புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
366 Posts - 49%
heezulia
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
25 Posts - 3%
prajai
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இரட்டை - சிறுகதை Poll_c10இரட்டை - சிறுகதை Poll_m10இரட்டை - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:15 am

ஆஸ்பத்திரியின் லிப்ட் எதிரே குழுமியிருந்தவர்களுடன் காத்திருக்க பொறுக்காமல் வாசுகி படியேறத்துவங்கினாள். கடந்த எட்டு மாதங்களாய் மேற்கொண்ட அலைச்சல்களை ஒப்பிட்டால் நாலு மாடி படி ஏறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லைதான். நாற்பதுகளில் சஞ்சரிக்கும் வயதுக்கு நாலு மாடி அதிகம்தான்.

சுவரில் பதித்து வைத்திருக்கிற கண்ணாடியில் மாதக்கணக்கில் தூங்காமல் ஓடியாடி வேலை செய்ததில் ஒரு சுற்று இளைத்துபோன உருவம் தெரிகிறது. குழந்தைகள் பிறந்த நிம்மதியில் அன்றைய இரவில் நன்றாய் தூங்க கூடிய பாக்யம் கிடைக்கலாம்.

கதவை தட்டி நுழைந்ததும் வெளிறிய முகமும் பெருத்த வயிறுமாய் வசுமதி அவளை நோக்கி கையை நீட்டினாள். பக்கத்தில் நின்றிருந்த வசுமதி புருஷன் சௌந்தர் வாங்க மதனி என்றான். எழுந்து நின்று பெற்றோர் இல்லாத வீட்டில் வசுமதிக்கு அத்தனையும் அவளே கல்லூரியில் படிக்க வைத்தது. வேலை வாங்கி தந்தது. அவளுக்கு சௌந்தரை வரன் பார்த்து கல்யாணம் செய்தது எல்லாம் வாசுகி தான்.

பையை மேஜை மேல் வைத்து உள்ளிருந்து சாப்பாடு டிபன் காரியரையும் பழைய உடைகளையும் எடுத்து வைத்தாள் வாசுகி. கவலை முகத்தோடு கையை பிடித்து கொண்ட வசுமதியின் கன்னத்தை தடவி பயப்படாத, எப்பிட்யூரல் ஊசி போடுவாங்க. வலி தெரியாது. அரை மணியில பாப்பாவை வெளியே எடுத்துருவாங்க என்றாள்.

பதினைந்து வருடங்களாய் கரு வயத்தில் தங்காத வாசுகி, எட்டு பிள்ளை பெத்துப்போட்டவள் மாதிரி நீட்டி முழக்கி வக்கணையாய் சொல்கிறாள். வருத்தம் வடிந்து, வலி மரத்துபோய், முதிர்கன்னியாய் பிள்ளை பெரும் நம்பிக்கை அத்தனையும் தொலைத்து எறிந்தவர் வசுமதியும் எட்டு வருஷங்களாய் காத்திருக்கிறவள் தான். கல்யாணம் ஆனதிலிருந்து அக்காளும் தங்கையும் ஆற்றாமையோடு காத்திருந்த அத்தனை வருடங்களும் கரைந்துபோய் வசுமதிக்கு இந்த வருஷம் தான் வயிற்றில் தங்கியது.

சித்திரை மாத வெய்யில் பொரிக்க ஆரம்பித்த அந்த அதிகாலை நேரத்து தொலைபேசி நேற்று நடந்தாற்போல இருக்கிறது. அக்கா.... நாள் தள்ளி போயிருக்கு. அஞ்சு வாரம் ஆச்சு. யூரின் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். பாஸிட்டிவ்னு வந்திருக்கு.

வருடக்கணக்காய் இருவரின் வாழ்க்கையிலும் கேட்டிராத வார்த்தைகள், மாதவிடாய் தள்ளிப்போகுமா? தள்ளிப்போகுமா என்று காத்திருந்து காத்திருந்து ஆசையெல்லாம் குருதியாய் வடிந்து போகும் வலியை வருடக்கணக்காய் அனுபவித்து, மருந்து மாத்திரை பரிசோதனை, வேண்டுதல் என்று எல்லா வழிகளிலும் மன்றாடி களைத்து, வெறுமையாய் கரைந்து வருடங்களின் இறுதியில் அடிவயிற்றை சின்னதாய்க் கிளறி ஆனந்தம் பிரவாகம் எடுக்க வைத்த வார்த்தைகள்.

வாயில எப்ப பார்த்தாலும் கசட்டு தட்டுது அக்கா, தூக்கம் தூக்கமா வருது. காலையில ரொம்ப வாயிலெடுக்குது. இவுரு டெபுடேஷன்னு ஜெர்மனிக்கு ஆறு மாசம் போவணுமாம். தள்ளிப்போட முடியாதாம். பயமா இருக்கு அக்கா.

கணவனை பேசக்கூட விடாமல் பரோடாவிலிருந்து மூட்டை முடிச்சோடு வந்து இறங்கினாள் வாசுகி. விதவிதமாய் கேட்கும் வாய்க்கு ருசியாய் சமைத்துபோட, மருத்துவரிடம் கூட்டிப்போக, புத்தகம் படித்துகாட்ட, கால் பிடித்து விட அக்காவாய், அம்மாவாய், தோழியாய், தாதியாய் வீடு முழுக்க நிரம்பிப்போன வாசுகி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:15 am

பன்னிரண்டாவது வாரத்தில் ஸ்கேனரின் திரையில் அத்தனை நாள் மனதில் தங்கியிருந்த நம்பிக்கைக்கு ஒரு உருவம் கிடைத்தது. ஒரு இன்க் ஜீவன் உள்ளத்தை குளிர்வித்தது. கூடவே இன்னொரு செய்தி காத்திருந்தது. இரட்டைக் குழந்தை என்ற எதிர்பாராத இரட்டிப்பு சந்தோஷச் செய்தி. காக்க வைத்த கொடுமைக்கெல்லாம் வட்டியும் முதலுமாய் சேர்த்துத் தருகிறமாதிரி ஒன்றுக்கு இரண்டாய் கொடுத்தார் கடவுள்.

அதற்கப்புறம் மாறிப்போனது எதிர்பார்ப்பும் எண்ணிக்கையிலடங்கா சின்னச் சின்ன இன்பங்களுமாய் வாழ்க்கை. உயிரைச் சுமப்பது ஒரு அற்புத அனுபவம். அதைச் சுமக்கிற உடலும் அதன் பூரிப்பில் திளைக்கிற மனமும் ஒரு பெண்ணின் பிரத்யேக சந்தோஷம். இன்னொருவருடன் பங்கு போட்டுக் கொள்ளமுடியாத தனிப்பட்ட அனுபவம். தங்கைக்கு வாய்த்ததை ஒவ்வொன்றாய் கூட இருந்து அனுபவிக்கிற வாசுகிக்கு அது தனக்கு வாய்த்தது போலத்தான் இருந்தது.

இருபதாவது வாரம் கர்ப்பப்பையில் நிரம்பியிருக்கிற அவைகளின் உருவம் இன்னும் அழகாக, முழுசாக தட்டுப்பட்டது. அந்தச் சிறிய விதை கொஞ்சம் வளர்ந்து உருவம் நேர்த்தியாகி கைகளும் கால்களும் நீண்டு கண் இமைகள், நகங்கள் எல்லாம் வளர்த்துக் கொண்டு அம்மாவின் வயிற்று மெத்தை பழகிப்போய் அவ்வப்போது அசையத்துவங்கியது.

"என்ன அழகாத் தெரியுது! காலு... உதைக்கிறாப்போல தெரியுதே... ஸ்கேனில் தெரிந்த வளர்ந்த உருவம் வாசுகி கண்ணுக்குத்தான் முதலில் பட்டது, உருண்டைத் தலையும் நீண்டிருந்த சின்னசின்னக் கால்களும் கைகளும்.'
வாரம் செல்லச் செல்ல அவை உடல் ரீதியாய் தங்கள் இருப்பை உணர்த்தத் துவங்கியன. அவள் சாப்பிட்டால், கோபப்பட்டு இரைந்தால், சங்கீதம் கேட்டால் அசைவு அதிகமாகி வயிற்றுக்குள் இருப்புக் கொள்ளாமல் சுற்றியது இரண்டும். வெளியே வரத் துடிக்கிறமாதிரி காலால் இன்னும் பலமாய் உதைத்தன.
தவிப் பார்த்து, காத்திருந்து, "ஆமாண்டீ, உதைக்குது' விரலில் சின்னதாய் அலை அலையாய் பரவுகிற பரவச உணர்ச்சியில் பிள்ளையைச் சுமக்கிற சுகத்தை உணர்கிற வாசுகி.

அவர்களுக்காக வாழ்கிற நிலை போய் அந்த இரண்டு குழந்தைளுக்காக வாழ்கிறதாய் மாறிப்போன வாழ்க்கை.

"இந்தாடி... அந்த அழுவாச்சி டி.வி. சீரியலை ஆஃப் பண்ணிட்டு எழுந்து வர்றியா! உற்சாகமா இருக்கணும். நல்லதே நினைக்கணும். அப்பதான் பொறக்கறது நல்ல மனநிலையில் இருக்கும்'

டி.வி.யை நிறுத்திவிட்டு சுதா ரகுநாதனையும், அருணா சாய்ராமையும் ஜேசுதாசையும் கேட்க வைத்தாள். வசுமதி புழங்குகிற இடங்களிலெல்லாம் அழகு அழகாய் குழந்தைகள் படங்களை மாட்டி வைத்தாள். பெயர் வைக்க புத்தகம் வாங்கி வந்தாள். ஆராய்ந்த, அர்த்தம் கண்டுபிடித்த ஜோடி ஜோடியாய் பெயர்கள் தேர்ந்தெடுத்து சௌந்தருக்கு மின அஞ்சல் அனுப்பினாள். சம்ப்ரீத்தி, சம்ஸ்ருதி, சம்யுக்தா, சமர்ப்பணா, பாவ்னா, பாரதி!

தங்கையின் வயிற்றைத் தடவியபடி, "கண்ணுங்களா, நான் உங்கள் பெரியம்மா, ரெண்டு பேருக்கும் உங்க அம்மா வயத்தில இடம் போறலியா கண்ணம்மா இன்னும் மூணு மாசம்தான் கண்ணு. வந்து அம்மாவையும் என்னையும் பார்க்கப் போறீங்க. உங்களுக்காக பெரியம்மா, புதுசு புதுசா டிரஸு, துணிங்க, தூளி, படுக்கை, எல்லாம் வாங்கி வச்சிருக்கேனாம்' சலிப்பில்லாமல் பேசுகிற வாசுகி.

புதிதாய் பிங்க் வர்ணத்தில் சாயமடித்து, யானை, ஒட்டகச்சிவிங்கி, குரங்கு, சிநேகமான சிங்கம் என்று தேர்ந்தெடுத்து ஸ்டிக்கர்கள் பொருத்தி, உத்திரத்தில் சின்னதாய் நிலாவும் பொடிப்பொடியாய் இரவு மின்னும் நட்சத்திரங்களும் ஒட்டி, இரண்டு தேவதைகளும் வந்திறங்கத் தயாராய் படுக்கை அறையை மாற்றினாள். மிருதுவான் கரடி பொம்மைகள், மெத்து மெத்தென கையுறை, காலுறை, தொப்பி... எல்லாம் வாங்கி வைத்தாள்.

எட்டாவது மாதத்தில் வசுமதி பருக்கள் அடர்ந்த முகம் மாறிப்÷ாபய், உடல் பெருத்துப் போய் நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டு, தூக்கம் பிடிக்காமல், திரும்பிப் படுக்க முடியாமல் புஸ், புஸ், என்று சதா மூச்சு விட்டுக் கொண்டு இரண்டையும் இறக்கிவைத்தால் போதும் என்று தயாராய் இருந்தாள். வாசுகி வேலை இரட்டிப்பானது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 1:16 am

எட்டு மாசங்களும் எட்டு நிமிடங்களில் ஓடிப்போனது போல இருந்தது. களைத்துபோயிருந்தார்கள், வயிற்றில் சுமந்த வசுவும், மனசில் சுமந்த வாசுகியும். இழந்த தெம்பு இனி குழந்தைகள் முகத்தைப் பார்த்தால்தான் திரும்ப வரும்.

வசமதியைக் கொடுவந்து விட்டு கூடவே இரண்டு தாதிகள் பூத்துவாலையில் சுற்றி இரண்டு குழந்தைகளையும் தூக்கிவந்து காண்பிக்கையில் எட்டுமாதங்களாய் வயிற்றில்வைத்துப் போற்றி வளர்த்த பிஞ்சுக்களின் முகத்தை முதல் முறையாகப் பார்க்கிற மகிழ்ச்சிப் பிரவாகம் தொண்டையை அடைத்தது. சௌந்தர் தன் கையிலிருந்த குழந்தையை வாசுகியிடம் வாஞ்சையோடு தருகிறான். வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டதில் உடம்பெல்லாம் சிலிர்த்தது வாசுகிக்கு. வசுமதிக்கு பக்கத்தில் உட்கார்ந்து அவள் கையில் இருந்ததையும் தன் கையில் இருந்ததையும் மாறி மாறி பார்க்கிற இன்பத்துக்கு இரண்டு கண்கள் போறாது போலிருந்தது.

"அச்சு வார்த்தாப்போல இரண்டும் ஒண்ணு போலவே இருக்குது வசு. தலைல எவ்ளோ முடி. மூக்கு பாரு. அம்மாதான். கன்னத்துல சின்னதா ஒரு மச்சம் இருக்கு பாரு இவளுக்கு. அவளுக்கு இருக்கா? சின்னச் சின்னதா எவ்வளவு அழகா விரலு. காது சிவப்பா இருக்கு. அப்பா! பெரிசானா சிவப்பாதான் இருக்கும். ஐய்யோ கொட்டாவி விடுது பாரேன் என்ன அழகா இருக்கு!'

தாய்மை அவ்வளவு இன்பமயமானதா? சிறுதுளியாய் சூல் கொண்டு, உயிர் சேர்ந்து இறுகி, சிறுகச் சிறுக பெருகி, மரபு அணுக்களின் செய்திகள் தாங்கி அவயவங்கள் உருவாகி, உருவம் பெற்று, தொப்புள் கொடி தொடர்பில் இணைந்து, அன்பினால் வளர்ந்து அம்மாவின் கையில் முழுமையாய் வந்து தஞ்சமடையும் பொழுதின் இன்பம் இவ்வளவு பெரியதா? அருகிலிருந்து பார்த்த தனக்கே இவ்வளவு ஆனந்தம் தரமுடியுமென்றால் வயிற்றில் சுமந்த தங்கைக்கு இன்னும் எவ்வளவு ஆனந்தம் தந்திருக்கும் தாய்மை!

இன்னும் இறுகச் சேர்த்து குழந்தையின் கன்னத்தில் இதழை உரசும்போது அந்த ஸ்பரிசமும் குழந்தையின் வாசமும் கிளர்ச்சியூட்டியது. சுற்றியிருப்பது மறந்துபோய் அவள் கையில் நிம்மதியாய் உறங்கும் குழந்தையைப் பார்த்தபடியே ஆழ்ந்திருந்தவளை தொந்தரவு செய்ய யாருக்கும் மனசில்லை.

இன்பத்தின் கூடவே ஒரு பச்சாதாபம் சேர்ந்து கொண்டது. பதினைந்து வருடங்களாய் தேடிய தேடலில் இல்லாத வலி அந்தக் குழந்தையை கையில் தாங்கும்போது மனதைப் பிசைந்தது. "என் தங்கைக்கு வாய்தது ஏன் தனக்கு வாய்க்கவில்லை' மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நூலிழையாய் தனியே பிரிந்து நின்ற பூதாகரமாய் மனதில் விரிந்த எண்ணம். நெஞ்சில் விழுந்த எண்ணத்தில் கண்கள் கலங்கிப்போய் கண்ணீர் பிரவாகம் எடுத்து வழிந்து உருண்டு பூத்துவாலையில் விழுந்து கரைந்து போனது.

"அழாதே... சந்தோழப்படு. இத்தனை நாள் இல்லாமல் உன் தங்கைக்காவது வாய்த்திருக்கிறதே என்று சந்தோஷப்படு' எழுந்த அழுகை அடங்காமல் தொண்டையை நிறைத்தது.

எச்சிலோடு மனசு வலியையும் முழுங்கி சுதாரித்துக் கொண்டு சகஜநிலைக்க வரவேண்டி கேட்டாள். "பேரு முடிவு பணணீங்களா'

வசுமதி தன் கையிலிருந்த குழந்தையைப் பார்த்துச் சொன்னாள். "இவளுக்க ஆர்த்தினு பேர் வைக்கலாம்னு இருக்கோம் அக்கா'

"ஆர்த்தி, பேர் அழகாயிருக்கு. இவளுக்கு என்ன பேரு வைக்கப்போறீங்க? அர்ச்சனா நல்லாயிருக்கா?'

"நீங்கதான் முடிவு பண்ணணும் மதினி...' ஒரு கையால் வசுவையும் இன்னொரு கையால் குழந்தையையும் அணைத்தபடி சௌந்தர் சொல்கிறான். "அவ உங்க பொண்ணு!'

- ஆனந்த் ராகவ் @ குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 1:23 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 9:00 pm

//இன்பத்தின் கூடவே ஒரு பச்சாதாபம் சேர்ந்து கொண்டது. பதினைந்து வருடங்களாய் தேடிய தேடலில் இல்லாத வலி அந்தக் குழந்தையை கையில் தாங்கும்போது மனதைப் பிசைந்தது. "என் தங்கைக்கு வாய்தது ஏன் தனக்கு வாய்க்கவில்லை' மகிழ்ச்சிப் பிரவாகத்தில் நூலிழையாய் தனியே பிரிந்து நின்ற பூதாகரமாய் மனதில் விரிந்த எண்ணம். நெஞ்சில் விழுந்த எண்ணத்தில் கண்கள் கலங்கிப்போய் கண்ணீர் பிரவாகம் எடுத்து வழிந்து உருண்டு பூத்துவாலையில் விழுந்து கரைந்து போனது.

"அழாதே... சந்தோழப்படு. இத்தனை நாள் இல்லாமல் உன் தங்கைக்காவது வாய்த்திருக்கிறதே என்று சந்தோஷப்படு' எழுந்த அழுகை அடங்காமல் தொண்டையை நிறைத்தது.

எச்சிலோடு மனசு வலியையும் முழுங்கி சுதாரித்துக் கொண்டு சகஜநிலைக்க வரவேண்டி கேட்டாள். "பேரு முடிவு பணணீங்களா'

வசுமதி தன் கையிலிருந்த குழந்தையைப் பார்த்துச் சொன்னாள். "இவளுக்க ஆர்த்தினு பேர் வைக்கலாம்னு இருக்கோம் அக்கா'

"ஆர்த்தி, பேர் அழகாயிருக்கு. இவளுக்கு என்ன பேரு வைக்கப்போறீங்க? அர்ச்சனா நல்லாயிருக்கா?'

"நீங்கதான் முடிவு பண்ணணும் மதினி...' ஒரு கையால் வசுவையும் இன்னொரு கையால் குழந்தையையும் அணைத்தபடி சௌந்தர் சொல்கிறான். "அவ உங்க பொண்ணு!'//


அருமை அருமை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக