைப்பதற்குத் தேவையான கோகம் புளி ஒரு நாள் கிடைக்காமல் போன நிலையில், அந்தத் தகவலை அவரிடம் தெரிவிக்க அரண்மனை சேவகர்கள் பயந்தார்களாம். அப்போது சமர்த்தியமான ஒரு சேவகர், கோகம் புளியைவிட, தஞ்சையின் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் புளியம்பழம் நல்ல புளிப்பைத் தரும் என்று கொடுத்தாராம். அதை வைத்து சாம்போஜி செய்ததே சாம்பார் என்று அந்தக் கதை முடியும். இது ஒரு செவிவழிக் கதை. இந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.

17ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆள ஆரம்பித்த மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். ஆனால், அதன் உண்மைக் கதையோ சற்று வித்தியாசமானது.

மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியை, அவர்கள் அப்போது பயன்படுத்தவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். அது மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் அதிகம் விளைகிறது.

நடந்த கதை

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி 1 (சாம்போஜி அல்ல. அவர் சமையல் கலை நிபுணரும் அல்ல) காலத்தில்தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம்.

ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான கோகம், மகாராஷ்டிரத்தில் இருந்து ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருள்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா.

ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்துள்ளார். அதன்பிறகு சாம்போஜியை கௌரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆதாரங்கள்

சாம்பார் தொடர்பாக போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள். பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் சரபேந்திர பக்ஷாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகைகள் பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. சம்பாரம் என்பது மசாலா பொருள்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால்தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

சாம்பாருக்கான அதே மூலப்பொருள் களைக் கொண்டு குழம்புகளை உடனடியாகச் செய்வதற்கு தஞ்சை மக்கள் ரெடிமேட் மிக்ஸ் ஒன்றை வைத்திருந்தார்கள். மிளகாய், மல்லி விதை கலந்த மல்லிப் பொடியையும் அத்துடன் சேர்த்துப் பயன்படுத்துவது வழக்கம். இறைச்சி உணவுகளில் இந்த மசாலா சேர்க்கப்பட்டது. தஞ்சை சைவ உணவுக்காரர்களின் வாரிசுகள் அரசு வேலைகளுக்காக சென்னை, மும்பை, தில்லி போன்ற வடக்குப் பகுதிகளுக்குச் சென்றபோது, எளிதாக சாம்பார் தயாரிப்பதற்கு அவர்களது அம்மாக்கள் மேற்கண்ட முறையில் ரெடிமேட் சாம்பார் பொடியை உருவாக்கிக் கொடுத்தனர். அதுவே இன்றைக்கு, ரெடிமேட் சாம்பார் பொடியாக, தனியாக விற்பனை செய்யப்படும் அளவுக்கு வந்துவிட்டது.

ஆதி வள்ளியப்பன்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 24, 2013 4:02 pm

சாம்பார் ..............


பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 24, 2013 4:06 pm

சாம்பார் .............. ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 

 சாம்பாரின் வயசு என்ன? 103459460 சாம்பாரின் வயசு என்ன? 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 8:09 pm

அருமையான பதிவு சிவா புன்னகை நன்றி !
.
.
அவர்கள் கண்டுபிடித்த சாம்பாரை, எதிர்காலத்தில் இட்லிக்கு பக்கெட் பக்கெட்டாக குடிப்பார்கள் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக