புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 8 of 14 •
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
கண்ணன் மீண்டும் பிறப்பானா?
குழந்தையாக மீண்டும் கண்ணன்
பிறக்க மாட்டானா?-புல்லாங்
குழல்எடுத்தே ஊதிஎன்னை
மயக்க மாட்டானா?
என்னை அவன் தோழனாக
ஏற்க மாட்டானா?-தினம்
வெண்ணெயில்ஓர் பங்குபோட்டு
நீட்ட மாட்டானா?
சின்னஞ்சிறு வாயைக்கொஞ்சம்
திறக்க மாட்டானா?-என்
கண்ணில்இந்த உலகமுழுதும்
காட்ட மாட்டானா?
மாடுகன்றைக் காட்டில்ஓட்டி
மேய்க்க மாட்டானா?-அங்கே
ஓடிஆட என்னைக்கூட்டுச்
சேர்க்க மாட்டானா?
மலைஎடுத்துக் குடையைப்போலப்
பிடிக்க மாட்டானா?-என்
தலையில்மழை விழுவதையும்
தடுக்க மாட்டானா?
கீதைதன்னைத் திரும்பவுமே
கூறமாட்டானா?-அதைக்
காதில்கேட்டுச் சிறந்தவனாய்
மாற மாட்டேனா?-நான்
மாற மாட்டேனா?
குழந்தையாக மீண்டும் கண்ணன்
பிறக்க மாட்டானா?-புல்லாங்
குழல்எடுத்தே ஊதிஎன்னை
மயக்க மாட்டானா?
என்னை அவன் தோழனாக
ஏற்க மாட்டானா?-தினம்
வெண்ணெயில்ஓர் பங்குபோட்டு
நீட்ட மாட்டானா?
சின்னஞ்சிறு வாயைக்கொஞ்சம்
திறக்க மாட்டானா?-என்
கண்ணில்இந்த உலகமுழுதும்
காட்ட மாட்டானா?
மாடுகன்றைக் காட்டில்ஓட்டி
மேய்க்க மாட்டானா?-அங்கே
ஓடிஆட என்னைக்கூட்டுச்
சேர்க்க மாட்டானா?
மலைஎடுத்துக் குடையைப்போலப்
பிடிக்க மாட்டானா?-என்
தலையில்மழை விழுவதையும்
தடுக்க மாட்டானா?
கீதைதன்னைத் திரும்பவுமே
கூறமாட்டானா?-அதைக்
காதில்கேட்டுச் சிறந்தவனாய்
மாற மாட்டேனா?-நான்
மாற மாட்டேனா?
தம்பி பிறந்த நாள்
எங்கள் தம்பி பிறந்தநாள்!
இனிய தம்பி பிறந்தநாள்!
திங்கட் கிழமை இன்றுதான்
செல்லத் தம்பி பிறந்தநாள்!
வண்ணச் சட்டை உடலிலே,
மணிகள் தொங்கும் கழுத்திலே.
கொண்டை அணிந்து கண்ணன்போல்
கொஞ்சு கின்றான் மழலையில்.
தோட்டம் நடுவே ஊஞ்சலில்
தூக்கி வைத்தோம் தம்பியை.
ஆட்டி ஆட்டி விடுகிறோம்;
அசைந்தே ஆடி மகிழ்கிறான்.
மாலைத் தென்றல் காற்றுமே
வந்து மெல்ல வீசுது.
நீலம், சிவப்பு, மஞ்சளில்
நிறைய பலூன் பறக்குது!
மலர்கள் தலையை ஆட்டியே
வருவோர் தம்மை அழைக்கவே,
கலகல எனப் பறவைகள்
காது குளிரப் பாடவே,
வட்ட மிட்டு நாங்களும்
வாழ்த்திக் கும்மி அடிக்கிறோம்.
கிட்டச் சென்று தம்பியைத்
தொட்டு முத்தம் கொடுக்கிறோம்.
கன்னங் குழியத் தம்பியும்
கையைத் தட்டிச் சிரிக்கிறான்.
அன்னை, தந்தை, பலரையும்
அணைத்து முத்தம் தருகிறான்.
விசை கொடுத்தால் ஓடிடும்
வித்தை யெல்லாம் காட்டிடும்
இசை முழக்கம் செய்திடும்
இனிய பொம்மைப் பரிசுகள் !
படம் நிறைந்த புத்தகம்
பலகை, பந்து, பலவகை
உடைகள், தின்னும் பண்டங்கள்
உவந்தே பலரும் தருகிறார்.
பட்டுப் போன்ற கைகளால்
பாசத் தோடு தம்பியும்
லட்டு, மிட்டாய், ரொட்டிகள்
நாங்கள் தின்னத் தருகிறான்.
சிறந்த இந்தக் காட்சியைத்
திரண்டு வந்து பாருங்கள்.
பிறந்த நாளில் தம்பியைப்
பெரியோர் கூடி வாழ்த்துங்கள்.
எங்கள் தம்பி பிறந்தநாள்!
இனிய தம்பி பிறந்தநாள்!
திங்கட் கிழமை இன்றுதான்
செல்லத் தம்பி பிறந்தநாள்!
வண்ணச் சட்டை உடலிலே,
மணிகள் தொங்கும் கழுத்திலே.
கொண்டை அணிந்து கண்ணன்போல்
கொஞ்சு கின்றான் மழலையில்.
தோட்டம் நடுவே ஊஞ்சலில்
தூக்கி வைத்தோம் தம்பியை.
ஆட்டி ஆட்டி விடுகிறோம்;
அசைந்தே ஆடி மகிழ்கிறான்.
மாலைத் தென்றல் காற்றுமே
வந்து மெல்ல வீசுது.
நீலம், சிவப்பு, மஞ்சளில்
நிறைய பலூன் பறக்குது!
மலர்கள் தலையை ஆட்டியே
வருவோர் தம்மை அழைக்கவே,
கலகல எனப் பறவைகள்
காது குளிரப் பாடவே,
வட்ட மிட்டு நாங்களும்
வாழ்த்திக் கும்மி அடிக்கிறோம்.
கிட்டச் சென்று தம்பியைத்
தொட்டு முத்தம் கொடுக்கிறோம்.
கன்னங் குழியத் தம்பியும்
கையைத் தட்டிச் சிரிக்கிறான்.
அன்னை, தந்தை, பலரையும்
அணைத்து முத்தம் தருகிறான்.
விசை கொடுத்தால் ஓடிடும்
வித்தை யெல்லாம் காட்டிடும்
இசை முழக்கம் செய்திடும்
இனிய பொம்மைப் பரிசுகள் !
படம் நிறைந்த புத்தகம்
பலகை, பந்து, பலவகை
உடைகள், தின்னும் பண்டங்கள்
உவந்தே பலரும் தருகிறார்.
பட்டுப் போன்ற கைகளால்
பாசத் தோடு தம்பியும்
லட்டு, மிட்டாய், ரொட்டிகள்
நாங்கள் தின்னத் தருகிறான்.
சிறந்த இந்தக் காட்சியைத்
திரண்டு வந்து பாருங்கள்.
பிறந்த நாளில் தம்பியைப்
பெரியோர் கூடி வாழ்த்துங்கள்.
காந்தியைக் காணலாம்
சிறுவன்
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கருணைபொங்கும் திருமுகத்தைக்
காணுவேன் அம்மா.
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கனியைப் போன்ற இனிய சொல்லைக்
கேட்பேனே அம்மா.
சாந்தமூர்த்தி காந்தியைப்போல்
காண முடியுமா?-அம்மா
சத்தியத்தின் வடிவம்தன்னைக்
காண முடியுமா?
மாந்தருக்குள் தெய்வம்தன் னைக்
காண முடியுமா?-நல்ல
வழியைக்காட்டும் ஒளியைநாமும்
காண முடியுமா?
சிறுவன்
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கருணைபொங்கும் திருமுகத்தைக்
காணுவேன் அம்மா.
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கனியைப் போன்ற இனிய சொல்லைக்
கேட்பேனே அம்மா.
சாந்தமூர்த்தி காந்தியைப்போல்
காண முடியுமா?-அம்மா
சத்தியத்தின் வடிவம்தன்னைக்
காண முடியுமா?
மாந்தருக்குள் தெய்வம்தன் னைக்
காண முடியுமா?-நல்ல
வழியைக்காட்டும் ஒளியைநாமும்
காண முடியுமா?
அம்மா
காந்தியைப்போல் ஒருமகானை
இந்த உலகிலே
காணமுடியும், காணமுடியும்
கண்ணே, கேளடா.
உண்மைபேசும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உறுதிஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அன்புபொங்கும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அகிம்சைஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உண்மை, உறுதி, அன்பு, அகிம்சை
உன்னி டத்திலே
உள்ளதென்றால் உன்னிடத்தும்
காந்தி இருக்கிறார்.
என்றும்அவரைக் கண்டுகண்டு
இன்பம் கொள்ளலாம்.
இதயக்கோயில் தன்னில்வைத்துப்
பூசை செய்யலாம்.
காந்தியைப்போல் ஒருமகானை
இந்த உலகிலே
காணமுடியும், காணமுடியும்
கண்ணே, கேளடா.
உண்மைபேசும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உறுதிஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அன்புபொங்கும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அகிம்சைஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உண்மை, உறுதி, அன்பு, அகிம்சை
உன்னி டத்திலே
உள்ளதென்றால் உன்னிடத்தும்
காந்தி இருக்கிறார்.
என்றும்அவரைக் கண்டுகண்டு
இன்பம் கொள்ளலாம்.
இதயக்கோயில் தன்னில்வைத்துப்
பூசை செய்யலாம்.
தாத்தாவும் பேரனும்
தாத்தா
சோற்று மூட்டை கட்டிக் கொண்டு
தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு
ஆற்றைக் கூடக் கடந்து சென்று
அடுத்த நகரில் படித்து வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
காட்டு வழியைக் கடந்து சென்று
கனத்த மழையில் நனைந்து கொண்டு
வீட்டை நோக்கி இரவில் வருவேன்
விளக்கே இல்லா வீதி வழியே
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து
எழுத்தைத் தேடித் தேடிப் பிடித்துக்
கண்கள் எரிய இரவு நேரம்
கல்வி தன்னைக் கற்று வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
அரிசி வாங்கப் பணமும் இன்றி
அடுப்பு மூட்ட வழியும் இன்றி
இருந்த போதும் சம்ப ளத்தை
எப்ப டியோ கட்டி வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
ஐந்து வகுப்புப் படிப்ப தற்குள்
அதிகத் தொல்லை அடைந்த தாலே
அந்த வகுப்பில் தேர்வு பெற்றும்
அந்தோ ! படிப்பை நிறுத்தி விட்டேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
தாத்தா
சோற்று மூட்டை கட்டிக் கொண்டு
தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு
ஆற்றைக் கூடக் கடந்து சென்று
அடுத்த நகரில் படித்து வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
காட்டு வழியைக் கடந்து சென்று
கனத்த மழையில் நனைந்து கொண்டு
வீட்டை நோக்கி இரவில் வருவேன்
விளக்கே இல்லா வீதி வழியே
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து
எழுத்தைத் தேடித் தேடிப் பிடித்துக்
கண்கள் எரிய இரவு நேரம்
கல்வி தன்னைக் கற்று வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
அரிசி வாங்கப் பணமும் இன்றி
அடுப்பு மூட்ட வழியும் இன்றி
இருந்த போதும் சம்ப ளத்தை
எப்ப டியோ கட்டி வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
ஐந்து வகுப்புப் படிப்ப தற்குள்
அதிகத் தொல்லை அடைந்த தாலே
அந்த வகுப்பில் தேர்வு பெற்றும்
அந்தோ ! படிப்பை நிறுத்தி விட்டேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
பேரன்
அதிக தூரம் நடந்தி டாமல்
அருகி லுள்ள பள்ளி சென்று
மதிய உணவும் உண்டு விட்டு
மகிழ்ச்சி யோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
சீரு டையை அணிந்து கொண்டு
செல்வர் என்றும் ஏழை என்றும்
வேறு பாடே ஏதும் இன்றி
விருப்ப மோடு படித்து வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இலவ சமாய்க் கல்வி உண்டு
இருந்து படிக்க வசதி உண்டு
கலக்க மின்றிக் கவலை யின்றிக்
கல்வி கற்றுத் திரும்பி வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
பென்சில், நோட்டு, தேவை யான
புத்த கங்கள் போன்ற வற்றை
அன்ப ளிப்பாய்ப் பெற்று நானும்
ஆர்வத் தோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இன்னும் நிறையக் கல்வி கற்று
இனிய முறையில் தொழிலும் கற்று
நன்மை செய்வேன், நமது நாடு
நன்கு வளர, நானும் வளர்வேன்.
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
அதிக தூரம் நடந்தி டாமல்
அருகி லுள்ள பள்ளி சென்று
மதிய உணவும் உண்டு விட்டு
மகிழ்ச்சி யோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
சீரு டையை அணிந்து கொண்டு
செல்வர் என்றும் ஏழை என்றும்
வேறு பாடே ஏதும் இன்றி
விருப்ப மோடு படித்து வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இலவ சமாய்க் கல்வி உண்டு
இருந்து படிக்க வசதி உண்டு
கலக்க மின்றிக் கவலை யின்றிக்
கல்வி கற்றுத் திரும்பி வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
பென்சில், நோட்டு, தேவை யான
புத்த கங்கள் போன்ற வற்றை
அன்ப ளிப்பாய்ப் பெற்று நானும்
ஆர்வத் தோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இன்னும் நிறையக் கல்வி கற்று
இனிய முறையில் தொழிலும் கற்று
நன்மை செய்வேன், நமது நாடு
நன்கு வளர, நானும் வளர்வேன்.
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
எனது ஊர்
என்றன் ஊரோ இராயவரம்;
இனிமை மிக்க சிறுநகராம்.
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
மாவட் டத்தைச் சேர்ந்ததுவாம்.
தென்னை மரங்கள் இருபுறமும்
தென்றல் வீசி வரவேற்கும்.
செந்நெல் விளையும் வயல்களுமே
தெரியும் அந்த வழியெல்லாம்.
ஊரின் உள்ளே நுழைந்ததுமே
உள்ளம் கவரும் கோபுரங்கள்!
நேராய் உள்ள தெருக்களுடன்
நிறைய மாட மாளிகைகள்!
ஊரின் நடுவே சிவன்கோயில்
ஊருணி பலவும் அங்குண்டு.
மாரி யம்மன் திருக்கோயில்
மகிமை மிகவும் உடையதுவாம்.
முத்து மாரி அம்மனுக்கு
மிகமிகச் சீருடன் சிறப்பாகப்
பத்து நாட்கள் திருநாளாம்;
பலரும் பார்த்து மகிழ்வாராம்
கணித மேதை கதிரேசர்
கருத்துடன் பிள்ளைகள் படித்திடவே
புனித மான காந்திமகான்
பெயரில் பள்ளி நிறுவினரே.
பொன்னாச் சியெனும் ஊருணியின்
பொன்னைப் போன்ற நிறமுள்ள
தண்ணீர் உண்டு; ஊர்மக்கள்
தாகம் தீர்க்கும் குணமுண்டு.
வாரச் சந்தை புதன்கிழமை;
வருவார் மக்கள் திரளாக.
கீரை முதலாய் அரிசிவரை
கிடைக்கும் அந்தச் சந்தையிலே!
அம்மன் கோயில் முன்னாலே
ஆடிப் பாடித் தோழருடன்,
சின்ன வயதில் திரிந்ததனை
எண்ணும் போதே இனிக்கிறதே!
என்றன் ஊரோ இராயவரம்;
இனிமை மிக்க சிறுநகராம்.
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
மாவட் டத்தைச் சேர்ந்ததுவாம்.
தென்னை மரங்கள் இருபுறமும்
தென்றல் வீசி வரவேற்கும்.
செந்நெல் விளையும் வயல்களுமே
தெரியும் அந்த வழியெல்லாம்.
ஊரின் உள்ளே நுழைந்ததுமே
உள்ளம் கவரும் கோபுரங்கள்!
நேராய் உள்ள தெருக்களுடன்
நிறைய மாட மாளிகைகள்!
ஊரின் நடுவே சிவன்கோயில்
ஊருணி பலவும் அங்குண்டு.
மாரி யம்மன் திருக்கோயில்
மகிமை மிகவும் உடையதுவாம்.
முத்து மாரி அம்மனுக்கு
மிகமிகச் சீருடன் சிறப்பாகப்
பத்து நாட்கள் திருநாளாம்;
பலரும் பார்த்து மகிழ்வாராம்
கணித மேதை கதிரேசர்
கருத்துடன் பிள்ளைகள் படித்திடவே
புனித மான காந்திமகான்
பெயரில் பள்ளி நிறுவினரே.
பொன்னாச் சியெனும் ஊருணியின்
பொன்னைப் போன்ற நிறமுள்ள
தண்ணீர் உண்டு; ஊர்மக்கள்
தாகம் தீர்க்கும் குணமுண்டு.
வாரச் சந்தை புதன்கிழமை;
வருவார் மக்கள் திரளாக.
கீரை முதலாய் அரிசிவரை
கிடைக்கும் அந்தச் சந்தையிலே!
அம்மன் கோயில் முன்னாலே
ஆடிப் பாடித் தோழருடன்,
சின்ன வயதில் திரிந்ததனை
எண்ணும் போதே இனிக்கிறதே!
சேவகரும் சேர்ந்தனர் !
வெள்ளையர்கள் நம்நாட்டை
ஆண்ட காலம்.
மிகக்கொடுமை மக்களுக்குச்
செய்த காலம்.
தனிஅரசாய்ப் புதுக்கோட்டை
இருந்த காலம்.
தடைகள்பல அரசாங்கம்
விதித்த காலம்.
தேசபக்தர் பலர்சிறையில்
வாழ்ந்த காலம்.
தெருவினிலே கூடுதற்கும்
பயந்த காலம்.
புதுக்கோட்டைத் தனிஅரசில்
அந்த நாளில்
புகழுடனே விளங்கிவந்த
ஊர்க ளுக்குள்
நான்பிறந்த இராயவரம்
என்னும் ஊரில்
நல்லவர்கள் பலர்தொண்டு
செய்து வந்தார்.
வெள்ளையர்கள் நம்நாட்டை
ஆண்ட காலம்.
மிகக்கொடுமை மக்களுக்குச்
செய்த காலம்.
தனிஅரசாய்ப் புதுக்கோட்டை
இருந்த காலம்.
தடைகள்பல அரசாங்கம்
விதித்த காலம்.
தேசபக்தர் பலர்சிறையில்
வாழ்ந்த காலம்.
தெருவினிலே கூடுதற்கும்
பயந்த காலம்.
புதுக்கோட்டைத் தனிஅரசில்
அந்த நாளில்
புகழுடனே விளங்கிவந்த
ஊர்க ளுக்குள்
நான்பிறந்த இராயவரம்
என்னும் ஊரில்
நல்லவர்கள் பலர்தொண்டு
செய்து வந்தார்.
பாரதியார் பெயராலே
சங்கம் வைத்துப்
பையன்கள் சிலர்கூடி
நடத்தி வந்தோம்.
அறிஞர்களை வரவழைத்துப்
பேசக் கேட்டோம்.
அரியபல புத்தகங்கள்
படித்து வந்தோம்.
தேசபக்திப் பாடல்களைக்
கற்று வந்தோம்.
தினந்தோறும் நல்லறிவைப்
பெற்று வந்தோம்.
பாரதியார் விழாநடத்த
ஆசைப் பட்டோம்.
பலர்கூடி ஆர்வமுடன்
ஈடு பட்டோம்.
இராயவரம் மாரியம்மன்
கோவில் தன்னில்
எழிலுடைய வாகனங்கள்
பலவும் உண்டு.
கோயில்தனை நிர்வாகம்
செய்த நல்ல
குணமுடையோர் எங்களது
விருப்பம் போல
வெள்ளியிலே செய்தஒரு
கேட கத்தை
விருப்பமுடன் தந்தனரே
விழா நடத்த.
மாடுஇழுக்கும் சகடையிலே
கேட கத்தை
வைத்துஅதிலே பாரதியார்
படத்தை வைத்தோம்.
மலர்களினால் அலங்கரித்தோம்.
கொடிகள் ஏந்தி
“வாழ்க ! வாழ்க ! பாரதியார்
நாமம்” என்றோம்.
சுவாமிவலம் வருகின்ற
தெருக்க ளெல்லாம்
சுற்றிவந்தோம் பாரதியார்
பாட்டுப் பாடி.
இடிமுழக்கம் செய்வதுபோல்
சிறுவர் கூட்டம்
எழுச்சியுடன் பாரதியார்
பாட்டைப் பாட
அரசாங்கச் சேவகர்கள்
அங்கு வந்தார்,
“யார்இதனை நடத்துவது ?
சொல்க” என்றார்.
“ஊர்மக்கள் நடத்துகிறோம்
ஒன்று கூடி.
உயர்கவியைப் போற்றுகிறோம்
பாட்டுப் பாடி”
என்றதுமே அவர்எதுவும்
கூற வில்லை.
எங்களுடன் அவர்களுமே
நடந்து வந்தார்.
பாரதிக்குச் சிலர்தேங்காய்
உடைக்க லானார்.
பக்தியுடன் சூடத்தைக்
கொளுத்த லானார்.
கைகூப்பி வழியெல்லாம்
வணங்க லானார்.
கடவு ளைப்போல் மாகவியைக்
கருத லானார்.
- Sponsored content
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 14
|
|