புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 11 of 14 •
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
வட்டம் போட்ட கழுகுகளும்
வருமே மெதுவாய்க் கீழிறங்கி.
தட்டுடன் அமர்ந்த குருக்களிடம்
தாவித் தாவிச் சென்றிடுமே.
நெய்யும் சர்க்கரைப் பொங்கலுமே
நீட்டிடு வாரே குருக்களுமே.
கையால் அவரும் ஊட்டிடவே
கழுகுகள் உண்டு களித்திடுமே.
உச்சி வேளையில் தினந்தோறும்
ஒழுங்காய்க் கழுகுகள் வருவதையும்
அச்சம் இன்றி உணவருந்தி
அவைகள் பறந்து செல்வதையும்
பற்பல ஆண்டாய் இம்மலையில்
பார்த்தே வருவார் மக்களுமே.
அற்புதக் காட்சி இதைநானும்
அடடா, கண்டேன், கண்டேன் !
வருமே மெதுவாய்க் கீழிறங்கி.
தட்டுடன் அமர்ந்த குருக்களிடம்
தாவித் தாவிச் சென்றிடுமே.
நெய்யும் சர்க்கரைப் பொங்கலுமே
நீட்டிடு வாரே குருக்களுமே.
கையால் அவரும் ஊட்டிடவே
கழுகுகள் உண்டு களித்திடுமே.
உச்சி வேளையில் தினந்தோறும்
ஒழுங்காய்க் கழுகுகள் வருவதையும்
அச்சம் இன்றி உணவருந்தி
அவைகள் பறந்து செல்வதையும்
பற்பல ஆண்டாய் இம்மலையில்
பார்த்தே வருவார் மக்களுமே.
அற்புதக் காட்சி இதைநானும்
அடடா, கண்டேன், கண்டேன் !
விடுதலை
வாட்ட மாகக் கூட்டில் இருந்த
வண்ணக் கிளியைக் காலையில்
கூட்டைத் திறந்து வெளியில் விட்டேன்
குதூக லமாய்ப் பறந்ததே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
கழுத்து நோக இரவு முழுதும்
கட்டிக் கிடந்த கன்றினை
அவிழ்த்து விட்டேன்; விடிந்த வுடனே
ஆனந் தமாய்க் குதித்ததே !
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
தொட்டிக் குள்ளே நீந்தி நீந்திச்
சோர்ந்து போன மீன்களை
விட்டு வந்தேன் ஆற்று நீரில்
விரைந்து நீ்ந்தி மகிழவே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
முன்பு ஒருநாள் பிடித்து வந்த
மின்னி டும்பொன் வண்டினை
கொன்றை மரத்தில் காலை நேரம்
கொண்டு சேர்த்தேன் மீண்டுமே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
சுதந்தி ரத்தை நாம் அடைந்த
தூய்மை யான நாளிலே
உதவி செய்தேன்; அதனை எண்ணி
உள்ளம் துள்ளு கின்றதே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
வாட்ட மாகக் கூட்டில் இருந்த
வண்ணக் கிளியைக் காலையில்
கூட்டைத் திறந்து வெளியில் விட்டேன்
குதூக லமாய்ப் பறந்ததே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
கழுத்து நோக இரவு முழுதும்
கட்டிக் கிடந்த கன்றினை
அவிழ்த்து விட்டேன்; விடிந்த வுடனே
ஆனந் தமாய்க் குதித்ததே !
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
தொட்டிக் குள்ளே நீந்தி நீந்திச்
சோர்ந்து போன மீன்களை
விட்டு வந்தேன் ஆற்று நீரில்
விரைந்து நீ்ந்தி மகிழவே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
முன்பு ஒருநாள் பிடித்து வந்த
மின்னி டும்பொன் வண்டினை
கொன்றை மரத்தில் காலை நேரம்
கொண்டு சேர்த்தேன் மீண்டுமே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
சுதந்தி ரத்தை நாம் அடைந்த
தூய்மை யான நாளிலே
உதவி செய்தேன்; அதனை எண்ணி
உள்ளம் துள்ளு கின்றதே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
கடலும் மழைத்துளிகளும்
கடல் :
மழைத் துளிகாள், மழைத் துளிகாள்,
என்னி டத்திலே
வந்து நீங்கள் சேர்ந்த தாலே
மகிமை பெறுகிறீர்.
அழகு, ஆழம், அகலம், நீளம்
என்னைப் போலவே
யாரி டத்தில் உண்டு? நீங்கள்
கூற முடியுமோ?
மழைத் துளிகள்:
ஆறு, ஏரி, குளங்க ளெல்லாம்
அளவில் சிறியவை.
ஆன போதும் அவற்றில் சேர்ந்தால்
அதிகம் மகிழுவோம்.
ஊரில் உள்ளோர் தாகம் தீர
உதவி செய்யலாம்.
உப்புக் கரிக்கு தென்று சொல்லித்
துப்பு வார்களோ?
கடல் :
மழைத் துளிகாள், மழைத் துளிகாள்,
என்னி டத்திலே
வந்து நீங்கள் சேர்ந்த தாலே
மகிமை பெறுகிறீர்.
அழகு, ஆழம், அகலம், நீளம்
என்னைப் போலவே
யாரி டத்தில் உண்டு? நீங்கள்
கூற முடியுமோ?
மழைத் துளிகள்:
ஆறு, ஏரி, குளங்க ளெல்லாம்
அளவில் சிறியவை.
ஆன போதும் அவற்றில் சேர்ந்தால்
அதிகம் மகிழுவோம்.
ஊரில் உள்ளோர் தாகம் தீர
உதவி செய்யலாம்.
உப்புக் கரிக்கு தென்று சொல்லித்
துப்பு வார்களோ?
அவர்கள் தந்த மரம்
காகம் ஒன்று ஆல மரத்தில்
வந்து அமர்ந்தது.
கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக்
கொத்தித் தின்றது.
வேக மாகச் சிறக டித்துப்
பறந்து சென்றது.
வெட்டவெளியில் ஓரி டத்தில்
எச்ச மிட்டது.
எச்சத் துடனே தரையில் வீழ்ந்த
ஆலம் விதைகளில்
இரண்டு வாரம் சென்ற பின்னர்
ஒன்று முளைத்தது.
உச்சி வெய்யில் தலையில் விழவே
நடந்து சென்றவர்
ஒருவர் அந்தச் செடியைக் கண்டே
உள்ளம் மகிழ்ந்தனர்.
ஆடு மாடு கடித்தி டாமல்
வேலி போட்டனர்.
அவரே தினமும் மாலை நேரம்
தண்ணீர் விட்டனர்.
பாடு பட்டே அந்தச் செடியை
வளர்த்து வந்ததால்
பத்தே ஆண்டில் பெரிய மரமாய்
வளர்ந்து விட்டது.
கோடை நாளில் குடையைப் போல
நிழலைத் தந்திடும்.
கூட்டம் நடத்த மண்ட பம்போல்
என்றும் உதவிடும்.
ஆடிப் பாடச் சிறுவ ருக்கும்
அரங்க மாகிடும்.
அருமை யான ஊஞ்ச லாக
விழுது மாறிடும்.
காகம் ஒன்று ஆல மரத்தில்
வந்து அமர்ந்தது.
கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக்
கொத்தித் தின்றது.
வேக மாகச் சிறக டித்துப்
பறந்து சென்றது.
வெட்டவெளியில் ஓரி டத்தில்
எச்ச மிட்டது.
எச்சத் துடனே தரையில் வீழ்ந்த
ஆலம் விதைகளில்
இரண்டு வாரம் சென்ற பின்னர்
ஒன்று முளைத்தது.
உச்சி வெய்யில் தலையில் விழவே
நடந்து சென்றவர்
ஒருவர் அந்தச் செடியைக் கண்டே
உள்ளம் மகிழ்ந்தனர்.
ஆடு மாடு கடித்தி டாமல்
வேலி போட்டனர்.
அவரே தினமும் மாலை நேரம்
தண்ணீர் விட்டனர்.
பாடு பட்டே அந்தச் செடியை
வளர்த்து வந்ததால்
பத்தே ஆண்டில் பெரிய மரமாய்
வளர்ந்து விட்டது.
கோடை நாளில் குடையைப் போல
நிழலைத் தந்திடும்.
கூட்டம் நடத்த மண்ட பம்போல்
என்றும் உதவிடும்.
ஆடிப் பாடச் சிறுவ ருக்கும்
அரங்க மாகிடும்.
அருமை யான ஊஞ்ச லாக
விழுது மாறிடும்.
சின்ன விழுது பல்து லக்கத்
தினமும் உதவிடும்.
தேடி வந்து பறவை யெல்லாம்
கூடு கட்டிடும்.
இன்னும் நூறு, நூறு விதத்தில்
நன்மை செய்திடும்
இந்த மரத்தின் பெருமை கூற
எவரால் முடிந்திடும் ?
விதையைப் போட்டுச் சென்ற காகம்
எங்கு திரியுமோ?
வேலி போட்டு வளர்த்த மனிதர்
எங்கு வாழ்வரோ?
உதவி பலவும் செய்யும் மரத்தை
நமக்குத் தந்தவர்
உலகில் எங்கே இருந்த போதும்
வாழ்க, வாழ்கவே !
தினமும் உதவிடும்.
தேடி வந்து பறவை யெல்லாம்
கூடு கட்டிடும்.
இன்னும் நூறு, நூறு விதத்தில்
நன்மை செய்திடும்
இந்த மரத்தின் பெருமை கூற
எவரால் முடிந்திடும் ?
விதையைப் போட்டுச் சென்ற காகம்
எங்கு திரியுமோ?
வேலி போட்டு வளர்த்த மனிதர்
எங்கு வாழ்வரோ?
உதவி பலவும் செய்யும் மரத்தை
நமக்குத் தந்தவர்
உலகில் எங்கே இருந்த போதும்
வாழ்க, வாழ்கவே !
எது சுதந்திரம் ?
ஒன்பது மணிவரை படுக்கையில் கிடந்தே
உறங்கிடும் பொன்னனை எழுப்பினள் அம்மா.
“இன்றுநம் தேசச் சுதந்திரத் திருநாள்.
எழுந்திரு சீக்கிரம்” என்றனள் அம்மா.
“சுதந்திர நாளில் சுகமாய்த் தூங்கச்
சுதந்திரம் உண்டு. சும்மா போபோ.
மதியம் வரைநான் தூங்கிடு வேன்” என
மறுபுறம் திரும்பிப் பொன்னன் படுத்தான்.
பதினொரு மணிவரை தூங்கிடும் பொன்னனைப்
பார்த்ததும் தந்தை ஆத்திரம் கொண்டார்.
முதுகினில் இரண்டு பலமாய் வைத்தார்.
முணுமுணுத் தவனும் துள்ளி எழுந்தான்.
“அன்னையும் தந்தையும் சுதந்திர நாளில்
அடிமைபோல் என்னை நடத்திடு கின்றார்.
இன்றுநான் என்றன் இஷ்டம் போலவே
எதனையும் செய்வேன்” என்று நினைத்தான்.
கல்லை எடுத்தான்; கருநிற நாயின்
கால்களைப் பார்த்துக் குறிவைத் தெறிந்தான்.
‘ளொள்’என நாயும் சீறிப் பாய்ந்திட
நொடியில் பொன்னன் ஓடி ஒளிந்தான்.
சாலையில் கைகளை வீசி நடந்தான்;
தனக்கே சுதந்திரம் என்றவன் நினைத்தான்;
மாலையில் கார்கள், வண்டிகள் வந்தும்
வழிவிட வில்லை; எதிரில் நடந்தான்.
சட்டென ஒருகார் அவன்மேல் மோத,
தாவிக் குதித்தவன் தவறி விழுந்தான்.
பட்டெனத் தலையில் அடிபட லாச்சே!
பந்துபோல் நெற்றியும் புடைத்திட லாச்சே!
ஒன்பது மணிவரை படுக்கையில் கிடந்தே
உறங்கிடும் பொன்னனை எழுப்பினள் அம்மா.
“இன்றுநம் தேசச் சுதந்திரத் திருநாள்.
எழுந்திரு சீக்கிரம்” என்றனள் அம்மா.
“சுதந்திர நாளில் சுகமாய்த் தூங்கச்
சுதந்திரம் உண்டு. சும்மா போபோ.
மதியம் வரைநான் தூங்கிடு வேன்” என
மறுபுறம் திரும்பிப் பொன்னன் படுத்தான்.
பதினொரு மணிவரை தூங்கிடும் பொன்னனைப்
பார்த்ததும் தந்தை ஆத்திரம் கொண்டார்.
முதுகினில் இரண்டு பலமாய் வைத்தார்.
முணுமுணுத் தவனும் துள்ளி எழுந்தான்.
“அன்னையும் தந்தையும் சுதந்திர நாளில்
அடிமைபோல் என்னை நடத்திடு கின்றார்.
இன்றுநான் என்றன் இஷ்டம் போலவே
எதனையும் செய்வேன்” என்று நினைத்தான்.
கல்லை எடுத்தான்; கருநிற நாயின்
கால்களைப் பார்த்துக் குறிவைத் தெறிந்தான்.
‘ளொள்’என நாயும் சீறிப் பாய்ந்திட
நொடியில் பொன்னன் ஓடி ஒளிந்தான்.
சாலையில் கைகளை வீசி நடந்தான்;
தனக்கே சுதந்திரம் என்றவன் நினைத்தான்;
மாலையில் கார்கள், வண்டிகள் வந்தும்
வழிவிட வில்லை; எதிரில் நடந்தான்.
சட்டென ஒருகார் அவன்மேல் மோத,
தாவிக் குதித்தவன் தவறி விழுந்தான்.
பட்டெனத் தலையில் அடிபட லாச்சே!
பந்துபோல் நெற்றியும் புடைத்திட லாச்சே!
சுதந்திர நாளில் நினைத்ததைச் செய்வதே
சுதந்திரம் என்று பொன்னன் நினைத்தான்.
விதம்வித மான தொல்லைகள் வரவே
மெத்தவும் மனத்தில் வேதனை அடைந்தான்.
சோம்பிக் கிடைப்பது சுதந்திரம் இல்லை.
தொல்லைகள் தருவதும் சுதந்திரம் இல்லை.
வீம்புகள் செய்வதும் சுதந்திரம் இல்லை.
வேறெது உண்மைச் சுதந்திரம் ஆகும் ?
பிறரது உரிமையை மதிப்பது சுதந்திரம்.
பேச்சிலும் செயலிலும் தூய்மையே சுதந்திரம்.
உரிமையும், கடமையும் ஒன்றாய்ச் சேர்வதே
உண்மையில் சுதந்திரம், சுதந்திரமாகும் !
சுதந்திரம் என்று பொன்னன் நினைத்தான்.
விதம்வித மான தொல்லைகள் வரவே
மெத்தவும் மனத்தில் வேதனை அடைந்தான்.
சோம்பிக் கிடைப்பது சுதந்திரம் இல்லை.
தொல்லைகள் தருவதும் சுதந்திரம் இல்லை.
வீம்புகள் செய்வதும் சுதந்திரம் இல்லை.
வேறெது உண்மைச் சுதந்திரம் ஆகும் ?
பிறரது உரிமையை மதிப்பது சுதந்திரம்.
பேச்சிலும் செயலிலும் தூய்மையே சுதந்திரம்.
உரிமையும், கடமையும் ஒன்றாய்ச் சேர்வதே
உண்மையில் சுதந்திரம், சுதந்திரமாகும் !
கந்தனின் மாடு
மாட்டு வண்டி ஒன்றிலே
மூட்டை நெல்லை ஏற்றியே
காட்டு வழியாய்ச் சென்றனன்
கந்தன் என்னும் நல்லவன்.
ஒற்றை மாட்டு வண்டியை
ஓட்டி அவனும் செல்கையில்
சட்டென் றெதிரே வேகமாய்த்
தாவி வந்தான் திருடனே !
“மாட்டை இழுத்து நிறுத்திடு.
வண்டிக் குள்ளே இருந்திடும்
மூட்டை நெல்லை இறக்கிடு”
மிரட்ட லானான் திருடனும்.
“என்னை நம்பி மூட்டையை
ஏற்றி ஒருவன் அனுப்பினார்.
என்ன சொல்வேன் அவரிடம்?”
என்றே கந்தன் கலங்கினான்.
கத்தி ஒன்றைக் காட்டியே
“குத்திக் கொன்று போடுவேன்.
செத்துப் போக ஆசையா?”
திருடன் மேலும் மிரட்டினான்.
எந்தப் பேச்சும் பயனில்லை
என்ப தறிந்த கந்தனும்
தந்தி ரத்தின் உதவியால்
தப்பிப் பிழைக்க எண்ணினான்.
“கொண்டு வந்த நெல்லுமே
கொள்ளை போன தென்றுநான்
சொன்னால் ஊரார் நம்பிடார்.
தொழிலும் கெட்டுப் போகுமே!
மூட்டை நெல்லைத் தந்திட
முடிய வில்லை. ஆதலால்
மாட்டை அவிழ்த்துத் தருகிறேன்.
மகிழ்ச்சி யோடு சென்றிடு.
இந்த மாடு என்றனின்
சொந்த மாடு. ஆதலால்
என்றன் உயிரைக் காக்கவே
இதனைத் தருவேன்” என்றனன்.
மாட்டு வண்டி ஒன்றிலே
மூட்டை நெல்லை ஏற்றியே
காட்டு வழியாய்ச் சென்றனன்
கந்தன் என்னும் நல்லவன்.
ஒற்றை மாட்டு வண்டியை
ஓட்டி அவனும் செல்கையில்
சட்டென் றெதிரே வேகமாய்த்
தாவி வந்தான் திருடனே !
“மாட்டை இழுத்து நிறுத்திடு.
வண்டிக் குள்ளே இருந்திடும்
மூட்டை நெல்லை இறக்கிடு”
மிரட்ட லானான் திருடனும்.
“என்னை நம்பி மூட்டையை
ஏற்றி ஒருவன் அனுப்பினார்.
என்ன சொல்வேன் அவரிடம்?”
என்றே கந்தன் கலங்கினான்.
கத்தி ஒன்றைக் காட்டியே
“குத்திக் கொன்று போடுவேன்.
செத்துப் போக ஆசையா?”
திருடன் மேலும் மிரட்டினான்.
எந்தப் பேச்சும் பயனில்லை
என்ப தறிந்த கந்தனும்
தந்தி ரத்தின் உதவியால்
தப்பிப் பிழைக்க எண்ணினான்.
“கொண்டு வந்த நெல்லுமே
கொள்ளை போன தென்றுநான்
சொன்னால் ஊரார் நம்பிடார்.
தொழிலும் கெட்டுப் போகுமே!
மூட்டை நெல்லைத் தந்திட
முடிய வில்லை. ஆதலால்
மாட்டை அவிழ்த்துத் தருகிறேன்.
மகிழ்ச்சி யோடு சென்றிடு.
இந்த மாடு என்றனின்
சொந்த மாடு. ஆதலால்
என்றன் உயிரைக் காக்கவே
இதனைத் தருவேன்” என்றனன்.
மூட்டை விலையைப் போலவே
மூன்று மடங்கு இருந்திடும்
மாட்டைப் பெற்றுக் கொள்ளவே
மனம் இசைந்தான் திருடனே.
கந்தன் மாட்டை அவிழ்த்தனன்;
கள்ளன் கையில் கொடுத்தனன்.
அந்த மாடோ புதியவர்
அருகில் வந்தால் பாயுமே !
ஆர்வ மாகத் திருடனும்
அதனைத் தட்டிக் கொடுக்கவே,
கூர்மை யான கொம்பினால்
குத்தித் தொடையைக் கிழித்தது!
தொடையி லிருந்து ரத்தமும்
கொடகொ டென்று கொட்டவே
உடனே பயந்து திருடனும்
ஓட்ட மாக ஓடினான்.
‘ஐயோ! அப்பா!’ என்றவன்
அலறிக் கொண்டே வேகமாய்க்
கையைக் காலை உதறியே
காட்டுக் குள்ளே ஓடினான்.
கந்தன் மாடு துரத்தவே,
கதறித் திருடன் ஓடவே,
கந்தன் அந்தக் காட்சியைக்
கண்டு கண்டு சிரித்தனன்!
மூன்று மடங்கு இருந்திடும்
மாட்டைப் பெற்றுக் கொள்ளவே
மனம் இசைந்தான் திருடனே.
கந்தன் மாட்டை அவிழ்த்தனன்;
கள்ளன் கையில் கொடுத்தனன்.
அந்த மாடோ புதியவர்
அருகில் வந்தால் பாயுமே !
ஆர்வ மாகத் திருடனும்
அதனைத் தட்டிக் கொடுக்கவே,
கூர்மை யான கொம்பினால்
குத்தித் தொடையைக் கிழித்தது!
தொடையி லிருந்து ரத்தமும்
கொடகொ டென்று கொட்டவே
உடனே பயந்து திருடனும்
ஓட்ட மாக ஓடினான்.
‘ஐயோ! அப்பா!’ என்றவன்
அலறிக் கொண்டே வேகமாய்க்
கையைக் காலை உதறியே
காட்டுக் குள்ளே ஓடினான்.
கந்தன் மாடு துரத்தவே,
கதறித் திருடன் ஓடவே,
கந்தன் அந்தக் காட்சியைக்
கண்டு கண்டு சிரித்தனன்!
அழுத பிள்ளை சிரித்தது !
சின்னச் சின்ன அழகுப் பாப்பா
எங்கள் தம்பியாம்.
சிரித்துச் சிரித்து மகிழ்ச்சி யூட்டும்
எங்கள் தம்பியாம்.
அன்று நல்ல நிலவு தன்னில்
திறந்த வெளியிலே
அழகுத் தொட்டில் அதனில் தம்பி
படுத்தி ருந்தனன்.
சிரித்துக் கொண்டே இருந்த எங்கள்
சின்னத் தம்பியும்
திடுதிப் பென்று குரலெடுத்துக்
கதற லாயினன்!
அருமைத் தம்பி வீல்வீ லென்றே
அழுத காரணம்
அறிந்தி டாமல் ஐந்து நிமிடம்
விழிக்க லாயினேன்.
சிறிது நேரம் அழுத பின்னர்
எங்கள் தம்பியோ
சிரித்துக் கொண்டே கையை மேலே
காட்ட லாயினன்.
அருமை யாகக் காட்டு கின்ற
பொருளைக் கண்டதும்
அறிந்து கொண்டேன் கார ணத்தை
அந்தச் சமயமே.
என்ன அந்தக் கார ணம்தான்
என்றா கேட்கிறீர்?
எடுத்து நானும் கூறு கின்றேன்;
கேட்டுக் கொள்ளுவீர்.
சின்னத் தம்பி படுத்துக் கொண்டு
மேலே பார்க்கையில்
தெரிந்த தங்கே முழுமை யான
வெண்ணி லாவுமே!
சின்னச் சின்ன அழகுப் பாப்பா
எங்கள் தம்பியாம்.
சிரித்துச் சிரித்து மகிழ்ச்சி யூட்டும்
எங்கள் தம்பியாம்.
அன்று நல்ல நிலவு தன்னில்
திறந்த வெளியிலே
அழகுத் தொட்டில் அதனில் தம்பி
படுத்தி ருந்தனன்.
சிரித்துக் கொண்டே இருந்த எங்கள்
சின்னத் தம்பியும்
திடுதிப் பென்று குரலெடுத்துக்
கதற லாயினன்!
அருமைத் தம்பி வீல்வீ லென்றே
அழுத காரணம்
அறிந்தி டாமல் ஐந்து நிமிடம்
விழிக்க லாயினேன்.
சிறிது நேரம் அழுத பின்னர்
எங்கள் தம்பியோ
சிரித்துக் கொண்டே கையை மேலே
காட்ட லாயினன்.
அருமை யாகக் காட்டு கின்ற
பொருளைக் கண்டதும்
அறிந்து கொண்டேன் கார ணத்தை
அந்தச் சமயமே.
என்ன அந்தக் கார ணம்தான்
என்றா கேட்கிறீர்?
எடுத்து நானும் கூறு கின்றேன்;
கேட்டுக் கொள்ளுவீர்.
சின்னத் தம்பி படுத்துக் கொண்டு
மேலே பார்க்கையில்
தெரிந்த தங்கே முழுமை யான
வெண்ணி லாவுமே!
- Sponsored content
Page 11 of 14 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 14
|
|