புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 3:37 pm

First topic message reminder :

தமிழ்நாட்டின் தலைமகன் பாரதி! - Page 2 G9qAKHQVTeil9lsXIXr7+bharathi1

சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதியின் பிறந்தநாள் டிசம்பர் பதினொன்று. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.

அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை தந்தது. பாரதி சின்னப்பயல் என்று கவிதை பாட சொல்ல பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் பாடியது பாரதி தான்

தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.

மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்

எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்

. ‘என் மகள் காசிக்கு ஓடிப்போய் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் !” என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.

‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்

வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்.

பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில்.

சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.

பூ.கொ. சரவணன் @ விகடன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 3:44 pm

மக்கள் மன்றத்தின் வரவேற்பு

பாரதி மறைவதற்குச் சில மாதங்கள் முன்பு கடலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்தக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகள் சுதேசமித்திரனில் (25 மார்ச்,1921) வெளிவந்திருந்தன.

கடலூருக்கு வந்திறங்கிய பாரதியை வரவேற்கப் பெருங்கூட்டம் கூடியிருந்தது என்பதையும், ரயில் நிலையத்தில் கடலூரின் இந்து, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுதிரண்டு வரவேற்றனர் என்பதையும், ரயில் நிலையத்திலிருந்து அவர் மேளதாளங்களோடும் கொடிகளோடும் முழக்கங்களோடும் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதையும் சுதேசமித்திரன் தெரிவிக்கிறது. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 5,000 மக்கள் கூடியிருந்தனர் எனவும், அவர்கள் பாரதியைக் கண்டதும் சந்தோஷக் கடலில் மூழ்கினர் எனவும் சுதேசமித்திரன் தெரிவிக்கிறது. மக்கள் மன்றங்களிலும் பாரதி கொண்டாடப்பட்டிருக்கிறார்; ஓரளவு அறியப்பட்டிருக்கிறார் என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது. 1919-ல் எட்டயபுர மன்னனிடம் சீட்டுக்கவி எழுதி, சால்வை, ஜதி, பல்லக்கு முதலியவற்றோடு வரவேற்க வேண்டி, அவை யாவும் கிடைக்காமல் போன பாரதிக்கு மக்கள் மன்றத்தில் அப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 4:02 pm

இறுதி ஊர்வலம்

வாழ்ந்தபோது பாரதியைச் சமூகம் ஓரளவு அங்கீகரித்ததெல்லாம் சரி, இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பாரதியை அங்கீகரிக்காததன் அடையாளம் அல்லவா எனப் பல முனைகளிலிருந்தும் வினாக்கள் எழக்கூடும். இதற்கு விடை அளிப்பதுபோல பாரதியின் மகள் சகுந்தலா பாரதி அந்தச் சூழலை விளக்கியிருக்கிறார். பாரதியின் மூத்த மகளும் மருமகனும், பாரதியின் தம்பியும் பாரதி இறந்து ஓரிருநாள் கழித்தே வந்துசேர்கிறார்கள். சென்னையிலேயே இருந்த பாரதியின் புதுவைச் சீடர் ரா. கனகலிங்கம் மறுநாள் பத்திரிகையின் வாயிலாகத்தான் மறைவை அறிந்து துடித்துப்போகிறார். இன்று இருப்பதுபோல உடலைப் பாதுகாக்கும் வசதிகளோ, செய்தியைப் பரவலாகத் தெரிவிக்கும் ஊடக வசதிகளோ அன்றில்லை. மேலும், பிராமண சமூக வழக்கம், ஒண்டுக்குடித்தனச் சூழல் முதலியனவெல்லாம் பலர் வரும் முன்னே உடலை எரியூட்டச் செய்துவிட்டன என்பதே உண்மை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 11, 2013 4:04 pm

இறப்புக்குப் பின்னால்…

பாரதியின் மறைவுக்குப் பின் மாதந்தோறும் அவர் குடும்பத்துக்கு அவருடைய நண்பர் துரைசாமி ஐயர் ரூ. 25 வழங்கி உதவினார். தந்தை பெரியார், ராஜாஜி, திரு.வி.க. போன்றோரை உள்ளடக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பாரதியின் குடும்பத்துக்கு 1,000 ரூபாய் வழங்கியது. கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் பாரதி நூல்களின் உரிமையைப் பெற்றுக் கொண்டு ரூ. 10,000 வழங்க முன்வந்தார் (பின்னர் இது தடைபட்டது). இவற்றோடு, செல்லம்மாள் பாரதி மேற்கொண்ட பாரதி நூல் வெளியீட்டு முயற்சிகளுக்காகத் தமிழகத்திலிருந்தும் பர்மா முதலிய பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்த பண உதவிகள் என்றெல்லாம் பாரதிக் கான அங்கீகாரமும் ஆதரவும் பாரதி குடும்பத் துக்குத் தொடர்ந்தன. பாரதி வாழ்ந்த காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்னும் தமிழகம் பாரதியையும், பாரதி குடும்பத்தையும் குறிப்பிடத் தக்க நிலையில் அங்கீகரித்துவந்தது என்பதே உண்மை வரலாறாகும்.

- ய. மணிகண்டன், உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 12, 2013 3:36 am

தமிழகமே பெருமை படக்கூடிய அசாதாரணமான மனிதர். தமிழகத்தில் பிறந்ததால் அதிகம் அறியப்படாதவர். வட நாட்டில் பிறந்து இருந்தால் ஆஹா ஓஹோ என மிக பெ....ரி....ய மனிதராக சித்தரிக்கப்பட்டு இருப்பார்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக