புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருக்கண்ணபுரம் Poll_c10திருக்கண்ணபுரம் Poll_m10திருக்கண்ணபுரம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கண்ணபுரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 9:34 am

ஸ்ரீதரன் என்ற பட்டாச்சாரியார், தினமும் இறை
பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டுவந்தார்.
அதே கோயிலில் தேவதாசிப் பெண்ணொருத்தியும்
பணி செய்து கொண்டிருந்தாள். அவள் பெயர் மஞ்சரி.
பெயருக்கேற்றாற் போல அவளும் அழகின் உருவமாக
இருந்தாள். அவள் ஸ்ரீதரனை வசமாக்கப் பல வழிகளிலும்
முயன்றாள்.
-
ஒரு நாள் அர்த்தஜாத பூஜையை முடித்து, ஸ்ரீதரன்,
வீட்டிற்குக் கிளம்பியபொழுது கடுமையான மழை
பிடித்துக் கொண்டது. வெகுநேரமாகியும் மழை
விடாததால் நனைந்தபடியே அவன் வீட்டிற்குக்
கிளம்பினான்.
-
கொஞ்சதூரம் போவதற்குள்ளே ஸ்ரீதரனை மஞ்சரி
வழிமறித்து, "அன்பரே! நீங்கள் இப்படி மழையில்
நனையலாமா? காலையில் சுப்ரபாதம் சொல்ல
நீங்கள் கோயிலுக்கு வரவேண்டும்! உங்களுக்கு
ஜலதோழம் பிடித்துக் கொண்டால் குரல் கம்முமே!
அதனால் மழைக்காக என் வீட்டிற்கு வாருங்கள்'
என்று அவனுடைய கையைப் பிடித்து அழைத்துச்
சென்றாள். அப்புறமென்ன... ஸ்ரீதரன் அங்கேயே
குடியிருக்கத் துவங்கினான்.
-
சோழமன்னன் அக்காலத்தில் எல்லா ஊர்களிலும்
கடமைகள் சரியாக நடக்கிறதா என்று சோதிப்பது
வழக்கம். ஆனால் வருமுன் அதனைத் தெரிவிக்க
மாட்டான். திருக்கண்ணபுரம் வர அரசன்
புறப்பட்டான். அர்த்தஜாமத்தில் ஸ்ரீதரன் அங்கேயில்லை.
அவனுடைய உறவினர்கள் அந்தத் தாசி வீட்டிற்குச்
சென்று மன்னர் வரப்போகும் செய்தியைச் சொல்ல,
அவருக்குக் கோயில் பிரசாதம் வழங்க, ஸ்ரீதரன்
கோயிலுக்குச் செல்லாமல் தாசியின் தலையில் சூடிய
பூவையே எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
-
அதையே மன்னரிடம் "இந்தாருங்கள். திருக்கோயில்
பிரசாதம்' எனத் தந்தான். மன்னர் அவற்றைக் கண்களில்
ஒற்றிக் கொள்ள முயலும் பொழுது கடும் அதிர்ச்சியடைந்து
பின் ஊர் மக்களைப் பார்த்து, "உங்கள் ஊர் பெருமாளுக்குத்
தலையில் முடி உண்டோ?' எனக் கோபத்துடன் வினவ,
ஸ்ரீதரன் என்ன பேசுவது என்று தெரியாமல், பயத்தில் வாய்
குழறி "ஆம் மன்னா! திருக்கண்ணபுரம் பெருமாளுக்குத்
தலையில் திருமுடி உண்டு' என்று கூற, மன்னன் வெகுண்டு
ஸ்ரீதரனைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைச் சிறையில்
அடைக்கக் கட்டளை இட்டான்.
-
"நாளை காலை இவனைச் சிறையிலிருந்து நான்
கோயிலுக்கு வரும் பொழுது அழைத்து வாருங்கள். அவன்
சொன்னது போல் பகவானின் தலையில்
திருமுடியில்லையேல் அவன் தலை துண்டிக்கப்படும்' என்றான்.
-
ஸ்ரீதரன் இதனை கேட்டுப் பதறினார். பதைபதைத்தான்.
கண்ணபுரத்து நாயகனை நினைத்து, அழுது, அரற்றி இரவு
முழுவதும் தியானம் செய்தான். அவனைத் தெரிந்தவர்கள்
அவனுக்காக அவனுடைய உறவினர்களுடன் கூட்டுப்
பிரார்த்தனை செய்தார்கள்.
-
காலையில் ஸ்ரீதரன் கையில் விலங்குடன் கோயிலுக்கு
மன்னர் வரும் வேளையில் சென்றான்.
-
மன்னன் பெருமாளின் கிரீடத்தை அகற்றச் சொன்னார்.
பெருமாளின் தலையில் முடி வளர்ந்திருப்பதை எல்லோரும்
பார்த்தனர்.
-
ஆனால், மன்னரோ இது இரவு முழுவதும் அர்ச்சகர்கள் செய்த
சூழ்ச்சியினாலேதான் என்று எண்ணி, வேற்று ஊர்
அர்ச்சகர்களை வரவழைத்து, முடிகளில் ஒரு கற்றையைப்
பிடித்து இழுக்கச் சொன்னான். அவனும் அர்ச்சகர்கள்
செய்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
-
கேசத்தை இழுத்த அர்ச்சகர் அரண்டு போனார். ஏனெனில்
இழுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்து,
ஒரிரு துளிகள் மன்னன் மேலும் தெறித்தன.
பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன். அவர்
அவனுக்குக் காட்சி தரவில்லையெனில் அப்போதே, அங்கேயே
உயிரை விடப் போவதாகவும் கதறவே, பெருமாள் அவன்
முன்னே தோன்றி அவனுக்குக் காட்சியளித்தார்.
-
அன்று முதல் இன்றும் பெருமாளின் தலையில் முடி இருப்பது
தெரியும்.
-

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Nov 29, 2013 12:56 pm

திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 1:59 pm

raghuramanp wrote:திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.    
எத்தனை அற்புதம் இல்லையா ? நான் இது வரை அந்த பெருமாளை சேவித்தது இல்லை , நீங்க சேவித்து இருக்கிங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Fri Nov 29, 2013 3:17 pm

நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன் மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும் பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து நிறைய சுவாமி சிலைகள் பூமியில் இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 29, 2013 5:32 pm

raghuramanp wrote:நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன்  மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும்  பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து  நிறைய சுவாமி சிலைகள் பூமியில்  இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.  
விவரத்துக்கு நன்றி ரகு புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 29, 2013 6:42 pm

விபீஷணன் ஸ்ரீரங்கத்தில் பெருமாளை சேவித்த
பின்னர், அவரது நடையழகை காண ஆர்வம்
கொண்டார்
-
கண்ணபுரம் திருத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில்
அவருக்கு இறைவன் தன் நடையழகை காண்பித்ததாக
ஐதீகம்
-
திருக்கண்ணபுரம் BLDkkY8lT9qRuq9aRUGb+Kannapuram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக