புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
26 Posts - 39%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 2%
Jenila
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
6 Posts - 5%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
5 Posts - 4%
Jenila
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Rutu
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%
manikavi
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:24 pm

பாப்பாவின் அழுகை

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

கிட்டு அண்ணன் ஓடி வந்தான்;
அழுகை நிற்க வில்லை.
கிலுகி லுப்பை ஆட்ட லானான்;
அழுகை நிற்க வில்லை !

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

பொன்னி அக்கா ஓடி வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘பூம்பூம்’ என்றே ஊத லானாள்;
அழுகை நிற்க வில்லை !

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
அழுகை நிற்க வில்லை.
தாளம் போட்டுக் காட்டலானார்
அழுகை நிற்க வில்லை!

சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.

அம்மா உடனே அருகில் வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘ஆ...ராரோ’ பாட லானாள்
அழுகை பறந்து போச்சு !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:27 pm

பள்ளிக்கூட மணி


டாண் டாண், டாண் டாண்
மணி அடிக்குது.
நம்மையெல்லாம் வருகவருக
என்ற ழைக்குது.
சிறுவரோடு சிறுமியரைச்
சேரத்த ழைக்குது.
அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது.

ஆசிரியர் வந்ததுமே
நிற்கச் சொல்லுது.
அக்கறையாய்ப் பாடமெல்லாம்
கற்கச் சொல்லுது.

படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது.
பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:28 pm

அதிசயம்!

அழகுத் தோகை விரித்து நன்றாய்
ஆடும் மயிலைப் பாராய்.
அந்த மயிலும் ஆண்மயில்தான்
அதனை நீயும் அறிவாய

அமுத மாகக் குயிலும் பாடும்
அதனைக் கேட்டு, மகிழ்வாய்
அந்தக் குயிலும் ஆண்குயில்தான்
அதனை நீயும் அறிவாய்.

அடர்ந்த பிடரி மயிர்இருக்கும்
அழகுச் சிங்கம் பாராய்

அந்தச் சிங்கம் ஆண் சிங்கம்தான்

அதனை நீயும் அறிவாய்.

அழகுத் தோகை, இனிய குரலும்,
அடர்ந்த பிடரி மயிரும்
ஆண்இனத்தில் இருக்கும் இந்த
அதிச யத்தை அறிவாய் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:30 pm

ராஜ கோபுரம்

பொழுது புலரும் வேளையில்
எழுந்து செல்வேன் வேகமாய்.
அழகு ராஜ கோபுரம்
அருகில் தெரியும், வணங்குவேன்.

ஏழ டுக்குக் கோபுரம்
எங்கள் ஊருக் கோபுரம்
மேலே காணும் கலசங்கள்
மினுமி னுக்கும் பொன்னைப் போல்.

ஆனை முகத்துக் கணபதி
அழகு மயிலில் வேலவன்
வீணை யோடு கலைமகள்
வெற்றி அளிக்கும் திருமகள்

காளை மீது சிவனுடன்
காட்சி அளிக்கும் பார்வதி
மேலும் கடவுள் பலரையும்
வெளியில் காட்டும் கோபுரம்.

தெய்வ மெல்லாம் கூடியே
சேர்ந்து காட்சி தருவதால்
கைகள் கூப்பித் தொழுகிறேன்
காலை எழுந்த உடனேயே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:31 pm

குற்றாலத்துக் குரங்கு


குற்றா லத்து மலையிலே
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குட்டி யோடு வாழ்ந்ததாம்.

அம்மாக் குரங்கும் குட்டியும்
அருவி நீரில் குளிக்குமாம்.
அருவி நீரில் குளிக்குமாம்.
ஆனந் தமாய்க் குதிக்குமாம்.

குளித்த பிறகு இரண்டுமே
குடுகு டென்றே ஓடுமாம்.
குடுகு டென்றே ஓடுமாம்.
கோயில் வாசல் சேருமாம்.

குட்டிக் குரங்கும் தாயுமே
கோயி லுக்குள் செல்லுமாம்,
கோயி லுக்குள் செல்லுமாம்.
குனிந்து வணக்கம் செய்யுமாம்.

பழங்கள் தேங்காய்த் தட்டுடன்
பக்தர் அங்கே வருவராம்
பக்தர் அங்கே வருவராம்.
பார்த்துக் கொண்டே யிருக்குமாம்.

தட்டி லுள்ள பொருள்களைத்
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தடங்கல் செய்வ தில்லையாம்.

அர்ச்ச னைகள் நடப்பதை
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அதனைக் குட்டி பார்க்குமாம்.

குங்கு மத்தைத் தாயுமே
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குட்டி தன்னை நெருங்குமாம்.

குட்டிக் குரங்கின் நெற்றியில்
பொட்டு வைத்து மகிழுமாம்.
பொட்டு வைத்து மகிழுமாம்.
கட்டி முத்தம் கொடுக்குமாம்.

பக்தர் இரண்டு குரங்கையும்
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பழங்கள் தேங்காய் தருவராம்.

அம்மா குரங்கும் குட்டியும்
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
ஆசை யாகத் தின்னுமாம்.

தின்ற பிறகு இரண்டுமே
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
திரும்பி ஓட்டம் பிடிக்குமாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:34 pm


கண்ணன் வீட்டுத் தோட்டம்

கண்ணன் வீட்டுத் தோட்டத்திலே
வண்ண வண்ண மலர்கள் உண்டு.

வண்ண மலர்கள் கூட்டத்திலே
வாச னைகள் அதிகமுண்டு.

வாச னையை அறிந்துகொண்டு
வண்டு தேடி வருவதுண்டு.

வண்டின் பசியைத் தீர்த்திடவே
மலர்கள் தேனைத் தருவதுண்டு.

மலர்கள் தந்த தேனைஉண்டு
வண்டு சுற்றி வருவதுண்டு.

வண்டு சுற்றிச் சுற்றிவந்து
வாழ்த்துப் பாடி மகிழ்வதுண்டு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:35 pm


கண்ணன் கையில் கண்டது....?

கோகு லத்துக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
அருகில் வருகிறான்.

மேக வண்ணக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
மெல்ல, மெல்ல நடந்து நடந்தே
அருகில் வருகிறான்.

கையைப் பின்னால் மறைத்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.

பையப் பைய நடந்து நடந்து
கண்ணன் வருகிறான்.
பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே
கண்ணன் வருகிறான்.

ஃ ஃ ஃ

கண்ணன் எதையோ பின்புறம்
கையில் வைத்து மறைக்கிறான்.
என்ன வாக இருக்குமோ?
எட்டிப் பார்த்தேன், ஆவலாய்.

எட்டி எட்டிப் பார்த்துமே
எனக்குத் தெரிய வில்லையே !
சுற்றி வந்தேன் கண்ணனை.
சுற்றி அவனும் ஏய்த்தனன் !

மாயக் காரன் கைகளை
மறைத்து மறைத்து வைத்ததால்,
ஓய்ந்து போனேன். கடைசியில்
உயரே கையைத் தூக்கினான்.

கண்ணன் கையில் இருந்ததைக்
கண்ட வுடனே நானுமே
கொண்டேன் மிகவும் இன்பமே
குதிக்க லானேன், மகிழ்ச்சியில் !

கண்ணன் கையில் இருந்தது
என்ன என்று தெரியுமா ?
வெண்ணெய் இல்லை; குழல் இல்லை.
வேறே என்ன இருந்தது ?

கண்ணன் கையில் இருந்தது
கால மெல்லாம் உதவிடும்
உண்மை கூறும் புத்தகம்
உயர்ந்த பகவத் கீதையாம் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:36 pm

பெரிய கண்டம்

கண்டங் களிலே மிகவும் பெரிய
கண்டம் ஆசியா.
காடு மலை பீட பூமி
நிறைந்த ஆசியா.

பண்டைக் கால ஆதி மனிதர்
பிறந்த ஆசியா.
பழமை யான நாக ரிகம்
சிறந்த ஆசியா.

புத்தர், ஏசு, நபிகள், காந்தி
பிறந்த ஆசியா.
புனித மான மதங்கள் பிறந்து
வளர்ந்த ஆசியா.

மொத்தம் இந்த உலகில் உள்ள
கண்டம் ஐந்திலே
மிகவும் அதிக மக்கள் வாழும்
கண்டம் ஆசியா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:36 pm

சிரிக்கும் பூக்கள்

வண்ண வண்ணப் பூக்கள்-நல்ல
மணம் நிறைந்த பூக்கள்.
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-அவை
இனிய நல்ல பூக்கள்.

நீலம், பச்சை, சிவப்பு-இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன்-இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.

ஆடி அசையும் பூக்கள்-நான்
அருகில் சென்று பறிப்பேன்.
கூடை நிறைந்து போகும்-நான்
கொய்த மலர்கள் சிரிக்கும்.

பார்க்கும் போதும் சிரிக்கும்-நான்
பறிக்கும்போதும் சிரிக்கும்.
சேர்த்துக் கட்டும் போதும்-அவை
சிரித்துக் கொண்டே இருக்கும் !

கண்ணன் சிலைக்குப் போட-நான்
கட்டி வைத்த பூக்கள்
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-என்
சின்னத் தம்பி போல !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:39 pm

குரங்குக் குடும்பம்
(மாமல்லபுரச் சிற்பம்)

அப்பாக் குரங்கு பின்புறத்தில்
அமர்ந்தி ருக்குது;
அம்மாக் குரங்கின் தலையி லிருந்து
பேன் எடுக்குது.

பிள்ளைக் குரங்கு அம்மா மடியில்
படுத்தி ருக்குது.
பிரிய மாக அம்மா அதற்குப்
பால் கொடுக்குது.

அன்பு, பாசம், கடமை யெல்லாம்
கல்லில் காட்டிடும்
அற்பு தத்தைச் செய்த சிற்பி
அவரைத் தெரியுமோ?

இன்று அவரைத் தெரிய வி்ல்லை
என்ற போதிலும்,
இந்தக் காட்சி நமது நெஞ்சில்
என்றும் நிற்குமே !

Sponsored content

PostSponsored content



Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக