புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
73 Posts - 46%
heezulia
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
4 Posts - 3%
eraeravi
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
304 Posts - 43%
heezulia
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்சன் மண்டேலா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:49 am

First topic message reminder :

நெல்சன் மண்டேலா - Page 3 245px-Nelson_Mandela-2008_%28edit%29

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela,
18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013)



மாறுதல் என்பது சொல் அல்ல,
அது ஒரு செயல்!
அது போர் அல்ல, அமைதி!
குழந்தைகளின் விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்கும்
விதைகளின் பச்சையமே அது!


-மூஸியாஅபுஜமால்

உலகம் இரண்டாக இருக்கிறது. ஒன்று, கறுப்பு... மற்றொன்று வெள்ளை.

கறுப்பு, தீமையின் நிறமாகவும் வெள்ளை, நன்மையின் நிறமாகவுமென, காலங்காலமாக ஒரு தவறான எண்ணம் உலகம் முழுக்க மனித மனங்களில் புரையோடிக்கிடக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், நாடு பிடிக்கும் வெறியில், கப்பல்களில் புறப்பட்ட ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களின் திட்டமிட்ட சதியினால் விதைக்கப்பட்ட நஞ்சு இது! மக்களை மனரீதியாகவும் அடிமைப்படுத்த அவர்கள் உருவாக்கிய தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை!

அவர்கள், கதைகளை உருவாக்கினர். அந்தக் கதைகளின் தேவதைகளுக்கு வெள்ளை ஆடைகளும், சாத்தான்களுக்குக் கறுப்பு ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. அவர்கள் செஸ், கேரம் என விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தனர். அந்த விளையாட்டுகளிலும் கறுப்பு மதிப்புக் குறைவான நிறமாகவே தீர்மானிக்கப்பட்டு, நம் மனதினுள் இயல்பாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள், இறப்பு வீடுகளின் துக்கத்தை வெளிப்படுத்தக் கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தனர். மண வீடுகளுக்கு வெள்ளை நிறத்தை அடையாளப்படுத்தினர். இவ்வாறாக, அவர்கள் உருவாக்கிய புரை இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை.

ஆனால், அவர்கள் உருவாக்கிய விதிகளில் ஒன்றுமட்டும் இன்று நிறம் மாறிஇருக்கிறது. அது சமாதானத்தின் நிறம். அவர்கள் வெள்ளையாக அதன் நிறத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அதன் நிறம் இன்று கறுப்பு. அவர் பகைவருக்கும் அருளிய நன்நெஞ்சர்... 'நெல்சன் மண்டேலா'!

1990, பிப்ரவரி 11... ஞாயிற்றுக் கிழமை மாலை, நேரம் சரியாக 4.15.

தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையின் வாசலில், கறுப்பும் வெள்ளையுமாக லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம். அரை வட்ட வடிவில் பெருந்திரளாக நிற்கும் அவர்களது கண்கள் அனைத்தும் இறுக மூடிக்கிடக்கும் இரும்புக் கதவையே பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சில நிமிடங்களில் மகத்தான தலைவன் மண்டேலா, அந்த வாசல் வழியாக வெளிவரப் போகிறார்.

அவர்கள் உற்சாகத்துடன் பாடும் விடுதலைப் பாடலும் வாத்தியக் கருவிகளின் இசையுமாக, ஆப்பிரிக்கக் கண்டமே அதிர்வதை உலகம் உன்னிப் பாகக் கவனிக்கிறது. அவர்களின் கரங்களில் கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறத்திலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் கொடிகள் படபடக்கின்றன. சர்வதேசச் செய்தி நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான கேமராக்களுடன் அந்த அற்புத விநாடிக்காகக் காத்திருக்கின்றன. உலக வர லாற்றில் எந்தச் சிறைக்கு முன்பும் இப்படியரு கூட்டம், ஒரு விடுதலையின் பொருட்டுக் கூடியதில்லை!

அதோ, சிறைக் கதவுகளின் க்ரீச்சிடும் சத்தம். கறுப்புச் சூரியன், கதவுகளுக்கு அப்பால் காத்திருக்கிறது. வெளியே லட்சக்கணக்கான கண்கள் இமைக்காமல் காத்திருக்கின்றன. அதோ, கதவு திறக்கிறது! 27 வருடங்களுக்குப் பிறகு, அவரைக் கண்ட வெறியில் கேமராக்கள் பெரும் ஒளி வெள்ளத்துடன் அவரது முகத்தை முற்றுகையிடுகின்றன. ''லாங் லிவ் நெல்சன் மண்டேலா!'' குரல்கள் விண்ணைப் பிளக்கின்றன. கண்களில் நீர் கொட்ட, பரவசத்தில் அவர்களது கைகள் இதயத்தில் கூம்பி நிற்கின்றன.

நானூறு வருட அடிமைச் சங்கிலிகளை அடித்து நொறுக்கிக்கொண்டு, அதோ அவரது பாதம் பூமியை முத்தமிடுகிறது. 72 வயதிலும் உறுதிமிக்க, கம்பீரமான அந்த உயர்ந்த மனிதர் தன் ஒளி சிறக்கும் கண்கள் வழியாக, தன் நிலத்தையும் மக்களையும் நோக்கிப் புன்னகைத்துக் கை உயர்த்தி அசைக்கிறார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் கோடியில் விரிந்த நிலப்பரப்பு... தென் ஆப்பிரிக்கா. அதன் தலைநகரமான கேப் டவுனில்இருந்து கிழக்கே ஏறக்குறைய 800கி.மீ. தொலைவில் ஒரு மாகாணம். அதன் பெயர், ட்ரான்ஸ்கீய்.

கிழக்கே நீலத் தண்ணீராக விரிந்துகிடக்கும் இந்தியப் பெருங் கடலுக்கும் வடக்கில் உயர்ந்த ட்ராகன்ஸ்பெர்க் மலைத் தொடருக்கும் இடையே காணப்படும் அழகிய நிலப் பரப்பின் பெயர்தான் ட்ரான்ஸ்கீய். ஆயிரக்கணக்கான ஓடைகளும் நதிகளும் அந்தப் பூமிக்கு இடையறாது உயிர்த் தன்மை கொடுத்துக்கொண்டு இருப்பதால், எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேலெனச் சமவெளிகள். சுருக்கமாகச் சொல்வதானால், அது உருளும் மலைத்தொடரின் மேலமைந்த வசீகர வனப்பரப்பு.

அப்படிப்பட்ட எழில் கொஞ் சும் மாகாணத்தில், சுலு மற்றும் சோஸா என இரண்டு இனக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் பான்மையினராக இருந்த சோஸா இனத்தைச் சேர்ந்தவர் காட்லா ஹென்றி. காட்லா, அந்தப் பகுதியில் நாட்டாமை. அவர்களை ஆண்ட 'தெம்பு' அரசர்கள் அவருக்கு அந்தப் பதவியை அளித்திருந்தனர். காட்லாவுக்கு 4 மனைவிகள், 13 குழந்தைகள். மனைவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந் தால் மட்டுமே, அங்கு குழுத் தலைவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அது சோஸா இனக் குழுவில் எழுதப்படாத விதி. ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனி வீடுகள். வலக்கை மனைவி, இடக்கை மனைவி, பெரிய மனைவி, துணை மனைவி என ஒவ்வொரு மனைவிக்கும் பட்டப் பெயர்கள் வேறு. இதில் காட்லாவின் மூன்றாவது மனைவியும், பட்டப்படி வலக்கை மனைவி யுமானவர் 'நோசெகேனி பேனி'.

'கூணு' என்பது பேனி வசித்த கிராமத்தின் பெயர். அந்தக் கிராமம் முழுவதுமே சோளக்கதிர் வயல்வெளிகளால் ஆனது. அந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அனைத்தும் ஒன்றே போல் தோற்றம்கொண்டு இருப்பவை. ஒரு மரம் நடப்பட்டு, சுற்றிலும் வட்டமாக மண் சுவர் எழுப்பப்பட்டு இருக்க... மேலே கூரை, கீழே சாணம் மெழுகிய குளிர்ச்சியான தரை. அந்தக் குடிசைக்குள் நுழைவதற்கு, ஓர் ஆள் குனிந்து செல்லக் கூடிய ஒரே ஒரு வழி. அதுதான் வாசல். இந்த இருண்ட சிறிய வீட்டில், 1918ம் வருடம், ஜூலை 18ல் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தேறியது. குடிசைக்கு வெளியே கூடியிருந்த சோஸா இனப் பழங்குடிப் பெண்கள் பேனியின் கதறலையும், உடன் ஒரு சிசுவின் அழுகுரலையும் கேட்டு, அதற்காகவே காத்திருந்தது போலத் தங்களது மூதாதையர்களையும் வனதேவதைகளையும் வாழ்த்தி, பாடல்களைப் பாடத் துவங்கினர். நாட்டாமையின் குழந்தையாதலால், அவர்களிடம் களிப்பும் சந்தோஷமும் அதிகமாகவே இருந்தது. சற்று தொலைவில் இருந்த ஆண்கள் வாத்தியக் கருவிகளை இசைத்து, பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:56 am


தாங்கள் கறுப்பர்களாக இருக்கிறோம் என்பதை
அறிந்துகொள்வதற்காக அவர்கள்
வளர்ந்து ஆளாவதைக் காட்டிலும்
இறப்பது மேல்!


-பென்டன் ஜான்ஸன்

போர்க்களப் பூமியில் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு பாடம்! அலைகடலைச் சிவப்பாக்கி ஆரவாரத்துடன் குளித்தெழும் சூரியனில்தான் எத்தனை சேதிகள்!

விடியலுக்கும் சிவப்புக்குமான இந்தச் சமன்பாட்டை மண்டேலா தெளிவாக உணர்ந்தார். சிவப்பு என்பது நிறமல்ல; சிவப்பு என்பது கட்சியும் அல்ல; அது ஒரு குணம். அடிமைத்தளையைத் தகர்த்தெறியும் போர்க் குணம். அதுதான், அறியாமையின் மடியில் உறங்கிக்கொண்டு இருக்கும் தனது கறுப்பின மக்களுக்கு இன்றைய அடிப்படைத் தேவை என நம்பினார் மண்டேலா. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் பொதுக்கூட்டங்களில் அவரது குரல் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும்விதமாக ஆவேசத்துடன் ஒலித்தது. 'அபார்தெய்ட்' எனும் இன வெறிச் சட்டத்துக்கு எதிராக அவர் எழுப்பிய போர்க் குரலின் விளைவாக 8,000 பேர் அணிதிரண்டனர். இத்தகைய தொடர் போராட்டங்களின் காரணமாக, மண்டேலாவின் புகழ் காட்டுத் தீ போல் ஆப்பிரிக்கர்களின் இதயங்களில் வேகமாகப் பரவப் பரவ, ஆப்பிரிக்க அரசு இந்தப் புதிய தலைவனின் உதயத்தால் பதற்றம் கொள்ளத் தொடங்கியது.

விளைவு, 1952ல் மண்டேலாவுக்கு வந்தது ஓர் அரசாங்க ஓலை. 'நெல்சன் மண்டேலாவாகிய நீங்கள் இனி ஜொஹானஸ்பர்க்கை விட்டு ஒரு அடி நகர்ந்தாலும், கைது செய்யப்படுவீர்கள். பொதுக்கூட்டங்களில் பேசவும் இனி உங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சிறை செல்ல வேண்டி வரும்!' என்று மிரட்டியது அந்த ஓலை.

மண்டேலாவின் அனைத்து நடவடிக்கைகளும் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாயின. உச்சகட்டமாக, 1953ல் தென் ஆப்பிரிக்க அரசு மண்டேலாவை ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக விலக நிர்ப்பந்தித்தது. இத்தகைய தந்திர நெருக்கடிகளின் மூலம் மண்டேலாவை முழுமையாக முடக்கிவிட்டதாக அரசு கற்பனை செய்துகொண்டது. மண்டேலாவும் இதுபோன்ற தருணங்களில் தன்னைப் பாதுகாத்துக்கொள்வது எதிர்காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்தவராக, கறுப்பு அங்கி அணிந்து சட்டத்தின் மூலமாகக் கறுப்பின மக்களுக்குத் தன்னாலான சேவையைத் தொடர்ந்தார். ஆலிவர் டாம்போ என்னும் சக நண்பருடன் அவர் இணைந்து துவக்கிய அலுவலகத்துக்குத் தினந்தோறும் கறுப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அரசாங்கம் தங்களுக்கு இழைக்கும் அநீதியைச் சொல்லிப் புலம்பினர். ஆப்பிரிக்காவில் பல கறுப்பின வழக்கறிஞர்கள் இருந்தாலும், கறுப்பின மக்களுக்காக வாதாடும் ஒரே அலுவலகமாக அந்த இடம் செயல்பட்டது.

ஒரு முறை, ஜன நெரிசல் மிகுந்த பகுதி ஒன்றில், வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தியின் கார் சிக்கித் தவிப்பதைப் பார்த்தார் மண்டேலா. உடனே ஓடிச் சென்று, அவளது காரை பின்னாலிருந்து தள்ளிக் கொடுத்து, நெரிசலிலிருந்து கார் வெளியே வர உதவினார். அந்த வெள்¬ளைக்காரப் பெண்மணி புன்னகையோடு, ''நன்றி ஜான்!” என்றாள். கறுப்பினச் சகோதரர்களின் பெயர் தெரிந்தாலும் வெள்ளை இனத்தவர்கள் பொதுவாக அவர்களை ஜான் என்றே அழைப்பது வழக்கம். இது ஒருவகை நாகரிக அவமானம். தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அந்த வெள்ளைப் பெண்மணியை நோக்கிப் பதிலுக்குப் புன்னகைத்தார் மண்டேலா. தனக்கு உதவி செய்தது, காலத்தின் மிகச் சிறந்த தலைவன் என்பதை அறியாத அந்தப் பெண்மணி காரில் ஏறிக்கொண்டு, உதவிக்கான அன்பளிப்பாக ஆறு பென்ஸ் நாணயமொன்றை நீட்டினாள். மண்டேலா அவளது சிறுமையைக் கண்டு சிலை போல் நிற்க, அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக எடுத்துக்கொண்ட அந்தப் பெண்மணி எரிச்சலும் கோபமுமாக, ''ஓஹோ... உனக்கு ஒரு ஷில்லிங் கேட்கிறதோ!” எனச் சீறிவிட்டு, கையிலிருந்த நாணயத்தைச் சாலையில் விசிறியடித்தவளாக விருட்டென்று காரைக் கிளப்பிக்கொண்டு பறந்தாள். அந்தப் பெண் நடந்துகொண்ட விதம், நெல்சனின் மனதில் நெடுநாட்கள் நெருஞ்சி முள்ளாகத் தைத்துக்கொண்டு இருந்தது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:56 am


இக் காலகட்டங்களில் மண்டேலாவின் வாழ்வில் சில முக்கிய மாறுதல்களும் நடந்தன. அவரைத் திருமணம் செய்துகொண்டு சிறுபெண்ணாக வாழ்வைச் சந்தோஷத்துடன் துவக்கிய எவ்லினுக்கு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பு, கணவனின் அரசியல் நடவடிக்கைகள் மேல் அளவற்ற வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. 'என்ன, இந்த மனிதர் கால நேரமே இல்லாமல் எப்போது பார்த்தாலும் அரசியலே கதி என்று இருக்கிறாரே!' எனத் தலையில் கைவைத்துப் புலம்பத் துவங்கினாள். நாளடைவில் அவளின் இந்தப் போக்கு, மண்டேலாவின் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தி, விவாகரத்து வரை அழைத்துச் சென்றது. என்றாலும், வெகு சீக்கிரமே அவரை அந்த வேதனையிலிருந்து வெளியே கொண்டுவந்தது, ஓர் அழகிய இள நங்கையின் பார்வை.

'வின்னி மண்டேலா' எனப் பிற்காலத்தில் உலகின் அத்தனை நாளிதழ்களிலும் அச்சாகிய அந்தப் பெண்மணி, இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வமும் துடிப்பும் துணிச்சலும் மிகுந்தவராகத் திகழ்ந்தார். 1958ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. ''நான் ஒரு போராளியைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனது இந்தப் புதிய வாழ்க்கைப் பாதையில் வலிகளையும் வேதனைகளையும் எதிர்பார்த்தே அடியெடுத்துவைத்திருக்கிறேன்” என்று தன் கணவரின் தோளில் தலை சாய்த்தபடி, நண்பர்களிடம் கூறினார் வின்னி.

அதன் பிறகு மண்டேலாவின் அரசியல் வாழ்வில் புயல் வேக மாறுதல்கள் நடந்தன. போராட்டத்தின் காரணமாக வழக்குகளும் கைதுகளும் தொடர்கதையாகின. உச்சகட்டமாக, 1960ல் ஷார்ப்வில்லி என்னுமிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்கள் 69 பேர் வெள்ளை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டித்து மண்டேலா தனது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மூலமாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுத்தார். இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால், எங்கே உலக நாடுகள் மத்தியில் போராளிகளுக்கு மதிப்பு கூடிவிடுமோ என்று பயந்த வெள்ளை அரசு உடனடியாக நெல்சன் மண்டேலா, வால்டர் சிசுலு போன்ற முக்கியத் தலைவர்களைக் கைது செய்ய முடிவெடுத்தது. அதுநாள்வரை அஹிம்சைதான் தங்களது பாதை என நம்பி வந்த மண்டேலாவும் மற்ற தலைவர்களும் ஆயுதம் ஏந்துவதுதான் இனி தங்களுக்கான விடியலைத் தேடித் தரும் என்கிற முடிவுக்குத் தள்ளப்பட்டனர்.

உடனடியாகத் தலைமறைவான மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து 'உம்கோட்டா வே சிஸ்வே' என்னும் புதிய குழு ஒன்றை உருவாக்கினர். டிசம்பர் 1961ல் இந்த அமைப்பு தங்களது முதல் குண்டுவெடிப்பை நிகழ்த்த, வெள்ளை அரசு அதிர்ச்சியில் உறைந்தது. அனைத்து செக் போஸ்ட்டுகளும் உஷார் செய்யப்பட்டன. மண்டேலாவின் உருவம் தாங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அவரைப் பற்றிய தகவலோ அல்லது உயிருடனோ பிடித்துத் தருபவர்களுக்கு உயர்ந்த சன்மானம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே மண்டேலா தங்களது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்குப் பயணமாகிவிட்டார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:56 am


சூடான், கானா, எகிப்து, அல்ஜீரியா, லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலகத் தலைவர்களைச் சந்தித்து தங்களது மக்கள் படும் துயரங்களை உலகறியச் செய்தார். தென் ஆப்பிரிக்க அரசின் இந்த அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டித்தது ஐ.நா.சபை.

வெற்றிப் புன்னகையுடன் நாடு திரும்பிய மண்டேலாவின் கார் ரகசியமாக ஜொஹானஸ்பர்க் நகரினுள் நுழைந்தது. நண்பர் வால்டர் சிசுலுவுடன் அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி, எப்போது துவக்கலாம் என விவாதித்தபடி காரில் பயணித்துக்கொண்டு இருந்த மண்டேலாவின் நினைவெல்லாம் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்திருந்த மனைவி வின்னி மற்றும் அவள் மூலம் பிறந்த பெண் குழந்தைகளான ஜின்ஜி, ஜெனானி ஆகியோரின் மீதே குவிந்திருந்தது.

எதிர்பாராத ஒரு கணத்தில், திடீரென அவர்களது வாகனம் வழிமறிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். நீண்ட நெடிய சிறைவாசம் தன் மீது கவியப்போவதை அறியாமல், தன் நண்பருடன் காரிலிருந்து இறங்கினார் மண்டேலா!

நான் கடவுளாக இருந்திருந்தால், எங்கள் மக்கள் செய்த மிகப் பெரிய பாவம், 'தங்களது இனம்தான் மிகவும் கேவலமானது' என ஒப்புக்கொண்டதுதான் என்று குற்றம் சாட்டுவேன்!

-சினுவா அச்சபே

அன்று அக்டோபர் 2, 1962. தென் ஆப்பிரிக்காவின் புகழ்மிக்க பிரிட்டோரியா நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் போலீஸாரால் அங்கு அழைத்து வரப்படவிருக்கும் தங்களது தன்னிகரற்ற தலைவனைக் காண, பெரும் ஆரவாரத்துடன் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன் இரண்டு சிறு பெண் குழந்தைகளோடு, வின்னி மண்டேலா! சைரன் அலறலுடன் விரைந்து வந்த போலீஸ் வாகனத்தில் இருந்து, யாரும் எதிர்பாராத வகையில் உடலில் புலித்தோலைப் போர்த்தியபடி, தங்களது புராதன உடையில், கூட்டத்தின் நடுவே ஒரு சிங்கம் போல நடந்து வந்தார் மண்டேலா. வெள்ளை நீதிபதிகளும் வக்கீல்களும் அவரது இந்தத் தோற்றத்தைக் கண்டு சற்று மிரளத்தான் செய்தனர். மண்டேலா தனது வலக் கையை உயர்த்தி, கூட்டத்தை நோக்கி 'அமெண்டா' என்று முழக்கமிட, பதிலுக்குக் கூட்டமும் உற்சாகத்துடன் 'அமெண்டா' எனக் கூச்சலிட்டது. 'அமெண்டா' என்றால் உறுதி என்று பொருள்.

அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றார் என்பதற்காக, மண்டேலாவுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு எழுதியது நீதிமன்றம். இனியும் மண்டேலாவை உயிரோடு வெளியேவிட்டால், அது எதிர்காலத்தில் தனக்குப் பெரும் ஆபத்தாகிவிடும் என்று எண்ணியது தென் ஆப்பிரிக்க அரசு. அதற்குத் தோதாக அடுத்த சில நாட்களில், 'கெரில்ல' ஆயுதப் பயிற்சி வீரர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர். அரசுக்கு எதிராகப் போராடிய அந்த வீரர்களுடன் மண்டேலாவுக்கு தொடர்பு இருந்ததாக, அவருக்கு மரணத்தையே தீர்ப்பாக எழுதக் காத்திருந்தது. இதற்கு உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் அமைப்புகள் தென் ஆப்பிரிக்காவை முழுமையாக ஒதுக்கிவைத்தன. காமன்வெல்த் நாடுகள் தங்களது அமைப்பிலிருந்து தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றின. மண்டேலாவின் விடுதலைக்காக லண்டன் மக்கள் இரவு முழுவதும் ஜெபம் செய்தனர். அன்றைய ரஷ்யப் பிரதமர் பிரஷ்நேவ், மண்டேலாவை விடுதலை செய்யச் சொல்லிக் கடிதம் எழுதினார். அமெரிக்க வெளி விவகாரத் துறை அமைச்சகம்கூட மண்டேலாவை மன்னிக்கும்படி கடிதம் எழுதியது. இப்படியாக உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மண்டேலாவுக்கு ஆதரவு குவிந் தாலும், தனது கீழ்மையான புத்தியிலிருந்து தென் ஆப்பிரிக்க அரசு ஒரு இம்மிகூடப் பின்வாங்கவே இல்லை.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:57 am


ஜூன் 12, 1964... தீர்ப்பு நாள்! வழக்கு விசாரிக்கப்பட்ட பிரிட்டோரியா நீதிமன்றத்தில் அனை வரின் முகங்களும் இருண்டிருந்தன. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார் மண்டேலா. அப்போது அவர் அங்கு நிகழ்த்திய நான்கு மணி நேர நீண்ட நெடிய உரை, உலக நாடுகள் அனைத்தையும் சிலிர்க்கவைத்தது. 'நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதே போல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, ஒரு சுதந்திர பூமி! இங்கு அனைத்து மக்களும் சமமான அதிகாரத்துடன், சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும்வரை, எனது போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்' என்று உயரிய மனிதத் தத்துவத்தை வெளிப்படுத்திய அந்த உரைதான், மண்டேலா எனும் சாதாரண தலைவனைப் பிற்பாடு வரலாற்று நாயகனாக மாற்றின.

ஆனால் அன்றோ, அந்த வெள்ளை இன வெறி அரசுக்கு இந்த மகத்தான மனித நேயம் குறித்தெல்லாம் யோசிக்கவும் மனமில்லை. மண்டேலாவுக்கு மரண தண்டனை விதித்தால், எங்கே உலக நாடுகளின் பகைக்கு தான் ஆளாக நேருமோ எனும் பயம் காரணமாக, தனது எண்ணத்தில் சிறு மாற்றம் செய்துகொண்டது. 27 வருட ஆயுள்தண்டனையை மண்டேலாவுக்கும் அவரது சகாக்களுக்கும் விதித்துத் தீர்ப்பு எழுதியது.

கேப் டவுன் கடற்கரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருந்த ராபன் தீவுச் சிறைக்கு மண்டேலாவும் அவரது சகாக்களும் கொண்டுசெல்லப்பட்டனர். தனது அறையில் இருந்த சின்னஞ் சிறிய ஜன்னல் வழியாகத் தன் மேல் விழும் சூரிய வெளிச்சத்தை ரசித்தார் மண்டேலா. அதே ஜன்னலின் வழியேதான் அவர் தனது மக்களின் காற்றைச் சுவாசித்தார்; பறவைகளின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ந்தார். அதே போல், தினமும் மாலையில் சூரியனின் அஸ்தமனத்தை ஜன்னலினூடே பார்த்து நெகிழ்ந்தார். ஹேண்டல், சாக்கோஸ்கி போன்ற இசை மேதைகளின் இசைக்கோவையைக் கேட்பதும் தன் ஆரம்ப காலக் கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுமே, சிறையில் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளாக இருந்தன. தொடர்ந்து பால்ஸ்மூர், விக்டர் வெர்ஸ்டர் என வெவ்வேறு சிறைகளுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். நாட்கள் நகர்ந்தன. ஆனால், அவரது எண்ணத்தின் உறுதி மட்டும் சற்றும் குலையாமல், மேலும், தீவிர நம்பிக்கையுடன் இறுகிக்கிடந்தது. 'சிறை வாழ்க்கை மண்டேலாவின் மனதை எப்படியும் மாற்றியிருக்கும்; போராட்டத்தைக் கைவிடுவதாக அவர் உறுதியளித்தால், அவரை விடுதலை செய்யலாம்' என்கிற நம்பிக்கையுடன் வெள்ளை அதிகாரிகள் பற்களைக் காட்டியபடி ஒருநாள் மண்டேலாவைச் சந்திக்கச் சிறைக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல், மண்டேலாவின் மன உறுதி ஒரு நூலிழைகூட இளகியிருக்கவில்லை. 'என் இனத்தின் விடுதலையில்தான் என் விடுதலையும். அதில் எந்த மாற்றமும் இல்லை!' என அவர் அழுத்தமாக இருந்தது அவர்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஒரு நாள், சிறையில் தன்னைக் காண யாரோ வந்திருப்பதாக அழைத்துச் செல்லப்பட்ட மண்டேலா, அங்கே கம்பிகளுக்கு அப்பால் தன் வயதான தாயாரைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்தார். சற்றுநேரம் எதுவுமே பேசாமல் மௌனமாக நின்ற அவரின் தாய், தளர்ந்த நடையோடு திரும்பிச் செல்ல, நெடுநேரம் மண்டேலா தாய் போன திசையையே வெறித்தவாறு அங்கேயே நின்றிருந்தார். சில நாட்களுக்குப் பின், சிறை அதிகாரிகள் அவரிடம் நீட்டிய ஒரு குறிப்புத் தாளில், அவரது தாயார் இறந்த செய்தி இருந்தது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:57 am


காலங்கள் உருண்டன. மண்டேலாவின் வயதும் சரசரவென ஏறிக்கொண்டு இருந்தது. தோல் சுருங்கியது. மனதைப் போலவே அவரது தலைமுடியும் வெளுப்பாக மாறத் துவங்கியது. மாறாதது, அவரது நிமிர்ந்த நடையும் உள்ளத்து உறுதியும் மட்டும்தான்! அதேசமயம், தன் கணவரை விடுவிக்கவும், ஆப்பிரிக்க தேசிய விடுதலைக்காக மக்களைப் போராட்டங்களில் ஈடுபடச் செய்யவும், கணவரின் இடத்தில் இருந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார் வின்னி மண்டேலா. இதனால் அவர், வெள்ளை இன வெறி அரசால் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டி இருந்தது. 1980ல், தந்தையின் முகமே நினைவில் இல்லாத மண்டேலாவின் மூத்த மகள் ஜின்ஜி, ஷார்ப்வில்லி பல்கலைக்கழகத்தில் எண்ணற்ற வெள்ளை மாணவர்கள் மத்தியில், தன் தந்தையின் விடுதலைக்காகப் பேருரை நிகழ்த்தினார். ''பெரும் ரத்த ஆறு இங்கே ஓடாதிருக்கவேண்டுமானால்... வெள்ளை இன அரசே, என் தந்தையை உடனே விடுதலை செய்!'' என அவர் முழக்கமிட்டு, 'அமெண்டா' எனத் தன் தந்தையைப் போலவே வலக் கையை உயர்த்த, ஒட்டுமொத்த வெள்ளை மாணவர்களும் தங்கள் கைகளை உயர்த்தி 'அமெண்டா' எனக் குரலெழுப்பி, அந்த அரங்கத்தையே அதிரவைத்தனர். 1986ம் ஆண்டு, மண்டேலாவின் விடுதலையை முன்வைத்து பெரும் கலவரம் வெடித்தது. ஒட்டுமொத்தமாகத் தென் ஆப்பிரிக்க அரசே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.

1989ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, புதிய அதிபராக எஃப்.டபிள்யூ.டி. கிளார்க் பதவி ஏற்றார். உடன், காட்சிகள் மாறத் தொடங்கின. 'அபார்தெய்ட்' இன வெறிச் சட்டம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது.

1990 பிப்ரவரி 11ம் நாள். இருபத்தி ஏழு வருடங்களாக துருப்பிடித்து இறுகிக்கிடந்த சிறைக் கதவுகள் அகலமாகத் திறந்தன. ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மற்றும் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் முன் மண்டேலா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபடி வெளியே வந்தார். வலக் கையை உயர்த்தி அவர் 'அமெண்டா' என்று குரலெழுப்ப, அதன் விஸ்வரூப எதிரொலி போல் கூட்டத்தின் கோஷம் விண்ணை முட்டியது.

1991ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. தொடர்ந்து, தனக்கும் வின்னிக்கும் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, வின்னிக்கும் தனக்கும் இடையிலான திருமண முறிவு குறித்து, ஏப்ரல் 13, 1992ல் ஜொஹானஸ்பர்க்கில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் வெளிப்படையாக அறிவித்தார்.

தனது வாழ்நாளின் நிகரற்ற தியாகத்துக்காக நெல்சன் மண்டேலாவுக்கும் தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் அமைதி தவழச் செய்தமைக்காக அதன் அதிபரான எஃப்.டபிள்யூ.டி. கிளார்க்குக்கும் 1993ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994ல் தனது 75வது வயதில், தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரலாற்றைப் பெருமைப்படுத்தினார் மண்டேலா. 1999ல் பதவிக் காலம் முடிந்த பிறகு, மண்டேலா பொது வாழ்விலிருந்து முழுவதுமாக தான் விலகுவதாகக் கூறினாலும், இன்றும் உலகம் முழுக்கப் பரவியிருக்கும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்களுக்கு கௌரவத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

ஒரு சாதாரண கிராமத்துச் சிறுவனாகப் பிறந்து, எதிர்பாராதவிதமாக அரண்மனையில் வாழ நேர்ந்து, கல்வியறிவு பெற்று, ஆப்பிரிக்கக் கறுப்பின தேசியத்துக்காகப் போராடி, தனது சமூகத்தை எதிர்த்த வெள்ளை இன மக்களின் சுதந்திரத்துக்காகவும் பாடுபடும் அளவுக்கு அவர் தம்மைச் செம்மைபடுத்திக்கொண்டவிதம் ஒவ்வொரு தனிமனிதருக்குமான சிறந்ததொரு பாடம்.

பல சமயங்களில் நாயகர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அரிதான சமயங்களில் மட்டுமே வரலாறு, நாயகர்களை உருவாக்குகிறது.

அப்படி ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!


அஜயன்பாலா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:20 am

//அப்படி ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!//

மிகச்சரியான வார்த்தைகள் புன்னகை மிகப்பெரிய தலைவரின் வரலாற்றை பகிர்ந்ததற்கு நன்றி சிவா புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Dec 06, 2013 4:06 pm

மாபெரும் தலைவர் இன்று மறைந்தார் என்று கேள்வி பட்டு வருத்தபட்டேன்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நெல்சன் மண்டேலா - Page 3 Mgr
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 07, 2013 11:16 am

வின்சீலன் wrote:மாபெரும் தலைவர் இன்று மறைந்தார் என்று கேள்வி பட்டு வருத்தபட்டேன்

அதனால்தான் நேற்று முழுதும் டாஸ்மாக்லேயே இருந்தீர்களா?

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Sat Dec 07, 2013 5:13 pm

அட பின்னால இருந்து ஒம்லேட்ல ஆனியன் இல்லனு தகராறு பண்ணினது நீங்கதானா தல பாடகன்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நெல்சன் மண்டேலா - Page 3 Mgr
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 07, 2013 5:16 pm

வின்சீலன் wrote:அட பின்னால இருந்து ஒம்லேட்ல ஆனியன் இல்லனு தகராறு பண்ணினது நீங்கதானா தல பாடகன்
மேற்கோள் செய்த பதிவு: 1036785

அதுவும் தெரிஞ்சு போச்சா?

# ஊர்ல உள்ள அறிவாளிக பூரா ஈகரையிலதான் இணைஞ்சிருக்காங்க...!!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக